Tamil mini novel – Origami – Worry Kammi – part 2/4

சரண்யாவின் கணவர் மோகன் குடும்ப பொறுப்பு இல்லாமல் இருப்பவர். நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். சிற்பிகுமார் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும், சித்திர வள்ளி என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மகளும் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக மோகன் அடிக்கடி வீட்டுக்கு வந்து பிள்ளைகளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் சரண்யாவுக்கு அவர் மீது நம்பிக்கை என்பது முழுதாய் இல்லை. மீண்டும் சேரும் எண்ணம் அவருக்கு இருந்தாலும், கடந்த காலம் தந்த காயம் காரணமாக சரண்யா அவரை ஏற்க தயாராக இல்லை. தன்னால் குழந்தைகள் அவரை பிரிய வேண்டாம் என நினைத்ததால் அவர் வந்து போனால் அமைதியாக இருந்தாள்.

வேலை முடித்து வீடு நோக்கி நடக்க ஆரம்பிக்க போன் வந்தது.

சொசைட்டி செகரெட்டரி மாதுரி மேடம்.

“சரண்யா, நாளைக்கு நம்ம சொசைட்டில டீச்சர்ஸ் டே பங்க்ஷன் இருக்கு. நீ நல்லா பூ கட்டுவேன்னு சங்கு புஷ்பம் மேடம் சொன்னாங்க. ஹால் அலங்காரத்துக்கு, குத்து விளக்கு பூஜைக்கு நெறய பூ வாங்கி இருக்கோம். நீ கட்டி தர முடியுமா?” என சொல்லி ஒரு தொகையை சொன்னார்.

சரண்யாவுக்கு திருப்தியாக இருந்தது அவர் சொன்ன தொகை. நாளைக்கு பசங்களுக்கு லீவ். காலைல எழுந்து சமைக்க வேணாம். இன்று இரவும், நாளை காலையும் பசங்களுடன் சேர்ந்து கட்டினால் இவர்கள் கேட்கும் நேரத்திற்குள் கொடுத்து விடலாம் என தோன்றியது.

“சரிங்க” என்றாள் சரண்யா.

“நம்ம செக்யூரிட்டிய உங்க வீட்டுக்கு வண்டில கொண்டு வந்து தர சொல்றேன்” என சொல்லி போனை வைத்தார் மாதுரி.

மனதிற்குள் சங்கு புஷ்பத்திற்கு நன்றி சொன்னபடியே நடந்தாள் சரண்யா.

“மா, வந்திட்டியா, உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்” என்றாள் சித்திர வள்ளி.

“இந்தா, நீ கேட்ட சிறுவர் மலர். நேசப்பா தாத்தா குடுத்தனுப்பினார்” என சொல்லி பத்து புத்தகங்களை கொடுத்தாள் சரண்யா.

“ஹை ஜாலி, மூணு நாள் லீவுக்கு போரடிக்காம இருக்கும்” என சந்தோஷமாக சொல்லி சிரித்தாள்.

சற்று நேரம் புத்தகங்களை புரட்டியவள் “மா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல டீச்சர்ஸ் டே பங்க்ஷன் இருக்கு. நா ட்ராயிங் அண்ட் ஆர்ட் போட்டிக்கு பேரு குடுத்து இருக்கேன். இருநூறு ரூபா குடுமா, சார்ட்டு பேப்பர், பெயிண்ட்டு, அப்புறம் கொஞ்சம் ஆர்ட் சப்ளைஸ் வாங்கணும்” என மெதுவாக கேட்டாள்.

“பணம் மரத்துல வெளயுதா?” என சொல்லி நிறுத்தினாள் சரண்யா.

“மா, ப்ளீஸ் மா, நா நல்லா ப்ராக்ட்டிஸ் பண்ணி இருக்கேன். கண்டிப்பா ப்ரைஸ் வாங்கிடுவேன் என கொஞ்சலாய் சொன்னாள் சித்திர வள்ளி. “பத்து ரூபா நீ சம்பாதிக்கும் போது உனக்கு அந்த கஷ்டம் தெரியும். சும்மா பெயிண்டுக்கு, சார்ட்டுக்குனு காசு கேக்காதே. தட்டுக்கு சோறு வருதா அதுக்கு சந்தோஷப்படு” என கடு கடுத்தாள் சரண்யா.

சித்திர வள்ளிக்கு கன்னத்தில் கண்ணீர் சித்திரம் வரைய ஆரம்பித்தது.

ஏற்கெனவே டிஷ் வாஷர் சோகத்தில் இருந்த சரண்யாவுக்கு எக்ஸ்டரா செலவு எரிச்சலை கிளப்பியது.

“நாளைக்கு நீ ஒண்ணும் ஸ்கூலுக்கு போக வேணாம். இன்னும் கொஞ்ச நேரத்துல செக்யூரிட்டி பூ கொண்டு வந்து தருவார். நீயும் அண்ணனும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” என சொல்லி விட்டு சமைக்க ஆரம்பித்தாள் சரண்யா.

Tamil mini novel – Origami – Worry Kammi – part 1/4

“ஏங்க, போஸ்ட் ஆபீசுக்கு போகணும்னு சொன்னீங்க, இன்னும் கெளம்பலியா?” என மாத்திரை போட்டபடியே கேட்டார் சங்கு புஷ்பம்.

“அஞ்சு நிமிஷம், முருங்கை கீரை சூப் ரெடி பண்ணிடறேன். சரண்யா வந்ததும் துணைக்கு விட்டுட்டு கிளம்புறேன்” என உள்ளேயிருந்து பதில் சொன்னார் நேசப்பா.

சரண்யா அவர்கள் வீட்டு பணிப்பெண். பத்து மணிக்கு வந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு, அந்த அந்த நாளுக்குக்கேற்ப என்ன தேவைகள் இவர்களுக்கு இருக்கிறதோ அவற்றை செய்து கொடுப்பாள்.

“சரண்யா இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருவேன்னு சொன்னா. நீங்க சூப் ரெடி பண்ணிடீங்கன்னா வெயிலுக்கு முன்னாடி கெளம்பி போயிட்டு வாங்க” என சொன்னார் சங்கு புஷ்பம்.

சற்று நேரத்தில் நேசப்பா கிளம்ப, சங்கு புஷ்பம் புத்தகம் படிக்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரம் கழித்து “என்னமா சார் குடைய மறந்துட்டு போய்ட்டாரா? என்றபடியே சரண்யா வந்தாள்.

“அதுக்கு தான் நீ இருக்கணும்கிறது. கரெக்டா நினைவு படுத்தி இருப்ப” என்றார் சங்கு புஷ்பம்.

“நீங்க படுங்க, சார் வர வரை நா இருந்துட்டு போறேன்” என வேலையை ஆரம்பித்தாள் சரண்யா.

ஒரு மணி நேரம் ஆனது. நேசப்பா வெளி வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பினார்.

மூன்று கப்புகளில் சூப் எடுத்து வைத்து சங்கு புஷ்பத்தை எழுப்பினார்.

“எங்க சரண்யாவ காணோம்?” என்றார் நேசப்பா.

“இங்க தான் இருப்பா, இருங்க போய் பாக்குறேன்” என மெதுவாய் எழுந்து கடைசி பால்கனி பக்கம் போனார்.

அங்கே சரண்யா ஏதோ யோசனையாக அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

“என்ன இங்க நின்னு யோசிக்கிற?” என கேட்டார் சங்கு புஷ்பம்.

சரண்யா முகம் வாட்டமாக இருந்தது.

“தெய்வநாயகி  மேடம் டிஷ் வாஷர் வாங்கி இருக்காங்க, துணி காய போட வரும் போது பாத்தேன். அடுத்த மாசத்துல இருந்து எனக்கு அவங்க வீட்ல வேலை இருக்காதுனு நெனைக்கிறேன்” என கவலையோடு சொன்னாள்.

சங்கு புஷ்பம் எட்டி பார்க்க, அவர்கள் வீட்டு பால்கனியில் புதுசாய் அமர்ந்திருந்தது டிஷ் வாஷர்.

“கரண்டு பில்லுக்கும், பசங்க டியூஷனுக்கும் அவங்க குடுக்குற சம்பளத்தை தான் நம்பி இருக்கேன். இப்போ என்ன பண்ண போறேன்னு தெரியல. தெய்வநாயகி மேடம் எது வாங்கினாலும் அவங்க கூட வாக்கிங் போற சுகந்தி அக்கா வாங்கிடும். அவங்களும் வாங்கிட்டா வேற வேலை கிடைக்கும் வரை சிரமம் தான்” என பெரு மூச்சோடு சொன்னாள்.      
“உள்ள வா” என அழைத்து ஹாலில் வந்து நேசப்பாவோடு சேர்ந்து உட்கார்ந்தார்கள்.

“கொஞ்சம் கால் வலி இருந்ததால நா ஒரு வாரமா சாயங்காலம் அவங்கள பாக்கல. இன்னைக்கு பாத்து பேசுறேன். அவங்க இது வரை உங்கிட்ட எதுவும் சொல்லல இல்ல? நீயா ஏன் கவலை படுற? அப்படி அவங்க நீ வேலைக்கு வேணான்னு நெனச்சா, உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருப்பாங்க. எதையும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்காதே” என ஆறுதல் சொன்னார் சங்கு புஷ்பம்.

சூப் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தார்கள்.

“டிஷ் வாஷர் இந்த மாதிரி கப்பு, பிளேட்டு, கிளாஸ் கழுவ தான் பெஸ்ட். அது பிரியாணி அண்டா கழுவாது. அஞ்சு லிட்டர் குக்கரை போட முடியாது.  பூஜை சாமான் தேய்க்காது. அதனால நீ பெருசா ஒண்ணும் கவலை படாதே” என நிதர்சனத்தை சொன்னார் நேசப்பா.

“சங்கு, நீ ஏன் நம்ம சரண்யாக்கு ஒரு போஸ்ட் ரெடி பண்ண கூடாது? ஒன்லி பார் பூஜா ரூம் கிளீனிங்ன்னு? பூஜை பாத்திரம் மட்டும் சுத்தம் செய்து, பூ கட்டி, கோலம் போட்டு விசேஷ நாளுக்கு ரெடி பண்ணி தருவானு?” என்ன ஆர்வமோடு சொன்னார்.

சங்கு புஷ்பத்திற்கு இது வேலைக்கு ஆகும் என தோன்றியது.

“மார்கெடிங்க்ல மொதல் பாடமே, இல்லாத தேவையை இருப்பதாக மக்களை நினைக்க வைப்பது தான். 

அடுத்த ஐந்து நிமிடம் இந்த விஷயத்தை விவாதித்ததில் இது செட் ஆகும் என அவர்களுக்கு உறுதியாக தெரிந்தது.

சரண்யாவுக்கு பாதி புரிந்தது, மீதி புரியவில்லை.

“இங்க பாரு, உனக்கு இந்த டிஷ் வாஷர் மெஷின் தான் எக்ஸ்டரா வருமானத்துக்கு வழி பண்ணி இருக்கு. நீ பூஜை பாத்திரம் மட்டும் விஷேச நாளுக்கு முன்னாள் வந்து ரெடி பண்ணி தருவேன்னு ஒரு போஸ்ட போட்டு லிப்ட்ல ஒட்டுனா போதும். இது வரை ரெகுலரா பூஜை பண்ணாதவங்க கூட பக்திமானா மாறிடுவாங்க. வாரத்துல ஏழு நாளும் ஏதாவது ஒரு சாமிக்கு ஸ்பெஷல் டே தான்” என விவரித்தார் சங்கு புஷ்பம்.

நேசப்பா தொடர்ந்தார். “இது தெரிஞ்சு தான் குயிக் காமெர்ஸ் டெலிவரிகாரன் ஒரு கொத்து மாவிலையை இருபது ரூபாக்கு விக்கிறான். கீழ இறங்கி போய் நம்ம செக்யூரி கிட்ட கேட்டா இங்கேயிருக்குற மரத்துல பறிச்சு தருவார். சௌகர்யம் உள்ளங்கைல இருகிறதால நம்ம ஜனங்க இவனுங்க எறக்குற எல்லா Appம் ஒண்ணு மிச்சமில்லாம யூஸ் பண்றாங்க’ என்றார்.

அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு டைரியில் இந்த விஷயத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என லிஸ்ட் போட்டார்கள்.

“ஒரு போஸ்டர் பத்தாது. மூணு போடு சங்கு. ஒண்ண எல்லா பிளாக் லிப்ட்லயும் ஒட்டலாம். ரெண்டாவதை ஜிம் ஏரியால ஒட்டலாம். மூணாவத சரண்யா டீபியா வெக்கட்டும்” என்றார் நேசப்பா.

“லிப்ட், டிபி  சரி, எதுக்கு ஜிம் ரூம்ல?” என்றார் சங்கு புஷ்பம்.

“யோசி, உனக்கே தெரியும்” என சொல்லி சிரித்தார் நேசப்பா.

விஷயம் புரிய “சரியான ஆளு நீங்க!” என பாராட்டினார் சங்கு புஷ்பம்.

“நீ கவலப்படாம கெளம்பு சரண்யா. உனக்கு எத்தனை போன் வருதுன்னு பாரு” என சொல்லி சியர் செய்து அனுப்பினார்கள்.

Cutlet vs Outlet

கட்லெட்டுக்கும்
அவுட்லெட்டுக்கும்
என்ன
ஒற்றுமை
தெரியுமா?

ரெண்டுமே
evening snack!

கட்லெட் – Tasteக்கு
அவுட்லெட் – Pastக்கு

அதனால சாயந்தரத்துல
நண்பர்களோட மனசு விட்டு பேசுங்க!

Tamil novel – OTP – Part 8/20

வரப்போகும் கவுன்சிலர் எலெக்க்ஷனில் தற்போது பொறுப்பில் இருக்கும் டாக்டர் நேசமணி என்பவர் மீண்டும் போட்டியிடுவதாக தகவல். ரத்தினத்தின் கட்சிக்காரருக்கு போட்டியாளர்.

நேசப்பா செய்தியை முழுதாக படித்து முடித்து திரும்பவும் யோசனையில் ஆழ்ந்தார்.

லேண்ட் லைன் அடித்தது. “மேடம், அவர் இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்னு கேக்குறார், என்ன சொல்லட்டும்? சாரி மேடம்” என்றார் செல்லகுமார்.

“இதுக்கு போய் எதுக்குப்பா சாரி சொல்ற. சார் மீட்டிங்க்ல இருக்கார். முடிஞ்சப்புறம் கால் பண்ணுவார்னு சொல்லுங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“ரத்தினம் கட்சி வேட்பாளர் யார்னு பாத்தியா” என கண் மூடியபடியே கேட்டார் நேசப்பா.

கொஞ்ச நேர தேடலுக்கு பிறகு “புஷ்பாங்க, எக்ஸ் எம்எல்ஏ மனைவியாம்” என்றார் சங்கு புஷ்பம்.

“அப்படியா” என நிதானமாய் உள்வாங்கியவர் “அப்ப அவரு உன்ன பாக்க வராரா இல்ல என்ன பாக்க வராரா? என்றார்.

“உங்களைத்தான்” என தீர்க்கமாய் சொன்னார் சங்குபுஷ்பம். “வர சொல்லுவோமா” என்றார்.

“வெயிட் பண்ணு. பாத்ரூம் போயிட்டு வரேன். கொஞ்சம் சுடு தண்ணி குடிக்க கொண்டு வா” என சொல்லி எழுந்து போனார் நேசப்பா.

சங்கு புஷ்பம் நேசப்பாவின் எண்ண ஓட்டத்தை குறுக்கிட விரும்பாமல் அமைதி காத்தார்.

கால் மணி நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மெதுவாக தண்ணீரை குடித்து முடித்தார் நேசப்பா.

பிறகு அவரின் அனுமானத்தை மனைவியிடம் பகிர்ந்துகொண்டார்.

“நானும் அதுவாத்தான் இருக்குமோன்னு நெனச்சேன். சரி வர சொல்லுங்க. பார்ப்போம்” என கலக்கமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

“செல்லகுமார், நேசமணி பேசுறேன். அவரை வரசொல்லுப்பா” என்றார்.

“சரிங்க சார்” என்றார் செல்லகுமார்.

“சார், நீங்க போலாம் சார். நேரா போய் லெஃப்ட் சைட் போனீங்கன்னா லாஸ்ட் பிளாக்” என்றார் ரத்தினத்திடம்.

முக்கால் மணி நேரம் காத்திருந்து சலிப்பாய் எழுந்தார் ரத்தினம்.

“பிஸியான ஆளாப்பா அவரு” என கேட்டார் செல்லகுமாரிடம்.

“சார் சொஸைட்டி ரூல் படி நா அதெல்லாம் சொல்ல முடியாது. சாரி சார்” என முடித்தார் செல்லகுமார்.

சங்கு புஷ்பத்திற்கு பதட்டமாய் இருந்தது. இளைய மகள் லக்ஷ்மிக்கு போனை போட்டார்.

சுருக்கமாக விஷயத்தை சொல்லி முடித்தார்.

“நோ சான்ஸ். இதெல்லாம் நான்சென்ஸா இருக்கு” என்றார் லக்ஷ்மி.

முழு பெயர் லோகலக்ஷ்மி. பாண்டிசேரியில் கல்லூரி பேராசிரியராக வேலை செய்பவர்.

“ஆமாம், நாங்களும் அப்படித் தான் நெனைக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்துல வருவார். பேசிட்டு அப்புறம் போன் பண்றேன்” என்றார் சங்கு புஷ்பம்.

“சரிம்மா. நா ரெண்டு மணி வரை ப்ரீ தான். ஏதாவது விஷயம்னா கூப்பிடு” என்றார் லக்ஷ்மி.

வேர்ல்டு பேங்குக்கு சொல்லிட்டியா என்றார் நேசப்பா புன்னகையோடு.

Tamil novel – OTP – Part 7/20

Checking the newspaper for local political news to get some clue about the guest waiting at the security gate

காலை பத்து மணி வாக்கில் லேண்ட் லைன் அடித்தது. மெயின் கேட் செல்லகுமார்.

“சொல்லுங்க செல்லகுமார்” என்றார் சங்கு புஷ்பம்.

“மேடம், சார பாக்கணும்னு எக்ஸ் எம்எல்ஏ ஆபீசுலேர்ந்து ஒரு கட்சிக்காரர் வந்திருக்கார். அவர் பேரு ரத்தினம்னு சொன்னார். அனுப்பவா மேடம்” என்றார்.

சங்கு புஷ்பத்திற்க்கு ரத்தினம் என்ற பெயர் புதுசாய் இருந்தது. சற்று யோசித்தவர் “அவர் என்னை பாக்கணும்னு சொன்னாரா இல்ல சாரையா?” என்றார்.

“சார் தான் மேடம். நேசமணி மதிவாணன்னு முழு பேர் சொன்னார். ஆனா போன் நம்பர் தெரியாதுனு சொல்றார். ஆளும் பர்ஸ்ட் டைம் பாக்குற மாதிரி இருக்கு” என்றார் செல்லகுமார்.

“சரிப்பா. ஒரு பத்து நிமிஷம் அவரை விசிட்டர் ஹால்ல உக்கார வை. பேன் போட்டு விடுங்க. கொஞ்சம் தண்ணி குடுத்து பாத்துக்குங்க. நா அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன். என்ன கரை வேட்டி அவரு?” என்றார் சங்கு புஷ்பம்.

செல்லகுமார் சொன்ன கட்சி பேரை குறித்துக்கொண்டார்.

“ஏங்க, கொஞ்சம் இங்க வாங்க” என நேசப்பாவை அழைத்தார்.

கிச்சனில் இருந்து வந்த நேசப்பா பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தார்.

“உங்களுக்கு இந்த கட்சிலேர்ந்து ரத்தினம்னு யாராவது தெரியுமாங்க? உங்கள பாக்கணும்னு வந்திருக்கார். விசிட்டர் ஹால்ல வெயிட் பண்ண சொல்லி செல்லகுமார்கிட்ட சொல்லி இருக்கேன்” என்றார் சங்கு புஷ்பம்.

“இல்லையேம்மா, ஆளு பேரு புதுசா இருக்கு. நமக்கும் கட்சிக்காரங்க யாரையும் தெரியாது. யாரா இருக்கும்” என யோசித்தார்.

லேண்ட் லைன் அடித்தது. “மேடம், அவர் போன்ல யார்கிட்டயோ பேசிகிட்டு இருக்கார். எலெக்சன் விஷயம். நேசமணின்னு பேரு அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கார்” என்றார் செல்லகுமார்.

“சரிப்பா, நா சாருகிட்ட சொல்லிடறேன். நீ வெயிட் பண்ணு” என சொல்லி போனை வைத்தார் சங்கு புஷ்பம்.

“எலெக்சன் விஷயம், நேசமணின்னு பேரு அப்படின்னு அவர் போன்ல யார்கிட்டயோ பேசிக்கிட்டு இருக்காராம். செல்லகுமார் சொல்றார்” என்றார் சங்கு புஷ்பம்.

“நம்ம செல்லம் எப்பவும் ஷார்ப்பு” என சிரித்தார் நேசப்பா.

“சரிங்க என்ன விஷயமா இருக்கும்? அதுவும் எலெக்க்ஷனை பத்தி” என குழம்பினார் சங்கு புஷ்பம். “வர சொல்லுவோமா” என கேட்டார் நேசப்பாவிடம்.

“கொஞ்ச நேரம் இரு” என சொல்லி கண் மூடி யோசித்தார்.

சில நிமிடத்திற்கு பிறகு “அங்க ஷெல்ப்புல நம்ம லோக்கல் நியூஸ் பேப்பர் இருக்கு பாரு. லாஸ்ட் நாலு நாள் பேப்பர் எடுத்துட்டு வா” என்றார்.

பத்து நிமிடம் ஆனது. “இங்க பாருங்க” என ஒரு செய்தியை காண்பித்தார் சங்கு புஷ்பம்.

Tamil novel – OTP – Part 6/20

Welcoming the guest and hosting him in the living hall, and having heartfelt exchange of life experience

மறு நாள் காலை டோர் பெல் அடித்தது. அதே தெருவில் மளிகை கடை வைத்திருக்கும் வள்ளியப்பன் வந்திருந்தார்.

“உள்ள வாங்க சார்” என வரவேற்றார் நேசமணி.

“வாங்க சார். எப்படி இருக்கீங்க” என்றபடியே உள்ளேயிருந்து வந்தார் சங்கு புஷ்பம்.

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க” என நலம் விசாரித்தார்.

அவரோடு நீண்டகால நட்பு இவர்களுக்கு. இன்றளவும் அவர் கடையில் தான் பொருட்களை வாங்குவார்கள்.

என்ன டிஸ்கவுண்ட் போட்டாலும் ஆன்லைனில் வாங்க மாட்டார்கள். ஒண்ணாம் தேதியானால் லிஸ்ட் போட்டு போனில் அனுப்பி விடுவார்கள். கடை பையன் கொண்டு வந்து கொடுத்து விடுவான்.

ஒரு ஸ்திரமான வாடிக்கையாளராக அவரின் தொழிலுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள். அதனால் இவர்கள் மீது சற்று அதிக மரியாதையும் பிரியமுமாய் இருப்பார் வள்ளியப்பன்.

“சாரி சார். காலங்காத்தால வந்துட்டேன்” என்றார்.

“இந்தாங்க பஞ்சாமிர்தம். பையன் கல்யாணத்துக்காக திருச்செந்தூர் முருகருக்கு வேண்டிக்கிட்டேன். போயிட்டு நேத்து நைட் தான் வந்தோம்” என்றபடியே ஒரு பாட்டிலை நீட்டினார்.

சங்கு புஷ்பம் நன்றி சொல்லி பய பக்தியாக பெற்றுக் கொண்டார்.

“நீ பேசிகிட்டு இரு அபர். நா போய் இவருக்கு என் ஸ்பெஷல் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.

“சார் நெக்ஸ்ட் டைம் சின்னதா ஒரு கப்புல குடுங்க சார் போதும். ரெண்டு பேருக்கும் சுகர்” என்று சிரித்தார் சங்கு புஷ்பம்.

“நீங்க சாப்பிடுங்க மேடம். அப்புறம் வர்ற கெஸ்ட்டுக்கு எல்லாம் குடுங்க” என்றார் வள்ளியப்பன்.

“வீணாக்காமல் கெஸ்ட்டுக்கு தாராளமா தரலாம் சார். ஆனா நூறு குட்டி கப்பும் ஸ்பூனும் கழுவணும் இந்த பாட்டிலை முடிக்க” என நிஜத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.

“அது என்னவோ உண்மை தான்” என ஒப்புக் கொண்டார் வள்ளியப்பன்.

“சார், இன்னைக்கு லிஸ்ட் அனுப்பலாம்னு இருக்கோம். ப்ரீயா எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் போடாதீங்க. ரெண்டு பார் டிஷ் வாஷ் சோப்பு போடுங்க” என ரெக்வஸ்ட்டை சொன்னார் சங்கு புஷ்பம்.

கொல்லென்று அடக்க முடியாமல் கண்ணில் நீர் வர சிரித்தார் வள்ளியப்பன்.

“இன்னைக்கு என் நாள் நல்லபடியா ஆரம்பமாகுது. இதை நெனச்சு சிரிச்சே இன்னைக்கு பொழுது போகும்” என்றார் வள்ளியப்பன்.

காபியோடு நேசமணி வந்து சிரிப்பில் கலந்து கொண்டார். அரை மணி நேரம் கா கலப்பாக போனது.

“சரிங்க சார். பார்க்கலாம்” என சொல்லி கிளம்பினார்.

ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு பஞ்சாமிர்த பாட்டிலை சிஸ்டம் டேபிள் மேல் வைத்தார்கள்.

அடுத்து வரும் கெஸ்ட்டுக்கு மறக்காமல் கொடுக்க. அப்போது அவர்களுக்குத் தெரியாது அந்த கெஸ்டிடம் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று.

Tamil novel – OTP – Part 5/20

A warm conversation between wo ladies

இரண்டு மாதம் ஆனது. மொத்தம் இருபத்து மூன்று டெலிவரி அன்றோடு சேர்த்து.

நெறய ஓசிடி கேள்வி பட்டிருக்கிறோம். இந்த ஆன்லைன் ஆர்டரிங் ஓசிடி இவர்களை பாடாய் படுத்தியது.

இது த்ரீஓ சிடி. அது அவர்களின் பர்ஸுக்கும் நல்லதில்லை, அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் நல்லதில்லை என நினைத்துக்கொண்டார்கள்.

இரவு எட்டு மணிக்கு வந்தாள் அமராவதி.

“உள்ள வாம்மா” என்றார் நேசப்பா.

“அபர், நீ பேசிக்கிட்டு இரு. நான் கிட்சனுக்கு போறேன்” என கிளம்பினார் நேசப்பா.

“உக்காரு அமராவதி, காபி சாப்பிடுறியா இல்ல க்ரீன் டீ வேணுமா?” என்றார் சங்கு புஷ்பம்.

“க்ரீன் டீ ஆன்ட்டி” என்றாள். 

டேபிள் பேனை போட்டுவிட்டு சேரை பக்கத்தில் இழுத்து போட்டுக்கொண்டு டைரியை எடுத்தார் சங்கு புஷ்பம்.

“இன்னியோட இருபத்து மூன்று டெலிவரி வாங்கி இருக்கோம். அதுல பதினாலு மதியம் ரெண்டுலேர்ந்து நாலுக்குள்ள.

நாங்க டேப்லெட் போட்டு தூங்குற நேரம். அப்புறம் ஒவ்வொரு டெலிவரிக்கும் மூணு போன் கால் அட்டென்ட் பண்ணணும்.

ஸோ, கலெக்க்ஷன் சார்ஜ் இருபத்தி அஞ்சு ரூபா ஒரு டெலிவரிக்கு. மொத்தம் ஐநூத்தி எழுபத்தி அஞ்சு ரூபா ஆச்சு. என் நம்பர்க்கு அனுப்பிடுமா” என்றார் சங்கு புஷ்பம்.

“சாரி ஆன்ட்டி. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்றாள் அமராவதி.

எமெர்ஜென்சிக்கு வாங்கி வெக்கலாம். ஆனா மைன்ட்லெஸ் ஷாப்பிங்க்கு ஹெல்ப் பண்ண முடியதுமா என நினைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

பிறகு கிச்சன் பக்கம் திரும்பி “நேஸ், அமருக்கு ஒரு க்ரீன் டீ குடுங்க” என்றார் அபராஜிதா.