OTP – Part 8/20

வரப்போகும் கவுன்சிலர் எலெக்க்ஷனில் தற்போது பொறுப்பில் இருக்கும் டாக்டர் நேசமணி என்பவர் மீண்டும் போட்டியிடுவதாக தகவல். ரத்தினத்தின் கட்சிக்காரருக்கு போட்டியாளர்.

நேசப்பா செய்தியை முழுதாக படித்து முடித்து திரும்பவும் யோசனையில் ஆழ்ந்தார்.

லேண்ட் லைன் அடித்தது. “மேடம், அவர் இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்னு கேக்குறார், என்ன சொல்லட்டும்? சாரி மேடம்” என்றார் செல்லகுமார்.

“இதுக்கு போய் எதுக்குப்பா சாரி சொல்ற. சார் மீட்டிங்க்ல இருக்கார். முடிஞ்சப்புறம் கால் பண்ணுவார்னு சொல்லுங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“ரத்தினம் கட்சி வேட்பாளர் யார்னு பாத்தியா” என கண் மூடியபடியே கேட்டார் நேசப்பா.

கொஞ்ச நேர தேடலுக்கு பிறகு “புஷ்பாங்க, எக்ஸ் எம்எல்ஏ மனைவியாம்” என்றார் சங்கு புஷ்பம்.

“அப்படியா” என நிதானமாய் உள்வாங்கியவர் “அப்ப அவரு உன்ன பாக்க வராரா இல்ல என்ன பாக்க வராரா? என்றார்.

“உங்களைத்தான்” என தீர்க்கமாய் சொன்னார் சங்குபுஷ்பம். “வர சொல்லுவோமா” என்றார்.

“வெயிட் பண்ணு. பாத்ரூம் போயிட்டு வரேன். கொஞ்சம் சுடு தண்ணி குடிக்க கொண்டு வா” என சொல்லி எழுந்து போனார் நேசப்பா.

சங்கு புஷ்பம் நேசப்பாவின் எண்ண ஓட்டத்தை குறுக்கிட விரும்பாமல் அமைதி காத்தார்.

கால் மணி நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மெதுவாக தண்ணீரை குடித்து முடித்தார் நேசப்பா.

பிறகு அவரின் அனுமானத்தை மனைவியிடம் பகிர்ந்துகொண்டார்.

“நானும் அதுவாத்தான் இருக்குமோன்னு நெனச்சேன். சரி வர சொல்லுங்க. பார்ப்போம்” என கலக்கமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

“செல்லகுமார், நேசமணி பேசுறேன். அவரை வரசொல்லுப்பா” என்றார்.

“சரிங்க சார்” என்றார் செல்லகுமார்.

“சார், நீங்க போலாம் சார். நேரா போய் லெஃப்ட் சைட் போனீங்கன்னா லாஸ்ட் பிளாக்” என்றார் ரத்தினத்திடம்.

முக்கால் மணி நேரம் காத்திருந்து சலிப்பாய் எழுந்தார் ரத்தினம்.

“பிஸியான ஆளாப்பா அவரு” என கேட்டார் செல்லகுமாரிடம்.

“சார் சொஸைட்டி ரூல் படி நா அதெல்லாம் சொல்ல முடியாது. சாரி சார்” என முடித்தார் செல்லகுமார்.

சங்கு புஷ்பத்திற்கு பதட்டமாய் இருந்தது. இளைய மகள் லக்ஷ்மிக்கு போனை போட்டார்.

சுருக்கமாக விஷயத்தை சொல்லி முடித்தார்.

“நோ சான்ஸ். இதெல்லாம் நான்சென்ஸா இருக்கு” என்றார் லக்ஷ்மி.

முழு பெயர் லோகலக்ஷ்மி. பாண்டிசேரியில் கல்லூரி பேராசிரியராக வேலை செய்பவர்.

“ஆமாம், நாங்களும் அப்படித் தான் நெனைக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்துல வருவார். பேசிட்டு அப்புறம் போன் பண்றேன்” என்றார் சங்கு புஷ்பம்.

“சரிம்மா. நா ரெண்டு மணி வரை ப்ரீ தான். ஏதாவது விஷயம்னா கூப்பிடு” என்றார் லக்ஷ்மி.

வேர்ல்டு பேங்குக்கு சொல்லிட்டியா என்றார் நேசப்பா புன்னகையோடு.

Leave a comment