சிறுகதை – செங்காட்டு மண்ணும், நம் வீட்டுப் பொண்ணும்

A middle aged woman reflecting her life

“நான் வெயிட் பண்றேன், சாப்பிட்டு முடிச்சிட்டு இன்னொரு தோசை வேணும்னா சொல்லுங்க” என அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு உள்ளேயிருந்து சொன்னாள் அக்க்ஷயா.

“ஆமா, இன்னொன்னு போடு, அதான் லாஸ்ட்” என்றார் பாஸ்கர்.

அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் கடைசியாக ஒரு தடவை கிச்சனை சுத்தம் செய்து விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.

பாஸ்கர் கையை கழுவிக் கொண்டு வர “நம்ம இனியா ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பெரிய பொண்ணாயிடிச்சாம். கஜா அண்ணன் இன்னிக்கு போன் பண்ணி சொன்னாரு” என துக்கம் தொடையை அடைக்க சொன்னாள்.

கஜபதி அக்க்ஷயாவின் பெரியப்பா மகன். சேலத்துக்கு பக்கத்தில் சொந்த ஊரில் பார்மசி நடத்தி வருகிறார்.

“ஹ்ம்ம்…எனக்கும் லன்ச் டைம்ல கால் பண்ணி சொன்னாரு. வீட்ல கொஞ்சம் நிலவரம் சரியில்ல, அதனால வீட்டோட பங்க்ஷன் வச்சிட்டோம் அப்படிடீன்னார். நானும் அதுக்கென்ன பரவாயில்லை, நாங்க அரையாண்டு லீவுக்கு ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வரோம்னு சொன்னேன். நவம்பர்ல தான் இனியாக்கு போட்ட நகை சீட்டு முடியுது. சீட்டு அமௌண்டுல அரை பவுனுக்கு கொஞ்சம் குறைவாதான் வரும். போஸ்ட் ஆபீஸ்ல ஏதாவது வச்சிருக்கியா?” என கேட்டார் பாஸ்கர்.

அவளுக்கு காண்டு தலைக்கு ஏறியது. அவர் வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரமாகிறது. இதை பற்றி வாயையே திறக்கவில்லை. எவ்வளவு முக்கியமான நிகழ்வு. தானும் போயிருக்க வேண்டியது. இவர் என்னடாவென்றால் இவ்வளவு ஈசியாக கடந்து போகிறார் என முறைத்தாள்.

“என்ன பெரிய நிலவரம்? நாம என்ன ஏன் பங்க்ஷன மண்டபத்துல வெச்சி பண்ணலேன்னு கேக்க போறாமா? இல்ல நமக்கு தான் நடந்த விவகாரமெல்லாம் தெரியாதா? என அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டாள்.

பாஸ்கரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

“கஜாண்ணன் தான் என்னை வீட்டுக்கு கூப்பிட்டுக்கும் போது போட்டோ எடுத்திச்சி. எங்கம்மா ரெண்டு ரோலுக்கு தான் காசு குடுத்தாங்க. அதோட கைக்காசு கொஞ்சம், அப்புறம் எங்க அக்காங்க கிட்ட கொஞ்சம் சில்லறைன்னு தேத்தி, மொத்தம் நாலு ரோலு வாங்கி வந்த மொத்த ஜனத்தையும் ஒருத்தர் விடாம படம் எடுத்திடிச்சு. ஒரு வாரம் கழிச்சி ஆல்பத்தோட வந்து நாலு ரோலுக்கு பிரிண்டிங் காசு கேட்டுது. எங்க அம்மா செம திட்டு திட்டுனாங்க. அதுக்கு அண்ணன் என்ன சொல்லுச்சு தெரியுமாங்க? சித்தி, வந்தவங்கள்ல இருக்குற ஒருத்தர் விடாம அட்டகாசமா எடுத்திருக்கேன். நாளைக்கே ஏதாவது கிழ கட்டைங்க பொட்டுன்னு போயிடுச்சின்னா, நம்ம வீட்டு கதவைதான் வந்து போட்டோவுக்காக தட்டுவாங்கன்னுச்சி. எங்கம்மாக்கு பகீர்னு ஆயிடுச்சி. நல்ல விஷயம் நடந்த வீட்டுல, இந்த நாய் கண்ட பேச்சு பேசுதேன்னு மொறத்தாலேயே வெச்சி வெளுத்துட்டாங்க” என சொல்லி தலையை கவிழ்ந்து கொண்டாள்.

“ம்ம்..” என மெலிதாய் பதில் வந்தது பாஸ்கரிடம் இருந்து.

பத்து நிமிடம் ஆனது அவள் தேறி வர. அப்போது தான் அவர் இது வரை தனக்கு ஆறுதல் சொல்லாதது அவளுக்கு உறுத்தியது. நான் இன்னும் இன்றைய நாளையே process செய்து கொண்டு இருக்கிறேன். இவர் இன்னும் நாலு மாதம் கழித்து முடிய போகும் நகை சீட்டை பற்றி யோசிக்கிறார். தன்னுடைய ஆற்றாமையை கொஞ்சம் கூட உள் வாங்கவில்லை என்ற ஆதங்கம் அவளை சுழற்றியடித்தது.

“என்ன ம்ம்..ன்னு சிம்பிளா முடிச்சிட்டீங்க? நான் ஒருத்தி நொந்து போய் உக்காந்திருக்கேன்? எங்க அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் உள்ளூர்லயே இருந்ததால போய் பங்க்ஷன் அட்டென்ட் பண்ணி இருக்காங்க. எங்கிட்டா சொன்னா, அண்ணன் கூப்பிடலேன்னு நான் வருத்தப்படுவேன்னு அமுக்காளிங்க வேல பாத்திருக்காங்க. மார்க்கெட்ல ஒரு கடை விடாம ஏறி இறங்கி சீர் வாங்கி இருப்பாங்க போன வாரம். என்கிட்டே சொல்லி இருந்தா நான் போகலேன்னாலும் என் பங்கு காசாவது குடுத்திருப்பேன்ல?” என சீறினாள்.

பாஸ்கருக்கு கொட்டாவி வந்தது. “வாஸ்தவம் தான். அவங்க நெலமைல இருந்து பாரு அக்க்ஷூ. அவங்க எப்படி சொல்லுவாங்க? எனக்கு ரொம்ப பேக் பெயினா இருக்கு. படுத்தா ஒடனே தூக்கம் வராது. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன். மூவ் போட்டுட்டேன்னா கொஞ்ச நேரத்துல அப்படியே தூங்கிடுவேன்” என சொல்லி விட்டு பாஸ்கர் எழுந்து உள்ளே போக, அவள் அப்படியே பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனாள்.

செங்காட்டு மண்ணும்,
நம் வீட்டுப் பொண்ணும்,
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே!

தங்கச்சி கண்ணில்
கண்ணீரை கண்டா,
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே!

பந்தத்த மீறிப் போக சக்தி இல்லையே,
பாசத்த பங்கு போடப் பட்டா இல்லையே,
வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே!

தென்கிழக்கு சீமையில,
செங்காத்து பூமியில,
ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு!

காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா,
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு!

இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்,
ஈசானி மூலையில மேகம் இருக்கு!

என பாடல் அவளுக்குள் ஒலிக்க, அப்படியே கரைந்து போய் உட்கார்ந்திருந்தாள்.

அண்ணனுக்கு கொஞ்சம் பண நெருக்கடி, தொழிலும் நட்டத்தில் போகிறது. போதாததுக்கு பெரியவன் வேறு டிரேடிங்கில் பணத்தை விட்டு விட்டு நிலைமையை சிக்கலாகி விட்டான். ஆனால் காரணம் எதுவாயிருந்தாலும் இனியாக்குட்டி கூட தான் இல்லாததை அவளால் தாங்க இயலவில்லை. இவ்வளவு நடந்தும் அம்மாவும் அக்காவும் மூச்சு கூட விடாதது, அவர்கள் தன்னை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை அவளுக்கு உணர்த்துவதாக பட்டது.

இவருக்காக ஊரை விட்டு, சொந்த பந்தத்தை விட்டு, நல்லது கெட்டதில் கலந்து கொள்ளாமல் இங்கே இருந்தால், இந்த மனுஷன் ஆறுதலாய் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டேத்தியாய் இருப்பது அவளுக்கு வலியை கூட்டியது.

“அண்ணன் நீ இல்லாம பங்க்ஷன் செய்றதுல ரொம்ப வருத்தபட்டிருப்பார்டி”

“அவரு அன்னிக்கு முழுக்க உன்ன மிஸ் பண்ணி இருப்பார் தானே?”

“உனக்கே இப்படி இருக்குன்னா, அவரு எவ்ளோ பீல் பண்ணி இருப்பார் அக்க்ஷூ?” என ஏதாவது சொல்லி தன்னை தேற்றி இருக்கலாம்.

என்ன கவலையாக பொண்டாட்டி இருந்தாலும் சரி, துளி கூட சட்டை பண்ணாமல், தூங்கும் போது தன்னுடைய முதுகு வலிக்கு அவள் கால்களை தூக்கி போட்டுக் கொள்ள மட்டும் ஹிண்ட் கொடுக்க தெரிகிறது.

அக்க்ஷயாவுக்கு என்ன வாழ்க்கை இது என தோன்றியது. பெற்றதுதான் விட்டுக் கொடுத்தது என்றால், இங்கே கட்டியதும் அதே போல தான் இருக்கிறது.

“அக்க்ஷூ..வாயேன்..லேட்டாகுது” என பாஸ்கரின் அழைப்பு வந்தது.

“நாம என்ன மெஷினா? நாலு பேச்சு பேசிட்டு, டமால்னு படுத்து தூங்க? கொஞ்ச நேரம் ஹால்ல உக்காந்து இருக்குறதுல இவருக்கு என்ன பிரச்சினை? அவரு பேசினா நாமும் பேசி, அவரு சிரிச்சா நாமும் சிரிச்சி, அவரு தூங்கினா நாமும் தூங்கிடணும்! என்ன வாழ்க்கைடா இது” என வெறுத்துப் போனாள்.

அடுத்த நாள் காலை. “இன்னைக்கு லாஸ்ட் பீரியட் உனக்கு லைப்ரரி தானே? லாஸ்ட் வீக் நீ கொண்டாந்த புக்க வர்ஷா படிச்சி முடிச்சிடுச்சி. உன் பேக் உள்ள வெச்சிருக்கேன். ஞாபகமா ரிட்டர்ன் பண்ணிடு” என சொல்லி விட்டு கிளம்பினார் பாஸ்கர்.

“பெரிய பிளானிங் குமாருன்னு நினைப்பு” என திட்டிக் கொண்டே அவளும் பள்ளிக்கு கிளம்பினாள்.

அன்றைய நாள் எப்போதும் போல் இருக்கவில்லை. யாரை பார்த்தாலும் எரிச்சலாக இருந்தது. வீட்டிலிருந்த வந்த போன் எதையும் எடுத்து பேசும் மனநிலையில் அவள் இல்லை. பாடம் நடத்தும் மூடும் இல்லை. லஞ்சுக்கு பிறகு ரெண்டு பீரியடையும் P.E.T சாருக்கு கொடுத்தது விட்டு ஸ்டாப் ரூமில் உட்கார்ந்து பேப்பர் திருத்தினாள்.

மீண்டும் மீண்டும் பழைய நினைவுகள் வர, சில பேப்பர்களும் கொஞ்சம் ஈரத்தை வாங்கி கொண்டன.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு “மிஸ்” என மூன்றாம் வகுப்பு கிளாஸ் லீடர் வந்து நின்றான்.

“என்னடா?” என்றாள்.

“லைப்ரரி பீரியட் மிஸ். நன்முல்லை மிஸ் உங்களையும் கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றான்.

“போ, வரேன்” என சொல்லிவிட்டு பேப்பர் கட்டை பையில் வைத்து விட்டு, ரிட்டர்ன் செய்ய வேண்டிய புக்கை எடுத்துக் கொண்டாள்.

பாஸ்கரின் மெசேஜ் டங்கென்று வந்தது. துளி கூட empathy இல்லாத வாழ்க்கையில் telepathy மட்டும் நன்றாக வேலை செய்கிறது என நினைத்துக் கொண்டாள்!

அவள் லைப்ரரி போய் சேரும்போது பிள்ளைகள் அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்தார்கள்.

“வாங்க மிஸ், இன்னைக்கு ஒரு activity பிளான் பண்ணி இருக்கேன். அது முடிஞ்சப்புறம் book issue பண்ணிடலாம்” என சொன்னார் நன்முல்லை.

ஒரு அட்டை பெட்டியில் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் படம் ஒட்டிய மாஸ்க்குகள் இருந்தது. பிள்ளைகள் அவர்களுக்கு பிடித்த விலங்கின் மாஸ்க்கை மாட்டிக் கொண்டு, அது ஏன் அவர்களுக்கு பிடிக்கும்? ஒரு நாள் அவர்கள் அந்த விலங்காக வாழ்ந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என சொல்ல வேண்டும்.

ஒவ்வொருவராக வந்து பெட்டியை துழாவி, அவர்களுக்கு பிடித்த மாஸ்க்கை அணிந்து கொண்டு போய் உட்கார்ந்தார்கள்.

முதலில் மீன் உட்கார்ந்திருந்தது. என்ன காரணம் என கேட்டால் “தண்ணில ஆட்டம் போட்டால் செமயா இருக்கும் மிஸ்” என்றது.

“நான் தான் அந்த காட்டுலயே செம ஸ்மார்ட், க்ளெவரான அனிமல்” என நரி சொன்னது.

“நான் மரத்துலேர்ந்து bungee jumping பண்ணுவேன்” என ஊசலாடியபடியே சொன்னது குரங்கு.

“என் பேச்ச தான் எல்லாரும் கேக்கணும்..நான் தான் காட்டுக்கே ராஜா” என கெத்தாக சொன்னது சிங்கம்.

குதிரை, மான், புலி, முயல் என அடுத்தடுத்து ஆளுக்கொரு காரணம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அக்க்ஷயாவும் குறுக்கே குறுக்கே கேள்வி கேட்டு அவர்கள் உற்சாகத்தை கூட்டினாள். எல்லோரும் சொல்லி முடிக்க, நிகழ்ச்சி முடியும் தருவாயில் நன்முல்லை பெட்டிக்குள் எட்டிப் பார்த்தார். ஒரே ஒரு மாஸ்க் மட்டும் யாரும் எடுக்காமல் விடுபட்டிருந்தது.

“என்ன பசங்களா? யாருக்கும் யானை புடிக்காதா? யானை மாஸ்க்கை யாருமே எடுக்கலை?” என கேட்டுக் கொண்டே மாஸ்க்கை உயர்த்தி பிடித்து காண்பித்தார்.

பிள்ளைகள் அவர்களுக்குள்ளாக பேசிக் கொண்டார்கள்.

பிறகு “மிஸ், அது கொஞ்சம் ஹெவியா இருக்கும்” என ஆரம்பித்தது ஒரு வாண்டு.

“அது குட் அனிமல் தான்..ஆனா cuteஆ இருக்காது” என்றது இன்னொன்று.

“ஆமாம் மிஸ், நாலு காலு, ஒரு வாலு, அப்புறம் ஒரு தும்பிக்கை வேற.. நான் எப்படி மிஸ் பொழுதுக்கும் அது மாதிரியே பேலன்ஸ் பண்ணி நடக்குறது” என ஆடி பாடியபடியே இன்னொரு குட்டி சொன்னது.

மொத்த க்ளாஸும் கொல்லென சிரிக்க “சரி, அப்படீன்னா அதோட தும்பிக்கையை எடுத்திடலாமா? என மாஸ்க்கை லேசாக மடக்கியபடியே கேட்டாள் அக்க்ஷயா.

“ஹ்ம்ம்..இப்போ இது பாக்க யானை மாதிரியே இல்லையே?” என முகத்தை சுளித்தான் ஒரு பையன்.

“ஆமாம் மிஸ், அழகாவே இல்ல. தும்பிக்கை இருக்கட்டும் மிஸ்” என்றான் இன்னொருவன்.

“சரி, தும்பிக்கை இருக்கட்டும். ஆனா அது அழகுக்காக இருக்குன்னு நெனைக்குறீங்களா? இது இல்லேன்னா இந்த யானை என்ன பண்ணும்?” என தொடர்ந்தாள் அக்க்ஷயா.

“மிஸ், அதனால மர கட்டைய தூக்கவே முடியாது”

“அதனால மர கிளையை ஒடச்சி சாப்பிட முடியாது, மிஸ்”

“அது எப்புடி மிஸ் தண்ணி அடிச்சி விளையாடும்?” என அடுத்தடுத்து பதில்கள் வந்தது.

“இப்போ புரியுதா பசங்களா? ஒருத்தர் கிட்ட நாம குறையா பாக்குற விஷயம் தான், பல விஷயங்கள்ல நன்மையா இருக்குன்னு” என கேட்டாள் அக்க்ஷயா.

எல்லோரும் ஒரு சேர மண்டையை ஆட்டினார்கள்.

“யானைங்க ரொம்ப புத்திசாலிங்க பசங்களா. ரொம்ப தூரத்துல இருக்குற யானைங்கள்கூட கண்ணுக்குத் தெரியாம தகவல் சொல்லிக்குவாங்க. சத்தம் மூலமாவும், நில அதிர்வை உணர்ந்தும்கூட பேசிக்குவாங்க” என தொடர்ந்தார் நன்முல்லை.

“மிஸ்.. அப்போ இது ஒரு மாதிரி டெலிபதியா?” என ஒரு குட்டி விஞ்ஞானி கேட்டது.

“ம்ம். அதை டெலிபதின்னு பொதுவா சொல்ல முடியாது. அவங்களோட கூர்மையா கவனிக்கிற திறன், அப்புறம் ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிஞ்சுக்கிற குணம் அப்படீன்னு இதெல்லாம் சேர்ந்ததால நமக்குத் டெலிபதி மாதிரி தெரியுது” என விளக்கினார் நன்முல்லை.

அக்க்ஷயாவுக்கு ஒரு முறை மனதிற்குள் மின்னல் வெட்டியது.

“ஒரு விலங்கினை அதன் ஒரு குணத்தாலோ அல்லது அதன் ஒரு உருவ அமைப்பினாலோ நாம் பார்க்கும் கோணமே இவ்வளவு வித்தியாசப்படும்போது, ஒரு மனிதனை மட்டும் அவனின் ஒரு குணத்தையோ அல்லது செயலையோ மட்டும் எப்படி அளவுகோலாக எடுத்துக் கொண்டு எடை போட முடியும்? என தன்னை தானே கேட்டுக் கொண்டாள்.

“ஒரு நிமிஷம் மிஸ்” என நன்முல்லையிடம் சொல்லி விட்டு லைப்ரரியின் வெளியே இருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தாள்.

பாஸ்கரும் இப்படித்தான். எல்லோர் மீதும் அன்பும், பல நல்ல குணங்களும் கொண்டவர். ஆனால் அவர் மனம் விட்டு பேசாததும், நெருக்கடியான காலகட்டங்களில் ஆறுதல் சொல்லாததும் அவரின் மீது ஒரு வெறுப்புணர்வை தனக்கு அளிப்பதாக அவளுக்கு தோன்றியது.

ஆறுதலாக பேச தெரியாதது பாஸ்கரின் குறைதான். ஆனால் அந்த ஒரு குறையை வைத்து ,அவர் காட்டும் மொத்த அன்பையும் புறந்தள்ளி விட முடியாது என உணர்ந்தாள்.

நினைவுகள் எங்கெங்கோ போக, போன் அடித்தது.

“நான் வெளில வெய்ட் பண்றேன் அக்க்ஷூ..மாட வீதி கேட்டுக்கு எதிர்ல இருக்கேன். உங்க லைப்ரரி பில்டிங்க்லேர்ந்து அதான் பக்கம். காலைல டல்லா இருந்தல்ல, அதான் வெளில போகலாம்னு பர்மிஷன் சொல்லிட்டு வந்துட்டேன்” என்றார் பாஸ்கர்.

அவள் மெலிதாக சிரித்துக் கொண்டே உள்ளே போனாள். “மிஸ், நா இந்த யானை மாஸ்க்கை எடுத்திட்டு போகவா?” என கேட்டு, அதை எடுத்து பையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

சிறுகதை – ரோஸ்மேரி

A middle-aged woman working as a Manager looking at the town from her house balcony

ஒரு கையில் ஜிம் பேகும், மறு கையில் தண்ணீர் பாட்டிலும் இருக்க, கை முட்டியால் டோர் பெல்லை அழுத்தினாள் ரோஸ்மேரி.

“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என கதவை திறந்தபடியே கேட்டான் அருண்.

ஒரு கணம் சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள். யாரும் வெளியில் இல்லை. உள்ளே நுழைந்து ஷூவை கழட்டி ஸ்டாண்டில் வைத்து விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.

ஒன்பது வயது பென்னி ஓரக்கண்ணால் பார்த்தபடியே வீட்டுப்பாடம் எழுதி கொண்டிருந்தது.

“சுஜியோட நாத்தனார பொண்ணு பாக்க சேலத்துலேர்ந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சாயங்காலம் வராங்களாம். அவ மாமனார் மாமியார் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து நம்மள வர சொல்லி கூப்டுட்டு போனாங்க. இன்னைக்கு காந்தி ஜெயந்தி, பப்ளிக் ஹாலிடே, அதனால எல்லாரும் வீட்ல இருப்போம்னு சொல்லிட்டு போக வந்தாங்களாம். நீ என்னடான்னா ஊர் மேஞ்சிட்டு வர?” என கத்தினான் அருண்.

சுஜி அருணின் பெரியப்பா மகள். அருணை விட எட்டு வயது மூத்தவள். இருவரும் ஒரே ஏரியாவில் குடியிருப்பதால் இரு குடும்பங்களுக்கும் நெருக்கம் அதிகம்.

“காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக்கு தான் மூடி இருக்கும். ஜிம்முக்கு போறதுக்கு என்ன பிரச்சினை?” என கால் விரல்களை நீவி விட்டபடியே கேட்டாள் ரோஸ்மேரி.

அருணுக்கு அஹிம்சை முறையில் அடி வயிற்றில் கத்தியை இறக்கினாள் அவள்.

“இன்னைக்கு வராங்கன்னு தெரிஞ்சு தானே காலைல பேட்மிட்டன் விளையாட போகாம வீட்ல இருந்தீங்க? நான் கிளம்பும் போதே சொல்லி இருந்தா வீட்லயே இருந்திருப்பேன்ல?” என தொடர்ந்தாள் ரோஸ்மேரி.

பென்னி எழுதுவதை நிறுத்தி விட்டு டேபிளில் தலையை குனிந்து கொண்டது.

“ஏன் மேடம் மேனேஜர் போஸ்ட் பந்தாவ எல்லாருகிட்டயும் காட்டுவீங்களா? ஸ்லாட் புக் பண்ணிட்டு வந்தா தான் உங்களை பாக்க முடியுமோ?” என இழுத்தான் அருண்.

“பென்னி, கெவின் வீட்டுக்கு போய் பழைய பேப்பர் கொஞ்சம் வாங்கிட்டு வா. மத்தியானம் ஆக்ட்டிவிட்டி பண்ணலாம்” என சொல்லி விட்டு குளிக்க போனாள்.

பாத்ரூமிற்குள் நுழைந்து தாளிட்டதும், ரோஸ்மேரி வேகமாக ஆடைகளை களைந்து ஹாங்கரில் போட்டாள்.

தலையிலிருந்து கால் வரை தன் மீது வீசப்பட்ட வார்த்தை அழுக்குகள் போக அப்படியே ஷவரில் நின்று கொண்டிருந்தாள்.

“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என்ற வார்த்தைகள் அவளை கடும் கோபத்துக்கு ஆளாக்கி இருந்தன.

இதற்கு அழுகை தேவையில்லை என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். முதல் நாளே இந்த காட்சிக்கான ஒத்திகை வேறொரு மனதில் நடந்திருக்கிறது. அது இன்று அரங்கேற்றப் பட்டிருக்கிறது.

சமீபமாய் கற்றுக் கொண்ட, மொத்த கெட்ட வார்த்தைகளையும் வரிசையாக சொல்லிப் பார்த்தாள். சற்றே திருப்தியாக இருந்தது.

குழாயை நிறுத்தி தலை துவட்டியபடியே இந்த நாளை எப்படி கடப்பது என யோசித்தாள். குளித்து விட்டு வெளியே வந்தவுடன் “அம்மா, சுஜி அத்தை போன் பண்ணி இருக்காங்க” என ஓடி வந்தான் பென்னி.

“ரோஸ், அஞ்சு மணிக்கு வந்துடும்மா. கனி ஹெவி மேக்கப் எல்லாம் வேணாம், பார்லர் போக மாட்டேன்னு சொல்லுது. நீ கொஞ்சம் சீக்கிரம் வந்து மைல்டா டச்சப் பண்ணி விட்டுடுமா. அப்புறம், ஒரு இருபத்தியஞ்சு டிபன் நைட்டுக்கு ஆர்டர் பண்ணி இருக்கோம். அதனால் நீ எதுவும் செய்யாத” என சரளமாக பேசிக் கொண்டே போனாள் சுஜி.

“சரிங்க அண்ணி, வந்துடறேன்” என சில வார்த்தைகள் பேசி விட்டு போனை வைத்தாள் ரோஸ்மேரி.

ட்ரையர் போட்டு தலையை காய வைத்து விட்டு, “பென்னி, பேப்பர், சிசர் எல்லாம் எடுத்துட்டு வா” என கூப்பிட்டாள்.

வெறும் கையேடு பென்னி வந்து மடியில் உட்கார்ந்து கொண்டான்.

“நீ சேடா இருக்கியா?” என்றான்.

“சேடா இல்ல..வார்மா இருக்கேன். தலைக்கு சூடா ட்ரையர் போட்டிருக்கேன் இல்ல?” என கண் சிமிட்டி சிரித்தாள்.

“இல்லை, டாடி பேசினது rudeமா” என்றான்.

“May be அவர் ஏதாவது டென்க்ஷனா இருந்திருப்பார். Its okடா ” என்றாள் அவள்.

பென்னி எழுந்து போவதாய் இல்லை. “டைமாகுது பாரு. சாயந்திரம் அத்தை வீட்டுக்கு போயிடுவோம். எல்லாத்தையும் எடுத்துட்டு வா” என சொல்லி அனுப்பினாள்.

சற்று நேரத்தில் மீண்டும் மீதும் சுஜியின் போன் வந்தது. “சாரி ரோஸ். அருண் அப்படி உன்கிட்ட பேசி இருக்கக் கூடாது. அம்மா போன் பண்ணி சொல்லி வருத்தப்பட்டாங்க. நான் நைட் அவன்கிட்ட பேசுறேன்” என சொல்லி விட்டு போனை வைத்தாள்.

எப்படி அத்தை வரை விஷயம் போனது என அவளுக்கு புரியவில்லை. கால் லாக் செக் செய்ததில் அத்தையின் போன் வந்தது தெரிய வந்தது அவளுக்கு.

“பென்னி, இங்க வா” என கூப்பிட்டாள்.

“பாட்டி போன் பண்ணாங்களா?” என கேட்டாள்.

“ஆமாம். நீ பாத்ரூம்ல இருந்த. அதான் நான் அட்டென்ட் பண்ணி பேசுனேன்” என்றான்.

“அவங்க என்ன கேட்டாங்க? நீ என்ன சொன்ன?” என கேட்டாள்.

“அம்மா கிட்ட அர்ஜெண்டா பேசணும், போன குடுடான்னு சொன்னாங்க. நான் அவுத்து விட்ட மாடு இப்போ குளிக்குதுன்னு சொன்னேன்” என குண்டை தூக்கிப் போட்டான்.

“பென்னி..” என அவனை தீர்க்கமாய் பார்த்தாள் ரோஸ்மேரி.

“எனக்கு குட் மேனர்ஸ், பேட் மேனர்ஸ் நீதான் சொல்லி தர்ற. அவருக்கு அவங்க மம்மி தான சொல்லி தரணும்?” என நீட்டி முழக்கி பேசியது.

“பென்னி, அப்பா பேசினது தப்பு தான். ஆனா அது நம்ம பேமிலி மேட்டர். இனிமே இந்த மாதிரி அதிகப்ரசங்கி வேலை எல்லாம் பாக்காத. புரியுதா?” என்றாள்.

அவன் முழித்தபடியே, “பாட்டியும் நம்ம பேமிலி தானே?” என்றான்.

நாலு சுவரை தாண்டியவர் அவர் என எப்படி சொல்லி விளங்க வைப்பது என அவளுக்கு தெரியவில்லை.

“இங்க பாரு, பாட்டி, தாத்தா, அப்புறம் அத்தை எல்லாம் நம்ம பேமிலி தான். ஆனா இந்த வீட்டுக்குள்ள நாம மூணு பேரு மட்டும் தான் இருக்கோம். அதனால இனிமே வீட்டுக்குள்ள நடக்குற பர்சனல் விஷயங்களை எல்லார் கிட்டேயும் பேசிகிட்டு இருக்காத? புரியுதா?” என அதட்டினாள்.

ராஜமாதா கனி மேக்கப் விஷயமாக பேச போன் போட்டு இருப்பார். பென்னி நடந்தை சொல்ல, உடனே சுஜிக்கு சொல்லி இருக்கிறார். “அவன் காலைலயே ஏதோ ஏடாகூடமா பேசி வெச்சிருக்கான். நீ போன் போட்டு அவளை சமாதானப்படுத்து” என ரிலே செய்திருக்கிறார். இதற்குள் எதார்த்தமாக சுஜி பேசி விட, மீண்டும் போன் செய்து சாரி சொல்லி இருக்கிறாள்.

வாரம் முழுக்க வேலை செய்து விட்டு சனி ஞாயிறு ரிலாக்ஸ் செய்யலாம் என்றால், ஏதாவது ஒரு ஏழரை வந்து நிற்கிறது என நினைத்துக் கொண்டாள்.

பென்னியை மடை மாற்றி craft செய்து முடிக்கும் போது ஒரு மணி ஆனது. மீண்டும் ராஜமாதாவின் போன்.

“சொல்லுங்க அத்தை” என்றாள்.

“இல்ல, அவனுக்கு போன் போட்டேன். ரிங் போகுது, ஆனா எடுக்கலை…” என இழுத்தார்.

“போன சார்ஜுல போட்டுட்டு வெளில போய் இருக்கார் அத்தை” என்றாள்.

“சாப்ட்டீங்களாம்மா, மணி ஒண்ணாகுதே? இன்னிக்கு என்ன சமையல்?” என கேட்டார்.

வானிலை எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வம். ஆதர்சனத்தின் லட்சணத்தை அறிந்து கொள்ளும் ஆவல்.

“ஹா, சாம்பார், மீன் வறுவல் அப்புறம் அவருக்கு முட்டை பொடிமாஸ் செஞ்சிருக்கேன். சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுக்க போறேன். அப்போதான் சாயங்காலம் ப்ரெஷ்ஷா இருக்கும்” என நார்மல்சி ரசத்தை சொட்ட விட்டாள் ரோஸ்மேரி.

ராஜமாதாவுக்கு படு திருப்தியாக இருந்தது. நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என புளகாகிதம் அடைந்தார்.

“படு..படு. நல்லா ரெஸ்ட் எடு. வாரம் முழுக்க வேலைல டென்க்ஷனா இருந்திருப்ப” என ஸ்லோவாய் ரிவர்ஸ் கியரில் நகர்ந்தார்.

ரோஸ்மேரி லேசாக ஒரு தடவை தலையை உலுக்கிக் கொண்டாள். இந்நேரம் அவள் சாப்பிட்ட பிறகு தூங்க போகும் செய்தி மூன்று நான்கு பேருக்கு போய் சேர்ந்திருக்கும். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கண்டிப்பாய் எந்த போனும் வராது.

பென்னியும் அவளும் சாப்பிட்டு முடித்த பிறகு, பென்னியை தூங்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தாள்.

தொரை சாப்பாட்டுக்கு வரும் களை தெரியவில்லை. மீதம் இருந்த எல்லாவற்றையும் மூடி ப்ரிட்ஜில் வைத்து விட்டு Netflixல் கொரியன் படம் பார்த்தாள். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

படம் முடிந்த பிறகு, எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்தாள். கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்த போது, முகத்தை விட மனம் தான் களைப்பாக இருப்பதாக அவளுக்கு தோன்றியது.

சற்று நேரம் அங்கேயே நின்றவள், ஹாலுக்கு வந்து கெவினின் அம்மாவுக்கு போன் போட்டாள்.

“டெய்சி, நான் கொஞ்சம் lowஆ இருக்கேன். ஒரு பங்க்ஷனுக்கு போகணும். எனக்கு கொஞ்சம் வந்து மேக்கப் பண்ண முடியுமா?” என கேட்டாள்.

“லேவண்டர் ஆர் சாண்டல்? என்ன வேணும்” என கேட்டாள் டெய்சி.

“Anything is fine” என்றாள் ரோஸ்மேரி.

டெய்சி வருவதற்குள் டீ போட்டு வைத்தாள். பென்னியை எழுப்பி ஸ்னாக்ஸ் கொடுத்து விட்டு, அவனுக்கு ட்ரெஸ் அயர்ன் செய்து வைத்தாள்.

கால் மணி நேரத்தில் டெய்சி வர, காலையில் செய்த craftஐ பற்றி பேசிக்கொண்டே ரெண்டு பேரும் டீ குடித்தார்கள்.

அடுத்த அரை மணி நேரத்தில் face massage மற்றும் லைட்டாக மேக்கப் செய்து விட்டு டெய்சி கிளம்ப, பென்னியும் அவளும் ட்ரெஸ் செய்து கொண்டு கிளம்பினார்கள்.

“வெளில போனா, ஒரு போன் பண்ணி எப்போ வருவீங்கன்னு கேக்க மாட்டியா?” என்றபடி உள்ளே வந்தான் அருண்.

“பென்னி, நீ போய் பார்க்கிங்க்ல இரு, நான் bag எடுத்துக்கிட்டு ரெண்டு நிமிஷத்துல வரேன்” என சொல்லி முதல் வேலையாக பென்னியை pack செய்தாள்.

“போன வீட்ல வெச்சிட்டு போயிட்டீங்க. அப்புறம் என்ன கேள்வி இது?” என குழப்பமாக கேட்டாள் ரோஸ்மேரி.

“ஹா, போன் இருந்தா மட்டும் பத்து போன் லைனா போட போறியா? சுதன் wife அவன் போன் எடுக்கலேன்னா, ஒடனே எனக்கு போடுவாங்க. அண்ணா, சுதன் உங்க கூட இருக்காரா? மத்தியானம் சாப்பிட்டாரான்னு அவ்ளோ அக்கறையா கேப்பாங்க” என குதித்தான்.

காலையிலே இந்த காட்சிக்கான ஒத்திகை அவன் மனதில் நடந்திருக்கிறது. அது இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இந்த instant அண்ணன் தங்கச்சி விஷயத்தில் ரோஸுக்கு உடன்பாடில்லை. இது தேவையில்லாத ஆணி என தோன்றியது. மைண்டுக்குள் ஹீட்டர் switch நிறுத்தினோமா என யோசித்தாள். நிறுத்தியிருந்தால் நல்லது என நினைத்துக் கொண்டாள்.

“சுதன் பொண்டாட்டி, மதன் பொண்டாட்டி கதையெல்லாம், இந்த மன்மதன் பொண்டாட்டிக்கு தேவையில்லை. ஏற்கனவே பென்னி அத்தை கிட்ட கொளுத்தி போட்டிருக்கான். இதுல லேட்டா போனீங்கன்னா, இன்னிக்கு செத்தீங்க. நாங்க கெளம்புறோம். சீக்கிரம் வந்து சேருங்க” என சொல்லி விட்டு கிளம்பினாள் ரோஸ்.

மத்தியானம் நேரத்தோடு வந்து, காதல் தூவி செய்யப்பட்ட முட்டை பொடிமாஸ் சாப்பிட்டு தூங்கி எழுந்திருந்தால், இல்லை கூட உட்கார்ந்து அந்த கொரியன் படத்தை பார்த்திருந்தால் கூட, இந்நேரம் “அவுத்து விட்ட மாடு” கூலாகி இருக்கும்.

சும்மா நசநசவென்று பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு காண்டாக இருந்தது.

அருண் போய் குழாயை திறக்க, சில்லென்று தண்ணீர் கொட்டியது. டவலை சுற்றிக் கொண்டு, ஹீட்டர் ஆன் செய்துவிட்டு போய் சேரில் உட்கார்ந்து கொண்டான். பசி வேறு வயிற்றை கிள்ளியது.

பிரிட்ஜை திறந்து பார்த்தால் முட்டை பொடிமாஸ் அம்சமாக உட்கார்ந்திருந்தது.

பத்து நிமிடத்தில் அவசர அவசரமாக குளித்து ரெடியாகி வந்து, எல்லவற்றையும் சூடு செய்து சாப்பிட்டு முடித்தான். மம்மிஜியின் போன் வந்தது.

“சொல்லுங்க மம்மி” என்றான்.

“சம்மந்தி வீட்டுக்கு பங்ஷனுக்கு நேரத்தோட வரணும்ங்கிற அறிவு கிடையாதா உனக்கு? உன் பொண்டாட்டியும் புள்ளையும் வந்துட்டாங்க. மச்சான் ரொம்ப பிஸியான்னு சுஜி வீட்டுக்காரர் நக்கலா கேக்குறார்? ” என காய்ச்சி எடுத்தார் ராஜமாதா.

“அவ ஏன் சீக்கிரம் போகணும்?” என குதர்க்கமாய் கேட்டான் அருண்.

“நான் தான் அவளை சீக்கிரம் வர சொன்னேன். என்ன மயிருக்கு போன வீட்டுல வெச்சிட்டு வெளியில சுத்துற? காலைலேர்ந்து உனக்கு ட்ரை பண்றேன். இப்போ வந்து சவகாசமா கேக்குற?” என பொரிந்து தள்ளினார்.

மாமாவை கூல் படுத்த ஹெவி பர்பார்மென்ஸ் வேறு கொடுக்க வேண்டும். மினுக்காக சுற்ற முடியாது. தன்னை தானே திட்டிக் கொண்டே கிளம்பினான் அருண்.

அருணுக்காக சுஜி வீட்டு வாசலிலேயே காத்திருந்தார் மம்மிஜி.

“வளர்ந்த புள்ளைய வெச்சிக்கிட்டு பேசுற பேச்சாடா இதெல்லாம்? என அபத்தமாக ஆரம்பித்தார்.

“என்ன பெருசா சொல்லிட்டேன்? எந்த வீட்டுலயும் பேசாததா?” என பம்மலாக சொன்னான் அருண்.

“வாய ஒடச்சிடுவேன், ஜிம்முக்கு போயிட்டு வந்தவளை எதுக்கு வம்பிழுத்த? சுஜி நேத்தே உன்கிட்ட சொல்லி அனுப்பிச்சாளா, இல்லியா? இன்னைக்கு காலைல அவங்க அத்தை மாமா வீட்டுக்கு வருவாங்கன்னு? நீ சொல்லியிருந்தா அவ வீட்லயே இருந்திருப்பா, இல்லியா?” என கொக்கியை போட்டார்.

அருண் பேசாமலிருக்க, “பசங்க எல்லாருக்கும் நல்ல இடம் அமையணும்னு அவங்கவங்க வேண்டிக்கிட்டு இருக்காங்க. அப்படியே அமைஞ்சாலும், அதுக்கப்புறம் நல்ல வேலை, புள்ளை குட்டின்னு இருக்கணும்னு நாங்க சாகுற வரை அல்லாடிக்கிட்டு இருக்கோம். நல்லா போகுற வாழ்க்கைல, வம்படியா பேசி விளையாடிகிட்டு இருக்குற நீ. பாத்து நடந்துக்க, எந்த பொண்ணும் கண்ட கண்ட பேச்ச சகிச்சிக்கிட்டு குப்பை கொட்டுறது இல்ல இந்த காலத்துல” என பரேடு விட்டார் மம்மிஜி.

வாசலிலேயே tarbulanceஇல் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளே வந்தான் அருண். சுஜி கேவலமாக பார்த்து விட்டு உள்ளே போக, அவன் லேட்டாக வந்த கோபத்தில் மாமாவும் முகம் கொடுத்துப் பேசவில்லை.

அடுத்த இரண்டு மணி நேரம் அருண் பம்பரமாக சுழன்று சுழன்று வேலை செய்தான். தம்பியென்று ஒருத்தன் இருந்தால், அது சுஜிக்கு அருண் இருப்பது போல இருக்க வேண்டும் என மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கிளம்பும் போது சர்டிபிகேட் கொடுத்தார்கள்.

“மம்மி, ஜோயல் எங்க? நான் வந்ததிலிருந்து அவனை பாக்கலை” என கேட்டான் அருண். ஜோயல் சுஜியின் மூத்த மகன். பத்தாம் வகுப்பு படிக்கிறான்.

“அவன் இன்னிக்கு basketball டீம் செலக்சனுக்கு போய் இருக்கான்” என பெருமையாக சொன்னார் மம்மிஜி.

பெண் பார்க்கும் படலம் நல்ல படியாய் முடிந்து எல்லோரும் கிளம்ப, பென்னி போய் ரோஸ்மேரியின் மடியில் உட்கார்ந்து கொண்டான்.

“மா, நான் ஒண்ணு பாத்தேன், உன்கிட்ட சொல்லணும்” என அவள் காதருகே வந்து சொன்னான்.

ரெண்டு பெரும் எழுந்து போய் போர்டிகோவில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தார்கள்.

“சொல்லுடா?” என கேட்டாள் ரோஸ்.

“நம்ம கனி சித்திய பாக்க இப்போ ஒரு அங்கிள் வந்தாரே, அவரு ரொம்ப poorஆ, மா? என கேட்டான்.

“ஏண்டா?” என வியப்பாக கேட்டாள்.

“சொல்லேன், உண்மையா அவரு நல்ல கம்பெனில தான் வேலை செய்யுறாரா?” என தொடர்ந்தான்.

“டேய், அவருக்கு சொந்தமா பிளாட், கார், பைக் எல்லாம் இருக்கு. நல்ல வசதியாதான் இருக்காரு. இப்போ என்ன உனக்கு?” என அலுத்துக் கொண்டாள் ரோஸ்.

பென்னி அமைதியாக உட்கார்ந்திருந்தான். “சரி சொல்லு, அவரு ஏன் poorஆ அப்படீன்னு என்கிட்டே கேட்ட?” என விடாமல் கேட்டாள்.

“அம்மா, இங்க பாரு, நீங்க எல்லாரும் வாசல்கிட்ட போய் அவங்க கார்ல ஏறும் போது பேசிக்கிட்டு இருந்தீங்களா? அப்போ அவரு உள்ள போய் சித்திகிட்ட தனியா bye சொல்லிட்டு வந்தார்” என டீடைலை சொன்னான்.

“சரிடா, அதுக்கென்ன?” என்றாள்.

“அவர் bye சொல்லிட்டு கதவுகிட்ட வந்து சேர்ல உக்காந்து ஷூ மாட்டும் போது நான் அவரை பாத்துகிட்டு தான் இருந்தேன். அவர் ரெண்டு சாக்ஸுலயும் ஓட்டை இருந்துது” என அப்பாவியாய் சொன்னான் பென்னி.

ரோஸுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கண்ணில் நீர் வர சிரித்து முடித்தாள்.

“அவரு poorஆ ம்மா? நம்ம சித்திய நல்லா பாத்துக்குவாரா?” என கேட்டான்.

இது தான் கார்ப்பொரேட் வாழ்க்கையின் பகுமானம் என எப்படி சொல்லி அவனுக்கு புரிய வைப்பது என தோன்றியது ரோஸுக்கு.

“இல்லடா பென்னி, அவர்கிட்ட பணம் தேவையான அளவுக்கு இருக்கு. ஆனா தனக்கு என்ன செஞ்சிக்கணும்னு அவருக்கு தெரியல” என சொன்னாள்.

“அது அவர் பர்சனல் ஐட்டம்டா. யாரும் பாக்க போறதில்லைன்னு நெனச்சு அவர் use பண்ணிக்கிட்டு இருக்காரு. இல்ல கெளம்புற அவசரத்துல, எது கெடச்சுதோ அதை போட்டுக்கிட்டு அலட்சியமா வந்திருப்பாரு” என அவனை சமாதானப்படுத்தினாள்.

“யாரும் பாக்க போறதில்லைன்னா, இது மாதிரி கண்டதை போட்டுக்கிட்டு வரலாமாம்மா?” என ஆதங்கமாய் கேட்டான்.

“தப்பு தாண்டா. இங்க பாரு, யாரை பத்தியும் உடனே முடிவு பண்ண கூடாது. நான் சுஜி அத்தை கிட்ட சொல்லி நல்லா விசாரிக்க சொல்றேன்” என அவனை ஒரு மார்க்கமாய் செட்டிங் செய்தாள்.

இரவு சாப்பாடு முடிந்து எல்லோரும் கிளம்ப தயாரானார்கள். ரோஸ் சுஜியிடம் தனிப்பட்ட முறையில் பென்னியின் அப்சர்வேஷனை சொல்லி மீண்டும் ஒரு முறை தீர விசாரிக்க சொன்னாள்.

சுஜிக்கும் இது ஒரு red flag ஆக இருந்தது. “பணம் காசு இருக்கிறது இருக்கட்டும், பையன் எப்படின்னு இன்னும் கொஞ்சம் க்ளோஸ் சர்க்கிள்ள தீவிரமா விசாரிக்கணும்” என தீர்க்கமாய் சொன்னாள்.

சற்று நேரத்தில் வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது. ஜோயல் செலக்சன் முடிந்து ஒரு கையில் பேகும், மறு கையில் வாட்டர் பாட்டிலும் இருக்க, கை முட்டியால் டோர் பெல் அடித்தான்.

“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என கதவை திறந்தபடியே கேட்டான் பென்னி.

ஹாலில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போக, “டேய், என்னடா பேச்சு இது?” என அதட்டினான் அருண்.

“அம்மா வெளில போயிட்டு லேட்டா வந்தா, நீங்க இப்படி தானே சொல்வீங்க?” என அருணிடம் கேட்டான் பென்னி.

Tamil novel – Jiteswari – Part 12/21

Amsterdam guest house

சென்னையிலிருந்து துபாய். பிறகு துபாயிலிருந்து சுமார் ஏழு மணி நேரம் பயணித்து இரண்டு வார பயணமாக ஜித்து ஆம்ஸ்டர்டாம் வந்து சேர்ந்தாள்.

ஏர்போர்ட்டில் இருந்து டாக்ஸி பிடித்து கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தாள். ஒர்க்ஷாப்புக்கு வரும் மொத்த டீமும் சேர்ந்து கெஸ்ட் ஹவுசில் தங்க ஏற்பாடாகி இருந்தது. ரிசப்ஷனில் சாவி வாங்கி கொண்டு மேப் அட்டையை கவுண்டரில் இருந்து எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

இருபது ஏக்கரில் அழகான கேம்பஸ். கண்ணாடி கதவு தானாய் திறக்க வெளியே பேட்டரி கார் இருந்தது. லக்கேஜ் ஏற்றி பின் சீட்டில் அமர அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறை இருந்த பிளாக்கிற்கு முன் போய் நின்றது.

ரூம் பாய் லக்கேஜ் எடுத்து வைக்க “ஹலோ” என்றபடி வந்தார் கார்சன்.

கார்சன் ஜெர்மனியை சேர்ந்தவர். எழுபது வயதானவர். இந்த ப்ராஜெக்ட்டில் சீனியர் கன்சல்டன்ட்டாக இருப்பவர்.

இறைவனடி சேராமல் இருந்தால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த டீமில் இருப்பார். ஜித்து பாண்டியிலும், கார்சன் பெர்லினிலும், மூன்று பேர் டீம் சவுதியிலும் இருந்து வேலை பார்ப்பார்கள். இங்கே நெதர்லாந்தில் இருபது பேர் டீமில் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் கார்சனிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

முதல் இரண்டு நாட்கள் கிட்டத்தட்ட முப்பது பேரோடு செஷன் நடந்தது. பிரேக் டைமில் சிறு குழுக்களாக கூடி பேசி உணவருந்தினார்கள். பெரிதாக கார்சனிடம் பேச வேண்டிய சூழல் இல்லை. ஆனால் விநோதமாக கார்சன் அடிக்கடி ஜித்துவிடம் வந்து சகஜமாக பேசி விட்டு போனார்.

ஒரு முறை கையில் காலி தண்ணீர் பாட்டிலோடு ஜித்துவை கிராஸ் செய்து போனவர் திரும்ப வந்து அவள் பாட்டிலை கேட்டார்.

“நா பில் பண்ண போறேன். உனக்கும் சேத்து எடுத்துட்டு வரேன். உன் பாட்டிலை குடு” என உரிமையாய் கேட்டார்.

இது அவர் புடுங்க வேண்டிய ஆணியில்லை என தோன்றியது ஜித்துவுக்கு.

“தேங்க்ஸ் கார்சன். ஆனா எனக்கும் ஒரு ஷார்ட் வாக் போகணும். ரொம்ப நேரமா பிரேக் எடுக்கலை. நானே கொஞ்ச நேரம் கழிச்சு பான்ட்ரிக்கு போறேன்” என தவிர்த்தாள்.

தோளை குலுக்கியபடி லேசாய் கண் சிமிட்டி நகர்ந்தார் கார்சன்.

மூன்றாம் நாளில் இருந்து சிறு குழுக்களாக ஒவ்வொரு டீமோடு தனித்தனியாக மீட்டிங் நடந்தது. பெரும்பாலும் கார்சனை சந்திக்கும் சூழல் இல்லை.

மாலை ஆறு மணிக்கு கெஸ்ட் ஹவுஸுக்கு திரும்ப வந்தாள். இரவு எதுவும் பெரிதாய் வேலையில்லை. என்ன செய்யலாம் என யோசித்தாள். துவைக்க வேண்டிய துணி கொஞ்சம் இருந்தது.

லாண்டரி பேக்கை எடுத்துக்கொண்டு பேஸ்மென்டில் இருந்த வாஷிங்ரூமுக்கு போய் துணியை லோட் செய்தாள். இந்த வாஷிங் சைக்கிள் முடிய ஒரு மணி நேரம் ஆகும்.

அந்த அறைக்கு பக்கத்திலேயே ஒரு இன்டோர் கேம் ஏரியாவும், ரீடிங் ரூமும் இருந்தது. ஜித்து அங்கே போய் உட்கார்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் “ஹலோ” என கார்சனின் குரல் கேட்டது.

எதிரில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார்.

“என்ன போரடிக்குதா?கேன் வீ ஹாவ் சம் ஃபன்?” என சிறிது நிறுத்தி பிறகு “இன் கேம் ஏரியா” என தொடர்ந்தார்.

ஜித்துவுக்கு அவரிடம் பெரிதாய் பேச்சு கொடுக்க இஷ்டமில்லை.

இந்த மூன்று நாளில் பல முறை “கேன் வீ ஹாவ் சம் ஃபன்?” என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.    

அந்த நேரம் பார்த்து ரேஷ்மியின் போன் வந்தது. கார்சனிடம் சுருக்கமாக விடை பெற்று ரூமை விட்டு வெளியே வந்தாள் ஜித்து.

ரேஷ்மி ஜித்துவோடு இரண்டு வருடம் மும்பையில் பணி புரிந்தவள். பிறகு சில வருடங்கள் கழித்து நெதர்லாந்து வந்து செட்டிலாகி விட்டாள்.  ரேஷ்மி வேலை செய்யும் கம்பெனி ப்ராஜக்டுக்காக தான் ஜித்து தேர்ட் பார்ட்டி கன்சல்டன்சியில் இருந்து வந்திருக்கிறாள்.

“ஹாய் ஜித், சாரிப்பா, நா வெகேஷன் போயிட்டு இன்னைக்கு தான் வந்தேன். லாஸ்ட் வீக்லேர்ந்து லீவ்ல போய்ட்டேன். அதான் உன் மெசேஜை மிஸ் பண்ணிட்டேன். நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம் லன்ச் டைமில்” என்றாள் ரேஷ்மி.

சரியென்று சொல்லி பத்து நிமிடங்கள் பேசி முடித்து திரும்பி பார்த்தால் கார்சன் கண்ணாடி ஜன்னலுக்கு பின்னால் நின்று அவளையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

கார்சன் வெளியே வந்து “கேன் வீ ஹாவ் சம் ஃபன் டுநைட்?” என சிரித்தபடியே கேட்டார்.

ஆளரவமற்ற அந்த பேஸ்மென்டில் அசையாமல் ஒரு உருவம் நின்றது அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. ராஷ்மியிடம் பேசியதில் கார்சன் உள்ளே ரூமில் இருந்ததையே அவள் மறந்து போனாள்.

ஜித்து ஏதோ யோசனையாக இருக்க அருகே வந்து “ஃபன் மீன்ஸ் ஃபுல் அன்ட்ரெஸ்ஸட் நைட்” என்றார் மெதுவாய்.

பளுக்கென்று ஒரு அறை விட வேண்டும் போல இருந்தது ஜித்துவுக்கு.

போனை பேண்டின் பின்பக்கம் சொருகியபடியே சில நொடிகள் அவர் சொன்னதை உள்வாங்கி “ஐ ஆம் ஆல்ஸோ எ ஃபன் லவ்விங் பர்சன்” என நிறுத்தி நிதானமாய் சொன்னவள், அந்த சில கணங்களை சுதாரிக்க எடுத்துக் கொண்டாள்.

“ஃபன் மீன்ஸ் பர்ம்லி அன்டர்மைனிங் நான்சென்ஸ்” என நறுக்கென்று சொன்னாள்.

கார்சன் அவள் பதிலை உள்வாங்கும்போதே “பாய் கார்சன். குட் நைட்” என சொல்லி நகர்ந்தவள் சில அடிகள் நடந்தபிறகு திரும்பி வந்தாள்.

“டூ யூ நோ வாட் குட் நைட் மீன்ஸ்? என கேட்டாள்,

கார்சன் முழிக்க “க்ராப் ஒன் ஓவர்நைட்  டயப்பர். நோ இன்அப்ரோப்ரியேட் கெஸ்சர் ஹராஸ்மென்ட் டாலரேட்டட்” என சொல்லி சிரித்தபடியே நகர்ந்தாள்.

A basement game room

கார்சனுக்கு அவமானத்தில் முகம் சிவந்தது.

டக்கென்று டயப்பர் வெளியே தெரிகிறதா என அவர் உடையை சரி பார்த்தார்.  அவரின் டயப்பர் வழக்கத்தை அவள் தெரிந்து கொண்டது அவருக்கு புதிராகவும் பங்கமாகவும் இருந்தது.

அங்கேயே படிக்கட்டில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தார்.

முதல் நாள் கெஸ்ட் ஹவுஸ் வந்த பிறகு பக்கத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கி பில்லிங் செய்யும் போது ஜித்து ஹலோ சொல்லி அவரை கிராஸ் செய்து போனது ஞாபகம் வந்தது. கவுண்டரில் பையில் போட்டு பேக் செய்யும் போது டயப்பர் கவரை கவனித்திருக்கிறாள் என புரிந்து கொண்டார்.

ஆனாலும் இனி ஜென்மத்துக்கும் யார் குட் நைட் சொன்னாலும் இவள் சொன்ன அர்த்தம் மட்டும் அவருக்கு மறக்காது.

Tamil novel – Jiteswari – Part 11/21

A girl on mobile call

கல்யாணி பிறந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குமரேசனுக்கு ஒரு சாலை விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆறு மாத காலம் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை. காமாட்சி பாண்டிக்கு வந்து அவரை கவனிக்க ஜித்து குழந்தைகளோடு சென்னையில் எப்போதும் போல தொடர்ந்தாள்.

ஆனால் கற்பகத்துக்கும் குமரேசனுக்கும் இந்த நிலை தொடர உடன்பாடில்லை.

“ஏண்டி, எவ்வளவு நடந்தாலும் அங்க போக மாட்டேன்னு இங்கயே இருக்க? அந்த அம்மா இத்தனை நாள் உனக்கு துணையா இருந்தாங்க இல்ல?இப்ப அவங்களுக்கு ஒரு பிரச்சினைனா நீ கூட இருக்க வேணாமா? அவங்க பசங்களுக்கு ஏங்க மாட்டாங்களா? உன்ன மட்டும் பத்தி மட்டும் தான் யோசிப்பியா நீ?” என ஆரம்பித்தார் கற்பகம்.

“மா, விஷயம் புரியாம பேசாத? மாமா இங்க வந்தா பெஸ்ட் ஆஸ்பிடல்ல பாக்கலாம்னு கூப்பிட்டேன். அவர் வர மாட்டேன்னு சொல்றார். எனக்கும் ராஜூவுக்கும் பேங்க் லோன் கமிட்மென்ட் இருக்கு. ராஜுவும் என்ன வரச்சொல்லி கூப்புடலை. நீ ஏன் என் மேல இப்ப கேஸ் எழுதுற?” என திருப்பி கேட்டாள் ஜித்து.

“யாரும் உன்ன வெத்திலை பாக்கு வெச்சு கூப்புட மாட்டாங்க. சூழ்நிலைக்கு ஏற்ப நீதான் புரிஞ்சி நடக்கணும். அங்க போய் ஏதாவது வேலை தேடிக்க. இப்படி ஒரு ஒட்டு உறவும் இல்லாம இருந்து எங்க மானத்த வாங்காத” என திட்ட ஆரம்பித்தார் கற்பகம்.

வினை வீட்டிலேயே இருக்க வீதியை பற்றி உள்ள வேண்டாம். அடுத்த சில மாதத்தில் ராஜுவும் காமாட்சியும் அவளை பாண்டிக்கு வர முயற்சிக்க சொன்னார்கள்.

ஜித்துவுக்கு இக்கட்டான சூழல். ஒரு புறம் வேலை, பேங்க் கடன் மற்றும் மறுபுறம் பாண்டியில் தகுந்த வேலை கிடைக்காத நிலை.

ஆனால் நீண்ட காலம் இந்த பிரச்சினையை அவள் இழுக்க விரும்பவில்லை. மாற்று ஏற்பாடு என்ன என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் துறை சார்ந்த கம்பெனிகளில் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை தேட ஆரம்பித்தாள்.

ராஜுவிடம் பேசி சில மாதங்கள் பொறுக்க சொன்னாள். 

மும்முரமாக நட்பு வட்டத்தில் தகவலை சொல்லி வேலை தேடியதில் அடுத்த ரெண்டு மாதத்தில் ஒரு வாய்ப்பு வந்தது.

எண்ணை நிறுவனங்களுக்கு பணி புரியும் ஒரு சிறிய கன்சல்டன்சியில் ரிமோட் ஜாப் ஒன்று வந்தது.

இது இரண்டு வருட கான்டராக்ட் வேலை. அவள் ஏற்கெனவே பார்த்த அதே வேலை, நல்ல சம்பளம் ஆனால் கம்பெனி மட்டும் மிக சிறியது. அது சுமார் ஐம்பது பேர் மட்டும் கொண்ட ஒரு நிறுவனம்.

ஜித்துவுக்கு கான்டராக்ட் வேலை இன்னும் ஒரு படி கீழ் நிலை. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலைக்கு இது சரியான தீர்வு. எனவே தனிப்பட்ட நலனை கருதாமல் அந்த நிறுவனத்தில் சேர முடிவெடுத்தாள்.

மும்பை வேலையை ராஜினாமா செய்து அடுத்த ரெண்டு மாதத்தில் கன்சல்டன்சி வேலைக்கு சேர்ந்தாள். குழந்தைகளோடு பாண்டிக்கு போய் செட்டிலாகி அவள் வேலையை தொடர்ந்தாள்.

குமரேசனுக்கு கர்வம் கூடியது. கை கால் உடைந்தாலும் அது ஒரு நன்மையில் அவருக்கு முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னார்.

காமாட்சிக்கு எரிச்சல் ஓங்கியது. ஏன் எப்படி அந்த பெண்ணை சத்தாய்க்க வேண்டும்? பேசாமல் சற்று அனுசரித்து சென்னை வந்து தங்கினால் அவளுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்? கணவரின் வறட்டு பிடிவாதத்தால் ஜித்து சிறிதளவும் கீழ் நிலைக்கு போவதை காமாட்சி துளியும் விரும்பவில்லை.

ஆனால் ஜித்து கன்சல்டன்சி வேலையில் பெரிதாய் குறைபட்டுக் கொள்ளவில்லை. அவள் எப்போதும் சென்னையில் இருப்பதை போலவே அவள் தினசரி வேலைகளை பார்த்தாள்.

இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிய இப்போது ஜித்துவுக்கு ஒரு முக்கியமான கால கட்டம்.

இன்னும் சில மாதங்களில் அவள் கான்டராக்ட் முடிய போகிறது.

தற்போது அவள் பணிபுரியும் சவுதி கம்பெனி கிளையண்ட் அவர்களின்  அடுத்த கட்ட ஐந்து வருட கான்ட்ராக்ட்டை ஜித்துவின் கன்சல்டன்சிக்கே  மீண்டும் அளிப்பது என முடிவு செய்திருக்கிறது. 

ஆனால் இரண்டாம் கட்ட ப்ராஜெக்ட்டில் தொடர வேண்டுமென்றால் அவள் நெதர்லாந்து போய் இரண்டு வார ஒர்க்ஷாப்பில் நேரில் பங்கேற்க வேண்டும்.

ஜித்துவுக்கு இந்த ஒர்க்ஷாப் மிக முக்கியமானது.

இரண்டு வாரம் நெதர்லாந்து போய் நேரில் ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்டு ட்ரெயினிங் முடித்து விட்டு வந்தால் போதும். எல்லாம் சுமுகமாக முடிந்தால் அடுத்த ஐந்து வருடம் இப்போது போல பாண்டியில் இருந்தே வீட்டிலிருந்து பணி புரியலாம்.

“ராஜு, நா டூ வீக்ஸ்   நெதர்லாந்து போகணும். ஒர்க்ஷாப் இருக்கு. போயிட்டு வந்தா அஞ்சு வருஷம் இதே மாதிரி ஒர்க் ப்ரம் ஹோம் வேலை செய்யலாம் ” என சொன்னாள் ஜித்து.

“சரி, போயிட்டு வா” என சொல்லிவிட்டு உடனே அறையை விட்டு வெளியேறினான் ராஜு.

விஷயம் குடும்பத்துக்கு தெரிந்ததும் குமரேசன் கச்சேரியை ஆரம்பித்து விட்டார்.

“அந்த வாரம் தான் நம்ம ரமா கல்யாணம் வருது. அப்புறம் போக சொல்லு” என்றார் காமாட்சியிடம்.

ரமா குமரேசனின் தம்பி மகள். அவர் தம்பி வீட்டில் முதல் விசேஷம்.

இல்லேங்க, நம்ம சவுகர்யத்துக்கு கம்பெனில எப்படிங்க மாத்துவாங்க? நாம தான் எல்லாரும் போறோமே, ஜித்து ஒருத்தி வரலேன்னா என்ன?”என மெதுவாய் சொன்னார் காமாட்சி.

“நம்ம குடும்ப விசேஷம் எல்லாத்துக்கும் அவங்க எல்லாரும் ஒருத்தர் தவறாம வராங்க. அவங்க வீட்ல மொதல் விசேஷம். அதுக்கு வீட்டு மருமக இல்லாம போய் நிக்க சொல்றியா? காரு வீடு வேலை பணம்னு இருங்க. நாலு சொந்தம் வேணும்னு நெனைக்காதீங்க. அவன் தான் கவர்ன்மெண்டு வேலைக்கு போறானே? இன்னும் என்ன கொறை” என எகிறினார் குமரேசன்.

“நா ஒருத்தன் கத்தி என்ன ஆக போகுது? அம்மா புள்ள ரெண்டு பேரும் ஜடம் மாதிரி இருக்கீங்க. வாய தொறந்து நல்லது கெட்டது எடுத்து சொன்னா என்ன? அதுக்கு தான் இந்த சம்மந்தம் வரும்போதே சொன்னேன். இது சரிப்படாதுனு. யாரு எம் பேச்ச கேட்டீங்க? இப்ப எல்லார் முன்னாடியும் நா போய் தலையை குனிஞ்சு நிக்க போறேன். அவன் ஒத்த மரமா நிக்க போறான்” என வாய்க்கு வந்ததை பேசித் தீர்த்தார்.

பக்கத்து அறையில் இருந்த ஜித்துவுக்கு சுர்ரென்று ஆனது. இரண்டு வாரம் வேலை விஷயமாய் போய் வருவதற்கு இத்தனை வருடங்களுக்கு பிறகும் குழந்தைகள் பிறந்த பிறகும் வரன் பார்த்த கதையை இழுத்தது அடி முட்டாள்தனமாய் பட்டது.

போய் நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க வேண்டும் போல இருந்தது.

சில நிமிடங்கள் நிதானித்தவள் எதுவும் கேட்க வேண்டாம் என முடிவெடுத்தாள். தனக்கு கேட்க வேண்டும், எரிச்சலாகி விஷயம் சூடு பிடிக்க வேண்டும் என திட்டமிட்டு கொட்டப்படும் வார்த்தைகள்.

தான் சொல்லும் காரணத்தையோ பதிலையே துளி கூட மதிக்கப்போவதில்லை. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது.

வீணாய் பேசி உழட்டுவதில் எந்த பயனும் இல்லை.எவ்வளவு விரைவாக இதை மறக்கிறோமோ அவ்வளவு நல்லது என நினைத்துக்கொண்டாள்.

காமாட்சிக்கு சங்கடமாய் இருந்தது.

அந்த பெண் அலட்டாமல் சத்தமில்லாமல் உழைத்துக் கொட்டுகிறாள்.

சகல சௌகர்யங்களையும் செய்து கொடுத்திருக்கிறாள். அவர்கள் சொந்த பந்த வகையறாவில் எந்த மருமகளும் இவள் அளவிற்கு திறமைசாலி கிடையாது. நாம் செய்த புண்ணியம் இந்த மாதிரி ஒரு பொறுப்பான, தன்மையான பெண் குடும்பத்திற்கு அமைவது என பல நேரங்களில் கர்வமாய் இருந்திருக்கிறார்.

இந்த மனுஷனுக்கு மட்டும் புத்தி வேறு மாதிரி இருக்கிறது. கண்டிப்பாய் அவளுக்கு கேட்டிருக்கும். அவள் மனம் என்ன பாடுபடும் என கவலையில் ஆழ்ந்தார்.

சற்று நேரத்தில் டோர் பெல் அடித்தது. காமாட்சி போய் கதவை திறக்க பின்னாலேயே ஜித்துவும் வெளியே வந்தாள்.

சாப்பாடு டெலிவரி வந்திருக்கிறது. இருபத்து நான்கு வகையான பண்டங்களோடு மெகா தாலி.

“வாங்க அத்தை சாப்பிடுவோம்” என அழைத்தாள்.

பெரிய சில்வர் தட்டுகளை கழுவி எடுத்து வந்து வைத்தாள். பொறுமையாக எல்லா டப்பாக்களையும் பிரித்து பாத்திரங்களில் மாற்றி தட்டு போட்டு மூடி வைத்தாள். பேக்கிங் பேப்பர் மற்றும் டேப்பு குப்பை என எல்லாவற்றையும் அள்ளி குப்பையில் போட்டு டேபிளை சுத்தம்  செய்தாள்.

டோர் பெல் அடித்தது. டவுனிலேயே பெஸ்ட் லஸ்ஸி நாலு பேக்.

வாங்கி வந்து கண்ணாடி கப்பை கழுவி ஊற்றி மூடி போட்டு வைத்தாள். 

குமரேசனுக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை.

எப்போது அழைப்பு வரும் என காத்துக் கொண்டிருந்தார்.

எல்லா அயிட்டங்களையும் மாற்றி ஊத்தும்போதே வாசனை வீட்டை நிரப்பி இல்லாத பசியையும் கிளறி விட்டது.

அரை மணி நேரம் ஆனது.

காமாட்சி “வாங்க சாப்பிட” என கூப்பிட்டு முடிப்பதிற்குள் போய் சேரில் உட்கார்ந்தார்.

அட்டகாசமான சாப்பாடு. அருமையான லஸ்ஸி. இருபது நிமிடம் ரசித்து ரசித்து சாப்பிட்டு முடித்தார் குமரேசன்.

Family lunch time

எதிரில் உட்கார்ந்து மெகா தாலியோடு குமரேசனின் ஈகோவையும் சேர்த்து மெதுவாக மென்று முழுங்கிக் கொண்டிருந்தாள் ஜித்து.

இந்த பெண் தனக்கு பிறந்திருக்க வேண்டியவள். ஒரு வார்த்தை பேசாமல்,முகம் சுழிக்காமல் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு தட்டு நல்ல சோறு போட்டு குமரேசனை தட்டி தூக்கியிருக்கிறாள்.

மற்ற குடும்பங்களில் நாராசமாக மாறும் சண்டை, இங்கே டைனிங் டேபிளில் அமர்க்களமாக பரிமாறப்பட்டு கொண்டிருக்கிறது.

நரம்பில்லாமல் பேசும் நாக்கு ஒரு மாற்றுக்காக நல்ல சுவையை அனுபவிக்கட்டும் என நினைத்திருக்கிறாள். அமிலமாக சுட்ட வார்த்தைகள் ஜீரணமாக ஆயிரம் ரெண்டாயிரம் போனால் பரவாயில்லை என நினைத்துக் கொண்டார் காமாட்சி.

ஒரு மெகா தாலியில் ரமா கல்யாண மேட்டர் சுபம் மங்களம் போட்டு முடிக்கப்பட்டது.

Tamil novel – Jiteswari – Part 10/21

Temple night

இறைவனும் இறைவியும் கிளம்பி வந்து குளத்தின் நடுவே இருந்த கல் மண்டபத்தில் உட்கார்ந்தார்கள்.

வடக்கு கோபுரத்திலிருந்து பார்த்த காகம் பறந்து போய் மாருதியிடம் விஷயத்தை சொல்லி எழுப்பியது.

இருவரும் போய் கல் மண்டபத்தின் ஓரத்தில் காதை தீட்டிக்கொண்டு உட்கார்ந்தார்கள்.

“என்ன மாருதி, சௌக்கியமா?” என்றார் இறைவன்.

மாருதி பணிவாய் வணக்கம் வைத்து விட்டு குளத்தின் மீது பார்வையை வீசியது.

“என்ன தாதா, நீங்க சௌக்கியமா?” என்றார் இறைவன் காகத்தை பார்த்து.

காகம் உள்ளுக்குள் நடுங்கியது. மெலிதாய் தலையசைத்து மௌனமாய் அமர்ந்திருந்தது.

“நீங்க ரெண்டு பெரும் தானே இவங்க லீகல் டீம்” என சிரித்தார் இறைவன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே மச்சிமா வந்து வணங்கினார். மற்ற மீன்களும் அவர் பின் சூழ்ந்து கொண்டு நின்றன.

இறைவி குட்டி மீனை பார்த்து “இங்கே வா” என்கிறார்.

“உனக்கு போரடிக்குதா இங்கே?” என வாஞ்சையாக கேட்டார்.

“ஆமாம்” என பயத்தோடு சொன்னது குட்டி மீன்.

“சரி, உன்னையும் உன் பேமிலியையும் பக்கத்துல இருக்குற ஆத்துக்கு அனுப்பவா? அங்க நீங்க ஜாலியா விளையாடலாம். நெறய ஜனங்க வருவாங்க” என கேட்டார் இறைவி. 

“வேண்டாம்” என சொல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டது காகம்.

“இல்ல, வேணாம்மா. நாங்க இங்கயே இருக்கோம்” என சொன்னது குட்டி மீன்.

“ஏன்?” என கேட்டார் இறைவி.

“நீ ஏன் அவங்க நோ சொல்லணும்னு வேண்டிக்கிட்ட?” என டக்கென்று அதே நேரத்தில் காகத்திடம் கேட்டார் இறைவன்.

தொக்காய் மாட்டியது காகம். அஜெண்டா அண்டாவில் தானாய் குதித்து மாட்டிக் கொண்டது.

டெம்பிள் ஓனர் கேட்கிறார். எந்த டெம்ப்ளேட்டில் பதில் சொல்வது என யோசித்தது.

“என்ன, ஓனர பத்தி என்ன யோசனை?” என அதை மீண்டும் சீண்டினார் இறைவன்.

இந்த கேள்வியில் டெம்ப்ளேட்டை முடிவு செய்தது காகம்.

“இல்ல சாமி, உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல. ஆத்து தண்ணி ரொம்ப மாசா இருக்கு. ஜனங்க குடிக்கவும் லாயக்கு இல்லை. மீனுங்க வாழவும் லாயக்கு இல்லை. அங்க போய் சாகுறதுக்கு இதுங்க இங்கயே பொழச்சி இருக்கலாம்” என விளக்க தீபத்தை ஏற்றியது காகம்.

“ஏன் மாசா இருக்கு? யாரு பண்ற வேலை இது” என கோபமாய் கேட்டார் இறைவி.

“உன் டெம்ப்ளேட் ஒர்க்அவுட் ஆயிடுச்சி. டீடைலா சொல்லு” என சிரித்தார் இறைவன்.

ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும். ஆனா நம்மள வெச்சி செய்றாங்க என நினைத்தது காகம்.

“அதான் எங்க டெம்ப்ளேட்” என சொன்னார் இறைவன்.

காகத்துக்கு கேம் புரிந்து விட்டது.

பேசாமல் தெரிந்ததை சொல்லி விடலாம் என ஆரம்பித்தது.

“எல்லாம் அந்த சிமெண்டு பேக்டரியால வந்து வினை. அவனுங்க கழிவையெல்லாம் ஆத்து தண்ணில கொட்டுறானுங்க. மாசு வாரியமும் கண்டுக்காம இருக்கு. ஜனங்க போராடி போராடி அலுத்துப் போய்ட்டாங்க. பேக்டரிகாரனுங்க ஊருக்கு தண்ணி சுத்திகரிக்குற மெஷினை போட்டு பிரச்சினையை அமுக்கிட்டாங்க. நல்ல தண்ணி கெடைக்குறதால ஜனங்களும் அந்த பிரச்சினையை அப்படியே விட்டுட்டாங்க. பாவம், இந்த மீனுங்க தான் கூண்டோடு அழியுதுங்க” என விவரித்தது காகம்.

மச்சிமாவும் மற்றும் சில மீன்களும் குனிந்து கண்ணீர் சிந்தின.

Fish family

அவர்கள் இனத்தின் அழிவை யாரோ ஒருவர் விவரிக்கும் போது தாங்கள் தப்பி பிழைத்ததற்கு சந்தோஷப்படுவதா அல்லது தங்கள் இனத்தின் அழிவிற்காக வேதனைப்படுவதா என புரியாமல் இருந்தன.

இறைவி கண் மூடி இந்த டாபிக்கை யோசித்தார்.

அந்த ஓனர் தன்னுடைய பரம பக்தர் என தெரிய வந்தது.

பேக்டரி லாபத்தில் கோவிலுக்கு ஒரு தொகையை உபயமாக கொடுத்திருக்கிறார்.

“அந்த ஓனர் உங்க டிவோடீ தான். நம்ம கோவிலுக்கு கூட நெறய காசு குடுத்து இருக்காரு. அந்த குஷில நீங்களும் அந்த ஆளு வேண்டுற காண்ட்ராக்டெல்லாம் முடிச்சு தரீங்க” என தைரியமாய் சொல்லி விட்டது காகம்.

“நெலம் நீரெல்லாம் பாழாக்கிட்டு, இந்த கொளுத்த காப்பாத்துறேன்னு சுத்து செவரு கட்ட, கேட்டு போடன்னு நிதி குடுத்திருக்கான். அதையும் போர்ட் போட்டு மாட்டி நல்லவன் பேரெடுக்குறான். இதே போர்ட ஆத்தோரம் வெப்பானா? நான்தான் இத நஞ்சாக்கிட்டேன்னு” என திட்டி தீர்த்தது மச்சிமா.  

சிமெண்டு பாக்டரி ஓனர் கிழவன் சிக்கி சின்னா பின்னமானார்.

“ஏதோ உண்டில ஐஞ்சு பத்து போடுறவனை ஒண்ணும் செக் பண்ண வேண்டியதில்லை. லம்பா ஒரு தொகையை ஒருத்தன் குடுத்தா, டியூ டிலிஜன்ஸ் பாக்காம எப்புடி வாங்கலாம்?” என முதல் கேள்வியை கேட்டது மாருதி.

“இது கார்பொரேட் குரங்கு” என நினைத்துக் கொண்டார் இறைவி.

இறைவன் இறைவியை பார்த்தார். பிறகு மச்சிமாவிடம் பேச ஆரம்பித்தார்.

“நாங்க இந்த விஷயத்துக்கு ரொம்ப வருத்தப்படறோம். தப்பு செஞ்சவங்களுக்கு நாங்க தக்க தண்டனையை கொடுப்போம். இனிமே இந்த மாதிரி நடக்காம நாங்க பாத்துக்கறோம்” என்றார்.

“என்ன நீங்களும் ராஜா மாதிரியே பேசுறீங்க? அவரும் அப்டி தான். எங்க யார் செத்தாலும், ரேப்பு நடந்தாலும் ஒரு லெட்டரை எங்களுக்கு போட்டுட்டு அந்த விஷயத்தை கெடப்புல போட்டுடுவாரு” என காகம் ராஜாவை கோர்த்துவிட்டது.

முதலில் சிமெண்ட் கம்பெனி ஓனர் கிழவன். இப்போது ராஜா.

அடுத்து லிஸ்டில் இருப்பது தாங்கள் தான் என அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.

“சரி, அந்த ஓனர் பண்ண தப்புக்கு அவர் பதில் சொல்லியாகணும். அவர் அனுபவிப்பார். கேட்டு தொறக்க ஏற்பாடு பண்றோம்” என்றார் இறைவி.

“ஆத்து தண்ணிய சுத்தம் பண்ணி தருவீங்களா, ப்ளீஸ்” என்றது குட்டி மீன்.

“கண்டிப்பா, அந்த ஓனர இனிமே பொறுப்பா இருக்க சொல்றேன். நல்ல மழையை குடுத்து அந்த ஆற்றை வளமாக்குறேன்” என உத்திரவாதம் கொடுத்தார் இறைவி.

மச்சிம்மாவும் மீன்கள் கூட்டமும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தார்கள்.

சரியான மங்குனி கூட்டம் என மனதிற்குள் திட்டியது காகம். இன்னும் எவ்ளோ இருக்கு சரி பண்ண. இதுங்க என்னடான்னா இதுக்கே சந்தோசப்படுதுங்க. இதுங்களுக்கு சுய புத்தியே இல்ல என கருவியது.

“ஏங்க, நாமளும் வாட்டர் பவுண்டைன் போடலாமா கொளத்துல. அப்டியே கொஞ்சம் நல்ல லைட்டிங்கும் பண்ணா ஆம்பியன்ஸ் நல்லாயிருக்கும்” என கேட்டார் இறைவி.  

இரண்டு மாவட்டம் தாண்டி இறைவியின் சகோதரியின் திருத்தலம் இருக்கிறது. நீரூற்று வைத்த குளம் இருக்கிறது அங்கே.

“மந்திரி சம்மந்தி தான் அந்த கான்டராக்ட செய்யுறாரு. உங்க அக்கா கோவிலுக்கும் அவரு தான் பவுண்டைன் போட்டாரு. கூட கொஞ்சம் அமௌண்டையும் ஆட்டையை போட்டாரு அந்த டீலிங்க்ல” என சொல்லியது காகம்.

லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. இறைவன் அதையும் நோட் செய்து கொண்டார். காகத்தின் டெம்பிளேட் நன்றாக வேலை செய்தது.

“உனக்கு ஒண்ணும் பிராது இல்லியா? சௌகர்யமா இருக்கியா?” என டாபிக்கை காகத்தின் பக்கம் திருப்பினார் இறைவன்.

“ஏதோ உங்க புண்ணியத்தால சாப்பாட்டுக்கு கொறையில்லாம இருக்கேன். வேளா வேளைக்கு வயிறார சாப்புடறேன். வேற என்ன வேணும் ஒரு ஜீவனுக்கு?” என பவ்யமாய் பதில் சொன்னது காகம்.

தன்னிடம் வரும்போது காகம் சட்டென்று நியூட்ரல் கியருக்கு மாறியது மச்சிமாவுக்கு உறுத்தலாக இருந்தது.

நேத்து தான் ரேடியேஷனுக்கு பயந்து வீடு மாறின கதையை சொல்லுச்சு. இன்னிக்கு என்னடான்னா ஒண்ணும் பிரச்சினை இல்லேன்னு சொல்லுது” என மனதிற்குள் அலுத்துக் கொண்டது.

“ஆனா கொஞ்சம் கில்டியா பீல் பண்றேன்” என இழுத்தது காகம்.

மாருதிக்கு காகத்தின் அடுத்த அஜெண்டா புரிந்தது. ஆனாலும் பேசாமல் இருந்தது. தன்னிடம் கேட்டால் பதில் சொல்லலாம் என நினைத்தது.

“சொல்லு கேக்குறோம்” என்றார் இறைவன்.

“இல்ல, கணேசன் அண்ணனுக்கு நல்ல சாப்பாடு போடுறீங்க. நம்ம கோசாலைல இருக்குற யசோதாவுக்கும் ஒரு குறைவும் இல்ல. நானும் மாருதியும் அலைஞ்சு திரிஞ்சு கோவிலுக்குள்ள வயித்த நெறைச்சுக்கறோம். ஆனா இந்த மீனுங்களுக்கு தான் ஒரு வழியுமில்லை. இயற்கையாவே அதுங்களுக்கு கெடைக்குற புழு பூச்சி பாசிய தின்னு வாழுதுங்க. எல்லாருக்கும் படியளக்குற நீங்க அதுங்களுக்கு ஒரு வழி பண்ணலாமுல்ல? ஏதோ சில பக்தர்கள் புண்ணியத்துல அப்பப்போ கொஞ்சம் பொரி சாப்பிட்டுதுங்க. அதையும் அந்த தங்கராஜு பய பூட்டு போட்டு தடுத்துட்டான். அதுங்க மனசு எவ்வளவு வேதனையா இருக்கும்? நாங்க எல்லாம் உங்க படைப்பு தானே. உங்க வீட்ல இருக்கவுங்க, கோவிலுக்கு வர பக்தர்கள் எல்லாருக்கும் குறைவில்லாம உணவை குடுக்குற நீங்க, ஏன் இந்த மீன் குட்டிகளை மறந்தீங்க? நா வேளாவேளைக்கு சாப்பிடும் போது இதுங்க ஞாபகம் வருது, கூடவே தங்க ராஜு மேல கோவமும் வருது” என சொல்லி முடித்தது காகம்.

மாருதியும் மச்சிமாவும் வாயடைத்துப் போனார்கள். 

இறைவனும் இறைவியும் அதே நிலையில் தான் இருந்தார்கள்.

“உங்கள் காலடியிலேயே வாழும் இவர்களுக்கு என்ன கருணை காட்டினீர்கள் இதுவரை? உணவும் இல்லை. உற்சாகமும் இல்லை. இந்த மீன்கள் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த கோவிலில் எந்த மனித நடமாட்டமும் இல்லாமல் வெறுமையாக இருக்கின்றன. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?” என பொரிந்து தள்ளியது காகம்.

மாருதிக்கு காகத்தின் மீது பெரும் மரியாதை ஏற்பட்டது. இனியும் தான் வாய் மூடி இருப்பது இழிவு என கருதியது.

“மன்னியுங்கள் மச்சிமா. இவ்வளவு நாள் இதை ஏன் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் எப்போதோ தீர்வு கண்டிருக்கலாமே?” என கேட்டார் இறைவி.

“படைத்த தாய்க்கு தெரியாதா பிள்ளைகளின் நிலை” என இருந்து விட்டோம் என அப்பாவியாய் சொன்னது மச்சிமா.

“என்னையும் மன்னித்துக் கொள்ளுங்கள் மச்சிமா. நாங்களும் எங்கள் அருகிலேயே வாழும் உங்களை கவனிக்கத் தவறிவிட்டோம்” என வருந்தினார் இறைவன்.

மச்சிமா பதறி விட்டது. இவ்வளவு தூரம் இவர்கள் பணிவாய் மன்னிப்பு கேட்பார்கள் என அது எதிர்பார்க்கவில்லை.

மாருதி காகத்தை பெருமையாய் பார்த்தது. மிகவும் நுட்பமான விஷயத்தை தைரியமாக வாதம் செய்து தீர்த்து வைத்திருக்கிறது. 

கடவுளின் காலடியிலேயே இருந்தாலும் எந்த பிரச்சினையாய் இருந்தாலும் வாய் திறந்து கேட்டால் தான் தீர்வு கிடைக்கும் என அவர்களுக்கு தெளிவாய் புரிந்தது.

Tamil novel – Jiteswari – Part 9/21

Hindu temple

அன்று கோவிலில் தெப்போற்சவம். சாயந்திரம் விளக்கு வைத்ததும் இரண்டு மணி நேரம் இறைவனும் இறைவியும் திருக்குள தெப்பலில் பவனி வந்தார்கள். பக்தர்கள் வெள்ளம் திரளாக இருந்தது.

இந்த கோவில் இறைவிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சக்தி வாய்ந்த தெய்வமாக தென்னிந்தியாவில் போற்றப்படும் தலம்.

நாள் கிழமை முதற்கொண்டு ஆராதனைகள் வரை இறைவியை மையப்படுத்தியே இருக்கும். இறைவன் தனி சன்னதியில் சமர்த்தாக இருப்பார். கோவிலில் கிடைக்கும் படங்களில் பெரும்பாலும் இறைவி மட்டும் தான் இருப்பார். ஒரு சில படங்களில் மட்டுமே தம்பதி சமேதராக இருப்பர்.

இறைவனுக்கு பக்கத்து மாவட்டத்தில் புகழ் வாய்ந்த திருத்தலம் இருக்கிறது. அங்கு அவர் தான் எல்லாம். அங்கே இறைவி தனி சன்னதியில் சமர்த்தாக இருப்பார்.

தெப்போற்சவம் அமர்க்களமாக நடந்து முடிந்தது. இறைவி கோவிலுக்குள் திரும்ப மக்கள் அனைவரும் கலைந்து சென்றார்கள்.

“இன்னைக்கு என்ன நம்ம மீன் குட்டிங்க எல்லாம் சுரத்தே இல்லாம இருக்குங்க? கவனிச்சியா?” என்றார் இறைவன்.

“ஆமாங்க, நானும் பார்த்தேன். ஜனங்க, லைட்டு எல்லாத்தயும் பாத்து துள்ளி குதிச்சி வெளையாடுவாங்க. இன்னைக்கு என்னடான்னா ரொம்ப டல்லா இருக்காங்க” என பேசிக்கொண்டே கண்ணை மூடினார் இறைவி.

“நம்ம தங்கராஜ் மேல வருத்தமா இருக்காங்க, கேட்டு பூட்டுனது அவங்களுக்கு விருப்பமில்லை” என கண்டுபிடித்து பேசிக்கொண்டார்கள்.

“சரி ராத்திரி ஒரு எட்டு போய் அவங்ககிட்ட பேசிட்டு வரலாம்” என்றார் இறைவன்.

“ஆமா, இன்னும் ஒரு பூஜை இருக்கு. அது முடியட்டும். எல்லாரும் பூட்டிட்டு போனதும் கெளம்பலாம்” என்றார் இறைவி.

சிலமணி நேரம் முன்பு ஆயிரக்கணக்கானோர் வந்து சென்ற சுவடே இல்லாமல் அமைதியாக இருந்தது கோவில்.

பொழுதோடு போய் யசோதா பசு கோசாலையில் படுத்துவிட்டது.

கோவில் யானை கணேசன் பொழுதுக்கும் நின்ற கால் வலியில் முனகிக்கொண்டு இருந்தது. அடுத்த நாள் காலையில் ராஜ வீதியில் ஊர்வலம் இருக்கிறது. எப்படியும் ஏழு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.

சாயந்திரத்திலிருந்து கால் மாற்றி கால் மாற்றி நின்று சோர்ந்து போயிருந்தது. சற்று நேரத்தில் ஒரு போன் வர பாகன் பேச ஆரம்பித்து விட்டார். கணேசனுக்கு சாப்பாடே வேண்டாம் என தோன்றியது. பேசாமல் போய் புல்லின் மீது படுத்துக் கொண்டது. சற்று நேரம் கழித்து வந்த பாகன் கணேசனை தடவி சமாதானப்படுத்தினார்.

பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு முடித்தது கணேசன். பாகன் தூங்க போக அங்கே வந்த மாருதியிடம் பேச ஆரம்பித்தது.

An elephant at temple

“நாளைக்கு நாளைல ஊர்வலம் போறோம். ரோட்டோரம் ரோஸ்மில்க் குடிச்சிக்கிட்டு எங்கள வச்சி செல்பியா எடுத்து ஸ்டேட்டஸ் போடுவாங்க. எவன் இப்பலாம் பக்தியோட வரான்? ஸ்டேட்டஸ் போட நாலு போட்டா எடுக்க தான் வரானுங்க. இதுக்கு லோக்கல் ஹாலிடே வேற” என புலம்பியது கணேசன்.

“திருக்கோவில்ல இருக்குறக்குற கொளத்துக்குள்ள இருக்குறவங்களுக்கே இவ்ளோ மனக்குறை இருக்கு. இந்த அம்மா என்னடானா என் மேல ஏறி ஒக்காந்துக்கிட்டு ராஜ வீதி சுத்தி வந்து அருள கொட்டப்போகுது. அவங்க காலடியிலேயே கெடக்குற ஜீவன்களுக்கு வேற என்ன போக்கிடம் இருக்கு?” என மாய்ந்து போய் பேசிக்கொண்டிருந்தது கணேசன்.

“திரும்புற பக்கமெல்லாம் வித விதமான பிரச்சினையோட ஜனங்க மொச்சா கடவுளுங்க மட்டும் என்ன பண்ணுவாங்க? அந்த காலத்துல என்ன இவ்ளோ வெரைட்டி பிரச்சினைகளா இருந்துது? சாமி மழையை குடு, வெளச்சலை குடு, ஆடு மாடு கண்ணுகுட்டிய நோய் நொடி இல்லாம பாத்துக்க, குடும்பத்தை காப்பாத்துன்னு விரல் விட்டு சொல்லிடலாம். இன்னும் மிஞ்சி போனா குழந்தய குடு, நோயை தீரு, செல்வத்தை குடுன்னு கேப்பாங்க.

இப்போ என்னடான்னா ஆன்சைட் வேணும். அதுவும் நல்ல வெதர்ல ஷாட் டெர்மா வேணும். கூட நல்ல பிகரா ஏதாவது வரணும். மொக்க க்ளையண்டா இருக்கணும். சவுத் இந்தியன் சோறு கெடைக்கணும்.

லாங் டெர்முன்னா சாமி வீடு புக் பண்ணி குடுக்கணும். நல்ல காரு, அதுவும் அதுவாவே ஓடுற மாதிரி வாங்கி தரணும். அவங்க ஆன்சைட் போன நேரத்துல அவங்க அப்பா அம்மாவுக்கு நோய் நொடியில்லாம பாத்துக்கணும். கூட போற ஸ்பவுசும்கும் மவுஸான வேலை வாங்கி தரணும். இந்த காலத்து மனுஷங்களுக்கு கடவுளா இருக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” என வக்காலத்து வாங்கியது மாருதி.

“நீயும் உன் கடவுளோட அசைன்மென்டுக்கு ஆன்சைட் போனவர்தானே? அவரை எப்படி விட்டு குடுப்ப” என கேலி செய்தது கணேசன்.

“ஆமா ஆன்சைட் போய் இவங்கள மாதிரி பன்னா பண்ணேன். என் வாலுல தீய வெச்சு புண்ணானது தான் மிச்சம்” என இடித்தது மாருதி.

“அரே பாபா, அந்த டீம்லயே நீதான் டாப் பர்பாமரு. உன் மேல இருக்குற ப்ரேமத்துல தான், சாமி எல்லா பேமிலி போட்டோ பிரேம்லயும் உன்னை வெச்சிருக்காரு” என கிண்டலடித்து கணேசன்.

மாருதியோடு பேசியதில் கொஞ்சம் ரிலாக்சானது கணேசன். “சரி நான் போய் படுக்கிறேன். நாளைக்கு காலைலயே எழுந்து ரெடியாகணும்? என

சொல்லி மாருதியை வழியனுப்பியது.

Tamil novel – Jiteswari – Part 8/21

A senior couple a temple

அடுத்த நாள் காலையிலேயே புஷ்கரும் கல்யாணியும் கோவிலுக்கு போக ரெடியாகிவிட்டார்கள். நேசப்பாவும் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டுக்கொண்டு கிளம்பினார்.

“ரொம்ப நாளாச்சு கோவிலுக்கு போய். நானும் வரேங்க” என்றார் சங்குபுஷ்பம்.

“பசங்களா, மழை கொட்ட போகுது, கொடை எடுத்துக்குங்க, உங்க பாட்டியும் கோவிலுக்கு வராளாம்” என கிண்டலடித்தார் நேசப்பா.

ஜித்தும் லக்ஷ்மியும் வாக்கிங் முடித்துவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள்.

ஜித்துக்கு காமாட்சியின் போன் வந்தது.

“நல்லாருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா?” என விசாரித்தாள்.

இரண்டு நிமிடம் பேசி முடித்தவுடன் நேசப்பா கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு போய் பால்கனியில் நின்றாள்.

எதிர் பிளாட்டு பால்கனியில் வெளிர் நீல புடவை  காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் சடாரென கற்பகத்தின் நினைவு வந்தது ஜித்துவுக்கு. லேசாக கண்ணீர் துளிர்க்க அந்த நினைவில் ஆழ்வது தன்னை மேலும் பலகீனப்படுத்தும் என திரும்பி ஹாலுக்குள் வந்தாள்.

சங்கு புஷ்பம் குளித்துவிட்டு வர “எங்கம்மா கெளம்புற காலங்காத்தால?” என கேட்டாள் லக்ஷ்மி.

“கோவிலுக்குடி. பசங்கள கூட்டிட்டு போறோம்” என்றார் சங்கு புஷ்பம்.

“ஜித்து நீயும் வரியா? எல்லாரும் சேந்து போகலாம்” என அழைத்தாள் லக்ஷ்மி.

போனை எடுத்து கேலண்டரை பார்த்தாள் ஜித்து. மதியம் ஒரு மணிக்கு தான் ஒரு மீட்டிங் இருந்தது.

“சரி போலாம். பத்து நிமிஷத்துல ரெடியாயிடறேன்” என்றபடி குளிக்க போனாள் ஜித்து.  பிளான் மாறிய பிறகு சங்கு புஷ்பம் கிச்சனுக்குள் நுழைந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரத்தில் எல்லாரும் ரெடியாக டாக்ஸி பிடித்து கோவிலுக்கு

போய் இறங்கி உள்ளே நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் வயதானவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

நேசப்பா சில்லறை எடுத்து குழந்தைகளிடம் கொடுத்து அவர்களுக்கு கொடுக்க சொன்னார்.

ஜித்துவும் லக்ஷ்மியும் பர்ஸை துழாவினார்கள். சில்லறை காசோ, கரன்சியோ எதுவும் இல்லை. துடைத்து வைத்தார் போல இருந்தது பர்ஸ்.

“அம்மா சில்லறை இருந்தா குடு” என்றாள் லக்ஷ்மி.

“ஏண்டி உங்க டிஜிட்டல் இந்தியால தர்மத்துக்கு ஆப்ஷன் இல்லியா?” என நக்கலாய் கேட்டார் சங்கு புஷ்பம்.

“பத்து ரூபாய்க்கு சில்லறை காசு தர இவ்ளோ பேச்சு பேசுற” என்றபடியே சிரித்தாள் லக்ஷ்மி.

போனை லாக்கரில் வைத்து விட்டு வந்ததால் அர்ச்சனை டிக்கெட் மற்றும் நெய் விளக்கு வாங்க, ஐயருக்கு தட்டில் போட, உண்டியலில் போட என

இருவரும் காசுக்காக பவ்யமாக நின்றார்கள்.

சங்கு புஷ்பம் கெத்தாக கரன்சியை எடுத்து எண்ணி, பிறகு சில்லறை காசு எண்ணி கொடுப்பது என ஒரே சீனாக இருந்தது.

“மா, நேத்து மார்க்கெட் போய் கடைசி காசு வரை செலவு பண்ணிட்டோம். நீ ரொம்ப சீன் போடாதே” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.

“கொஞ்சமான ஆட்டமா போடுறீங்க போன வச்சிக்கிட்டு. கண்ணு மண்ணு தெரியாம ஊதாரித்தனமா செலவு பண்றீங்க. இப்போ என் டைம்” என காட்டமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

பேசியபடியே வெளி பிரகாரம் சுற்றி குளத்தருகே வந்தார்கள். நேசப்பா ஆபீஸ் ரூமுக்கு போய் கேட் திறப்பது பற்றி விசாரித்தார். ஆபீஸர் வாட்ச்மேனிடம் சாவி கொடுத்து அனுப்பினார்.

குளத்து கேட் திறந்ததும் குழந்தைகள் குக்ஷியானார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தார்கள்.

“கொஞ்சம் மேல வாங்க எல்லாரும்” என அழைத்தார் சங்குபுஷ்பம்.

நாலு படி இறங்கிய ஜித்து “என்னமா?” என்றாள்.

சங்குபுஷ்பம் பக்கவாட்டில் இருந்த மண்டபத்தில் ஏறி தூணில் சாய்ந்து உட்கார்ந்து காலை நீட்டிக்கொண்டார்.

“சுக்கு காபி பிளாஸ்க்ல கொண்டாந்துருக்கேன். குடிச்சுட்டு அப்புறம் போய் படிக்கட்டுல உக்காரலாம்” என பையை பிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

“நெனச்சேன் நீ பைய தூக்கிட்டு கிளம்பும் போதே. என்னென்ன சரக்க உள்ள வெச்சிருக்கியோன்னு. கோவிலுக்கு வந்தா ஜங்க்க்ஷன்ல இருக்குற காபி ஹவுஸ்ல போய் சுக்கு காபி குடிக்கணும்னு ஜித்துக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீ என்னடான்னா வீட்லருந்தே போட்டு எடுத்துட்டு வந்துட்ட” என சிணுங்கினாள் லக்ஷ்மி.

“அம்மா கூட அப்டி தான். பிரிக்க முடியாதது நர்ஸும் பிளாஸ்க்கும் போல” என சொல்லி சிரித்தாள் ஜித்து.

“ஆமா, எங்க காலத்துல இருந்த ஹைடெக் சாமான்ல பிளாஸ்க்கும் ஒண்ணு. வார்டுல பிளாஸ்க் வெச்சிருக்கிற பேஷண்ட் கொஞ்சம் கெத்தாதான் இருப்பாங்க. வயசான இல்லாதவங்களுக்கு சொந்தமா பிளாஸ்க் இருக்கிறதே ஒரு பெரிய கனவு தான். பெரும்பாலானவங்களுக்கு வீட்லேர்ந்து யாரும் வர மாட்டாங்க. கவெர்மென்ட்டு மூணு வேளை சாப்பாடு குடுக்கும். கூட சூடா காபியோ பாலோ குடிச்சே, ஆஸ்பிடல்லேர்ந்து டிஸ்சார்ஜ் ஆகுற வரை ஓட்டிடுவாங்க” என விவரித்தார் சங்கு புஷ்பம்.

புஷ்கரும் கல்யாணியும் அந்த பிளாஸ்கை மரியாதையாக பார்த்தார்கள்.

“பேசாம காபி ஹவுசே போயிருக்கலாம்” என மீண்டும் ஆரம்பித்தாள் லக்ஷ்மி.

“உனக்கென்ன சரக் சரக்குன்னு கார்டு தேய்ப்ப. இல்ல போன எடுத்து காச சுட்டு தள்ளுவ. சுக்கி காபியோடு முடிக்கிற ஆளா நீ? எங்களுக்காவது பென்சன் வருது. உங்களுக்கு அதுவும் கிடையாது. நாப்பத்தஞ்சு வயசாச்சுன்னா பொம்பளைங்களுக்கு எப்படா ரிட்டயர்டு ஆவோம்னு இருக்கும். சுகர் எட்டிப்பாக்கும்.மெனோ பாஸ் வதைக்கும். ஒடம்புல தெம்பு இருந்து வேலைக்குப் போகும்போதே செலவை கண்ட்ரோல்ல வைங்க. இப்போ சேமிக்கலேன்னா பின்னாடி இதே ஜோர்ல செலவு பண்ணமுடியாது” என நிதர்சனத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.

“நல்லதா ஒரு காபி குடிக்கலாம்னு சொன்னா எனக்கு நரை வந்து கூன் விழுறவரை பயம் காட்டுறியேம்மா? டென்ஷனை கன்ட்ரோல்ல வை, புருஷனை கன்ட்ரோல்ல வை, வெய்ட்ட கன்ட்ரோல்ல வைனு எவ்ளோ ப்ரெஷரும்மா” என அலுத்துக்கொண்டாள்  லக்ஷ்மி. 

நேசப்பா குழந்தைகளுக்காக சர்க்கரைப் பொங்கல் வாங்கி வந்தார். சற்று நேரத்தில் அவர் பின்னாடியே கையில் தூக்கு வாளியுடன் ஒருவர் வந்தார்.

“மேடம் நல்லாருக்கீங்களா?” என்றார்.

“நல்லாருக்கேன் பரணி. தங்கமயிலும் பசங்களும் சௌக்கியமா?” என விசாரித்தார் சங்கு புஷ்பம்.

பரணி கோவில் பணியாளர். தங்கமயில் சில ஆண்டு காலம் அவர்கள் சொசைட்டி ஆபீசில் வேலை பார்த்தாள். மயிலின் இரண்டு டெலிவரியும் சங்கு புஷ்பம் வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் நடந்தது.

“நல்லா இருக்காங்க மேடம். சார தூரத்துல இருந்து பார்த்தேன். அதான் பிரசாதம் தரலாம்னு வந்தேன்” என தொன்னையில் புளியோதரை வைத்து கொடுத்துவிட்டு கிளம்பினார். நிதானமாக சாப்பிட்டு சுக்கு காபியும் குடித்து முடித்தார்கள்.

“மா, காபி அவுஸ் டேஸ்ட் அப்டியே இருக்கு” என புகழ்ந்தாள் லக்ஷ்மி.

“நீங்க வரீங்கன்னு சொன்னதும் அம்மா அந்த காபி அவுஸ்லேர்ந்து மிக்ஸ் வாங்கிட்டு வர சொல்லிட்டா” என சொன்னார் நேசப்பா.

“செம பிளான்மா” என சிரித்தாள் லக்ஷ்மி.

“இந்த கப்பு காப்பிய அம்பது ரூபா சொல்வான். இப்போ பாரு சிம்பிளா முடிஞ்சிது. நீ காபி குடிக்கலாம்னு உள்ள நொழஞ்சி ரெண்டாயிரத்துக்கு கார்டு தேய்ப்ப” என சொன்னார் சங்கு புஷ்பம்

லக்ஷ்மி வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்க ஜித்து தலையசைத்தும், புன்னகைத்தும் கேட்டு கொண்டிருந்தாள். நேசப்பாவுக்கு ஜித்து சாதாரணமாக இல்லை என புரிந்தது. யோசனையும் கவலையும் தீவிரமாக குளத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

லஷ்மி காபி டம்ளர்களை வெளியே கொண்டுபோய் கழுவி எடுத்து வந்தாள்.

சங்கு புஷ்பம் அதையெல்லாம் பையில் வைத்துவிட்டு இரண்டு பொரி டப்பாக்களை வெளியே எடுத்தார். புஷ்கருக்கும் கல்யாணிக்கும் ஆளுக்கொன்று கொடுத்தார்.

டப்பாவை கையில் வாங்கிய புஷ்கர் சற்று நேரம் யோசித்தான்.

“தாத்தா நானும் பாட்டியும் அந்த கார் னர் போறோம். நீங்க பாப்பா கூட இங்கயே இருங்க” என்றான்.

“சரிப்பா” என்றார் நேசப்பா.

“மா, நாங்க ஹெவியா சாப்டுட்டோம். கொளத்தை ரெண்டு ரவுண்டு சுத்திட்டு வரோம்” என ஜித்துவோடு கிளம்பினாள் லக்ஷ்மி.

ஜித்துவின் அமைதி லக்ஷ்மிக்கும் கவலையை தந்தது. எதுவானாலும் அவளே சொல்லட்டும் என பொறுத்திருந்தாள். ஆனால் கோவிலுக்கு வந்த பிறகு நாமே ஆரம்பிப்போம் என்ன விஷயம் என கேட்போம் என முடிவெடுத்தாள்.  சற்று நேரம் நடந்த பிறகு மறு கரையில் உட்கார்ந்தார்கள்.

Friends at temple

“மைண்டுல என்னடி போட்டு உருட்டிக்கிட்டு இருக்க? நானும் வந்ததுலேர்ந்து பாக்குறேன். யோசனயாவே இருக்க” என உரிமையாக கேட்டாள் லக்ஷ்மி.

“மும்பை ஆபீஸ் போய் ஜாயின் பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்” என்றாள் ஜித்து.

“அவர் வரேன்னு சொல்லிட்டாரா? என குதூகலமானாள் லக்ஷ்மி.

“இல்ல” என்றாள் ஜித்து.

“அப்போ பசங்கள கூட்டிட்டு நீ மட்டும் போறியா? என நிதானமாக கேட்டாள் லக்ஷ்மி.

“இல்ல, இன்னும் முடிவு பண்ணல” என்றாள் ஜித்து குளத்தை பார்த்தபடியே.

நிஜமாகவே யாரோ தன்னை குளத்துக்குள் உருட்டுவது போல பகீரென ஆனது லக்ஷ்மிக்கு. அவள் காயம் மட்டும் ஆழமானது என புரிந்தது. கைக்குள்ளேயே வைத்து வளர்த்த குழந்தைகளை தீர்க்கமாய் அழைத்து செல்வேன் என சொல்லாமல் விட்டேத்தியாய் இருக்கிறாள்.

“எனக்கு திரும்ப பாண்டி போக விருப்பமில்லை. ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டேன். சங்குமாகிட்டயும் பேசிட்டேன். பத்து நாள் எதை பத்தியும் நினைக்காம வெய்ட் பண்ண சொன்னாங்க. எதுவாயிருந்தாலும் அடுத்த வாரம் பேசிக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்றாள்.

“நா மும்பை ஆபீஸ்ல பேசிட்டேன். நாலு மாசம் கழிச்சு ஜாயின் பண்ணுவேன்னு நெனைக்கிறேன். அண்ணன் அடுத்த வீக்கெண்ட் வரேன்னு சொல்லியிருக்கன். சங்குமாதான் அவன்கிட்ட பேசுனாங்க. அவன் இன்னும் என்கிட்டே பேசல. மெசேஜ் மட்டும் போட்டிருக்கான்” என இடியை இறக்கினாள் ஜித்து.

முடிவை வெளிப்படையாக சொன்னவள் இப்போது வரை அதன் காரணத்தை சொல்ல கூச்சப்படுகிறாள்.

கண்டிப்பாக ராஜுவோடு ஏதோ வருத்தம். இந்த எல்லைக்கு போயிருக்கறாள்.

நெதர்லாந்து போகும் முன் நல்லபடியாக இருந்த குடும்பம் இப்போது இந்த நிலையில் நிற்கிறது.

லக்ஷ்மி வேறு பக்கம் முகத்தை திருப்பி கண்ணை மூடிக் கொண்டாள்.

ஜித்துவை நேராய் பார்க்கும் துணிவு அவளுக்கு இல்லை. 

இந்த வயதில் இந்த பொண்ணுக்கு ஏன் இந்த நிலை கடவுளே என வருந்தினாள்.    

தன் அம்மாவை நினைத்தாள் லக்ஷ்மி. இவளை கண்டிப்பாக அவர்களால் மட்டுமே தேற்ற முடியும். இவள் இந்த மனநிலையில் எடுத்த ஒரு நல்ல முடிவு இங்கு வந்தது தான்.

ஆனால் சங்கு புஷ்பம் எந்த சலனமும் இல்லாமல் இவளிடம் பேசுவது லக்ஷ்மிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் அனுபவம் அப்படி என நினைத்துக் கொண்டாள்.        

Tamil novel – Jiteswari – Part 7/21

a talk between a crow and monkey

குளத்தின் நடுவே கல் மண்டபம் இருக்கிறது. அதன் அருகே நீரில் சில மீன்கள் கம்பி ஜன்னலருகே நெடு நேரமாக குழந்தைகள் நிற்பதை கவனித்தபடி நீந்தி கொண்டிருந்தன.

பூட்டிய கேட்டை பார்த்தபடியே குழந்தைகள் ஏமாற்றமாக நின்றது குட்டி மீனுக்கு வருத்தமாக இருந்தது.

“அம்மா, ஏன்மா இப்போ கேட் பூட்டி வெக்குறாங்க? அங்க பாரு குட்டி பசங்க சேடா இருக்காங்க” என கேட்டது குட்டி மீன்.

“எல்லாம் அந்த தங்கராஜு வேலை. வர்றவங்க குப்பை போடுறாங்க, லவ்வர்ஸ் வராங்கனு ஏதேதோ காரணம் சொல்லி பூட்டி வெச்சிருக்கான். பாவம் பசங்க, விளையாட முடியாம திரும்ப போறாங்க” என்றது அம்மா மீன்.

மண்டபத்தின் மேலே அமர்ந்திருந்த காகம் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தது. சின்னதாய் பறந்து வந்து தரையில் அமர்ந்தது.

“இப்ப கேட் தொறந்தா நீ என்ன வெளில கெளம்பி போக போறியா?” என நக்கலாக குட்டி மீனிடம் கேட்டது.

வயத்தில் மூத்த காகம் என அம்மா மீன் காதில் சொல்லி குட்டி மீனை அமைதிப்படுத்தியது.

பக்கத்து மரக் கிளையில் அமர்ந்திருந்த குரங்கு இந்த மீட்டிங்கில் வந்து சேர்ந்து கொண்டது. சற்று நேரத்தில் அதற்கு அங்கே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என புரிந்தது.

பதில் வராத காரணத்தால் மீண்டும் காகம் சீண்ட தொடங்கியது.

“உங்களுக்கு என்ன வெயில் மழை கஷ்டமா? சொகுசா தண்ணில இருப்பீங்க. இங்கயே பாசி பூச்சிய தின்னு காலத்த ஓட்டிடுவீங்க. என்ன மாதிரி கோபுரம் மேல வெயில்ல காஞ்சி மழைக்கு நனஞ்சா இருக்கீங்க? தண்ணி வத்துற மாதிரி இருந்தா தங்கராஜு டேங்கர்காரன தண்ணி புல் பண்ண சொல்லிடுவான். நா நாலு தெரு பறந்து போய் எங்க வெந்த சோறு கிடைக்கும்னு அல்லாடிக்கிட்டிருக்கேன்” என நீட்டி முழக்கி பேசியது.

தூணில் சாய்ந்து உட்கார்ந்தபடி காகம் சொல்வதை கேட்டு கொண்டிருந்தது குரங்கு.

குட்டி மீனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. சொல்ல முடியாத சோகம் அதன் கண்ணில் கண்ணீராய் வழிந்தது. அம்மா மீனுக்கு தாளவில்லை.

“நீ தெக்கு கோபுரத்துல நல்ல கூடுல தானே இருக்க? என்னவோ வெந்த சோறு மட்டும்தான் சாப்புடுறேன்னு கதவுடுற. நல்லா வடை, சக்கரபொங்கல்னு வகை வகையா சாப்புடுற. எங்கள வந்து குறை சொல்லுற” என காகத்தை தாளித்தது அம்மா மீன்.

“இது காலைல மெனு. மத்தியானம் பஜார் பக்கம் போய் தள்ளு வண்டி கடை பக்கத்துல தான் ஐய்யாக்கு டியூட்டி. சிக்கன் ரைஸ், பிரைட் பிஷ்னு ஒரு ஒரு புடி புடிப்பார்” என்றது குரங்கு.

“அப்புறம் ஐயா இப்போ தெக்கு கோபுரத்துல இல்ல. வடக்கு கோபுரத்துக்குப் போயிட்டார்” என எக்ஸ்ட்ரா டீடைலை சொன்னது மாருதி.

காகம் தொக்காக மாட்டிக்கொண்டது. என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.

“ஆமா, நா மட்டும் தான் சக்கர பொங்கல் சாப்பிடுறேனா? எனக்கே நாலு தொன்னை தள்ளி அஞ்சாவது தொன்னைல தான் கொஞ்சூண்டு கெடைக்குது. நம்ம கணேசன் அண்ணனை பாருங்க, வெல்லம், சோறு, புல்லுனு ராயலா இருக்காரு” என கோவில் யானையை கோர்த்து விட்டது.

தன் மீது ஒரு குறை சொன்னால் அடுத்தவரோடு கோர்த்துவிடும் மனித புத்தி காகத்துக்கும் தொற்றிக் கொண்டது.

“இப்போ என்ன, அந்த பையன் பொரி போட்டு விளையாடி இருப்பான். நீங்களும் வயறு முட்ட தின்னுட்டு ஆட்டம் போட்டு இருப்பீங்க. கேட்டு பூட்டி இருக்கவே உங்களுக்கு காண்டா இருக்கு. அதுக்கு ஏன் என்ன கழுவி ஊத்துறீங்க?” என பிளேட்டை திருப்பி போட்டது காகம்.  

பாதிக்கப்பட்டவைர்களையே பழி போட்டு ஏளனப்படுத்தும் ஈனபுத்தியையும் தவறாமல் கற்றுக் கொண்டு இருக்கிறது என நினைத்தது குரங்கு.

காகத்தின் வார்த்தைகள் மீன்களின் தன்மானத்தை சீண்டியது.

“கொஞ்சம் நிறுத்தறியா” என்றபடி மீட்டிங்கில் சேர்ந்து கொண்டது பாட்டி மீன்.

“நீ ஏன் வடக்கு கோபுரத்துல போய் கூடு கட்டுன?” என காகத்திடம் கேட்டது.

இந்த கேள்வியை காகம் எதிர்பார்க்கவில்லை.

“அங்க ஒரே சத்தமா இருக்கு. அந்த பக்கம் ப்ளைஓவர் கட்டுறாங்க. டஸ்டும், லொட்டு லொட்டுனு சவுண்டும் நாராசமா இருக்கு. இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமாம் முடிக்க. அது வரை யார் அந்த எடத்துல இருக்குறது. அதான் வடக்கு கோபுரத்துக்கு போயிட்டேன்” என்றது காகம்.

“அது மட்டும் தான் காரணமா?” என கூர்மையாக கேட்டது பாட்டி மீன்.

குரங்குக்கு பாட்டி மீன் கேட்ட கேள்வியின் சூட்சுமம் புரிந்தது. அமைதியாக காகத்தின் பதிலுக்கு காத்திருந்து.

காகம் சில நொடிகள் மெளனமாக இருந்தது.

“இல்ல, தெக்கு கோபுரம் பக்கத்துல மொபைல் டவர் இருக்கு. இஎம்எப் ரேடியேஷன் அதிகமா இருக்கு. என் ஒய்ப்புக்கு கருமுட்டை பிரச்சினை வந்துடிச்சி. இந்த சாமிய வேண்டாத நாளில்லை ஒரு வாரிசை குடுக்க சொல்லி. எங்க அப்பா அம்மாக்கும் திசையறிஞ்சு பறக்குறதுல குறைபாடு வந்துடிச்சி. பக்கத்துல எங்க அக்கா ஊருக்கு போய் பார்த்துட்டு வரதுக்கு அவ்ளோ தடுமாறுறாங்க. ரேடியேஷனால அவங்க பறக்குற திறனும் பாதிக்கப்பட்டிருக்கு. ஒரு நாள் தள்ளு வண்டி பக்கத்துல உக்காந்து சாப்பிடும் போது எப் எம் ரேடியோல மொபைல் டவர் ரேடியேஷன் பத்தி சொன்னாங்க. அப்போ தான் எனக்கும் எங்க பிரச்சினைக்கு காரணம் புரிஞ்சுது. எங்க அம்மா கூட வாஸ்து சரி இல்ல, கூட்ட கொஞ்சம் மாத்தி கட்டுனு பொலம்பிகிட்டு இருந்தாங்க” என ஆதங்கத்தை கொட்டியது காகம்.

“அப்ப வாஸ்து பிரச்சினை இல்ல, டவர்ல இருந்து வர்ற வஸ்து தான் பிரச்சினை” என டிக்ளேர் செய்தது குரங்கு.

“ஆமா, வடக்கு கோபுரம் போனப்புறம் கொஞ்சம் எக்ஸ்போஷர் கம்மியா இருக்கு” என சொன்னது காகம்.

“இஎம்எப் ரேடியேஷன்னா என்ன?” என கேட்டது குட்டி மீன்.

“எலக்ட்ரோ மேக்னடிக் பீல்டு ரேடியேஷன்” என சொன்னது காகம்.

“அது தியரி. பாதிக்கப்பட்டவங்களுக்கு இஎம்எப் ரேடியேஷன்னா, “என்னா மயிருக்கு பிரீ ரேடியேஷன்னு” அர்த்தம். கார்போரேட்டுங்க லாபம் சம்பாதிக்க கால், மெசேஜ், இன்டர்நெட்டுனு பிரீயா குடுத்து மனுஷங்களையும்,பறவைங்களையும் கொல்லுறானுங்க. இந்த பைத்தியங்க பிரீ கால்னு பொழுதுக்கும் பேசி எல்லாரையும் ரேடியேஷனுக்கு எக்ஸ்போஸ் பண்ணுறாங்க” என கோபமாய் சொன்னது குரங்கு.

“எதுக்கு வடக்கு கோபுரம், பேசாம எங்கயாவது ஊர் பக்கம் போக வேண்டியது தான? அதான் அங்க இருந்து நெறய ஆளுங்க இங்க வந்துட்டாங்களே, அங்க டவர் நெறய இருக்காது, நீங்க அங்க போய் சேபா இருக்க வேண்டியது தானே?” என விடாமல் கேட்டது பாட்டி மீன்.  

காகத்துக்கு தான் வாலண்டரியாய் வந்து வண்டியில் ஏறியது புரிந்தது.

“நீங்க என்னை ஊர விட்டே போகவா சொல்றீங்க?” என கான்டெக்ஸ்ட் புரிந்தும் வீம்பாய் கேட்டது.

“உசுருக்கே உத்தரவாதம் இல்ல, இதுல இந்த ஊர் தான் முக்கியமா?” என ஒரு போடு போட்டது பாட்டி மீன்.

கோபுரத்தில் கூடு கட்டுவது சாதாரண காரியமில்லை. பருந்து, வௌவால் என பெரிய கைககள் இருக்கும். இடம் கிடைப்பதே அரிது. காகத்துக்கு இங்கிருந்து போக மனமில்லை. உணவுக்கு பெரிதாய் அலட்டிக் கொள்ள வேண்டாம். பிரசாத பிளேட்டுகள், பொங்கல் வைப்பவர்கள் தருவது, அன்னதான கூடம் என முழு குடும்பமும் நோகாமல் வேலையை முடித்து விடும்.

ஊருக்கு போய் சேர்த்தால் ஏதாவது பழம் கொட்டை என தின்று தான் வாழ வேண்டும். பழைய கஞ்சியை கூட வீணாக்காமல் குடித்து சுத்தமாக புழக்கடையில் பாத்திரங்கள் இருக்கும். சோற்று பருக்கையை நல்ல நாளில் தான் பார்க்க முடியும். 

 “சாவு எல்லாருக்கும் ஒரு நாள் வரத்தான் போகுது. ஏதோ நல்லதா நாலு வாய் தின்னுட்டு சாகணும். ஊர்ல போய் என்னத்த சாப்புட? அமாவாசைக்கு மட்டும் தான் சோறு போடுவாங்க. மத்த நாள் பூவாவுக்கு என்ன பண்றது”? என ஓபனாய் விஷயத்தை சொல்லியது. 

 “ஏன் கேட்டேன்னா, சோறு ஒரு மேட்டர் இல்ல. உனக்கு ஒரு ரிஸ்குன்னா உன் உசுரை காப்பாத்திக்க நீ இடம் மாறுற. தெக்கு கோபுரத்திலேர்ந்து டவர விட தூரமா இருக்குற வடக்கு கோபுரத்துக்கு போயிட்ட. ஆனா எங்க நெலமைய யோசிச்சு பாரு. கொளத்துல ஒரு பிரச்சினைன்னா நாங்க எங்க போறது. இங்கயே இருந்து சாக வேண்டியதுதான். ஆத்துலயோ கடல்லியோ இருந்தோ எங்கயாவது வேற இடத்துக்கு நீந்தி போய் பொழச்சிக்குவோம்” என நிதானமாய் சொன்னது பாட்டி மீன்.

“நீ எப் எம் கேட்டு விவரமா வீடு மாறிட்ட. எங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கு? ஏதோ கோவிலுக்கு வர்றவங்க வந்து படித்தொரையில உக்காந்து கத பேசினா ஏதாவது விஷயம் தெரியும். இப்ப பாரு, பொழுதும் போகாம, நாட்டு நடப்பு எதுவும் தெரியாம மக்கு மாதிரி இருக்கோம்” என தொடர்ந்தது.

குளத்தின் நிலையை அறிந்த குரங்கு சுற்றி ஒரு பார்வையை ஓட விட்டது. பெருசு சொல்வது உண்மைதான் என்பது போல தலையாட்டியது.

“நீ நாலு இடத்துக்கு பறக்கிற. பொழுதுக்கும் எங்கயாவது ஏறி உக்காந்துகிட்டு பராக்கு பாக்குற. போதாக்கொறைக்கு இந்த ஜனங்க வேற கா கானு கூப்புட்டு உனக்கு சோறு போடுறாங்க. உனக்கு எங்க கஷ்டம் எப்படி புரியும்?” என பொரிந்து தள்ளியது அம்மா மீன்.

மாமியாரும் மருமகளும் செட்டு சேந்துட்டாங்க. இந்த இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என எண்ணியது காகம். 

“லன்ச் டைம் ஆச்சு. இன்னைக்கு ஒரு தெவச வீட்டுக்கு போகணும். சாயங்காலம் வர்றேன்” என சொல்லி இடத்தை காலி செய்தது காகம்.

பிறகு குரங்கும் தண்ணீரில் குதித்து நீந்தியபடியே படித்துறை பக்கம் போனது.

‘என்னடி அந்த ஆம்பள காக்கா, கொரங்கு கூட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்க?” என்றபடி முறைத்தது கிழட்டு மீன்.

“உனக்கு நல்ல சாவு வரும்னு மட்டும் நினைக்காதே. ஏலம் எடுத்தவன் அடுத்த வாரம் வருவான். நீதான் மொதல்ல மாட்ட போற. உப்புகாரம் தடவி சூடா பொறிச்சி மொடாக்குடிகாரனுக்கு சைட் டிஷ்ஷா போக போற.

செத்தப்புறமும் ஆல்கஹால்ல மெதந்து ஜீரணம் ஆகாம வாந்தியா நாறி போக போற. பொம்பளைங்கள தப்பா பேசுனவனுங்க நல்ல கதி காண மாட்டானுங்க” என திட்டி தீர்த்தது பாட்டி மீன்.

சற்று நேரம் கழித்து கையில் ஒரு பொரி பாக்கெட்டோடு வந்த குரங்கு சரக்கென்று பிரித்து நீரில் கொட்டியது.

Monkey sitting in temple

“குட்டிமா, வா வா வந்து சாப்புடு” என அழைத்தது.

குட்டி மீன் அமைதியாக இருந்தது. “போய் சாப்பிடு” என்றது பாட்டி மீன்.

பிறகு குரங்கிடம் “இந்த பொரிக்காக தான் நாங்க ஏங்கி இருக்கோம்னு நீயும் நெனைக்குறியா மாருதி?” என மெதுவாக கேட்டது.

 குரங்கு தலையை குனிந்து கொண்டது.

“உங்க கஷ்டம் எனக்கு தெரியும் மச்சிமா. என்னால உங்களுக்கு இதை தான் பண்ண முடியும். அந்த தங்கராஜு பய பூட்டு போட்டதுல இருந்து நீங்க அப்செட்டா இருக்கீங்க. பப்ளிக் யாரையும் பாக்க முடியல. டெய்லி அந்த அய்யறு மட்டும் வந்து முங்கிட்டு போறாரு. அவரு கோவணத்தையே எத்தனை நாளு தரிசிக்குறது?” என ஆறுதல் சொன்னது மாருதி.

“என்னை விடு மாருதி. நா வயசானவ. எல்லாத்தையும் பாத்துட்டேன். இந்த குட்டிங்க எல்லாம் லாக்டவுன் சமயத்துல பொறந்துதுங்க. கோவில்ல ஜன நடமாட்டமே ரெண்டு மூணு வருஷமா கெடயாது. இப்பதான் கொஞ்ச நாளா பெரியவங்க, குழந்தைங்க, புருசன் பொண்டாட்டி ஜோடிங்க எல்லாரும் வந்து படித்தொரையில உக்காந்து பேசிட்டு போறாங்க. புள்ளைங்களும் அவங்கள பாத்து விளையாடி சந்தோஷமா இருக்குங்க. இந்த தங்கராஜு கேட்ட பூட்டுனதுல இருந்து அதுங்க ரொம்ப வருத்தமா இருக்குங்க” என வேதனையை கொட்டியது பாட்டி மீன்.

“கரெக்ட்டு தான் மச்சிமா. நாங்களாவது நாலு இடம் சுத்துறோம். ஆளுங்கள பாக்குறோம். பொழுது போயிடுது. நீங்க பாவம், என்ன பண்ணுவீங்க? அந்த காக்கா வெவரம் புரியாம பேசுது. மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க” என பாசமாய் சொன்னது மாருதி.

“அந்த பய கையில பொரி வச்சிருந்தான் உங்களுக்கு குடுக்க. கேட்டு மூடி இருக்கவே போய்ட்டான். பாவம், நம்ம குட்டிமாவும் டல்லா இருந்துதா. அதான் வெளில போய் ஒரு பாக்கெட்டை தூக்கிட்டு வந்துட்டேன்” என விளக்கியது மாருதி.

“ஏன் மாருதி தூக்கிட்டு வந்த? தப்பில்லையா?’ என கேட்டது மச்சிமா.

“ஒரு தப்பும் இல்ல மச்சிமா, சாமி பேரையும் நம்ம கோவில் பேரையும் சொல்லி இவனுங்க எவ்வளவு கொள்ளையடிக்குறானுங்க. பாடாவதிப் பசங்க” என திட்டி தீர்த்தது மாருதி.

“ஏன் மாருதி, சாமி அவங்க கண்ணை குத்தாதா?” என கேட்டது குட்டி மீன்.

“கண்ணை குத்தி என்ன பிரயோஜனம்? அப்புறம் சாமி காப்பாத்துன்னு அவருகிட்ட தான் போய் நிப்பாங்க. அதனால அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி குடுப்பாரு. அப்புறம் குறைந்த பட்ச நியாயமா வேலை செய்வாங்க” என சொன்னது மாருதி.

“எப்போ இவங்களுக்கு நல்ல புத்தி குடுப்பாரு இந்த கொளுத்து கேட்ட தொறக்க?” என ஆர்வமாய் கேட்டது குட்டி மீன்.

“அது சாமிக்கு தான் தெரியும்” என முடித்தது மாருதி.

Tamil novel – Jiteswari – Part 6/21

Children looking at locked temple tank

ஜித்து நெதர்லாந்தில் இருந்து திரும்ப வந்து சென்னையில் சங்கு புஷ்பம் வீட்டில் போய் தங்கினாள். லக்ஷ்மியும் குழந்தைகளும் வர வீடு கலகலப்பாக இருந்தது.

அன்று மாலை ஜித்துவும் லக்ஷ்மியும் மார்க்கெட்டுக்கு போக, நேசப்பா புஷ்கரையும் கல்யாணியையும் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

சாமி கும்பிட்டு வெளியே சுற்றி குளமருகே வந்தார்கள். குளம் பூட்டி இருந்தது. கம்பி வழியாக உள்ளே எட்டி பார்த்தார்கள்.

“தாத்தா, நெறய பிஷ் இருக்குல்ல” என சொன்னான் புஷ்கர்.

“ஆனா உள்ள போக முடியாதே” என வருத்தப்பட்டது கல்யாணி.

குளம் நிறைய நீர் இருந்தது. ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் மரகத பச்சை நிறமாகவும், சற்று தள்ளி இருந்து பார்த்தால் நீல பச்சையாகவும் இருந்தது.

“தாத்தா, ஏன் இந்த தண்ணி க்ரீன் கலர்ல இருக்கு? என கேட்டது கல்யாணி.

“இந்த கொளத்துல பாசி அதிகமா இருக்குமா. அதான் க்ரீன் கலர்ல இருக்கு. அதனால தண்ணியும் க்ரீனா தெரியுது” என்றார் நேசப்பா.

“ஏன் பாசி அதிகமா இருக்கு?” என அடுத்த கேள்வி வந்தது.

“இந்த தண்ணி புளோ ஆகாதுமா. நிலத்தடி தண்ணியோட மழை தண்ணியும் சேர்ந்து இங்கயே தான் இருக்கும். பக்கத்துல எவ்ளோ பெரிய மரம் இருக்கு பாரு. அதுலேர்ந்து விழுற இலையெல்லாம் தண்ணில விழும். அது இந்த பாசி அல்கெக்கு எல்லாம் நல்ல உரமா மாறிடும். அப்போ இன்னும் அதிகமா வளரும்” என விவரித்தார் நேசப்பா.

“அப்போ இது டர்ட்டி வாட்டரா? என்றான் புஷ்கர்.

“இல்லப்பா. இது நல்ல தண்ணி தான். கோவில்காரங்க இன்னும் கொஞ்சம் பராமரிப்பு செஞ்சா க்ளீனாய்டும்” என்றார் நேசப்பா.

“என்ன செஞ்சா க்ளீனாகும்? என கேட்டது கல்யாணி.

“ரெகுலரா பராமரிக்கணும்மா. பாசி ஆல்கேவெல்லாம் ரிமூவ் பண்ணனும். அந்த மரத்துக்கு கீழ கொளத்து பக்கம் கொஞ்சம் நெட்டு போடலாம். இலை குச்சியெல்லாம் தண்ணில விழாது. ரெகுலரா பிரெஷ் தண்ணிய பம்பு வச்சி கொளத்துக்கு அனுப்பனும்” என தனக்கு தெரிந்ததை சொன்னார் நேசப்பா.

“இதெல்லாம் சாமி பாக்காதா தாத்தா? இது அவர் வீடு தானே? என தெளிவாய் கேட்டது கல்யாணி.

துணுக்குற்று போனார் நேசப்பா.

“ஏண்டி, சாமி என்ன பண்ண முடியும்? கோவில் ஆளுங்க தான் மெயின்டெயின் பண்ணணும்” என பதில் சொன்னான் புஷ்கர்.

“அவங்க வேலைய ஒழுங்கா செய்யலேன்னா கண்ணை குத்தலாம்ல சாமி” என குண்டைப் போட்டது கல்யாணி.

“ஏன் தாத்தா, சாமி அவங்க கண்ணை குத்தாதா?” என தொடர்ந்தான் புஷ்கர்.

 நேசப்பா சற்று யோசித்தார்.

“கண்ணை குத்தி என்ன பிரயோஜனம்? அப்புறம் சாமி காப்பாத்துன்னு அவருகிட்ட தான் போய் நிப்பாங்க. அதனால அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி குடுப்பாரு. அப்புறம் ஒழுங்கா வேலை செய்வாங்க” என சொன்னார்.

“எப்போ இவங்களுக்கு நல்ல புத்தி குடுப்பாரு இந்த கொளுத்த க்ளீன் பண்ண?” என விடாமல் கேட்டது கல்யாணி.

“அது சாமிக்கு தான் தெரியும்” என முடித்தார் நேசப்பா.

அந்தி சாயும் வேளை. இளம் சூடான மெல்லிய கதிர்கள் நீரின் மேல் பட்டு அன்றைய நாளுக்கான இறுதியில் விடை பெற்றுக்கொண்டன.

ஏற்கெனவே பெரிதாக சலனமில்லாமல் இருக்கும் குளம், அடுத்து வரும் இரவுக்கு மெளனமாக தயாரானது. சூரிய கதிர்கள் இரக்கமே இல்லாமல் குளத்தின் மேலிருந்த அழகான பச்சை கம்பளத்தை வாரி சுருட்டிக் கொண்டு கிளம்பியது.

வண்ணத்தை இழந்த வருத்தமில்லாமல் குட்டி அணில் போட்ட சிறு கொட்டையில் தளும்பி தளும்பி சந்தோஷப்பட்டது குளம். சற்று நேரத்தில் மெதுவாக எட்டிப் பார்த்த நிலா கருமையான குளத்தின் மேல் தன் ஒளியை பாய்ச்சியது. அடர் நீலமாக மாறிய குளம் அங்காங்கே வெள்ளி பிரகாசத்தை தெளித்தது.

“தாத்தா எனக்கு பிஷ் பாக்கணும். எப்போ கேட்டு ஓப்பன் பண்ணுவாங்க?” என ஆசையாய் கேட்டான் புஷ்கர்.

“ஆமா தாத்தா. எனக்கும் உள்ள போய் பாக்கணும்னு ஆசையா இருக்கு” என சொன்னது கல்யாணி.

நேசப்பா சுற்றி பார்த்தார். போர்டு எதுவும் இல்லை.

“வாங்க, ஆபீஸ் ரூம்ல போய் கேக்கலாம்” என அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

“சார், கொளம் எப்போ சார் தொறப்பீங்க?” என கேட்டார் நேசப்பா.

பைலில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

children asking question to temple officer

“சார், காலைல ஆறு டு ஏழு தொறப்போம். அய்யர் வந்து வேலைய முடிச்சிட்டாருன்னா பூட்டிடுவோம். பப்ளிக் உள்ள போக முடியாது” என்றார் ஆபீசர்.

“அப்போ பிஷ்ஷு வெளில வருமா எங்கள பாக்க?” என மெதுவாய் கேட்டது கல்யாணி.

சடாரென்று நிமிர்ந்து உட்கார்ந்து மேலும் கீழும் பார்த்தார் ஆபீசர்.

டேபிளை விட சற்று அதிக உயரம் தான் இருந்தது கல்யாணி.

எழுதி கொண்டிருந்த பேனாவை மூடி வைத்தார். பக்கத்தில் இருந்த சேரை காட்டி அவர்களை உட்கார சொன்னார்.

“இல்லமா, கோவிலுக்கு ஜனங்க நெறய வராங்க இல்ல. அவங்க கொண்டு வர பொருளால நெறய குப்பை கொளத்துல சேருது. அப்புறம் கவனிக்குறைவா இருந்தாங்கன்னா தவறி விழுந்துடுவாங்க. அதனால தான் பூட்டி வச்சிட்டோம்” என விளக்கினார் ஆபீசர்.

“ஆனா தண்ணி ஏன் டர்டியா இருக்கு? பூட்டியே இருந்தா அது கிளீனா தான இருக்கணும்” என கேட்டான் புஷ்கர்.

பங்கமான கேள்வி. அவமானமாக இருந்தது ஆபீஸருக்கு.

“சாமி இன்னும் புத்தி குடுக்கலண்ணா கிளீன் பண்றதுக்கு” என சுருக்கமாய் சொன்னது கல்யாணி.

இப்போது பெருத்த அவமானமாக இருந்தது ஆபீஸருக்கு. சங்கடமாய் நெளிந்தார்.

“நாளைக்கு காலைல வா பாப்பா. சாவி வாங்கி வெச்சுருக்கேன்” என்றார் ஆபீசர்.

“தேங்க்ஸ் அங்கிள்” என சொல்லி புறப்பட்டார்கள் இருவரும்.

Tamil novel – Jiteswari – Part 1/21

A retired woman enjoying the morning with coffee

அன்று வியாழக்கிழமை. காலையில் எழுந்து காபி குடித்துக்கொண்டே, பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்குபுஷ்பம். நேசப்பா விடியற்காலையில் எழுந்து விடுவார். வெயிலுக்கு முன் கிச்சன் வேலைகளை முடிப்பது அவர்கள் வழக்கம். ஒன்பது மணிக்குள் சமைத்து முடித்து, பிறகு அன்றாட வேலைகளை கவனிப்பார்கள்.

உள்ளே மிக்சி சத்தம் கேட்டது. காலை டிபன் நேசப்பா ரெடி செய்துவிடுவார். கூடவே மதிய உணவுக்கான எல்லா காய்களையும் நறுக்கி வைத்து விடுவார். அரிசியும் பருப்பும் ஊற வைத்து, இஞ்சி பூண்டு உரித்து, கறிவேப்பிலையையும் தேவையான அளவு அலசி வைத்து விடுவார்.

சங்கு புஷ்பத்திற்கு காலையில் எழுவது சற்று சிரமமான காரியம். கால் நரம்பு வலியால் பல நாட்கள் இரவு சரியான தூக்கம் இருக்காது. விடியற்காலையில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விடுவார். எழுந்ததும் முழு மூச்சாக எந்த வேலையும் செய்ய முடியாது.

எட்டு மணிக்கு பிறகு தான் அவரால் சற்று நடக்க முடியும். எனவே நேசப்பா எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்து விடுவார். சங்குபுஷ்பம் கிச்சன் உள்ளே போனால் அரை மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்து விடுவார்.

மணி ஏழேமுக்கால் ஆனது. போன் அடித்தது. ஜிதேஸ்வரியின் அழைப்பு.

a senior attending phone call

“சங்குமா, எழுந்துட்டீங்களா? நா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றாள்.

“இல்ல ஜித்து, சொல்லு, எப்ப வர?” என்றார் சங்குபுஷ்பம்.

“நைட் ப்ளயிட் இங்க. காலைல நாலு மணிக்கு நம்ம ஏர்போர்ட்டுக்கு வந்துடுவேன். நா பாண்டி போகல. வீட்டுக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என தயங்கியபடி சொன்னாள் ஜிதேஸ்வரி.

“வா வா” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“அப்புறம் ஒர்க்ஷாப்பு எப்படி போச்சு?” என விசாரித்தார். ஐந்து நிமிடம் பேசி முடித்து பிறகு கிச்சன் சேரில் போய் உட்கார்ந்தார். நேசப்பா போனில் பாட்டு கேட்டபடியே வேலையில் மும்முரமாய் இருந்தார்.

“ஏங்க நாளைக்கு காலைல ஜித்து வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரெண்டு மூணு நாள் இங்க இருந்துட்டு அப்புறம் பாண்டிக்கு போறாளாம்” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“காலைல எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வருது? நா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் நேசப்பா.

“நாலு மணிக்கு வண்டி லேண்ட் ஆகுமாம்.வெளில வர நாலரை ஆகும்னு சொன்னா. உங்களை அனுப்புறேன்னு சொன்னேன். வேணாம், நானே டாக்சி புடிச்சி வரேன்னு சொல்றா” என்றார் சங்குபுஷ்பம்.

“அது அப்படி தான் சொல்லும். அதுக்காக நாம போகாம இருக்க முடியுமா? நா போறேன்” என்றார் நேசப்பா.

“சரிங்க, நீங்க போயிட்டு வாங்க. குமார காலைல மூணு மணிக்கு வர சொல்லிடுங்க. விடியற்காலைல நீங்க ஓட்ட வேணாம்” என்றார் சங்குபுஷ்பம்.

டிபன் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டு ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்கள்.

லக்ஷ்மியின் போன் வந்தது. “மா, நா நாளைக்கு நைட்டு வீட்டுக்கு வரேன். ஜித்து பேசுனா காலைல. பசங்கள கூட்டிட்டு என்ன அங்க வர சொல்லிட்டா. நா சாயந்திரம் காலேஜ் முடிச்சிட்டு அப்டியே பசங்கள கூட்டிட்டு ஒரு ஆறு மணிக்கு கெளம்பிடுவேன்” என்றாள்.

“சரி, காமாட்சி ஆன்ட்டி கிட்ட சொல்லி பசங்க பேக ரெடி பண்ண சொல்லிட்டியா?” என்றார் சங்கு புஷ்பம். காமாட்சி ஜிதேஸ்வரியின் மாமியார். நல்ல குணமான பெண்மணி.

“அவங்க கிட்டயும், பசங்க கிட்டயும் காலைல ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே ஜித்து போன் பண்ணி சொல்லிட்டாளாம்” என்றாள் லக்ஷ்மி.

வரும் வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் பொது விடுமுறை. அரிதாக நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கிறது.

லக்ஷ்மி சங்குபுஷ்பத்தின் இளைய மகள். பாண்டியில் கல்லூரியில் ப்ரொபஸராக இருப்பவள். ஜித்தும் லக்ஷ்மியும் தோழிகள். சற்று ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்.

ஜிதேஸ்வரி சங்குபுஷ்பம் பெறாத மகள். அவருடன் நர்ஸாக பணிபுரிந்த கற்பகம் சிஸ்டரின் மகள். இருவரும் பணிக்காலம் முழுவதும் ஓரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.

ஜிதேஸ்வரி பிறந்ததும் அவரை முதலில் கையில் ஏந்தியவர் சங்குபுஷ்பம். ஜிதேஸ்வரி மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பெரும்பாலான குழந்தைகளை முதலில் அணைத்துக் கொண்டவர்
சங்குபுஷ்பம். யார் தெரிந்தவர்கள் பிரசவத்திற்காக சேர்ந்தாலும், அவர் ஷிப்ட் முடிந்த பின்பும் காத்திருந்து, தாயையும் சேயையும் நல்லபடியாக பார்த்த பிறகு தான் வீட்டுக்குப் போவார்.

கற்பகம் சில வருடம் முன்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரின் இறுதி நாட்களில் நேரில் போய் பார்க்க முடியாத சூழல்.

கற்பகத்திற்கு அவரின் உடல் நிலை புரிந்து விட்டது. அவர் கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரே மகன் ஒரிசாவில் இரும்பு கம்பெனியில் வேலை செய்கிறான்.

ஜிதேஸ்வரி திருமணமாகி பாண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.

கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சங்கு புஷ்பத்திற்கு போன் பேசினார். நேசப்பாவும், அவரும் அந்த தம்பதிகளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

நேசப்பா சற்று தைரியசாலி, ஆனால் மென்மையான மனம் கொண்டவர்.

சங்கு புஷ்பம் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் சர்வ ஜாக்கிரதையாக பயணித்து அவர்களுக்கு தேவையான உணவையும் புத்தகங்களையும் கோவில் ப்ரசாதங்களையும் மருத்துவமனை வாசலில் கொண்டு சேர்த்து விடுவார்.

சங்குபுஷ்பம் வார்டு பாய் ஆனந்திடம் சொல்லி வைத்து விடுவார்.

“ஏன் மேடம் சார் வெளில வரார்? இங்க நெலமை ரொம்ப மோசமா இருக்கு. அவங்களுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றார் ஆனந்த்.