டிவியில் லைவ் பார்த்துக் கொண்டிருந்த பூரி குமாரி திடீரெனெ எழுந்து சாமி ஆடினாள்.
பூரி குமாரி : சொன்னீங்களே, செஞ்சீங்களா? சொன்னீங்களே, செஞ்சீங்களா?
கோல்கப்பா : நா எப்ப என்னடி சொன்னேன்?
பூரி குமாரி : கல்யாணம் ஆன முன்னூத்தி அறுபத்து ஆறாவது நாள் சொன்னீங்களே? அதை செஞ்சீங்களா?
கோல்கப்பா : ஐயோ, நா நேத்து சொன்னதையே மறந்துடுவானே! இது உனக்கு தெரியாதா?
பூரி குமாரி : கல்யாணம் ஆன முன்னூத்தி அறுபத்து ஆறாவது நாள், நம்ம பர்ஸ்ட் வெட்டிங் டே! அன்னைக்கு ஹேப்பி வெட்டிங் டேனு சொன்னீங்க. ஆனா என்ன ஹேப்பியாவா வெச்சிருக்கீங்க?
பூரி குமாரி தொடர்ந்து சாமி வந்தது போல திட்ட, கோல்கப்பா நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார்.
பிறகு பூரி குமாரி லைவ் பார்த்துக் கொண்டே பேசியது தெரியவர, ஓடி போய் டிவியை நிறுத்தினார்.
சற்று நேரத்தில் பூரி குமாரி நார்மலாகி கேட்டார் “நீங்க லைவ்ல என்ன பாத்தீங்க?”
கோல்கப்பா : உன்ன பார்த்தேன்! உன் கோவத்தை பார்த்தேன்! இனிமே உன்ன ஹாப்பியா வெச்சிக்குறேன்! நாம கலக்கலா இருப்போம்!
பூரி குமாரி மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் “நாமக்கல் லைவ் நம்ம மன கலக்கத்தை போக்கிடுச்சு”
கோல்கப்பா : மக்களே லைவ்ல பேப்பரை பாத்து பேசிட்டு அவங்க பாட்டுக்கு போய்டுவாங்க. நம்ம லைப்ப நாம தான் பாத்துக்கணும்!
ஹாப்பி சாட்டர்டே! Bye!