
பஞ்சு பொதி போன்ற தேகம்
எப்படி பார்த்தாலும்
கொஞ்சி அழைக்கும்
நேர்த்தியான வளைவுகள்
உன்னை கடக்கும் போது
சுண்டி இழுக்கும் சுகந்தம்
உன் சிற்றிடையில்
சற்றே எட்டி பார்க்கும்
மெல்லிய சிகப்பு நிறம்
கதகதப்பான உன்னை
ஒரு மழை நாளில்
நினைத்துக் கொண்டேன்
இந்நேரம் என் ஒரு கையில்
தேநீர் கோப்பையும்
மறு கையில்
நீயும் இருந்தால்
இந்த நீண்ட
மாலை பொழுது
மறையாமல்
அப்படியே
உறைந்து போகும்
சிறு வயதிலிருந்து
இன்று வரை
உன் மீதிருக்கும்
இனிமையான
தீரா காதல்
என்னை
வெண்ணெயாக்குகிறது
பேக்கரி ஷெல்பில்
பௌர்ணமி நிலவாய்
என் இனிய
பன் பட்டர் ஜாம்!

பூரி குமாரி : எனக்கு கவிதை சொல்ல சொன்னா, அந்த பன் பட்டர்காரிக்கு சொல்றீங்க?