Political Parody Rhymes – 2

Pani poori rhymes

பூரி குமாரி: இது யாருக்கான ரைம்ஸ் கோல்கப்பா?
கோல்கப்பா : இது சீனியர் தலீவருக்கு பேபி! என்ஜாய் பண்ணு!
பூரி குமாரி: : செமங்க, மக்களே, மொதல்ல ஒரிஜினல் ரைம்ஸ் கேட்டுட்டு, அப்புறம் நம்ம வெர்ஷனை படிச்சி பாருங்க!

நீர்வளத் துறை
செல்லக்குட்டி
எங்க போச்சு?

வாழ்க்கை முழுக்க
உழைச்சி தேஞ்சி
பதவி கேட்டுச்சு!

துணை முதல்வர்
பதவியில்லேன்னு
அழுதுடுச்சி!!

அப்பா வந்து
து.மு உங்க பேர்ல
இருக்குன்னு சொன்னதும்
சிரிச்சிடிச்சு!

நீர்வளத் துறை
செல்லக்குட்டி
என்ன பண்ணுச்சு?

குட்டி குட்டி
வாரிசுகளோட
ரேஸ் வெச்சுது!

வாரிசு பொம்மை
முந்தி சென்றதும்
அழுதுடுச்சி!!

அப்பா வந்து
கொஞ்சினதும்
சிரிச்சிடுச்சி!

நீர்வளத் துறை
செல்லக்குட்டி
ED கண்ணுல
பட்டுருச்சி!

வாரிசு பொம்மையை
அறிவு திருவிழாவுல
அள்ளி உட்டுருச்சி!

பழைய ஸ்டூடண்டுனு
ஸ்டார் சொன்னதும்
அழுதுடுச்சி!

தலைமை
முறைத்து பாத்ததும்
சிரிச்சிடுச்சி!!

Political Parody Rhymes – 1

Poori singing rhymes

கோல்கப்பா : குமாரி, ரொம்ப நாளா நீ கேட்டுக்கிட்டுருந்த பாலிடிக்ஸ் ரைம்ஸ் இப்போ ரெடி!
பூரி குமாரி: இது யாருக்கான ரைம்ஸ் கோல்கப்பா?
கோல்கப்பா : இது ஜுனியர் தலீவருக்கு பேபி! படிச்சு என்ஜாய் பண்ணு!
பூரி குமாரி: : செமங்க, மக்களே, மொதல்ல ஒரிஜினல் ரைம்ஸ் கேட்டுட்டு, அப்புறம் நம்ம வெர்ஷனை படிச்சி பாருங்க!

கொள்கை வண்டி
தள்ளியே,
வாரிசு தம்பி
வருகிறார்!

தள்ளி போங்கள்
ஓரமாய்,
வாரிசு வண்டி
போகணும்!

வாழ்க்கை முழுக்க
உழைத்தாலும்,
உபி நீ வண்டி
ஏற முடியாது!

வருந்தி நீ
வாழ்வை
தொலைத்தாலே,
விரைந்து
உயர்வார்
பேட்டா!

கொள்கை வண்டி
தள்ளியே,
வாரிசு தம்பி
வருகிறார்!

தள்ளி போங்கள்
ஓரமாய்,
வாரிசு வண்டி
போகணும்!

வாழ்க்கை முழுக்க
உழைத்தாலும்,
உபி நீ வண்டி
ஏற முடியாது!

வருந்தி நீ
வாழ்வை
தொலைத்தாலே,
விரைந்து
உயர்வார்
பேட்டா!

Tamil short story – பீல் குட் மொமண்ட்ஸ்

A lovely couple enjoying happy retirement

“லக்ஷ்மி, அப்பா எங்கேன்னு பாரு” என ஹாலில் இருந்து சொன்னார் சங்கு புஷ்பம்.

“அவர் பாத்ரூம்ல இருக்காரும்மா” என்றாள் லக்ஷ்மி.

“கொஞ்சம் போய் பாரும்மா, அவர் உள்ள போய் ரொம்ப நேரமாச்சு” என்றார் சங்கு புஷ்பம்.

காலையில் சீக்கிரமே எழுந்து விடுவார் நேசப்பா. காபி போட்டு, காய் நறுக்கி, வாக்கிங் கிளம்ப வேண்டிய நேரம் இது! இன்னும் பாத்ரூமிலுருந்து வெளியே வரமால் என்ன செய்கிறார்? என யோசித்தார் சங்கு புஷ்பம்.

“மா, அவரு என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா?” என சிரித்தபடியே வந்தாள் லக்ஷ்மி.

“சொல்லு!” என ஆர்வமாக கேட்டார் சங்கு புஷ்பம்.

“ஷேவ் பண்ணிக்கிட்டு இருக்காரும்மா? அதுவும் லெப்ட் ஹேண்ட்ல!” என்றாள் லக்ஷ்மி.

“வலது கைல ஏதாவது சுளுக்கா? இல்ல ஷோல்டர் வலியா? அவர் எதுவும் என்கிட்ட சொல்லலியேம்மா” என கவலையோடு சொன்னார் சங்கு புஷ்பம்.

“ஆமாம்மா, கொஞ்ச நாளா அவரு நார்மலா இல்ல. கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்குறார்” என யோசனையாக சொன்னாள் லக்ஷ்மி.

“வயசான காலத்துல இந்த ஆர்த்தோ, நியூரோ டாக்டருங்களுக்கு பீஸ் குடுத்தே மாள மாட்டேங்குது! இவரு வேற என்ன புது பைல போட வைக்க போறாருன்னு தெரியல” என புலம்ப ஆரம்பித்தார் சங்குபுஷ்பம்.

“மா, அதெல்லாம் எதுவும் சீரியஸா இருக்காது. நீ கவலைப்படாதே, நா வாக்கிங் போறேன்” என தேற்றினாள் லக்ஷ்மி.

கால் மணி நேரம் கழித்தது நெசப்பா காபி கப்போடு வந்தார்.

“இந்தாம்மா காபி” என மனைவியிடம் நீட்டினார்.

a husband serving coffee

“என்ன, வர வர மரியாதை கொறையுது? லெப்ட் ஹேண்ட்ல காபி தரீங்க?” என முறைத்தார் சங்குபுஷ்பம்.

“நீ தானே சொல்வ, மரியாதை மனசுல இருந்தா போதும்னு” என கண்ணடித்தபடியே சொன்னார் நேசப்பா.

“அப்ப மரியாதை இல்ல, அப்படி தானே?” என காபியை விட சூடாக கேட்டார் புஷ்பம்.

“காபி போட்டு கொண்டாந்து கைல குடுக்குற ஆள ஏண்டி ரோஸ்ட் பண்ற? என கூலாக கேட்டார் நேசப்பா.

“இது என்ன புது பழக்கம்? அந்த கையில ஏதாவது பிரச்சனையா? சிரிச்சி சிரிச்சி வலிய மறைக்குறீங்களா? அப்புறம் ஏதாவது பெரிய செலவா இழுத்து விடபோறீங்க? எதுவுமா இருந்தாலும் ஆரம்ப நிலையிலேயே வாய தொறந்து சொல்லுங்க! டாக்டரை பாத்து சரி பண்ணிக்கலாம்” என படபடப்பாக பேசினார் புஷ்பம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா” என சிரித்தார் நேசப்பா.

“நாங்க உங்களை கவனிக்காம இல்லை! கொஞ்ச நாளாவே நீங்க இடது கையால தான் பல வேலைகளை செய்யுறீங்க” என கவலை குறையாமல் சொன்னார் புஷ்பம்.

a man doing household activities

“நீ ஏன் சின்ன விஷயத்துக்கு இவ்ளோ யோசிக்குற? நான் சில வேலைகளை இடது கையால செய்றது உண்மை தான். ஆனா அதுக்கு ஒரு காரணம் இருக்கு” என சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னார் நேசப்பா.

சங்கு புஷ்பத்திற்க்கு காண்டு ஏறியது.

அந்த நேரத்தில் நேசப்பா போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

“ஹர்ப்ரீத், இன்னைக்கு ஏழு மணி செஷனை ஏழரைக்கு மாத்தி இருக்காங்க. நா போய் காய் கட் பண்ணி வெச்சுட்டு கிளம்புறேன்” என நகர்ந்தார் நேசப்பா.

ஹர்ப்ரீத் பஞ்சாபி பெண்மணி. சுமார் ஐம்பது வயது இருக்கும். பிஸியோதெரபி டாக்டர். இவர்கள் அபார்ட்மெண்டில் சில மாதங்களுக்கு முன்பு குடியேறி இருக்கிறார். சொசைட்டி சீனியர்களுக்கு பீஸ் வாங்காத கன்சல்டன்ட். காலையில் வாக்கிங் போகும் மொத்த பெருசுகளுக்கும் நல்ல தோழியாகி விட்டார்.

பத்து நிமிஷத்தில் நேசப்பா ரெடியாகி வந்து ஷூ போட குனிந்தார்.

புஷ்பம் அவரையே உற்று நோக்க, ஷூவை போட்டபடியே “ரொம்ப கவலைப்படாதே! எல்லாத்துக்கும் புது கனெக்க்ஷன் தான் காரணம்” என சிரித்தபடியே பாதியிலேயே நிறுத்தினார் நேசப்பா.

“என்ன புது கனெக்க்ஷன்?” என முழித்தார் புஷ்பம்.

“இங்க பாரு, நாம எப்பவும் வலது கையால தான் பெரும்பாலான தினசரி வேலைகளை செய்வோம். அந்த பழக்கத்தை மாத்தி இடது கையால சின்ன சின்ன வேலைகளை செய்யும் போது நம்ம மூளைல புதுசா நரம்பு இணைப்புகள் உருவாகும். அது மறதி குறைய உதவும். கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு நன்றாகும். இதை Non-Dominant Hand Practise என சொல்வார்கள்” என விளக்கினார் நேசப்பா.

“அப்படியா, இதை மொதல்லயே சொல்ல வேண்டியது தானே?” என நிம்மதியாக சொல்லியபடியே கிச்சனுக்கு எழுந்து போனார் புஷ்பம்.

மெல்லிசாக விசிலடித்தபடியே கிளம்பி போனார் நேசப்பா.

வாக்கிங் முடித்து லக்ஷ்மி வந்தாள். புஷ்பம் நேசப்பாவின் Non-Dominant Hand Practise விஷயத்தை சொன்னார்.

“ஹ்ம்ம், புது விஷயமா தான் இருக்கு! நீயும் ட்ரை பண்ணுமா” என சொல்லிவிட்டு குளிக்க போனாள்.

இரண்டு நாட்கள் கழித்து புஷ்பம் கோவிலுக்கு போய்விட்டு வந்து, சொசைட்டி பார்க்கில் உட்கார்ந்து அவர் சகாக்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ஹர்ப்ரீத் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

“நாளைக்கு நைட் என்னோட பர்த்டே பார்ட்டி பிளான் பண்ணி இருக்கேன். ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துடுங்க” என அனைவருக்கும் அழைப்பு விடுத்து விட்டு கிளம்பினார்.

வீட்டுக்கு வந்ததும் நேசப்பாவிடம் சொன்னார் புஷ்பம்.

“ஆமா, எங்க ஆளுங்களையும் கூப்பிட்டு இருக்காங்க, எப்படியும் ஒரு இருபத்தஞ்சு பேரு வருவாங்கனு சொன்னாங்க. நீயும் லக்ஷ்மியும் போய் நாளைக்கு கிப்ட் வாங்கிட்டு வாங்க” என சொன்னார்.

“அதெல்லாம் வேணாம்னு அவங்க தெளிவா சொல்லிட்டாங்க” என்றார் புஷ்பம்.

அடுத்த நாள் ஏழு மணிக்கு எல்லோரும் ஹர்ப்ரீத் வீட்டில் ஆஜரானார்கள். நேசப்பாவின் கோஷ்டி ஹர்ப்ரீத் பட்டேலை ஏகத்துக்கும் கொண்டாடினார்கள்.

சற்று நேரத்தில் சாப்பாடு டெலிவரி வர எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

நேசப்பாவும் புஷ்பமும் சாப்பிட ஆரம்பிக்க, அவர்கள் அருகில் வந்தார் ஹர்ப்ரீத்.

“நேஸ், நீங்களும் என்ன மாதிரி லெப்ட் ஹாண்ட் பர்ஸனா? ஸோ, ஸ்வீட்” என்றபடியே அவரை ஜென்டிலாக அணைத்துக் கொண்டார்.

a candid conversation at party

தட்டை டேபிள் மீது வைத்து விட்டு நேசப்பாவும் ஹர்ப்ரீத்தை மரியாதை நிமித்தமாக அணைத்துக் கொண்டார்!

“நீங்க லெப்ட் ஹாண்ட் பர்ஸனா?” என கேட்டார் நேசப்பா.

இது உலக மகா நடிப்புடா சாமி என தோன்றியது சங்கு புஷ்பத்திற்கு!

“ஆமா நேஸ்” என உற்சாகமாக சொன்னார் ஹர்ப்ரீத்.

“அப்பாடா, இன்னைக்கு எனக்கு டின்னர் டைம்ல “எல்போ க்ளாஷ்” ப்ராப்ளம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்” என்றார் நேசப்பா.

புஷ்பத்திற்கு இன்னைக்கு வீட்டில் க்ளாஷ் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

“எல்போ க்ளாஷ்னா என்ன?” என பொதுவாக கேட்டார் புஷ்பம்.

“சீ சங்குமா, இப்போ நா லெப்ட் ஹாண்ட். என் பக்கத்துல ரைட் ஹாண்ட் பர்ஸன் உட்கார்ந்து சாப்பிடும்போது, அந்த பர்சனோட கை, என் கைல இடிக்க சான்ஸ் இருக்கு. இது பொதுவா எங்களுக்கு நடக்கும். ஆனா நேஸ் மாதிரி லெப்ட் ஹாண்ட் பர்ஸன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடும்போது எங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை” என விளக்கினார் ஹர்ப்ரீத்.

“லவ்லி, ஸோ ஸ்வீட்” என சொல்லி சிரித்தார் புஷ்பம்.

“சரி நீங்க சாப்பிடுங்க. ” என நகர ஆரம்பிக்கும் போது, “நீயும் எங்க கூட சாப்பிடேன் சங்கு” என அழைத்தார் நேசப்பா.

“நா ரைட் ஹாண்ட் பர்ஸன் நேஸ்! உங்களுக்கு இடிக்கும்!!” என சீனியர் கேர்ள்ஸ் கோஷ்டி பக்கம் தட்டை எடுத்து கொண்டு போனார்.

நேசப்பா பாந்தமாக சப்பாத்தியை இடது கையால் பிய்த்து, அதை லேசாக க்ரேவியில் தோய்த்து உள்ளே தள்ளி கொண்டிருந்தார்.

கேக், குலாப் ஜாமூன் என லைனாக வந்த அனைத்தையும் கச்சிதமாக, சிந்தாமல் சிதறாமல், லெப்ட் ஹாண்டில் சாப்பிட்டு முடித்தார்.

பத்து மணிக்கு பார்ட்டி முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், சங்கு புஷ்பம் முதல் வேலையாக லக்ஷ்மியின் ரூமிற்க்கு சென்றார்.

புஷ்பம் சொல்ல சொல்ல, லக்ஷ்மி உன்னிப்பாக கேட்டு விட்டு, விழுந்து விழுந்து கண்ணில் நீர் வர சிரித்தாள்.

“மா, நா ஒண்ணு சொல்லுவேன், என்ன திட்டாதே!” என இழுத்தாள்.

“சொல்லு” என்கிறார் புஷ்பம்.

எதையோ அவள் சொல்ல ஆரம்பிக்க, மீண்டும் அடக்க முடியாமல் சிரிப்பை தொடர்ந்தாள்.

“சொல்லிட்டு சிரியேண்டி” என அதட்டினார் புஷ்பம்.

சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு லக்ஷ்மி ஆரம்பித்தாள்.

“மா, நா நெனைக்கிறேன் NDHPனா “Non-Dominant Hand Practise” இல்லை! “Nesappa Dates Harpreet Patel”. கூட்டி கழிச்சி பாரு என் கணக்கு சரியா வரும்” என பன்ச் டயலாக்கை போட்டாள்.

“அடிப்பாவி, கதை அப்படி போகுதா? அந்த மனுஷன் புது கனெக்க்ஷன்னு பேசும் போதே நா யோசிச்சிருக்கணும்” என மெலிதாய் சிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

அம்மாவும் மகளும் அடுத்த இருபது நிமிடம் நேசப்பாவின் லெப்ட் ஹாண்ட் அட்ராசிட்டிகளை பேசி விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

feel good moment between mother and daughter

“மா, வயசான காலத்துல இதுவும் நல்லது தாம்மா! தான் கவனிக்கப்படலை, அட்ராக்ட்டிவா இல்லேன்னு நெனச்சி முடங்கிடாம, அவர் பிளேபுல்லா இருக்கிறது நல்ல விஷயம். நம்ம அப்பாவை பத்தி நமக்கு தெரியும். டீசண்டான மனுஷன். இந்த மாதிரி சின்ன சின்ன பீல் குட் மொமண்ட்ஸ் அவர் மைண்டை பிரெஷ்ஷா வெச்சிக்க ஹெல்ப் பண்ணும்” என சொன்னாள் லக்ஷ்மி.

“சின்ராசுக்கு இந்த வயசுல சின்ன சின்ன பீல் குட் மொமண்ட்ஸ் தேவைப்படுது!” என சொல்லியபடியே தூங்க போனார் சங்கு புஷ்பம்.

மாத்திரைகளை போட்டு கொண்டு, கிச்சனை க்ளீன் செய்துவிட்டு, சோபாவில் உட்கார்ந்து லக்ஷ்மி சொன்ன விஷயங்களை தேடி படித்து பார்த்தார். உண்மை தான் அவள் சொன்னது. தன்னை சமாதானபடுத்த அவள் எதுவும் பொய்யான விஷயங்களை சொல்லவில்லை.

ஹால் விளக்குகளை அணைத்து விட்டு “ஏங்க, ஆறு மணிக்கு அலாரம் வெச்சுடுங்க” என சொல்லிவிட்டு போய் கட்டிலில் படுத்துக் கொண்டார்.

“ஏண்டி ஆறு மணிக்கு எழுந்து என்னடி பண்ண போற?” என கேட்டார் நேசப்பா.

“திலீப் சார் “Deep Healing Synaptic Pathway” அப்படீன்னு சீனியர் சிட்டிசன்ஸுக்கு செஷன் எடுக்குறாராம் பார்க்குல. டின்னர்ல பேசிக்கிட்டுருக்கும் போது சொன்னார்” என்றார் புஷ்பம்.

“அந்த ஆர்மில இருந்து VRS வாங்குன டாக்டர்தானே?” என கேட்டார் நேசப்பா.

“ஆமாங்க” என்றார் புஷ்பம்.

“பாத்ரூம் போயிட்டு வரேன்” என சொல்லி விட்டு லக்ஷ்மி ரூமிற்க்கு போனார் நேசப்பா.

“என்ன, உங்க அம்மா Healing கிளாஸ் போக போறாளாமே? உன்கிட்ட சொன்னாளா?” என கேட்டார்.

“முழுசா சொல்லுப்பா! நானே பாதி தூக்கத்துல இருக்கேன். நீ வேற பிட்டு பிட்டா சொல்ற” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.

நேசப்பா சொல்லி முடிக்க, “ஆமாப்பா, அம்மா சொன்னாங்க. “DHSP” இப்போ ரொம்ப பேமஸ். ஆனா இதுல ஒரு மேட்டர் இருக்கு கவனிச்சியா?” என கண்ணடித்தபடியே கேட்டாள் லக்ஷ்மி.

அவருக்கு கேக்கும், குலாப் ஜாமூனும் ரிவர்சில் வந்து தொண்டையை அடைத்தது.

“என்ன மேட்டர்” என தக்கி தக்கி கேட்டார்.

Dileep Heals Sangu Pushpam” என சொல்லி போர்வையை தலை வரை மூடி கொண்டு சிரித்தாள்.

மறுநாள் காலை சங்கு புஷ்பம் ஆறு மணிக்கு ரெடியாக, நேசப்பா காபி கொடுத்தார். வலது கையில்!

a husband serving coffee

முற்றும்

Thank you, Dairy Milk!

Pani puri couple enjoying dairy milk

கோல்கப்பா : Cadbury Daily Milk போட்டுருக்குற New Neighbour சாக்லேட் விளம்பரத்தை பார்த்தியா?

பூரி குமாரி : அருமையா இருக்குங்க!

Dairy mil ad

கோல்கப்பா : இந்த கம்பெனிக்கு நம் மக்கள் சார்பாக நன்றியும், வாழ்த்துக்களும்!

பூரி குமாரி : ஆமாங்க, கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும். அதே சமயம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் மொழி உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆளும் தரப்புக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்ளுவோம்!

கோல்கப்பா : நியாயம் தான் குமாரி! வாசக நண்பர்களே, இந்த பதிவை படித்து நீங்களும் உங்கள் வாழ்த்தை கமெண்டில் சொல்லுங்கள்!

Dairy mil ad

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

பூரி குமாரி : மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்! நன்றி!

Tamil joke – தீபாவளி மலர் – அதிசார யோகம்

pani puri couple discussing spiritual

கோல்கப்பா : மாதாஜி, இப்போது அதிரச யோகம் ஆரம்பித்திருக்கிறதாமே? அதை பற்றி விளக்குங்கள்.

மாதாஜி : கோல்கப்பா, அது அதிரச யோகமில்லை, அதிசார யோகம்! நீ இன்னும் தீபாவளி மூடிலிருந்து வெளியே வரவில்லையா?

கோல்கப்பா : ஹிஹிஹி, மன்னித்துக் கொள்ளுங்கள் மாதாஜி. அடியேனுக்கு அறிவு அவ்வளவு தான்!

மாதாஜி : பரவாயில்லை, உன் சந்தேகம் என்ன கேள்?

கோல்கப்பா : ஆளும் தரப்புக்கு அதிசார யோகம் எப்படி இருக்கிறது மாதாஜி?

மாதாஜி : அதிசார யோகம் என்ற வார்த்தையை கூட அவர்கள் காதால் கேட்க விரும்ப மாட்டார்கள்!

கோல்கப்பா : ஏன் மாதாஜி?

மாதாஜி : அதிசாரத்தில் “சார்” இருக்கிறது அல்லவா? அதனால் தான்!

கோல்கப்பா : ஹிஹிஹி, மாதாஜி பலமான மேட்டராக சொல்கிறீர்கள்? இன்னும் சற்று விளக்கவும் ப்ளீஸ்.

மாதாஜி கண் மூடி யோசிக்கிறார்.

மாதாஜி : ஒன்றா, இரண்டு கோல்கப்பா? அவர்களை உலுக்கிய “சார்” நிகழ்வுகளை வரிசையாக பார்ப்போம். நம் மாநில தலை நகரில் நடந்த அவல நிகழ்வு, அதை தொடர்ந்து நடந்த “யார் அந்த சார்?” என்ற போராட்டம்!

கோல்கப்பா : ஆமாம் மாதாஜி, என்னைக்கும் அந்த போஸ்டர் வாசகம் நினைவிருக்கிறது.

மாதாஜி : அடுத்ததாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்ட அனுமதி தந்த விவகாரம்!

கோல்கப்பா : ஹா, அந்த ராம்சார் லேண்டு பிரச்சினை தானே?

மாதாஜி : ஆமாம் கோல்கப்பா, சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பான விஷயத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கவனத்தில் எடுத்து, மாநிலத்தில் உள்ள சதுப்பு நிலங்களை ஆய்வு செய்து அடையாளம் காணும்படி உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் கட்டடம் கட்ட முறைகேடாக அனுமதி தந்த புகார் இப்போது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

கோல்கப்பா : இது சென்னையின் மழை வெள்ள மேலாண்மையை மேலும் பாதிக்குமே மாதாஜி!

மாதாஜி : மண்டையில ஓட்ட இருக்கே நமக்கே தெரியுது! அதிகாரிகளுக்கு தெரியாதா?

கோல்கப்பா : அடுத்த சார் மேட்டர் என்ன மாதாஜி?

மாதாஜி : தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR)!

கோல்கப்பா : ஜனநாயகத்தை காப்பாத்தணும்னு சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்காங்க போல?

கோல்கப்பா : அற்புதம்! அமர்க்களம்! சரி நம்ம பிரதான எதிர் கட்சிக்கு அதிசார யோகம் எப்படி இருக்கு மாதாஜி?

மாதாஜி : புது கட்சி கூட்டணிக்கு வரும்னு சொன்னாங்க. பழம் நழுவி பால்ல விழற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தினாங்க. ஆனா புது கட்சி தலைவர் சரிப்பட்டு வரல, அதனால அவங்க நிலைமை இதுதான்!

கோல்கப்பா : ஹஹிஹி மாதாஜி, உங்க செலெக்க்ஷன் அட்டகாசமா இருக்கு. சரி நம்ம புது தலைவருக்கு நேரம் எப்படி இருக்கு?

மாதாஜி : நேரம் நிச்சயம் சரியில்லை! ஆனா அவர் மன உறுதியோட தொடர்ந்து செயல் பட்டு, come back குடுத்தாருன்னா நிலவரம் மாறலாம். நிலைகுலையாம உண்மையா போராடுனார்னா இந்த சேர் கெடைக்கலாம்!

கோல்கப்பா : மாதாஜி, கட்சிகளை பத்தி சொல்லிடீங்க. அரசாங்கத்துக்கு எப்படி இருக்கு?

மாதாஜி : பெருங்காயப்பட்டு இருக்குற கஜானாவுக்கு சாராய பணத்தை பாய்ச்சி ஓட்டிக்கிட்டு இருக்காங்க!

கோல்கப்பா : நன்றி மாதாஜி!

மாதாஜி : மக்களே, இதோடு தீபாவளி சிறப்பு மலர் நிறைவடைகிறது!

தீபாவளி மலர் – தீதும் நன்றும் பிறர் தர வாரா!

Pani puri couple enjoying Tea

பூரி குமாரி : நாட்டு நடப்பு எப்படி இருக்குங்க? இன்னைக்கு breaking news என்ன?

கோல்கப்பா : இப்ப வர்றது எல்லாம் breaking news இல்ல! Freaking and tweaking news!

பூரி குமாரி : அப்போ வர்ற செய்தியில பொய் எது, உண்மை எதுன்னு எப்புடிங்க கண்டுபுடிக்கிறது?

கோல்கப்பா : செய்தி ஊடகங்களை மட்டும் கண்மூடித்தனமா பாலோ பண்ணி இப்போ நடக்குற பாலிடிக்ச மக்கள் புரிஞ்சிக்க கூடாது.

பூரி குமாரி : என்னங்க சொல்றீங்க?

கோல்கப்பா : ஆமாடி, பொது வெளியில் வரும் செய்திகள் அனைத்தும், நமக்கு உண்மையை நேரடியாக சொல்லாது. நாம தான் ஒவ்வொரு நிகழ்வையும் பகுத்து பார்த்து முடிவெடுக்கணும்.

பூரி குமாரி : தெளிவா சொல்லுங்க கோல்.

கோல்கப்பா : சொல்றேன் கேளு, அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வார்த்தையையும், நகர்வையும், செயலையும் மக்கள் நுட்பமாக கவனிக்கணும். நடப்பு விபரங்களை நிதானித்து ஆராய்ந்தால் மட்டுமே, உண்மையை புரிந்து கொண்டு அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முடியும்.

பூரி குமாரி : ஏங்க, இவ்ளோ சீரியஸா பேசுறீங்க? மக்களுக்கு புரியற மாதிரி ஒரு எக்ஸாம்பிளோட சொல்லுங்க!

கோல்கப்பா : இப்போ பாரு, ஆளும் கட்சி கடந்த காலங்கள்ல ஜெயிக்க குறிப்பிட்ட “மூணு எழுத்து” உதவி இருக்கு!

பூரி குமாரி : அது என்னங்க மூணு எழுத்து?

கோல்கப்பா : TVI – டெலிவிஷன் இலவசம், தகுதி வாய்ந்த இல்லத்தரசி என நல திட்டங்கள்( TeleVision Ilavasam, Thaguthi Vaindha Illatharasi)

பூரி குமாரி : 2026ல “TVI”னா என்னங்க?

கோல்கப்பா : வேறென்ன? தலைமைக்கு வருகிறார் இளவரசர் தான்! (Thalaimaikku Varugiraar Ilavarasar)

பூரி குமாரி : அட ஆமாங்க. அப்போ 2026லயும் “TVI” ஆளுங்கட்சிக்கு உதவுமா?

கோல்கப்பா : எனக்கு தெரியல குமாரி, பொறுத்திருந்து தான் பாக்கணும்!

பூரி குமாரி : கரெக்ட்டுங்க. தீதும் நன்றும் பிறர் தர வாரா! (Theedhum Nandrum Pirar Thara Vaaraa)

கோல்கப்பா : முடிஞ்ச்! கலக்கிட்ட போ! இப்படி தான் ஜனங்க யோசிக்கணும்!

பூரி குமாரி : ஜனங்க யோசிக்கிறது இருக்கட்டும். இந்த அஞ்சு எழுத்து (TNPTV) உங்களுக்கு என்ன செய்தி சொல்லுதுனு யோசிங்க கோல்!

கோல்கப்பா : ஹா, கண்டுபுடிச்சுட்டேன்! தமிழ் நாடு புதிய தலைவரை வரவேற்கிறது! (TamilNadu Puthiya Thalaivarai Varaverkiradhu)

பூரி குமாரி : நீங்க பாஸாய்ட்டிங்க கோல்கப்பா! இப்போ புது கட்சிக்காக நான் சில TVI பாயிண்டுங்களை சொல்லட்டுமா ?

கோல்கப்பா : Come on, சொல்லு டார்லிங்!

பூரி குமாரி :

தேறி வாருங்கள் இளைஞரே!
தெளிந்து வாருங்கள் இரும்பாக!

தொலைக்காட்சி விவாதங்களெல்லாம் இரைச்சலே!
தீய வஞ்சகர்களுக்கு இரையாகாதீர்கள்!

துளிர்த்து வளர்பவர்களை இருட்டடிப்பார்கள்!
தனிமனித விமர்சனங்களில் இங்கிதமிருக்காது!

தொடர் ஓட்டத்தில் இளைப்பாறுதலில்லை!
தந்திரக்காரர்களை வேரறுக்க இயங்குங்கள்!!

(Theri Vaarungal Ilaignare

Thelindhu Vaarungal Irumbaaga

Tholaikaatchi Vivaadhangalellam Iraichchale

Theeya Vanjagargalukku Iraiyaagadheergal

Thulirthu Varubavargalai Iruttadipaargal

Thanimanidha Vimarsanangalil Inghithamirukkaadhu

Thodar Vottathil Ilaipaarudhalillai

Thandhirakaaragalai Verarukka Iyangungal)

கோல்கப்பா : அட அட அடடா! கலக்குறியே கண்ணம்மா!

பூரி குமாரி : பாராட்டு இருக்கட்டும்! இன்னைக்காவது எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க!

கோல்கப்பா : நானே எழுதுனா உன் கிட்ட உதை தான் வாங்குறேன். அதனால பாரதியார் எழுதுனதை உனக்கு டெடிகேட் பண்றேன்!

நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா…

பூரி குமாரி : அருமை! அருமை! அருமைங்க!

கோல்கப்பா : மக்களே! நமக்கும் “தீதும் நன்றும் பிறர் தர வாரா”! அதனால “Twisted Narrative Propaganda TV” செய்திகளை மட்டும் நம்பி தேர்தல்ல ஓட்டு போடாதீங்க! Bye!

Tamil novel – OTP – Part 20/20

A senior citizen couple meeting their friend

கூட்டத்தில் இருந்து கிளம்பியவர்கள் குமரஜோதியை வள்ளியப்பன் கடையருகே வர சொன்னார்கள்.

அங்கு இருந்த பஸ் ஸ்டாப் காலியாக இருந்தது. அவரிடம் விவரம் சொல்லி அந்த பணத்தை அவரையே வைத்துக் கொள்ள சொன்னார்கள். அவரின் உதவிக்கு நன்றி சொல்லி யார் வந்து கேட்டாலும் அவர் எதுவும் தரவில்லை. நான் தண்ணீர் கேன் போட்டுவிட்டு வந்து விட்டேன் என சொல்லுமாறு அறிவுறுத்தி கிளம்பினார்கள்.

வீட்டுக்கு போய் உடை மாற்றி செல்லகுமாருக்கு நன்றி சொல்லி இருவரும் போய் பார்க்கில் உட்கார்ந்தார்கள். கல்பனா வந்தார். மொத்த கதையையும் கூர்ந்து கேட்டார்.

விஷயம் தலைமை வரை சென்று சேர்ந்ததை இவர்களிடம் சொன்னார். பி

றகு சற்று யோசித்த கல்பனா “இந்நேரம் லோக்கல் ஸ்டேஷன்க்கு மெசேஜ் வந்திருக்கும். இந்த மாதிரி சென்சிடிவ் மேட்டர் எல்லாம் குமரகுரு சார் தான் விசாரிப்பார். ரத்தினத்தை விசாரிச்சு அவர் உங்க பேர சொன்னா இங்க வர வாய்ப்பு இருக்கு. நாம தயாரா இருக்கணும்” என்றார்.

மூன்று பேரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு கல்பனா சில யோசனைகளை சொல்லி நான் பார்த்துக்கிறேன் என தைரியம் சொன்னார்.

செல்லகுமாரை போய் பார்த்தார் கல்பனா. யாராவது நேசமணி பற்றி விசாரிக்க வந்தால் தனக்கு தகவல் சொல்லுமாறு அறிவுறுத்தினார். பிறகு அவர்களிடம் என்ன கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என சொல்லி புரிய வைத்தார். அதையே சங்கு புஷ்பத்திற்கும் சொன்னார். அந்த இரவு சம்பந்தப்பட்ட அனைவருக்கும்ஒரு நெடிய இரவாக இருந்தது.

எம்பி அவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவர் நம்பவில்லை. பிறகு “சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் பண்ண சொல்லுங்க. அப்புறம் பார்க்கலாம். நாளைக்குள்ள என்ன நிலவரம்னு சொல்லுங்க. ஏதாவது பிரச்சினை இருந்தா கேண்டிடேட்டை மாத்திடலாம்” என்றார் அவர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அண்ணணும் ரத்தினமும் ஆளும் கட்சி வேட்பாளர் நேசமணிக்கு வாழ்த்தும் ஒத்துழைப்பும் தருவதாக உளமார சொன்னது ஆதாரத்தோடு தலைமைக்கு சென்றது.

இங்கே லோக்கலில் புகைச்சல் அதிகமானது. அண்ணன் காதுக்கு வந்த செய்தி எதுவும் நல்ல செய்தி இல்லை.

ரத்தினத்திடம் டம்மி வேட்பாளராக அறியப்பட்ட நேசமணிகளின் டாக்குமெண்ட்டை கேட்டார். அவரிடம் எதுவும் இல்லை. பணம் எங்கே என்றார். தண்ணீர் கேன்காரருக்கு கொடுத்ததாக சொன்னார் ரத்தினம். எதுவும் நம்பம் படியாக இல்லை அவருக்கு.

அப்போது அவருக்கு ஒரு செய்தி வந்தது. புஷ்பா லிஸ்ட் வித் ரத்தினம் ஐடி கார்டு.

“இதெல்லாம் என்ன” என கண் சிவந்தார் அண்ணன். எதற்கும் பதில் இல்லை ரத்தினத்திடம்.

காலையில் லேசாய் சுற்றிய அவரின் தலை இப்போது பம்பரமாய் சுற்றியது.

குமரகுரு ரத்தினத்தை விசாரித்தார். அவர்கள் இருவரின் போன் ரெக்கார்டுகளை எடுத்தார்.

இருவரும் டாக்டர் நேசமணிக்கு செய்தி அனுப்பியது சிக்கியது.

ரத்தினத்தின் கதைப்படி குமரகுரு நேசப்பாவை விசாரிக்க கிளம்பினார்.

“நேசமணி எந்த பிளாட்? என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.

செல்ல குமார் பிளாட் நம்பர் சொன்னார். விசிட்டர் பைல் செக் செய்தார்.

ரத்தினம் வந்தது நோட்டில் இருந்தது. ஐந்து மணி நேரத்திர்ற்கு மேலாக இங்கே இருந்திருக்கிறார். என்னவாக இருக்கும் என யோசித்தார்.

“அவங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க? என்ன பண்றங்க” என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.

“சார் அவங்க ரெண்டு பேரு மட்டும் தான் வீட்ல. ரிட்டையர்டு ஆனவங்க. சார் போஸ்ட் ஆபீஸ்ல இருந்தார். அந்த அம்மா நர்ஸு” என்றார் செல்ல குமார்.

“நீங்க தான் நைட் ஷிப்டா” என்றார் குமரகுரு.

“இல்ல சார். வேற ஒருத்தர் வரணும். அவரு வெளியூரு. அங்க ஒரு டெத்து. அவரு வரல. அதன் நா இருக்கேன்”. என்றார் செல்லகுமார்.

“எந்த ஊரு” என்றார் குமரகுரு.

செல்ல குமார் சொன்னார். “சார், உங்க ஊர்ல ஒரு டெத்தா இன்னைக்கு” என ஊர் தலைவரை விசாரித்தார். அவர் ஆமாம் என்று சொல்ல செல்லகுமாரை நம்ப ஆரம்பித்தார் குமரகுரு.

“ரிட்டையர்டு ஆயிட்டு இப்போ என்ன பண்றாங்க?” என்றார் குமரகுரு.

“அந்த அம்மா லைப் கோச் சார். வர்றவங்க மணி கணக்குல பேசுவாங்க. அவரு வயசானவரு. ரெண்டு பேருக்கும் சுகர். அவங்க பசங்க ரெண்டு பேரு பாரின்ல இருக்காங்க. ஒரு பொண்ணு ப்ரொபஸரா பாண்டில இருக்காங்க. அவங்க மட்டும் வாரா வாரம் வந்து பாத்துட்டு போவாங்க. ரொம்ப டீசண்டான பேமிலி சார்” என்றார் செல்ல குமார்.

இவங்க பேக்கிரௌண்ட் கவுரவமா இருக்கு. ரத்தினம் சொன்னதை சந்தேகப்பட்டார் குமரகுரு.

“சிசிடிவி இருக்கா?” என்றார் குமரகுரு.

“எல்லா ப்ளாக்லயும் இருக்கு சார்” என்றார் செல்ல குமார்.

“சரி, நைட் ஷிப்ட் கிட்ட சொல்லி வைங்க. நா போகும் போது பார்த்துட்டு போறேன்” என்றார்.

“அவங்க வீட்டுக்கு தண்ணீர் கேன் வந்துதா? எப்போ” என அதையும் சேர்த்து கேட்டார்.

“ஆமா சார். மத்தியானம் வந்தார். போட்டுட்டு கொஞ்ச நேரத்துல போயிட்டாரு.

இருங்க நோட்ல பாக்குறேன்” என்றார் செல்லகுமார்.

“இந்த பையன் சிஸ்டமேடிக்கா இருக்கான்” என நல்ல அபிப்ராயம் வந்தது குமரகுருவுக்கு.

“சார் மொத்தம் பத்து நிமிஷம் தான் சார்” என்றார் செல்லகுமார்.

“சரி” என சொல்லி உள்ளே கிளம்பினார்.

செல்ல குமார் பக்கத்தில் இருந்த நைட் வாட்சமேனை பார்க்க அவர் போனை எடுத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் போனார். கல்பனாவுக்கு மெசேஜ் வந்தது.

அவர் குரங்கு குல்லாவை மாட்டிக் கொண்டு கீழே நாயை கூட்டிக்கொண்டு இறங்கி வந்தார்.

“மேடம் நீங்க இங்க தான் இருக்கீங்களா” என்றார் குமரகுரு.

கல்பனா திரும்பி “நீங்க எங்க சார் இங்க? அதுவும் ராத்திரில. நா இந்த பிளாக்ல தான் இருக்கேன்” என்றார்.

“நல்லதா போச்சுங்க. இங்க ஜி பிளாக் நேசமணிய தெரியும்களா” என்றார் குமரகுரு.

“அவங்கள தெரியாதவங்க ரொம்ப கம்மி சார் இந்த காம்பௌண்ட்ல. என்ன சார் விஷயம்?” என்றார் கல்பனா.

சுருக்கமாக கதையை சொன்னார் குமரகுரு.

“என்ன சார் இது. எங்க காம்பௌண்ட்லயே இந்த மாறி ஒரு அட்டெம்ப்ட்டா? எல்லாரும் பச்சவங்க, நல்ல பொசிஷன்ல இருக்கவங்க” என்றார் கல்பனா.

“ஆமாங்க, எனக்கும் அப்டி தான் தோணுது. மூணு நாலு லட்சம்லாம் இங்க இருக்குறவருக்கு ஒரு மேட்டரே கிடையாது. அந்த அமௌண்ட்டுக்கு மானம் மரியாதையை யாரு அடகு வெப்பாங்க?” என கேட்டார் குமரகுரு.

“சார் எதுக்கும் நாம சிசிடிவி ஒரு தரவ பாத்துட்டு முடிவு பண்ணலாம். வாங்க” என ஆபீஸ் ரூம் பக்கம் போனார்கள்.

ரத்தினம் ரிஷப்சனில் காத்திருந்தது, செல்ல குமார் போன் பேசியது, பிப்த் ப்ளோர் காரிடரில் நடந்த உரையாடல், அவர் சங்கு புஷ்பத்துக்கு காசு கொடுத்தது, பிறகு அவர் வெய்ட் பண்ணி உள்ளே போனது என எல்லாம் இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து காபி வந்தது. பிறகு தண்ணீர் கேன் வந்தது. அவர் உள்ளே போய் சில நிமிடங்களில் வெளியே வந்து விட்டார். சில்லறை காசு வாங்கும் நேரம் தான். பிறகு ரத்தினம் கிளம்பி வெளியே போகிறார்.

“சார் இதுல ஏதாவது உங்களுக்கு பொறி தட்டுதா” என்றார் கல்பனா.

“வித்தியாசமா எதுவும் இல்ல. அந்த அம்மா ஏதோ ஸ்ட்ரிக்டா சொல்றாங்க. அவரு அப்புறம் தன் காசு தராரு. மொதல்ல அந்த அம்மா அவரை உள்ளேயே கூப்புடலை. வெளில சேர போட்டு உக்கார சொல்ராங்க. இந்த மாறி டீலிங்க்ல இருக்கவுங்க வெளிப்படையா இருக்க மாட்டாங்க. அப்புறம் காசு தந்தப்புறமும் அந்த அம்மா உடனே உள்ள விடல” என யோசித்தார் குமரகுரு.

“சரி சார். வீட்டுக்கு வாங்க பேசலாம்” என அழைத்துப் போனார் கல்பனா.

“இந்தாங்க சார் பஞ்சாமிர்தம்” என உபசரித்தார் கல்பனா.

“இப்ப எப்படி ப்ரோசீட் பண்றது? என குழம்பினார் குமரகுரு.

“அவங்கள விசாரிக்கணும். ஆனா தொந்தரவா இருக்க கூடாது. இது தப்பான புகாரா இருந்தா வயசானவங்க அவங்க வருத்தப்படுவாங்க” என உண்மையாக கரிசனப்பட்டார் குமரகுரு.

இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் என அமைதியாய் இருந்தார் கல்பனா.

ஸ்டேஷனில் இருந்து போன் வந்தது குமரகுருவுக்கு. தலைமைக்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட் வேணும் என.

“மேடம் அவங்க உங்களுக்கு பழக்கமா? கொஞ்சம் போன்ல கேஷுவலா பேசி பாருங்களேன்” என உதவி கேட்டார் குமரகுரு. கல்பனா போனை போட்டார்.

‘என்ன ஆன்ட்டி இன்னைக்கு எப்படி போச்சு? தூங்குற நேரத்துல தொல்லை பண்ணிட்டேனா. சாரி” என்றார் கல்பனா.

“இல்லமா. லக்ஷ்மி கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். இன்னிக்கு ஒரே அக்கப்போர். சரியான தலைவலி” என்றார் சங்கு புஷ்பம்.

“என்ன விஷயம் ஆன்ட்டி” என தொடர்ந்தார் கல்பனா. ஸ்பீக்கர் போனில் கேட்டபடி இருந்தார் குமரகுரு.

“இன்னைக்கு உங்க அங்கிள் ரொம்ப டென்க்ஷன் ஆயிட்டாரு. யாருன்னு தெரியாத ஒருத்தரு எங்களை பாக்கணும்னு திடீர்னு வந்துட்டாரு. அப்பாயின்மென்ட் கூட வாங்கல. ஒரே ராவடியான ஆளு” என சலித்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

“என்ன ஆச்சு” என கேட்டார் கல்பனா. “என் கிளயண்ட அவ ஆட்டையை போட்டுட்டா” என்றபடி லைனில் குறுக்கில் வந்தார் நேசமணி.

மீண்டும் சங்கு புஷ்பம் தொடர்ந்தார். “அவரு கொஞ்சம் மொரடானா ஆளா இருந்தாரு. கட்சிக்காருனு சொன்னாரு. மீட் பண்ணனும் ஆனா கன்சல்டேஷன் தர மாட்டேன்னு ஒரே அடாவடி. நானும் உள்ள விடல. அப்புறம் தான் வேற வழி இல்லேன்னு குடுத்தாரு” என பொறுமையை சோதித்தார் சங்கு புஷ்பம்.

“அப்புறம் என்ன ஆச்சு” என்றார் கல்பனா.

“எங்க எல்லாருக்கும் மண்டை காஞ்சி போச்சு” என மீண்டும் குறுக்கில் வந்தார் நேசமணி.

இது சரியான காமெடி டைம் பேமிலி என நினைத்தார் குமரகுரு. இவர்கள் இவ்வளவு நார்மலாக இருக்கிறார்கள். அந்த ஆள் இவர்களை கை காட்டுகிறான் என யோசித்தார்.

“என்ன விஷயமா வந்தார்” என கேட்டார் கல்பனா.

“ரொம்ப சிம்பிள் மா. அங்கிள பாக்கணும் அவருக்கு. எலெக்க்ஷன்ல சுயேச்சையா நிக்குறீங்களானு கேட்டாரு. இவரு சுகர் பேஷண்ட்டு. சும்மாவே நிக்க முடியாது. இவரு எங்க சுயேச்சையா நிக்குறது. அவரு இன்டென்ஷன் ரொம்ப தப்பா இருந்தது. நாங்க முடியாது கெளம்புங்கன்னு சொல்லிட்டோம்” என உடைத்து பேசினார்.

“அப்புறம்” என்றார் கல்பனா.

“அவரு கதையை சொன்னாரு. நா லைப் கோச்சுனால ஊர் கதை எல்லாம் பேசினாரு. எட்டாயிரம் பீஸ் வேற குடுத்தாரு. ஒழச்சு சம்பாதிக்குறவன் எவனும் வெட்டி கதைக்கு எட்டாயிரம் தர மாட்டான். நடுவுல திரும்ப அவருகிட்ட பேச ஆரம்பிச்சுட்டான். நாலு லட்சம் தரேன்னு சொல்றான்”.

“நீங்க போக சொல்லலியா?” என்றார் கல்பனா.

“அவரு அவங்க அண்ணன் கிட்ட போன்ல பேசுறாரு. இவருகிட்ட பேசுறாரு. அப்புறம் என்கிட்டே கொஞ்ச நேரம் பேசுறாரு. அவரு எதுக்கு வந்தார்னே எங்களுக்கு புரியல. இன்னும் சொல்ல போனா நம்ம குமரஜோதி தண்ணி கேன் எடுத்துட்டு வந்தா அவருகிட்ட பேசுறாரு. அவரு வீட்டம்மாவுக்கு நல திட்ட உதவி வாங்கி தரேன்னு ஒரே அலப்பறை” என கொட்டி தீர்த்தார்.

“அப்புறம்” என்றார் கல்பனா.

“ஒரு வழியா நாங்க முடியாதுன்னு சொல்லிட்டோம். இன்னொரு விஷயம் சொல்றேன் ஷாக் ஆவாத” என சஸ்பென்ஸ் வைத்தார் சங்கு புஷ்பம்.

“அந்த ஆளு என்ன சுயேச்சையா நிக்க முடியுமான்னு கேட்டாரு. ஒரு கேண்டிடேட்டு புஷ்பாவாம். நா சங்கு புஷ்பம்னு என்ன கேட்டார்.”

“இதுக்கு மேல அவரை பத்தி என்ன சொல்றது” என கொட்டி தீர்த்தார் சங்கு புஷ்பம்.

கல்பனா தொடர குமரகுரு போனிலேயே ரிப்போர்ட் கொடுத்து விட்டார்.

தலைமைக்கு தெளிவாக ரிப்போர்ட் சென்றது.

அண்ணன் மற்றும் ரத்தினமுத்து சேகர் இருவரும் மாற்று கட்சிக்காக வேலை செய்து கட்சிக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக டம்மி வேட்பாளர்களை நிறுத்த சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள்.

கட்சிக்கு கெட்ட பேரையும், கட்சி கட்டுப்பாட்டையும் மீறியதால் அவர்கள் இருவரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கபடுகிறார்கள். கட்சியின் சார்பாக புது வேட்பாளர் நாளை அறிவிக்கபடுவார்” என இரவோடு இரவாக செய்தி குறிப்பு வந்தது. அண்ணனும் ரத்தினமும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் கைதியானார்கள்.

மறுநாள் காலை பேப்பரில் செய்தி வந்தது.

முற்றும்.

Tamil novel – OTP – Part 19/20

A political meeting with large group of people

ரத்தினம் கிளம்பியதும் கதவை சாத்தியவர்கள் ஆளுக்கொரு பாத் ரூமிற்க்கு ஓடினார்கள். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பசியையும் இயற்கை உபாதைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

பாத்ரூம் போய் வந்த பிறகு ஆயாசமாக உணர்ந்தார்கள். பேருக்கு நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டார்கள். ரத்தினம் கிளம்பி விட்டதால் இனி போன் பேசலாம் என உணர்ந்தார்கள்.

ரெஸ்ட் எடுக்க சங்கு புஷ்பத்திற்க்கு நேரமில்லை. லக்ஷ்மிக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி இனி என்ன செய்யலாம் என திட்டமிட்டார்.

லக்ஷ்மிக்கு நேரில் போய் அவர்களை கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

முன்பின் தெரியாத ஒருவர் தங்களை சந்திக்க வருகிறார் என்றபொழுது அவர்களின் நிதானமும் எச்சரிக்கை உணர்வும் பிரமிப்பாக இருந்தது.

அந்நிய ஆட்களை கணித்து அவர்களிடம் எவ்வளவு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று லக்ஷ்மியும் கற்றுக் கொண்டார்.

அடுத்த போன் கல்பனாவுக்கு போட்டார் சங்கு புஷ்பம்.

கல்பனாவின் உறவினர் ரத்தினம் கட்சியில் உள்ள முக்கியஸ்தருக்கு பாதுகாப்பு பணியில் உள்ளவர். அவர் போய் ஓத வேண்டிய இடத்தில் ஓதி விட்டார்.

வார்டு பெயரை சொல்லி “சார், இங்க கட்சி ஆளுங்க எலெக்சன்ல டபுள் கேம் ஆடுறாங்கன்னு லோக்கல் சோர்ஸ் டிப் குடுத்திருக்காங்க சார். எக்ஸ் எம்எல்ஏ அண்ட் அஸோஸியேட் இன்வால்வ்ட் சார். ஒடனே நீங்க அவங்க ஏரியா ஸ்டேஷனை அலெர்ட் பண்ணீங்கன்னா கையும் களவுமா பிடிக்கலாம் சார்” என சொல்லி முடித்தார்.

“ரொம்ப டயர்டா இருக்க. போய் கொஞ்ச நேரம் தூங்கு” என்றார் நேசப்பா.

“இன்னும் கொஞ்சம் வேல பாக்கி இருக்கு. இது பத்தாது” என்றார் சங்கு புஷ்பம்.

“அவர் தான் போய்ட்டாரே” என்றார் நேசப்பா.

“நேசமணி பைல் தானே முடிஞ்சிருக்கு. இன்னும் நம்ம புஷ்பா பைலை ஓப்பனே பண்ணலையே. நீங்க போய் படுங்க. நா கொஞ்சம் நிதானமா யோசிக்கிறேன்.” என்றபடி சிரித்தார் சங்கு புஷ்பம்.

தலைமை வரை விஷயம் இன்று இரவுக்குள் போய்விடும் என கல்பனா தகவல் சொன்னார்.

கல்பனா வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு சங்கு புஷ்பத்தை சந்திப்பதாக சொன்னார்.

லக்ஷ்மி அனுப்பிய புஷ்பா பெயர்கள் கொண்ட லிஸ்டை எடுத்துக் பார்த்தார்.

வாக்காளர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், முகவரி மற்றும் பாலினம் இருந்தது. சங்கு புஷ்பத்திற்கு இது போதாது என்று தோன்றியது. ஆனால் இன்னும் என்ன தேவை என தெரியவில்லை.

சற்று யோசனைக்கு பிறகு இவர்களின் போன் நம்பர் கிடைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என நினைத்தார். அதை எப்படி சேகரிப்பது என யோசித்தார்.

அவர் சிஸ்டம் டேபிள் மீது இருந்த பஞ்சாமிர்த பாட்டில் அவர் கேள்விக்கான விடையை தந்தது.

வள்ளியப்பனுக்கு போன் போட்டார் சங்கு புஷ்பம்.

“சார் ஒரு ஹெல்ப் வேணும்” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.

“சொல்லுங்க மேடம்” என்றார் அவர்.

வள்ளியப்பனின் மகன் இவர்கள் ஏரியாவில் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். அவரிடம் சந்தாதாரர் முகரியும், போன் நம்பரும் இருக்கும். காலையில் நடந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லி முடித்தார் சங்கு புஷ்பம்.

வாயடைத்துப் போனார் வள்ளியப்பன். “நீங்க கவலைப்படாதீங்க மேடம். அரை மணி நேரத்தில் அவன் உங்களுக்கு அனுப்பிடுவான். ஆள், படை பலம் எல்லாம் அவங்களுக்கு மட்டும் தான் இருக்குமா என்ன? நம்மள மாதிரி சாதாரண ஜனங்களும் லேசு பட்டவங்க இல்லன்னு அவங்களுக்கு புரியணும்” என பொரிந்து தள்ளினார் வள்ளியப்பன்.

சற்று நேரத்தில் வள்ளியப்பன் மகன் தணிகையிடம் இருந்து எல்லா போன் நம்பர்களும் கிடைத்தது.

இப்போது சங்கு புஷ்பத்துக்கு ஐடியா வந்தது. அந்த லிஸ்ட்டை லக்ஷ்மிக்கு அனுப்பி விட்டு போன் போட்டார்.

“லக்ஷ்மி, லிஸ்ட்ல ஒவ்வொருத்தருக்கும் ஒரு தொகை போடு. புரியுதா? என்றார் சங்கு புஷ்பம்.

“பக்காவா போட்டு தரேன்” என்றார் லக்ஷ்மி.

புஷ்பா பெயர் காம்பினேஷனில் பதினெட்டு பேர் இருந்தார்கள் லிஸ்டில். 

முதலில் ரேண்டமாக ஆறு பேருக்கு விருப்பமில்லை என தொகையின் கீழே போட்டார்.

லிஸ்டில் இருந்து சங்கு புஷ்பத்தையும் கனக புஷ்பத்தையும் நீக்கி விட்டார்.

மீதி இருந்த பத்து பேருக்கு குறைந்தது ஒரு எல்லில் இருந்து நான்கு எல் வரை பதிவிட்டார்.

மொத்தம் கூட்டினால் இருபத்து மூன்று எல் வந்தது. நல்ல தொகையாக இருந்தது.

ஆனால் பத்து பேர் என்பது கொஞ்சம் அதிகமாகப்பட்டது.

அதிகபட்சம் ஐந்து பேர் வரை போன தேர்தலில் டம்மி வேட்பாளராக இருந்தார்கள்.

அதனால் ஐந்து பேர் வரை இருக்கட்டும் என முடிவுக்கு வந்தார்.

கடைசியாக அண்ணி புஷ்பாவைத் தவிர்த்து ஐந்து பெண் புஷ்பங்களுக்கு நல்ல தொகையைப் போட்டு முடித்தார். மொத்தம் பதினைந்து எல். பாரபட்சமின்றி

தலைக்கு மூணு எல். என்ஜாய் பண்ணுங்க என நினைத்துக் கொண்டு அம்மாவுக்கு அனுப்பினார்.

சங்கு புஷ்பத்திற்கு அந்த லிஸ்ட் திருப்தியாக இருந்தது.

போன் அடித்தது. குமரஜோதி. “மேடம் அந்த கவர்ல அவ்ளோ பணம் இருக்கு மேடம்” என்றார்.

“எல்லாம் உங்களுக்கு தான். சாயந்திரம் நானும் அவரும் வந்து உங்களை பாத்து நேர்ல பேசுறோம். நீங்க ரத்தினத்தோட கட்சி அட்டையை எனக்கு அனுப்புங்க” என்றார் சங்கு புஷ்பம்.

லக்ஷ்மி அனுப்பிய லிஸ்டையும் ரத்தினத்தின் கட்சி அட்டையையும் பிரிண்ட் எடுத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

தலை வலி ஆரம்பமானது சங்கு புஷ்பத்திற்கு. ஆனால் செய்ய வேண்டிய வேலை நிறைய இருந்தது.

கிச்சனுக்கு போய் காபி போட்டு கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தார். ரத்தினத்திடம் இருந்து வாங்கிய கன்சல்டேஷன் பணம் வேறு இருக்கிறது. அந்த பணத்தை சொந்த செலவுக்கு தொடக்கூடாது என தோன்றியது.

காபி போட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி குடித்தார். பக்கத்தில் அபார்ட்மெண்ட் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. வேலை முடித்து எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தார்கள். அப்போது பைக்கில் வந்த ஒருவர் அவர்களுக்கு பணம் கொடுப்பதை பார்த்தார். அந்த நாளின் சம்பளமாய் இருக்கும் என நினைத்தார். கூட்டமாக இருந்தவர்களுக்கு அவர் பணம் விநியோகம் செய்தது சங்கு புஷ்பத்திற்கு ஒரு அட்டகாசமான ஐடியாவை கொடுத்தது.

அவரின் தலைவலி பறந்து ரத்தினம் வீட்டு பக்கம் போனது.

வள்ளியப்பனுக்கு திரும்ப போன் போட்டார் சங்கு புஷ்பம்.

“சொல்லுங்க மேடம். லிஸ்ட் அனுப்பிட்டானா” என்றார்.

“தேங்க்ஸ் சார். வந்துடிச்சி. இன்னொரு ஹெல்ப் வேணும். என்கிட்ட எட்டாயிரம் ரூபா இருக்கு. அதுக்கு நூறு ரூபா கட்டா வேணும். உங்க கடைல இருக்குங்களா?” என்றார் சங்கு புஷ்பம்.

“இருக்கு மேடம். குமார் கிட்ட குடுத்தனுப்பவா” என்றார் வள்ளியப்பன்.

“சரிங்க சார். அப்டியே மொய் கவர் ஒரு கட்டு குடுத்து விடுங்க. அத எங்க லிஸ்ட் அமௌண்ட்ல சேத்து போட்டுடுங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“சரிங்க அனுப்புறேன்” என வைத்தார் வள்ளியப்பன்.

சங்கு புஷ்பம் பேசிக்கொண்டிருக்கும்போது எழுந்து வந்தார் நேசப்பா.

நடந்தவற்றை சொல்லி காபி கொடுத்தார் சங்கு புஷ்பம்.

“அம்மாவும் பொண்ணும் அட்டகாசமா வேலை செய்றீங்க” என புகழ்ந்து தள்ளினார் நேசப்பா.

சங்கு புஷ்பம் அன்றைய லோக்கல் செய்தித்தாளை புரட்டினார். அவர் தேடிய செய்தி அதில் இருந்தது.

இரவு ஏழு மணிக்கு ரத்தினம் கட்சியின் கூட்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில்.

நேசப்பாவை கடைக்கு அனுப்பி விட்டு இரவு உணவை தயாரிக்க ஆரம்பித்தார்.

குமார் வந்து நூறு ருபாய் தாள்களாக பணத்தையம், மொய் கவர்களையும் கொடுத்துவிட்டு போனார்.

சங்கு புஷ்பம் கிளை பெயரோடு சேர்த்து “ரத்தினமுத்துசேகர்” என டைப்படித்து பிரிண்ட் எடுத்தார்.

அதை கட் செய்து மொய் கவர்கள் மீது ஒட்டி ஒவ்வொரு கவரிலும் நூறு ருபாய் போட்டார்.

எட்டாயிரமும் மொய் கவர்களில் போட்டு இரண்டு பிரிவாக பிரித்து வைத்தார்.

பிறகு அதனுடன் லக்ஷ்மியின் லிஸ்டையும் ரத்தினத்தின் அடையாள அட்டை நகலையும் சற்று கசக்கி போட்டார்.

நேசப்பா ரத்தினம் கட்சியின் வேட்டி சேலையை பஜாரிலிருந்து வாங்கி வந்தார்.

“எல்லாம் ரெடிங்க” என காண்பித்தார் சங்கு புஷ்பம். மலைத்துப் போனார் நேசப்பா.

“என் கெரகம். இதையெல்லாம் கட்ட வேண்டியிருக்கு” என சலித்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

“பேன்சி டிரஸ் காம்படிஷனுக்கு போறதா நெனச்சு கட்டிக்கோ” என ஜாலி மூடில் சொன்னார் நேசப்பா.

“நக்கலா. காலைல நாக்கு வெளில தள்ளி போற மாதிரி இருந்தீங்க” என அவர் பங்குக்கு வாரினார் சங்கு புஷ்பம்.

பஞ்சாமிர்த பாட்டிலில் இருந்து கொஞ்சம் எடுத்து கல்பனாவுக்காக ஒரு டப்பாவில் எடுத்து வைத்தார்.

கரன்சி கவரை ஆளுக்கு பாதியாய் பிரித்துக் கொண்டார்கள். மிச்சமிருந்த பஞ்சாமிர்த பாட்டிலையும் கவர்களையும் இரண்டு துணிப் பைகளில் போட்டு வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.

நேராக வள்ளியப்பனின் கடைக்கு போய் தணிகையிடம் பேப்பர்களை கொடுத்து என்ன செய்ய வேண்டும் என சொன்னார்கள்.

இரவு ஏழு மணி. கட்சி கூட்டம் ஆரம்பமாக இன்னும் நேரம் இருந்தது. ஆண்கள் பக்கம் நேசப்பாவும், பெண்கள் பக்கம் சங்கு புஷ்பமும் கூட்டத்தில் கலந்தார்கள்.

சற்று நேரம் கழித்து அண்ணனும், அண்ணியும், ரத்தினமும் மேடையில் ஏறினார்கள். மூவரும் உற்சாகமாக இருந்தார்கள். நேசப்பா தணிக்கைக்கு மெசேஜ் செய்தார். “மணி கூண்டு பக்கத்தில் இருக்கிறேன் என்று”.

கடைசி லைனில் உட்கார்ந்திருந்தார். தணிகை கொஞ்ச நேரத்தில் வந்து நேசப்பா அருகில் நின்றார்.

பிறகு மேடையை சற்று நேரம் பார்த்து விட்டு பக்கத்தில் இருந்த கட்சிக்காரரிடம் பேப்பரை கொடுத்தார்.

“அண்ணே, அதோ மேடைல அண்ணன் பக்கத்துல ஒருத்தர் இருக்காருல்ல. அவர் இந்த பேப்பரை எங்க கடைல ஜெராக்ஸ் எடுத்தாரு. காச குடுத்துட்டு இதை விட்டுட்டு வந்துட்டாரு. அவர்கிட்ட குடுத்துடுங்கண்ணா. கடைல ஆள் இல்ல நா போறேன்” என பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி போனார்.

அவர் அந்த பேப்பரை படித்துப் பார்த்தார். பதினைந்து எல் ஐந்து புஷ்பங்களுக்கு இருந்தது. இன்னொரு பேப்பரில் ரத்தினத்தின் அடையாள அட்டை இருந்தது.

அவர் ஏதோ யோசித்தவராக நிற்க நேசப்பா அவரிடம் இருந்து அந்த பேப்பரை வாங்கி சற்று சத்தமாக படித்தார்.

“நம்ம ரத்தினம் தம்பி தான் அண்ணிக்கு எதிரா அஞ்சு புஸ்பாவை நிறுத்துது போல” என கொளுத்திப் போட்டார். முகம் சுண்டிப் போனார் கட்சிக்காரர்.

“மொத்தம் பதினைந்து எல். ஒவ்வொரு புஸ்பாக்கும் பத்தாயிரம் குடுத்துட்டு மிச்சத்தை இவரு எடுத்துக்குவாரு” என விளக்க உரையை கொடுத்தார்.

“அடப்பாவி, சொந்த கட்சிக்கே துரோகம் பண்ணுறானே” என கோபமானார் அவர்.

பிறகு “அவருக்கு ஏது அவ்வளவு பணம்?” என சந்தேகமாய் கேட்டார்.

அவர் காதருகே போய் “இவரு சித்தா டாக்டரு ஆளு. அவரு தான் இவருக்கு பேங்கர். அண்ணன் கூடவே இருந்து கழுத்தறுக்குறான்” என டீடைலை சொன்னார்.

பேயறைந்தார் போல ஆனார் அவர். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆண்கள் பகுதியில் பெரும்பாலும் எல்லாருக்கும் அரசால் புரசலாக போய் சேர்ந்தது.

இந்த பக்கம் சங்கு புஷ்பம் உற்சாகமாக சக பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

நேசப்பா அந்த பக்கம் போய் போனில் இந்த கதையை யாரிடமோ விளக்கினார்.

அதை கேட்ட இரு பெண்கள் பேச சங்கு புஷ்பம் கூட சேர்ந்து கொண்டார்.

“ஆமா, ரத்தினம் டாக்டரோட ஸ்லீப்பர் செல்னு மகளிர் அணி தலைவி பேசிக்கிறாங்க. டாக்டரு சம்சாரமும் தலைவியும் ஒரே ஜிம்முக்கு தான் போறாங்க. அப்போ அந்த அம்மாகிட்ட இவரு போய் பேசிட்டு வந்திருக்காரு. புஷ்பா அண்ணிக்கு எதிரா அஞ்சு பேர ரெடி பண்றாரு. ஆனா இங்க நல்லவரு மாதிரி அவங்க கூட மேடைல உக்காந்திருக்காரு” என டிவி சேனல் டிபேட் போல பேசி முடித்தார்.

சொல்லவே வேண்டாம். பெண்கள் பக்கம் அதி விரைவாக அந்த செய்தி பரவியது.

நேசப்பா அவர் துணி பையை வைத்து விட்டு கிளம்பினார்.

கேட்பாரற்று கிடந்த பையை எடுத்த ஒருவர் அதிலிருந்த கவர்களை பார்த்து யோசித்தார்.

கவரை வாங்கிய சங்கு புஷ்பம், “ரத்தினம் தம்பி தான் எல்லாருக்கும் நூறு ரூபா ஓட்டுக்கு இப்பயே காசு குடுக்குது” என சொன்னார்.

பஞ்சாமிர்த டப்பாவையும் ஸ்பூன்களையும் பக்கத்தில் இருந்த பெண்கள் டீமிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார்.

இரண்டே நிமிடத்தில் விநியோகம் முடிய தூரத்தில் இருந்து வீடியோ எடுத்தார் லோக்கல் பேப்பர் நிருபர்.

இதே போன்று சற்று தள்ளி சங்கு புஷ்பம் பையை வைத்து விட்டு நகர கூட்டம் பரபரப்பாக இருந்தது.

Tamil novel – OTP – part 18/20

A senior man is thinking about the next steps

ரத்தினத்திடம் ஒரு ப்ரவுன் கலர் ஆபீஸ் கவரை நீட்டினார் சங்கு புஷ்பம்.

“இதுல ஒரு எல் போட்டு ரெடியா வைங்க. பார்ட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்” என்றார்.

இந்த அம்மா எந்த வேல செஞ்சாலும் நீட்டா டைட்டா செய்யுது என சங்கு புஷ்பத்தின் விசிறியனார் ரத்தினம்.

கொஞ்ச நேரத்தில் டோர் பெல் அடித்தது. குமரஜோதி முகம் முழுதும் பிரகாசமாய் தோளில் ஒரு தண்ணீர் கேனோடு வந்தார்.

ரத்தினம் கதவு பக்கம் பார்க்க, சேரின் கைப்பிடியிலிருந்த கையை மேலே உயர்த்தி சங்கு புஷ்பத்திற்கு தம்ஸ் அப் காட்டினார் நேசப்பா.

குமரஜோதி தண்ணீர் கேனோடு வந்ததில் இருவருக்கும் பரம சந்தோஷம்.

“இவரு தான் நேசமணி வீட்டுக்காரர்” என அறிமுகப்படுத்தினார் சங்கு புஷ்பம்.

“அப்போ நேசமணி லேடியா? என குழப்பமாய் கேட்டார் ரத்தினம்.

“ஆமா சார். அவங்க வீட்ல அவங்க லேடி. எங்க வீட்ல நா லேடி” என நக்கலாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

வந்ததிலிருந்து அவர் தலை எத்தனை முறை சுற்றியது என்று அவருக்கே தெரியாது.

“சார், நேசமணி இருபாலர் பெயர்” என விளக்கினார் நேசப்பா.

எல்லா வில்லங்கமும் ஒரே சுருதியில் பாட்டு பாடியது.

லேடி கேண்டிடேட்டு எப்படி சரிப்படும் டாக்டருக்கு எதிராக என யோசித்தார் ரத்தினம்.

“எல்லாருக்கும் இது தெரியாது சார். எத்தன பேரு கேண்டிடேட்ட நேர்ல பாக்க போறாங்க. போஸ்டரில் வெறும் நேசமணின்னு தான இருக்கும்.” என ரத்தினத்தின் சந்தேகத்தில் சிமெண்டு பூசினார் சங்கு புஷ்பம்.

சங்கு புஷ்பம் ஒரு துண்டு சீட்டை குமரஜோதியிடம் கொடுத்தார்.

“சார் இவரு அந்த அம்மா டாக்குமெண்ட என் போனுக்கு அனுப்புவார். நீங்க அத ப்ரூப்பா வச்சிக்கலாம்” என ரத்தினத்திடம் சொன்னார் சங்கு புஷ்பம்.

குமரஜோதி டாக்குமெண்டை அனுப்பினார். சங்கு புஷ்பம் அந்த அடையாள அட்டையை பிரிண்ட் எடுத்து ரத்தினத்திடம் காண்பித்தார். ரத்தினம் சரி பார்த்த பிறகு “சார் இதை நா பைல் பண்ணி வெக்குறேன்” என திரும்ப பெற்றுக் கொண்டார்.

குமரஜோதி சங்கு புஷ்பம் கொடுத்த செய்தியை ரத்தினத்திற்கு அனுப்பினார்.

“என் மனைவிக்கு மகளிர் திட்டத்தில் நலத்தொகை பெற்றுக் கொடுத்திட தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் குமரஜோதி”.

“இவரு என்னங்க நல திட்டம்னு போட்டிருக்காரு” என்றார் ரத்தினம்.

“சார், அது கோட் வேர்ட்.  என் மனைவியை டம்மி வேட்பாளராக களம் காண ஒத்துக்கொள்கிறேன். அப்படின்னா அனுப்ப முடியும்?” என உரைத்தார் சங்கு புஷ்பம்.

“அவருக்கு ஒரு பதில் அனுப்பிடுங்க” என அடுத்த கட்டளையை போட்டார்.

நமக்கு இது தொழில்னா, இவங்களுக்கு இது மூச்சு காத்தா இருக்கே. இந்த அம்மா எல்லா வேலையையும் சிஸ்டமேட்டிக்கா செய்யுது என வியந்தார் ரத்தினம்.

ஆட்டோபைலட் மோடுக்கு போன ரத்தினம் குமரஜோதிக்கு சரி என பதில் போட்டார்.

நேசப்பாவும் சங்கு புஷ்பமும் ரத்தினம் என்ன மோடில் இருக்கிறார் என அறிந்து கொண்டார்கள்.

“சார் இப்போ கேண்டிடேட்டு டாக்குமெண்ட் உங்க கைக்கு வந்துருச்சி. அவங்க நீங்க சொன்ன அமௌண்ட்டுக்கு ஒத்துக்குறாங்க. மேற்கொண்டு வேல நடக்கணும்னா இப்போ நீங்க அட்வான்ஸ் தரணும் இவருக்கு.

அப்புறம் உங்க டாக்குமெண்ட் ஒண்ணு அவருக்கு ப்ரூப்பா தரணும்.” என அவரை வழி நடத்தினார் சங்கு புஷ்பம்.

“நா அடையாள அட்டை எதுவும் எடுத்திட்டு வரலீங்க” என்றார் ரத்தினம்.

“கட்சி உறுப்பினர் அட்டை எப்பவும் வெச்சு இருப்பீங்கள்ல. அது கூட போதும்” என்றார் நேசப்பா.

அவர் சொன்ன வழியில் அப்படியே நடந்தார் ரத்தினம். ரத்தினம் உறுப்பினர் அட்டையை காட்ட குமரஜோதி அதை போட்டோ எடுத்துக் கொண்டார். கவர் கை மாறியது. காரிடாரில் அல்ல, சிசிடிவி இல்லாத நடு ஹாலில்!

“தேங்க்ஸ் சார்” என வாங்கிக்கொண்டார் குமரஜோதி. “நெக்ஸ்ட் என்ன பண்ணனும்னு மேடம் கிட்ட சொல்லிடுங்க” என குஷியாக கிளம்பினார்.

குமரஜோதியை பார்சல் செய்த கையோடு திரும்ப ரத்தினத்திற்கு அடுத்த ரவுண்டை ஆரம்பித்தார்கள்.

நேசப்பா அஞ்சாயிரம் ருபாய் கோப்பையை இன்னும் கொஞ்சம் நிரப்பினார்.

“சார், எங்களுக்கு லஞ்ச் டைம். சீக்கிரம் முடிக்கலாம்” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.

ஒரு பார்ட்டி பிக்ஸ் ஆன மிதப்பில் இருந்தவருக்கு சரக்கும் கொஞ்சம் மிதப்பை ஏற்றியது. சங்கு புஷ்பம் சரியானபடி ஒரு டீலிங்கை நிறைவேற்றிக் காட்டியதால் அவர் சொல் பேச்சை மறு பேச்சின்றி கேட்டார் ரத்தினம்.

சங்கு புஷ்பத்திற்கு இப்போது தான் மிக முக்கியமான கட்டம். போனை எடுத்து பார்த்தார்.

பிறகு ஒரு துண்டு சீட்டில் தகவல்களை எழுதி ரத்தினத்திடம் கொடுத்தார்.

“சார், இது இவரோட நம்பர். உங்க அண்ணன் கிட்ட சொல்லி இவரை ஆசீர்வாதம் பண்ணி ஒரு மெசேஜ் அனுப்ப சொல்லுங்க. அத நாங்க அவரோட கன்பர்மேஷன் மெசேஜா எடுத்துக்குறோம் என்றார்” சங்கு புஷ்பம்.

“என்ன மேடம், சார் தோக்க போறார். அவருக்கு எதுக்கு வாழ்த்து சொல்லணும்” என மூளையை கசக்கி பிழிந்து ஒரு உருப்படியான கேள்வியை கேட்டார் ரத்தினம்.

“கரெக்ட் சார். நீங்க ஒடம்பு முடியாதவங்க யாரையாவது போய் ஆஸ்பத்திரில பாத்தா என்ன சொல்லுவீங்க? சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வந்து உங்க பேரன் பேத்தி கல்யாணத்த பார்ப்பீங்கனு சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுவீங்களா, இல்ல நாளைக்கே போய் சேந்துடுவீங்க. இன்னைக்குள்ள இந்த ஆப்பிளை சாப்ட்ருங்கன்னு சொல்லுவீங்களா? என நறுக்கென்று கேட்டார் சங்கு புஷ்பம்.

“அண்ணே, ஒரு பார்ட்டி பிக்ஸ் ஆகிட்டு. அட்வான்ஸ் வாங்கிட்டு டாக்குமெண்ட் காபி கொடுத்துட்டாங்க.

இன்னொரு பார்ட்டியும் ஓகே சொல்றாங்க. நீங்க ஆசீர்வாதம் பண்ணி ஒரு மெசேஜ் அனுப்பிட்டேங்கன்னா டீல் முடிஞ்சுடும்ணே” என உற்சாகமாய் சொன்னார் ரத்தினம்.

“நல்லது ரத்தினம். போன அவங்ககிட்ட குடு. பேசிடறேன்” என்றார் அண்ணன்.

“இல்லண்ணே, அவங்க மெசேஜா அனுப்ப சொல்றாங்க. சும்மா உங்க சைட்லேர்ந்து ஒரு கன்பர்மேஷன்க்கு. மத்தபடி தங்கமான பார்ட்டின்னே” என அவரை சரி காட்டினார் ரத்தினம்.

சங்கு புஷ்பம் அவர் போனையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அண்ணனுக்கு ஒரு சிக்கல். போன் அவ்வளவாய் உபயோகிப்பதில்லை எழுத. பேசுவதோடு சரி. அதை பெரிதாய் நோண்டுவதில் ஆர்வம் இல்லாதவர். இவன் வேற மெசேஜ் அனுப்ப சொல்றான் என்ன பண்றது என யோசித்தார்.

வெளியே காத்திருந்த ஆட்களை எட்டிப் பார்த்தார். ஐடி விங்கை சேர்ந்த ஒருவர் இருந்தார்.

“தம்பி இங்க வாப்பா” என கூப்பிட்டு “இவரு போன்ல ஏதோ வாழ்த்து அனுப்ப சொல்றாரு. என்னனு கேட்டு அனுப்பிடு” என்றார்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் துண்டு சீட்டில் எழுதியிருந்த வாழ்த்து அட்சர சுத்தம் பிசகாமல் அண்ணண் போனிலிருந்து போய் சேர்ந்தது சித்தா டாக்டர் நேசமணிக்கு.

“அருமை நண்பர் நேசமணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் இந்த தேர்தலில் அமோக வெற்றியடைய என்னுடைய ஆசீர்வாதங்கள். என் அன்புத் தம்பி இரத்தினமுத்து சேகர் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வார். என்றும் மாறா நட்புடன் உங்கள் அண்ணண்”.

“அண்ணண் வாழ்த்து அனுப்புறாரு மேடம்” என்றார் ரத்தினம் லைனில் இருந்தபடியே.

சங்கு புஷ்பத்திற்கும் நேசப்பாவிற்கும் மூச்சு நிற்பது போல இருந்தது.

“அனுப்பிட்டாருங்க. இப்ப உங்களுக்கு ஓகே வா” என சிரித்தார் ரத்தினம்.

“சார் இன்னொரு லாஸ்ட் ஸ்டெப் பண்ணிடுங்க” என சொன்னார் சங்கு புஷ்பம்.

நேசப்பா ரத்தினம் முன் இருந்த கோப்பையை நிரப்ப ஆரம்பித்தார். ரத்தினம் அதை காதலாய் பார்க்கும் பொது இன்னொரு துண்டு சீட்டை கொடுத்தார் சங்கு புஷ்பம்.

“இவரு எங்க லாயர். எங்க எல்லா டீலிங்க்லயும் அவரு இருப்பாரு. இப்போ அண்ணன் சார்பா நீங்க டீல் பண்றீங்க. அதனால இவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பிடுங்க” என்றார் சங்கு புஷ்பம்.

அவரின் ஒரு கையில் அப்போது கோப்பை இருந்தது. லாஸ்ட் ஓவர் வேறு. ஆல்ரெடி மேட்ச ஜெயிச்சாச்சு. இன்னும் ஏன் கவலைப்படணும் என்று நினைத்தார் ரத்தினம்.

“இந்தாங்க மேடம். நீங்களே அனுப்பிடுங்க” என அவர் போனை கொடுத்தார் ரத்தினம்.

நேசப்பா கோபால் சாருக்கு மனதார நன்றி சொன்னார். சங்கு புஷ்பம் சுறுசுறுப்பாக எழுத ஆரம்பித்தார்.

“அன்பு அண்ணன் சார்பாக உங்கள் கட்சிக்காக நங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். சகோதரர் நேசமணியின் வார்டு கவுன்சிலர் தேர்தல் வெற்றிக்காக நான் மற்றும் அண்ணண் எல்லா உதவிகளையும் செய்து தருவோம் என மனதார உறுதி மொழிகிறேன். எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதங்கள் அவருக்கு கிடைக்க மனதார பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு ரத்தினமுத்து சேகர்.

அடுத்த நொடி அது சித்தா டாக்டர் நேசமணியின் இரண்டாவது போனுக்கு போய் சேர்ந்தது. ஆனால் ஒரு டிக்கிலேயே இருந்தது.

அப்பாடா என்றிருந்தது சங்கு புஷ்பத்திற்க்கு.

“இந்தாங்க சார். லாயருக்கு அனுப்பிட்டேன்” என போனை திரும்ப கொடுத்தார் சங்கு புஷ்பம்.

“மேடம் ரொம்ப பாஸ்ட்டா வேல பாக்குறாங்க சார்” என மனம் விட்டு பாராட்டினார் ரத்தினம்.

இதற்கு மேல் இவர் இங்கே தேவையில்லை என நினைத்தார் சங்கு புஷ்பம்.

“சரிங்க சார். நீங்க நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க” என சொல்லி ரத்தினத்தை வழியனுப்பி வைத்தனர் இருவரும்.

Tamil novel – OTP – Part 17/20

A senior man is thinking about a tricky situation

ரத்தினம் அண்ணனை கரைத்து முடிக்கும் போது, சங்கு புஷ்பமும் நேசப்பாவின் நிலையை சுருக்கமாக குமரஜோதிக்கு செய்தியாய் அனுப்பினார்.

பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த அவர் சங்கு புஷ்பம் சொல்வதை செய்வதாக ஒத்துக்கொண்டார்.

நன்றாக சாய்ந்து ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தார் ரத்தினம். “சார் அண்ணன் மேற்கொண்டு ஆக வேண்டியதை பாக்க சொல்லிட்டார். ரெண்டு எல் பிக்ஸ் பண்ண சொன்னாரு” என ஒரு எல்லை ஆட்டையைப் போட்டார்.

“சரிங்க பேசி பாக்குறேன்” என போனை எடுத்தார் சங்கு புஷ்பம். ஒரு பேப்பரில் “சித்தா டாக்டர் நேசமணி நம்பர்” என கொட்டையாக எழுதி கீழே நம்பரை எழுதினார்.

“நேஸ், இந்த ஸ்கிரீன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க” என அழைப்பு விடுத்தார்.

நேசப்பா எழுந்து போய் திரையை சரி செய்தார். இது ரத்தினம் காதால் கேட்டு கண்ணால் பார்த்தது.

நேசப்பா எழுந்தவுடன் சற்றே கண்ணைக் காட்டி பேப்பரை மேஜையில் நகர்த்தி வைத்தார் சங்கு புஷ்பம். திரையை சரி செய்து திரும்பும் போது பேப்பரை கவனித்தவர் அடுத்த ஓவரை வீச ஆரம்பித்தார்.

“நம்ம சித்தா டாக்டரு உங்களுக்கு நல்ல பழக்கமா? என கொக்கியைப் போட்டார் நேசப்பா.

என் வானத்தில் வரும் வானவில்லில் ஏழு நிறமில்லை, எழுபது நிறம் என்ற ரேஞ்சில் மிதப்பமாக இருந்தார் ரத்தினம்.

“இல்லீங்க. நாங்க கட்சிக்கு ரொம்ப விசுவாசமானவங்க. மாற்று கட்சிக்காரங்க கூட தொடர்பு வச்சிக்க மாட்டோம்” என பெருமையாக சொன்னார்.

“நாங்கண்ணா யாரு” என்றார் நேசப்பா.

“நானு, அண்ணன் அப்புறம் கொஞ்சம் முக்கியஸ்தங்க எல்லாருந்தான்” என அவர் அந்தஸ்த்தை அவரே கூட்டிக்கொண்டார்.

“இல்ல பொது வாழ்க்கைல இருக்கீங்க, நாலு நல்லது கெட்டதுல சந்திப்பீங்க. அதான் நேர்ல இல்ல போன்ல பேசிக்குவீங்களா”? என நுணுக்கமான ஒரு கேள்வியை போட்டார்.

சங்கு புஷ்பம் காத்திருந்தது இந்த கேள்விக்குத் தான்.

“இல்லேங்க. போன் தொடர்பு எதுவும் கிடையாதுங்க. நேர்ல பாத்தாலும் வணக்கத்தோடு முடிச்சுக்குவோம். போன்ல நாம ஒண்ணு சொல்ல போய் அத ரெக்கார்டு பண்ணி திரிச்சி போடுறானுங்க மொள்ளமாரி பசங்க. அதனால நம்பரெல்லாம் அநாவசியமா வாங்குறதும் இல்ல குடுக்குறதும் இல்ல” என ரத்தினம் விஸ்க்கி போட்டு டீ ஆற்றினார் நேசப்பாவிடம்.

சங்கு புஷ்பம் காதில் தேனாய் பாய்ந்தது அவர் பதில். சரி கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என தைரியம் வந்தது.

கோமதியின் மெசேஜ் போனில் வர உன்னிப்பாக பார்த்தார் சங்குபுஷ்பம்.

ரத்தினம் கத்தையாக பணத்தை எடுத்து எண்ணி அதில் கொஞ்சம் சங்குபுஷ்பத்திடம் கொடுத்து ஏதோ சொல்வது தெளிவாக இருந்தது. நல்லது என எண்ணிக்கொண்டு கோமதிக்கு ஒரு நன்றியை அனுப்பினார்.

தோராயமாக அவர் ட்ரேஷரு ட்ரோவில் எவ்வளவு இருக்கும் என அந்த வீடியோவிலிருந்து தெரிந்தது.

குமரஜோதிக்கு அவசர செய்தி அனுப்பினார் சங்கு புஷ்பம்.

“நலத்திட்டம் காத்திருக்கிறது. அடையாள அட்டை நகலுடன் வரவும்” என்று.

குமரஜோதிக்கு பரவசம் தாங்கவில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு விரைவாக கிளம்பினார்.

“சார் அவங்க ரெண்டு எல்லுக்கு ஓகே சொல்லிட்டாங்க. ஆனா ஒரு கண்டிஷன். ஒரு எல் இப்பவே தர சொல்றாங்க. ஒரு டாக்குமெண்ட் காப்பி உங்க கிட்ட இப்ப தருவாங்க” என கடையை விரித்தார் சங்கு புஷ்பம்.

“இப்போ அவ்ளோ இல்லீங்களே, ஒரு ரெண்டு நாள் கழிச்சு தரவா” என தவிர்க்கப் பார்த்தார் ரத்தினம்.

“சார் அது நமக்கு ரொம்ப ரிஸ்க்கு. அவங்களுக்கு இப்ப விஷயம் தெரிஞ்சுருச்சு. நீங்க ஒடனே தரேல்லண்ணே நேரா சித்தா டாக்டரு கிட்ட போய் நிப்பாங்க. அப்புறம் இந்த டீலுக்கு நாங்க பொறுப்பு இல்ல. அவர் இந்த பார்ட்டி எலெக்சன்ல நிக்காம இருக்க கூட குடுக்குறேனு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என ரத்தினத்தின் அடி வயிற்றில் ஏற்கெனவே குத்திய இடத்திற்குப் பக்கத்தில் கொஞ்சம் புளியை கரைத்தார் சங்கு புஷ்பம்.

ஜாடை மாடையாய் இவர்களும் தங்களின் கட்சி தாவும் எண்ணத்தையும், ரத்தினத்திற்க்கு அது உண்டாக்கும் அபாயத்தையம் அவர் மூளையில் திணித்தார்கள்.

செத்தாண்டா சேகரு என நிமிர்ந்து உட்கார்ந்தார் நேசமணி. மனைவியிடம் இருந்து குச்சியை இவர் வாங்கிக்கொண்டு ரிலேவில் ஓட ஆரம்பித்தார்.

இப்படி ஒரு சூழ்நிலை வரும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ரத்தினம்.

“சார் எல்லாரும் எங்கள மாதிரி இருக்க மாட்டாங்க. நாங்க டீல் முடியுற வரை ஒரு பைசா அட்வான்ஸ் வாங்க மாட்டோம். ஆனா மத்தவங்க அப்படி கிடையாது. இது ஒரு சிக்கலான விஷயம். காதும் காதும் வெச்ச மாதிரி முடிக்கணும். ரொம்ப இழுக்கக் கூடாது. விஷயம் சித்தா டாக்டருக்கு தெரிஞ்ச நெலமை நம்ம கை மீறி போய்டும்” சங்கு கரைத்த புளியில் சற்று தூக்கலாக காரத்தை கொட்டினார் நேசப்பா.

குச்சி இப்போது சங்கு புஷ்பம் கையில். “சார் இதெல்லாம் ஆரம்பிச்சா ஸ்லோ பண்ண கூடாது. எங்க டீல்ல பாதி அமௌண்ட்டுக்கு படிஞ்சிருக்கு.அதுவே உங்களுக்கு லக்கு. மார்க்கெட் இப்போ ரொம்ப ஸ்பீடு சார். சித்தாக்கு ஒரு போன அவன் போட்டா நம்ம உழைப்பெல்லாம் வேஸ்ட்டு சார்” என்றார்.

“நீங்க வேற அண்ணண் கிட்ட ரெண்டு பேர பிக்ஸ் பண்ணிட்டேன்னு சொல்லிட்டீங்க. அவரும் அமௌண்ட்டுக்கு சரினு சொல்லிட்டாரு. இப்ப நீங்க வெறும் கையோட போய் டீல் முடியலன்னு சொல்ல முடியுமா?” என இன்னொரு பாயிண்ட்டை போட்டார் நேசப்பா.

ரத்தினத்திற்கு காதில் விழுந்த சொற்களில் பாதிதான் மூளையை எட்டியிருந்தது.

மீதி காற்றில் கரைந்து கோபால் சார் வீட்டு பக்கம் போனது. திடீரென நடந்த இந்த நிகழ்வுகளை கோர்வையாக அவரால் உள் வாங்க இயலவில்லை.

“அமௌண்ட்டு கொஞ்சம் ஜாஸ்தி சார் அட்வான்ஸுக்கு. ஒரு பத்தாயிரம்னா பரவால்ல” என சொன்னார் ரத்தினம்.

“சார் அவங்க இங்கேருந்து டாக்டரு கிட்ட போனா அவரு அஞ்சு லட்சத்தை தூக்கி லட்டு மாறி குடுத்து அவங்கள ஆப் பண்ணிடுவாரு” என மீட்டரை ஏற்றினார் நேசப்பா.

யோசித்தவரை ரத்தினத்திற்கு ஒரு எல் உடனே கொடுப்பது தான் புத்திசாலித்தனம் என தோன்றியது.

“சரி சார். ஆனா நா குடுக்குறதுக்கு என்ன ப்ரூப்பு” என விளக்கமாய் கேட்டார் ரத்தினம்.

“ஒரு ப்ரூப்பும் கெடயாது. எதனா இருந்தா பின்னாடி வில்லங்கமாயிடும்” என காட்டமாக சொன்னார் சங்கு புஷ்பம்.

இந்த அம்மா பல ஜென்மமா இந்த தொழில்ல இருக்கும் போல என மலைத்துப் போனார் ரத்தினம்.

“நம்பிக்கை தான் இந்த மாதிரி டீலிங்க்ல முக்கியம். நாளைக்கு உங்கள பகச்சிக்கிட்டு இந்த ஏரியால அவங்களால நடமாட முடியுமா?” என லேசாக ரத்தினத்தின் ஈகோவை முத்தமிட்டார் நேசப்பா.

அந்த முத்தம் ரத்தினத்தை கிறக்கமாக்கியது. “அது எப்படி சார் நடமாட முடியும்? அண்ணன் நல்லவங்களுக்கு நல்லவர். கெட்டவங்களுக்கு கேடு கெட்டவர்” என பன்ச் டயலாக்கை போட்டார் ரத்தினம்.

நாம நல்லவங்களா இல்ல கெட்டவங்களா என யோசித்தார் நேசப்பா.

“சார் உங்களுக்கு சரினு தோணுச்சுன்னா குடுங்க, இல்லேன்னா வேணாம்” என பந்தை அவர் பக்கமே போட்டார் சங்கு புஷ்பம்.

நாலு ஆங்கிள்ல நல்லா யோசித்து கொடுக்கலாம் என முடிவெடுத்தார் ரத்தினம்.

அவரே போய் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான ரெண்டாயிரத்தையும் கொடுத்தார் சங்கு புஷ்பத்திடம்.

“மூணு பத்து வரை உங்க டைம்” என்றார் சங்கு புஷ்பம்.