
Tamil joke – ரூட் மேன்



கோல்கப்பா : மாதாஜி, இப்போது அதிரச யோகம் ஆரம்பித்திருக்கிறதாமே? அதை பற்றி விளக்குங்கள்.
மாதாஜி : கோல்கப்பா, அது அதிரச யோகமில்லை, அதிசார யோகம்! நீ இன்னும் தீபாவளி மூடிலிருந்து வெளியே வரவில்லையா?
கோல்கப்பா : ஹிஹிஹி, மன்னித்துக் கொள்ளுங்கள் மாதாஜி. அடியேனுக்கு அறிவு அவ்வளவு தான்!
மாதாஜி : பரவாயில்லை, உன் சந்தேகம் என்ன கேள்?
கோல்கப்பா : ஆளும் தரப்புக்கு அதிசார யோகம் எப்படி இருக்கிறது மாதாஜி?
மாதாஜி : அதிசார யோகம் என்ற வார்த்தையை கூட அவர்கள் காதால் கேட்க விரும்ப மாட்டார்கள்!
கோல்கப்பா : ஏன் மாதாஜி?
மாதாஜி : அதிசாரத்தில் “சார்” இருக்கிறது அல்லவா? அதனால் தான்!
கோல்கப்பா : ஹிஹிஹி, மாதாஜி பலமான மேட்டராக சொல்கிறீர்கள்? இன்னும் சற்று விளக்கவும் ப்ளீஸ்.
மாதாஜி கண் மூடி யோசிக்கிறார்.
மாதாஜி : ஒன்றா, இரண்டு கோல்கப்பா? அவர்களை உலுக்கிய “சார்” நிகழ்வுகளை வரிசையாக பார்ப்போம். நம் மாநில தலை நகரில் நடந்த அவல நிகழ்வு, அதை தொடர்ந்து நடந்த “யார் அந்த சார்?” என்ற போராட்டம்!
கோல்கப்பா : ஆமாம் மாதாஜி, என்னைக்கும் அந்த போஸ்டர் வாசகம் நினைவிருக்கிறது.

மாதாஜி : அடுத்ததாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்ட அனுமதி தந்த விவகாரம்!
கோல்கப்பா : ஹா, அந்த ராம்சார் லேண்டு பிரச்சினை தானே?

மாதாஜி : ஆமாம் கோல்கப்பா, சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பான விஷயத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கவனத்தில் எடுத்து, மாநிலத்தில் உள்ள சதுப்பு நிலங்களை ஆய்வு செய்து அடையாளம் காணும்படி உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் கட்டடம் கட்ட முறைகேடாக அனுமதி தந்த புகார் இப்போது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.
கோல்கப்பா : இது சென்னையின் மழை வெள்ள மேலாண்மையை மேலும் பாதிக்குமே மாதாஜி!
மாதாஜி : மண்டையில ஓட்ட இருக்கே நமக்கே தெரியுது! அதிகாரிகளுக்கு தெரியாதா?
கோல்கப்பா : அடுத்த சார் மேட்டர் என்ன மாதாஜி?
மாதாஜி : தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR)!
கோல்கப்பா : ஜனநாயகத்தை காப்பாத்தணும்னு சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்காங்க போல?

கோல்கப்பா : அற்புதம்! அமர்க்களம்! சரி நம்ம பிரதான எதிர் கட்சிக்கு அதிசார யோகம் எப்படி இருக்கு மாதாஜி?
மாதாஜி : புது கட்சி கூட்டணிக்கு வரும்னு சொன்னாங்க. பழம் நழுவி பால்ல விழற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தினாங்க. ஆனா புது கட்சி தலைவர் சரிப்பட்டு வரல, அதனால அவங்க நிலைமை இதுதான்!

கோல்கப்பா : ஹஹிஹி மாதாஜி, உங்க செலெக்க்ஷன் அட்டகாசமா இருக்கு. சரி நம்ம புது தலைவருக்கு நேரம் எப்படி இருக்கு?
மாதாஜி : நேரம் நிச்சயம் சரியில்லை! ஆனா அவர் மன உறுதியோட தொடர்ந்து செயல் பட்டு, come back குடுத்தாருன்னா நிலவரம் மாறலாம். நிலைகுலையாம உண்மையா போராடுனார்னா இந்த சேர் கெடைக்கலாம்!

கோல்கப்பா : மாதாஜி, கட்சிகளை பத்தி சொல்லிடீங்க. அரசாங்கத்துக்கு எப்படி இருக்கு?
மாதாஜி : பெருங்காயப்பட்டு இருக்குற கஜானாவுக்கு சாராய பணத்தை பாய்ச்சி ஓட்டிக்கிட்டு இருக்காங்க!
கோல்கப்பா : நன்றி மாதாஜி!
மாதாஜி : மக்களே, இதோடு தீபாவளி சிறப்பு மலர் நிறைவடைகிறது!

பூரிகுமாரி : ஏங்க, செயல் வீரருக்கு ஸ்வீட் குடுத்த தலீவர் சீனியர் மேனுக்கு என்ன தந்தாரு?
கோல்கப்பா : தலீவருக்கு சில மன வருத்தம் இருந்தாலும், அவருக்கு சீனியர் மேல பாசம் ஜாஸ்தி! அவர் சாய்ஸ் எப்படினு சொல்லு?

பூரிகுமாரி : அடக்கடவுளே! இது என்ன புது ஐட்டமா இருக்கு!
கோல்கப்பா : இதென்னை பிரமாதம்? இதை விட ஸ்பெஷல் ஐட்டத்த சீனியர் நம்ம தலீவருக்கு குடுத்திருக்காரு! இங்க பாரு!

பூரிகுமாரி : மகனுக்கு பதவி வாங்குறதுல விடா கண்டனா இருக்காரு போல!
கோல்கப்பா : ஆமாமா. ஆனா தலீவருக்கு வேற ஐடியா இருக்கு!
பூரிகுமாரி : எனக்கு தெரியுங்க. இதானே?

கோல்கப்பா : சரியா சொல்லி இருக்க. பதவிய தலீவர் அவர் பேரனுக்கு தான் தர போறாராம்!
பூரிகுமாரி : வேறென்ன எதிர்பார்க்க முடியும்ங்க, இது தெரிஞ்ச கதை தானே! அதனால ஜனங்க மைண்டு வாய்ஸ் இதான்!

கோல்கப்பா : முடிச்சு விட்ட போ! வா, நம்ம நெக்ஸ்ட் பார்ட்க்கு போலாம். Bye!

பூரி குமாரி: ஏங்க, நம்ம வாசகர்களுக்கு தீபாவளிக்கு என்ன ஸ்பெஷலா சொல்ல போறீங்க”?
கோல்கப்பா : “தீபாவளிக்கு நம்ம மக்கள், தலைவர்களுக்கு என்ன ப்ராண்டு பெஸ்டிவல் கிப்ட் ஹாம்பர குடுத்துருக்காங்கன்னு பாக்கலாமா?
பூரி குமாரி: எனக்கு ஒரு டவுட்டுங்க? பண்டிகையை “விடுமுறை தினம்”னு சொல்றவங்களுக்கு மக்கள் எப்படிங்க குடுப்பாங்க?
கோல்கப்பா : ஹ்ஹீஹீ, அவங்க விடியல்னு சொன்ன நாம நம்புறோம்ல. நம்ம பரிசுன்னு சொன்னா அவங்களும் நம்பிட்டு போகட்டுமே! விடு குமாரி!!
பூரி குமாரி: சரி, நம்ம தலீவருக்கு என்ன ப்ராண்டுங்க?
கோல்கப்பா : இப்போ இருக்குற இளைய தலைமுறை இவரை அப்பான்னு கூப்புடுறாங்களாம்ல! அதனால இந்த ப்ராண்டு ஸ்வீட்ட தந்திருக்காங்க!

பூரி குமாரி: அருமை! அருமை! அப்போ இளையவருக்கு என்ன பார்சல் குடுத்திருக்காங்க?
கோல்கப்பா : அரும்பாடு பட்டு, அவஸ்தை பட்டு பதவிக்கு வந்த புண்ணியவான்ல! அதுனால கிப்டுலையாவது ஆனந்தம் இருக்கட்டும்னு இதை தந்திருக்காங்க!

பூரி குமாரி : நெஜம்தான். சரி நம்ம தலீவரோட சிஸ்டருக்கு மக்கள் என்ன குடுத்தாங்க?
கோல்கப்பா : நீயே சொல்லு, மக்கள் ஏன் சிஸ்டருக்கு இதை ஏன் செலக்ட் பண்ணாங்கன்னு?

பூரி குமாரி : ஹா, கண்டுபுடிச்சிட்டேன். இவங்க இப்போ அண்ணனோட பல்ஸ நல்லா புரிஞ்சிக்கிட்டு பாஸாகிட்டாங்க. டெல்லிக்கும் தூத்துக்குடிக்கும் பறந்துகிட்டே இருக்காங்க! கரெக்ட்டா?
கோல்கப்பா : கலக்கிட்ட போ!
பூரி குமாரி: கரெக்ட்டுதான். மக்களே பரிசு தரும்போது செயல் வீரர் ஏதாவது தலீவருக்கு குடுத்திருப்பாரே?
கோல்கப்பா : அவர் குடுக்காமலா இருப்பாரு? இதை தான் குடுத்திருக்காரு!

பூரி குமாரி : இதென்னங்க, “பாருக்குள்ள”ன்னு ஒரு ப்ராண்டா?
கோல்கப்பா : அவரு துறை அதானே? வேறென்ன குடுப்பாரு?
பூரி குமாரி : செமையா இருக்குங்க ! அவருக்கு தலீவர் என்ன ரிட்டர்ன் கிப்ட் தந்தாரு?
கோல்கப்பா : இங்கே பாரு , நல்லா பாரு!

பூரி குமாரி : வாவ்! வாவ்! நம்ம தலீவர் செலக்க்ஷன் கலக்கலா இருக்குங்க !
மக்களே, அடுத்த பார்ட்ல இன்னும் சில ப்ராண்ட்ஸ் வரும்! படிச்சி என்ஜாய் பண்ணுங்க! Bye!



அமராவதி குடி வந்து ஒரு வாரம் ஆனது. வாசலில் உருளியில் பூ வைத்து கொண்டிருந்தார் புஷ்பம்.
வேலைக்கு கிளம்ப வெளியே வந்த அமராவதி புஷ்பத்திடம் ஏதோ சொல்ல வந்தபோது “அடடா, ஒரு புஷ்பமே பூ வைக்கிறதே” என்றபடி வாக்கிங் முடித்து வந்தார் நேசப்பா.
மூவரும் சேர்ந்து சிரிக்க, பிறகு என்ன விஷயம் என்றார் புஷ்பம்.
“ஆன்ட்டி இன்னைக்கு ஒரு டெலிவெரி எனக்கு வரும். கொஞ்சம் வாங்கி வைக்க முடியுமா” என்றாள் அமராவதி.
சரிம்மா என புஷ்பம் சொல்ல நன்றி சொல்லி கிளம்பினாள்.
நேசப்பா பேங்க் வேலை முடித்து வர ஒரு மணிஆனது. கதவை திறந்த கையோடு போய் பெட் ரூமில் ஏசி போட்டு வைத்தார் சங்கு புஷ்பம். மதியம் சாப்பிட்டு முடித்து ஆளுக்கு நாலு மாத்திரை போட்டு இரண்டு மணிக்கு படுத்தார்கள்.
நேசப்பாவிற்கு சிறு வெளிச்சம் இருந்தாலும் தூக்கம் வராது. அடர் நிற திரை போட்டு கதவு அடைத்து படுத்து விடுவார். ஹாலின் கிழக்கு பக்கம் லோ லையிங் சோபா சங்கு புஷ்பத்தின் இடம்.
மூன்று மணிக்கு லேண்ட் லைன் அடித்தது. மெயின் கேட் செக்யூரிட்டி செல்லகுமார்.
“அம்மா, பார்சல் வந்திருக்கு அமராவதி மேடம் வீட்டுக்கு. உங்க வீட்ல குடுக்க சொன்னாங்க. அனுப்பவா?” என்றார்.
சரி என சொல்லி வந்து உட்கார்ந்தார் சங்கு புஷ்பம்.
மெயின் கேட்டில் இருந்து ஜி பிளாக் வர ஐந்து நிமிடம் ஆகும். இதான் சௌத் விங்கில் லாஸ்ட் பிளாக். அரை மணி நேரம் ஆனது.
“என்ன செல்லகுமார், டெலிவரி எதுவும் வரலையே” என கேட்டார் சங்குபுஷ்பம்.
“அம்மா, அவர் மத்த ப்ளாக்ல குடுத்துட்டு வருவார்னு நெனைக்கிறேன்” என்றார் செல்ல குமார்.
சரி கொஞ்சம் படுக்கலாம் என போனார் சங்கு புஷ்பம். லேண்ட் லைன் அடித்தது. பாய்ந்து எடுத்தார் அவர். நேசப்பாவுக்கு கேட்டால் அவரும் எழுந்து விடுவார் என்று.
ஜி பிளாக் செக்யூரிட்டி பக்தவத்சலம். “அம்மா, பார்சல் வந்திருக்கு அமராவதி மேடம் வீட்டுக்கு. உங்க வீட்ல குடுக்க சொன்னாங்க. அனுப்பவா?” என்றார்.
சரி என சொல்லி கதவை திறந்து வைத்து உட்கார்ந்தார் சங்குபுஷ்பம். இரண்டு நிமிடம் கழித்து டெலிவரி வந்தது. பார்சலை வாங்கி வைத்து கதவை பூட்டி வந்து படுத்தார் சங்குபுஷ்பம்.
காலிங் பெல் அடித்தது. புஷ்பத்திற்கு மண்டை சுர்ரென்று ஆனது.
“அம்மா கையெழுத்து வாங்க மறந்துட்டேன்” என நின்றார் அவர். சரியென்று போட்டு கொடுத்து அனுப்பி மணி பார்த்தால் மூணு ஐம்பது.
யாரு புஷ்பம் என வந்தார் நேசப்பா. ஐந்து வரை தூங்குபவர் முன்கூட்டியே எழுந்து விட்டார். டெலிவரிங்க அமராவதிக்கு என்றார் சங்கு புஷ்பம்.
அதன் நீ அமராம சுத்திகிட்டு இருக்கியா என நக்கலடித்தார்.

சங்கு புஷ்பம் முப்பது ஆண்டுகள் நர்சாக இருந்து ஓய்வு பெற்றவர். நேசப்பா தபால் துறையில் முப்பத்திமூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர். நாற்பது ஆண்டுகால திருமண வாழ்வில் பெரும்பாலான நாட்கள் வேலை நிமித்தம் வேறு வேறு ஊர்களில் பணியாற்றி ஓய்வுக்கு பிறகு ஒன்றாக வாழ்பவர்கள்.
இரண்டு மகனும் ஒரு மகளும் இருந்தாலும் தனி வீட்டில் தங்கள் போக்கில், தங்கள் வயதுக்கேற்ற வாழ்க்கை முறையை சுதந்திரமாக ரசிக்கிறவர்கள்.

பண்டிகை நாட்களிலும் வார இறுதிகளிலும் வரும் நேசப்பாவை சில மணி துளிகள் இருவரும் மனம் விட்டு பேச இயலாத பெரும் நெருக்கடியான கால கட்டம். கூட்டு குடும்பமும், புஷ்பத்தின் ஷிப்ட் நேரங்களும் அவர்களின் சந்திப்பு பொழுதுகளை சுருக்கியே வைத்திருந்தது.
நேசப்பாவின் கடிதங்களை கூட திருமணமான புதிதில் தனியாக பெற இயலாத சூழல். நேசப்பா அவருடைய பிரியங்களை கொட்டி மருத்துவமனை முகவரிக்கு தனியாக அனுப்பும் கடிதங்கள் தான் அவர்களை பல ஆண்டுகள் பிணைத்திருந்தது.
ஆக ஓய்வுக்கு பிறகு அவர்களின் கூட்டை அவர்கள் எப்போதோ தீர்மானித்தார்கள். ஒரு கூரையின் கீழ் ஒரு முழு பொழுது வாழாதவர்கள், பணி நிறைவு வரை தனி தனியாக ஓடியவர்கள், எல்லை கோடு கடந்து கீழே விழும்போது தங்களை தாங்களே தாங்கிக்கொள்ள முடிவெடுத்தார்கள்.
கணக்கில்லா நாட்களையும் முடிவில்லா பொழுதுகளையும் பெரும் பாரம் சுமக்க இழந்தவர்கள், மீதமிருக்கும் கணங்களை தங்களுக்காக மட்டும் பொத்தி வைக்கிறார்கள். பெற்றதையும் சுற்றத்தையும் மரத்தும் மறந்தும் தள்ளி நிற்கிறார்கள்.

பணிக்காலத்தில் நோயை வென்ற வாழக்கையையும், தூரத்து உறவுகளின் தகவலையே மருந்தாக மூன்று தசாப்தங்களாக சக மனிதர்களுக்கு பரிசளித்தவர்கள். நேசமும்,பாசமும், மனிதமும் ரத்த உறவில் மட்டும் காணாமல் எண்ணில்லா தருணங்களை சமூகத்தில் சுவைத்தவர்கள்.
இன்று நாற்பது ஏக்கரில் எண்ணூறு குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பில் ஐந்து ஆண்டுகளாக குடியிருக்கிறார்கள். அனுசரணையும் ஆறுதலும் இடம், பொருள், மனிதர் உணர்ந்து அளிக்க தெரிந்தவர்கள். சுரண்டுபவரும் ஏய்ப்பவரும் யாராக இருந்தாலும் துறக்க துணிந்தவர்கள்.
