Tamil novel – Jiteswari – Part 10/21

Temple night

இறைவனும் இறைவியும் கிளம்பி வந்து குளத்தின் நடுவே இருந்த கல் மண்டபத்தில் உட்கார்ந்தார்கள்.

வடக்கு கோபுரத்திலிருந்து பார்த்த காகம் பறந்து போய் மாருதியிடம் விஷயத்தை சொல்லி எழுப்பியது.

இருவரும் போய் கல் மண்டபத்தின் ஓரத்தில் காதை தீட்டிக்கொண்டு உட்கார்ந்தார்கள்.

“என்ன மாருதி, சௌக்கியமா?” என்றார் இறைவன்.

மாருதி பணிவாய் வணக்கம் வைத்து விட்டு குளத்தின் மீது பார்வையை வீசியது.

“என்ன தாதா, நீங்க சௌக்கியமா?” என்றார் இறைவன் காகத்தை பார்த்து.

காகம் உள்ளுக்குள் நடுங்கியது. மெலிதாய் தலையசைத்து மௌனமாய் அமர்ந்திருந்தது.

“நீங்க ரெண்டு பெரும் தானே இவங்க லீகல் டீம்” என சிரித்தார் இறைவன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே மச்சிமா வந்து வணங்கினார். மற்ற மீன்களும் அவர் பின் சூழ்ந்து கொண்டு நின்றன.

இறைவி குட்டி மீனை பார்த்து “இங்கே வா” என்கிறார்.

“உனக்கு போரடிக்குதா இங்கே?” என வாஞ்சையாக கேட்டார்.

“ஆமாம்” என பயத்தோடு சொன்னது குட்டி மீன்.

“சரி, உன்னையும் உன் பேமிலியையும் பக்கத்துல இருக்குற ஆத்துக்கு அனுப்பவா? அங்க நீங்க ஜாலியா விளையாடலாம். நெறய ஜனங்க வருவாங்க” என கேட்டார் இறைவி. 

“வேண்டாம்” என சொல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டது காகம்.

“இல்ல, வேணாம்மா. நாங்க இங்கயே இருக்கோம்” என சொன்னது குட்டி மீன்.

“ஏன்?” என கேட்டார் இறைவி.

“நீ ஏன் அவங்க நோ சொல்லணும்னு வேண்டிக்கிட்ட?” என டக்கென்று அதே நேரத்தில் காகத்திடம் கேட்டார் இறைவன்.

தொக்காய் மாட்டியது காகம். அஜெண்டா அண்டாவில் தானாய் குதித்து மாட்டிக் கொண்டது.

டெம்பிள் ஓனர் கேட்கிறார். எந்த டெம்ப்ளேட்டில் பதில் சொல்வது என யோசித்தது.

“என்ன, ஓனர பத்தி என்ன யோசனை?” என அதை மீண்டும் சீண்டினார் இறைவன்.

இந்த கேள்வியில் டெம்ப்ளேட்டை முடிவு செய்தது காகம்.

“இல்ல சாமி, உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல. ஆத்து தண்ணி ரொம்ப மாசா இருக்கு. ஜனங்க குடிக்கவும் லாயக்கு இல்லை. மீனுங்க வாழவும் லாயக்கு இல்லை. அங்க போய் சாகுறதுக்கு இதுங்க இங்கயே பொழச்சி இருக்கலாம்” என விளக்க தீபத்தை ஏற்றியது காகம்.

“ஏன் மாசா இருக்கு? யாரு பண்ற வேலை இது” என கோபமாய் கேட்டார் இறைவி.

“உன் டெம்ப்ளேட் ஒர்க்அவுட் ஆயிடுச்சி. டீடைலா சொல்லு” என சிரித்தார் இறைவன்.

ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும். ஆனா நம்மள வெச்சி செய்றாங்க என நினைத்தது காகம்.

“அதான் எங்க டெம்ப்ளேட்” என சொன்னார் இறைவன்.

காகத்துக்கு கேம் புரிந்து விட்டது.

பேசாமல் தெரிந்ததை சொல்லி விடலாம் என ஆரம்பித்தது.

“எல்லாம் அந்த சிமெண்டு பேக்டரியால வந்து வினை. அவனுங்க கழிவையெல்லாம் ஆத்து தண்ணில கொட்டுறானுங்க. மாசு வாரியமும் கண்டுக்காம இருக்கு. ஜனங்க போராடி போராடி அலுத்துப் போய்ட்டாங்க. பேக்டரிகாரனுங்க ஊருக்கு தண்ணி சுத்திகரிக்குற மெஷினை போட்டு பிரச்சினையை அமுக்கிட்டாங்க. நல்ல தண்ணி கெடைக்குறதால ஜனங்களும் அந்த பிரச்சினையை அப்படியே விட்டுட்டாங்க. பாவம், இந்த மீனுங்க தான் கூண்டோடு அழியுதுங்க” என விவரித்தது காகம்.

மச்சிமாவும் மற்றும் சில மீன்களும் குனிந்து கண்ணீர் சிந்தின.

Fish family

அவர்கள் இனத்தின் அழிவை யாரோ ஒருவர் விவரிக்கும் போது தாங்கள் தப்பி பிழைத்ததற்கு சந்தோஷப்படுவதா அல்லது தங்கள் இனத்தின் அழிவிற்காக வேதனைப்படுவதா என புரியாமல் இருந்தன.

இறைவி கண் மூடி இந்த டாபிக்கை யோசித்தார்.

அந்த ஓனர் தன்னுடைய பரம பக்தர் என தெரிய வந்தது.

பேக்டரி லாபத்தில் கோவிலுக்கு ஒரு தொகையை உபயமாக கொடுத்திருக்கிறார்.

“அந்த ஓனர் உங்க டிவோடீ தான். நம்ம கோவிலுக்கு கூட நெறய காசு குடுத்து இருக்காரு. அந்த குஷில நீங்களும் அந்த ஆளு வேண்டுற காண்ட்ராக்டெல்லாம் முடிச்சு தரீங்க” என தைரியமாய் சொல்லி விட்டது காகம்.

“நெலம் நீரெல்லாம் பாழாக்கிட்டு, இந்த கொளுத்த காப்பாத்துறேன்னு சுத்து செவரு கட்ட, கேட்டு போடன்னு நிதி குடுத்திருக்கான். அதையும் போர்ட் போட்டு மாட்டி நல்லவன் பேரெடுக்குறான். இதே போர்ட ஆத்தோரம் வெப்பானா? நான்தான் இத நஞ்சாக்கிட்டேன்னு” என திட்டி தீர்த்தது மச்சிமா.  

சிமெண்டு பாக்டரி ஓனர் கிழவன் சிக்கி சின்னா பின்னமானார்.

“ஏதோ உண்டில ஐஞ்சு பத்து போடுறவனை ஒண்ணும் செக் பண்ண வேண்டியதில்லை. லம்பா ஒரு தொகையை ஒருத்தன் குடுத்தா, டியூ டிலிஜன்ஸ் பாக்காம எப்புடி வாங்கலாம்?” என முதல் கேள்வியை கேட்டது மாருதி.

“இது கார்பொரேட் குரங்கு” என நினைத்துக் கொண்டார் இறைவி.

இறைவன் இறைவியை பார்த்தார். பிறகு மச்சிமாவிடம் பேச ஆரம்பித்தார்.

“நாங்க இந்த விஷயத்துக்கு ரொம்ப வருத்தப்படறோம். தப்பு செஞ்சவங்களுக்கு நாங்க தக்க தண்டனையை கொடுப்போம். இனிமே இந்த மாதிரி நடக்காம நாங்க பாத்துக்கறோம்” என்றார்.

“என்ன நீங்களும் ராஜா மாதிரியே பேசுறீங்க? அவரும் அப்டி தான். எங்க யார் செத்தாலும், ரேப்பு நடந்தாலும் ஒரு லெட்டரை எங்களுக்கு போட்டுட்டு அந்த விஷயத்தை கெடப்புல போட்டுடுவாரு” என காகம் ராஜாவை கோர்த்துவிட்டது.

முதலில் சிமெண்ட் கம்பெனி ஓனர் கிழவன். இப்போது ராஜா.

அடுத்து லிஸ்டில் இருப்பது தாங்கள் தான் என அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.

“சரி, அந்த ஓனர் பண்ண தப்புக்கு அவர் பதில் சொல்லியாகணும். அவர் அனுபவிப்பார். கேட்டு தொறக்க ஏற்பாடு பண்றோம்” என்றார் இறைவி.

“ஆத்து தண்ணிய சுத்தம் பண்ணி தருவீங்களா, ப்ளீஸ்” என்றது குட்டி மீன்.

“கண்டிப்பா, அந்த ஓனர இனிமே பொறுப்பா இருக்க சொல்றேன். நல்ல மழையை குடுத்து அந்த ஆற்றை வளமாக்குறேன்” என உத்திரவாதம் கொடுத்தார் இறைவி.

மச்சிம்மாவும் மீன்கள் கூட்டமும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தார்கள்.

சரியான மங்குனி கூட்டம் என மனதிற்குள் திட்டியது காகம். இன்னும் எவ்ளோ இருக்கு சரி பண்ண. இதுங்க என்னடான்னா இதுக்கே சந்தோசப்படுதுங்க. இதுங்களுக்கு சுய புத்தியே இல்ல என கருவியது.

“ஏங்க, நாமளும் வாட்டர் பவுண்டைன் போடலாமா கொளத்துல. அப்டியே கொஞ்சம் நல்ல லைட்டிங்கும் பண்ணா ஆம்பியன்ஸ் நல்லாயிருக்கும்” என கேட்டார் இறைவி.  

இரண்டு மாவட்டம் தாண்டி இறைவியின் சகோதரியின் திருத்தலம் இருக்கிறது. நீரூற்று வைத்த குளம் இருக்கிறது அங்கே.

“மந்திரி சம்மந்தி தான் அந்த கான்டராக்ட செய்யுறாரு. உங்க அக்கா கோவிலுக்கும் அவரு தான் பவுண்டைன் போட்டாரு. கூட கொஞ்சம் அமௌண்டையும் ஆட்டையை போட்டாரு அந்த டீலிங்க்ல” என சொல்லியது காகம்.

லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. இறைவன் அதையும் நோட் செய்து கொண்டார். காகத்தின் டெம்பிளேட் நன்றாக வேலை செய்தது.

“உனக்கு ஒண்ணும் பிராது இல்லியா? சௌகர்யமா இருக்கியா?” என டாபிக்கை காகத்தின் பக்கம் திருப்பினார் இறைவன்.

“ஏதோ உங்க புண்ணியத்தால சாப்பாட்டுக்கு கொறையில்லாம இருக்கேன். வேளா வேளைக்கு வயிறார சாப்புடறேன். வேற என்ன வேணும் ஒரு ஜீவனுக்கு?” என பவ்யமாய் பதில் சொன்னது காகம்.

தன்னிடம் வரும்போது காகம் சட்டென்று நியூட்ரல் கியருக்கு மாறியது மச்சிமாவுக்கு உறுத்தலாக இருந்தது.

நேத்து தான் ரேடியேஷனுக்கு பயந்து வீடு மாறின கதையை சொல்லுச்சு. இன்னிக்கு என்னடான்னா ஒண்ணும் பிரச்சினை இல்லேன்னு சொல்லுது” என மனதிற்குள் அலுத்துக் கொண்டது.

“ஆனா கொஞ்சம் கில்டியா பீல் பண்றேன்” என இழுத்தது காகம்.

மாருதிக்கு காகத்தின் அடுத்த அஜெண்டா புரிந்தது. ஆனாலும் பேசாமல் இருந்தது. தன்னிடம் கேட்டால் பதில் சொல்லலாம் என நினைத்தது.

“சொல்லு கேக்குறோம்” என்றார் இறைவன்.

“இல்ல, கணேசன் அண்ணனுக்கு நல்ல சாப்பாடு போடுறீங்க. நம்ம கோசாலைல இருக்குற யசோதாவுக்கும் ஒரு குறைவும் இல்ல. நானும் மாருதியும் அலைஞ்சு திரிஞ்சு கோவிலுக்குள்ள வயித்த நெறைச்சுக்கறோம். ஆனா இந்த மீனுங்களுக்கு தான் ஒரு வழியுமில்லை. இயற்கையாவே அதுங்களுக்கு கெடைக்குற புழு பூச்சி பாசிய தின்னு வாழுதுங்க. எல்லாருக்கும் படியளக்குற நீங்க அதுங்களுக்கு ஒரு வழி பண்ணலாமுல்ல? ஏதோ சில பக்தர்கள் புண்ணியத்துல அப்பப்போ கொஞ்சம் பொரி சாப்பிட்டுதுங்க. அதையும் அந்த தங்கராஜு பய பூட்டு போட்டு தடுத்துட்டான். அதுங்க மனசு எவ்வளவு வேதனையா இருக்கும்? நாங்க எல்லாம் உங்க படைப்பு தானே. உங்க வீட்ல இருக்கவுங்க, கோவிலுக்கு வர பக்தர்கள் எல்லாருக்கும் குறைவில்லாம உணவை குடுக்குற நீங்க, ஏன் இந்த மீன் குட்டிகளை மறந்தீங்க? நா வேளாவேளைக்கு சாப்பிடும் போது இதுங்க ஞாபகம் வருது, கூடவே தங்க ராஜு மேல கோவமும் வருது” என சொல்லி முடித்தது காகம்.

மாருதியும் மச்சிமாவும் வாயடைத்துப் போனார்கள். 

இறைவனும் இறைவியும் அதே நிலையில் தான் இருந்தார்கள்.

“உங்கள் காலடியிலேயே வாழும் இவர்களுக்கு என்ன கருணை காட்டினீர்கள் இதுவரை? உணவும் இல்லை. உற்சாகமும் இல்லை. இந்த மீன்கள் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த கோவிலில் எந்த மனித நடமாட்டமும் இல்லாமல் வெறுமையாக இருக்கின்றன. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?” என பொரிந்து தள்ளியது காகம்.

மாருதிக்கு காகத்தின் மீது பெரும் மரியாதை ஏற்பட்டது. இனியும் தான் வாய் மூடி இருப்பது இழிவு என கருதியது.

“மன்னியுங்கள் மச்சிமா. இவ்வளவு நாள் இதை ஏன் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் எப்போதோ தீர்வு கண்டிருக்கலாமே?” என கேட்டார் இறைவி.

“படைத்த தாய்க்கு தெரியாதா பிள்ளைகளின் நிலை” என இருந்து விட்டோம் என அப்பாவியாய் சொன்னது மச்சிமா.

“என்னையும் மன்னித்துக் கொள்ளுங்கள் மச்சிமா. நாங்களும் எங்கள் அருகிலேயே வாழும் உங்களை கவனிக்கத் தவறிவிட்டோம்” என வருந்தினார் இறைவன்.

மச்சிமா பதறி விட்டது. இவ்வளவு தூரம் இவர்கள் பணிவாய் மன்னிப்பு கேட்பார்கள் என அது எதிர்பார்க்கவில்லை.

மாருதி காகத்தை பெருமையாய் பார்த்தது. மிகவும் நுட்பமான விஷயத்தை தைரியமாக வாதம் செய்து தீர்த்து வைத்திருக்கிறது. 

கடவுளின் காலடியிலேயே இருந்தாலும் எந்த பிரச்சினையாய் இருந்தாலும் வாய் திறந்து கேட்டால் தான் தீர்வு கிடைக்கும் என அவர்களுக்கு தெளிவாய் புரிந்தது.

Tamil novel – Jiteswari – Part 9/21

Hindu temple

அன்று கோவிலில் தெப்போற்சவம். சாயந்திரம் விளக்கு வைத்ததும் இரண்டு மணி நேரம் இறைவனும் இறைவியும் திருக்குள தெப்பலில் பவனி வந்தார்கள். பக்தர்கள் வெள்ளம் திரளாக இருந்தது.

இந்த கோவில் இறைவிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சக்தி வாய்ந்த தெய்வமாக தென்னிந்தியாவில் போற்றப்படும் தலம்.

நாள் கிழமை முதற்கொண்டு ஆராதனைகள் வரை இறைவியை மையப்படுத்தியே இருக்கும். இறைவன் தனி சன்னதியில் சமர்த்தாக இருப்பார். கோவிலில் கிடைக்கும் படங்களில் பெரும்பாலும் இறைவி மட்டும் தான் இருப்பார். ஒரு சில படங்களில் மட்டுமே தம்பதி சமேதராக இருப்பர்.

இறைவனுக்கு பக்கத்து மாவட்டத்தில் புகழ் வாய்ந்த திருத்தலம் இருக்கிறது. அங்கு அவர் தான் எல்லாம். அங்கே இறைவி தனி சன்னதியில் சமர்த்தாக இருப்பார்.

தெப்போற்சவம் அமர்க்களமாக நடந்து முடிந்தது. இறைவி கோவிலுக்குள் திரும்ப மக்கள் அனைவரும் கலைந்து சென்றார்கள்.

“இன்னைக்கு என்ன நம்ம மீன் குட்டிங்க எல்லாம் சுரத்தே இல்லாம இருக்குங்க? கவனிச்சியா?” என்றார் இறைவன்.

“ஆமாங்க, நானும் பார்த்தேன். ஜனங்க, லைட்டு எல்லாத்தயும் பாத்து துள்ளி குதிச்சி வெளையாடுவாங்க. இன்னைக்கு என்னடான்னா ரொம்ப டல்லா இருக்காங்க” என பேசிக்கொண்டே கண்ணை மூடினார் இறைவி.

“நம்ம தங்கராஜ் மேல வருத்தமா இருக்காங்க, கேட்டு பூட்டுனது அவங்களுக்கு விருப்பமில்லை” என கண்டுபிடித்து பேசிக்கொண்டார்கள்.

“சரி ராத்திரி ஒரு எட்டு போய் அவங்ககிட்ட பேசிட்டு வரலாம்” என்றார் இறைவன்.

“ஆமா, இன்னும் ஒரு பூஜை இருக்கு. அது முடியட்டும். எல்லாரும் பூட்டிட்டு போனதும் கெளம்பலாம்” என்றார் இறைவி.

சிலமணி நேரம் முன்பு ஆயிரக்கணக்கானோர் வந்து சென்ற சுவடே இல்லாமல் அமைதியாக இருந்தது கோவில்.

பொழுதோடு போய் யசோதா பசு கோசாலையில் படுத்துவிட்டது.

கோவில் யானை கணேசன் பொழுதுக்கும் நின்ற கால் வலியில் முனகிக்கொண்டு இருந்தது. அடுத்த நாள் காலையில் ராஜ வீதியில் ஊர்வலம் இருக்கிறது. எப்படியும் ஏழு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.

சாயந்திரத்திலிருந்து கால் மாற்றி கால் மாற்றி நின்று சோர்ந்து போயிருந்தது. சற்று நேரத்தில் ஒரு போன் வர பாகன் பேச ஆரம்பித்து விட்டார். கணேசனுக்கு சாப்பாடே வேண்டாம் என தோன்றியது. பேசாமல் போய் புல்லின் மீது படுத்துக் கொண்டது. சற்று நேரம் கழித்து வந்த பாகன் கணேசனை தடவி சமாதானப்படுத்தினார்.

பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு முடித்தது கணேசன். பாகன் தூங்க போக அங்கே வந்த மாருதியிடம் பேச ஆரம்பித்தது.

An elephant at temple

“நாளைக்கு நாளைல ஊர்வலம் போறோம். ரோட்டோரம் ரோஸ்மில்க் குடிச்சிக்கிட்டு எங்கள வச்சி செல்பியா எடுத்து ஸ்டேட்டஸ் போடுவாங்க. எவன் இப்பலாம் பக்தியோட வரான்? ஸ்டேட்டஸ் போட நாலு போட்டா எடுக்க தான் வரானுங்க. இதுக்கு லோக்கல் ஹாலிடே வேற” என புலம்பியது கணேசன்.

“திருக்கோவில்ல இருக்குறக்குற கொளத்துக்குள்ள இருக்குறவங்களுக்கே இவ்ளோ மனக்குறை இருக்கு. இந்த அம்மா என்னடானா என் மேல ஏறி ஒக்காந்துக்கிட்டு ராஜ வீதி சுத்தி வந்து அருள கொட்டப்போகுது. அவங்க காலடியிலேயே கெடக்குற ஜீவன்களுக்கு வேற என்ன போக்கிடம் இருக்கு?” என மாய்ந்து போய் பேசிக்கொண்டிருந்தது கணேசன்.

“திரும்புற பக்கமெல்லாம் வித விதமான பிரச்சினையோட ஜனங்க மொச்சா கடவுளுங்க மட்டும் என்ன பண்ணுவாங்க? அந்த காலத்துல என்ன இவ்ளோ வெரைட்டி பிரச்சினைகளா இருந்துது? சாமி மழையை குடு, வெளச்சலை குடு, ஆடு மாடு கண்ணுகுட்டிய நோய் நொடி இல்லாம பாத்துக்க, குடும்பத்தை காப்பாத்துன்னு விரல் விட்டு சொல்லிடலாம். இன்னும் மிஞ்சி போனா குழந்தய குடு, நோயை தீரு, செல்வத்தை குடுன்னு கேப்பாங்க.

இப்போ என்னடான்னா ஆன்சைட் வேணும். அதுவும் நல்ல வெதர்ல ஷாட் டெர்மா வேணும். கூட நல்ல பிகரா ஏதாவது வரணும். மொக்க க்ளையண்டா இருக்கணும். சவுத் இந்தியன் சோறு கெடைக்கணும்.

லாங் டெர்முன்னா சாமி வீடு புக் பண்ணி குடுக்கணும். நல்ல காரு, அதுவும் அதுவாவே ஓடுற மாதிரி வாங்கி தரணும். அவங்க ஆன்சைட் போன நேரத்துல அவங்க அப்பா அம்மாவுக்கு நோய் நொடியில்லாம பாத்துக்கணும். கூட போற ஸ்பவுசும்கும் மவுஸான வேலை வாங்கி தரணும். இந்த காலத்து மனுஷங்களுக்கு கடவுளா இருக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” என வக்காலத்து வாங்கியது மாருதி.

“நீயும் உன் கடவுளோட அசைன்மென்டுக்கு ஆன்சைட் போனவர்தானே? அவரை எப்படி விட்டு குடுப்ப” என கேலி செய்தது கணேசன்.

“ஆமா ஆன்சைட் போய் இவங்கள மாதிரி பன்னா பண்ணேன். என் வாலுல தீய வெச்சு புண்ணானது தான் மிச்சம்” என இடித்தது மாருதி.

“அரே பாபா, அந்த டீம்லயே நீதான் டாப் பர்பாமரு. உன் மேல இருக்குற ப்ரேமத்துல தான், சாமி எல்லா பேமிலி போட்டோ பிரேம்லயும் உன்னை வெச்சிருக்காரு” என கிண்டலடித்து கணேசன்.

மாருதியோடு பேசியதில் கொஞ்சம் ரிலாக்சானது கணேசன். “சரி நான் போய் படுக்கிறேன். நாளைக்கு காலைலயே எழுந்து ரெடியாகணும்? என

சொல்லி மாருதியை வழியனுப்பியது.

Tamil novel – Jiteswari – Part 8/21

A senior couple a temple

அடுத்த நாள் காலையிலேயே புஷ்கரும் கல்யாணியும் கோவிலுக்கு போக ரெடியாகிவிட்டார்கள். நேசப்பாவும் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டுக்கொண்டு கிளம்பினார்.

“ரொம்ப நாளாச்சு கோவிலுக்கு போய். நானும் வரேங்க” என்றார் சங்குபுஷ்பம்.

“பசங்களா, மழை கொட்ட போகுது, கொடை எடுத்துக்குங்க, உங்க பாட்டியும் கோவிலுக்கு வராளாம்” என கிண்டலடித்தார் நேசப்பா.

ஜித்தும் லக்ஷ்மியும் வாக்கிங் முடித்துவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள்.

ஜித்துக்கு காமாட்சியின் போன் வந்தது.

“நல்லாருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா?” என விசாரித்தாள்.

இரண்டு நிமிடம் பேசி முடித்தவுடன் நேசப்பா கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு போய் பால்கனியில் நின்றாள்.

எதிர் பிளாட்டு பால்கனியில் வெளிர் நீல புடவை  காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் சடாரென கற்பகத்தின் நினைவு வந்தது ஜித்துவுக்கு. லேசாக கண்ணீர் துளிர்க்க அந்த நினைவில் ஆழ்வது தன்னை மேலும் பலகீனப்படுத்தும் என திரும்பி ஹாலுக்குள் வந்தாள்.

சங்கு புஷ்பம் குளித்துவிட்டு வர “எங்கம்மா கெளம்புற காலங்காத்தால?” என கேட்டாள் லக்ஷ்மி.

“கோவிலுக்குடி. பசங்கள கூட்டிட்டு போறோம்” என்றார் சங்கு புஷ்பம்.

“ஜித்து நீயும் வரியா? எல்லாரும் சேந்து போகலாம்” என அழைத்தாள் லக்ஷ்மி.

போனை எடுத்து கேலண்டரை பார்த்தாள் ஜித்து. மதியம் ஒரு மணிக்கு தான் ஒரு மீட்டிங் இருந்தது.

“சரி போலாம். பத்து நிமிஷத்துல ரெடியாயிடறேன்” என்றபடி குளிக்க போனாள் ஜித்து.  பிளான் மாறிய பிறகு சங்கு புஷ்பம் கிச்சனுக்குள் நுழைந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரத்தில் எல்லாரும் ரெடியாக டாக்ஸி பிடித்து கோவிலுக்கு

போய் இறங்கி உள்ளே நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் வயதானவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

நேசப்பா சில்லறை எடுத்து குழந்தைகளிடம் கொடுத்து அவர்களுக்கு கொடுக்க சொன்னார்.

ஜித்துவும் லக்ஷ்மியும் பர்ஸை துழாவினார்கள். சில்லறை காசோ, கரன்சியோ எதுவும் இல்லை. துடைத்து வைத்தார் போல இருந்தது பர்ஸ்.

“அம்மா சில்லறை இருந்தா குடு” என்றாள் லக்ஷ்மி.

“ஏண்டி உங்க டிஜிட்டல் இந்தியால தர்மத்துக்கு ஆப்ஷன் இல்லியா?” என நக்கலாய் கேட்டார் சங்கு புஷ்பம்.

“பத்து ரூபாய்க்கு சில்லறை காசு தர இவ்ளோ பேச்சு பேசுற” என்றபடியே சிரித்தாள் லக்ஷ்மி.

போனை லாக்கரில் வைத்து விட்டு வந்ததால் அர்ச்சனை டிக்கெட் மற்றும் நெய் விளக்கு வாங்க, ஐயருக்கு தட்டில் போட, உண்டியலில் போட என

இருவரும் காசுக்காக பவ்யமாக நின்றார்கள்.

சங்கு புஷ்பம் கெத்தாக கரன்சியை எடுத்து எண்ணி, பிறகு சில்லறை காசு எண்ணி கொடுப்பது என ஒரே சீனாக இருந்தது.

“மா, நேத்து மார்க்கெட் போய் கடைசி காசு வரை செலவு பண்ணிட்டோம். நீ ரொம்ப சீன் போடாதே” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.

“கொஞ்சமான ஆட்டமா போடுறீங்க போன வச்சிக்கிட்டு. கண்ணு மண்ணு தெரியாம ஊதாரித்தனமா செலவு பண்றீங்க. இப்போ என் டைம்” என காட்டமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

பேசியபடியே வெளி பிரகாரம் சுற்றி குளத்தருகே வந்தார்கள். நேசப்பா ஆபீஸ் ரூமுக்கு போய் கேட் திறப்பது பற்றி விசாரித்தார். ஆபீஸர் வாட்ச்மேனிடம் சாவி கொடுத்து அனுப்பினார்.

குளத்து கேட் திறந்ததும் குழந்தைகள் குக்ஷியானார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தார்கள்.

“கொஞ்சம் மேல வாங்க எல்லாரும்” என அழைத்தார் சங்குபுஷ்பம்.

நாலு படி இறங்கிய ஜித்து “என்னமா?” என்றாள்.

சங்குபுஷ்பம் பக்கவாட்டில் இருந்த மண்டபத்தில் ஏறி தூணில் சாய்ந்து உட்கார்ந்து காலை நீட்டிக்கொண்டார்.

“சுக்கு காபி பிளாஸ்க்ல கொண்டாந்துருக்கேன். குடிச்சுட்டு அப்புறம் போய் படிக்கட்டுல உக்காரலாம்” என பையை பிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

“நெனச்சேன் நீ பைய தூக்கிட்டு கிளம்பும் போதே. என்னென்ன சரக்க உள்ள வெச்சிருக்கியோன்னு. கோவிலுக்கு வந்தா ஜங்க்க்ஷன்ல இருக்குற காபி ஹவுஸ்ல போய் சுக்கு காபி குடிக்கணும்னு ஜித்துக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீ என்னடான்னா வீட்லருந்தே போட்டு எடுத்துட்டு வந்துட்ட” என சிணுங்கினாள் லக்ஷ்மி.

“அம்மா கூட அப்டி தான். பிரிக்க முடியாதது நர்ஸும் பிளாஸ்க்கும் போல” என சொல்லி சிரித்தாள் ஜித்து.

“ஆமா, எங்க காலத்துல இருந்த ஹைடெக் சாமான்ல பிளாஸ்க்கும் ஒண்ணு. வார்டுல பிளாஸ்க் வெச்சிருக்கிற பேஷண்ட் கொஞ்சம் கெத்தாதான் இருப்பாங்க. வயசான இல்லாதவங்களுக்கு சொந்தமா பிளாஸ்க் இருக்கிறதே ஒரு பெரிய கனவு தான். பெரும்பாலானவங்களுக்கு வீட்லேர்ந்து யாரும் வர மாட்டாங்க. கவெர்மென்ட்டு மூணு வேளை சாப்பாடு குடுக்கும். கூட சூடா காபியோ பாலோ குடிச்சே, ஆஸ்பிடல்லேர்ந்து டிஸ்சார்ஜ் ஆகுற வரை ஓட்டிடுவாங்க” என விவரித்தார் சங்கு புஷ்பம்.

புஷ்கரும் கல்யாணியும் அந்த பிளாஸ்கை மரியாதையாக பார்த்தார்கள்.

“பேசாம காபி ஹவுசே போயிருக்கலாம்” என மீண்டும் ஆரம்பித்தாள் லக்ஷ்மி.

“உனக்கென்ன சரக் சரக்குன்னு கார்டு தேய்ப்ப. இல்ல போன எடுத்து காச சுட்டு தள்ளுவ. சுக்கி காபியோடு முடிக்கிற ஆளா நீ? எங்களுக்காவது பென்சன் வருது. உங்களுக்கு அதுவும் கிடையாது. நாப்பத்தஞ்சு வயசாச்சுன்னா பொம்பளைங்களுக்கு எப்படா ரிட்டயர்டு ஆவோம்னு இருக்கும். சுகர் எட்டிப்பாக்கும்.மெனோ பாஸ் வதைக்கும். ஒடம்புல தெம்பு இருந்து வேலைக்குப் போகும்போதே செலவை கண்ட்ரோல்ல வைங்க. இப்போ சேமிக்கலேன்னா பின்னாடி இதே ஜோர்ல செலவு பண்ணமுடியாது” என நிதர்சனத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.

“நல்லதா ஒரு காபி குடிக்கலாம்னு சொன்னா எனக்கு நரை வந்து கூன் விழுறவரை பயம் காட்டுறியேம்மா? டென்ஷனை கன்ட்ரோல்ல வை, புருஷனை கன்ட்ரோல்ல வை, வெய்ட்ட கன்ட்ரோல்ல வைனு எவ்ளோ ப்ரெஷரும்மா” என அலுத்துக்கொண்டாள்  லக்ஷ்மி. 

நேசப்பா குழந்தைகளுக்காக சர்க்கரைப் பொங்கல் வாங்கி வந்தார். சற்று நேரத்தில் அவர் பின்னாடியே கையில் தூக்கு வாளியுடன் ஒருவர் வந்தார்.

“மேடம் நல்லாருக்கீங்களா?” என்றார்.

“நல்லாருக்கேன் பரணி. தங்கமயிலும் பசங்களும் சௌக்கியமா?” என விசாரித்தார் சங்கு புஷ்பம்.

பரணி கோவில் பணியாளர். தங்கமயில் சில ஆண்டு காலம் அவர்கள் சொசைட்டி ஆபீசில் வேலை பார்த்தாள். மயிலின் இரண்டு டெலிவரியும் சங்கு புஷ்பம் வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் நடந்தது.

“நல்லா இருக்காங்க மேடம். சார தூரத்துல இருந்து பார்த்தேன். அதான் பிரசாதம் தரலாம்னு வந்தேன்” என தொன்னையில் புளியோதரை வைத்து கொடுத்துவிட்டு கிளம்பினார். நிதானமாக சாப்பிட்டு சுக்கு காபியும் குடித்து முடித்தார்கள்.

“மா, காபி அவுஸ் டேஸ்ட் அப்டியே இருக்கு” என புகழ்ந்தாள் லக்ஷ்மி.

“நீங்க வரீங்கன்னு சொன்னதும் அம்மா அந்த காபி அவுஸ்லேர்ந்து மிக்ஸ் வாங்கிட்டு வர சொல்லிட்டா” என சொன்னார் நேசப்பா.

“செம பிளான்மா” என சிரித்தாள் லக்ஷ்மி.

“இந்த கப்பு காப்பிய அம்பது ரூபா சொல்வான். இப்போ பாரு சிம்பிளா முடிஞ்சிது. நீ காபி குடிக்கலாம்னு உள்ள நொழஞ்சி ரெண்டாயிரத்துக்கு கார்டு தேய்ப்ப” என சொன்னார் சங்கு புஷ்பம்

லக்ஷ்மி வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்க ஜித்து தலையசைத்தும், புன்னகைத்தும் கேட்டு கொண்டிருந்தாள். நேசப்பாவுக்கு ஜித்து சாதாரணமாக இல்லை என புரிந்தது. யோசனையும் கவலையும் தீவிரமாக குளத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

லஷ்மி காபி டம்ளர்களை வெளியே கொண்டுபோய் கழுவி எடுத்து வந்தாள்.

சங்கு புஷ்பம் அதையெல்லாம் பையில் வைத்துவிட்டு இரண்டு பொரி டப்பாக்களை வெளியே எடுத்தார். புஷ்கருக்கும் கல்யாணிக்கும் ஆளுக்கொன்று கொடுத்தார்.

டப்பாவை கையில் வாங்கிய புஷ்கர் சற்று நேரம் யோசித்தான்.

“தாத்தா நானும் பாட்டியும் அந்த கார் னர் போறோம். நீங்க பாப்பா கூட இங்கயே இருங்க” என்றான்.

“சரிப்பா” என்றார் நேசப்பா.

“மா, நாங்க ஹெவியா சாப்டுட்டோம். கொளத்தை ரெண்டு ரவுண்டு சுத்திட்டு வரோம்” என ஜித்துவோடு கிளம்பினாள் லக்ஷ்மி.

ஜித்துவின் அமைதி லக்ஷ்மிக்கும் கவலையை தந்தது. எதுவானாலும் அவளே சொல்லட்டும் என பொறுத்திருந்தாள். ஆனால் கோவிலுக்கு வந்த பிறகு நாமே ஆரம்பிப்போம் என்ன விஷயம் என கேட்போம் என முடிவெடுத்தாள்.  சற்று நேரம் நடந்த பிறகு மறு கரையில் உட்கார்ந்தார்கள்.

Friends at temple

“மைண்டுல என்னடி போட்டு உருட்டிக்கிட்டு இருக்க? நானும் வந்ததுலேர்ந்து பாக்குறேன். யோசனயாவே இருக்க” என உரிமையாக கேட்டாள் லக்ஷ்மி.

“மும்பை ஆபீஸ் போய் ஜாயின் பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்” என்றாள் ஜித்து.

“அவர் வரேன்னு சொல்லிட்டாரா? என குதூகலமானாள் லக்ஷ்மி.

“இல்ல” என்றாள் ஜித்து.

“அப்போ பசங்கள கூட்டிட்டு நீ மட்டும் போறியா? என நிதானமாக கேட்டாள் லக்ஷ்மி.

“இல்ல, இன்னும் முடிவு பண்ணல” என்றாள் ஜித்து குளத்தை பார்த்தபடியே.

நிஜமாகவே யாரோ தன்னை குளத்துக்குள் உருட்டுவது போல பகீரென ஆனது லக்ஷ்மிக்கு. அவள் காயம் மட்டும் ஆழமானது என புரிந்தது. கைக்குள்ளேயே வைத்து வளர்த்த குழந்தைகளை தீர்க்கமாய் அழைத்து செல்வேன் என சொல்லாமல் விட்டேத்தியாய் இருக்கிறாள்.

“எனக்கு திரும்ப பாண்டி போக விருப்பமில்லை. ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டேன். சங்குமாகிட்டயும் பேசிட்டேன். பத்து நாள் எதை பத்தியும் நினைக்காம வெய்ட் பண்ண சொன்னாங்க. எதுவாயிருந்தாலும் அடுத்த வாரம் பேசிக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்றாள்.

“நா மும்பை ஆபீஸ்ல பேசிட்டேன். நாலு மாசம் கழிச்சு ஜாயின் பண்ணுவேன்னு நெனைக்கிறேன். அண்ணன் அடுத்த வீக்கெண்ட் வரேன்னு சொல்லியிருக்கன். சங்குமாதான் அவன்கிட்ட பேசுனாங்க. அவன் இன்னும் என்கிட்டே பேசல. மெசேஜ் மட்டும் போட்டிருக்கான்” என இடியை இறக்கினாள் ஜித்து.

முடிவை வெளிப்படையாக சொன்னவள் இப்போது வரை அதன் காரணத்தை சொல்ல கூச்சப்படுகிறாள்.

கண்டிப்பாக ராஜுவோடு ஏதோ வருத்தம். இந்த எல்லைக்கு போயிருக்கறாள்.

நெதர்லாந்து போகும் முன் நல்லபடியாக இருந்த குடும்பம் இப்போது இந்த நிலையில் நிற்கிறது.

லக்ஷ்மி வேறு பக்கம் முகத்தை திருப்பி கண்ணை மூடிக் கொண்டாள்.

ஜித்துவை நேராய் பார்க்கும் துணிவு அவளுக்கு இல்லை. 

இந்த வயதில் இந்த பொண்ணுக்கு ஏன் இந்த நிலை கடவுளே என வருந்தினாள்.    

தன் அம்மாவை நினைத்தாள் லக்ஷ்மி. இவளை கண்டிப்பாக அவர்களால் மட்டுமே தேற்ற முடியும். இவள் இந்த மனநிலையில் எடுத்த ஒரு நல்ல முடிவு இங்கு வந்தது தான்.

ஆனால் சங்கு புஷ்பம் எந்த சலனமும் இல்லாமல் இவளிடம் பேசுவது லக்ஷ்மிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் அனுபவம் அப்படி என நினைத்துக் கொண்டாள்.        

Tamil novel – Jiteswari – Part 7/21

a talk between a crow and monkey

குளத்தின் நடுவே கல் மண்டபம் இருக்கிறது. அதன் அருகே நீரில் சில மீன்கள் கம்பி ஜன்னலருகே நெடு நேரமாக குழந்தைகள் நிற்பதை கவனித்தபடி நீந்தி கொண்டிருந்தன.

பூட்டிய கேட்டை பார்த்தபடியே குழந்தைகள் ஏமாற்றமாக நின்றது குட்டி மீனுக்கு வருத்தமாக இருந்தது.

“அம்மா, ஏன்மா இப்போ கேட் பூட்டி வெக்குறாங்க? அங்க பாரு குட்டி பசங்க சேடா இருக்காங்க” என கேட்டது குட்டி மீன்.

“எல்லாம் அந்த தங்கராஜு வேலை. வர்றவங்க குப்பை போடுறாங்க, லவ்வர்ஸ் வராங்கனு ஏதேதோ காரணம் சொல்லி பூட்டி வெச்சிருக்கான். பாவம் பசங்க, விளையாட முடியாம திரும்ப போறாங்க” என்றது அம்மா மீன்.

மண்டபத்தின் மேலே அமர்ந்திருந்த காகம் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தது. சின்னதாய் பறந்து வந்து தரையில் அமர்ந்தது.

“இப்ப கேட் தொறந்தா நீ என்ன வெளில கெளம்பி போக போறியா?” என நக்கலாக குட்டி மீனிடம் கேட்டது.

வயத்தில் மூத்த காகம் என அம்மா மீன் காதில் சொல்லி குட்டி மீனை அமைதிப்படுத்தியது.

பக்கத்து மரக் கிளையில் அமர்ந்திருந்த குரங்கு இந்த மீட்டிங்கில் வந்து சேர்ந்து கொண்டது. சற்று நேரத்தில் அதற்கு அங்கே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என புரிந்தது.

பதில் வராத காரணத்தால் மீண்டும் காகம் சீண்ட தொடங்கியது.

“உங்களுக்கு என்ன வெயில் மழை கஷ்டமா? சொகுசா தண்ணில இருப்பீங்க. இங்கயே பாசி பூச்சிய தின்னு காலத்த ஓட்டிடுவீங்க. என்ன மாதிரி கோபுரம் மேல வெயில்ல காஞ்சி மழைக்கு நனஞ்சா இருக்கீங்க? தண்ணி வத்துற மாதிரி இருந்தா தங்கராஜு டேங்கர்காரன தண்ணி புல் பண்ண சொல்லிடுவான். நா நாலு தெரு பறந்து போய் எங்க வெந்த சோறு கிடைக்கும்னு அல்லாடிக்கிட்டிருக்கேன்” என நீட்டி முழக்கி பேசியது.

தூணில் சாய்ந்து உட்கார்ந்தபடி காகம் சொல்வதை கேட்டு கொண்டிருந்தது குரங்கு.

குட்டி மீனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. சொல்ல முடியாத சோகம் அதன் கண்ணில் கண்ணீராய் வழிந்தது. அம்மா மீனுக்கு தாளவில்லை.

“நீ தெக்கு கோபுரத்துல நல்ல கூடுல தானே இருக்க? என்னவோ வெந்த சோறு மட்டும்தான் சாப்புடுறேன்னு கதவுடுற. நல்லா வடை, சக்கரபொங்கல்னு வகை வகையா சாப்புடுற. எங்கள வந்து குறை சொல்லுற” என காகத்தை தாளித்தது அம்மா மீன்.

“இது காலைல மெனு. மத்தியானம் பஜார் பக்கம் போய் தள்ளு வண்டி கடை பக்கத்துல தான் ஐய்யாக்கு டியூட்டி. சிக்கன் ரைஸ், பிரைட் பிஷ்னு ஒரு ஒரு புடி புடிப்பார்” என்றது குரங்கு.

“அப்புறம் ஐயா இப்போ தெக்கு கோபுரத்துல இல்ல. வடக்கு கோபுரத்துக்குப் போயிட்டார்” என எக்ஸ்ட்ரா டீடைலை சொன்னது மாருதி.

காகம் தொக்காக மாட்டிக்கொண்டது. என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.

“ஆமா, நா மட்டும் தான் சக்கர பொங்கல் சாப்பிடுறேனா? எனக்கே நாலு தொன்னை தள்ளி அஞ்சாவது தொன்னைல தான் கொஞ்சூண்டு கெடைக்குது. நம்ம கணேசன் அண்ணனை பாருங்க, வெல்லம், சோறு, புல்லுனு ராயலா இருக்காரு” என கோவில் யானையை கோர்த்து விட்டது.

தன் மீது ஒரு குறை சொன்னால் அடுத்தவரோடு கோர்த்துவிடும் மனித புத்தி காகத்துக்கும் தொற்றிக் கொண்டது.

“இப்போ என்ன, அந்த பையன் பொரி போட்டு விளையாடி இருப்பான். நீங்களும் வயறு முட்ட தின்னுட்டு ஆட்டம் போட்டு இருப்பீங்க. கேட்டு பூட்டி இருக்கவே உங்களுக்கு காண்டா இருக்கு. அதுக்கு ஏன் என்ன கழுவி ஊத்துறீங்க?” என பிளேட்டை திருப்பி போட்டது காகம்.  

பாதிக்கப்பட்டவைர்களையே பழி போட்டு ஏளனப்படுத்தும் ஈனபுத்தியையும் தவறாமல் கற்றுக் கொண்டு இருக்கிறது என நினைத்தது குரங்கு.

காகத்தின் வார்த்தைகள் மீன்களின் தன்மானத்தை சீண்டியது.

“கொஞ்சம் நிறுத்தறியா” என்றபடி மீட்டிங்கில் சேர்ந்து கொண்டது பாட்டி மீன்.

“நீ ஏன் வடக்கு கோபுரத்துல போய் கூடு கட்டுன?” என காகத்திடம் கேட்டது.

இந்த கேள்வியை காகம் எதிர்பார்க்கவில்லை.

“அங்க ஒரே சத்தமா இருக்கு. அந்த பக்கம் ப்ளைஓவர் கட்டுறாங்க. டஸ்டும், லொட்டு லொட்டுனு சவுண்டும் நாராசமா இருக்கு. இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமாம் முடிக்க. அது வரை யார் அந்த எடத்துல இருக்குறது. அதான் வடக்கு கோபுரத்துக்கு போயிட்டேன்” என்றது காகம்.

“அது மட்டும் தான் காரணமா?” என கூர்மையாக கேட்டது பாட்டி மீன்.

குரங்குக்கு பாட்டி மீன் கேட்ட கேள்வியின் சூட்சுமம் புரிந்தது. அமைதியாக காகத்தின் பதிலுக்கு காத்திருந்து.

காகம் சில நொடிகள் மெளனமாக இருந்தது.

“இல்ல, தெக்கு கோபுரம் பக்கத்துல மொபைல் டவர் இருக்கு. இஎம்எப் ரேடியேஷன் அதிகமா இருக்கு. என் ஒய்ப்புக்கு கருமுட்டை பிரச்சினை வந்துடிச்சி. இந்த சாமிய வேண்டாத நாளில்லை ஒரு வாரிசை குடுக்க சொல்லி. எங்க அப்பா அம்மாக்கும் திசையறிஞ்சு பறக்குறதுல குறைபாடு வந்துடிச்சி. பக்கத்துல எங்க அக்கா ஊருக்கு போய் பார்த்துட்டு வரதுக்கு அவ்ளோ தடுமாறுறாங்க. ரேடியேஷனால அவங்க பறக்குற திறனும் பாதிக்கப்பட்டிருக்கு. ஒரு நாள் தள்ளு வண்டி பக்கத்துல உக்காந்து சாப்பிடும் போது எப் எம் ரேடியோல மொபைல் டவர் ரேடியேஷன் பத்தி சொன்னாங்க. அப்போ தான் எனக்கும் எங்க பிரச்சினைக்கு காரணம் புரிஞ்சுது. எங்க அம்மா கூட வாஸ்து சரி இல்ல, கூட்ட கொஞ்சம் மாத்தி கட்டுனு பொலம்பிகிட்டு இருந்தாங்க” என ஆதங்கத்தை கொட்டியது காகம்.

“அப்ப வாஸ்து பிரச்சினை இல்ல, டவர்ல இருந்து வர்ற வஸ்து தான் பிரச்சினை” என டிக்ளேர் செய்தது குரங்கு.

“ஆமா, வடக்கு கோபுரம் போனப்புறம் கொஞ்சம் எக்ஸ்போஷர் கம்மியா இருக்கு” என சொன்னது காகம்.

“இஎம்எப் ரேடியேஷன்னா என்ன?” என கேட்டது குட்டி மீன்.

“எலக்ட்ரோ மேக்னடிக் பீல்டு ரேடியேஷன்” என சொன்னது காகம்.

“அது தியரி. பாதிக்கப்பட்டவங்களுக்கு இஎம்எப் ரேடியேஷன்னா, “என்னா மயிருக்கு பிரீ ரேடியேஷன்னு” அர்த்தம். கார்போரேட்டுங்க லாபம் சம்பாதிக்க கால், மெசேஜ், இன்டர்நெட்டுனு பிரீயா குடுத்து மனுஷங்களையும்,பறவைங்களையும் கொல்லுறானுங்க. இந்த பைத்தியங்க பிரீ கால்னு பொழுதுக்கும் பேசி எல்லாரையும் ரேடியேஷனுக்கு எக்ஸ்போஸ் பண்ணுறாங்க” என கோபமாய் சொன்னது குரங்கு.

“எதுக்கு வடக்கு கோபுரம், பேசாம எங்கயாவது ஊர் பக்கம் போக வேண்டியது தான? அதான் அங்க இருந்து நெறய ஆளுங்க இங்க வந்துட்டாங்களே, அங்க டவர் நெறய இருக்காது, நீங்க அங்க போய் சேபா இருக்க வேண்டியது தானே?” என விடாமல் கேட்டது பாட்டி மீன்.  

காகத்துக்கு தான் வாலண்டரியாய் வந்து வண்டியில் ஏறியது புரிந்தது.

“நீங்க என்னை ஊர விட்டே போகவா சொல்றீங்க?” என கான்டெக்ஸ்ட் புரிந்தும் வீம்பாய் கேட்டது.

“உசுருக்கே உத்தரவாதம் இல்ல, இதுல இந்த ஊர் தான் முக்கியமா?” என ஒரு போடு போட்டது பாட்டி மீன்.

கோபுரத்தில் கூடு கட்டுவது சாதாரண காரியமில்லை. பருந்து, வௌவால் என பெரிய கைககள் இருக்கும். இடம் கிடைப்பதே அரிது. காகத்துக்கு இங்கிருந்து போக மனமில்லை. உணவுக்கு பெரிதாய் அலட்டிக் கொள்ள வேண்டாம். பிரசாத பிளேட்டுகள், பொங்கல் வைப்பவர்கள் தருவது, அன்னதான கூடம் என முழு குடும்பமும் நோகாமல் வேலையை முடித்து விடும்.

ஊருக்கு போய் சேர்த்தால் ஏதாவது பழம் கொட்டை என தின்று தான் வாழ வேண்டும். பழைய கஞ்சியை கூட வீணாக்காமல் குடித்து சுத்தமாக புழக்கடையில் பாத்திரங்கள் இருக்கும். சோற்று பருக்கையை நல்ல நாளில் தான் பார்க்க முடியும். 

 “சாவு எல்லாருக்கும் ஒரு நாள் வரத்தான் போகுது. ஏதோ நல்லதா நாலு வாய் தின்னுட்டு சாகணும். ஊர்ல போய் என்னத்த சாப்புட? அமாவாசைக்கு மட்டும் தான் சோறு போடுவாங்க. மத்த நாள் பூவாவுக்கு என்ன பண்றது”? என ஓபனாய் விஷயத்தை சொல்லியது. 

 “ஏன் கேட்டேன்னா, சோறு ஒரு மேட்டர் இல்ல. உனக்கு ஒரு ரிஸ்குன்னா உன் உசுரை காப்பாத்திக்க நீ இடம் மாறுற. தெக்கு கோபுரத்திலேர்ந்து டவர விட தூரமா இருக்குற வடக்கு கோபுரத்துக்கு போயிட்ட. ஆனா எங்க நெலமைய யோசிச்சு பாரு. கொளத்துல ஒரு பிரச்சினைன்னா நாங்க எங்க போறது. இங்கயே இருந்து சாக வேண்டியதுதான். ஆத்துலயோ கடல்லியோ இருந்தோ எங்கயாவது வேற இடத்துக்கு நீந்தி போய் பொழச்சிக்குவோம்” என நிதானமாய் சொன்னது பாட்டி மீன்.

“நீ எப் எம் கேட்டு விவரமா வீடு மாறிட்ட. எங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கு? ஏதோ கோவிலுக்கு வர்றவங்க வந்து படித்தொரையில உக்காந்து கத பேசினா ஏதாவது விஷயம் தெரியும். இப்ப பாரு, பொழுதும் போகாம, நாட்டு நடப்பு எதுவும் தெரியாம மக்கு மாதிரி இருக்கோம்” என தொடர்ந்தது.

குளத்தின் நிலையை அறிந்த குரங்கு சுற்றி ஒரு பார்வையை ஓட விட்டது. பெருசு சொல்வது உண்மைதான் என்பது போல தலையாட்டியது.

“நீ நாலு இடத்துக்கு பறக்கிற. பொழுதுக்கும் எங்கயாவது ஏறி உக்காந்துகிட்டு பராக்கு பாக்குற. போதாக்கொறைக்கு இந்த ஜனங்க வேற கா கானு கூப்புட்டு உனக்கு சோறு போடுறாங்க. உனக்கு எங்க கஷ்டம் எப்படி புரியும்?” என பொரிந்து தள்ளியது அம்மா மீன்.

மாமியாரும் மருமகளும் செட்டு சேந்துட்டாங்க. இந்த இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என எண்ணியது காகம். 

“லன்ச் டைம் ஆச்சு. இன்னைக்கு ஒரு தெவச வீட்டுக்கு போகணும். சாயங்காலம் வர்றேன்” என சொல்லி இடத்தை காலி செய்தது காகம்.

பிறகு குரங்கும் தண்ணீரில் குதித்து நீந்தியபடியே படித்துறை பக்கம் போனது.

‘என்னடி அந்த ஆம்பள காக்கா, கொரங்கு கூட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்க?” என்றபடி முறைத்தது கிழட்டு மீன்.

“உனக்கு நல்ல சாவு வரும்னு மட்டும் நினைக்காதே. ஏலம் எடுத்தவன் அடுத்த வாரம் வருவான். நீதான் மொதல்ல மாட்ட போற. உப்புகாரம் தடவி சூடா பொறிச்சி மொடாக்குடிகாரனுக்கு சைட் டிஷ்ஷா போக போற.

செத்தப்புறமும் ஆல்கஹால்ல மெதந்து ஜீரணம் ஆகாம வாந்தியா நாறி போக போற. பொம்பளைங்கள தப்பா பேசுனவனுங்க நல்ல கதி காண மாட்டானுங்க” என திட்டி தீர்த்தது பாட்டி மீன்.

சற்று நேரம் கழித்து கையில் ஒரு பொரி பாக்கெட்டோடு வந்த குரங்கு சரக்கென்று பிரித்து நீரில் கொட்டியது.

Monkey sitting in temple

“குட்டிமா, வா வா வந்து சாப்புடு” என அழைத்தது.

குட்டி மீன் அமைதியாக இருந்தது. “போய் சாப்பிடு” என்றது பாட்டி மீன்.

பிறகு குரங்கிடம் “இந்த பொரிக்காக தான் நாங்க ஏங்கி இருக்கோம்னு நீயும் நெனைக்குறியா மாருதி?” என மெதுவாக கேட்டது.

 குரங்கு தலையை குனிந்து கொண்டது.

“உங்க கஷ்டம் எனக்கு தெரியும் மச்சிமா. என்னால உங்களுக்கு இதை தான் பண்ண முடியும். அந்த தங்கராஜு பய பூட்டு போட்டதுல இருந்து நீங்க அப்செட்டா இருக்கீங்க. பப்ளிக் யாரையும் பாக்க முடியல. டெய்லி அந்த அய்யறு மட்டும் வந்து முங்கிட்டு போறாரு. அவரு கோவணத்தையே எத்தனை நாளு தரிசிக்குறது?” என ஆறுதல் சொன்னது மாருதி.

“என்னை விடு மாருதி. நா வயசானவ. எல்லாத்தையும் பாத்துட்டேன். இந்த குட்டிங்க எல்லாம் லாக்டவுன் சமயத்துல பொறந்துதுங்க. கோவில்ல ஜன நடமாட்டமே ரெண்டு மூணு வருஷமா கெடயாது. இப்பதான் கொஞ்ச நாளா பெரியவங்க, குழந்தைங்க, புருசன் பொண்டாட்டி ஜோடிங்க எல்லாரும் வந்து படித்தொரையில உக்காந்து பேசிட்டு போறாங்க. புள்ளைங்களும் அவங்கள பாத்து விளையாடி சந்தோஷமா இருக்குங்க. இந்த தங்கராஜு கேட்ட பூட்டுனதுல இருந்து அதுங்க ரொம்ப வருத்தமா இருக்குங்க” என வேதனையை கொட்டியது பாட்டி மீன்.

“கரெக்ட்டு தான் மச்சிமா. நாங்களாவது நாலு இடம் சுத்துறோம். ஆளுங்கள பாக்குறோம். பொழுது போயிடுது. நீங்க பாவம், என்ன பண்ணுவீங்க? அந்த காக்கா வெவரம் புரியாம பேசுது. மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க” என பாசமாய் சொன்னது மாருதி.

“அந்த பய கையில பொரி வச்சிருந்தான் உங்களுக்கு குடுக்க. கேட்டு மூடி இருக்கவே போய்ட்டான். பாவம், நம்ம குட்டிமாவும் டல்லா இருந்துதா. அதான் வெளில போய் ஒரு பாக்கெட்டை தூக்கிட்டு வந்துட்டேன்” என விளக்கியது மாருதி.

“ஏன் மாருதி தூக்கிட்டு வந்த? தப்பில்லையா?’ என கேட்டது மச்சிமா.

“ஒரு தப்பும் இல்ல மச்சிமா, சாமி பேரையும் நம்ம கோவில் பேரையும் சொல்லி இவனுங்க எவ்வளவு கொள்ளையடிக்குறானுங்க. பாடாவதிப் பசங்க” என திட்டி தீர்த்தது மாருதி.

“ஏன் மாருதி, சாமி அவங்க கண்ணை குத்தாதா?” என கேட்டது குட்டி மீன்.

“கண்ணை குத்தி என்ன பிரயோஜனம்? அப்புறம் சாமி காப்பாத்துன்னு அவருகிட்ட தான் போய் நிப்பாங்க. அதனால அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி குடுப்பாரு. அப்புறம் குறைந்த பட்ச நியாயமா வேலை செய்வாங்க” என சொன்னது மாருதி.

“எப்போ இவங்களுக்கு நல்ல புத்தி குடுப்பாரு இந்த கொளுத்து கேட்ட தொறக்க?” என ஆர்வமாய் கேட்டது குட்டி மீன்.

“அது சாமிக்கு தான் தெரியும்” என முடித்தது மாருதி.

Tamil novel – Jiteswari – Part 6/21

Children looking at locked temple tank

ஜித்து நெதர்லாந்தில் இருந்து திரும்ப வந்து சென்னையில் சங்கு புஷ்பம் வீட்டில் போய் தங்கினாள். லக்ஷ்மியும் குழந்தைகளும் வர வீடு கலகலப்பாக இருந்தது.

அன்று மாலை ஜித்துவும் லக்ஷ்மியும் மார்க்கெட்டுக்கு போக, நேசப்பா புஷ்கரையும் கல்யாணியையும் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

சாமி கும்பிட்டு வெளியே சுற்றி குளமருகே வந்தார்கள். குளம் பூட்டி இருந்தது. கம்பி வழியாக உள்ளே எட்டி பார்த்தார்கள்.

“தாத்தா, நெறய பிஷ் இருக்குல்ல” என சொன்னான் புஷ்கர்.

“ஆனா உள்ள போக முடியாதே” என வருத்தப்பட்டது கல்யாணி.

குளம் நிறைய நீர் இருந்தது. ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் மரகத பச்சை நிறமாகவும், சற்று தள்ளி இருந்து பார்த்தால் நீல பச்சையாகவும் இருந்தது.

“தாத்தா, ஏன் இந்த தண்ணி க்ரீன் கலர்ல இருக்கு? என கேட்டது கல்யாணி.

“இந்த கொளத்துல பாசி அதிகமா இருக்குமா. அதான் க்ரீன் கலர்ல இருக்கு. அதனால தண்ணியும் க்ரீனா தெரியுது” என்றார் நேசப்பா.

“ஏன் பாசி அதிகமா இருக்கு?” என அடுத்த கேள்வி வந்தது.

“இந்த தண்ணி புளோ ஆகாதுமா. நிலத்தடி தண்ணியோட மழை தண்ணியும் சேர்ந்து இங்கயே தான் இருக்கும். பக்கத்துல எவ்ளோ பெரிய மரம் இருக்கு பாரு. அதுலேர்ந்து விழுற இலையெல்லாம் தண்ணில விழும். அது இந்த பாசி அல்கெக்கு எல்லாம் நல்ல உரமா மாறிடும். அப்போ இன்னும் அதிகமா வளரும்” என விவரித்தார் நேசப்பா.

“அப்போ இது டர்ட்டி வாட்டரா? என்றான் புஷ்கர்.

“இல்லப்பா. இது நல்ல தண்ணி தான். கோவில்காரங்க இன்னும் கொஞ்சம் பராமரிப்பு செஞ்சா க்ளீனாய்டும்” என்றார் நேசப்பா.

“என்ன செஞ்சா க்ளீனாகும்? என கேட்டது கல்யாணி.

“ரெகுலரா பராமரிக்கணும்மா. பாசி ஆல்கேவெல்லாம் ரிமூவ் பண்ணனும். அந்த மரத்துக்கு கீழ கொளத்து பக்கம் கொஞ்சம் நெட்டு போடலாம். இலை குச்சியெல்லாம் தண்ணில விழாது. ரெகுலரா பிரெஷ் தண்ணிய பம்பு வச்சி கொளத்துக்கு அனுப்பனும்” என தனக்கு தெரிந்ததை சொன்னார் நேசப்பா.

“இதெல்லாம் சாமி பாக்காதா தாத்தா? இது அவர் வீடு தானே? என தெளிவாய் கேட்டது கல்யாணி.

துணுக்குற்று போனார் நேசப்பா.

“ஏண்டி, சாமி என்ன பண்ண முடியும்? கோவில் ஆளுங்க தான் மெயின்டெயின் பண்ணணும்” என பதில் சொன்னான் புஷ்கர்.

“அவங்க வேலைய ஒழுங்கா செய்யலேன்னா கண்ணை குத்தலாம்ல சாமி” என குண்டைப் போட்டது கல்யாணி.

“ஏன் தாத்தா, சாமி அவங்க கண்ணை குத்தாதா?” என தொடர்ந்தான் புஷ்கர்.

 நேசப்பா சற்று யோசித்தார்.

“கண்ணை குத்தி என்ன பிரயோஜனம்? அப்புறம் சாமி காப்பாத்துன்னு அவருகிட்ட தான் போய் நிப்பாங்க. அதனால அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி குடுப்பாரு. அப்புறம் ஒழுங்கா வேலை செய்வாங்க” என சொன்னார்.

“எப்போ இவங்களுக்கு நல்ல புத்தி குடுப்பாரு இந்த கொளுத்த க்ளீன் பண்ண?” என விடாமல் கேட்டது கல்யாணி.

“அது சாமிக்கு தான் தெரியும்” என முடித்தார் நேசப்பா.

அந்தி சாயும் வேளை. இளம் சூடான மெல்லிய கதிர்கள் நீரின் மேல் பட்டு அன்றைய நாளுக்கான இறுதியில் விடை பெற்றுக்கொண்டன.

ஏற்கெனவே பெரிதாக சலனமில்லாமல் இருக்கும் குளம், அடுத்து வரும் இரவுக்கு மெளனமாக தயாரானது. சூரிய கதிர்கள் இரக்கமே இல்லாமல் குளத்தின் மேலிருந்த அழகான பச்சை கம்பளத்தை வாரி சுருட்டிக் கொண்டு கிளம்பியது.

வண்ணத்தை இழந்த வருத்தமில்லாமல் குட்டி அணில் போட்ட சிறு கொட்டையில் தளும்பி தளும்பி சந்தோஷப்பட்டது குளம். சற்று நேரத்தில் மெதுவாக எட்டிப் பார்த்த நிலா கருமையான குளத்தின் மேல் தன் ஒளியை பாய்ச்சியது. அடர் நீலமாக மாறிய குளம் அங்காங்கே வெள்ளி பிரகாசத்தை தெளித்தது.

“தாத்தா எனக்கு பிஷ் பாக்கணும். எப்போ கேட்டு ஓப்பன் பண்ணுவாங்க?” என ஆசையாய் கேட்டான் புஷ்கர்.

“ஆமா தாத்தா. எனக்கும் உள்ள போய் பாக்கணும்னு ஆசையா இருக்கு” என சொன்னது கல்யாணி.

நேசப்பா சுற்றி பார்த்தார். போர்டு எதுவும் இல்லை.

“வாங்க, ஆபீஸ் ரூம்ல போய் கேக்கலாம்” என அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

“சார், கொளம் எப்போ சார் தொறப்பீங்க?” என கேட்டார் நேசப்பா.

பைலில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

children asking question to temple officer

“சார், காலைல ஆறு டு ஏழு தொறப்போம். அய்யர் வந்து வேலைய முடிச்சிட்டாருன்னா பூட்டிடுவோம். பப்ளிக் உள்ள போக முடியாது” என்றார் ஆபீசர்.

“அப்போ பிஷ்ஷு வெளில வருமா எங்கள பாக்க?” என மெதுவாய் கேட்டது கல்யாணி.

சடாரென்று நிமிர்ந்து உட்கார்ந்து மேலும் கீழும் பார்த்தார் ஆபீசர்.

டேபிளை விட சற்று அதிக உயரம் தான் இருந்தது கல்யாணி.

எழுதி கொண்டிருந்த பேனாவை மூடி வைத்தார். பக்கத்தில் இருந்த சேரை காட்டி அவர்களை உட்கார சொன்னார்.

“இல்லமா, கோவிலுக்கு ஜனங்க நெறய வராங்க இல்ல. அவங்க கொண்டு வர பொருளால நெறய குப்பை கொளத்துல சேருது. அப்புறம் கவனிக்குறைவா இருந்தாங்கன்னா தவறி விழுந்துடுவாங்க. அதனால தான் பூட்டி வச்சிட்டோம்” என விளக்கினார் ஆபீசர்.

“ஆனா தண்ணி ஏன் டர்டியா இருக்கு? பூட்டியே இருந்தா அது கிளீனா தான இருக்கணும்” என கேட்டான் புஷ்கர்.

பங்கமான கேள்வி. அவமானமாக இருந்தது ஆபீஸருக்கு.

“சாமி இன்னும் புத்தி குடுக்கலண்ணா கிளீன் பண்றதுக்கு” என சுருக்கமாய் சொன்னது கல்யாணி.

இப்போது பெருத்த அவமானமாக இருந்தது ஆபீஸருக்கு. சங்கடமாய் நெளிந்தார்.

“நாளைக்கு காலைல வா பாப்பா. சாவி வாங்கி வெச்சுருக்கேன்” என்றார் ஆபீசர்.

“தேங்க்ஸ் அங்கிள்” என சொல்லி புறப்பட்டார்கள் இருவரும்.

Cartoon – டபுள் என்ஜின், டப்பா என்ஜின்!

gang man paani poori

கோல்கப்பா : போன வாரம் தான் இதே ட்ராக்ல டான்ஸ் ஆடுனோம். இன்னைக்கு நம்ம நெலமைய பாத்தியா டார்லிங்?

பூரி குமாரி : நம்ம நெலமை கெடக்கட்டும். எனக்கு அந்த நியூஸ கேட்ட ஒடனே பகீர்னு ஆயிடுச்சி. மக்களுக்கு அத கொண்டு போய் சேர்க்க இதான் சரியான கெட்டப்புனு முடிவு பண்ணிட்டேன்!

கோல்கப்பா : டபுள் என்ஜின் கதையை கேட்ட நமக்கே பீதியா இருக்கே? நம்ம பொட்டானிக்கல் ஆளுங்க மண்டை காய்ஞ்சு போயிருப்பாங்க..

பூரி குமாரி : அவங்கள விட நம்ம தலீவர் டென்சனாயிட்டாரு…டபுள் என்ஜின், டப்பா என்ஜின்னு ஏகத்துக்கும் காய்ச்சி எடுத்துட்டாரு..

tn politics

கோல்கப்பா : என்னத்த சொல்ல, பெரிய கட்சி, பழைய கட்சி, கண்காட்சில இருக்குற கட்சி எல்லாரும் பவருக்கு ஆசைப்படுறாங்க…ஆனா அதுக்கு மக்கள் ஆதரவு முழுசா இருக்கணும்ங்கிறத மறந்துடுறாங்க..

பூரி குமாரி : மண்டைல மசாலா இருக்க, அவங்க என்ன நம்மள மாதிரி பூரி கோஷ்டியா?அவங்க…

கோல்கப்பா : ஹிஹிஹி, ப்ளீஸ் அந்த சென்டன்ஸ ரைமிங்கா முடிக்காதே…

பூரி குமாரி : கோல், கட்சி மட்டும் பளபளன்னு இருந்தா போதுமா? ஆட்சி பல்லிளிச்சா நெக்ஸ்ட் டைம் பவருக்கு எப்படி வர முடியும்?

கோல்கப்பா : நா என்ஜினு, எனக்கு தான் பவருன்னு உருட்டுறவங்க “Pantograph”அ மறந்துடுறாங்க குமாரி..

cartoon for political power

பூரி குமாரி : அவங்களுக்கு “Pantograph”அ எப்படிங்க சொல்லி புரிய வைக்குறது? ஒரே டெக்னிக்கல் பேரா இருக்கே கோல்?

கோல்கப்பா : அது இன்ஜின் மண்டைல இருக்க கொண்டைன்னு சொல்லுவோம்…டக்குனு புரிஞ்சிக்குவாங்க..ஹிஹிஹி ..

பூரி குமாரி : கலக்குறீங்க கோல்…நீங்க “Gang man” அப்டீன்னு ப்ரூவ் பண்ணிடீங்க…

கோல்கப்பா : என்னடி பொடி வச்சி பேசுற? புரியலையே…..

பூரி குமாரி : ட்ராக்குல இருக்குற க்ராக்கு உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அத தான் சொன்னேன்..

கோல்கப்பா : அடிப்பாவி… மக்களே, இதுக்கு மேல இவ கூட பேசுனா mock பண்ணியே எனக்கு இருக்குற கொஞ்ச மூக்கையும் ஒடைச்சிடுவா… போட்ட ரெண்டு கார்ட்டூனையும் பாத்து நீங்களே புரிஞ்சிக்கோங்க…Bye!

pantograph cartoon

Tamil novel – Jiteswari – Part 5/21

A couple at temple

சனிக்கழமை மாலை ஜித்துவும் ராஜுவும் கோவிலுக்கு கிளம்பினார்கள். அது அந்த ஏரியாவில் மிகப் பெரிய கோவில். உள்பிரகாரம் ஒரு சுற்று சுற்றினாலே ஒரு கிலோமீட்டர் இருக்கும். சாமி பார்த்தபிறகு மூன்று சுற்று சுற்றிவிட்டு குளத்தின் அருகே வந்தார்கள். சற்று நேரம் படித்துறையில் உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது ஜித்துவுக்கு.

குளம் பூட்டி இருந்தது. “என்ன ராஜு குளம் பூட்டி இருக்கு?” என்றாள் ஜித்து.

“இரு போய் ஆபீஸ்ல கேக்குறேன்” என்றபடி போனான் ராஜு.

“காலைல ஒரு மணி நேரம் மட்டும் தான் திறந்து இருக்குமாம்” என்றான் திரும்ப வந்து.

“சரி வா, அந்த பெஞ்சுல உக்காரலாம்” என அழைத்தான்.

காற்று நன்றாக வீசியது. பிளாஸ்கில் இருந்த வெந்நீரை கொஞ்சம் குடித்தாள் ஜித்து. 

“டெலிவெரிக்கு அப்புறம் எங்க இருக்குறது ராஜு? உனக்கு என்ன பிளான்?” என நேராய் விஷயத்தை ஆரம்பித்தாள் ஜித்து.

“உனக்கு ஆபீஸ் இங்கதானே. இங்கயே இரு. டெலிவரி ஆனதும் பாண்டிக்கு வந்துடு. மெட்டர்னிட்டி லீவு வரை அங்க இரு. ரீஜாயின் பண்ணும்போது இங்க வந்துடு. துணைக்கு வேணும்னா அம்மாவை வர சொல்றேன்.

ஆன்ட்டியால தனியா சமாளிக்க முடியாது. எங்க அம்மாவும் தனியா பாத்துக்க கஷ்டப்படுவாங்க. எல்லாரும் ஒண்ணா இருந்தா மாற்றி மாற்றி பாத்துக்கலாம்” என்றான் ராஜு.

பாதி பிரச்சினை தீர்ந்தார் போல இருந்தது ஜித்துவுக்கு. “அத்தை வருவாங்களா? மாமா என்ன சொல்லுவாரு” என கேட்டாள்.

“அப்பா கொஞ்சம் யோசிப்பாரு. பார்மாலிட்டி பாப்பாரு. அம்மாவுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஜித்துவ நா பாத்துக்கறேன்னு சொல்லிட்டே இருக்காங்க. குட்டிய விட்டு அவங்களால இருக்க முடியாதாம்.

நீயும் அப்பாவும் பாண்டில இருங்க. நா ஜித்து கூட போய் இருக்கேனு சொல்றாங்க” என சிரித்தான் ராஜு.

இரண்டு நாள் பாடாய்படுத்திய மன உளைச்சல் நீங்கியது போல இருந்தது ஜித்துவுக்கு. கடவுளுக்கு நன்றி சொல்லி கண் மூடி அமர்ந்திருந்தாள்.

இரண்டு நிமிடம் கழித்து “தேங்க்ஸ் ராஜு” என்றாள்.

“எனக்கு என்ன காரெடுத்தா மூணு மணி நேரத்துல வந்துடுவேன். உங்க எல்லாரையும் வீக் டேஸ்ல மிஸ் பண்ணுவேன். உனக்கும் அப்படித்தானே. என்ன பண்றது? எனக்கு ட்ரான்ஸ்பர் ஆக முடியாது. உனக்கும் அங்க வர வாய்ப்பு இல்ல. தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணோம்” என்றான்.

ஆக கணவன் மனைவி இருவரும் அவர்கள் நிலையை தெளிவாக உணர்ந்து இருந்தார்கள். பரஸ்பரம் தங்கள் வேலையை காப்பாற்றிக்கொண்டும் அதே சமயம் மற்றவர் வேலை பாதிக்காத வண்ணம் எப்படி வாழ்வது என்று யோசித்து இருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டில் சில சங்கடங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அத்தனையையும் எதிர் நோக்கித்தான் இந்த பந்தத்தில் இணைந்திருக்கிறோம் என்ற புரிதல் இருந்தது.

கணவன் மனைவி உறவிலும், குழந்தை வளர்ப்பிலும் இந்த முடிவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிவாக தெரிந்து வைத்திருந்தார்கள். கூடிய மட்டும் என்ன செய்து அந்த தாக்கத்தை குறைப்பது என பேச ஆரம்பித்தார்கள்.

“அம்மா உங்க வீட்ல இருக்குறது அசௌகர்யமா இருக்கும்னு எங்க வீட்ல பீல் பண்ணா பக்கத்துலயே தனியா ஒரு வீடு எடுத்துக்கலாம். அப்பாவுக்கு இன்னும் ஒரு வருஷம் தான் சர்வீஸ் இருக்கு. ரிட்டயர்டு ஆகிட்டா அங்க வந்து உங்களோட இருக்கட்டும். என்ன நா பாத்துக்குவேன்” என தெளிவாய் சொன்னான் ராஜு.

ராஜுவின் போக்கு இலகுவானது. பெரிதாய் எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டான். பரபரப்பே இல்லாமல் எப்போதும் ஒரு நிதானத்தோடு நடந்து கொள்பவன். ஜித்துவுக்கு ராஜுவின் அணுகுமுறை ஆதரவாக இருந்தது.

கற்பகம் வீசிய கடும் சொற்களின் காயம் சற்று ஆறியது போல இருந்தது.

ஆனாலும் இவர்களை அசைத்துப்பார்க்கும் பல பேச்சுகளையும் நிகழ்வுகளையும் எதிர் கொள்ள கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்ததும் “பேசிட்டியா? என்ன சொன்னார்” என கேட்டார் கற்பகம்.

“நீ பதறுற மாதிரி ஒரு சிச்சுவேஷனும் இல்ல. கொஞ்ச நாள் பேசாம இரு. ராஜு பாத்துப்பான்” என சொல்லி முடித்தாள்.

கற்பகத்துக்கு ஆர்வம் தாளவில்லை.

“என்ன தான் முடிவு பண்ணீங்க” என திரும்ப கேட்டார்.

“மா, அமைதியா இரு. முடிவு பண்ற நேரம் வரும் போது பாத்துக்கலாம். எல்லாத்தையும் ஒரே நாள்ல எங்களால சரி பண்ண முடியாது. எல்லாரையும் திருப்திபடுத்தவும் முடியாது. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். என்னால உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. மாமாகிட்ட நீங்க பதில் சொல்ற நெலமைய நா விடமாட்டேன். நானோ இல்ல ராஜுவோ அவர்கிட்ட பேசுறோம்” என நாசூக்காய் சொல்லி முடித்தாள்.

இரண்டு வாரம் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. மொத்த குடும்பமும் கூடி கொண்டாடி தீர்த்தார்கள். ஒரு மாதம் ஆனது அவர்களின் கவனம் ஜித்துவின் பக்கம் வர.

ஜித்துவும் குழந்தையும் இரண்டாவது வாரமே பாண்டிச்சேரி வந்து விட்டார்கள். தினம்தோறும் யாராவது ராஜு வீட்டு உறவினர்கள் வந்து பார்த்து விட்டு போனார்கள். போகும் பொது ஏதாவது ஒரு கேள்வியை கேட்டு விட்டு போவார்கள்.

“லீவ் முடிஞ்சி அங்க போய்டுவியா?”

“இங்க வேல கிடைக்காதா”?

“எவ்ளோ நாள் இப்டியே பிரிஞ்சி இருப்பீங்க? குழந்தை ஏங்கி போயிடுவான்”

“காசு பணம்னு இருந்தா நாளைக்கு திரும்பி பாத்தா ஒண்ணும் இருக்காது”

“படிச்சவங்க நீங்க. உங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு. ஆனா வயசான தாத்தா பாட்டி, நீ குழந்தைய தூக்கிட்டு போயிட்டா ஏங்கிடுவாங்க”

ஆளாளுக்கு ஒரு பாயிண்டை போட்டுவிட்டு போனார்கள். 

ஓவ்வொருவர் வரும்போதும் குமரேசன் பைபாஸ் ரோடு காலேஜ் ஆப்ஷனை எடுத்து வைப்பார்.

“அட ஆமால்ல. அது உங்க வீட்டுக்கு ரொம்ப பக்கமாச்சே. ஏம்மா ஜிதேஸ்வரி நீ ஏன் இங்கயே காலேஜுல வேல பாக்க கூடாது?” என விஷயம் தெரியாமல் ஒரு பிட்டை போடுவார்கள். ஜித்துவுக்கு ஆறு மாதம் கழித்து சென்னை போவோம் என்ற நம்பிக்கை கொஞ்ச நாளில் போனது.

ராஜூவுக்கும் ஜித்துவுக்கும் இது பெரும் தலைவலியாக இருந்தது.

பேசாமல் ஜித்து அங்கேயே இருந்திருக்கலாம். நாம சொல்லவேதான் இங்க வந்தா. இப்ப வர்றவங்க போறவங்க எல்லாரும் அவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு போறாங்க” என வருந்தினான் ராஜு.

“நீ ஒண்ணும் கவலைப்படாதே. நா அம்மாகிட்ட பேசிட்டேன். அவங்களும் உன் கூட வர ரெடியா இருக்காங்க. அப்பாவை நா சமாளிச்சுக்குறேன். கெஸ்டுங்களுக்கு என்ன தெரியும் நம்மள பத்தி. பேசிட்டு போகட்டும் விடு” என சமாதானப்படுத்தினான் ராஜு.

ஐந்து மாதங்கள் ஆனது. இன்னும் ஒரு மாதம் தான் இருந்தது வேலைக்கு போக.

“அப்பா, அடுத்த மாசம் ஜித்து ஆபீஸ் போகணும். சென்னைல தனியா வீடு பாக்க ஆரம்பிக்கணும். அம்மா கூட போய் இருக்கட்டும்” என ஆரம்பித்தான் ராஜு.

“பைபாஸ் ரோடு” என இழுத்தார் குமரேசன்.

“அப்பா ப்ளீஸ்ப்பா, இது என் டெஸிஷன்” என சுருக்கமாய் முடித்தான் ராஜு.

காமாட்சியும் ராஜுவும் சென்னைக்கு போவதில் உறுதியாக இருந்தார்கள். வேண்டாவெறுப்பாக வீட்டில் வலம் வந்தார் குமரேசன்.

அடுத்த இரண்டு வாரத்தில் வீடு பார்த்து ஒரு நல்ல நாளில் பால் காய்ச்சினார்கள். எவ்வளவு கூப்பிட்டும் குமரேசன் போகவில்லை.

House warming function

ஜித்துவின் பெற்றோருக்கு தர்மசங்கடமாக இருந்தது.

ஆனால் ராஜுவும் காமாட்சியும் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஜித்துவை மும்பையிலிருந்து வரவழைக்க அம்மாவும் பிள்ளையும் பட்டபாடு அவர்களுக்கு தான் தெரியும்.

ரொம்பவும் அவளை பாடுபடுத்தினா, திரும்ப மும்பைக்கே போறேன்னு சொல்லிட்டாள்னா என்ன பண்றது என்ற பயம் இருவருக்கும் இருந்தது. அந்த பயத்திற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.

ராஜூவை விட இப்போதே அறுபது சதவிகிதம் அதிக சம்பளம் ஜித்துவிற்கு. மும்பை போனால் கண்டிப்பாக மூன்று வருடங்களில் வெளிநாட்டு பணிக்காக அவர்களே அனுப்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே சென்னையில் அவளை தொடர அனுமதிப்பது தான் தங்களின் எதிர்காலத்துக்கு நல்லது என கருதினான் ராஜு.

அதை காமாட்சிக்கும் புரிய வைத்த பிறகு அம்மாவும் பிள்ளையும் ஜித்துவை முடிந்த வரை குமரேசன் எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

காமாட்சி குழந்தையை பார்த்துக் கொள்ள, வீட்டு வேலை செய்ய தனியாக ஒரு பெண்மணியை அமர்த்திக்கொண்டாள் ஜித்து. புஷ்கர் பிறந்து ஒரு வருடம் ஆனது. குமரேசன் தவிர மற்ற மூவரும் இந்த ஏற்பாட்டில் சுமுகமாக இருந்தார்கள்.

சொல்லப் போனால் காமாட்சிக்கு சென்னையில் இருப்பது பாண்டியை விட வசதியாக இருந்தது. வீட்டு வேலையை பணிப்பெண்ணும் கடை மற்றும் வெளிவேலைகளை ஜித்துவும் பார்த்துக் கொள்ள காமாட்சிக்கு ஓய்வும் நன்றாக கிடைத்தது.

அடுத்த வருடம் பணி ஓய்வு பெற்ற பிறகு சென்னைக்கு போய் தங்குவதில் குமரேசனுக்கு உடன்பாடில்லை. என்ன சொல்லி தவிர்க்கலாம் என யோசித்தார். ஓய்வு பெற்ற பிறகு ஹார்டுவேர் கடை துவங்கலாம் என முடிவெடுத்தார்.

வீட்டின் முன் பகுதியில் இருந்த ரூமை சற்று விரிவுபடுத்தி தெரு பக்கம் இருந்த காலி இடத்தோடு சேர்த்து ஒரு கடையாக மாற்றினார். ஆறு மாத காலத்தில் கட்டிட வேலை முடிந்து ஹார்டுவேர் கடை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ய ஆரம்பித்தார்.

வீம்புக்கு குமரேசன் செய்யும் வேலைகள் காமாட்சிக்கு வருத்தத்தை கொடுத்தது. ஒரே மகள் ஆந்திராவில் வசிக்க மகனுடைய குடும்பத்தோடு தங்காமல் வீண் பிடிவாதமாக அங்கேயே இருப்பது எரிச்சலாய் இருந்தது.

காமாட்சி அந்த காலத்திலேயே ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். திருமணமான சில ஆண்டுகளில் அரசாங்க வேலையும் கிடைக்கும் சூழல் இருந்தது.  குமரேசன் தனியார் பாக்டரிலயில் வேலை செய்து கொண்டிருந்தார்.

மனைவிக்கு அரசாங்க வேலை கிடைத்தால் தன்னை விட அதிக வருமானமும் சமூகத்தில் நல்ல அங்கீகாரமும் கிடைக்கும். காலம் முழுக்க  தான் ஒரு படி கீழ் நிலையில் ஏன் இருக்க வேண்டும் என நினைத்தார்.

குமரேசனும் அவரின் தாயாரும் காமாட்சி வேலைக்கு போக வேண்டியதில்லை என தீர்க்கமாக சொல்லி விட்டார்கள். சில ஆண்டுகள் அந்த ஏக்கம் காமாட்சிக்கு இருந்தது. காலப்போக்கில் அவருடைய கல்வி தகுதியை மறந்தே போனார். ஆனால் இப்போது ஜித்துவின் உறுதியை பார்க்கும் போது தானும் இவள் போல இருக்க தவறியதை எண்ணி வருந்தினார்.

ஜித்துவையும் கற்பகத்தையும் பார்க்கும் போது தான் பொருளாதார சுதந்திரமும், உரிமையும் இல்லாமல் வாழ்ந்தது முற்றிலும் தன் தவறு என ஒவ்வொரு நாளும் உணர்ந்தார். பேச வேண்டிய நேரத்தில் தன் சுய முன்னேற்றத்திற்காக பேசாமல் விட்டது தன் பிழை என ஆணித்தரமாய் நம்பினார்.

குமரேசனின் இந்த குணத்தால் ஜித்துவும் பாதிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. ஆதி காலத்திலிருந்து அவரின் தாழ்வு மனப்பான்மையால் தான் பட்டது போதும். இவளாவது அவள் காலில் நிற்கட்டும் என கணவரின் கடை வைக்கும் எண்ணத்திற்கு பின் உள்ள சூட்சுமம் புரிந்து எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தார்.

அடுத்து வந்த ஆண்டுகளில் இரண்டாவதாய் பெண் குழந்தை பிறந்தது. காமாட்சி முழுமையாக பேரக் குழந்தைகளோடு இருந்ததால் பாண்டிக்கு திரும்ப போகும் எண்ணம் துளியும் இல்லாமல் இருந்தார்.

ஜித்துவின் வருமானம் அதிகமாக வந்த காரணத்தால் ஹவுசிங் லோன் போட்டு பெரிய வீடாய் கட்டினார்கள். ஏற்கெனவே இருந்த காரை மாற்றி, மொத்த குடும்பமும் போய் வர ஏதுவாக இருபது லட்சத்துக்கு ஒரு காரையும் வாங்கினார்கள்.

ராஜுவும் ஜித்துவும் கலந்து பேசி பண விவகாரங்களை சுமுகமாக கையாண்டு நல்ல வளர்ச்சி பாதையில் குடும்பத்தை நடத்தினார்கள்.

Tamil novel – Jiteswari – Part 4/21

A family discussion

ஜித்து வாரம் முழுவதும் சென்னையில் அம்மா வீட்டில் இருந்து வேலைக்கு போய் வருவதால், வார இறுதி நாட்களில் பாண்டி போய் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு திங்கள் காலை அங்கிருந்து சென்னைக்கு  திரும்ப வருவாள். ஆரம்ப கால கட்டத்தில் அது யாருக்கும் பிரச்சினையாக இல்லை. ஒரு வருடம் கழித்து ஜித்து கர்ப்பமான பிறகு அவளுடைய பயணம் கணிசமாக குறைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ராஜு வாரம் தவறாமல் வந்து பார்த்துக் கொள்வான். ஆனால் மாமனாருக்கு இதில் உடன்பாடில்லை.

“ஏம்மா, நம்ம காரைக்கால் பை பாஸ் ரோடுல ஒரு இன்ஜினியரிங் காலேஜ் இருக்கில்ல. அதுல வேணா வேலைக்கு ட்ரை பண்ணேம்மா. வீட்லேர்ந்து கால் மணி நேரத்துல போயிடலாம்” என அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்.

டீச்சிங் வேலையில் ஜித்துக்கு விருப்பமில்லை. ஜித்து ஒரு முழு நாளில் வேலை நேரத்தில் பேசும் வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் அந்த விரல்களுக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து டைப் செய்து கொண்டிருப்பாள்.

எந்த ஒரு கவனகுறைவுமின்றி, நூறு சதவீத துல்லியத்தோடு தகவல்களை சேகரித்து பைல் செய்து அனுப்ப வேண்டும். பெரும்பாலும் வீட்டில் ஓரு தனி அறையில் அமர்ந்து வேலை செய்து பழகியவள்.

“இல்ல மாமா, எனக்கு காலேஜ் வேலைல விருப்பமில்லை” என ஒரு நாள் தெளிவாக கூறி விட்டாள்.

அவர் இந்த சுருக்கமான, நேரிடையான பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதே நிலை தொடர்ந்தால் குழந்தை பிறந்த பிறகும் அவர்கள் இரு வேறு இடங்களில் பிரிந்தே வாழ வேண்டிய நிலை தொடரும்.

அவர் இந்த விஷயத்தை ராஜுவிடம் தெளிவாக விளக்கினார். காமாட்சிக்கு அது தான் சரி என பட்டது. நாளை பேரனோ பேத்தியோ பிறந்த பிறகு அவர்களை அங்கேயே தொடர்ந்து தங்க வைப்பது சரி இல்லை என யோசித்தார்.

டெலிவரி முடியட்டும். பிறகு பார்க்கலாம் என சொன்னான் ராஜு.

காமாட்சியும் குமரேசனும் இந்த விஷயத்தை சம்பந்தியிடம் தனியாக விவாதித்தார்கள்.

“இதே மாதிரி இருந்தா அவங்க எப்போ ஒரு எடத்துல குடுத்தனம் பண்றது? ராஜுவும் குழந்தையும் எவ்வளவு நாள் பிரிஞ்சி இருக்குறது? சின்ன குழந்தையை வாரா வாரம் தூக்கிட்டு அங்க வர முடியுமா? நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க” என சொல்லி வைத்தார்கள்.

கற்பகம் பிரசவம் முடியட்டும் என காத்திருக்கவில்லை. மெதுவாக ஜித்துவிடம் நிலைமையை விளக்க ஆரம்பித்தார்.

mother and daughter

“மா, என்னை சென்னைல இருந்து வேலை செய் அப்படின்னு சொல்லி தானே ரெண்டு பேமிலியும் சொன்னீங்க. இப்போ பாண்டி போனு சொன்னா அங்க போய் நான் என்ன பண்றது?” என கோபமாக கேட்டாள்.

“சொன்னோம்டி. அதுக்காக அதே ஸ்டாண்ட்ல இருக்க முடியுமா? வாழ்க்கை எப்படி போகுதோ அதுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் நாமளும் அட்ஜஸ்ட் பண்ணனும். அவங்களும் பாரு, ரெண்டு வருஷம் பொறுமையாதானே இருந்தாங்க. அப்புறம் குழந்தையும் பிரிஞ்சி இருக்கணும்னா வேதனையா தானே இருக்கும்” என சமாதானப்படுத்தினார் கற்பகம்.

“அங்க போய் என்னை பீச்ல குச்சி ஐஸ் விக்க சொல்றியா” என கூர்மையாய் கேட்டாள் ஜித்து.

“ஏண்டி சத்தாய்குற, அங்க என்ன பணத்துக்கா பஞ்சம். நீ கொண்டு வந்து தான் சோறு பொங்க போறாங்களா” என கோபமாய் கேட்டார் கற்பகம்.

“மாப்பிளைக்கு கவர்ன்மென்ட் வேலை. மாத்திக்கிட்டு வேற எடத்துக்கு வர முடியாது. உனக்கு என்ன? தனியார்ல தானே வேல பாக்குற. அங்க போய் உனக்கு என்ன வேலை கிடைக்குதோ செய்” என காட்டமாய் சொன்னார்.

“நானா கவர்ன்மென்ட் மாப்பிளை கேட்டேன்? தெளிவா இந்த இடம் வேணாம்னு சொன்னேன். அத இதை சொல்லி கன்வின்ஸ் பண்ணிட்டு இப்போ பாண்டிக்கு போனு சொல்றீங்க. அங்க எங்க பீல்டுக்கு கம்பெனிங்க எதுவும் இல்ல. என்ன பண்ண சொல்ற இப்போ” என குமுறினாள் ஜித்து.

“ஏண்டி நெற மாசமா இருக்குறப்போ பேசுற பேச்சா இது. இந்த நேரத்துல போய் வரன் பாத்த கதையை கொறை சொல்ற.  நாங்க சமாதானமா சொல்லுறோம். இப்பவே நீ முடிவு பண்ணு டெலிவரிக்கு அப்புறம் அங்க எப்போ போக போறேன்னு. அவங்க எப்படியும் முறையா வந்து கூப்பிடுவாங்க. அப்போ ஏதாவது வில்லங்கம் பண்ணாதே. எங்களால அவங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என தீர்க்கமாய் சொன்னார் கற்பகம்.

அம்மாவின் பேச்சிலிருந்து, இது தான் அப்பாவின் நிலைப்பாடும் என தெரிந்து கொண்டாள் ஜித்து.

“சரி நா ராஜூகிட்ட பேசுறேன். எனக்கு அந்த ஊருல ஸ்கோப் கிடையாது. அவர் வேணா வேற வேலைக்கு ட்ரை பண்ற ஐடியா இருக்கானு கேக்குறேன். அவரும் என்ஜினீயர் தானே. ரெண்டு பேருக்கும் எந்த ஊருல வேலை கிடைக்குதோ அங்கே போறோம். அத்தை மாமா எங்களோட வந்து இருக்கட்டும்” என தன் யோசனையை சொன்னாள் ஜித்து.

“ஒரு புண்ணாக்கும் வேணாம். ஊர்ல எல்லாரும் கவர்ன்மென்டு வேலை கெடைக்கணும்னு வேண்டிக்குறாங்க. ஒரே எடத்துல நிரந்தரமா இருக்கலாம். நீ என்னடான்னா பொட்டிய தூக்கிட்டு ஊர் ஊரா சுத்துறேன்ற. அவங்க இதை எப்படி ஒத்துக்குவாங்க. ஊரு உலகத்துக்கு யாரு பதில் சொல்றது. குமரேசன் அண்ணன் ஒரு மாதிரியான மனுஷன். நாம தன்மையா இருந்தா தங்கமா தங்குவார். ஆனா எனக்கு தெரிஞ்சு அவரு புள்ளைய அவரு வேலைய விட சொல்ல மாட்டாரு. நீ சொல்றதையெல்லாம் யாரும் கேக்க மாட்டாங்க. ராஜூ என்ன நீ கண்டிப்பா வேலைக்கு போய் சம்பாதிச்சிப் போடணும்னு சொல்றாரா என்ன?” என மூச்சு முட்ட பேசினார் கற்பகம்.

“ராஜு சொல்லித்தான் நீ என்ன எல் கே ஜி சேத்தியா? இல்ல நான் என்ஜினீயரிங் படிச்சேனா? என திருப்பிக் கேட்டாள் ஜித்து.

“இந்த வியாக்யானம் வௌக்குமாறெல்லாம் எங்க கிட்ட பேசாதே. உன் ஆபீஸோட வச்சிக்க. எங்களால இத அவங்ககிட்ட பேச முடியாது. நீயும் இந்த டாபிக்கை இதோடு விட்டுடு. அவங்க காதுக்கு போய் ஏதாவது ஏடாகூடமா பேசிட்டா நம்ம மரியாதையை நாமளே கெடுத்துக்கிட்ட மாதிரி ஆகும். ஒரு தடவை மரியாதை போச்சுன்னா அப்புறம் காலத்துக்கும் அனுபவிக்கனும்” என முட்டுக்கட்டையை ஸ்ட்ராங்காக போட்டார் கற்பகம்.

“அட்லீஸ்ட் நா ராஜு கிட்ட ஒரு தடவ இதை பத்தி பேசுறேன். அப்புறம் மாமா கிட்ட சொல்லிக்கலாம்” என இழுத்தாள் ஜித்து.

“டெலிவரி நேரம் இப்போ. ரெண்டு குடும்பமும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இந்த நேரத்துல தேவையில்லாத பேச்செல்லாம் பேசி குழந்தை பொறக்குறப்போ அவங்க மூஞ்ச திருப்பிட்டு போற மாதிரி எதுவும் பண்ணிடாதே. கொஞ்ச நாளைக்கு வேலைய விட்டுட்டு குழந்தைய பாத்துக்க. அப்புறம் அங்க உனக்கு ஏத்த மாதிரி என்ன வேலை கிடைக்குதோ அதுல போய் சேந்துடு. எண்ணை கம்பெனிலயே வாழ்க்கை முழுக்க வேலை செய்யணும்னு ஒரு கட்டாயமும் இல்லை” என விடாப்பிடியாய் பேசினார் கற்பகம்.  

“மா, ராஜு இது வரை என்னை ரிசைன் பண்ண சொல்லி எப்பவும் சொன்னதில்லை” என அதிர்ச்சியாய் சொன்னாள் ஜித்து.

“அப்போ நீ மட்டும் இது வரை டெய்லி சொல்லிட்டிருந்தியா கவர்ன்மென்டு வேலைய விடுங்கன்னு? நீ இப்போ போய் அவரை வேலைய விட சொன்னா அவரு என்ன நெனப்பாரு” என மூர்க்கமாய் கத்தினார் கற்பகம்.

“மா, நா வேலைய விட சொல்லல. வேற வேல பாத்துக்கலாம்னு சொல்றேன். க்ளியரா புரிஞ்சிக்கிட்டு பேசு. என்ன மட்டும் ரைட் ராயலா வேலைய விட சொல்ற. திருப்பி நா கேட்டா ஒலகமே புரண்ட மாதிரி கத்துற?” என நிதானமாய் கேட்டாள் ஜித்து.

இது முட்டு சந்தில் நிறுத்தும் கேள்வி கற்பகத்திற்கு. ஒரு நிமிடம் வாயடைத்து நின்றார் அவர்.

“மா, இங்க பாரு. எனக்கு எட்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. கஷ்டப்பட்டு வேல செஞ்சுதான் நா இந்த பொசிஷன்ல இப்போ இருக்கேன். சென்னைக்கு வந்ததே எனக்கு டவுன் தான். இப்போ என்னடான்னா அசால்ட்டா வேலைய ரிசைன் பண்ண சொல்லுற? கல்யாணம் ஆனா குழந்தை பிறக்கும், குடும்பம் பெரிசாகும், வேற வேற ஊர்ல இருந்தா சரிப்படாது, சென்னைக்கு வரலேன்னு சொன்னேனே அப்போ என்ன சொன்ன என்கிட்டே? அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். உன் வேலைக்கு ஒரு பிரச்சினையும் இல்லேன்னு சொல்லிட்டு இப்போ மாத்தி பேசுர” என சீறினாள் ஜித்து. 

“இது என்ன உங்க கம்பெனில போடுற மாதிரி கான்ட்ராக்டா? குடும்பம்டி, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நாம தான் விட்டு கொடுக்கணும்” என பணிவாய் சொன்னார் கற்பகம்.

“நாம இல்ல, நா விட்டு குடுக்கணும்னு சொல்ற இப்போ. இது எனக்கு மட்டும் தான் குடும்பமா? அவங்களுக்கு இல்லியா?” என திருப்பிக் கேட்டாள் ஜித்து.

இது லேசில் முடிகிற காரியமாக தெரியவில்லை கற்பகத்திற்கு. இவள் முரண்டு பிடிவாதம் நியாயமாகதான் பட்டது.  ஆனால் சம்மந்தி வீட்டில் அதை சொல்லும் தைரியம் ஜித்துவின் பெற்றோருக்கு இல்லை.

இந்த விஷயம் தங்களுக்குள்ளேயே முடிந்து டெலிவரி ஆன பிறகு சுமுகமாக ஜித்து பாண்டி கிளம்பி போய் செட்டிலாக வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம்.

ஜித்துவுக்கு அம்மாவின் பேச்சு எரிச்சலாக இருந்தது. “நல்லா படி, அப்போ தான் நல்ல வேலைக்கு போய் சுயமா வாழ முடியும். பொம்பளைங்க கைல எப்பவும் வருமானம் இருக்கணும். இல்லேன்னா ஒரு நாய் மதிக்காது. நானே இந்த நர்ஸ் வேலைல இல்லேன்னா உங்க அப்பா இன்னும் கொஞ்சம் ஆட்டம் போடுவாரு. சொளையா ஒண்ணாந்தேதி காசு வந்து விழவே தான் வால சுருட்டிக்கிட்டு இருக்காரு” இது நினைவு தெரிந்த நாளிலிருந்து ஜித்துவுக்கு அவள் அம்மாவிடமிருந்து கிடைத்த அறிவுரை.

அது வேற வாய். இது நார வாய் என்ற நிலையானது இப்போது.

அந்த வார இறுதியில் ராஜு வீட்டுக்கு வந்தான். கற்பகத்துக்கு உதறல் ஆரம்பித்தது. இவள் வாய் சும்மாயிருக்காது. எப்படியும் கேட்டு விடுவாள். தனியாக போய் ஜித்துவிடம் எச்சரித்தார்.

“மா, இது என் லைப். நா பாத்துக்கறேன். உனக்கு எதுவும் டேமேஜ் ஆகாது. நீ இனிமே இதுல தலையிடாதே. உங்க பேச்ச எல்லாம் நம்பி இருந்தேன் பாரு. என்னை சொல்லணும். இது வேலை மட்டும் சம்மந்தப்பட்டது கிடையாது. எங்க பைனான்ஸ் விஷயங்களையும் நாங்க டிஸ்கஸ் பண்ணனும். ராஜுவுக்கு என்ன மைண்ட்ல இருக்குனு நா தெரிஞ்சுக்கணும். என் நிலைமையும் அவருக்கு தெரியணும். இது மூடி வெக்குற விவகாரம் கிடையாது. உங்க சம்மந்தி பாசத்துக்கு ஒரு பங்கமும் வராம நாங்களே முடிவெடுக்குறோம்” என சொல்லி முடித்தாள் ஜித்து.

இந்த கால பிள்ளைகள் பிரச்சினையை எதிர் கொள்ள தயங்குவதும் இல்லை, பிரச்சினையே இல்லாமல் ஒதுங்கி போக வேண்டும் என்றும் நினைப்பதில்லை.

கார்ப்பொரேட் ரத்தம் என நினைத்துக் கொண்டார் கற்பகம்.

a senior woman reflecting life