அன்று வியாழக்கிழமை. காலையில் எழுந்து காபி குடித்துக்கொண்டே, பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்குபுஷ்பம். நேசப்பா விடியற்காலையில் எழுந்து விடுவார். வெயிலுக்கு முன் கிச்சன் வேலைகளை முடிப்பது அவர்கள் வழக்கம். ஒன்பது மணிக்குள் சமைத்து முடித்து, பிறகு அன்றாட வேலைகளை கவனிப்பார்கள்.
உள்ளே மிக்சி சத்தம் கேட்டது. காலை டிபன் நேசப்பா ரெடி செய்துவிடுவார். கூடவே மதிய உணவுக்கான எல்லா காய்களையும் நறுக்கி வைத்து விடுவார். அரிசியும் பருப்பும் ஊற வைத்து, இஞ்சி பூண்டு உரித்து, கறிவேப்பிலையையும் தேவையான அளவு அலசி வைத்து விடுவார்.
சங்கு புஷ்பத்திற்கு காலையில் எழுவது சற்று சிரமமான காரியம். கால் நரம்பு வலியால் பல நாட்கள் இரவு சரியான தூக்கம் இருக்காது. விடியற்காலையில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விடுவார். எழுந்ததும் முழு மூச்சாக எந்த வேலையும் செய்ய முடியாது.
எட்டு மணிக்கு பிறகு தான் அவரால் சற்று நடக்க முடியும். எனவே நேசப்பா எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்து விடுவார். சங்குபுஷ்பம் கிச்சன் உள்ளே போனால் அரை மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்து விடுவார்.
மணி ஏழேமுக்கால் ஆனது. போன் அடித்தது. ஜிதேஸ்வரியின் அழைப்பு.
“நைட் ப்ளயிட் இங்க. காலைல நாலு மணிக்கு நம்ம ஏர்போர்ட்டுக்கு வந்துடுவேன். நா பாண்டி போகல. வீட்டுக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என தயங்கியபடி சொன்னாள் ஜிதேஸ்வரி.
“வா வா” என சொன்னார் சங்குபுஷ்பம்.
“அப்புறம் ஒர்க்ஷாப்பு எப்படி போச்சு?” என விசாரித்தார். ஐந்து நிமிடம் பேசி முடித்து பிறகு கிச்சன் சேரில் போய் உட்கார்ந்தார். நேசப்பா போனில் பாட்டு கேட்டபடியே வேலையில் மும்முரமாய் இருந்தார்.
“ஏங்க நாளைக்கு காலைல ஜித்து வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரெண்டு மூணு நாள் இங்க இருந்துட்டு அப்புறம் பாண்டிக்கு போறாளாம்” என சொன்னார் சங்குபுஷ்பம்.
“காலைல எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வருது? நா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் நேசப்பா.
“நாலு மணிக்கு வண்டி லேண்ட் ஆகுமாம்.வெளில வர நாலரை ஆகும்னு சொன்னா. உங்களை அனுப்புறேன்னு சொன்னேன். வேணாம், நானே டாக்சி புடிச்சி வரேன்னு சொல்றா” என்றார் சங்குபுஷ்பம்.
“அது அப்படி தான் சொல்லும். அதுக்காக நாம போகாம இருக்க முடியுமா? நா போறேன்” என்றார் நேசப்பா.
“சரிங்க, நீங்க போயிட்டு வாங்க. குமார காலைல மூணு மணிக்கு வர சொல்லிடுங்க. விடியற்காலைல நீங்க ஓட்ட வேணாம்” என்றார் சங்குபுஷ்பம்.
டிபன் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டு ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்கள்.
லக்ஷ்மியின் போன் வந்தது. “மா, நா நாளைக்கு நைட்டு வீட்டுக்கு வரேன். ஜித்து பேசுனா காலைல. பசங்கள கூட்டிட்டு என்ன அங்க வர சொல்லிட்டா. நா சாயந்திரம் காலேஜ் முடிச்சிட்டு அப்டியே பசங்கள கூட்டிட்டு ஒரு ஆறு மணிக்கு கெளம்பிடுவேன்” என்றாள்.
“சரி, காமாட்சி ஆன்ட்டி கிட்ட சொல்லி பசங்க பேக ரெடி பண்ண சொல்லிட்டியா?” என்றார் சங்கு புஷ்பம். காமாட்சி ஜிதேஸ்வரியின் மாமியார். நல்ல குணமான பெண்மணி.
வரும் வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் பொது விடுமுறை. அரிதாக நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கிறது.
லக்ஷ்மி சங்குபுஷ்பத்தின் இளைய மகள். பாண்டியில் கல்லூரியில் ப்ரொபஸராக இருப்பவள். ஜித்தும் லக்ஷ்மியும் தோழிகள். சற்று ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்.
ஜிதேஸ்வரி சங்குபுஷ்பம் பெறாத மகள். அவருடன் நர்ஸாக பணிபுரிந்த கற்பகம் சிஸ்டரின் மகள். இருவரும் பணிக்காலம் முழுவதும் ஓரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.
ஜிதேஸ்வரி பிறந்ததும் அவரை முதலில் கையில் ஏந்தியவர் சங்குபுஷ்பம். ஜிதேஸ்வரி மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பெரும்பாலான குழந்தைகளை முதலில் அணைத்துக் கொண்டவர் சங்குபுஷ்பம். யார் தெரிந்தவர்கள் பிரசவத்திற்காக சேர்ந்தாலும், அவர் ஷிப்ட் முடிந்த பின்பும் காத்திருந்து, தாயையும் சேயையும் நல்லபடியாக பார்த்த பிறகு தான் வீட்டுக்குப் போவார்.
கற்பகம் சில வருடம் முன்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரின் இறுதி நாட்களில் நேரில் போய் பார்க்க முடியாத சூழல்.
கற்பகத்திற்கு அவரின் உடல் நிலை புரிந்து விட்டது. அவர் கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஒரே மகன் ஒரிசாவில் இரும்பு கம்பெனியில் வேலை செய்கிறான்.
ஜிதேஸ்வரி திருமணமாகி பாண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.
கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சங்கு புஷ்பத்திற்கு போன் பேசினார். நேசப்பாவும், அவரும் அந்த தம்பதிகளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.
நேசப்பா சற்று தைரியசாலி, ஆனால் மென்மையான மனம் கொண்டவர்.
சங்கு புஷ்பம் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் சர்வ ஜாக்கிரதையாக பயணித்து அவர்களுக்கு தேவையான உணவையும் புத்தகங்களையும் கோவில் ப்ரசாதங்களையும் மருத்துவமனை வாசலில் கொண்டு சேர்த்து விடுவார்.
சங்குபுஷ்பம் வார்டு பாய் ஆனந்திடம் சொல்லி வைத்து விடுவார்.
“ஏன் மேடம் சார் வெளில வரார்? இங்க நெலமை ரொம்ப மோசமா இருக்கு. அவங்களுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றார் ஆனந்த்.
சில மாதங்கள் ஆனது. ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பிய சிவா கேட்டான் “என்னம்மா? இன்னைக்கு பச்சை கலர் கேசரி செஞ்சுருக்க, என்ன ஸ்பெஷல்?”
“அம்மா பாஸாயிட்டாங்கன்னா! அதான் ஜாலி மூடுல இருக்காங்க” என சொன்னது சின்ன வாண்டு தேவசேனா.
“ஆமாடா, மத்தியானம் தான் ரிசல்ட் வந்தது. அம்மா டிகிரி வாங்கிட்டேன்!!” என உற்சாகமாக சொன்னாள் தாரா. தபால் வழியில் யோகா இளங்கலை முடித்து இன்று பட்டம் வாங்கியிருக்கிறாள்.
சிவா ஆறாம் வகுப்பு மாணவன். தேவசேனா ஒன்றாம் வகுப்பு. தாராவின் கணவர் மேகநாதன் ஆட்டோ ஓட்டுநர். பகுதி நேரமாக சுவர் பெயிண்டிங் வேலையும் செய்வார்.
“மல்லிகை மலர் பறிக்க, மான் போல துள்ளி வா!
அல்லி மலர் பறிக்க, அன்னநடை போட்டு வா!
டிகிரி நீயும் வாங்க, டைகராக படித்து வா!! என சிவா குஷியாக பாட ஆரம்பித்தான்.
“அப்போ, அம்மா டைகரா?” என தேவசேனா புலி போல காலை மடக்கி நடந்து வந்து பயமுறுத்த, மூவரும் சேர்ந்து கொல்லென சிரித்தார்கள். சற்று நேரத்தில் மேகநாதனும் வர வீடு களை கட்டியது.
நால்வரும் கிளம்பி கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்துவிட்டு கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.
பால்காரர் குணவேந்தன் அந்த பக்கம் வந்தார்.
“என்ன மேகா, தாரா பாஸாயிடுச்சுனு எங்க வீட்டம்மா சொல்லுச்சு! நீ எப்போ படிக்க போற?” என்றார்.
மேகநாதன் தலையை திருப்பி கொள்ள, தாராவுக்கு சங்கடமாக இருந்தது.
“குணா மாமா, அத்தை குடிக்குறது இல்லை, நீங்க எப்போ குடியை விட போறீங்க?” என ஒரே போடாக கேட்டான் சிவா.
“அப்பா, அவர் வீட்டு செவத்துல போய் குடி குடியை கெடுக்கும்னு எழுதிட்டு வாப்பா” என்றது சேனா.
குணவேந்தன் குடிவேந்தனாக இருப்பதை குழந்தைகள் சொல்ல, மெதுவாக நகர்ந்தார் அவர்.
“அம்மா, நாங்க போய் யானையை பாத்துட்டு வரோம்” என சொல்லி குழந்தைகள் எழுந்து சென்றார்கள்.
“இன்னைக்கு நா டிகிரி பாஸ் பண்ணிட்டேன்னு கலாவதி டீச்சர் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. வெண்மணி அக்கா கிட்ட காசு குடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பி கேக் வாங்கிட்டு வர சொல்லி எல்லா டீச்சர்ஸுக்கும் என்னை குடுக்க சொன்னாங்க. நானே வாங்கியிருக்கணும், எனக்கு தோணலைங்க” என்றாள் தாரா.
“கரெக்ட்டு தான், இன்னொரு நாள் நீ எல்லாருக்கும் நம்ம சார்பா ஸ்வீட் குடுத்துடு” என்றார் மேகா.
“ஷூ கம்பெனிக்காரங்க சில டாக்குமெண்ட் கேட்டாங்கன்னு டீச்சர் சொன்னாங்க. நாளைக்கு முடிவு பண்ணி சொல்றேன்னு சொல்லி இருக்கேன். ஏதோ ஒரு பயம் மனசுல இருக்கு, ஆனா என்னன்னு சொல்ல தெரியல” என்றாள் தாரா.
“உன்னால முடியும் தாரா, இந்த வேலையில சேரும்போது எவ்வளவு யோசிச்ச? எப்படி இவ்ளோ சின்ன பசங்கள பாத்துகிறதுன்னு? ஆனா இந்த பத்து வருஷத்துல நீ எவ்ளோ இம்ப்ரூவ் ஆகி இருக்கே! இன்னைக்கு அந்த பயம் இருந்த இடம் தெரியாம போயிடுச்சி. அது போல தான் இப்பவும். ஒரு விஷயத்தை புதுசா ஆரம்பிக்கும் போது யாருமே அதுல எக்ஸ்பர்ட் கிடையாது. அதனால முடியும்னு நெனச்சி துணிஞ்சு இறங்கு” என ஊக்கம் கொடுத்தார் மேகா.
“சரிங்க, யோசிக்கிறேன்” என தாரா சொல்ல “வா கெளம்பலாம்” என்றார் மேகா.
அவர் ஆட்டோவை ஓட்ட, மற்ற மூவரும் பின் சீட்டில் உட்கார்ந்தார்கள்.
கோவிலை ஒட்டிய மெயின் ரோட்டில் கல்யாண ஊர்வலம் மெதுவாக போய் கொண்டிருந்தது.
ஆட்டோ டிராபிக்கில் நிற்க, “அம்மா, போன் குடு, எனக்கு போரடிக்குது” என கேட்டது சேனா.
“ஏன், உன்னால கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதா?” என திட்டினான் சிவா.
சேனா கோபித்துக் கொண்டு மூஞ்சை திருப்பிக் கொண்டது.
தாரா என்ன செய்வது என யோசிக்கும் போது சேனா கையில் இருந்த வாட்டர் பாட்டில் ஒரு ஐடியாவை கொடுத்தது.
“சேனா, இந்த பாட்டிலை குடு, ஒரு கேம் சொல்லி தரேன்” என வாங்கி அதை அவர்கள் இருவரின் தொடைகளுக்கே நடுவே நிற்க வைத்தாள்.
“இதை கார் கியரா நெனச்சுக்கோ. அப்பா வேண்டிய நிறுத்தினா, நியூட்ரல்ல வை. மெதுவா ஸ்டார்ட் பண்ணா இடது பக்கம் போய், மேல் பக்கம் சாய்ச்சு வை. இன்னும் கொஞ்சம் ஸ்பீட் எடுத்தா செகண்ட் கியருக்கு அப்படியே பின்னாடி வா. ஒரே சீரா வண்டி ஓடுச்சுன்னா, கொஞ்சம் வலது பக்கம் வந்து முன்னாடி போ” என விளக்கினாள்.
சேனாவும் சிவாவும் பயங்கர குஷியாகிவிட்டார்கள். அந்த டிராபிக் ஜாம் அவர்கள் பல முறை கியர் மாற்றி விளையாடுவதற்கு ஏதுவாக இருந்தது.
“அப்பா, என்கிட்ட சொல்லாமா ஏம்பா ஸ்பீடு எடுத்த? நான் இன்னும் பர்ஸ்ட் கியர்லயே இருக்கேன்” என அவரை செல்லமாக திட்டியபடியே அவசரமாக பாட்டிலை நகர்த்தினார்கள்.
மேகநாதனும் அவர்கள் விளையாட ஏதுவாக போக்கு காட்டி ஓட்டினார். அரை மணி நேரம் ஆனது வீடு வந்து சேர்வதற்க்கு.
“செம சேனா, அருமையா கார் ஓட்டி எங்களை எல்லாம் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டே!” என பாராட்டினான் சிவா.
“அந்த பார்மசி சந்துல நான் சரியா கியர் போடலண்ணா. நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்கிறேன்” என தைரியமாக சொன்னது.
“பாத்தியா தாரா, இந்த சின்ன பொண்ணுக்கு இருக்குற நம்பிக்கையை? விளையாட்டா ஆரம்பிச்ச விஷயம், இப்போ அவளை ஒரு தேர்ந்த ட்ரைவரா உணர வெச்சிருக்கு. அவ கண்ணுல பயமோ, புது விஷயத்தை பழகுறோம் என்ற என்னமோ துளியும் இல்லை. தெரியலேன்னா வெளிப்படையா அத சொல்லி கத்துக்குறா. தெரியலேன்னு கூச்சப்படல” என மெதுவாக சொன்னார் மேகநாதன்.
தாராவுக்கு பொட்டில் அடித்தாற் போல தெளிவு ஏற்பட்டது.
“தேங்க்ஸுங்க, எனக்கு இப்போ புரிஞ்சிடிச்சு, நா ஹேண்டில் பண்ணிக்குறேன்” என சிரித்தாள் தாரா.
ஆறு மாதம் ஆனது. ஷூ கம்பெனி ப்ராஜெக்ட்டுக்காக, பயிற்சி வகுப்புகளை நேர்த்தியாக நடத்தி கொண்டிருந்தாள் தாரா.
மேகநாதன் இரண்டாவது வண்டி வாங்கி வீட்டின் முன் நிறுத்தினார்.
“ஹை, நம்ம வீட்டுக்கு குட்டி யானை வந்துடுச்சி!” என சிவா சந்தோஷமாக சொல்ல, “நா இதுக்கு பேரு வெச்சுட்டேன்!” என சொன்னது சேனா.
கதை நேரம் முடிந்து குழந்தைகள் வராண்டாவிற்கு செல்ல, ஊர் தலைவரும் கலாவதி டீச்சரும் வந்தார்கள்.
“லட்டு எடுத்துக்கம்மா, பசங்களுக்கும் குடுங்க” என பாக்ஸை நீட்டியவர் “நீ செஞ்சது பெரிய உதவிம்மா, நீ இல்லேன்னா நாங்க அடிக்கடி டவுனுக்கு போய் அலைய வேண்டியதா இருந்திருக்கும்” என சந்தோஷமாக நன்றி சொன்னார்.
கொஞ்ச நேரம் பேசி முடித்து விட்டு அவர் கிளம்ப, கலாவதி டீச்சர் மட்டும் இருந்தார்.
“தாரா, உக்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார். அவர் சொன்னதின் சுருக்கம் இதுதான்.
பொன்னி நர்ஸ் மற்றும் தலைவர் மூலமாக, தாரா பற்றி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு தெரிய வந்திருக்கிறது.
அவர் தாராவை பகுதி நேரமாக அந்த ஊர் பெண்களுக்கு யோகா சொல்லி தர நியமிக்க முடிவு செய்தார்.
அருகாமையில் இருந்த ஒரு ஷூ கம்பெனியின் CSR டீமிடம் பேசி, ஒரு குறிப்பிட்ட தொகையை தாராவுக்கு ஊதியமாக கொடுக்க ஏற்பாடும் ஆகி இருக்கிறது.
தாராவுக்கு இந்த வாய்ப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும், டிப்ளோமா மட்டும் படித்த தான் இதை பெறுப்பேற்று செய்ய முடியுமா என சந்தேகமாக இருந்தது.
மேலும் மாலை நேரத்தில் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இந்த வேலையில் ஈடுபட்டால் எப்படி வீட்டை கவனிப்பது எனவும் குழப்பமாக இருந்தது.
“டிப்ளமோ மட்டும் தான் கைல இருக்கு டீச்சர். இன்னும் டிகிரி முடிக்கல. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு, யோசிச்சு சொல்றேன் டீச்சர், ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் தாரா.
“ஷூ கம்பெனில இந்த ப்ரோக்ராம் அப்ரூவ் ஆக கொஞ்ச நாள் ஆகும், கவலைப்படாதே ” என சொல்லி கிளம்பி போனார் கலாவதி டீச்சர்.
அன்று இரவு உணவு நேரம். “இன்னைக்கு என்ன கதை சொன்னம்மா பசங்களுக்கு?” என கேட்டது சேனா.
“சூப்பரான யானை கதை. சீக்கிரம் சாப்பிட்டு வாங்க, சொல்றேன்” என்றாள் தாரா.
சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்து வரிசையாக பாய் விரித்து தாரா படுக்க, இருவரும் வந்து ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டார்கள். மூடிய அவர்கள் கண்களுக்குள் காடு விரிய ஆரம்பித்தது.
கதை கேட்டபடியே மேகநாதன் கிச்சனை சுத்தம் செய்து முடித்தார். பிள்ளைகள் இருவரும் தூங்கிவிட “இங்க வாங்க ஒரு விஷயம் பேசணும்” என அழைத்தாள் தாரா.
டீச்சர் சொன்ன விஷயத்தை சொல்லி தன் குழப்பத்தை விளக்கினாள். பொறுமையாக கேட்ட மேகநாதன் “தாரா, ரங்குவ நெனச்சி பாரு, உன் கேள்விக்கு பதில் கிடைக்கும். இந்த வாய்ப்பு உனக்கு கெடச்சா, நாம ரெண்டாவது வண்டிய கடனில்லாம சீக்கிரம் வாங்கிடலாம்” என சொன்னார்.
அன்று இரவு தூக்கத்தில் பலவகையான பொறுப்புகள் வெவ்வேறு உருவங்களில் அவளை சுற்றி வருவது போல மங்கலாக ஒரு கனவு வந்தது.
அடுத்த வந்த நாட்கள் சாதாரணமாக இருந்தாலும் தாராவின் மண்டைக்குள் பல கேள்விகளை எழுப்பி கொண்டே இருந்தது.
ஒரு நாள் போல, இருபது சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்வது அசாதாரணமான வேலை. அவர்களுக்கு அமைதியான சூழலை அமைத்து கொடுப்பதே பெரும் பொறுப்பு.
ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து, பேசி, உணவு கொடுத்து தூங்க வைப்பது என அடிப்படை பராமரிப்பு பணிகள் ஏராளம்.
கூடவே அவர்களின் கற்றல் தேவைகளையும் பூர்த்தி செய்து, அந்த நாளின் முடிவில் அவர்கள் பெற்றோரிடம் நல்ல படியாக ஒப்படைப்பது வரை மறைமுகமான ஒரு அழுத்தம் அவள் மீது இருக்கிறது.
மறுபுறம் வீடு, குழந்தைகள், குடும்பத்தின் பொருளாதார சூழல் என அடுக்கடுக்காய் பல விஷயங்கள் அவள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது.
அந்த வாரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலாவதி டீச்சரிடம் போய் பேசினாள். அவருடைய அனுபங்களை கேட்கும் போது, தான் மட்டும் இந்த சூழலில் இல்லை என்பது தாராவுக்கு புரிந்தது.
ரங்கு கேட்ட எல்லாம் அதுக்கு கிடைக்கும். நல்ல நல்ல பழங்கள், கரும்பு, கிழங்கு வகைகள்னு அவங்க அப்பா அதுக்கு தேடி தேடி கொண்டு வந்து கொடுப்பாரு.
அவங்க அம்மா ரங்குவோட நல்லா வெளையாடுவாங்க. ரெண்டு பேரும் ஆத்துக்கு போய் தண்ணில ஆட்டம் போடுவாங்க. அப்புறம் அந்த ஆத்தங்கரைல படுத்து கதை பேசி பொழுது போக்குவாங்க.
ஒரு நாள் ரங்கு அவங்க அப்பா அம்மாவோட, காட்டுக்குள்ள ஒரு ட்ரிப் போச்சு.
மத்த அனிமல்ஸ மீட் பண்ணி பேசிகிட்டு இருந்தது. அப்போ அங்க சிங்க ராஜா வந்ததும் எல்லாரும் எழுந்து நின்னு அவருக்கு வணக்கம் சொன்னாங்க.
சிங்க ராஜாவும் தலையை ஆட்டிட்டு அவங்களை கடந்து போய்ட்டாரு. ரங்கு அவங்க அம்மாகிட்ட கேட்டுது “ஏம்மா இவரு மட்டும் ராஜாவா இருக்காரு?”
பார்ட்டி மோடில் இருந்த ரங்குவின் அம்மாவுக்கு இந்த நொய் நொய் கேள்விகள் எரிச்சலாக இருந்தது.
“சிங்கம் தாண்டா எப்பவும் காட்டுக்கு ராஜா, அவர்தான் பவர்புல்” என பொதுவாக சொல்லியது.
ரங்குவுக்கு ஆர்வம் அடங்கவில்லை. அங்கே இருந்த குட்டி குரங்கு சைமனிடம் போய் விளக்கம் கேட்டது.
மரக் கிளையில் தலை கீழாக தொங்கிக்கொண்டிருந்த அது, ரங்குவுக்கு அற்புதமான ஒரு பதிலை சொன்னது.
“நம்ம தல செம பாஸ்ட்டா ஓடும். அவரை யாரும் பீட் பண்ண முடியாது” என ஊசலாடியபடியே சொன்னது.
ராஜாவாகும் கனவில் இருந்த ரங்குவுக்கு அது பேரிடியான பதில்.
தன்னால் எக்காலத்திலும் ராஜாவாக முடியாது என வருந்தியது. ட்ரிப்பில் இருந்து வாலண்டரியாக ட்ராப் ஆகி போய் மரத்தடியில் படுத்துக் கொண்டது.
சிங்க ராஜா மாதிரி ஓட என்ன வேண்டும் என யோசித்தது. தன்னுடைய எடை தான் முதல் தடை என எண்ணியது.
எப்படியாவது வெயிட் லாஸ் செய்து ஸ்லிம்மாகி வேகமாக ஓடி, காட்டுக்கே ராஜாவாகி காட்ட வேண்டும் என முடிவு செய்தது.
அன்றிலிருந்து அதன் உணவை பெருமளவு குறைக்க ஆரம்பித்தது. நீண்ட தூரம் நடந்தும், ஓடியும் பயிற்சி செய்தது. அதன் விளைவாக சில நாட்களில் அது அதீத பலவீனமாக உணர்ந்தது.
ரங்குவின் பெற்றோர் அதை கூப்பிட்டு பேசினார்கள்.
“இங்க பாரு ரங்கு, கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி படைச்சிருக்கார். சிங்க ராஜா ஓடுவார். ஆனா அவரால ஓரளவுக்கு மேல வெய்ட் தூக்க முடியாது. ஆனா நம்மால முடியும். அதனால நம்ம பிறவிகேத்த இயல்பிலிருந்து நம்ம மாற நெனச்சா, அது பலன் கொடுக்காது. நீ உன்னோட பலத்தை நம்பு, அதில் முன்னேற முயற்சி செய்” என்றார்கள்.
“அப்போ அது ராஜா கனவு கண்டது என்ன ஆச்சு?” என ஆஷாதேவி உஷாராக கேட்டது.
ரங்குவே சமாதானம் ஆனாலும் ஆஷாதேவி தேடி போய் கொளுத்தி போடும் மூடில் இருந்தது.
“இன்னும் இருக்கு கேளுங்க” என தொடர்ந்தாள் தாரா.
அப்பா சொன்ன பேச்சை கேட்டாலும், ரங்கு ஏமாற்றமாக உணர்ந்தது. அடுத்த நாள் ரங்குவின் அம்மா அதை கூட்டிக் கொண்டு தோட்டத்துப் பக்கம் நடந்தார்.
“இங்க பாரு தங்கப்பா, ராஜான்னு யாரும் தன்னை தானே சொல்லிக்க முடியாது. அதை மக்கள் சொல்லணும். மக்களுக்கு வேண்டியதை, அவங்க கஷ்டத்தை, அவங்க வாய் விட்டு சொல்லாமலேயே ஒரு மன்னன் தீர்க்கணும். இல்லேன்னா நம்ம சிங்க ராஜ மாதிரி நம்ம பாதுகாப்பை உறுதி செய்யணும். பலத்தை காட்டுறதோ, வேகமா ஓடுறதோ ராஜாவுக்கான தகுதி இல்லை” என மெதுவாக சொல்லி ரங்குவுக்கு புரிய வைத்தது.
“நீ இப்போ குட்டி பையன். நீ நல்ல குணங்களோட வளர்ந்து, இந்த காட்டுல இருக்குறவங்களுக்கு பொறுப்பா உதவி செய்தீன்னா, அவங்களே உன்னை உயர்வா நடத்துவாங்க” என சொன்னது.
“சரிம்மா, புரிஞ்சுக்கிட்டேன். என் பலத்தை எப்படி நான் மெருகேத்துறது?” என ஆர்வமாக கேட்டது.
“நா சொல்றபடி கேளு” என சொன்னது அம்மா.
அன்று சில புற்களை ஒன்று திரட்டி, அந்த புல்கட்டை ரங்குவின் தும்பிக்கையால் தூக்க வைத்தது.
பிறகு சிறு கட்டைகள். அதன் பிறகு கரும்பு கட்டு. தொடர்ந்து வாழை கட்டுகள்.
மறுபுறம் தினமும் நீச்சல் பயிற்சி. ரங்கு வயதிலும் திறனிலும் வளர்ந்து பெரிய மர கட்டைகளை அநாவசியமாக தூக்கும் அளவிற்கு முன்னேறியது.
வருடங்கள் ஆனது. சிங்க ராஜாவுக்கும் வயதானது. அவர் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது.
காட்டில் ஒரு கவலை கண்ணுக்கு தெரியாமல் படர ஆரம்பித்தது. அந்த வருடம் கடும் மழை. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லாரும் எப்படியாடுவது சிங்கத்தை காப்பாற்ற வேண்டும் என கடவுளை வேண்ட ஆரம்பித்தார்கள்.
ஆஷாதேவி கைகூப்பி முதல் ஆளாக கண் மூடி பிரார்த்தனையை ஆரம்பித்தது. லைனாக மற்றவர்களும் பிரேயர் மோடுக்கு போனார்கள்.
ரங்குவும் அதன் நண்பர்களும் எப்படியாவது சிங்க ராஜாவுக்கு வைத்தியம் செய்ய முடிவெடுத்தார்கள்.
ஒருநாள் சைமன் வந்து ரங்குவிடம் ஒரு விஷயத்தை சொன்னது.
“ப்ரோ, ஆத்துக்கு அந்த பக்கம் ஒரு வைத்தியர் இருக்காறாம். பச்சிலை வைத்தியத்துல பெரிய ஆளுன்னு அங்க ஆயா சொல்லுது. அதுவும் பழங்கட்டை. அது சொன்னா சரியாதான் இருக்கும். நீ உதவி செய்தா நாம முயற்சி பண்ணி பாக்கலாம்” என ஆர்வமாக சொன்னது.
“சரி வா, போய் சிங்க ராஜாகிட்ட சொல்லலாம்” என ரெண்டு பெரும் கிளம்பினார்கள்.
ராஜாவின் குகை அமைதியாக இருந்தது. ராணி சிங்கம் சோகத்தில் இருந்தார்.
ஆஷாதேவி கண்ணே வெளியே வரும் அளவுக்கு வாயை பிளந்து கேட்டு கொண்டிருந்தது.
“தொறந்துட்டாரா கண்ணை?” என ஆர்வமாக கேட்டது.
ஆஷாதேவி சிங்க ராஜாவின் பிரேயர் மீட்டிங்கை எப்போதோ மனதில் நடத்தி விட்டது.
“இரு சொல்றங்கள்ல” என்றது ஷைலா.
சிங்க ராணி வந்து உதவி செய்ய, ராஜா பெட்டில் சாய்ந்து உட்கார்ந்தார். குட்டி முயல் கொடுத்த வெந்நீரை வாங்கி மெதுவாய் பருகினார்.
சைமன் வைத்தியர் விஷயத்தை சொல்லி, “ராஜா, நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க, நாங்க உங்களை வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போறோம்” என உறுதியாக சொன்னது.
“என் காலம் முடிஞ்சு போச்சு. நீங்க வாழ வேண்டிய பசங்க. எனக்காக எதுக்காக ரிஸ்க் எடுக்குறீங்க? என்னால எங்கயும் நகர முடியாது. இந்தம்மாவ நல்லா பாத்துக்குங்க” என உயில் மட்டும் எழுதாத குறையாக பேசினார் ராஜா.
“எங்க ஆயா கூட இப்படி தான். டாக்டர் வீட்டுக்கு கூப்பிட்டா ஒடனே வராது. அத ஆட்டோல ஏத்துறதே பெரிய கஷ்டம்” என சொந்த கதையை சொருகியது ஆஷாதேவி.
சிங்க ராணி கண்ணீர் சிந்த, குட்டி முயல் மூக்கை சிந்த, அதை பார்த்த ராஜாவின் மனம் மாறியது.
“ஏதோ இவங்க திருப்திக்காக வரேன்” என ஒப்புக்கொண்டார்.
சைமனும் ரங்குவும் போர் கால அடிப்படையில் வேலையை ஆரம்பித்தார்கள். மழை பொத்துக்கொண்டு ஊத்தியது.
ராஜாவின் கிச்சனில் இருந்து பெரிய வாழை இலைகளை கொண்டு வந்து அவரை சுற்றி கட்டினார்கள்.
ஒரு சந்தன மர பலகையில் புல் கட்டுகளை அடுக்கி, அதன் மீது ராஜாவை தூக்கி உட்கார வைத்தார்கள். பிறகு கயறு போட்டு கட்டி அந்த பலகையை ரங்குவின் மீது தூக்கி வைத்தது சைமன். பிறகு அதுவும் ரங்குவின் மீது ஏறி ராஜாவுக்கு பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டது.
எல்லோரும் வரிசையில் நின்று வழியனுப்ப, ரங்கு சுழன்று ஓடும் ஆற்றில் மெதுவாக இறங்கியது. காற்றும் மழையும் தீவிரமாக, அவர்களுக்கு கண் பார்வையும் மறைக்க ஆரம்பித்தது.
“ப்ரோ, நா இவரை புடிச்சிக்குறேன். நீ அட் அ டைம்ல ஒரு ஸ்டெப் மட்டும் எடுத்து வை” என அட்வைஸ் செய்தது சைமன்.
“நீ கவலைபடாதே, என் வேலையே இதான். நீ அவரை மட்டும் விட்டுராத, கெட்டியா புடிச்சிக்கோ” என சொல்லி எச்சரிக்கையாக நீந்தியது ரங்கு.
ஆற்றின் மறுகரை அடைய ஒரு மணி நேரம் ஆனது.
வைத்தியர் ஆற்றங்கரையில் காத்துக் கொண்டிருந்தார். ரங்குவும் சைமனும் அவரை வணங்கிவிட்டு அவர் குடிலுக்கு பின் தொடர்ந்தார்கள்.
குடிலில் ராஜாவை இறக்கி வைத்தியர் கண்காணிப்பில் விட்டு விட்டு இருவரும் வெளியே நின்றார்கள்.
சற்று நேரம் கழித்து வந்த வைத்தியர், “அவர் நெலமை சரி இல்லை. அதுனால அவர் பத்து நாள் இங்க இருக்கட்டும். என்னால முடிஞ்சதை செய்யுறேன்” என அனுப்பி வைத்தார். பத்து நாள் ஆனது. ராஜா நலமாக இருக்கிறார் என அவரிடம் இருந்து செய்தி வந்தது.
ரங்குவும் சைமனும் மீண்டும் அவரை போய் அழைத்து வந்தார்கள். சிங்கராஜா அவர்கள் இருவரின் பெற்றோருக்கும் கண்ணீரோடு நன்றி தெரிவித்தார்.
“ரங்கு, இனிமேல் நீதான் என்னையும், இந்த காட்டையும் பார்த்துக் கொள்ள வேண்டும்” என சொல்லி அதை ஆசீர்வதித்தார்.
ரங்கு அவரை வணங்கிவிட்டு, அதன் பெற்றோருக்கும் வணக்கம் வைத்தது.
சைமனும் அதன் மற்ற தோழர்களும் சந்தோஷமாய் கைதட்ட, அந்த காடே உற்சாகமாக இருந்தது.
கதை முடிய, “இப்போ இந்த கதைல இருந்து நீங்க என்ன கத்துக்கிட்டீங்க?” என கேட்டாள் தாரா.
குழந்தைகள் ஆளாளுக்கு ஒரு மாரலை கண்டுபிடித்து சொன்னார்கள்.
முடிவாக தாரா சொன்னாள் “நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து முயற்சி செய்து, நல்வழியில் நடந்தால், ஒரு நாள் வெற்றி உங்களை தேடி வரும்!”
தாரா அன்று அங்கன்வாடிக்கு சென்று சேரும்போது பெரும்பாலான குழந்தைகள் வந்திருந்தார்கள். உதவியாளர் வெண்மணி அவர்களை அமர வைத்துவிட்டு, தண்ணீர் குடம் கொண்டு வந்து வைத்தார்.
பொன்னி நர்ஸின் போன் வந்தது தாராவுக்கு. “நம்ம கல்பனாவுக்கு பொண்ணு பொறந்திருக்கு தாரா. நார்மல் டெலிவரி. உன்கிட்ட தலைவர் சொல்ல சொன்னார். அப்புறம் வந்து உன்கிட்ட நேர்ல பாத்து பேசுறேன்னார்” என சொல்லி போனை வைத்தார்.
கல்பனா ஊர் தலைவர் மகள். கர்ப்ப காலத்தில் ரெகுலராக அங்கன்வாடிக்கு வருவாள். பேச்சு வாக்கில் ஒரு நாள் சுக பிரசவத்துக்காக சில யோகா முறைகளை டாக்டர் செய்ய சொன்னதாகவும், அதை யாருடைய கண்காணிப்பும் இன்றி தனியே செய்ய பயமாக இருப்பதாகவும் சொன்னாள்.
தாரா யோகாவில் டிப்ளமோ பட்டம் முடித்திருந்தாள். “சரி கல்பனா, நீ கவலைப்படாதே. நா வீட்டுக்கு வந்து நேர்ல சொல்லி தரேன். நீ பயமில்லாம செய்” என சொல்லி ஊக்கப்படுத்தினாள்.
அடுத்த நான்கு மாதம் தாராவின் நேரடி மேற்பார்வையில், யோகா, தியான பயிற்சி மற்றும் ஊட்டசத்து குறிப்புகள் என கல்பனாவுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்தது. இன்று அவளுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது தாராவுக்கு சந்தோஷமாக இருந்தது. வெண்மணி அம்மாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி விட்டு வகுப்பறைக்கு சென்றாள்.
அன்றைய நாளுக்கான வேலைகளை தாரா யோசித்துக்கொண்டிரும்போது, தூரத்தில் ஷாருக்கின் அழுகுரல் கேட்டது.
“இன்னைக்கும் அழுவுறானா? இவனை எப்படி சமாளிக்க போறம்மா?” என்றார் வெண்மணி.
“வரட்டும், பாத்துக்கலாம்” என சொன்னாள் தாரா.
தேம்பி தேம்பி அழுதபடியே வந்த ஷாருக்கை வெண்மணி வாங்கிக் கொண்டு அவன் அம்மாவை அனுப்பி வைத்தார்.
“ஏன்டா அழுவுற?” என அதட்டலாக கேட்டாள் தாரா.
சற்று அழுகை நின்று, “அக்காக்கு மட்டும் ஜாமென்டரி பாக்ஸ் வாங்கி கொடுத்துட்டாங்க. நா கேட்டா அப்புறம் வாங்கி தரேன்னு சொல்றாங்க” என சொல்லி மீண்டும் அழுகையை ஆரம்பித்தான்.
தாரா யோசிக்க “அவுங்க அக்கா ஆறாம் க்ளாஸ் படிக்குறாங்க. இவனுக்கு எதுக்கு?” என அவனை அல்பமாக பார்த்துக் கொண்டே சொன்னது ஆஷாதேவி.
முக்திக்கு முன் நிலையில் இருப்பது போல இருந்தது ஆஷாதேவியின் உரை.
“சரி வாங்க, எல்லாரும் ரவுண்டா உக்காருங்க, உங்களுக்கு கதை சொல்ல போறேன்” என டாபிக்கை மாற்றினாள் தாரா.
ஷாருக் இன்னும் சமாதானம் ஆகவில்லை. ஜாமென்டரி பாக்ஸ் விஷயத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எண்ணி உருண்டு உருண்டு அழுது கொண்டிருந்தான்.
இப்போது தான் எண்களில் நூறு வரை சொல்ல கற்று கொண்டிருக்கிறான். இவனுக்கு ஜாமென்டரி பாக்ஸ் தேவைப்பட இன்னும் சில ஆண்டுகள் இருக்கிறது. அக்காவுக்கு கிடைத்தது தனக்கும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தவிர வேறொன்றுமில்லை.
“டேய் ஷாருக், வெண்மணி அம்மாவுக்கு கால் வலி இருக்குது. அவங்களால செடிக்கு தண்ணி ஊத்த முடியல. கொஞ்சம் போய் வராண்டால அழுவுடா, அதுங்களுக்காவது தண்ணி கிடைக்கும்” என ஆஷாதேவி பொறுமையிழந்து கத்தியது.
ஷாருக்கை இன்ப்ளுயன்சாராக கருதி ஷைலா டேமை திறந்தது.
“நீ ஏன் அழுவுற?” என தாரா கேட்க, “அம்மா வேணும்!” என மூக்கை சிந்தியது.
ஷைலா அங்கன்வாடிக்கு வர ஆரம்பித்து பத்து மாதங்களுக்கு மேலாகிறது!
இப்போது என்ன திடீர் அம்மா பாசம் என ஆஷாதேவிக்கு புரியவில்லை.
இதுங்களால் கதை நேரம் குறைவதை அதனால் ஏற்று கொள்ள முடியவில்லை.
ஷாருக்கை அம்போவென விட்டு விட்டு ஷைலாவை மியூட் செய்ய நகர்ந்தது.
தாரா எல்லோரையும் கவனித்தவாறே, பாயை விரித்து ஒவ்வொருவராய் உட்கார வைத்து, சாமிக்கு பூ வைத்து விட்டு, “எல்லாரும் கண் மூடி, கை கூப்புங்க” என சொன்னாள்.
“ஷாருக், வா இங்க வந்து உக்காரு. ஷைலா, நீ இந்த பக்கம் வா” என ரெண்டு பேரையும் தன்னருகே அமர்த்திக் கொண்டாள் தாரா.
“ஷாருக், உனக்கு என்ன அனிமல் புடிக்கும் சொல்லு?” என கேட்டாள்.
“சிங்கம்” என சிவந்த கண்களோடு வீரமாய் சொன்னான் ஷாருக்.
ஆஷாதேவி வேண்டுமென்றே களுக்கென சத்தமாக சிரிக்க, மற்ற வாண்டுகளும் சிரிக்க ஆரம்பித்தது.
தாராவுக்கே அவன் பதில் சொன்ன வேகம் காமெடியாக இருந்தது.
“சைலன்ஸ், ஷைலா உனக்கு யார் பிடிக்கும்?” என கேட்டாள்.
“யானை” என்றது ஷைலா.
“சூப்பர், இன்னைக்கு நம்ம கதைல சிங்கமும் யானையும் தான் வர போறாங்க” என தாரா சொல்ல, ரெண்டு பேரும் அடுத்த நொடியே உற்சாகமானார்கள். அவரவர் மனதில் அந்த கதைக்களம் விரிய ஆரம்பிக்க, அந்த பள்ளி வளாகம் ஒரு மாய காடாக மாறிக் கொண்டிருந்தது.
கோல்கப்பா : மாதாஜி, இப்போது அதிரச யோகம் ஆரம்பித்திருக்கிறதாமே? அதை பற்றி விளக்குங்கள்.
மாதாஜி : கோல்கப்பா, அது அதிரச யோகமில்லை, அதிசார யோகம்! நீ இன்னும் தீபாவளி மூடிலிருந்து வெளியே வரவில்லையா?
கோல்கப்பா : ஹிஹிஹி, மன்னித்துக் கொள்ளுங்கள் மாதாஜி. அடியேனுக்கு அறிவு அவ்வளவு தான்!
மாதாஜி : பரவாயில்லை, உன் சந்தேகம் என்ன கேள்?
கோல்கப்பா : ஆளும் தரப்புக்கு அதிசார யோகம் எப்படி இருக்கிறது மாதாஜி?
மாதாஜி : அதிசார யோகம் என்ற வார்த்தையை கூட அவர்கள் காதால் கேட்க விரும்ப மாட்டார்கள்!
கோல்கப்பா : ஏன் மாதாஜி?
மாதாஜி : அதிசாரத்தில் “சார்” இருக்கிறது அல்லவா? அதனால் தான்!
கோல்கப்பா : ஹிஹிஹி, மாதாஜி பலமான மேட்டராக சொல்கிறீர்கள்? இன்னும் சற்று விளக்கவும் ப்ளீஸ்.
மாதாஜி கண் மூடி யோசிக்கிறார்.
மாதாஜி : ஒன்றா, இரண்டு கோல்கப்பா? அவர்களை உலுக்கிய “சார்” நிகழ்வுகளை வரிசையாக பார்ப்போம். நம் மாநில தலை நகரில் நடந்த அவல நிகழ்வு, அதை தொடர்ந்து நடந்த “யார் அந்த சார்?” என்ற போராட்டம்!
கோல்கப்பா : ஆமாம் மாதாஜி, என்னைக்கும் அந்த போஸ்டர் வாசகம் நினைவிருக்கிறது.
மாதாஜி : அடுத்ததாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்ட அனுமதி தந்த விவகாரம்!
கோல்கப்பா : ஹா, அந்த ராம்சார் லேண்டு பிரச்சினை தானே?
மாதாஜி : ஆமாம் கோல்கப்பா, சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பான விஷயத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கவனத்தில் எடுத்து, மாநிலத்தில் உள்ள சதுப்பு நிலங்களை ஆய்வு செய்து அடையாளம் காணும்படி உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் கட்டடம் கட்ட முறைகேடாக அனுமதி தந்த புகார் இப்போது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.
கோல்கப்பா : இது சென்னையின் மழை வெள்ள மேலாண்மையை மேலும் பாதிக்குமே மாதாஜி!
மாதாஜி : மண்டையில ஓட்ட இருக்கே நமக்கே தெரியுது! அதிகாரிகளுக்கு தெரியாதா?
கோல்கப்பா : அடுத்த சார் மேட்டர் என்ன மாதாஜி?
மாதாஜி : தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR)!
கோல்கப்பா : ஜனநாயகத்தை காப்பாத்தணும்னு சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்காங்க போல?
கோல்கப்பா : அற்புதம்! அமர்க்களம்! சரி நம்ம பிரதான எதிர் கட்சிக்கு அதிசார யோகம் எப்படி இருக்கு மாதாஜி?
மாதாஜி : புது கட்சி கூட்டணிக்கு வரும்னு சொன்னாங்க. பழம் நழுவி பால்ல விழற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தினாங்க. ஆனா புது கட்சி தலைவர் சரிப்பட்டு வரல, அதனால அவங்க நிலைமை இதுதான்!
கோல்கப்பா : ஹஹிஹி மாதாஜி, உங்க செலெக்க்ஷன் அட்டகாசமா இருக்கு. சரி நம்ம புது தலைவருக்கு நேரம் எப்படி இருக்கு?
மாதாஜி : நேரம் நிச்சயம் சரியில்லை! ஆனா அவர் மன உறுதியோட தொடர்ந்து செயல் பட்டு, come back குடுத்தாருன்னா நிலவரம் மாறலாம். நிலைகுலையாம உண்மையா போராடுனார்னா இந்த சேர் கெடைக்கலாம்!
கோல்கப்பா : மாதாஜி, கட்சிகளை பத்தி சொல்லிடீங்க. அரசாங்கத்துக்கு எப்படி இருக்கு?
மாதாஜி : பெருங்காயப்பட்டு இருக்குற கஜானாவுக்கு சாராய பணத்தை பாய்ச்சி ஓட்டிக்கிட்டு இருக்காங்க!
கோல்கப்பா : நன்றி மாதாஜி!
மாதாஜி : மக்களே, இதோடு தீபாவளி சிறப்பு மலர் நிறைவடைகிறது!
கோல்கப்பா : செய்தி ஊடகங்களை மட்டும் கண்மூடித்தனமா பாலோ பண்ணி இப்போ நடக்குற பாலிடிக்ச மக்கள் புரிஞ்சிக்க கூடாது.
பூரி குமாரி : என்னங்க சொல்றீங்க?
கோல்கப்பா : ஆமாடி, பொது வெளியில் வரும் செய்திகள் அனைத்தும், நமக்கு உண்மையை நேரடியாக சொல்லாது. நாம தான் ஒவ்வொரு நிகழ்வையும் பகுத்து பார்த்து முடிவெடுக்கணும்.
பூரி குமாரி : தெளிவா சொல்லுங்க கோல்.
கோல்கப்பா : சொல்றேன் கேளு, அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வார்த்தையையும், நகர்வையும், செயலையும் மக்கள் நுட்பமாக கவனிக்கணும். நடப்பு விபரங்களை நிதானித்து ஆராய்ந்தால் மட்டுமே, உண்மையை புரிந்து கொண்டு அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முடியும்.
பூரி குமாரி : ஏங்க, இவ்ளோ சீரியஸா பேசுறீங்க? மக்களுக்கு புரியற மாதிரி ஒரு எக்ஸாம்பிளோட சொல்லுங்க!
கோல்கப்பா : இப்போ பாரு, ஆளும் கட்சி கடந்த காலங்கள்ல ஜெயிக்க குறிப்பிட்ட “மூணு எழுத்து” உதவி இருக்கு!
பூரி குமாரி : அது என்னங்க மூணு எழுத்து?
கோல்கப்பா : TVI – டெலிவிஷன் இலவசம், தகுதி வாய்ந்த இல்லத்தரசி என நல திட்டங்கள்( TeleVision Ilavasam, Thaguthi Vaindha Illatharasi)
பூரி குமாரி : 2026ல “TVI”னா என்னங்க?
கோல்கப்பா : வேறென்ன? தலைமைக்கு வருகிறார் இளவரசர் தான்! (Thalaimaikku Varugiraar Ilavarasar)
தொலைக்காட்சி விவாதங்களெல்லாம் இரைச்சலே! தீய வஞ்சகர்களுக்கு இரையாகாதீர்கள்!
துளிர்த்து வளர்பவர்களை இருட்டடிப்பார்கள்! தனிமனித விமர்சனங்களில் இங்கிதமிருக்காது!
தொடர் ஓட்டத்தில் இளைப்பாறுதலில்லை! தந்திரக்காரர்களை வேரறுக்க இயங்குங்கள்!!
(Theri Vaarungal Ilaignare
Thelindhu Vaarungal Irumbaaga
Tholaikaatchi Vivaadhangalellam Iraichchale
Theeya Vanjagargalukku Iraiyaagadheergal
Thulirthu Varubavargalai Iruttadipaargal
Thanimanidha Vimarsanangalil Inghithamirukkaadhu
Thodar Vottathil Ilaipaarudhalillai
Thandhirakaaragalai Verarukka Iyangungal)
கோல்கப்பா : அட அட அடடா! கலக்குறியே கண்ணம்மா!
பூரி குமாரி : பாராட்டு இருக்கட்டும்! இன்னைக்காவது எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க!
கோல்கப்பா : நானே எழுதுனா உன் கிட்ட உதை தான் வாங்குறேன். அதனால பாரதியார் எழுதுனதை உனக்கு டெடிகேட் பண்றேன்!
நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா…
பூரி குமாரி : அருமை! அருமை! அருமைங்க!
கோல்கப்பா : மக்களே! நமக்கும் “தீதும் நன்றும் பிறர் தர வாரா”! அதனால “Twisted Narrative Propaganda TV” செய்திகளை மட்டும் நம்பி தேர்தல்ல ஓட்டு போடாதீங்க! Bye!
கூட்டத்தில் இருந்து கிளம்பியவர்கள் குமரஜோதியை வள்ளியப்பன் கடையருகே வர சொன்னார்கள்.
அங்கு இருந்த பஸ் ஸ்டாப் காலியாக இருந்தது. அவரிடம் விவரம் சொல்லி அந்த பணத்தை அவரையே வைத்துக் கொள்ள சொன்னார்கள். அவரின் உதவிக்கு நன்றி சொல்லி யார் வந்து கேட்டாலும் அவர் எதுவும் தரவில்லை. நான் தண்ணீர் கேன் போட்டுவிட்டு வந்து விட்டேன் என சொல்லுமாறு அறிவுறுத்தி கிளம்பினார்கள்.
வீட்டுக்கு போய் உடை மாற்றி செல்லகுமாருக்கு நன்றி சொல்லி இருவரும் போய் பார்க்கில் உட்கார்ந்தார்கள். கல்பனா வந்தார். மொத்த கதையையும் கூர்ந்து கேட்டார்.
விஷயம் தலைமை வரை சென்று சேர்ந்ததை இவர்களிடம் சொன்னார். பி
றகு சற்று யோசித்த கல்பனா “இந்நேரம் லோக்கல் ஸ்டேஷன்க்கு மெசேஜ் வந்திருக்கும். இந்த மாதிரி சென்சிடிவ் மேட்டர் எல்லாம் குமரகுரு சார் தான் விசாரிப்பார். ரத்தினத்தை விசாரிச்சு அவர் உங்க பேர சொன்னா இங்க வர வாய்ப்பு இருக்கு. நாம தயாரா இருக்கணும்” என்றார்.
மூன்று பேரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு கல்பனா சில யோசனைகளை சொல்லி நான் பார்த்துக்கிறேன் என தைரியம் சொன்னார்.
செல்லகுமாரை போய் பார்த்தார் கல்பனா. யாராவது நேசமணி பற்றி விசாரிக்க வந்தால் தனக்கு தகவல் சொல்லுமாறு அறிவுறுத்தினார். பிறகு அவர்களிடம் என்ன கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என சொல்லி புரிய வைத்தார். அதையே சங்கு புஷ்பத்திற்கும் சொன்னார். அந்த இரவு சம்பந்தப்பட்ட அனைவருக்கும்ஒரு நெடிய இரவாக இருந்தது.
எம்பி அவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவர் நம்பவில்லை. பிறகு “சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் பண்ண சொல்லுங்க. அப்புறம் பார்க்கலாம். நாளைக்குள்ள என்ன நிலவரம்னு சொல்லுங்க. ஏதாவது பிரச்சினை இருந்தா கேண்டிடேட்டை மாத்திடலாம்” என்றார் அவர்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அண்ணணும் ரத்தினமும் ஆளும் கட்சி வேட்பாளர் நேசமணிக்கு வாழ்த்தும் ஒத்துழைப்பும் தருவதாக உளமார சொன்னது ஆதாரத்தோடு தலைமைக்கு சென்றது.
இங்கே லோக்கலில் புகைச்சல் அதிகமானது. அண்ணன் காதுக்கு வந்த செய்தி எதுவும் நல்ல செய்தி இல்லை.
ரத்தினத்திடம் டம்மி வேட்பாளராக அறியப்பட்ட நேசமணிகளின் டாக்குமெண்ட்டை கேட்டார். அவரிடம் எதுவும் இல்லை. பணம் எங்கே என்றார். தண்ணீர் கேன்காரருக்கு கொடுத்ததாக சொன்னார் ரத்தினம். எதுவும் நம்பம் படியாக இல்லை அவருக்கு.
அப்போது அவருக்கு ஒரு செய்தி வந்தது. புஷ்பா லிஸ்ட் வித் ரத்தினம் ஐடி கார்டு.
“இதெல்லாம் என்ன” என கண் சிவந்தார் அண்ணன். எதற்கும் பதில் இல்லை ரத்தினத்திடம்.
காலையில் லேசாய் சுற்றிய அவரின் தலை இப்போது பம்பரமாய் சுற்றியது.
குமரகுரு ரத்தினத்தை விசாரித்தார். அவர்கள் இருவரின் போன் ரெக்கார்டுகளை எடுத்தார்.
இருவரும் டாக்டர் நேசமணிக்கு செய்தி அனுப்பியது சிக்கியது.
“நேசமணி எந்த பிளாட்? என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.
செல்ல குமார் பிளாட் நம்பர் சொன்னார். விசிட்டர் பைல் செக் செய்தார்.
ரத்தினம் வந்தது நோட்டில் இருந்தது. ஐந்து மணி நேரத்திர்ற்கு மேலாக இங்கே இருந்திருக்கிறார். என்னவாக இருக்கும் என யோசித்தார்.
“அவங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க? என்ன பண்றங்க” என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.
“சார் அவங்க ரெண்டு பேரு மட்டும் தான் வீட்ல. ரிட்டையர்டு ஆனவங்க. சார் போஸ்ட் ஆபீஸ்ல இருந்தார். அந்த அம்மா நர்ஸு” என்றார் செல்ல குமார்.
“நீங்க தான் நைட் ஷிப்டா” என்றார் குமரகுரு.
“இல்ல சார். வேற ஒருத்தர் வரணும். அவரு வெளியூரு. அங்க ஒரு டெத்து. அவரு வரல. அதன் நா இருக்கேன்”. என்றார் செல்லகுமார்.
“எந்த ஊரு” என்றார் குமரகுரு.
செல்ல குமார் சொன்னார். “சார், உங்க ஊர்ல ஒரு டெத்தா இன்னைக்கு” என ஊர் தலைவரை விசாரித்தார். அவர் ஆமாம் என்று சொல்ல செல்லகுமாரை நம்ப ஆரம்பித்தார் குமரகுரு.
“ரிட்டையர்டு ஆயிட்டு இப்போ என்ன பண்றாங்க?” என்றார் குமரகுரு.
“அந்த அம்மா லைப் கோச் சார். வர்றவங்க மணி கணக்குல பேசுவாங்க. அவரு வயசானவரு. ரெண்டு பேருக்கும் சுகர். அவங்க பசங்க ரெண்டு பேரு பாரின்ல இருக்காங்க. ஒரு பொண்ணு ப்ரொபஸரா பாண்டில இருக்காங்க. அவங்க மட்டும் வாரா வாரம் வந்து பாத்துட்டு போவாங்க. ரொம்ப டீசண்டான பேமிலி சார்” என்றார் செல்ல குமார்.
“எல்லா ப்ளாக்லயும் இருக்கு சார்” என்றார் செல்ல குமார்.
“சரி, நைட் ஷிப்ட் கிட்ட சொல்லி வைங்க. நா போகும் போது பார்த்துட்டு போறேன்” என்றார்.
“அவங்க வீட்டுக்கு தண்ணீர் கேன் வந்துதா? எப்போ” என அதையும் சேர்த்து கேட்டார்.
“ஆமா சார். மத்தியானம் வந்தார். போட்டுட்டு கொஞ்ச நேரத்துல போயிட்டாரு.
இருங்க நோட்ல பாக்குறேன்” என்றார் செல்லகுமார்.
“இந்த பையன் சிஸ்டமேடிக்கா இருக்கான்” என நல்ல அபிப்ராயம் வந்தது குமரகுருவுக்கு.
“சார் மொத்தம் பத்து நிமிஷம் தான் சார்” என்றார் செல்லகுமார்.
“சரி” என சொல்லி உள்ளே கிளம்பினார்.
செல்ல குமார் பக்கத்தில் இருந்த நைட் வாட்சமேனை பார்க்க அவர் போனை எடுத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் போனார். கல்பனாவுக்கு மெசேஜ் வந்தது.
அவர் குரங்கு குல்லாவை மாட்டிக் கொண்டு கீழே நாயை கூட்டிக்கொண்டு இறங்கி வந்தார்.
“மேடம் நீங்க இங்க தான் இருக்கீங்களா” என்றார் குமரகுரு.
கல்பனா திரும்பி “நீங்க எங்க சார் இங்க? அதுவும் ராத்திரில. நா இந்த பிளாக்ல தான் இருக்கேன்” என்றார்.
“நல்லதா போச்சுங்க. இங்க ஜி பிளாக் நேசமணிய தெரியும்களா” என்றார் குமரகுரு.
“அவங்கள தெரியாதவங்க ரொம்ப கம்மி சார் இந்த காம்பௌண்ட்ல. என்ன சார் விஷயம்?” என்றார் கல்பனா.
சுருக்கமாக கதையை சொன்னார் குமரகுரு.
“என்ன சார் இது. எங்க காம்பௌண்ட்லயே இந்த மாறி ஒரு அட்டெம்ப்ட்டா? எல்லாரும் பச்சவங்க, நல்ல பொசிஷன்ல இருக்கவங்க” என்றார் கல்பனா.
“ஆமாங்க, எனக்கும் அப்டி தான் தோணுது. மூணு நாலு லட்சம்லாம் இங்க இருக்குறவருக்கு ஒரு மேட்டரே கிடையாது. அந்த அமௌண்ட்டுக்கு மானம் மரியாதையை யாரு அடகு வெப்பாங்க?” என கேட்டார் குமரகுரு.
“சார் எதுக்கும் நாம சிசிடிவி ஒரு தரவ பாத்துட்டு முடிவு பண்ணலாம். வாங்க” என ஆபீஸ் ரூம் பக்கம் போனார்கள்.
ரத்தினம் ரிஷப்சனில் காத்திருந்தது, செல்ல குமார் போன் பேசியது, பிப்த் ப்ளோர் காரிடரில் நடந்த உரையாடல், அவர் சங்கு புஷ்பத்துக்கு காசு கொடுத்தது, பிறகு அவர் வெய்ட் பண்ணி உள்ளே போனது என எல்லாம் இருந்தது.
கொஞ்ச நேரம் கழித்து காபி வந்தது. பிறகு தண்ணீர் கேன் வந்தது. அவர் உள்ளே போய் சில நிமிடங்களில் வெளியே வந்து விட்டார். சில்லறை காசு வாங்கும் நேரம் தான். பிறகு ரத்தினம் கிளம்பி வெளியே போகிறார்.
“சார் இதுல ஏதாவது உங்களுக்கு பொறி தட்டுதா” என்றார் கல்பனா.
“வித்தியாசமா எதுவும் இல்ல. அந்த அம்மா ஏதோ ஸ்ட்ரிக்டா சொல்றாங்க. அவரு அப்புறம் தன் காசு தராரு. மொதல்ல அந்த அம்மா அவரை உள்ளேயே கூப்புடலை. வெளில சேர போட்டு உக்கார சொல்ராங்க. இந்த மாறி டீலிங்க்ல இருக்கவுங்க வெளிப்படையா இருக்க மாட்டாங்க. அப்புறம் காசு தந்தப்புறமும் அந்த அம்மா உடனே உள்ள விடல” என யோசித்தார் குமரகுரு.
“சரி சார். வீட்டுக்கு வாங்க பேசலாம்” என அழைத்துப் போனார் கல்பனா.
“இந்தாங்க சார் பஞ்சாமிர்தம்” என உபசரித்தார் கல்பனா.
“இப்ப எப்படி ப்ரோசீட் பண்றது? என குழம்பினார் குமரகுரு.
“அவங்கள விசாரிக்கணும். ஆனா தொந்தரவா இருக்க கூடாது. இது தப்பான புகாரா இருந்தா வயசானவங்க அவங்க வருத்தப்படுவாங்க” என உண்மையாக கரிசனப்பட்டார் குமரகுரு.
இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் என அமைதியாய் இருந்தார் கல்பனா.
ஸ்டேஷனில் இருந்து போன் வந்தது குமரகுருவுக்கு. தலைமைக்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட் வேணும் என.
“மேடம் அவங்க உங்களுக்கு பழக்கமா? கொஞ்சம் போன்ல கேஷுவலா பேசி பாருங்களேன்” என உதவி கேட்டார் குமரகுரு. கல்பனா போனை போட்டார்.
மீண்டும் சங்கு புஷ்பம் தொடர்ந்தார். “அவரு கொஞ்சம் மொரடானா ஆளா இருந்தாரு. கட்சிக்காருனு சொன்னாரு. மீட் பண்ணனும் ஆனா கன்சல்டேஷன் தர மாட்டேன்னு ஒரே அடாவடி. நானும் உள்ள விடல. அப்புறம் தான் வேற வழி இல்லேன்னு குடுத்தாரு” என பொறுமையை சோதித்தார் சங்கு புஷ்பம்.
“அப்புறம் என்ன ஆச்சு” என்றார் கல்பனா.
“எங்க எல்லாருக்கும் மண்டை காஞ்சி போச்சு” என மீண்டும் குறுக்கில் வந்தார் நேசமணி.
இது சரியான காமெடி டைம் பேமிலி என நினைத்தார் குமரகுரு. இவர்கள் இவ்வளவு நார்மலாக இருக்கிறார்கள். அந்த ஆள் இவர்களை கை காட்டுகிறான் என யோசித்தார்.
“என்ன விஷயமா வந்தார்” என கேட்டார் கல்பனா.
“ரொம்ப சிம்பிள் மா. அங்கிள பாக்கணும் அவருக்கு. எலெக்க்ஷன்ல சுயேச்சையா நிக்குறீங்களானு கேட்டாரு. இவரு சுகர் பேஷண்ட்டு. சும்மாவே நிக்க முடியாது. இவரு எங்க சுயேச்சையா நிக்குறது. அவரு இன்டென்ஷன் ரொம்ப தப்பா இருந்தது. நாங்க முடியாது கெளம்புங்கன்னு சொல்லிட்டோம்” என உடைத்து பேசினார்.
“அப்புறம்” என்றார் கல்பனா.
“அவரு கதையை சொன்னாரு. நா லைப் கோச்சுனால ஊர் கதை எல்லாம் பேசினாரு. எட்டாயிரம் பீஸ் வேற குடுத்தாரு. ஒழச்சு சம்பாதிக்குறவன் எவனும் வெட்டி கதைக்கு எட்டாயிரம் தர மாட்டான். நடுவுல திரும்ப அவருகிட்ட பேச ஆரம்பிச்சுட்டான். நாலு லட்சம் தரேன்னு சொல்றான்”.
“நீங்க போக சொல்லலியா?” என்றார் கல்பனா.
“அவரு அவங்க அண்ணன் கிட்ட போன்ல பேசுறாரு. இவருகிட்ட பேசுறாரு. அப்புறம் என்கிட்டே கொஞ்ச நேரம் பேசுறாரு. அவரு எதுக்கு வந்தார்னே எங்களுக்கு புரியல. இன்னும் சொல்ல போனா நம்ம குமரஜோதி தண்ணி கேன் எடுத்துட்டு வந்தா அவருகிட்ட பேசுறாரு. அவரு வீட்டம்மாவுக்கு நல திட்ட உதவி வாங்கி தரேன்னு ஒரே அலப்பறை” என கொட்டி தீர்த்தார்.
“அப்புறம்” என்றார் கல்பனா.
“ஒரு வழியா நாங்க முடியாதுன்னு சொல்லிட்டோம். இன்னொரு விஷயம் சொல்றேன் ஷாக் ஆவாத” என சஸ்பென்ஸ் வைத்தார் சங்கு புஷ்பம்.
“அந்த ஆளு என்ன சுயேச்சையா நிக்க முடியுமான்னு கேட்டாரு. ஒரு கேண்டிடேட்டு புஷ்பாவாம். நா சங்கு புஷ்பம்னு என்ன கேட்டார்.”
“இதுக்கு மேல அவரை பத்தி என்ன சொல்றது” என கொட்டி தீர்த்தார் சங்கு புஷ்பம்.
கல்பனா தொடர குமரகுரு போனிலேயே ரிப்போர்ட் கொடுத்து விட்டார்.
தலைமைக்கு தெளிவாக ரிப்போர்ட் சென்றது.
அண்ணன் மற்றும் ரத்தினமுத்து சேகர் இருவரும் மாற்று கட்சிக்காக வேலை செய்து கட்சிக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக டம்மி வேட்பாளர்களை நிறுத்த சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள்.
கட்சிக்கு கெட்ட பேரையும், கட்சி கட்டுப்பாட்டையும் மீறியதால் அவர்கள் இருவரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கபடுகிறார்கள். கட்சியின் சார்பாக புது வேட்பாளர் நாளை அறிவிக்கபடுவார்” என இரவோடு இரவாக செய்தி குறிப்பு வந்தது. அண்ணனும் ரத்தினமும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் கைதியானார்கள்.
ரத்தினம் கிளம்பியதும் கதவை சாத்தியவர்கள் ஆளுக்கொரு பாத் ரூமிற்க்கு ஓடினார்கள். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பசியையும் இயற்கை உபாதைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
பாத்ரூம் போய் வந்த பிறகு ஆயாசமாக உணர்ந்தார்கள். பேருக்கு நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டார்கள். ரத்தினம் கிளம்பி விட்டதால் இனி போன் பேசலாம் என உணர்ந்தார்கள்.
ரெஸ்ட் எடுக்க சங்கு புஷ்பத்திற்க்கு நேரமில்லை. லக்ஷ்மிக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி இனி என்ன செய்யலாம் என திட்டமிட்டார்.
லக்ஷ்மிக்கு நேரில் போய் அவர்களை கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
முன்பின் தெரியாத ஒருவர் தங்களை சந்திக்க வருகிறார் என்றபொழுது அவர்களின் நிதானமும் எச்சரிக்கை உணர்வும் பிரமிப்பாக இருந்தது.
அந்நிய ஆட்களை கணித்து அவர்களிடம் எவ்வளவு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று லக்ஷ்மியும் கற்றுக் கொண்டார்.
அடுத்த போன் கல்பனாவுக்கு போட்டார் சங்கு புஷ்பம்.
கல்பனாவின் உறவினர் ரத்தினம் கட்சியில் உள்ள முக்கியஸ்தருக்கு பாதுகாப்பு பணியில் உள்ளவர். அவர் போய் ஓத வேண்டிய இடத்தில் ஓதி விட்டார்.
வார்டு பெயரை சொல்லி “சார், இங்க கட்சி ஆளுங்க எலெக்சன்ல டபுள் கேம் ஆடுறாங்கன்னு லோக்கல் சோர்ஸ் டிப் குடுத்திருக்காங்க சார். எக்ஸ் எம்எல்ஏ அண்ட் அஸோஸியேட் இன்வால்வ்ட் சார். ஒடனே நீங்க அவங்க ஏரியா ஸ்டேஷனை அலெர்ட் பண்ணீங்கன்னா கையும் களவுமா பிடிக்கலாம் சார்” என சொல்லி முடித்தார்.
“ரொம்ப டயர்டா இருக்க. போய் கொஞ்ச நேரம் தூங்கு” என்றார் நேசப்பா.
“இன்னும் கொஞ்சம் வேல பாக்கி இருக்கு. இது பத்தாது” என்றார் சங்கு புஷ்பம்.
“அவர் தான் போய்ட்டாரே” என்றார் நேசப்பா.
“நேசமணி பைல் தானே முடிஞ்சிருக்கு. இன்னும் நம்ம புஷ்பா பைலை ஓப்பனே பண்ணலையே. நீங்க போய் படுங்க. நா கொஞ்சம் நிதானமா யோசிக்கிறேன்.” என்றபடி சிரித்தார் சங்கு புஷ்பம்.
தலைமை வரை விஷயம் இன்று இரவுக்குள் போய்விடும் என கல்பனா தகவல் சொன்னார்.
கல்பனா வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு சங்கு புஷ்பத்தை சந்திப்பதாக சொன்னார்.
லக்ஷ்மி அனுப்பிய புஷ்பா பெயர்கள் கொண்ட லிஸ்டை எடுத்துக் பார்த்தார்.
வாக்காளர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், முகவரி மற்றும் பாலினம் இருந்தது. சங்கு புஷ்பத்திற்கு இது போதாது என்று தோன்றியது. ஆனால் இன்னும் என்ன தேவை என தெரியவில்லை.
சற்று யோசனைக்கு பிறகு இவர்களின் போன் நம்பர் கிடைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என நினைத்தார். அதை எப்படி சேகரிப்பது என யோசித்தார்.
அவர் சிஸ்டம் டேபிள் மீது இருந்த பஞ்சாமிர்த பாட்டில் அவர் கேள்விக்கான விடையை தந்தது.
வள்ளியப்பனுக்கு போன் போட்டார் சங்கு புஷ்பம்.
“சார் ஒரு ஹெல்ப் வேணும்” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.
“சொல்லுங்க மேடம்” என்றார் அவர்.
வள்ளியப்பனின் மகன் இவர்கள் ஏரியாவில் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். அவரிடம் சந்தாதாரர் முகரியும், போன் நம்பரும் இருக்கும். காலையில் நடந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லி முடித்தார் சங்கு புஷ்பம்.
வாயடைத்துப் போனார் வள்ளியப்பன். “நீங்க கவலைப்படாதீங்க மேடம். அரை மணி நேரத்தில் அவன் உங்களுக்கு அனுப்பிடுவான். ஆள், படை பலம் எல்லாம் அவங்களுக்கு மட்டும் தான் இருக்குமா என்ன? நம்மள மாதிரி சாதாரண ஜனங்களும் லேசு பட்டவங்க இல்லன்னு அவங்களுக்கு புரியணும்” என பொரிந்து தள்ளினார் வள்ளியப்பன்.
சற்று நேரத்தில் வள்ளியப்பன் மகன் தணிகையிடம் இருந்து எல்லா போன் நம்பர்களும் கிடைத்தது.
இப்போது சங்கு புஷ்பத்துக்கு ஐடியா வந்தது. அந்த லிஸ்ட்டை லக்ஷ்மிக்கு அனுப்பி விட்டு போன் போட்டார்.
“லக்ஷ்மி, லிஸ்ட்ல ஒவ்வொருத்தருக்கும் ஒரு தொகை போடு. புரியுதா? என்றார் சங்கு புஷ்பம்.
“பக்காவா போட்டு தரேன்” என்றார் லக்ஷ்மி.
புஷ்பா பெயர் காம்பினேஷனில் பதினெட்டு பேர் இருந்தார்கள் லிஸ்டில்.
முதலில் ரேண்டமாக ஆறு பேருக்கு விருப்பமில்லை என தொகையின் கீழே போட்டார்.
லிஸ்டில் இருந்து சங்கு புஷ்பத்தையும் கனக புஷ்பத்தையும் நீக்கி விட்டார்.
மீதி இருந்த பத்து பேருக்கு குறைந்தது ஒரு எல்லில் இருந்து நான்கு எல் வரை பதிவிட்டார்.
மொத்தம் கூட்டினால் இருபத்து மூன்று எல் வந்தது. நல்ல தொகையாக இருந்தது.
ஆனால் பத்து பேர் என்பது கொஞ்சம் அதிகமாகப்பட்டது.
அதிகபட்சம் ஐந்து பேர் வரை போன தேர்தலில் டம்மி வேட்பாளராக இருந்தார்கள்.
அதனால் ஐந்து பேர் வரை இருக்கட்டும் என முடிவுக்கு வந்தார்.
கடைசியாக அண்ணி புஷ்பாவைத் தவிர்த்து ஐந்து பெண் புஷ்பங்களுக்கு நல்ல தொகையைப் போட்டு முடித்தார். மொத்தம் பதினைந்து எல். பாரபட்சமின்றி
தலைக்கு மூணு எல். என்ஜாய் பண்ணுங்க என நினைத்துக் கொண்டு அம்மாவுக்கு அனுப்பினார்.
சங்கு புஷ்பத்திற்கு அந்த லிஸ்ட் திருப்தியாக இருந்தது.
போன் அடித்தது. குமரஜோதி. “மேடம் அந்த கவர்ல அவ்ளோ பணம் இருக்கு மேடம்” என்றார்.
“எல்லாம் உங்களுக்கு தான். சாயந்திரம் நானும் அவரும் வந்து உங்களை பாத்து நேர்ல பேசுறோம். நீங்க ரத்தினத்தோட கட்சி அட்டையை எனக்கு அனுப்புங்க” என்றார் சங்கு புஷ்பம்.
லக்ஷ்மி அனுப்பிய லிஸ்டையும் ரத்தினத்தின் கட்சி அட்டையையும் பிரிண்ட் எடுத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.
தலை வலி ஆரம்பமானது சங்கு புஷ்பத்திற்கு. ஆனால் செய்ய வேண்டிய வேலை நிறைய இருந்தது.
கிச்சனுக்கு போய் காபி போட்டு கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தார். ரத்தினத்திடம் இருந்து வாங்கிய கன்சல்டேஷன் பணம் வேறு இருக்கிறது. அந்த பணத்தை சொந்த செலவுக்கு தொடக்கூடாது என தோன்றியது.
காபி போட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி குடித்தார். பக்கத்தில் அபார்ட்மெண்ட் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. வேலை முடித்து எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தார்கள். அப்போது பைக்கில் வந்த ஒருவர் அவர்களுக்கு பணம் கொடுப்பதை பார்த்தார். அந்த நாளின் சம்பளமாய் இருக்கும் என நினைத்தார். கூட்டமாக இருந்தவர்களுக்கு அவர் பணம் விநியோகம் செய்தது சங்கு புஷ்பத்திற்கு ஒரு அட்டகாசமான ஐடியாவை கொடுத்தது.
அவரின் தலைவலி பறந்து ரத்தினம் வீட்டு பக்கம் போனது.
வள்ளியப்பனுக்கு திரும்ப போன் போட்டார் சங்கு புஷ்பம்.
“நக்கலா. காலைல நாக்கு வெளில தள்ளி போற மாதிரி இருந்தீங்க” என அவர் பங்குக்கு வாரினார் சங்கு புஷ்பம்.
பஞ்சாமிர்த பாட்டிலில் இருந்து கொஞ்சம் எடுத்து கல்பனாவுக்காக ஒரு டப்பாவில் எடுத்து வைத்தார்.
கரன்சி கவரை ஆளுக்கு பாதியாய் பிரித்துக் கொண்டார்கள். மிச்சமிருந்த பஞ்சாமிர்த பாட்டிலையும் கவர்களையும் இரண்டு துணிப் பைகளில் போட்டு வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.
நேராக வள்ளியப்பனின் கடைக்கு போய் தணிகையிடம் பேப்பர்களை கொடுத்து என்ன செய்ய வேண்டும் என சொன்னார்கள்.
இரவு ஏழு மணி. கட்சி கூட்டம் ஆரம்பமாக இன்னும் நேரம் இருந்தது. ஆண்கள் பக்கம் நேசப்பாவும், பெண்கள் பக்கம் சங்கு புஷ்பமும் கூட்டத்தில் கலந்தார்கள்.
சற்று நேரம் கழித்து அண்ணனும், அண்ணியும், ரத்தினமும் மேடையில் ஏறினார்கள். மூவரும் உற்சாகமாக இருந்தார்கள். நேசப்பா தணிக்கைக்கு மெசேஜ் செய்தார். “மணி கூண்டு பக்கத்தில் இருக்கிறேன் என்று”.
கடைசி லைனில் உட்கார்ந்திருந்தார். தணிகை கொஞ்ச நேரத்தில் வந்து நேசப்பா அருகில் நின்றார்.
பிறகு மேடையை சற்று நேரம் பார்த்து விட்டு பக்கத்தில் இருந்த கட்சிக்காரரிடம் பேப்பரை கொடுத்தார்.
“அண்ணே, அதோ மேடைல அண்ணன் பக்கத்துல ஒருத்தர் இருக்காருல்ல. அவர் இந்த பேப்பரை எங்க கடைல ஜெராக்ஸ் எடுத்தாரு. காச குடுத்துட்டு இதை விட்டுட்டு வந்துட்டாரு. அவர்கிட்ட குடுத்துடுங்கண்ணா. கடைல ஆள் இல்ல நா போறேன்” என பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி போனார்.
அவர் அந்த பேப்பரை படித்துப் பார்த்தார். பதினைந்து எல் ஐந்து புஷ்பங்களுக்கு இருந்தது. இன்னொரு பேப்பரில் ரத்தினத்தின் அடையாள அட்டை இருந்தது.
அவர் ஏதோ யோசித்தவராக நிற்க நேசப்பா அவரிடம் இருந்து அந்த பேப்பரை வாங்கி சற்று சத்தமாக படித்தார்.
“நம்ம ரத்தினம் தம்பி தான் அண்ணிக்கு எதிரா அஞ்சு புஸ்பாவை நிறுத்துது போல” என கொளுத்திப் போட்டார். முகம் சுண்டிப் போனார் கட்சிக்காரர்.
“மொத்தம் பதினைந்து எல். ஒவ்வொரு புஸ்பாக்கும் பத்தாயிரம் குடுத்துட்டு மிச்சத்தை இவரு எடுத்துக்குவாரு” என விளக்க உரையை கொடுத்தார்.
“அடப்பாவி, சொந்த கட்சிக்கே துரோகம் பண்ணுறானே” என கோபமானார் அவர்.
பிறகு “அவருக்கு ஏது அவ்வளவு பணம்?” என சந்தேகமாய் கேட்டார்.
அவர் காதருகே போய் “இவரு சித்தா டாக்டரு ஆளு. அவரு தான் இவருக்கு பேங்கர். அண்ணன் கூடவே இருந்து கழுத்தறுக்குறான்” என டீடைலை சொன்னார்.
பேயறைந்தார் போல ஆனார் அவர். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆண்கள் பகுதியில் பெரும்பாலும் எல்லாருக்கும் அரசால் புரசலாக போய் சேர்ந்தது.
இந்த பக்கம் சங்கு புஷ்பம் உற்சாகமாக சக பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
நேசப்பா அந்த பக்கம் போய் போனில் இந்த கதையை யாரிடமோ விளக்கினார்.
அதை கேட்ட இரு பெண்கள் பேச சங்கு புஷ்பம் கூட சேர்ந்து கொண்டார்.
“ஆமா, ரத்தினம் டாக்டரோட ஸ்லீப்பர் செல்னு மகளிர் அணி தலைவி பேசிக்கிறாங்க. டாக்டரு சம்சாரமும் தலைவியும் ஒரே ஜிம்முக்கு தான் போறாங்க. அப்போ அந்த அம்மாகிட்ட இவரு போய் பேசிட்டு வந்திருக்காரு. புஷ்பா அண்ணிக்கு எதிரா அஞ்சு பேர ரெடி பண்றாரு. ஆனா இங்க நல்லவரு மாதிரி அவங்க கூட மேடைல உக்காந்திருக்காரு” என டிவி சேனல் டிபேட் போல பேசி முடித்தார்.
சொல்லவே வேண்டாம். பெண்கள் பக்கம் அதி விரைவாக அந்த செய்தி பரவியது.
நேசப்பா அவர் துணி பையை வைத்து விட்டு கிளம்பினார்.
கேட்பாரற்று கிடந்த பையை எடுத்த ஒருவர் அதிலிருந்த கவர்களை பார்த்து யோசித்தார்.
கவரை வாங்கிய சங்கு புஷ்பம், “ரத்தினம் தம்பி தான் எல்லாருக்கும் நூறு ரூபா ஓட்டுக்கு இப்பயே காசு குடுக்குது” என சொன்னார்.
பஞ்சாமிர்த டப்பாவையும் ஸ்பூன்களையும் பக்கத்தில் இருந்த பெண்கள் டீமிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார்.
இரண்டே நிமிடத்தில் விநியோகம் முடிய தூரத்தில் இருந்து வீடியோ எடுத்தார் லோக்கல் பேப்பர் நிருபர்.
இதே போன்று சற்று தள்ளி சங்கு புஷ்பம் பையை வைத்து விட்டு நகர கூட்டம் பரபரப்பாக இருந்தது.
வந்ததிலிருந்து அவர் தலை எத்தனை முறை சுற்றியது என்று அவருக்கே தெரியாது.
“சார், நேசமணி இருபாலர் பெயர்” என விளக்கினார் நேசப்பா.
எல்லா வில்லங்கமும் ஒரே சுருதியில் பாட்டு பாடியது.
லேடி கேண்டிடேட்டு எப்படி சரிப்படும் டாக்டருக்கு எதிராக என யோசித்தார் ரத்தினம்.
“எல்லாருக்கும் இது தெரியாது சார். எத்தன பேரு கேண்டிடேட்ட நேர்ல பாக்க போறாங்க. போஸ்டரில் வெறும் நேசமணின்னு தான இருக்கும்.” என ரத்தினத்தின் சந்தேகத்தில் சிமெண்டு பூசினார் சங்கு புஷ்பம்.
சங்கு புஷ்பம் ஒரு துண்டு சீட்டை குமரஜோதியிடம் கொடுத்தார்.
“சார் இவரு அந்த அம்மா டாக்குமெண்ட என் போனுக்கு அனுப்புவார். நீங்க அத ப்ரூப்பா வச்சிக்கலாம்” என ரத்தினத்திடம் சொன்னார் சங்கு புஷ்பம்.
குமரஜோதி டாக்குமெண்டை அனுப்பினார். சங்கு புஷ்பம் அந்த அடையாள அட்டையை பிரிண்ட் எடுத்து ரத்தினத்திடம் காண்பித்தார். ரத்தினம் சரி பார்த்த பிறகு “சார் இதை நா பைல் பண்ணி வெக்குறேன்” என திரும்ப பெற்றுக் கொண்டார்.
குமரஜோதி சங்கு புஷ்பம் கொடுத்த செய்தியை ரத்தினத்திற்கு அனுப்பினார்.
“என் மனைவிக்கு மகளிர் திட்டத்தில் நலத்தொகை பெற்றுக் கொடுத்திட தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் குமரஜோதி”.
“இவரு என்னங்க நல திட்டம்னு போட்டிருக்காரு” என்றார் ரத்தினம்.
“சார், அது கோட் வேர்ட். என் மனைவியை டம்மி வேட்பாளராக களம் காண ஒத்துக்கொள்கிறேன். அப்படின்னா அனுப்ப முடியும்?” என உரைத்தார் சங்கு புஷ்பம்.
“அவருக்கு ஒரு பதில் அனுப்பிடுங்க” என அடுத்த கட்டளையை போட்டார்.
நமக்கு இது தொழில்னா, இவங்களுக்கு இது மூச்சு காத்தா இருக்கே. இந்த அம்மா எல்லா வேலையையும் சிஸ்டமேட்டிக்கா செய்யுது என வியந்தார் ரத்தினம்.
ஆட்டோபைலட் மோடுக்கு போன ரத்தினம் குமரஜோதிக்கு சரி என பதில் போட்டார்.
நேசப்பாவும் சங்கு புஷ்பமும் ரத்தினம் என்ன மோடில் இருக்கிறார் என அறிந்து கொண்டார்கள்.
அப்புறம் உங்க டாக்குமெண்ட் ஒண்ணு அவருக்கு ப்ரூப்பா தரணும்.” என அவரை வழி நடத்தினார் சங்கு புஷ்பம்.
“நா அடையாள அட்டை எதுவும் எடுத்திட்டு வரலீங்க” என்றார் ரத்தினம்.
“கட்சி உறுப்பினர் அட்டை எப்பவும் வெச்சு இருப்பீங்கள்ல. அது கூட போதும்” என்றார் நேசப்பா.
அவர் சொன்ன வழியில் அப்படியே நடந்தார் ரத்தினம். ரத்தினம் உறுப்பினர் அட்டையை காட்ட குமரஜோதி அதை போட்டோ எடுத்துக் கொண்டார். கவர் கை மாறியது. காரிடாரில் அல்ல, சிசிடிவி இல்லாத நடு ஹாலில்!
“தேங்க்ஸ் சார்” என வாங்கிக்கொண்டார் குமரஜோதி. “நெக்ஸ்ட் என்ன பண்ணனும்னு மேடம் கிட்ட சொல்லிடுங்க” என குஷியாக கிளம்பினார்.
குமரஜோதியை பார்சல் செய்த கையோடு திரும்ப ரத்தினத்திற்கு அடுத்த ரவுண்டை ஆரம்பித்தார்கள்.
நேசப்பா அஞ்சாயிரம் ருபாய் கோப்பையை இன்னும் கொஞ்சம் நிரப்பினார்.
“சார், எங்களுக்கு லஞ்ச் டைம். சீக்கிரம் முடிக்கலாம்” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.
ஒரு பார்ட்டி பிக்ஸ் ஆன மிதப்பில் இருந்தவருக்கு சரக்கும் கொஞ்சம் மிதப்பை ஏற்றியது. சங்கு புஷ்பம் சரியானபடி ஒரு டீலிங்கை நிறைவேற்றிக் காட்டியதால் அவர் சொல் பேச்சை மறு பேச்சின்றி கேட்டார் ரத்தினம்.
சங்கு புஷ்பத்திற்கு இப்போது தான் மிக முக்கியமான கட்டம். போனை எடுத்து பார்த்தார்.
பிறகு ஒரு துண்டு சீட்டில் தகவல்களை எழுதி ரத்தினத்திடம் கொடுத்தார்.
“சார், இது இவரோட நம்பர். உங்க அண்ணன் கிட்ட சொல்லி இவரை ஆசீர்வாதம் பண்ணி ஒரு மெசேஜ் அனுப்ப சொல்லுங்க. அத நாங்க அவரோட கன்பர்மேஷன் மெசேஜா எடுத்துக்குறோம் என்றார்” சங்கு புஷ்பம்.
“என்ன மேடம், சார் தோக்க போறார். அவருக்கு எதுக்கு வாழ்த்து சொல்லணும்” என மூளையை கசக்கி பிழிந்து ஒரு உருப்படியான கேள்வியை கேட்டார் ரத்தினம்.
“கரெக்ட் சார். நீங்க ஒடம்பு முடியாதவங்க யாரையாவது போய் ஆஸ்பத்திரில பாத்தா என்ன சொல்லுவீங்க? சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வந்து உங்க பேரன் பேத்தி கல்யாணத்த பார்ப்பீங்கனு சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுவீங்களா, இல்ல நாளைக்கே போய் சேந்துடுவீங்க. இன்னைக்குள்ள இந்த ஆப்பிளை சாப்ட்ருங்கன்னு சொல்லுவீங்களா? என நறுக்கென்று கேட்டார் சங்கு புஷ்பம்.
“அண்ணே, ஒரு பார்ட்டி பிக்ஸ் ஆகிட்டு. அட்வான்ஸ் வாங்கிட்டு டாக்குமெண்ட் காபி கொடுத்துட்டாங்க.
இன்னொரு பார்ட்டியும் ஓகே சொல்றாங்க. நீங்க ஆசீர்வாதம் பண்ணி ஒரு மெசேஜ் அனுப்பிட்டேங்கன்னா டீல் முடிஞ்சுடும்ணே” என உற்சாகமாய் சொன்னார் ரத்தினம்.
“நல்லது ரத்தினம். போன அவங்ககிட்ட குடு. பேசிடறேன்” என்றார் அண்ணன்.
“இல்லண்ணே, அவங்க மெசேஜா அனுப்ப சொல்றாங்க. சும்மா உங்க சைட்லேர்ந்து ஒரு கன்பர்மேஷன்க்கு. மத்தபடி தங்கமான பார்ட்டின்னே” என அவரை சரி காட்டினார் ரத்தினம்.
சங்கு புஷ்பம் அவர் போனையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அண்ணனுக்கு ஒரு சிக்கல். போன் அவ்வளவாய் உபயோகிப்பதில்லை எழுத. பேசுவதோடு சரி. அதை பெரிதாய் நோண்டுவதில் ஆர்வம் இல்லாதவர். இவன் வேற மெசேஜ் அனுப்ப சொல்றான் என்ன பண்றது என யோசித்தார்.
வெளியே காத்திருந்த ஆட்களை எட்டிப் பார்த்தார். ஐடி விங்கை சேர்ந்த ஒருவர் இருந்தார்.
“தம்பி இங்க வாப்பா” என கூப்பிட்டு “இவரு போன்ல ஏதோ வாழ்த்து அனுப்ப சொல்றாரு. என்னனு கேட்டு அனுப்பிடு” என்றார்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் துண்டு சீட்டில் எழுதியிருந்த வாழ்த்து அட்சர சுத்தம் பிசகாமல் அண்ணண் போனிலிருந்து போய் சேர்ந்தது சித்தா டாக்டர் நேசமணிக்கு.
“அருமை நண்பர் நேசமணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் இந்த தேர்தலில் அமோக வெற்றியடைய என்னுடைய ஆசீர்வாதங்கள். என் அன்புத் தம்பி இரத்தினமுத்து சேகர் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வார். என்றும் மாறா நட்புடன் உங்கள் அண்ணண்”.
சங்கு புஷ்பத்திற்கும் நேசப்பாவிற்கும் மூச்சு நிற்பது போல இருந்தது.
“அனுப்பிட்டாருங்க. இப்ப உங்களுக்கு ஓகே வா” என சிரித்தார் ரத்தினம்.
“சார் இன்னொரு லாஸ்ட் ஸ்டெப் பண்ணிடுங்க” என சொன்னார் சங்கு புஷ்பம்.
நேசப்பா ரத்தினம் முன் இருந்த கோப்பையை நிரப்ப ஆரம்பித்தார். ரத்தினம் அதை காதலாய் பார்க்கும் பொது இன்னொரு துண்டு சீட்டை கொடுத்தார் சங்கு புஷ்பம்.
“இவரு எங்க லாயர். எங்க எல்லா டீலிங்க்லயும் அவரு இருப்பாரு. இப்போ அண்ணன் சார்பா நீங்க டீல் பண்றீங்க. அதனால இவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பிடுங்க” என்றார் சங்கு புஷ்பம்.
அவரின் ஒரு கையில் அப்போது கோப்பை இருந்தது. லாஸ்ட் ஓவர் வேறு. ஆல்ரெடி மேட்ச ஜெயிச்சாச்சு. இன்னும் ஏன் கவலைப்படணும் என்று நினைத்தார் ரத்தினம்.
“இந்தாங்க மேடம். நீங்களே அனுப்பிடுங்க” என அவர் போனை கொடுத்தார் ரத்தினம்.
நேசப்பா கோபால் சாருக்கு மனதார நன்றி சொன்னார். சங்கு புஷ்பம் சுறுசுறுப்பாக எழுத ஆரம்பித்தார்.
“அன்பு அண்ணன் சார்பாக உங்கள் கட்சிக்காக நங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். சகோதரர் நேசமணியின் வார்டு கவுன்சிலர் தேர்தல் வெற்றிக்காக நான் மற்றும் அண்ணண் எல்லா உதவிகளையும் செய்து தருவோம் என மனதார உறுதி மொழிகிறேன். எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதங்கள் அவருக்கு கிடைக்க மனதார பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு ரத்தினமுத்து சேகர்.
அடுத்த நொடி அது சித்தா டாக்டர் நேசமணியின் இரண்டாவது போனுக்கு போய் சேர்ந்தது. ஆனால் ஒரு டிக்கிலேயே இருந்தது.
அப்பாடா என்றிருந்தது சங்கு புஷ்பத்திற்க்கு.
“இந்தாங்க சார். லாயருக்கு அனுப்பிட்டேன்” என போனை திரும்ப கொடுத்தார் சங்கு புஷ்பம்.
“மேடம் ரொம்ப பாஸ்ட்டா வேல பாக்குறாங்க சார்” என மனம் விட்டு பாராட்டினார் ரத்தினம்.
இதற்கு மேல் இவர் இங்கே தேவையில்லை என நினைத்தார் சங்கு புஷ்பம்.
“சரிங்க சார். நீங்க நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க” என சொல்லி ரத்தினத்தை வழியனுப்பி வைத்தனர் இருவரும்.