அன்று வியாழக்கிழமை. காலையில் எழுந்து காபி குடித்துக்கொண்டே, பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்குபுஷ்பம். நேசப்பா விடியற்காலையில் எழுந்து விடுவார். வெயிலுக்கு முன் கிச்சன் வேலைகளை முடிப்பது அவர்கள் வழக்கம். ஒன்பது மணிக்குள் சமைத்து முடித்து, பிறகு அன்றாட வேலைகளை கவனிப்பார்கள்.
உள்ளே மிக்சி சத்தம் கேட்டது. காலை டிபன் நேசப்பா ரெடி செய்துவிடுவார். கூடவே மதிய உணவுக்கான எல்லா காய்களையும் நறுக்கி வைத்து விடுவார். அரிசியும் பருப்பும் ஊற வைத்து, இஞ்சி பூண்டு உரித்து, கறிவேப்பிலையையும் தேவையான அளவு அலசி வைத்து விடுவார்.
சங்கு புஷ்பத்திற்கு காலையில் எழுவது சற்று சிரமமான காரியம். கால் நரம்பு வலியால் பல நாட்கள் இரவு சரியான தூக்கம் இருக்காது. விடியற்காலையில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விடுவார். எழுந்ததும் முழு மூச்சாக எந்த வேலையும் செய்ய முடியாது.
எட்டு மணிக்கு பிறகு தான் அவரால் சற்று நடக்க முடியும். எனவே நேசப்பா எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்து விடுவார். சங்குபுஷ்பம் கிச்சன் உள்ளே போனால் அரை மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்து விடுவார்.
மணி ஏழேமுக்கால் ஆனது. போன் அடித்தது. ஜிதேஸ்வரியின் அழைப்பு.
“நைட் ப்ளயிட் இங்க. காலைல நாலு மணிக்கு நம்ம ஏர்போர்ட்டுக்கு வந்துடுவேன். நா பாண்டி போகல. வீட்டுக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என தயங்கியபடி சொன்னாள் ஜிதேஸ்வரி.
“வா வா” என சொன்னார் சங்குபுஷ்பம்.
“அப்புறம் ஒர்க்ஷாப்பு எப்படி போச்சு?” என விசாரித்தார். ஐந்து நிமிடம் பேசி முடித்து பிறகு கிச்சன் சேரில் போய் உட்கார்ந்தார். நேசப்பா போனில் பாட்டு கேட்டபடியே வேலையில் மும்முரமாய் இருந்தார்.
“ஏங்க நாளைக்கு காலைல ஜித்து வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரெண்டு மூணு நாள் இங்க இருந்துட்டு அப்புறம் பாண்டிக்கு போறாளாம்” என சொன்னார் சங்குபுஷ்பம்.
“காலைல எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வருது? நா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் நேசப்பா.
“நாலு மணிக்கு வண்டி லேண்ட் ஆகுமாம்.வெளில வர நாலரை ஆகும்னு சொன்னா. உங்களை அனுப்புறேன்னு சொன்னேன். வேணாம், நானே டாக்சி புடிச்சி வரேன்னு சொல்றா” என்றார் சங்குபுஷ்பம்.
“அது அப்படி தான் சொல்லும். அதுக்காக நாம போகாம இருக்க முடியுமா? நா போறேன்” என்றார் நேசப்பா.
“சரிங்க, நீங்க போயிட்டு வாங்க. குமார காலைல மூணு மணிக்கு வர சொல்லிடுங்க. விடியற்காலைல நீங்க ஓட்ட வேணாம்” என்றார் சங்குபுஷ்பம்.
டிபன் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டு ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்கள்.
லக்ஷ்மியின் போன் வந்தது. “மா, நா நாளைக்கு நைட்டு வீட்டுக்கு வரேன். ஜித்து பேசுனா காலைல. பசங்கள கூட்டிட்டு என்ன அங்க வர சொல்லிட்டா. நா சாயந்திரம் காலேஜ் முடிச்சிட்டு அப்டியே பசங்கள கூட்டிட்டு ஒரு ஆறு மணிக்கு கெளம்பிடுவேன்” என்றாள்.
“சரி, காமாட்சி ஆன்ட்டி கிட்ட சொல்லி பசங்க பேக ரெடி பண்ண சொல்லிட்டியா?” என்றார் சங்கு புஷ்பம். காமாட்சி ஜிதேஸ்வரியின் மாமியார். நல்ல குணமான பெண்மணி.
வரும் வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் பொது விடுமுறை. அரிதாக நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கிறது.
லக்ஷ்மி சங்குபுஷ்பத்தின் இளைய மகள். பாண்டியில் கல்லூரியில் ப்ரொபஸராக இருப்பவள். ஜித்தும் லக்ஷ்மியும் தோழிகள். சற்று ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்.
ஜிதேஸ்வரி சங்குபுஷ்பம் பெறாத மகள். அவருடன் நர்ஸாக பணிபுரிந்த கற்பகம் சிஸ்டரின் மகள். இருவரும் பணிக்காலம் முழுவதும் ஓரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.
ஜிதேஸ்வரி பிறந்ததும் அவரை முதலில் கையில் ஏந்தியவர் சங்குபுஷ்பம். ஜிதேஸ்வரி மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பெரும்பாலான குழந்தைகளை முதலில் அணைத்துக் கொண்டவர் சங்குபுஷ்பம். யார் தெரிந்தவர்கள் பிரசவத்திற்காக சேர்ந்தாலும், அவர் ஷிப்ட் முடிந்த பின்பும் காத்திருந்து, தாயையும் சேயையும் நல்லபடியாக பார்த்த பிறகு தான் வீட்டுக்குப் போவார்.
கற்பகம் சில வருடம் முன்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரின் இறுதி நாட்களில் நேரில் போய் பார்க்க முடியாத சூழல்.
கற்பகத்திற்கு அவரின் உடல் நிலை புரிந்து விட்டது. அவர் கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஒரே மகன் ஒரிசாவில் இரும்பு கம்பெனியில் வேலை செய்கிறான்.
ஜிதேஸ்வரி திருமணமாகி பாண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.
கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சங்கு புஷ்பத்திற்கு போன் பேசினார். நேசப்பாவும், அவரும் அந்த தம்பதிகளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.
நேசப்பா சற்று தைரியசாலி, ஆனால் மென்மையான மனம் கொண்டவர்.
சங்கு புஷ்பம் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் சர்வ ஜாக்கிரதையாக பயணித்து அவர்களுக்கு தேவையான உணவையும் புத்தகங்களையும் கோவில் ப்ரசாதங்களையும் மருத்துவமனை வாசலில் கொண்டு சேர்த்து விடுவார்.
சங்குபுஷ்பம் வார்டு பாய் ஆனந்திடம் சொல்லி வைத்து விடுவார்.
“ஏன் மேடம் சார் வெளில வரார்? இங்க நெலமை ரொம்ப மோசமா இருக்கு. அவங்களுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றார் ஆனந்த்.
கூட்டத்தில் இருந்து கிளம்பியவர்கள் குமரஜோதியை வள்ளியப்பன் கடையருகே வர சொன்னார்கள்.
அங்கு இருந்த பஸ் ஸ்டாப் காலியாக இருந்தது. அவரிடம் விவரம் சொல்லி அந்த பணத்தை அவரையே வைத்துக் கொள்ள சொன்னார்கள். அவரின் உதவிக்கு நன்றி சொல்லி யார் வந்து கேட்டாலும் அவர் எதுவும் தரவில்லை. நான் தண்ணீர் கேன் போட்டுவிட்டு வந்து விட்டேன் என சொல்லுமாறு அறிவுறுத்தி கிளம்பினார்கள்.
வீட்டுக்கு போய் உடை மாற்றி செல்லகுமாருக்கு நன்றி சொல்லி இருவரும் போய் பார்க்கில் உட்கார்ந்தார்கள். கல்பனா வந்தார். மொத்த கதையையும் கூர்ந்து கேட்டார்.
விஷயம் தலைமை வரை சென்று சேர்ந்ததை இவர்களிடம் சொன்னார். பி
றகு சற்று யோசித்த கல்பனா “இந்நேரம் லோக்கல் ஸ்டேஷன்க்கு மெசேஜ் வந்திருக்கும். இந்த மாதிரி சென்சிடிவ் மேட்டர் எல்லாம் குமரகுரு சார் தான் விசாரிப்பார். ரத்தினத்தை விசாரிச்சு அவர் உங்க பேர சொன்னா இங்க வர வாய்ப்பு இருக்கு. நாம தயாரா இருக்கணும்” என்றார்.
மூன்று பேரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு கல்பனா சில யோசனைகளை சொல்லி நான் பார்த்துக்கிறேன் என தைரியம் சொன்னார்.
செல்லகுமாரை போய் பார்த்தார் கல்பனா. யாராவது நேசமணி பற்றி விசாரிக்க வந்தால் தனக்கு தகவல் சொல்லுமாறு அறிவுறுத்தினார். பிறகு அவர்களிடம் என்ன கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என சொல்லி புரிய வைத்தார். அதையே சங்கு புஷ்பத்திற்கும் சொன்னார். அந்த இரவு சம்பந்தப்பட்ட அனைவருக்கும்ஒரு நெடிய இரவாக இருந்தது.
எம்பி அவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவர் நம்பவில்லை. பிறகு “சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் பண்ண சொல்லுங்க. அப்புறம் பார்க்கலாம். நாளைக்குள்ள என்ன நிலவரம்னு சொல்லுங்க. ஏதாவது பிரச்சினை இருந்தா கேண்டிடேட்டை மாத்திடலாம்” என்றார் அவர்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அண்ணணும் ரத்தினமும் ஆளும் கட்சி வேட்பாளர் நேசமணிக்கு வாழ்த்தும் ஒத்துழைப்பும் தருவதாக உளமார சொன்னது ஆதாரத்தோடு தலைமைக்கு சென்றது.
இங்கே லோக்கலில் புகைச்சல் அதிகமானது. அண்ணன் காதுக்கு வந்த செய்தி எதுவும் நல்ல செய்தி இல்லை.
ரத்தினத்திடம் டம்மி வேட்பாளராக அறியப்பட்ட நேசமணிகளின் டாக்குமெண்ட்டை கேட்டார். அவரிடம் எதுவும் இல்லை. பணம் எங்கே என்றார். தண்ணீர் கேன்காரருக்கு கொடுத்ததாக சொன்னார் ரத்தினம். எதுவும் நம்பம் படியாக இல்லை அவருக்கு.
அப்போது அவருக்கு ஒரு செய்தி வந்தது. புஷ்பா லிஸ்ட் வித் ரத்தினம் ஐடி கார்டு.
“இதெல்லாம் என்ன” என கண் சிவந்தார் அண்ணன். எதற்கும் பதில் இல்லை ரத்தினத்திடம்.
காலையில் லேசாய் சுற்றிய அவரின் தலை இப்போது பம்பரமாய் சுற்றியது.
குமரகுரு ரத்தினத்தை விசாரித்தார். அவர்கள் இருவரின் போன் ரெக்கார்டுகளை எடுத்தார்.
இருவரும் டாக்டர் நேசமணிக்கு செய்தி அனுப்பியது சிக்கியது.
“நேசமணி எந்த பிளாட்? என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.
செல்ல குமார் பிளாட் நம்பர் சொன்னார். விசிட்டர் பைல் செக் செய்தார்.
ரத்தினம் வந்தது நோட்டில் இருந்தது. ஐந்து மணி நேரத்திர்ற்கு மேலாக இங்கே இருந்திருக்கிறார். என்னவாக இருக்கும் என யோசித்தார்.
“அவங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க? என்ன பண்றங்க” என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.
“சார் அவங்க ரெண்டு பேரு மட்டும் தான் வீட்ல. ரிட்டையர்டு ஆனவங்க. சார் போஸ்ட் ஆபீஸ்ல இருந்தார். அந்த அம்மா நர்ஸு” என்றார் செல்ல குமார்.
“நீங்க தான் நைட் ஷிப்டா” என்றார் குமரகுரு.
“இல்ல சார். வேற ஒருத்தர் வரணும். அவரு வெளியூரு. அங்க ஒரு டெத்து. அவரு வரல. அதன் நா இருக்கேன்”. என்றார் செல்லகுமார்.
“எந்த ஊரு” என்றார் குமரகுரு.
செல்ல குமார் சொன்னார். “சார், உங்க ஊர்ல ஒரு டெத்தா இன்னைக்கு” என ஊர் தலைவரை விசாரித்தார். அவர் ஆமாம் என்று சொல்ல செல்லகுமாரை நம்ப ஆரம்பித்தார் குமரகுரு.
“ரிட்டையர்டு ஆயிட்டு இப்போ என்ன பண்றாங்க?” என்றார் குமரகுரு.
“அந்த அம்மா லைப் கோச் சார். வர்றவங்க மணி கணக்குல பேசுவாங்க. அவரு வயசானவரு. ரெண்டு பேருக்கும் சுகர். அவங்க பசங்க ரெண்டு பேரு பாரின்ல இருக்காங்க. ஒரு பொண்ணு ப்ரொபஸரா பாண்டில இருக்காங்க. அவங்க மட்டும் வாரா வாரம் வந்து பாத்துட்டு போவாங்க. ரொம்ப டீசண்டான பேமிலி சார்” என்றார் செல்ல குமார்.
“எல்லா ப்ளாக்லயும் இருக்கு சார்” என்றார் செல்ல குமார்.
“சரி, நைட் ஷிப்ட் கிட்ட சொல்லி வைங்க. நா போகும் போது பார்த்துட்டு போறேன்” என்றார்.
“அவங்க வீட்டுக்கு தண்ணீர் கேன் வந்துதா? எப்போ” என அதையும் சேர்த்து கேட்டார்.
“ஆமா சார். மத்தியானம் வந்தார். போட்டுட்டு கொஞ்ச நேரத்துல போயிட்டாரு.
இருங்க நோட்ல பாக்குறேன்” என்றார் செல்லகுமார்.
“இந்த பையன் சிஸ்டமேடிக்கா இருக்கான்” என நல்ல அபிப்ராயம் வந்தது குமரகுருவுக்கு.
“சார் மொத்தம் பத்து நிமிஷம் தான் சார்” என்றார் செல்லகுமார்.
“சரி” என சொல்லி உள்ளே கிளம்பினார்.
செல்ல குமார் பக்கத்தில் இருந்த நைட் வாட்சமேனை பார்க்க அவர் போனை எடுத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் போனார். கல்பனாவுக்கு மெசேஜ் வந்தது.
அவர் குரங்கு குல்லாவை மாட்டிக் கொண்டு கீழே நாயை கூட்டிக்கொண்டு இறங்கி வந்தார்.
“மேடம் நீங்க இங்க தான் இருக்கீங்களா” என்றார் குமரகுரு.
கல்பனா திரும்பி “நீங்க எங்க சார் இங்க? அதுவும் ராத்திரில. நா இந்த பிளாக்ல தான் இருக்கேன்” என்றார்.
“நல்லதா போச்சுங்க. இங்க ஜி பிளாக் நேசமணிய தெரியும்களா” என்றார் குமரகுரு.
“அவங்கள தெரியாதவங்க ரொம்ப கம்மி சார் இந்த காம்பௌண்ட்ல. என்ன சார் விஷயம்?” என்றார் கல்பனா.
சுருக்கமாக கதையை சொன்னார் குமரகுரு.
“என்ன சார் இது. எங்க காம்பௌண்ட்லயே இந்த மாறி ஒரு அட்டெம்ப்ட்டா? எல்லாரும் பச்சவங்க, நல்ல பொசிஷன்ல இருக்கவங்க” என்றார் கல்பனா.
“ஆமாங்க, எனக்கும் அப்டி தான் தோணுது. மூணு நாலு லட்சம்லாம் இங்க இருக்குறவருக்கு ஒரு மேட்டரே கிடையாது. அந்த அமௌண்ட்டுக்கு மானம் மரியாதையை யாரு அடகு வெப்பாங்க?” என கேட்டார் குமரகுரு.
“சார் எதுக்கும் நாம சிசிடிவி ஒரு தரவ பாத்துட்டு முடிவு பண்ணலாம். வாங்க” என ஆபீஸ் ரூம் பக்கம் போனார்கள்.
ரத்தினம் ரிஷப்சனில் காத்திருந்தது, செல்ல குமார் போன் பேசியது, பிப்த் ப்ளோர் காரிடரில் நடந்த உரையாடல், அவர் சங்கு புஷ்பத்துக்கு காசு கொடுத்தது, பிறகு அவர் வெய்ட் பண்ணி உள்ளே போனது என எல்லாம் இருந்தது.
கொஞ்ச நேரம் கழித்து காபி வந்தது. பிறகு தண்ணீர் கேன் வந்தது. அவர் உள்ளே போய் சில நிமிடங்களில் வெளியே வந்து விட்டார். சில்லறை காசு வாங்கும் நேரம் தான். பிறகு ரத்தினம் கிளம்பி வெளியே போகிறார்.
“சார் இதுல ஏதாவது உங்களுக்கு பொறி தட்டுதா” என்றார் கல்பனா.
“வித்தியாசமா எதுவும் இல்ல. அந்த அம்மா ஏதோ ஸ்ட்ரிக்டா சொல்றாங்க. அவரு அப்புறம் தன் காசு தராரு. மொதல்ல அந்த அம்மா அவரை உள்ளேயே கூப்புடலை. வெளில சேர போட்டு உக்கார சொல்ராங்க. இந்த மாறி டீலிங்க்ல இருக்கவுங்க வெளிப்படையா இருக்க மாட்டாங்க. அப்புறம் காசு தந்தப்புறமும் அந்த அம்மா உடனே உள்ள விடல” என யோசித்தார் குமரகுரு.
“சரி சார். வீட்டுக்கு வாங்க பேசலாம்” என அழைத்துப் போனார் கல்பனா.
“இந்தாங்க சார் பஞ்சாமிர்தம்” என உபசரித்தார் கல்பனா.
“இப்ப எப்படி ப்ரோசீட் பண்றது? என குழம்பினார் குமரகுரு.
“அவங்கள விசாரிக்கணும். ஆனா தொந்தரவா இருக்க கூடாது. இது தப்பான புகாரா இருந்தா வயசானவங்க அவங்க வருத்தப்படுவாங்க” என உண்மையாக கரிசனப்பட்டார் குமரகுரு.
இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் என அமைதியாய் இருந்தார் கல்பனா.
ஸ்டேஷனில் இருந்து போன் வந்தது குமரகுருவுக்கு. தலைமைக்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட் வேணும் என.
“மேடம் அவங்க உங்களுக்கு பழக்கமா? கொஞ்சம் போன்ல கேஷுவலா பேசி பாருங்களேன்” என உதவி கேட்டார் குமரகுரு. கல்பனா போனை போட்டார்.
மீண்டும் சங்கு புஷ்பம் தொடர்ந்தார். “அவரு கொஞ்சம் மொரடானா ஆளா இருந்தாரு. கட்சிக்காருனு சொன்னாரு. மீட் பண்ணனும் ஆனா கன்சல்டேஷன் தர மாட்டேன்னு ஒரே அடாவடி. நானும் உள்ள விடல. அப்புறம் தான் வேற வழி இல்லேன்னு குடுத்தாரு” என பொறுமையை சோதித்தார் சங்கு புஷ்பம்.
“அப்புறம் என்ன ஆச்சு” என்றார் கல்பனா.
“எங்க எல்லாருக்கும் மண்டை காஞ்சி போச்சு” என மீண்டும் குறுக்கில் வந்தார் நேசமணி.
இது சரியான காமெடி டைம் பேமிலி என நினைத்தார் குமரகுரு. இவர்கள் இவ்வளவு நார்மலாக இருக்கிறார்கள். அந்த ஆள் இவர்களை கை காட்டுகிறான் என யோசித்தார்.
“என்ன விஷயமா வந்தார்” என கேட்டார் கல்பனா.
“ரொம்ப சிம்பிள் மா. அங்கிள பாக்கணும் அவருக்கு. எலெக்க்ஷன்ல சுயேச்சையா நிக்குறீங்களானு கேட்டாரு. இவரு சுகர் பேஷண்ட்டு. சும்மாவே நிக்க முடியாது. இவரு எங்க சுயேச்சையா நிக்குறது. அவரு இன்டென்ஷன் ரொம்ப தப்பா இருந்தது. நாங்க முடியாது கெளம்புங்கன்னு சொல்லிட்டோம்” என உடைத்து பேசினார்.
“அப்புறம்” என்றார் கல்பனா.
“அவரு கதையை சொன்னாரு. நா லைப் கோச்சுனால ஊர் கதை எல்லாம் பேசினாரு. எட்டாயிரம் பீஸ் வேற குடுத்தாரு. ஒழச்சு சம்பாதிக்குறவன் எவனும் வெட்டி கதைக்கு எட்டாயிரம் தர மாட்டான். நடுவுல திரும்ப அவருகிட்ட பேச ஆரம்பிச்சுட்டான். நாலு லட்சம் தரேன்னு சொல்றான்”.
“நீங்க போக சொல்லலியா?” என்றார் கல்பனா.
“அவரு அவங்க அண்ணன் கிட்ட போன்ல பேசுறாரு. இவருகிட்ட பேசுறாரு. அப்புறம் என்கிட்டே கொஞ்ச நேரம் பேசுறாரு. அவரு எதுக்கு வந்தார்னே எங்களுக்கு புரியல. இன்னும் சொல்ல போனா நம்ம குமரஜோதி தண்ணி கேன் எடுத்துட்டு வந்தா அவருகிட்ட பேசுறாரு. அவரு வீட்டம்மாவுக்கு நல திட்ட உதவி வாங்கி தரேன்னு ஒரே அலப்பறை” என கொட்டி தீர்த்தார்.
“அப்புறம்” என்றார் கல்பனா.
“ஒரு வழியா நாங்க முடியாதுன்னு சொல்லிட்டோம். இன்னொரு விஷயம் சொல்றேன் ஷாக் ஆவாத” என சஸ்பென்ஸ் வைத்தார் சங்கு புஷ்பம்.
“அந்த ஆளு என்ன சுயேச்சையா நிக்க முடியுமான்னு கேட்டாரு. ஒரு கேண்டிடேட்டு புஷ்பாவாம். நா சங்கு புஷ்பம்னு என்ன கேட்டார்.”
“இதுக்கு மேல அவரை பத்தி என்ன சொல்றது” என கொட்டி தீர்த்தார் சங்கு புஷ்பம்.
கல்பனா தொடர குமரகுரு போனிலேயே ரிப்போர்ட் கொடுத்து விட்டார்.
தலைமைக்கு தெளிவாக ரிப்போர்ட் சென்றது.
அண்ணன் மற்றும் ரத்தினமுத்து சேகர் இருவரும் மாற்று கட்சிக்காக வேலை செய்து கட்சிக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக டம்மி வேட்பாளர்களை நிறுத்த சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள்.
கட்சிக்கு கெட்ட பேரையும், கட்சி கட்டுப்பாட்டையும் மீறியதால் அவர்கள் இருவரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கபடுகிறார்கள். கட்சியின் சார்பாக புது வேட்பாளர் நாளை அறிவிக்கபடுவார்” என இரவோடு இரவாக செய்தி குறிப்பு வந்தது. அண்ணனும் ரத்தினமும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் கைதியானார்கள்.
ரத்தினம் கிளம்பியதும் கதவை சாத்தியவர்கள் ஆளுக்கொரு பாத் ரூமிற்க்கு ஓடினார்கள். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பசியையும் இயற்கை உபாதைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
பாத்ரூம் போய் வந்த பிறகு ஆயாசமாக உணர்ந்தார்கள். பேருக்கு நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டார்கள். ரத்தினம் கிளம்பி விட்டதால் இனி போன் பேசலாம் என உணர்ந்தார்கள்.
ரெஸ்ட் எடுக்க சங்கு புஷ்பத்திற்க்கு நேரமில்லை. லக்ஷ்மிக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி இனி என்ன செய்யலாம் என திட்டமிட்டார்.
லக்ஷ்மிக்கு நேரில் போய் அவர்களை கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
முன்பின் தெரியாத ஒருவர் தங்களை சந்திக்க வருகிறார் என்றபொழுது அவர்களின் நிதானமும் எச்சரிக்கை உணர்வும் பிரமிப்பாக இருந்தது.
அந்நிய ஆட்களை கணித்து அவர்களிடம் எவ்வளவு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று லக்ஷ்மியும் கற்றுக் கொண்டார்.
அடுத்த போன் கல்பனாவுக்கு போட்டார் சங்கு புஷ்பம்.
கல்பனாவின் உறவினர் ரத்தினம் கட்சியில் உள்ள முக்கியஸ்தருக்கு பாதுகாப்பு பணியில் உள்ளவர். அவர் போய் ஓத வேண்டிய இடத்தில் ஓதி விட்டார்.
வார்டு பெயரை சொல்லி “சார், இங்க கட்சி ஆளுங்க எலெக்சன்ல டபுள் கேம் ஆடுறாங்கன்னு லோக்கல் சோர்ஸ் டிப் குடுத்திருக்காங்க சார். எக்ஸ் எம்எல்ஏ அண்ட் அஸோஸியேட் இன்வால்வ்ட் சார். ஒடனே நீங்க அவங்க ஏரியா ஸ்டேஷனை அலெர்ட் பண்ணீங்கன்னா கையும் களவுமா பிடிக்கலாம் சார்” என சொல்லி முடித்தார்.
“ரொம்ப டயர்டா இருக்க. போய் கொஞ்ச நேரம் தூங்கு” என்றார் நேசப்பா.
“இன்னும் கொஞ்சம் வேல பாக்கி இருக்கு. இது பத்தாது” என்றார் சங்கு புஷ்பம்.
“அவர் தான் போய்ட்டாரே” என்றார் நேசப்பா.
“நேசமணி பைல் தானே முடிஞ்சிருக்கு. இன்னும் நம்ம புஷ்பா பைலை ஓப்பனே பண்ணலையே. நீங்க போய் படுங்க. நா கொஞ்சம் நிதானமா யோசிக்கிறேன்.” என்றபடி சிரித்தார் சங்கு புஷ்பம்.
தலைமை வரை விஷயம் இன்று இரவுக்குள் போய்விடும் என கல்பனா தகவல் சொன்னார்.
கல்பனா வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு சங்கு புஷ்பத்தை சந்திப்பதாக சொன்னார்.
லக்ஷ்மி அனுப்பிய புஷ்பா பெயர்கள் கொண்ட லிஸ்டை எடுத்துக் பார்த்தார்.
வாக்காளர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், முகவரி மற்றும் பாலினம் இருந்தது. சங்கு புஷ்பத்திற்கு இது போதாது என்று தோன்றியது. ஆனால் இன்னும் என்ன தேவை என தெரியவில்லை.
சற்று யோசனைக்கு பிறகு இவர்களின் போன் நம்பர் கிடைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என நினைத்தார். அதை எப்படி சேகரிப்பது என யோசித்தார்.
அவர் சிஸ்டம் டேபிள் மீது இருந்த பஞ்சாமிர்த பாட்டில் அவர் கேள்விக்கான விடையை தந்தது.
வள்ளியப்பனுக்கு போன் போட்டார் சங்கு புஷ்பம்.
“சார் ஒரு ஹெல்ப் வேணும்” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.
“சொல்லுங்க மேடம்” என்றார் அவர்.
வள்ளியப்பனின் மகன் இவர்கள் ஏரியாவில் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். அவரிடம் சந்தாதாரர் முகரியும், போன் நம்பரும் இருக்கும். காலையில் நடந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லி முடித்தார் சங்கு புஷ்பம்.
வாயடைத்துப் போனார் வள்ளியப்பன். “நீங்க கவலைப்படாதீங்க மேடம். அரை மணி நேரத்தில் அவன் உங்களுக்கு அனுப்பிடுவான். ஆள், படை பலம் எல்லாம் அவங்களுக்கு மட்டும் தான் இருக்குமா என்ன? நம்மள மாதிரி சாதாரண ஜனங்களும் லேசு பட்டவங்க இல்லன்னு அவங்களுக்கு புரியணும்” என பொரிந்து தள்ளினார் வள்ளியப்பன்.
சற்று நேரத்தில் வள்ளியப்பன் மகன் தணிகையிடம் இருந்து எல்லா போன் நம்பர்களும் கிடைத்தது.
இப்போது சங்கு புஷ்பத்துக்கு ஐடியா வந்தது. அந்த லிஸ்ட்டை லக்ஷ்மிக்கு அனுப்பி விட்டு போன் போட்டார்.
“லக்ஷ்மி, லிஸ்ட்ல ஒவ்வொருத்தருக்கும் ஒரு தொகை போடு. புரியுதா? என்றார் சங்கு புஷ்பம்.
“பக்காவா போட்டு தரேன்” என்றார் லக்ஷ்மி.
புஷ்பா பெயர் காம்பினேஷனில் பதினெட்டு பேர் இருந்தார்கள் லிஸ்டில்.
முதலில் ரேண்டமாக ஆறு பேருக்கு விருப்பமில்லை என தொகையின் கீழே போட்டார்.
லிஸ்டில் இருந்து சங்கு புஷ்பத்தையும் கனக புஷ்பத்தையும் நீக்கி விட்டார்.
மீதி இருந்த பத்து பேருக்கு குறைந்தது ஒரு எல்லில் இருந்து நான்கு எல் வரை பதிவிட்டார்.
மொத்தம் கூட்டினால் இருபத்து மூன்று எல் வந்தது. நல்ல தொகையாக இருந்தது.
ஆனால் பத்து பேர் என்பது கொஞ்சம் அதிகமாகப்பட்டது.
அதிகபட்சம் ஐந்து பேர் வரை போன தேர்தலில் டம்மி வேட்பாளராக இருந்தார்கள்.
அதனால் ஐந்து பேர் வரை இருக்கட்டும் என முடிவுக்கு வந்தார்.
கடைசியாக அண்ணி புஷ்பாவைத் தவிர்த்து ஐந்து பெண் புஷ்பங்களுக்கு நல்ல தொகையைப் போட்டு முடித்தார். மொத்தம் பதினைந்து எல். பாரபட்சமின்றி
தலைக்கு மூணு எல். என்ஜாய் பண்ணுங்க என நினைத்துக் கொண்டு அம்மாவுக்கு அனுப்பினார்.
சங்கு புஷ்பத்திற்கு அந்த லிஸ்ட் திருப்தியாக இருந்தது.
போன் அடித்தது. குமரஜோதி. “மேடம் அந்த கவர்ல அவ்ளோ பணம் இருக்கு மேடம்” என்றார்.
“எல்லாம் உங்களுக்கு தான். சாயந்திரம் நானும் அவரும் வந்து உங்களை பாத்து நேர்ல பேசுறோம். நீங்க ரத்தினத்தோட கட்சி அட்டையை எனக்கு அனுப்புங்க” என்றார் சங்கு புஷ்பம்.
லக்ஷ்மி அனுப்பிய லிஸ்டையும் ரத்தினத்தின் கட்சி அட்டையையும் பிரிண்ட் எடுத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.
தலை வலி ஆரம்பமானது சங்கு புஷ்பத்திற்கு. ஆனால் செய்ய வேண்டிய வேலை நிறைய இருந்தது.
கிச்சனுக்கு போய் காபி போட்டு கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தார். ரத்தினத்திடம் இருந்து வாங்கிய கன்சல்டேஷன் பணம் வேறு இருக்கிறது. அந்த பணத்தை சொந்த செலவுக்கு தொடக்கூடாது என தோன்றியது.
காபி போட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி குடித்தார். பக்கத்தில் அபார்ட்மெண்ட் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. வேலை முடித்து எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தார்கள். அப்போது பைக்கில் வந்த ஒருவர் அவர்களுக்கு பணம் கொடுப்பதை பார்த்தார். அந்த நாளின் சம்பளமாய் இருக்கும் என நினைத்தார். கூட்டமாக இருந்தவர்களுக்கு அவர் பணம் விநியோகம் செய்தது சங்கு புஷ்பத்திற்கு ஒரு அட்டகாசமான ஐடியாவை கொடுத்தது.
அவரின் தலைவலி பறந்து ரத்தினம் வீட்டு பக்கம் போனது.
வள்ளியப்பனுக்கு திரும்ப போன் போட்டார் சங்கு புஷ்பம்.
“நக்கலா. காலைல நாக்கு வெளில தள்ளி போற மாதிரி இருந்தீங்க” என அவர் பங்குக்கு வாரினார் சங்கு புஷ்பம்.
பஞ்சாமிர்த பாட்டிலில் இருந்து கொஞ்சம் எடுத்து கல்பனாவுக்காக ஒரு டப்பாவில் எடுத்து வைத்தார்.
கரன்சி கவரை ஆளுக்கு பாதியாய் பிரித்துக் கொண்டார்கள். மிச்சமிருந்த பஞ்சாமிர்த பாட்டிலையும் கவர்களையும் இரண்டு துணிப் பைகளில் போட்டு வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.
நேராக வள்ளியப்பனின் கடைக்கு போய் தணிகையிடம் பேப்பர்களை கொடுத்து என்ன செய்ய வேண்டும் என சொன்னார்கள்.
இரவு ஏழு மணி. கட்சி கூட்டம் ஆரம்பமாக இன்னும் நேரம் இருந்தது. ஆண்கள் பக்கம் நேசப்பாவும், பெண்கள் பக்கம் சங்கு புஷ்பமும் கூட்டத்தில் கலந்தார்கள்.
சற்று நேரம் கழித்து அண்ணனும், அண்ணியும், ரத்தினமும் மேடையில் ஏறினார்கள். மூவரும் உற்சாகமாக இருந்தார்கள். நேசப்பா தணிக்கைக்கு மெசேஜ் செய்தார். “மணி கூண்டு பக்கத்தில் இருக்கிறேன் என்று”.
கடைசி லைனில் உட்கார்ந்திருந்தார். தணிகை கொஞ்ச நேரத்தில் வந்து நேசப்பா அருகில் நின்றார்.
பிறகு மேடையை சற்று நேரம் பார்த்து விட்டு பக்கத்தில் இருந்த கட்சிக்காரரிடம் பேப்பரை கொடுத்தார்.
“அண்ணே, அதோ மேடைல அண்ணன் பக்கத்துல ஒருத்தர் இருக்காருல்ல. அவர் இந்த பேப்பரை எங்க கடைல ஜெராக்ஸ் எடுத்தாரு. காச குடுத்துட்டு இதை விட்டுட்டு வந்துட்டாரு. அவர்கிட்ட குடுத்துடுங்கண்ணா. கடைல ஆள் இல்ல நா போறேன்” என பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி போனார்.
அவர் அந்த பேப்பரை படித்துப் பார்த்தார். பதினைந்து எல் ஐந்து புஷ்பங்களுக்கு இருந்தது. இன்னொரு பேப்பரில் ரத்தினத்தின் அடையாள அட்டை இருந்தது.
அவர் ஏதோ யோசித்தவராக நிற்க நேசப்பா அவரிடம் இருந்து அந்த பேப்பரை வாங்கி சற்று சத்தமாக படித்தார்.
“நம்ம ரத்தினம் தம்பி தான் அண்ணிக்கு எதிரா அஞ்சு புஸ்பாவை நிறுத்துது போல” என கொளுத்திப் போட்டார். முகம் சுண்டிப் போனார் கட்சிக்காரர்.
“மொத்தம் பதினைந்து எல். ஒவ்வொரு புஸ்பாக்கும் பத்தாயிரம் குடுத்துட்டு மிச்சத்தை இவரு எடுத்துக்குவாரு” என விளக்க உரையை கொடுத்தார்.
“அடப்பாவி, சொந்த கட்சிக்கே துரோகம் பண்ணுறானே” என கோபமானார் அவர்.
பிறகு “அவருக்கு ஏது அவ்வளவு பணம்?” என சந்தேகமாய் கேட்டார்.
அவர் காதருகே போய் “இவரு சித்தா டாக்டரு ஆளு. அவரு தான் இவருக்கு பேங்கர். அண்ணன் கூடவே இருந்து கழுத்தறுக்குறான்” என டீடைலை சொன்னார்.
பேயறைந்தார் போல ஆனார் அவர். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆண்கள் பகுதியில் பெரும்பாலும் எல்லாருக்கும் அரசால் புரசலாக போய் சேர்ந்தது.
இந்த பக்கம் சங்கு புஷ்பம் உற்சாகமாக சக பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
நேசப்பா அந்த பக்கம் போய் போனில் இந்த கதையை யாரிடமோ விளக்கினார்.
அதை கேட்ட இரு பெண்கள் பேச சங்கு புஷ்பம் கூட சேர்ந்து கொண்டார்.
“ஆமா, ரத்தினம் டாக்டரோட ஸ்லீப்பர் செல்னு மகளிர் அணி தலைவி பேசிக்கிறாங்க. டாக்டரு சம்சாரமும் தலைவியும் ஒரே ஜிம்முக்கு தான் போறாங்க. அப்போ அந்த அம்மாகிட்ட இவரு போய் பேசிட்டு வந்திருக்காரு. புஷ்பா அண்ணிக்கு எதிரா அஞ்சு பேர ரெடி பண்றாரு. ஆனா இங்க நல்லவரு மாதிரி அவங்க கூட மேடைல உக்காந்திருக்காரு” என டிவி சேனல் டிபேட் போல பேசி முடித்தார்.
சொல்லவே வேண்டாம். பெண்கள் பக்கம் அதி விரைவாக அந்த செய்தி பரவியது.
நேசப்பா அவர் துணி பையை வைத்து விட்டு கிளம்பினார்.
கேட்பாரற்று கிடந்த பையை எடுத்த ஒருவர் அதிலிருந்த கவர்களை பார்த்து யோசித்தார்.
கவரை வாங்கிய சங்கு புஷ்பம், “ரத்தினம் தம்பி தான் எல்லாருக்கும் நூறு ரூபா ஓட்டுக்கு இப்பயே காசு குடுக்குது” என சொன்னார்.
பஞ்சாமிர்த டப்பாவையும் ஸ்பூன்களையும் பக்கத்தில் இருந்த பெண்கள் டீமிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார்.
இரண்டே நிமிடத்தில் விநியோகம் முடிய தூரத்தில் இருந்து வீடியோ எடுத்தார் லோக்கல் பேப்பர் நிருபர்.
இதே போன்று சற்று தள்ளி சங்கு புஷ்பம் பையை வைத்து விட்டு நகர கூட்டம் பரபரப்பாக இருந்தது.
வந்ததிலிருந்து அவர் தலை எத்தனை முறை சுற்றியது என்று அவருக்கே தெரியாது.
“சார், நேசமணி இருபாலர் பெயர்” என விளக்கினார் நேசப்பா.
எல்லா வில்லங்கமும் ஒரே சுருதியில் பாட்டு பாடியது.
லேடி கேண்டிடேட்டு எப்படி சரிப்படும் டாக்டருக்கு எதிராக என யோசித்தார் ரத்தினம்.
“எல்லாருக்கும் இது தெரியாது சார். எத்தன பேரு கேண்டிடேட்ட நேர்ல பாக்க போறாங்க. போஸ்டரில் வெறும் நேசமணின்னு தான இருக்கும்.” என ரத்தினத்தின் சந்தேகத்தில் சிமெண்டு பூசினார் சங்கு புஷ்பம்.
சங்கு புஷ்பம் ஒரு துண்டு சீட்டை குமரஜோதியிடம் கொடுத்தார்.
“சார் இவரு அந்த அம்மா டாக்குமெண்ட என் போனுக்கு அனுப்புவார். நீங்க அத ப்ரூப்பா வச்சிக்கலாம்” என ரத்தினத்திடம் சொன்னார் சங்கு புஷ்பம்.
குமரஜோதி டாக்குமெண்டை அனுப்பினார். சங்கு புஷ்பம் அந்த அடையாள அட்டையை பிரிண்ட் எடுத்து ரத்தினத்திடம் காண்பித்தார். ரத்தினம் சரி பார்த்த பிறகு “சார் இதை நா பைல் பண்ணி வெக்குறேன்” என திரும்ப பெற்றுக் கொண்டார்.
குமரஜோதி சங்கு புஷ்பம் கொடுத்த செய்தியை ரத்தினத்திற்கு அனுப்பினார்.
“என் மனைவிக்கு மகளிர் திட்டத்தில் நலத்தொகை பெற்றுக் கொடுத்திட தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் குமரஜோதி”.
“இவரு என்னங்க நல திட்டம்னு போட்டிருக்காரு” என்றார் ரத்தினம்.
“சார், அது கோட் வேர்ட். என் மனைவியை டம்மி வேட்பாளராக களம் காண ஒத்துக்கொள்கிறேன். அப்படின்னா அனுப்ப முடியும்?” என உரைத்தார் சங்கு புஷ்பம்.
“அவருக்கு ஒரு பதில் அனுப்பிடுங்க” என அடுத்த கட்டளையை போட்டார்.
நமக்கு இது தொழில்னா, இவங்களுக்கு இது மூச்சு காத்தா இருக்கே. இந்த அம்மா எல்லா வேலையையும் சிஸ்டமேட்டிக்கா செய்யுது என வியந்தார் ரத்தினம்.
ஆட்டோபைலட் மோடுக்கு போன ரத்தினம் குமரஜோதிக்கு சரி என பதில் போட்டார்.
நேசப்பாவும் சங்கு புஷ்பமும் ரத்தினம் என்ன மோடில் இருக்கிறார் என அறிந்து கொண்டார்கள்.
அப்புறம் உங்க டாக்குமெண்ட் ஒண்ணு அவருக்கு ப்ரூப்பா தரணும்.” என அவரை வழி நடத்தினார் சங்கு புஷ்பம்.
“நா அடையாள அட்டை எதுவும் எடுத்திட்டு வரலீங்க” என்றார் ரத்தினம்.
“கட்சி உறுப்பினர் அட்டை எப்பவும் வெச்சு இருப்பீங்கள்ல. அது கூட போதும்” என்றார் நேசப்பா.
அவர் சொன்ன வழியில் அப்படியே நடந்தார் ரத்தினம். ரத்தினம் உறுப்பினர் அட்டையை காட்ட குமரஜோதி அதை போட்டோ எடுத்துக் கொண்டார். கவர் கை மாறியது. காரிடாரில் அல்ல, சிசிடிவி இல்லாத நடு ஹாலில்!
“தேங்க்ஸ் சார்” என வாங்கிக்கொண்டார் குமரஜோதி. “நெக்ஸ்ட் என்ன பண்ணனும்னு மேடம் கிட்ட சொல்லிடுங்க” என குஷியாக கிளம்பினார்.
குமரஜோதியை பார்சல் செய்த கையோடு திரும்ப ரத்தினத்திற்கு அடுத்த ரவுண்டை ஆரம்பித்தார்கள்.
நேசப்பா அஞ்சாயிரம் ருபாய் கோப்பையை இன்னும் கொஞ்சம் நிரப்பினார்.
“சார், எங்களுக்கு லஞ்ச் டைம். சீக்கிரம் முடிக்கலாம்” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.
ஒரு பார்ட்டி பிக்ஸ் ஆன மிதப்பில் இருந்தவருக்கு சரக்கும் கொஞ்சம் மிதப்பை ஏற்றியது. சங்கு புஷ்பம் சரியானபடி ஒரு டீலிங்கை நிறைவேற்றிக் காட்டியதால் அவர் சொல் பேச்சை மறு பேச்சின்றி கேட்டார் ரத்தினம்.
சங்கு புஷ்பத்திற்கு இப்போது தான் மிக முக்கியமான கட்டம். போனை எடுத்து பார்த்தார்.
பிறகு ஒரு துண்டு சீட்டில் தகவல்களை எழுதி ரத்தினத்திடம் கொடுத்தார்.
“சார், இது இவரோட நம்பர். உங்க அண்ணன் கிட்ட சொல்லி இவரை ஆசீர்வாதம் பண்ணி ஒரு மெசேஜ் அனுப்ப சொல்லுங்க. அத நாங்க அவரோட கன்பர்மேஷன் மெசேஜா எடுத்துக்குறோம் என்றார்” சங்கு புஷ்பம்.
“என்ன மேடம், சார் தோக்க போறார். அவருக்கு எதுக்கு வாழ்த்து சொல்லணும்” என மூளையை கசக்கி பிழிந்து ஒரு உருப்படியான கேள்வியை கேட்டார் ரத்தினம்.
“கரெக்ட் சார். நீங்க ஒடம்பு முடியாதவங்க யாரையாவது போய் ஆஸ்பத்திரில பாத்தா என்ன சொல்லுவீங்க? சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வந்து உங்க பேரன் பேத்தி கல்யாணத்த பார்ப்பீங்கனு சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுவீங்களா, இல்ல நாளைக்கே போய் சேந்துடுவீங்க. இன்னைக்குள்ள இந்த ஆப்பிளை சாப்ட்ருங்கன்னு சொல்லுவீங்களா? என நறுக்கென்று கேட்டார் சங்கு புஷ்பம்.
“அண்ணே, ஒரு பார்ட்டி பிக்ஸ் ஆகிட்டு. அட்வான்ஸ் வாங்கிட்டு டாக்குமெண்ட் காபி கொடுத்துட்டாங்க.
இன்னொரு பார்ட்டியும் ஓகே சொல்றாங்க. நீங்க ஆசீர்வாதம் பண்ணி ஒரு மெசேஜ் அனுப்பிட்டேங்கன்னா டீல் முடிஞ்சுடும்ணே” என உற்சாகமாய் சொன்னார் ரத்தினம்.
“நல்லது ரத்தினம். போன அவங்ககிட்ட குடு. பேசிடறேன்” என்றார் அண்ணன்.
“இல்லண்ணே, அவங்க மெசேஜா அனுப்ப சொல்றாங்க. சும்மா உங்க சைட்லேர்ந்து ஒரு கன்பர்மேஷன்க்கு. மத்தபடி தங்கமான பார்ட்டின்னே” என அவரை சரி காட்டினார் ரத்தினம்.
சங்கு புஷ்பம் அவர் போனையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அண்ணனுக்கு ஒரு சிக்கல். போன் அவ்வளவாய் உபயோகிப்பதில்லை எழுத. பேசுவதோடு சரி. அதை பெரிதாய் நோண்டுவதில் ஆர்வம் இல்லாதவர். இவன் வேற மெசேஜ் அனுப்ப சொல்றான் என்ன பண்றது என யோசித்தார்.
வெளியே காத்திருந்த ஆட்களை எட்டிப் பார்த்தார். ஐடி விங்கை சேர்ந்த ஒருவர் இருந்தார்.
“தம்பி இங்க வாப்பா” என கூப்பிட்டு “இவரு போன்ல ஏதோ வாழ்த்து அனுப்ப சொல்றாரு. என்னனு கேட்டு அனுப்பிடு” என்றார்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் துண்டு சீட்டில் எழுதியிருந்த வாழ்த்து அட்சர சுத்தம் பிசகாமல் அண்ணண் போனிலிருந்து போய் சேர்ந்தது சித்தா டாக்டர் நேசமணிக்கு.
“அருமை நண்பர் நேசமணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் இந்த தேர்தலில் அமோக வெற்றியடைய என்னுடைய ஆசீர்வாதங்கள். என் அன்புத் தம்பி இரத்தினமுத்து சேகர் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வார். என்றும் மாறா நட்புடன் உங்கள் அண்ணண்”.
சங்கு புஷ்பத்திற்கும் நேசப்பாவிற்கும் மூச்சு நிற்பது போல இருந்தது.
“அனுப்பிட்டாருங்க. இப்ப உங்களுக்கு ஓகே வா” என சிரித்தார் ரத்தினம்.
“சார் இன்னொரு லாஸ்ட் ஸ்டெப் பண்ணிடுங்க” என சொன்னார் சங்கு புஷ்பம்.
நேசப்பா ரத்தினம் முன் இருந்த கோப்பையை நிரப்ப ஆரம்பித்தார். ரத்தினம் அதை காதலாய் பார்க்கும் பொது இன்னொரு துண்டு சீட்டை கொடுத்தார் சங்கு புஷ்பம்.
“இவரு எங்க லாயர். எங்க எல்லா டீலிங்க்லயும் அவரு இருப்பாரு. இப்போ அண்ணன் சார்பா நீங்க டீல் பண்றீங்க. அதனால இவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பிடுங்க” என்றார் சங்கு புஷ்பம்.
அவரின் ஒரு கையில் அப்போது கோப்பை இருந்தது. லாஸ்ட் ஓவர் வேறு. ஆல்ரெடி மேட்ச ஜெயிச்சாச்சு. இன்னும் ஏன் கவலைப்படணும் என்று நினைத்தார் ரத்தினம்.
“இந்தாங்க மேடம். நீங்களே அனுப்பிடுங்க” என அவர் போனை கொடுத்தார் ரத்தினம்.
நேசப்பா கோபால் சாருக்கு மனதார நன்றி சொன்னார். சங்கு புஷ்பம் சுறுசுறுப்பாக எழுத ஆரம்பித்தார்.
“அன்பு அண்ணன் சார்பாக உங்கள் கட்சிக்காக நங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். சகோதரர் நேசமணியின் வார்டு கவுன்சிலர் தேர்தல் வெற்றிக்காக நான் மற்றும் அண்ணண் எல்லா உதவிகளையும் செய்து தருவோம் என மனதார உறுதி மொழிகிறேன். எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதங்கள் அவருக்கு கிடைக்க மனதார பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு ரத்தினமுத்து சேகர்.
அடுத்த நொடி அது சித்தா டாக்டர் நேசமணியின் இரண்டாவது போனுக்கு போய் சேர்ந்தது. ஆனால் ஒரு டிக்கிலேயே இருந்தது.
அப்பாடா என்றிருந்தது சங்கு புஷ்பத்திற்க்கு.
“இந்தாங்க சார். லாயருக்கு அனுப்பிட்டேன்” என போனை திரும்ப கொடுத்தார் சங்கு புஷ்பம்.
“மேடம் ரொம்ப பாஸ்ட்டா வேல பாக்குறாங்க சார்” என மனம் விட்டு பாராட்டினார் ரத்தினம்.
இதற்கு மேல் இவர் இங்கே தேவையில்லை என நினைத்தார் சங்கு புஷ்பம்.
“சரிங்க சார். நீங்க நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க” என சொல்லி ரத்தினத்தை வழியனுப்பி வைத்தனர் இருவரும்.
ரத்தினம் அண்ணனை கரைத்து முடிக்கும் போது, சங்கு புஷ்பமும் நேசப்பாவின் நிலையை சுருக்கமாக குமரஜோதிக்கு செய்தியாய் அனுப்பினார்.
பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த அவர் சங்கு புஷ்பம் சொல்வதை செய்வதாக ஒத்துக்கொண்டார்.
நன்றாக சாய்ந்து ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தார் ரத்தினம். “சார் அண்ணன் மேற்கொண்டு ஆக வேண்டியதை பாக்க சொல்லிட்டார். ரெண்டு எல் பிக்ஸ் பண்ண சொன்னாரு” என ஒரு எல்லை ஆட்டையைப் போட்டார்.
“சரிங்க பேசி பாக்குறேன்” என போனை எடுத்தார் சங்கு புஷ்பம். ஒரு பேப்பரில் “சித்தா டாக்டர் நேசமணி நம்பர்” என கொட்டையாக எழுதி கீழே நம்பரை எழுதினார்.
“நேஸ், இந்த ஸ்கிரீன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க” என அழைப்பு விடுத்தார்.
நேசப்பா எழுந்து போய் திரையை சரி செய்தார். இது ரத்தினம் காதால் கேட்டு கண்ணால் பார்த்தது.
நேசப்பா எழுந்தவுடன் சற்றே கண்ணைக் காட்டி பேப்பரை மேஜையில் நகர்த்தி வைத்தார் சங்கு புஷ்பம். திரையை சரி செய்து திரும்பும் போது பேப்பரை கவனித்தவர் அடுத்த ஓவரை வீச ஆரம்பித்தார்.
“நம்ம சித்தா டாக்டரு உங்களுக்கு நல்ல பழக்கமா? என கொக்கியைப் போட்டார் நேசப்பா.
என் வானத்தில் வரும் வானவில்லில் ஏழு நிறமில்லை, எழுபது நிறம் என்ற ரேஞ்சில் மிதப்பமாக இருந்தார் ரத்தினம்.
“இல்லீங்க. நாங்க கட்சிக்கு ரொம்ப விசுவாசமானவங்க. மாற்று கட்சிக்காரங்க கூட தொடர்பு வச்சிக்க மாட்டோம்” என பெருமையாக சொன்னார்.
“நாங்கண்ணா யாரு” என்றார் நேசப்பா.
“நானு, அண்ணன் அப்புறம் கொஞ்சம் முக்கியஸ்தங்க எல்லாருந்தான்” என அவர் அந்தஸ்த்தை அவரே கூட்டிக்கொண்டார்.
“இல்ல பொது வாழ்க்கைல இருக்கீங்க, நாலு நல்லது கெட்டதுல சந்திப்பீங்க. அதான் நேர்ல இல்ல போன்ல பேசிக்குவீங்களா”? என நுணுக்கமான ஒரு கேள்வியை போட்டார்.
சங்கு புஷ்பம் காத்திருந்தது இந்த கேள்விக்குத் தான்.
“இல்லேங்க. போன் தொடர்பு எதுவும் கிடையாதுங்க. நேர்ல பாத்தாலும் வணக்கத்தோடு முடிச்சுக்குவோம். போன்ல நாம ஒண்ணு சொல்ல போய் அத ரெக்கார்டு பண்ணி திரிச்சி போடுறானுங்க மொள்ளமாரி பசங்க. அதனால நம்பரெல்லாம் அநாவசியமா வாங்குறதும் இல்ல குடுக்குறதும் இல்ல” என ரத்தினம் விஸ்க்கி போட்டு டீ ஆற்றினார் நேசப்பாவிடம்.
சங்கு புஷ்பம் காதில் தேனாய் பாய்ந்தது அவர் பதில். சரி கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என தைரியம் வந்தது.
கோமதியின் மெசேஜ் போனில் வர உன்னிப்பாக பார்த்தார் சங்குபுஷ்பம்.
ரத்தினம் கத்தையாக பணத்தை எடுத்து எண்ணி அதில் கொஞ்சம் சங்குபுஷ்பத்திடம் கொடுத்து ஏதோ சொல்வது தெளிவாக இருந்தது. நல்லது என எண்ணிக்கொண்டு கோமதிக்கு ஒரு நன்றியை அனுப்பினார்.
தோராயமாக அவர் ட்ரேஷரு ட்ரோவில் எவ்வளவு இருக்கும் என அந்த வீடியோவிலிருந்து தெரிந்தது.
குமரஜோதிக்கு அவசர செய்தி அனுப்பினார் சங்கு புஷ்பம்.
“நலத்திட்டம் காத்திருக்கிறது. அடையாள அட்டை நகலுடன் வரவும்” என்று.
குமரஜோதிக்கு பரவசம் தாங்கவில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு விரைவாக கிளம்பினார்.
“சார் அவங்க ரெண்டு எல்லுக்கு ஓகே சொல்லிட்டாங்க. ஆனா ஒரு கண்டிஷன். ஒரு எல் இப்பவே தர சொல்றாங்க. ஒரு டாக்குமெண்ட் காப்பி உங்க கிட்ட இப்ப தருவாங்க” என கடையை விரித்தார் சங்கு புஷ்பம்.
“இப்போ அவ்ளோ இல்லீங்களே, ஒரு ரெண்டு நாள் கழிச்சு தரவா” என தவிர்க்கப் பார்த்தார் ரத்தினம்.
“சார் அது நமக்கு ரொம்ப ரிஸ்க்கு. அவங்களுக்கு இப்ப விஷயம் தெரிஞ்சுருச்சு. நீங்க ஒடனே தரேல்லண்ணே நேரா சித்தா டாக்டரு கிட்ட போய் நிப்பாங்க. அப்புறம் இந்த டீலுக்கு நாங்க பொறுப்பு இல்ல. அவர் இந்த பார்ட்டி எலெக்சன்ல நிக்காம இருக்க கூட குடுக்குறேனு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என ரத்தினத்தின் அடி வயிற்றில் ஏற்கெனவே குத்திய இடத்திற்குப் பக்கத்தில் கொஞ்சம் புளியை கரைத்தார் சங்கு புஷ்பம்.
ஜாடை மாடையாய் இவர்களும் தங்களின் கட்சி தாவும் எண்ணத்தையும், ரத்தினத்திற்க்கு அது உண்டாக்கும் அபாயத்தையம் அவர் மூளையில் திணித்தார்கள்.
செத்தாண்டா சேகரு என நிமிர்ந்து உட்கார்ந்தார் நேசமணி. மனைவியிடம் இருந்து குச்சியை இவர் வாங்கிக்கொண்டு ரிலேவில் ஓட ஆரம்பித்தார்.
இப்படி ஒரு சூழ்நிலை வரும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ரத்தினம்.
“சார் எல்லாரும் எங்கள மாதிரி இருக்க மாட்டாங்க. நாங்க டீல் முடியுற வரை ஒரு பைசா அட்வான்ஸ் வாங்க மாட்டோம். ஆனா மத்தவங்க அப்படி கிடையாது. இது ஒரு சிக்கலான விஷயம். காதும் காதும் வெச்ச மாதிரி முடிக்கணும். ரொம்ப இழுக்கக் கூடாது. விஷயம் சித்தா டாக்டருக்கு தெரிஞ்ச நெலமை நம்ம கை மீறி போய்டும்” சங்கு கரைத்த புளியில் சற்று தூக்கலாக காரத்தை கொட்டினார் நேசப்பா.
குச்சி இப்போது சங்கு புஷ்பம் கையில். “சார் இதெல்லாம் ஆரம்பிச்சா ஸ்லோ பண்ண கூடாது. எங்க டீல்ல பாதி அமௌண்ட்டுக்கு படிஞ்சிருக்கு.அதுவே உங்களுக்கு லக்கு. மார்க்கெட் இப்போ ரொம்ப ஸ்பீடு சார். சித்தாக்கு ஒரு போன அவன் போட்டா நம்ம உழைப்பெல்லாம் வேஸ்ட்டு சார்” என்றார்.
“நீங்க வேற அண்ணண் கிட்ட ரெண்டு பேர பிக்ஸ் பண்ணிட்டேன்னு சொல்லிட்டீங்க. அவரும் அமௌண்ட்டுக்கு சரினு சொல்லிட்டாரு. இப்ப நீங்க வெறும் கையோட போய் டீல் முடியலன்னு சொல்ல முடியுமா?” என இன்னொரு பாயிண்ட்டை போட்டார் நேசப்பா.
இந்த அம்மா பல ஜென்மமா இந்த தொழில்ல இருக்கும் போல என மலைத்துப் போனார் ரத்தினம்.
“நம்பிக்கை தான் இந்த மாதிரி டீலிங்க்ல முக்கியம். நாளைக்கு உங்கள பகச்சிக்கிட்டு இந்த ஏரியால அவங்களால நடமாட முடியுமா?” என லேசாக ரத்தினத்தின் ஈகோவை முத்தமிட்டார் நேசப்பா.
அந்த முத்தம் ரத்தினத்தை கிறக்கமாக்கியது. “அது எப்படி சார் நடமாட முடியும்? அண்ணன் நல்லவங்களுக்கு நல்லவர். கெட்டவங்களுக்கு கேடு கெட்டவர்” என பன்ச் டயலாக்கை போட்டார் ரத்தினம்.
நாம நல்லவங்களா இல்ல கெட்டவங்களா என யோசித்தார் நேசப்பா.
“சார் உங்களுக்கு சரினு தோணுச்சுன்னா குடுங்க, இல்லேன்னா வேணாம்” என பந்தை அவர் பக்கமே போட்டார் சங்கு புஷ்பம்.
நாலு ஆங்கிள்ல நல்லா யோசித்து கொடுக்கலாம் என முடிவெடுத்தார் ரத்தினம்.
அவரே போய் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான ரெண்டாயிரத்தையும் கொடுத்தார் சங்கு புஷ்பத்திடம்.
நேசிப்பாவிற்க்கு காஃபி குடிக்க வேண்டும் போல இருந்தது. இது இன்னும் எவ்வளவு நேரம் போகும் எனவும் தெரியவில்லை.
சங்கு சிஸ்டத்திலும் போனிலும் மாறி மாறி வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு பாவமாக இருந்தது. மிகவும் காயப்பட்டு போயிருக்கிறாள். அவள் இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்ததே கிடையாது. எப்பொழுதும் சிரிப்பும் பேச்சுமாக இருப்பவள்.
ரத்தினம் உள்ளே வந்ததிலிருந்து அவள் உடல் மொழி முழுதாய் மாறிப் போயிருக்கிறது. பெரும்பாலும் சிஸ்டத்தில் இருந்தாலும் நம் மீது ஒரு கண்ணும் காதும் வைத்திருக்கிறாள். எந்த சூழ்நிலையிலும் அவள் பின் வாங்கவே இல்லை என மனைவியை நினைத்து பூரித்துப் போனார் நேசப்பா.
சங்க மேட்டரை மண்டையில் ஊறப்போட்டு அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் ரத்தினம். அவர் முன் இருந்த காலி கோப்பையை ஓரக் கண்ணால் பார்த்து நேசப்பாவிடம் சிக்னல் கொடுத்தார் சங்கு புஷ்பம்.
நாக்கை சுழட்டி கன்னத்தில் துருத்தியபடி முன் மண்டையை லேசாய் ஆட்டினார் நேசப்பா.
பிறகு சற்றே யோசித்தவராக “டூ பில்டர் காஃபி வித்தவுட் சுகர்” என கோபால் சாருக்கு செய்தியனுப்பினார் சங்கு புஷ்பம்.
“சார் பன்னெண்டு நாப்பது. இன்னும் உங்களுக்கு பத்து நிமிஷம் இருக்கு” என்றார் சங்குபுஷ்பம்.
இன்னொருமுறை அவமானப்பட ரத்தினம் தயாராக இல்லை. பேசாமல் கிளம்பி போய் விடலாம் என தோன்றியது.
இன்னும் பத்து நிமிஷம் இருக்கில்ல மேடம், சொல்றேன்” என சொன்னார் ரத்தினம்.
கறார் காட்டுகிறாராம் என மனதிற்குள் இடித்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.
அடுத்த செய்தியை தண்ணீர் கேன் குமரஜோதிக்கு போட்டார்.
“நேசமணி உங்க மனைவியா” என்று அனுப்பினார்.
ஆமாம் மேடம். என்ன விஷயம் என பதில் வந்தது உடனே.
“உங்க ஹெல்ப் வேணும். முக்கியமான விஷயம். நேசமணியோட அடையாள அட்டை நகலை என் போனுக்கு அனுப்புங்க. டூ ஹவர்ஸ்ல கால் பண்றேன்.
மேடம் கேட்டா சரியான விஷயமாத்தான் இருக்கும். ஏதாவது மகளிர் நலத் திட்டமா இல்லை மகளிர் லோன் விஷயமா இருக்குமா என யோசித்தார்.
ஓகே மேடம் என பதில் வந்தது.
இரண்டு நிமிடங்களில் கணவர் நேசமணி மற்றும் இல்லத்தரசி நேசமணியின் அடையாள அட்டை ப்ரிண்ட்டரில் வெளியே வந்தது“.
இந்த ஒரு கேண்டிடேட்டுக்காக அஞ்சு எல் அண்ணன் ஓகே பண்ணிட்டார். இந்த அம்மா இன்னொரு ஆள ரெடி பண்ணலாம்னு சொல்லுது. இவர்களுக்கே நாலு எல் பேசியாச்சு. இந்த டீலிங்கில் தனக்கு என்ன மிஞ்சும் என கணக்குப் போட்டார் ரத்தினம்.
டாக்டர் நேசமணி வாங்க போறது முக்காவாசி படிச்சவங்க ஓட்டு. இந்த சொசைட்டிலயே ஆயிரத்து ஐநூறு ஒட்டு இருக்கும். இவரு ஒரு ஆயிரமாவது வாங்கிடுவாரு. அப்புறம் இன்னொரு நேசமணி எவ்வளவு ஓட்டு வாங்குறாரோ அது போனஸ்.
அந்த பக்கம் அண்ணன் கொஞ்சம் ஓட்டுக்கு செலவு பண்ணுவார். எப்படியும் ஒரு ஆயிரத்து இருநூறாவது ஓட்டாவது இந்த டீலிங்கால அண்ணிக்கு லாபம். அதுவும் ரெண்டு கேண்டிடேட்டு பிக்ஸ் பண்ணா தனக்கு ரொம்ப கெத்தா இருக்கும் என நினைத்தார்.
டோர் பெல் அடித்தது. கோபால் சார் வீட்டு பணிப்பெண்.
நேசப்பா போய் ட்ரேவை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லி அனுப்பினார்.
ரெண்டு காஃபி இருந்தது. மூவரும் சேர்ந்து ஒரு டிரிங்க்ஸ் பிரேக் எடுத்தார்கள்.
பிரேக் முடிந்து அடுத்த ரெண்டாயிரத்தை கொடுத்தார் ரத்தினம்.
சார் ஒண்ணு பத்து இப்போ. ரெண்டு பத்து வரை உங்க டைம்” என்றார் சங்கு புஷ்பம். எத்தனை கோடி சம்பாதித்தாலும் இந்த அம்மா திருந்தாது என நினைத்தார் ரத்தினம்.
“என்ன சார் சொல்றீங்க. இன்னொரு பார்ட்டி டீலிங் வேணுமா வேணாமா?” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.
“கெடச்சா நல்லது மேடம். ஆனா உங்களுக்கு சொன்ன பட்ஜெட் அவங்களுக்கு தர முடியாது” என நிலைமையை சொன்னார் ரத்தினம்.
காபி இப்போது தான் வேலை செய்கிறது என் நினைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.
“அவங்க ஒத்துக்கிட்டாங்களா மேடம்” என வாயை பிளந்தார் ரத்தினம்.
“நா என்ன ஜோக் சொல்றேன்னு நெனைச்சீங்களா. அவங்க ஒத்துக்கிட்டு டாக்குமெண்ட் கூட அனுப்பிட்டாங்க. நீங்க நல்ல அமெளண்டா சொன்னீங்கன்னா முடிச்சிடலாம். இதுல எங்களுக்கு ஒரு நயா பைசா லாபம் கிடையாது.” என டேபிள் மேல் இருந்த பேப்பரை உயர்த்தி காண்பித்தார் சங்கு புஷ்பம்.
“நெஜமாவே இந்த அம்மா சூப்பரா வேல செய்யுது. உக்காந்த எடத்துல இருந்தே வாயக் கூட தொறக்காம ஆள மடக்கியிருக்கு. ஜெகஜ்ஜால கில்லாடியா இருக்கு.
நம்ம ரெண்டு மூணு நாள் தேடி, இங்க அரை நாள் உக்காந்து முட்டி மோதிக்கிட்டு இருக்கோம்” என பிரமித்துப்போனார் ரத்தினம்.
அந்த பிரமிப்பை அழகாய் ஸ்கேன் செய்தார் நேசப்பா.
“அண்ணன் கிட்ட பேசி டீல முடிங்க ரத்தினம். அப்புறம் பாருங்க கட்சில ஒரு பய உங்கள நெருங்க முடியாது. நீங்க வேற லெவெல்ல வருவீங்க” என பூஸ்ட் ஏற்றினார் நேசப்பா.
கடவுளுக்குத்தான் தெரியும் சங்கு என்ன செய்யப் போகிறாள் என்று நினைத்துக் கொண்டார்.
நேசப்பா அவர் வேலையை தொடர மீண்டும் ரிலே ரேஸில் ஓடத் தொடங்கினார் சங்கு புஷ்பம்.
லக்ஷ்மி இணையத்தில் இருந்து டாக்டர் நேசமணியின் நம்பரை எடுத்து அனுப்பினார் அம்மாவுக்கு. அம்மாவும் எங்கோ இருக்கும் பெண்ணும் காலை சுற்றிய இந்த பாம்பை அடித்துக் கொல்வது என தீயாய் வேலை பார்த்தார்கள்.
சங்கு புஷ்பம் அதை அவர் போனில் சேவ் செய்தார். பிறகு வாட்சப் போய் பார்த்தார். டிபி இல்லை. நேசமணி என பெயர் மட்டும் இருந்தது. லாஸ்ட் ஸீன் எஸ்டர்டே என இருந்தது. டயல் செய்து பார்த்தார். நாட் ரீச்சபிள். சரியான தருணம் என் முடிவு செய்தார்.
ரத்தினத்திற்கு அவர்களின் வேகம் ஆச்சர்யமாக இருந்தது. இதான் படிச்சவங்களுக்கு வித்தியாசம்.
அவரின் பாதி வேலை குறைந்தது போல உணர்ந்தார். இவ்வளவு தூரம் சொல்கிறார்கள். அண்ணனுக்குப் பேசி பார்க்கலாம் என போனை எடுத்தார் ரத்தினம்.
“ஒரு நிமிஷம். நீங்க பேசிட்டு அவரு ஒத்துக்கிட்டர்னா அவர் எங்களுக்கு கன்பார்ம் பண்ணனும். உங்கள மட்டும் நம்பி இந்த வேலைல எங்களால இறங்க முடியாது. அவர் எங்களுக்கு கோஆப்பரேட் பண்ணனும்” என வலையை விரித்தார் சங்கு புஷ்பம்.
“சொல்லுப்பா ரத்தினம்” என ஆரம்பித்தார் அண்ணன்.
“அண்ணே, நேசமணி சார பாத்துப் பேசிட்டேன். நல்ல படியா முடிஞ்சுது. அப்புறம் அண்ணே, இன்னொரு நேசமணி கேண்டிடேட்டு டீடைல் இருக்கு. அதுவும் பிக்ஸ் ஆகுற மாதிரி இருக்கு. ஆனா அவங்க பட்ஜெட் நீங்க தான் சொல்லணும்” என இழுத்தார் ரத்தினம்.
இவ்வளவு பெரிய வேலக்காரனா இருக்கான். இதெல்லாம் பத்து நாள் நடையாய் நடந்து அவர்களுக்கு புரிய வைத்து அவர்கள் வீட்டில் உள்ளவர்களையும் சரி கட்டி செய்வது. இவன் அரை நாளில் ரெண்டு பேரை பிக்ஸ் பண்ணியிருக்கான் என பூரித்துப் போனார் அண்ணன்.
“சபாஷ் ராஜா. இன்னும் மூணு எல். அதுக்கு மேல தாங்காது. அண்ணிகிட்ட உன்ன பத்தி சொல்லி வெக்குறேன். ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வா” என தாங்கினார் அண்ணன்.
“ரொம்ப நன்றிங்கண்ணே. அவங்க உங்க சைடிலிருந்தும் கன்பார்ம் பண்ண சொல்லி கேட்டிருக்காங்க. டீல் முடிஞ்ச ஒடனே உங்கள திரும்ப கூப்புடுறேன்” என முடித்தார் ரத்தினம்.
“சரி சரி நீ என்ன சொன்னாலும் எனக்கு ஓகே” என்றார் அண்ணண்.
அவர் காதால் கேட்டதை அவரே நம்பவில்லை. நிலை கதவு தாண்டி யாரையும் அவர் அவ்வளவு சீக்கிரம் உள்ளே விடமாட்டார். இப்போ சாப்பாட்டுக்கு கூப்பிடுகிறார்” என அகமகிழ்ந்தார் ரத்தினம்.
“சார், பதினொன்னு நாப்பது ஆகுது. லாஸ்ட் டென் மினிட்ஸ்” என்றார் சங்கு புஷ்பம்.
டீலிங் படகு நடு கடலில் இருக்கிறது ரத்தினத்திற்கு. டைம் அவுட் வெளியே குதி என்பது போல் சொன்னார் சங்கு புஷ்பம்.
“ஏம்மா சார் கிட்ட இன்னும் நெறய விஷயம் பேசணும். கொஞ்சம் நேரம் ஆகும்” கடுப்பை அடக்கியபடி சொன்னார் ரத்தினம்.
“அப்போ டைம் எக்ஸ்ட்டென்ஷன்க்கு பே பண்ணிடுங்க சார் இப்போ” என்றார் சங்கு புஷ்பம்.
“ஏம்மா பேசி முடிச்சிட்டு கடைசியா போகும்போது குடுத்துட்டு போறேன்” என்றார் ரத்தினம்.
“சார் அரை மணி நேரமா இல்ல ஒரு மணி நேரமான்னு சொல்லிட்டு பே பண்ணிடுங்க. நாங்க நெக்ஸ்ட் அப்பாயின்ட்மென்ட் அட்டென்ட் பண்ணனும்” என அசால்ட்டாக சொன்னார் சங்கு புஷ்பம்.
தங்களுக்கு வெளியே யாரும் லைன் கட்டி நிற்கவில்லை. இவர் கிளம்பினால் சாப்பிட்டு ஆளுக்கு நாலு மாத்திரை போட்டுக் கொண்டு இழுத்துப்போர்த்தி தூங்கத் தான் போகிறோம்.ஆனாலும் சங்கு ரத்தினத்தை சத்தாய்ப்பது நேசப்பாவிற்கு ஆனந்தமாக இருந்தது.
எரிச்சலோடு மீண்டும் கதவோரம் போய் அவரின் ட்ரெஷரு ட்ரோவு ட்ரவுசரிலிருந்து கரன்சியை எடுத்தார்.
“இந்தாங்க, ரெண்டாயிரம். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு” என் நீட்டினார் ரத்தினம்.
பிறகு நிதானமாக மேஜை மீது கரன்சியை பரப்பி அதன் மீது டேபிள்வெயிட் வைத்தார். பக்கத்தில் இருந்த சேனிட்டைசரால் கைகளை துடைத்துக்கொண்டே “நோட்டு கொஞ்சம் ஈரமா இருக்குங்க.காசு மஹாலக்ஷ்மி சார். இவ்ளோ பெரிய கட்சியில எப்பேர்ப்பட்ட பொறுப்புல இருக்கீங்க. ஒரு நல்ல பர்ஸா வாங்கி யூஸ் பண்ணுங்க சார். அந்த பர்ஸ்ல நாலு ஏலக்கா, நாலு கிராம்பு அப்புறம் கொஞ்சம் பட்டை எல்லாம் ஒரு பச்சை கலரு துணில சுத்தி வைங்க. அப்புறம் பாருங்க உங்க கிராப் எங்க போகுதுன்னு” என வாஞ்சையாய் சொன்னார் சங்கு புஷ்பம்.
ட்ரவுசர் போட ஆரம்பித்த காலத்திலிருந்து அது தான் கல்லாப்பெட்டி ரத்தினத்திற்கு.
அடி வயிற்றில் குத்திய ரணம் ஆருகையில் அவர் ஈகோவில் ஒரு இடி இடித்தார் சங்கு புஷ்பம்.
“எப்பேர்ப்பட்ட பொறுப்புனு ” இந்த அம்மா சொல்லுற மாதிரி தான் எந்த பொறுப்புல இருக்கோம்னு குழம்பினார்.
“நாலு எடத்துக்கு போறவரு. பெரிய மனுஷங்களை பாக்குறவரு நீங்க போற எடத்துல எல்லாம் ஒதுக்குப்புறம் தேட முடியுமா. இப்ப வேற எல்லா மூலை முடுக்குலேயும் சிசிடிவி கேமரா இருக்கு” என ஒரு எக்ஸ்ட்ரா பாயிண்ட்டை போட்டார் சங்கு புஷ்பம்.
பகீரென்று ஆனது ரத்தினத்திற்க்கு. பர்ஸ் வாங்கி விட்டுத்தான் மறு வேலை என உறுதியெடுத்தார்.
சக டிரௌசர் கோஷ்டியையும் அலெர்ட் செய்ய வேண்டும் என குறித்துக்கொண்டார்.
வந்த வேலைக்கு பிள்ளையார் சுழி கூட போடாத நிலையில் நாலாயிரம் பணால். இன்னும் இவர்களை வைத்து எப்படி மொத்த டீலிங்கையும் முடிப்பது என நாக்கு தள்ளிப்போனார் ரத்தினம்.
நேசப்பாவிற்கு யோசிக்க நேரம் நிறைய கிடைத்தது.
தொடர்ந்து சங்கு புஷ்பம் ரத்தினத்திடம் பேச்சு கொடுத்துக்கொண்டே போனிலும் சிஸ்டத்திலும் வேலை செய்து கொண்டிருப்பதை கவனித்தார் நேசப்பா.
இப்போது அவர் நிராயுதபாணி. அவர் எதிரே இருக்கும் ரத்தினத்தை நேருக்கு நேர் கையாளுவதே அவருக்கு சவாலான காரியமாக இருந்தது. அதனால் சங்கு புஷ்பம் கொடுக்கிற குறிப்புகளை கொண்டு இந்த சூழ்நிலையை எதிர் கொள்வது என முடிவெடுத்தார்.
சங்கு புஷ்பத்தின் மனம் வேதனையாய் இருந்தது. தலை மறைவு வாழ்க்கை வரை நேசப்பாவை கொண்டு சென்றதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
நமக்கு விருப்பமில்லை என சொல்லி ஒதுங்கிக்கொள்ளலாம். ஆனால் இவர் வேறு இரையை போய் தேடுவதை நிறுத்த முடியாது. எனவே ரத்தினத்திற்கும், அவரின் ஆருயிர் அண்ணனுக்கும்,அருமை அண்ணியின் வெற்றிக்கும் கன்னி வெடி வைக்க வேலையை ஆரம்பித்தார்.
“நா மட்டுந்தானா இல்ல வேற யாராவது இந்த பேர்ல இருக்காங்களா உங்க டீலிங்க்ல” என அடுத்த ஓவரை வீச ஆரம்பித்தார் நேசமணி.
இக்கட்டான கேள்வி இது ரத்தினத்திற்கு. அவர் இன்னும் டிரௌசர் ட்ராமாவிலிருந்தே வெளியே வரவில்லை.
பர்ஸ் பச்சைக்கலரு துணி என மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவரை வாலன்டரியாக வண்டியில் தூக்கிப் போட்டார் நேசப்பா.
குமாரு, சேகரு என வேட்பாளராக இருந்தால் தெருவுக்கு தெரு அந்த பெயரில் ஆட்கள் இருப்பார்கள்.
இந்த நேசமணி, அலெக்சாண்டர் எல்லாம் இம்சை புடிச்ச பேர்கள். எங்காவது ஒன்றிரண்டு தான் இருக்கும். அதில் ஒன்று வேட்பாளராக இருக்கும். அந்த வார்டில் மாற்றுக்கு எங்கே தேடுவது.
என்ன சொன்னாலும் சிக்கல். இவர் ஒருத்தர் தான் என்றால் ரேட் இன்னும் ஏற்றுவார்.
“அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க. நம்ம மேட்டர முடிக்கலாம்” என அவசரம் காட்டினார் ரத்தினம்.
“இல்ல நாங்க ஒரு சங்கமா இருந்தா நல்லது பாருங்க” அதான் கேட்டேன் என சொன்னார் நேசப்பா.
சங்கமா, இவங்க ரெண்டு பேரையே சமாளிக்க முடியல. இதுல இவங்க செட்டு சேந்தா அவ்வளவு தான் என பயந்தார் ரத்தினம்.
“நீங்க ஒருத்தரரு தாங்க” என பம்மினார்.
நேற்று வரை அரசியல் வாடையே இல்லாமல் இருந்தவர்கள் இவர்கள்.
இந்த காலை பொழுது அவர்களுக்கு அதன் இன்னொரு பரிணாமத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.
சங்கு புஷ்பமும் கார்பொரேஷன் மற்றும் தேர்தல் ஆணைய வெப்சைட் என எல்லாவற்றையும் துழாவினார். ஓரளவிற்கு அவருக்கு விஷயம் பிடிபட்டது.
லக்ஷ்மி அனுப்பிய லிஸ்டையும் டவுன்லோட் செய்து ப்ரிண்டு எடுத்தார்.
நேசப்பா பேசிக்கொண்டே இருக்க பிரிண்டர் சரக் சரக்கென்று ஓயாமல் வேலை செய்து கொண்டிருந்தது.
“ரத்தினம் நம்பர விசிட்டர் நோட்ல எழுதி இருப்பார். அத எனக்கு வாட்சப் பண்ணுங்க” என செல்லகுமாருக்கு செய்தி அனுப்பினார் சங்கு புஷ்பம்.
அடுத்த செய்தி கல்பனாவுக்கு. சிட்டி போலீசில் வேலை செய்பவர். பி ப்ளாக்கில் குடியிருக்கிறார். இந்த சொசைட்டிக்கு வருவதற்கு முன்பே சங்கு புஷ்பத்திற்கு பழக்கம். அடிதடி, கத்தி குத்து, ஆக்ஸிடெண்ட், சூசைட் அட்டெம்ப்ட் என எல்லா கேசும் ஜி.எச்சுக்கு தான் வரும்.
“சிஸ்டர், இந்த கேஸ கொஞ்சம் மானிட்டர் பண்ணுங்க” என சங்கு புஷ்பத்திடம் உதவிக்கு வருவார் கல்பனா.
அந்த வார்டுல எந்த சிஸ்டர் ஷிப்ட்ல இருக்காங்க என பார்த்து சர்வைலென்சுக்கு சொல்லி வைத்து விடுவார் சங்கு புஷ்பம்.
நைட் ஷிப்ட் நர்சஸம்மா தலைய டேபிள்ள கவுந்துக்கிட்டு தூங்குது என என்ன பேசினாலும் கல்பனா காதுக்குப் போய்விடும். ரெண்டு தனிப்படை போட்டாலும் கிடைக்காத ரிசல்ட் அது.
ஆள் பேரு இரத்தின முத்து சேகர். வயசு அம்பது கிட்ட. கட்சி பேரு ஏரியா பேரு போட்டு டீடெயில்ஸ் கேட்டு அனுப்பினார் கல்பனாவுக்கு. சிக்கலான விஷயத்தில் இருப்பதாக உதவி கேட்டார் சங்கு புஷ்பம்.
மூன்றாவது செய்தி கோமதிக்கு. இன்னைக்கு காலைல பத்து முப்பதுலேர்ந்து பத்து நாப்பதுக்குள்ள பிப்த் ப்ளோர் காரிடார் சிசிடிவி புட்டேஜ் அனுப்பும்மா.
அப்டியே பத்துமணி கிட்ட அவர் விசிட்டர் நோட்ல நேசமணின்னு பேர் எழுதுவாரு. அத ஜூம் பண்ணி எடுத்து போடும்மா”.
பர பரவென்று டைப் செய்து அனுப்பினார் சங்கு புஷ்பம்.
மூவரின் பதிலுக்கு காத்திருக்கும் வேளையில் லக்ஷ்மி அனுப்பிய வாக்காளர் லிஸ்டை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தார் சங்கு புஷ்பம். இன்னொரு பட்சி மாட்டியது.
பக்கத்துத் தெருவில் ஒரு தகுதிவாய்ந்த இல்லத்தரசி இருக்கிறார் நேசமணி என்ற பேரில்.
ரத்தினம் முன்பே இருந்த க்ளாசில் சரக்கு காலியாகி இருந்தது. நேசமணி ஒரு இருபாலர் பெயர் என்பதை அவர் கவனிக்கவில்லை.
வேட்பாளர் ஆண் என்பதால் ஆண் வாக்காளரை தேடுவதிலேயே குறியாய் இருந்திருக்கலாம்.
இதுவரை நடந்தவற்றை மகளுக்கு செய்தியாய் அனுப்பினார். பாவம் அவள். சொல்லாமல் இருந்திருக்கலாம் என நினைத்தார் சங்கு புஷ்பம்.
கணவர் பெயர், முகவரி என கிடைத்த தகவல்களை நோட் செய்து கொண்டார்.
அப்போது தான் அவருக்கு மண்டையில் அடித்தார் போல் அந்த பெயர் ஞாபகம் வந்தது. கணவர் பெயர் குமரஜோதி என இருந்தது. முகவரியும் அவர்கள் கடை இருக்கும் ஏரியா. இவர்கள் சொசைட்டிக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர். நல்ல பழக்கம். குணமான மனிதர்.
சந்தேகமே இல்லாமல் சங்கு புஷ்பத்திற்கு அது கடவுள் இருக்கான் குமாரு மொமெண்ட் தான்.
டிங் என மெசேஜ் வந்தது செல்ல குமரிடமிருந்து. போனை எடுத்து முதலில் சைலண்டில் போட்டார் சங்கு புஷ்பம். ரத்தினம் நம்பர் வந்து சேர்ந்தது.
“இன்னொருத்தர் கெடச்சா ஓகேவா” எனக் கேட்டார் சங்கு புஷ்பம். “யாரு” என புருவத்தை நெளித்தார் ரத்தினம்.
“இன்னொரு நேசமணி கெடச்சா ஓகேவா” என அழுத்திக் கேட்டார் சங்கு புஷ்பம்.
“அது வந்து, இல்லியே” என இழுத்தார்.
“அட நல்லது தானே. ஆள் கூட கூட குழப்பம் கூடும்ல. இன்னும் டாக்டருக்கு ஓட்டு குறையும்ல” என ஒத்து ஊதினார் நேசப்பா.
“இல்லேங்க, இவரு ஒருத்தர் தான்” என திடமாய் சொன்னார் ரத்தினம்.
“சரி, எனக்கு தெரிஞ்சு இன்னொருத்தர் இந்த பேர்ல இருக்காங்க நம்ம ஏரியால.
காபி குடிக்கும் நேரம் இரண்டு தரப்பும் தங்களை கொஞ்சம் தயார் படுத்திக்கொண்டார்கள். “கண்டிப்பா ஜெயிக்க வெச்சுடுவீங்களா” என்றார் நேசப்பா.
ரத்தினம் சற்று முன்னே வந்து “இல்ல சார், எங்க ஆளு ஜெயிக்க வியூகம் சார் இது” என்றார்.
“அப்போ நா தோக்கணுமா?” என நெருடலாய் கேட்டார் நேசமணி.
“அதுக்காகத்தான் சார் இந்த ஆபர். ஜஸ்ட் கொஞ்சம் கோஆப்பரேட் பண்ணீங்கன்னா ஈஸியா ஒரு அமௌண்ட் பாக்கலாம்” என்றார் ரத்தினம்.
பல முறை பேப்பரில் படித்த செய்தி இப்போது அவர் முன்னே மலையாய் வந்து நிற்கிறது. திரும்பி சங்கு புஷ்பத்தை பார்க்க, தொடருங்கள் என்பது போல அவர் தலையை ஆட்டினார். தன் சுயமரியாதையின் விலை பட்டியலிடப்பட்டு பேரத்தில் இருப்பது உறுத்தியது. சற்று பிறகுதான் அது வெறும் தன் பெயருக்கான விலை என்று புரிந்தது. மூச்சை இழுத்து விட்டு சாய்ந்து உட்கார்ந்தார் நேசப்பா.
தோத்தா எனக்கு கெட்ட பேராச்சே சார்” என்றார் நேசப்பா.
அதெல்லாம் கொஞ்ச நாள்ல ஜனங்க மறந்துடுவாங்க சார். உங்க லாபத்தை மட்டும் பாருங்க சார். ஒண்ணுமே பண்ணாம உக்காந்த இடத்துல இருந்து ஒரு வாய்ப்பு. இது எல்லாருக்கும் கிடைக்காதுங்க. திரும்பவும் வரும்னு சொல்ல முடியாதுங்க. யோசிச்சு சொல்லுங்க சார்” என மண்டையை கழுவ ஆரம்பித்தார் ரத்தினம்.
அவரின் அனுபவம் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்தது.
ரத்தினத்திற்கு அவர் நாலு வரி முழுதாய் பேசி முடித்த பிறகு தான் நம்பிக்கையை உணர்ந்தார். இன்னும் கொஞ்சம் அழுத்தினால் எப்படியும் முடிக்கலாம் என நினைத்தார்.
நேசப்பா இயல்புக்கு வந்தார். இன்னும் கொஞ்சம் போட்டு வாங்கலாம் என ஆரம்பித்தார்.
“என் பேருக்கு வெறும் மூணு எல் தானா? என்றார். பேரம் ஆரம்பித்தவுடன் ரத்தினத்திற்கு உள்ளே பெருமை பொங்கியது.
இந்த ரத்தினம் பேசினா எந்த கொம்பனும் மடங்கிடுவான் என குதூகலித்தார். என்ன பேச்சுடா சாமி பேசுனாங்க ரெண்டு பேரும் என எரிச்சலானார்.
பல்வேறு உணர்ச்சிகள் அவரை ஆட்கொள்ள, அதில் சிறிது அவரின் உடலிலும் முகத்திலும் தெரிந்தது.
“தோக்கணும், அசிங்கப்படணும், பேரும் கெட்டு போகணும், சொசைட்டில நடமாட முடியாது சார். இவ்வளுவுக்கும் விலை மூணு எல் னா சரிபடாது சார்”, என முகத்தை சுளித்தார் நேசப்பா.
ரத்தினத்திற்கு பொறுமை கொஞ்சம் ஆட்டம் கண்டது.
“சார் நாலு எல் பைனல் பிளஸ் உங்க எல்லா செலவும் எங்களோடது.
சொசைட்டில நடமாட முடியாதுனு பீல் பண்ணீங்கன்னா ஒரு மாசத்துக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஊட்டில ஏர் பிஎன்பில தங்க ஏற்பாடு பண்ணித்தரேன். போய் வர்ற செலவையும் ஏத்துக்கறேன்” சர சரவென பேசி தீர்த்தார் ரத்தினம்.
உயிரோடு பிணமாகவும், தலை குனிந்து நடக்கவும், தலை மறைவாய் வாழும் வரையும் திட்டம் தருவது நேசப்பாவை உலுக்கி எடுத்தது. மிக சாதாரணமாய் ஆரம்பித்த ஒரு சந்திப்பு கொதிநிலையின் உச்சத்திற்கு அவரை கொண்டு சென்றது. தேர்தல் வெற்றிக்காக சக மனிதனை விலை பேசுவது, அந்த சமூகத்தில் எளிய விளிம்பு நிலையில் இருக்கும் வாக்காளர்களை குழப்பி, தவறாக வழி நடத்தி ஆதாயம் காண்பது என அராஜகத்தின் முழு உருவமும் அவர் முன்னே விஸ்வரூபமாய் நின்றது.
வாழ்நாள் முழுவதும் நேர்மையாகவும் வலுவான தார்மீக கொள்கை பிடிப்புள்ளவராகவும் எல்லா சூழ்நிலைகளையும் சந்தித்தவர் நேசப்பா. அவர் கண்ணியத்தின் மீதும் நன்னெறிப் பண்புகள் மீதும் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு, அவரின் தனிப்பட்ட விழுமியங்கள் சூறையாடப்படும் அபாயத்திலிருந்தது. சமூக, அரசியல் மற்றும் பண செல்வாக்கோடு மூர்க்கமாகவும் அலட்சியமாகவும் நடத்தி அவரை இணங்கிப் போகும்படி செய்துவிடலாம் என எந்த எல்லைக்கும் செல்பவராக ரத்தினம் இருந்தார்.
பொருளாதார ரீதியாகவோ மன வலிமை ரீதியாகவோ பலகீனமானவர்களை எளிய இலக்குகளாக குறி வைக்கிறார்கள் ரத்தினம் போன்றவர்கள்.
உறுதியாகவும், மன உந்துதலோடும், நிதானமாக உணர்வுகளை கட்டுக்குள் வைத்தும் இந்த இழிவான போக்கில் சிக்காமல் இருக்க வழி வகைகளை சிந்தித்தார்கள் நேசப்பாவும் சங்கு புஷ்பமும்.
லக்ஷ்மிக்கு மனது சங்கடமாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் எப்படி தனியாக இந்த பிரச்சினையை சமாளிக்கப் போகிறார்கள் என மனது வருத்தப்பட்டார்.
தொடர்ந்து சங்கு புஷ்பம் அனுப்பும் செய்திகளில் இருந்து அங்கு என்ன நிலவரம் என தெரிந்து கொண்டார். செய்தி கேட்டதிலிருந்து இணையத்தில் இந்த தேர்தல், இதற்கு முன் நடந்த தேர்தலின் முடிவுகள் மற்றும் வாக்காளர் தகவல்கள் என எல்லா விஷயங்களையும் தேடி தேடி படித்தார்.
தனக்கு கிடைத்த எல்லா விஷங்களையும் அம்மாவுக்கு அனுப்பி வைத்தார். ஏதாவது ஒரு வகையில் அது அவர்களுக்கு உதவலாம் என் நம்பினார்.
கேண்டிடேட்டு புஷ்பாவுக்கு எதிராக டாக்டர் நேசமணி.
டாக்டர் நேசமணிக்கு வரும் வாக்குகளை பிரிக்க மற்றும் மக்களை குழப்ப அதே பெயரில் இருக்கும் சிலரை டம்மி வேட்பாளர்களாக நிறுத்துவது. சில வார்டுகளில் சொற்ப வாக்குகளில் வெற்றி வித்தியாசம் இருந்தது. ஆளும் கட்சி, எதிர் கட்சி, பிற வளர்ந்து வரும் கட்சிகள் ஏன் சுயேச்சை வேட்பாளருக்கு எதிராக கூட கடந்த தேர்தலில் இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டதை கவனித்தார். அது கேண்டிடேட்டு லிஸ்டில் அப்பட்டமாக தெரிந்தது.
யார் இதை செய்தார்கள் என பெரும்பாலும் பொது வெளியில் தெரியாது.
பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் இந்த போக்கு காணப்பட்டது.
படித்த வாக்காளர்களும் பாமரர்களும் பெரும்பாலும் அவர்கள் வார்டின் முழு லிஸ்டையும் அலசி ஆராய்வதில்லை. அது தெரிந்தாலும் பெரிதாய் எடுத்து கொள்வது இல்லை.
கேண்டிடேட்டு மற்றும் வாக்காளர்களும் இடையே இதில் நுட்பமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த டம்மி கேண்டிடேட்டுகள்.
அவர்கள் அரசியல் மற்றும் பொது வாழ்வில் இல்லாமல் இருக்கும் சாமானிய மக்கள்.
அவர்களுக்கு இருக்கும் தேவைகள் அல்லது பலகீனங்களின் காரணமாக டம்மியாக களம் காண்பவர்கள்.
அவர்களின் பெயரையும் சுய மரியாதையும் ஏதோ ஒரு அழுத்தம் அல்லது நிர்பந்தம் காரணமாக விலைக்கு விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள்.
லக்ஷ்மி கடந்த தேர்தல் முடிவுகளை மீண்டும் ஒரு முறை எடுத்துக் பார்த்தார்.
எந்த ஒரு வார்டிலும் அதில் போட்டியிட போகும் நபரை அந்த கட்சி சார்ந்த அல்லது அரசியல் தொடர்புடைய நபர்களுக்கு மட்டுமே இவர் வேட்பாளராக வருவார் என தெரிந்திருக்கும்.
பிரபலமான சுயேச்சை என்றால் கூட ஊகிக்க முடியும்.
ஆனால் பொது ஜனத்துக்கு தெரியவோ ஊகிக்கவோ வாய்ப்பு மிக குறைவு.
அதனால் இந்த அணுகுமுறையின் ஊற்றுக் கண் பொது ஜனம் அல்ல, கட்சி சார்புடையவர்கள் என முடிவுக்கு வந்தார்.
அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அல்லல் படும் பொது ஜனம் கண்டிப்பாக இந்த குறுக்கு வழி வாய்ப்பை பற்றி சிந்திக்கவோ அல்லது அது தொடர்பான தகவல்களை அணுகவோ இயலாதவர்கள்.
அடி மட்டத்தில், சமூக அல்லது பொருளாதார செல்வாக்கு இல்லாதவர்களாக இருக்கும் இவர்களை குறி வைத்து செய்யப்படும் இந்த இழி செயல் தடுக்கப் பட வேண்டும் என நினைத்தார் லக்ஷ்மி. இதை செய்பவர்கள் பொது சமூகத்தில் ஆதாரத்தோடு வெளிப்பட வேண்டும் என எண்ணினார்.
அந்த வார்டில் பதினாறாயிரம் வாக்காளர்கள் இருந்தார்கள் பட்டியலில். லக்ஷ்மி அந்த லிஸ்டை பிரிண்ட் எடுத்தார். நன்றாக படிக்கும் சில மாணவிகளை அழைத்து நேசமணி மற்றும் புஷ்பா பெயர் உள்ளவர்களை குறித்துக் கொள்ள சொன்னார்.
அதில் எல்லா காம்பினேஷன்களும் அடக்கம். வெறும் புஷ்பா மட்டுமல்லாமல் புஷ்பவல்லி, புஷ்ப குமாரி, புஷ்பா ராஜ் என ஆண் மற்றும் பெண் பெயர்களும் தேடப்பட்டது.
அதே போல நேசமணி என்ற பெயருக்கும். நேசமலர், நேசகொடி, நேசசெடி என எது இருந்தாலும் குறித்துக் கொண்டார்கள்.
முழு லிஸ்டும் ரெடியானது. புஷ்பா பெயரில் பதினெட்டு பேர். நேசமணி காம்பினேஷனில் மூன்று பேர்.
எல்லாவற்றையும் ஒரு எக்சல் ஷீட்டில் போட்டு அம்மாவுக்கு அனுப்பினார் லக்ஷ்மி. அந்த லிஸ்டில் சங்கு புஷ்பமும் இருந்தார்.
“அண்ணிய விட சித்தா டாக்டர் நேசமணி பவர்புல் இந்த வார்டுல. அதுனால அதே பேர்ல இருக்குறவங்கள கேண்டிடேட்டா சுயேச்சையா நிக்க வெக்க ஏற்பாடு பண்றேன். கொஞ்சம் ஓட்டு பிரியும். அது எங்களுக்கு சாதகமா இருக்கும்னு நம்புறன். அப்புறம் உங்களுக்கு என்ன பண்ணணுமோ அதையும் பண்ணிடுவோம் என்றார்” ரத்தினம்.
“என்ன பண்ணுவீங்க சார்” என்றார் நேசமணி.
“எல்லா செலவும் அண்ணன் பார்த்துப்பார் சார், நீங்க பேப்பர்ஸ் மட்டும் கரெக்ட்டா குடுத்தா போதும். பசங்கள வச்சி எல்லா வேலையும் பக்கவா நடக்கும் சார். உங்க நாமினேஷன் ஓகே ஆச்சுன்னா ஒரு அமௌன்ட் குடுத்துருவோம்” என்றார் ரத்தினம்.
“எவ்ளோ தருவீங்க” என்றார் நேசப்பா.
“ஒரு மூணு எல் தருவார் சார் அண்ணன்” என்றார் அவர்.
சந்தேகப்பட்ட விஷயம் தெளிவாகி விட்டது. இது காலை சுற்றிய பாம்பு என நினைத்தார் சங்கு புஷ்பம். சிஸ்டத்தில் அமர்ந்தபடியே லக்ஷ்மிக்கு போனில் செய்தி அனுப்பினார்.
“அரசியல் விஷயமா வந்து இருக்கீங்க, உங்களுக்கு எதுவும் சாப்பிட தர மறந்துட்டேன் பாருங்க. இதோ வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.
ரத்தினத்திற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. எப்படியும் படிந்து விடுவார் என தோன்றியது.
“இந்தாங்க சாப்பிடுங்க”, என ட்ரேவை வைத்தார் நேசப்பா.
ஒரு சின்ன பிளேட்டில் பிரியாணியும் ஒரு கிளாஸ் விஸ்கியும் இருந்தது.
அடி வயிற்றில் சரக்கென்று கத்தியால் குத்தியது போலிருந்தது ரத்தினத்திற்கு.
அவர் முகம் வெளிறிப்போனது
“இது இது” என ஏதோ சொல்ல வந்து தடுமாறினார்.
“சாப்பிடுங்க சார். எங்க ஆளுங்களை இத்தனை வருஷமா கூட்டிட்டு போய் கவனிச்சுக்கிட்டீங்க. ஒரு நாள் நாங்க செய்ய கூடாதா” என்றார் நேசப்பா.
எதிரியின் அடி வயிற்றில் கத்தியால் குத்தியும் வஞ்சம் தீராமல் அவன் கன்னத்தில் பளுக் பளுக்கென்று போட்டார் போல வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.
“இது சரி இல்லீங்க. இப்ப வேணாம் சார்” என நாக்குழறினர் ரத்தினம்.
இது அவர் இதுவரை சந்திக்காத ஒரு நிகழ்வு. இந்த விதமான உபசரிப்பு அவரின் மொத்த தயாரிப்பையும் சீர்குலைத்தது. யாரை பார்க்க வந்தோம் என்ன பேச வந்தோம் என சில நிமிடம் எல்லாம் மறந்து தத்தளித்தார் ரத்தினம்.
“ஓ, பகல்ல சாப்பிடறதில்லையா, சரி காபி டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா?” என வலையை விரித்தார் நேசப்பா.
ரத்தினத்திற்கு ஒரு பிடிப்பு கிடைத்தார் போலிருந்தது. ஆனாலும் அந்த டிரே அவரை உறுத்திக்கொண்டே இருந்தது.
முதல் பத்து நிமிடத்திலேயே கண்ணை கட்டியது ரத்தினத்திற்கு. பேசாம அரை மணிக்கு ஆயிரம் மட்டும் கொடுத்திருக்கலாம் என நினைத்தார்.
“காபில சர்க்கரை போடவாங்க?” என உள்ளிருந்து கேட்டார் சங்கு புஷ்பம்.
“வேணாம் சார்” என மெலிதான குரலில் சொன்னார் ரத்தினம்.
“பிபீ, சாருக்கு சர்க்கரை வேணாமாம்” என்றார் நேசப்பா நமுட்டு சிரிப்போடு.
“பிபீ இல்ல சார். நார்மல் தான். சுகர் மட்டுந்தான்” என்றார் ரத்தினம்.
“சங்கு புஷ்பத்தோட இன்னொரு பேரு பட்டர்பிளை பீ. அத தான் சுருக்கி என்ன பிபீனு கூப்பிடுவாரு” என சொல்லிய படியே காபி கொடுத்தார் சங்கு புஷ்பம்.
இடைப்பட்ட நேரத்தில் ரத்தினத்தின் பார்வை அடிக்கடி விஸ்க்கி கிளாஸ் மீது விழுந்து கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்திற்க்கு மேல் அதன் ஈர்ப்பு அவர் சுய கட்டுப்பாட்டை தகர்த்தது. அடி வயிற்றில் வாங்கிய கத்திக் குத்தின் ரணம் சிறு வடு கூட இல்லாமல் மறைந்து போனது. விஸ்க்கி கிளாஸ் வேலை செய்யும் என நேசப்பா நினைத்தது பொய்யாகவில்லை.
ஆனால் விஸ்க்கியை விட அந்த கிளாசை கட்சிக்காரர் அவ்வளவு நேசிப்பார் என நேசப்பாவே எதிர்பார்க்கவில்லை. எல்லாம் கோபால் சார் உபயம்.
ரத்தினம் ஆர்வம் தாளாமல் வாய் விட்டே கேட்டு விட்டார்.
“சார், இந்த கிளாஸ் சூப்பரா இருக்கு. எங்க சார் வாங்குனீங்க, எவ்ளோ விலை” என்றார்?
“அமெரிக்காவுல. ஜோடி பத்தாயிரம் நம்ம ஊர் வெலைல” கெத்தாக சொன்னார் நேசப்பா.
மூச்சடைத்துப் போவதற்கு முன் ஸ்டேஜில் இருந்தார் ரத்தினம்.
“அப்ப இந்த ஒரு கிளாஸ் மட்டும் அஞ்சாயிரமா சார்?” என வாயை பிளந்தார்.
“அஞ்சாயிரத்து சொச்சம் உள்ள இருக்க சரக்கு இல்லாம” என சொன்னார் சங்கு புஷ்பம்.
“கிளாஸ்ஸே அஞ்சாயிரம்னா சரக்கு எவ்ளோ இருக்கும்” என கணக்குப் போட்டார்.
ஆனாலும் சரக்கை விட அவரை சுண்டி இழுத்தது என்னவோ அந்த கிளாஸ் தான்.
ஒரு சைடில் இருந்து பார்க்க க்ளாஸுக்குள் கிளாஸ் போல் இருந்தது.
நீண்ட ஐங்கோண வடிவ வெளிப்புறமும் வைன் கிளாஸ் போன்ற உட்புறமும் மேலிருந்து உள்ளே பார்த்தால் சிறிய தங்க நிற சாண்ட்லியர் விளக்கு தரையில் பட்டு ஜொலிப்பதை போல விஸ்க்கி மிதந்து கொண்டிருந்தது.
ஐம்பது மில்லி கூட இல்லாத திரவம் முழு கோப்பையையும் வெளிற் மஞ்சள் நிறமாக்கியது.
சற்றே உட்புறம் குவிந்த வாய்ப்பகுதி தங்க வளையம் போல இருந்தது. கால் கோப்பைக்கும் கீழே இருந்தது விஸ்க்கி. மீதி இருந்த முக்கால் பகுதி காலி கோப்பையை ரசித்துக்கொண்டே இருந்தார் ரத்தினம்.
உயர் தர கண்ணாடியில் அருமையான வளைவுகளைக்கொண்டு பார்க்க கச்சிதமாக இருந்தது. மனதிற்குள் ஆருயிர் அண்ணனை நினைத்துக்கொண்டார் ரத்தினம்.
“பிச்சைக்கார பய. என்ன பதவி காசு இருந்து என்ன பிரயோஜனம். மாடு மாதிரி வேல செஞ்சாலும் ரெண்டு ரூபா பிளாஸ்டிக் கப்புல குடுக்குறான். அதுல ஊத்திக் குடிக்கவே என்னவோ வள்ளல் பிரபு மாதிரி பேசுறான்.
சார் தங்கம். நல்ல மனசுக்காரர். ஊரு பேரு தெரியாத எனக்கே அஞ்சாயிரம் ரூபா க்ளாஸ்ல அசால்ட்டா தர்றார்.
மனுஷன்னா இவர்தான்யா நல்ல மனுஷன். இந்த டீலிங் நல்ல படியா முடிஞ்சா அப்புறம் சாருகிட்ட டச்சுலேயே இருக்கணும் ” என யோசனை புல்லட்டை தாறுமாறாய் ஓட்டினார் ரத்தினம்.
“சார், பிரியாணி சாப்பிடலேன்னா பரவாயில்ல.போகும் போது பார்சல் பண்ணி தரேன். இதை குடிங்க சார்” என கிளாசை நீட்டினார் நேசப்பா.
புறக் காரணிகளால் வரும் ஆர்வம், எரிச்சல், பதட்டம், குழப்பம், தடுமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளுக்கும் எளிதாய் இரையானார் ரத்தினம்.
சூழ்நிலைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள அவர் எடுத்துக் கொள்ளும் காலம் அதிகம். அது இங்கே அவர் முன் இருக்கும் எதிராளிகளுக்கு யோசிக்க அதிக நேரத்தை அளித்தது.
சங்கு புஷ்பமும் நேசப்பாவும் சொல்லாலும் செயலாலும் அதை ஒருவர் மாற்றி ஒருவர் செய்து அவரை நெருக்கி கொண்டிருந்தார்கள்.