தாரா அன்று அங்கன்வாடிக்கு சென்று சேரும்போது பெரும்பாலான குழந்தைகள் வந்திருந்தார்கள். உதவியாளர் வெண்மணி அவர்களை அமர வைத்துவிட்டு, தண்ணீர் குடம் கொண்டு வந்து வைத்தார்.
பொன்னி நர்ஸின் போன் வந்தது தாராவுக்கு. “நம்ம கல்பனாவுக்கு பொண்ணு பொறந்திருக்கு தாரா. நார்மல் டெலிவரி. உன்கிட்ட தலைவர் சொல்ல சொன்னார். அப்புறம் வந்து உன்கிட்ட நேர்ல பாத்து பேசுறேன்னார்” என சொல்லி போனை வைத்தார்.
கல்பனா ஊர் தலைவர் மகள். கர்ப்ப காலத்தில் ரெகுலராக அங்கன்வாடிக்கு வருவாள். பேச்சு வாக்கில் ஒரு நாள் சுக பிரசவத்துக்காக சில யோகா முறைகளை டாக்டர் செய்ய சொன்னதாகவும், அதை யாருடைய கண்காணிப்பும் இன்றி தனியே செய்ய பயமாக இருப்பதாகவும் சொன்னாள்.
தாரா யோகாவில் டிப்ளமோ பட்டம் முடித்திருந்தாள். “சரி கல்பனா, நீ கவலைப்படாதே. நா வீட்டுக்கு வந்து நேர்ல சொல்லி தரேன். நீ பயமில்லாம செய்” என சொல்லி ஊக்கப்படுத்தினாள்.
அடுத்த நான்கு மாதம் தாராவின் நேரடி மேற்பார்வையில், யோகா, தியான பயிற்சி மற்றும் ஊட்டசத்து குறிப்புகள் என கல்பனாவுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்தது. இன்று அவளுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது தாராவுக்கு சந்தோஷமாக இருந்தது. வெண்மணி அம்மாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி விட்டு வகுப்பறைக்கு சென்றாள்.
அன்றைய நாளுக்கான வேலைகளை தாரா யோசித்துக்கொண்டிரும்போது, தூரத்தில் ஷாருக்கின் அழுகுரல் கேட்டது.
“இன்னைக்கும் அழுவுறானா? இவனை எப்படி சமாளிக்க போறம்மா?” என்றார் வெண்மணி.
“வரட்டும், பாத்துக்கலாம்” என சொன்னாள் தாரா.
தேம்பி தேம்பி அழுதபடியே வந்த ஷாருக்கை வெண்மணி வாங்கிக் கொண்டு அவன் அம்மாவை அனுப்பி வைத்தார்.
“ஏன்டா அழுவுற?” என அதட்டலாக கேட்டாள் தாரா.
சற்று அழுகை நின்று, “அக்காக்கு மட்டும் ஜாமென்டரி பாக்ஸ் வாங்கி கொடுத்துட்டாங்க. நா கேட்டா அப்புறம் வாங்கி தரேன்னு சொல்றாங்க” என சொல்லி மீண்டும் அழுகையை ஆரம்பித்தான்.
தாரா யோசிக்க “அவுங்க அக்கா ஆறாம் க்ளாஸ் படிக்குறாங்க. இவனுக்கு எதுக்கு?” என அவனை அல்பமாக பார்த்துக் கொண்டே சொன்னது ஆஷாதேவி.
முக்திக்கு முன் நிலையில் இருப்பது போல இருந்தது ஆஷாதேவியின் உரை.
“சரி வாங்க, எல்லாரும் ரவுண்டா உக்காருங்க, உங்களுக்கு கதை சொல்ல போறேன்” என டாபிக்கை மாற்றினாள் தாரா.
ஷாருக் இன்னும் சமாதானம் ஆகவில்லை. ஜாமென்டரி பாக்ஸ் விஷயத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எண்ணி உருண்டு உருண்டு அழுது கொண்டிருந்தான்.
இப்போது தான் எண்களில் நூறு வரை சொல்ல கற்று கொண்டிருக்கிறான். இவனுக்கு ஜாமென்டரி பாக்ஸ் தேவைப்பட இன்னும் சில ஆண்டுகள் இருக்கிறது. அக்காவுக்கு கிடைத்தது தனக்கும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தவிர வேறொன்றுமில்லை.
“டேய் ஷாருக், வெண்மணி அம்மாவுக்கு கால் வலி இருக்குது. அவங்களால செடிக்கு தண்ணி ஊத்த முடியல. கொஞ்சம் போய் வராண்டால அழுவுடா, அதுங்களுக்காவது தண்ணி கிடைக்கும்” என ஆஷாதேவி பொறுமையிழந்து கத்தியது.
ஷாருக்கை இன்ப்ளுயன்சாராக கருதி ஷைலா டேமை திறந்தது.
“நீ ஏன் அழுவுற?” என தாரா கேட்க, “அம்மா வேணும்!” என மூக்கை சிந்தியது.
ஷைலா அங்கன்வாடிக்கு வர ஆரம்பித்து பத்து மாதங்களுக்கு மேலாகிறது!
இப்போது என்ன திடீர் அம்மா பாசம் என ஆஷாதேவிக்கு புரியவில்லை.
இதுங்களால் கதை நேரம் குறைவதை அதனால் ஏற்று கொள்ள முடியவில்லை.
ஷாருக்கை அம்போவென விட்டு விட்டு ஷைலாவை மியூட் செய்ய நகர்ந்தது.
தாரா எல்லோரையும் கவனித்தவாறே, பாயை விரித்து ஒவ்வொருவராய் உட்கார வைத்து, சாமிக்கு பூ வைத்து விட்டு, “எல்லாரும் கண் மூடி, கை கூப்புங்க” என சொன்னாள்.
“ஷாருக், வா இங்க வந்து உக்காரு. ஷைலா, நீ இந்த பக்கம் வா” என ரெண்டு பேரையும் தன்னருகே அமர்த்திக் கொண்டாள் தாரா.
“ஷாருக், உனக்கு என்ன அனிமல் புடிக்கும் சொல்லு?” என கேட்டாள்.
“சிங்கம்” என சிவந்த கண்களோடு வீரமாய் சொன்னான் ஷாருக்.
ஆஷாதேவி வேண்டுமென்றே களுக்கென சத்தமாக சிரிக்க, மற்ற வாண்டுகளும் சிரிக்க ஆரம்பித்தது.
தாராவுக்கே அவன் பதில் சொன்ன வேகம் காமெடியாக இருந்தது.
“சைலன்ஸ், ஷைலா உனக்கு யார் பிடிக்கும்?” என கேட்டாள்.
“யானை” என்றது ஷைலா.
“சூப்பர், இன்னைக்கு நம்ம கதைல சிங்கமும் யானையும் தான் வர போறாங்க” என தாரா சொல்ல, ரெண்டு பேரும் அடுத்த நொடியே உற்சாகமானார்கள். அவரவர் மனதில் அந்த கதைக்களம் விரிய ஆரம்பிக்க, அந்த பள்ளி வளாகம் ஒரு மாய காடாக மாறிக் கொண்டிருந்தது.
“லக்ஷ்மி, அப்பா எங்கேன்னு பாரு” என ஹாலில் இருந்து சொன்னார் சங்கு புஷ்பம்.
“அவர் பாத்ரூம்ல இருக்காரும்மா” என்றாள் லக்ஷ்மி.
“கொஞ்சம் போய் பாரும்மா, அவர் உள்ள போய் ரொம்ப நேரமாச்சு” என்றார் சங்கு புஷ்பம்.
காலையில் சீக்கிரமே எழுந்து விடுவார் நேசப்பா. காபி போட்டு, காய் நறுக்கி, வாக்கிங் கிளம்ப வேண்டிய நேரம் இது! இன்னும் பாத்ரூமிலுருந்து வெளியே வரமால் என்ன செய்கிறார்? என யோசித்தார் சங்கு புஷ்பம்.
“மா, அவரு என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா?” என சிரித்தபடியே வந்தாள் லக்ஷ்மி.
“சொல்லு!” என ஆர்வமாக கேட்டார் சங்கு புஷ்பம்.
“ஷேவ் பண்ணிக்கிட்டு இருக்காரும்மா? அதுவும் லெப்ட் ஹேண்ட்ல!” என்றாள் லக்ஷ்மி.
“வலது கைல ஏதாவது சுளுக்கா? இல்ல ஷோல்டர் வலியா? அவர் எதுவும் என்கிட்ட சொல்லலியேம்மா” என கவலையோடு சொன்னார் சங்கு புஷ்பம்.
“ஆமாம்மா, கொஞ்ச நாளா அவரு நார்மலா இல்ல. கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்குறார்” என யோசனையாக சொன்னாள் லக்ஷ்மி.
“வயசான காலத்துல இந்த ஆர்த்தோ, நியூரோ டாக்டருங்களுக்கு பீஸ் குடுத்தே மாள மாட்டேங்குது! இவரு வேற என்ன புது பைல போட வைக்க போறாருன்னு தெரியல” என புலம்ப ஆரம்பித்தார் சங்குபுஷ்பம்.
“மா, அதெல்லாம் எதுவும் சீரியஸா இருக்காது. நீ கவலைப்படாதே, நா வாக்கிங் போறேன்” என தேற்றினாள் லக்ஷ்மி.
கால் மணி நேரம் கழித்தது நெசப்பா காபி கப்போடு வந்தார்.
“இந்தாம்மா காபி” என மனைவியிடம் நீட்டினார்.
“என்ன, வர வர மரியாதை கொறையுது? லெப்ட் ஹேண்ட்ல காபி தரீங்க?” என முறைத்தார் சங்குபுஷ்பம்.
“நீ தானே சொல்வ, மரியாதை மனசுல இருந்தா போதும்னு” என கண்ணடித்தபடியே சொன்னார் நேசப்பா.
“அப்ப மரியாதை இல்ல, அப்படி தானே?” என காபியை விட சூடாக கேட்டார் புஷ்பம்.
“காபி போட்டு கொண்டாந்து கைல குடுக்குற ஆள ஏண்டி ரோஸ்ட் பண்ற? என கூலாக கேட்டார் நேசப்பா.
“இது என்ன புது பழக்கம்? அந்த கையில ஏதாவது பிரச்சனையா? சிரிச்சி சிரிச்சி வலிய மறைக்குறீங்களா? அப்புறம் ஏதாவது பெரிய செலவா இழுத்து விடபோறீங்க? எதுவுமா இருந்தாலும் ஆரம்ப நிலையிலேயே வாய தொறந்து சொல்லுங்க! டாக்டரை பாத்து சரி பண்ணிக்கலாம்” என படபடப்பாக பேசினார் புஷ்பம்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா” என சிரித்தார் நேசப்பா.
“நாங்க உங்களை கவனிக்காம இல்லை! கொஞ்ச நாளாவே நீங்க இடது கையால தான் பல வேலைகளை செய்யுறீங்க” என கவலை குறையாமல் சொன்னார் புஷ்பம்.
“நீ ஏன் சின்ன விஷயத்துக்கு இவ்ளோ யோசிக்குற? நான் சில வேலைகளை இடது கையால செய்றது உண்மை தான். ஆனா அதுக்கு ஒரு காரணம் இருக்கு” என சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னார் நேசப்பா.
சங்கு புஷ்பத்திற்க்கு காண்டு ஏறியது.
அந்த நேரத்தில் நேசப்பா போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.
“ஹர்ப்ரீத், இன்னைக்கு ஏழு மணி செஷனை ஏழரைக்கு மாத்தி இருக்காங்க. நா போய் காய் கட் பண்ணி வெச்சுட்டு கிளம்புறேன்” என நகர்ந்தார் நேசப்பா.
ஹர்ப்ரீத் பஞ்சாபி பெண்மணி. சுமார் ஐம்பது வயது இருக்கும். பிஸியோதெரபி டாக்டர். இவர்கள் அபார்ட்மெண்டில் சில மாதங்களுக்கு முன்பு குடியேறி இருக்கிறார். சொசைட்டி சீனியர்களுக்கு பீஸ் வாங்காத கன்சல்டன்ட். காலையில் வாக்கிங் போகும் மொத்த பெருசுகளுக்கும் நல்ல தோழியாகி விட்டார்.
பத்து நிமிஷத்தில் நேசப்பா ரெடியாகி வந்து ஷூ போட குனிந்தார்.
புஷ்பம் அவரையே உற்று நோக்க, ஷூவை போட்டபடியே “ரொம்ப கவலைப்படாதே! எல்லாத்துக்கும் புது கனெக்க்ஷன் தான் காரணம்” என சிரித்தபடியே பாதியிலேயே நிறுத்தினார் நேசப்பா.
“என்ன புது கனெக்க்ஷன்?” என முழித்தார் புஷ்பம்.
“இங்க பாரு, நாம எப்பவும் வலது கையால தான் பெரும்பாலான தினசரி வேலைகளை செய்வோம். அந்த பழக்கத்தை மாத்தி இடது கையால சின்ன சின்ன வேலைகளை செய்யும் போது நம்ம மூளைல புதுசா நரம்பு இணைப்புகள் உருவாகும். அது மறதி குறைய உதவும். கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு நன்றாகும். இதை Non-Dominant Hand Practise என சொல்வார்கள்” என விளக்கினார் நேசப்பா.
“அப்படியா, இதை மொதல்லயே சொல்ல வேண்டியது தானே?” என நிம்மதியாக சொல்லியபடியே கிச்சனுக்கு எழுந்து போனார் புஷ்பம்.
மெல்லிசாக விசிலடித்தபடியே கிளம்பி போனார் நேசப்பா.
வாக்கிங் முடித்து லக்ஷ்மி வந்தாள். புஷ்பம் நேசப்பாவின் Non-Dominant Hand Practise விஷயத்தை சொன்னார்.
“ஹ்ம்ம், புது விஷயமா தான் இருக்கு! நீயும் ட்ரை பண்ணுமா” என சொல்லிவிட்டு குளிக்க போனாள்.
இரண்டு நாட்கள் கழித்து புஷ்பம் கோவிலுக்கு போய்விட்டு வந்து, சொசைட்டி பார்க்கில் உட்கார்ந்து அவர் சகாக்களோடு பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது ஹர்ப்ரீத் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்.
“நாளைக்கு நைட் என்னோட பர்த்டே பார்ட்டி பிளான் பண்ணி இருக்கேன். ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துடுங்க” என அனைவருக்கும் அழைப்பு விடுத்து விட்டு கிளம்பினார்.
“ஆமா, எங்க ஆளுங்களையும் கூப்பிட்டு இருக்காங்க, எப்படியும் ஒரு இருபத்தஞ்சு பேரு வருவாங்கனு சொன்னாங்க. நீயும் லக்ஷ்மியும் போய் நாளைக்கு கிப்ட் வாங்கிட்டு வாங்க” என சொன்னார்.
புஷ்பத்திற்கு இன்னைக்கு வீட்டில் க்ளாஷ் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.
“எல்போ க்ளாஷ்னா என்ன?” என பொதுவாக கேட்டார் புஷ்பம்.
“சீ சங்குமா, இப்போ நா லெப்ட் ஹாண்ட். என் பக்கத்துல ரைட் ஹாண்ட் பர்ஸன் உட்கார்ந்து சாப்பிடும்போது, அந்த பர்சனோட கை, என் கைல இடிக்க சான்ஸ் இருக்கு. இது பொதுவா எங்களுக்கு நடக்கும். ஆனா நேஸ் மாதிரி லெப்ட் ஹாண்ட் பர்ஸன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடும்போது எங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை” என விளக்கினார் ஹர்ப்ரீத்.
“லவ்லி, ஸோ ஸ்வீட்” என சொல்லி சிரித்தார் புஷ்பம்.
“சரி நீங்க சாப்பிடுங்க. ” என நகர ஆரம்பிக்கும் போது, “நீயும் எங்க கூட சாப்பிடேன் சங்கு” என அழைத்தார் நேசப்பா.
“நா ரைட் ஹாண்ட் பர்ஸன் நேஸ்! உங்களுக்கு இடிக்கும்!!” என சீனியர் கேர்ள்ஸ் கோஷ்டி பக்கம் தட்டை எடுத்து கொண்டு போனார்.
நேசப்பா பாந்தமாக சப்பாத்தியை இடது கையால் பிய்த்து, அதை லேசாக க்ரேவியில் தோய்த்து உள்ளே தள்ளி கொண்டிருந்தார்.
கேக், குலாப் ஜாமூன் என லைனாக வந்த அனைத்தையும் கச்சிதமாக, சிந்தாமல் சிதறாமல், லெப்ட் ஹாண்டில் சாப்பிட்டு முடித்தார்.
பத்து மணிக்கு பார்ட்டி முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், சங்கு புஷ்பம் முதல் வேலையாக லக்ஷ்மியின் ரூமிற்க்கு சென்றார்.
புஷ்பம் சொல்ல சொல்ல, லக்ஷ்மி உன்னிப்பாக கேட்டு விட்டு, விழுந்து விழுந்து கண்ணில் நீர் வர சிரித்தாள்.
“மா, நா ஒண்ணு சொல்லுவேன், என்ன திட்டாதே!” என இழுத்தாள்.
“சொல்லு” என்கிறார் புஷ்பம்.
எதையோ அவள் சொல்ல ஆரம்பிக்க, மீண்டும் அடக்க முடியாமல் சிரிப்பை தொடர்ந்தாள்.
“சொல்லிட்டு சிரியேண்டி” என அதட்டினார் புஷ்பம்.
சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு லக்ஷ்மி ஆரம்பித்தாள்.
“மா, நா நெனைக்கிறேன் NDHPனா “Non-Dominant Hand Practise” இல்லை! “Nesappa Dates Harpreet Patel”. கூட்டி கழிச்சி பாரு என் கணக்கு சரியா வரும்” என பன்ச் டயலாக்கை போட்டாள்.
“அடிப்பாவி, கதை அப்படி போகுதா? அந்த மனுஷன் புது கனெக்க்ஷன்னு பேசும் போதே நா யோசிச்சிருக்கணும்” என மெலிதாய் சிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.
அம்மாவும் மகளும் அடுத்த இருபது நிமிடம் நேசப்பாவின் லெப்ட் ஹாண்ட் அட்ராசிட்டிகளை பேசி விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
“மா, வயசான காலத்துல இதுவும் நல்லது தாம்மா! தான் கவனிக்கப்படலை, அட்ராக்ட்டிவா இல்லேன்னு நெனச்சி முடங்கிடாம, அவர் பிளேபுல்லா இருக்கிறது நல்ல விஷயம். நம்ம அப்பாவை பத்தி நமக்கு தெரியும். டீசண்டான மனுஷன். இந்த மாதிரி சின்ன சின்ன பீல் குட் மொமண்ட்ஸ் அவர் மைண்டை பிரெஷ்ஷா வெச்சிக்க ஹெல்ப் பண்ணும்” என சொன்னாள் லக்ஷ்மி.
“சின்ராசுக்கு இந்த வயசுல சின்ன சின்ன பீல் குட் மொமண்ட்ஸ் தேவைப்படுது!” என சொல்லியபடியே தூங்க போனார் சங்கு புஷ்பம்.
மாத்திரைகளை போட்டு கொண்டு, கிச்சனை க்ளீன் செய்துவிட்டு, சோபாவில் உட்கார்ந்து லக்ஷ்மி சொன்ன விஷயங்களை தேடி படித்து பார்த்தார். உண்மை தான் அவள் சொன்னது. தன்னை சமாதானபடுத்த அவள் எதுவும் பொய்யான விஷயங்களை சொல்லவில்லை.
ஹால் விளக்குகளை அணைத்து விட்டு “ஏங்க, ஆறு மணிக்கு அலாரம் வெச்சுடுங்க” என சொல்லிவிட்டு போய் கட்டிலில் படுத்துக் கொண்டார்.
“ஏண்டி ஆறு மணிக்கு எழுந்து என்னடி பண்ண போற?” என கேட்டார் நேசப்பா.
“திலீப் சார் “Deep Healing Synaptic Pathway” அப்படீன்னு சீனியர் சிட்டிசன்ஸுக்கு செஷன் எடுக்குறாராம் பார்க்குல. டின்னர்ல பேசிக்கிட்டுருக்கும் போது சொன்னார்” என்றார் புஷ்பம்.
“அந்த ஆர்மில இருந்து VRS வாங்குன டாக்டர்தானே?” என கேட்டார் நேசப்பா.
“ஆமாங்க” என்றார் புஷ்பம்.
“பாத்ரூம் போயிட்டு வரேன்” என சொல்லி விட்டு லக்ஷ்மி ரூமிற்க்கு போனார் நேசப்பா.
“என்ன, உங்க அம்மா Healing கிளாஸ் போக போறாளாமே? உன்கிட்ட சொன்னாளா?” என கேட்டார்.
“முழுசா சொல்லுப்பா! நானே பாதி தூக்கத்துல இருக்கேன். நீ வேற பிட்டு பிட்டா சொல்ற” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.
நேசப்பா சொல்லி முடிக்க, “ஆமாப்பா, அம்மா சொன்னாங்க. “DHSP” இப்போ ரொம்ப பேமஸ். ஆனா இதுல ஒரு மேட்டர் இருக்கு கவனிச்சியா?” என கண்ணடித்தபடியே கேட்டாள் லக்ஷ்மி.
அவருக்கு கேக்கும், குலாப் ஜாமூனும் ரிவர்சில் வந்து தொண்டையை அடைத்தது.
“என்ன மேட்டர்” என தக்கி தக்கி கேட்டார்.
“Dileep Heals Sangu Pushpam” என சொல்லி போர்வையை தலை வரை மூடி கொண்டு சிரித்தாள்.
மறுநாள் காலை சங்கு புஷ்பம் ஆறு மணிக்கு ரெடியாக, நேசப்பா காபி கொடுத்தார். வலது கையில்!
“காவ்யா, எழுந்திரு, ஸ்கூலுக்கு ரெடியாகணும்” என எழுப்பினாள் யமுனா.
“மா, சூப்பரா ஒரு கனவுமா, என்ன எழுப்பிட்டியே” என்றபடி படுக்கையிலிருந்து எழுந்தாள் காவ்யா.
ஆறு வயது. ஒன்றாம் வகுப்பு முடிக்கப்போகிறாள்.
அப்படியே அவளை அள்ளி அணைத்து மீண்டும் படுக்கையில் சரித்து தானும் பக்கத்தில் படுத்தாள் யமுனா.
“வாவ், சொல்லு என்ன கனவு?” என கேட்டாள்.
“மா, நானும் ஒரு பிங்க் ஏஞ்சலும் கார்டன்ல கை கோர்த்து நடந்து போறோம்.
வைட் பட்டர்பிளை நம்ம பால்கனிக்கு வருமே அதுவும் வந்துது எங்களோட.
நாங்க பேசிட்டே கார்டன சுத்தி நடந்தோம்.ஏஞ்சல் என்கிட்டே என்ன வேணும்னு கேட்டாங்க? என் பிரெண்ட் அனுஷாவோட டாக் அவுஸ் ஒடஞ்சி போச்சி, அத பிக்ஸ் பண்ணி தர சொல்லி கேட்டோம்” என்றாள்.
“ஓ, அனுஷாவும் வந்தாளா ட்ரீம்ல?” என கேட்டேன்.
“ஆமாம்மா, அனுஷா அப்புறம் அவளோட பப்பி” என்றாள்.
“ஏஞ்சல் என்ன சொன்னாங்க?” என ஆர்வமாய் கேட்டேன்.
“அவங்க ஓகே சொல்லிட்டு பப்பியோட வீட்டை சரி பண்ணிட்டாங்க” என்றாள்.
“ஏண்டி வைட் பட்டர்பிளை, அனுஷா,பப்பி எல்லாரும் ஏஞ்சல மீட் பண்ணிருக்காங்க. ஆனா என்ன மட்டும் உன் கனவுல கூப்பிடலை?” என செல்லமாய் கோபித்து கொண்டேன்.
“மா அதுக்குள்ள நீ என்ன எழுப்பிட்ட. சரி, நா திரும்ப தூங்குறேன், என் கனவுல வா” என நைஸாய் படுத்துக்கொண்டாள்.
“ஹா, இந்த கதையெல்லாம் வேணாம், எழுந்து வா, குளிக்கலாம்” என்றேன் சிரித்துக்கொண்டே.
“நேத்து நைட்டும் அப்பா வீட்டுக்கு வரலியாம்மா” என சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே கேட்டாள்.
விடிந்ததும் பேசி சிரித்தாலும் அவள் ஏங்குவது வலியை தந்தது. அவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது அவருக்கு ஒரு ஏஞ்சல் இருப்பதை.
“இல்லடா, வா வந்து ப்ரஷ் பண்ணு” என தூக்கி கொண்டு போய் பாத்ரூமில் நிற்க வைத்தேன்.
“நா குட் நைட் மெசேஜ் அனுப்பினேன்மா, அவர் ரிப்ளை கூட பண்ணல” என அலுத்துக் கொண்டாள்.
“அப்பா பிஸியா இருக்காரும்மா” என சொல்லி, வேறு ஏதோ கதைகளை பேசி அவளை சமாதானப்படுத்தினேன்.
“நீ பேக் ரெடி பண்ணு, நா உனக்கு தோசை ஊத்துறேன்” என சொல்லி கிச்சனுக்குள் போனேன்.
“ஏண்டி, உனக்கு பொறுமையே கிடையாதா? ஒரு பொண்ணு இருக்கா, மனசுல வச்சி நடந்துக்க” என அழுத்தமாக சொன்னாள்.
“எனக்கு ஒரு பொண்ணு இருக்கான்னு அமைதியா இருக்கணுமா? இல்ல நம்ம வீட்டுல ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு இருக்கானு வெயிட் பண்ணணுமா?” என கோபம் தெறிக்க கேட்டேன்.
“இன்னும் மூணு வருஷத்துல எல்லாம் சரிஆகிடும்னு நம்ம ஜோசியர் சொல்றார். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரும்மா” என்றாள்.
“இந்த லட்சணத்தை தான் அவர் சொன்னாரு நல்ல ஜாதகம்னு என் தலைல கட்டி வச்ச? காவ்யா சொல்ற விதத்துல சொன்னா புரிஞ்சிப்பா. நானும் அவளும் எங்க வாழ்க்கையை பாத்துக்குறோம். தயவு செஞ்சு அட்வைஸ் பண்ணாதே” என்றேன்.
வட்டமாய் ஒரு தோசை சுட்டு முடிப்பதற்குள் வாழ்க்கையை ஒரு சுற்று மனதிற்குள் ஓட்டி பார்த்து விட்டேன்.
திரும்ப வந்து “இந்தா” என சொல்லி ஒரு பேப்பரை நீட்டினாள்.
தினசரி காலண்டரில் தேதி கிழித்த பேப்பர்.
“என்ன” என கேட்டேன்.
“பிரிச்சு படி” என்றாள்.
“யூ ஆர் மை ஏஞ்சல்” என எழுதியிருந்தாள்.
“ஸ்வீட்ட்டு, தேங்க்ஸ். என்ன இந்த பேப்பர்ல எழுதி இருக்க?” என்றேன்.
“எங்க டீச்சர் சொன்னாங்கமா, இந்த மாதிரி வேஸ்ட் பேப்பர்ல ஏதாவது கிராப்ட் பண்ணுங்கன்னு. ஆனா டெய்லி கிராப்ட் பண்ண முடியாதுல. அதான் எழுதிட்டேன்” என்றாள் சிரித்தபடி.
“சூப்பர்” என சொல்லி பார்க்கிங் நோக்கி நடந்தோம்.
“மா, அனுஷாவோட பப்பிக்கு ஹவுஸ் சரியாகுமா” என திடீரென கேட்டாள்.
“அவங்க அம்மா கொஞ்சம் பிஸியா இருக்காங்கம்மா, இன்னும் ஒரு வாரத்துல சரி பண்றேன்னு சொல்லி இருக்காங்க. இன்னைக்கு வாக்கிங் வந்தா கேக்குறேன்” என சொல்லி வண்டியை கிளப்பினோம்.
“மா, ஒரு கேம். அனுஷாவோட பர்த்டே டென்த் ஆகஸ்ட். இப்போ நா ஸ்கூல் போறதுக்குள்ள அந்த நம்பரை பாத்துட்டேன்னா, அவ பப்பியோட அவுஸ் சரியாகிடும்” என வெளியே பார்த்துக் கொண்டே சொன்னாள்.
காரில் போகும் போது போன் பார்க்காமல் இருக்க ஒரு நாள் விளையாட்டாய் ஆரம்பித்தது, இன்று வரை தொடர்கிறது. தினம் ஒரு எண். தினம் ஒரு கேள்விக்கான பதில்.
“ஏன் ஜோசியரை அங்க வர சொல்லி இருக்கியா?” என கேட்டேன்.
பதிலேதும் சொல்லாமல் திரும்ப போய் விட்டாள்.
மூச்சு முட்டுவது போல இருந்தது யமுனாவிற்க்கு. வாழவும் வழியில்லாமல், அதிலிருந்து வெளியேறவும் வழியில்லாமல் திணறலாய் இருந்தது.
பேசாமல் கல்யாணம் பண்ணாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். இல்லை இவர்கள் பாரமாய் உணர்ந்தால் படிப்புக்கு ஏற்ற வேலையில் எங்காவது வேறு ஊரிலாவது வாழ்ந்திருக்கலாம்.”மா, நா ரெடி ஆகிட்டேன்” என காவ்யா வர, தான் இன்னும் தயாராகாமல் இருப்பது உரைத்தது.
“பத்து நிமிஷம், ரெடி ஆகிட்டு வரேன்’ என சொல்லி அனுப்பினேன்.
கோவிலுக்கு போய் சாமி பார்த்துவிட்டு கல் திண்ணையில் போய் உட்கார்ந்தோம். நல்ல மழை.
நினைத்த மாதிரியே ஜோசியரும் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவர், எங்களை பார்த்ததும் டவலை போர்த்திக் கொண்டு எங்களை நோக்கி வந்தார்.
சற்று நேரம் பொதுவாக பேசியவர், பிறகு என்னிடம் “யமுனா, அம்மா என்கிட்டே பேசுனாங்க. அவருக்கு ரெண்டாம் வீடு இப்போ கெட்டு போய் இருக்கு, கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்மா”, என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
“அம்மா இவரு வீடு எல்லாம் பிக்ஸ் பண்ணுவாரா? அங்கிள், என் பிரெண்டோட வீடு ரிப்பேரா இருக்கு, சரி பண்ணி தரீங்களா?” என குறுக்கே வந்து கேட்டது காவ்யா.
அவர் முழிக்க எனக்கு சிரிப்பாய் வந்தது.
நாயின் வீடு கூட சரியாகும். ஆனால் நாய் புத்தி உள்ளவர்கள் என்றும் திருந்த போவதில்லை என நினைத்துக் கொண்டேன்.
காவ்யா மாதிரி க்ளையண்ட்டை எதிர்பாக்காதவர் உடனே கிளம்பி போய் விட்டார்.
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
கால் வலி ஆரம்பிக்க, “வா காவ்யா அந்த ஓரம் போய் உட்காரலாம்” என அழைத்தேன்.
“மா, ரொம்ப போரடிக்குது” என சிணுங்கினாள்.
“அங்க தூண்ல ஒரு பை கட்டி இருக்கு பாரு, அதுல இருந்து ஒரு பேப்பர் எடுத்துட்டு வா, நா உனக்கு போட் செய்து தரேன்” என அம்மா சொல்ல “சரி பாட்டி” என ஓடியது காவ்யா.
அனுஷா அம்மாவிடம் இருந்து போன் வர பேசியதில் சில நிமிடங்கள் கழிந்தது.
“அம்மா இங்க பாரு சர்ப்ரைஸ்” என வந்தாள் காவ்யா.
“உன் பர்த்டே டேட் பாரு” என தினசரி காலண்டர் பேப்பரை காட்டி சிரித்தாள்.
“உனக்கு இன்னிக்கு லக்கி டேமா” என சொல்லிவிட்டு என்னிடம் பேப்பரை நீட்டியது.
விபூதி பிரசாதம் மடிக்க தினசரி காலண்டர் பேப்பர் ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது. அதில் கப்பல் செய்ய ஒரு பேப்பரை எடுக்க அது என் பிறந்த நாளாய் அமைந்தது.
அம்மா கப்பல் செய்து கொடுக்க, காவ்யா மழை நீரில் அதை விட்டது.
பெரும் மழை காற்றோடு வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.
கப்பல் ஆடி ஆடி பயணிக்க சற்று தூரம் காவ்யாவும் அதனுடன் நகர்ந்து சென்றாள்.
சற்று நேரம் கழித்து அதை நீரில் இருந்து எடுத்து மீண்டும் பிரித்து அந்த மண்டப தரையில் வைத்து விட்டாள்.
“ஆமா, ஏன் அந்த கப்பலை பிரிச்சுட்டே?” என கேட்டேன்.
“அது ரொம்ப சேடா இருந்துது மா” என்றாள் காவ்யா.
“கப்பலா?” என்றேன்.
“பேப்பர் மா!” என்றாள்.
“கரெக்ட், பேப்பர் தான், ஏன் சேடா இருந்துது? அது உன் கிட்ட என்ன சொல்லுச்சு?” என கேட்டேன்.
“நானும் ஒரு வீட்ல காலண்டர்ல சேபா இருந்தேன். என்ன ஏன் கப்பல் பண்ணி காத்து மழைல விட்டீங்க? என்ன ஏன் கஷ்டப்படுத்துறீங்கன்னு பீல் பண்ணுதும்மா” என சொன்னாள் காவ்யா.
கண்ணை கட்டியது எனக்கு.
நிஜம் தான். வேணாம்னா தூக்கி ஒரு ஓரமா வெச்சிருக்கலாம்.கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும்னு அதை கொண்டு வந்து இந்த பைல போட்டுட்டாங்க. சரி ஏதோ விபூதி பொட்டலம் மடிக்கவாவது மட்டும் உபயோகபடுத்தியிருக்கலாம். அத கப்பல் செஞ்சு வேடிக்கை பாக்குறோம்.
வெறும் காலி கப்பல், ஒரு பாரமும் சுமக்காமல் ஜாலியாக ஆடி ஆடி போய் கொண்டிருக்கிறது என நாம் நினைக்கிறோம். ஆனால் காற்று மழையில் பழக்கமில்லாத வகையில், திசையறியாமல் பயணிப்பதை விட வேறு எது பெரும் பாரமாய் இருக்க முடியும்” என மனதிற்குள் நினைத்து கொண்டேன்.
“உங்க வீட்டுல தாண்டி பேப்பர் பேசும், சைக்கிள் பேசும், நாய் குட்டி பேசும்” என முறைத்தாள் அம்மா.
“எல்லாம் பேசும்மா, நாம தான் கவனிக்கிறது இல்ல. அது சரி, பெத்த பொண்ணு, நா வாய தொறந்து என் கஷ்டத்த சொன்னாலே உன்னால புரிஞ்சிக்க முடியல” என்றேன்.
“இந்த கப்பல் மாதிரி தான்மா நானும். வாழ்க்கை என்ன எங்க கூட்டிட்டு போகுது, எதிர்காலம் எப்படினு தெரியாம தத்தளிக்குறேன். உங்களுக்கு கடமை முடியனும்னு கல்யாணத்த பண்ணிடுறீங்க. அப்புறம் சமூகத்துக்காக அமைதியா காலத்தை ஓட்ட சொல்றீங்க” என்றேன்.
சற்று நேரத்தில் மழை சற்று குறைய வீட்டுக்கு கிளம்ப எழுந்தோம்.
“அடுத்த முறை லாயர பாக்க போனீன்னா சொல்லு ,நானும் கூட வரேன்” என்றாள் அம்மா.
மழையும் விட மனசும் தெளிவாக இருந்தது.
“அம்மா அங்க பாரு, நா தேடுன நம்பர்” என காண்பித்தாள் காவ்யா.
போற்றி மாலையின் எண்ணிக்கை பளிச்சென கல்வெட்டில் இருந்தது.
“வண்ணமதிக்கு எப்போடா வரன் பாக்க ஆரம்பிக்க போற”? என கேட்டாள் பாட்டி.
“கடைசி பரீட்சை முடியட்டும்மா. நம்ம சாம்பமூர்த்தி தங்கமான புள்ளைன்னு ஒரு ஆபீசர் வரன் பத்தி சொல்லி இருக்கார். ஆவணி மாசம் பேசி முடிக்கலாம்” என்றார் அப்பா.
“வேலைக்கு போய் செட்டில் ஆகிட்டு கல்யாணம் பண்ணிக்குறேன் பாட்டி” என்றேன் நான்.
“நீ செட்டில் ஆகுற வரைக்கும் சிங்கிளா இருக்கவன், அங்கிள் வயசுல இருப்பான். அறுபது வயசு வரை வேலை செய்யலாம், ஆனா கல்யாணம் காலா காலத்துல பண்ணனும். புள்ளைங்கள பெத்து மட்டும் எங்க கிட்ட குடுத்துடு, நாங்க இத்தனை பேரு எதுக்கு இருக்கோம்? எங்க செல்லங்களை நாங்க பாத்துக்குறோம், நீ வேலைக்கு போ, யாரு தடுக்க போறா? என அக்காவுக்கு சொன்ன அதே ப்ளூ பிரிண்டை முகம் சிவக்க எனக்கும் சொன்னாள்.
பிறகு “அம்மனுக்கு அஞ்சு வாரம் தீபம் ஏத்தி வேண்டிக்க, நல்லது நடக்கும்!” என முடித்தாள்.
முதல் வாரம். கோவிலின் வெளி பிரகாரத்தில் இருந்த துர்கை சன்னதி முன் போய் நின்றேன்.
“என்ன வேண்டுதல்?” என்றார் அம்மன்.
“நல்லது நடக்க!” என்றேன்.
“பெற்றவர் கடமையை முடிக்கவா? உன் கனவுகள் சிறக்கவா? யாருக்கு நல்லது நடக்க?” என்றார்.
“நீங்க பாத்து எது நடத்தி குடுத்தாலும் சரி” என்றேன்.
“உங்கப்பாகிட்ட பேசுற மாதிரி பழம் மாதிரி என்கிட்ட பேசாதே. உனக்கு என்ன வேணும்னு தெளிவா சொல்லு” கிண்டலாய் சொன்னார் அம்மன்.
“யோசிச்சு சொல்றேன், இந்த கனிய குறுக்கில நறுக்கவா? இல்ல நெடுக்குல நறுக்கவா? எப்படி பிழிந்து தீபம் ஏற்றட்டும்? என சந்தேகம் கேட்டேன்.
“எப்படியாவது நறுக்கு. ஆனா இந்த குடும்பத்தை நல்லா தெரியும், இந்த வரன் கட்டி தங்கம்னு எவனாவது சொன்னா அவனை நறுக்கி தொரத்திடு! ஊர்ல இருக்க எல்லா வரனையும் சாம்பமூர்த்தி கட்டி தங்கம்னு தான் சொல்லுவான், உங்க ஆளுங்கள விட்டு நல்லா விசாரிக்க சொல்லு. அங்காளி பங்காளின்னு உங்க அம்மா வடிச்சு கொட்டுனாங்கல்ல, அந்த தீவட்டி தடியனுங்கள தீர விசாரிக்க சொல்லு. முடிஞ்சா நீயே பேசி பாரு.
சாம்பமூர்த்தி பேச்ச நம்புனவங்களுக்கு சம்பவம் காரண்ட்டி, சொல்லிட்டேன். உமன் எம்பவர்மெண்டு பத்தியெல்லாம் பேசி பரிசு வாங்கி இருக்க, நல்லா விசாரிச்சு, ஒடச்சி பேசி முடிவெடு.அப்புறம் வாரா வாரம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல லெமன வாங்கிட்டு வந்து என்கிட்ட சொல்யூஷன் கேட்காதே! என்றார் அம்மன்.
இரண்டாம் வாரம்.”திரி போட்டு எண்ணெய் ஊற்றவா? எண்ணெய் ஊற்றிவிட்டு திரி போடவா? என்றேன்.
“எப்படி வேண்டுமானாலும் போடு. ஆனால் வாழ்க்கை உன்னை புரட்டி போட்டாலும், உருட்டி போட்டாலும், மனச மட்டும் விட்டுடாதே. தாய் தகப்பன் தாங்காட்டாலும் சின்ன புள்ளைல இருந்து என்ன சுத்தி சுத்தி வந்த உன்னை நா விட்டு விடுவேனா?” என்றார்.
மூன்றாவது வாரம். “மூச்சு விடாமல் உன் போற்றி மாலையை சொல்லட்டுமா?” என்றேன்.
“எதுக்கு? ரிலாக்ஸ்டாவே சொல்லு. ஆனா எந்த உறவாவது மூச்சு முட்டுற மாதிரி இருந்தா ஊர் போற்றுதலுக்காக வாய் மூடி இருக்காதே” என்றார்.
நான்காம் வாரம். சாமிக்கு மட்டும் படையல், திருவிழா எல்லாம். உனக்கில்லயா? என்றேன்.
வாரா வாரம் உனக்கு ஏன் புத்தி சொல்றேன்னு இப்போ புரியுதா? என்றார்.
அஞ்சாம் வாரம். “காலம் முழுக்க எனக்கு வழி துணையா வரீங்களா? என்றேன்.
“காலமெல்லாம் வர முடியாது. வேணும்னா நீ ஹால் டிக்கெட் எடுத்துட்டு போகும்போதெல்லாம் எக்ஸாம் ஹால் வரைக்கும் துணையா வரேன். எப்படியாவது நல்லா படிச்சி, பாஸாகி, பொழச்சிக்க” என்கிறார்.
சில மாதங்கள் கழித்து அம்மன் முன் ஒரு கவரை வைத்து கும்பிட்டேன்.
“என்ன கல்யாண பத்திரிகையா? என கேட்டார் அம்மன்.
“இல்லை, என் அப்பாயின்மென்ட் ஆர்டர்”என்றேன். “நா பாஸாகிட்டேன்” என என்னை பார்த்து முதல் முறை சிரித்தார் அம்மன்.