




பூரிகுமாரி : இவங்க தாளிப்பு வடகம் இலியானா தானே? (Thalippu Vadagam Iliyaana)
கோல்கப்பா : இல்ல, இவங்க தகுதி வாய்ந்த இல்லத்தரசி! (Thagudhi Vaaindha Ilaththarasi)
இலியானா வடகம் : ஹிஹிஹி கோல்கப்பா, நீங்க ரொம்ப நாட்டி பாய்!
பூரிகுமாரி : என்ன கோல்கப்பா, இலியானாக்கு டைட்டில் குடுக்குறீங்க?
கோல்கப்பா : இலியானா ரேஞ்சு உனக்கு தெரியாதுமா.
இலியானா வடகம் : ஆமா, நா தகுதி வாய்ந்தவ தான். அதனால தான் உதவி தொகை வாங்குறேன்!
கோல்கப்பா : சொன்னேன்ல, இப்ப தெரியுதா இவங்க ரேஞ்சு?
இலியானா வடகம் : ஏம்மா, நீ வாங்குரியாம்மா?
கோல்கப்பா : இவ TVKகாரி, இவளுக்கு கெடைக்கல!
இலியானா வடகம் : அப்படியா, நீ கட்சில இருக்கியாம்மா?
கோல்கப்பா : இல்ல, இவ தற்குறிக்கு வாய்த்த குமாரி!!!
பூரிகுமாரி : ஹிஹிஹி கோல்கப்பா, இன்னைக்கு தான் நீங்க உண்மைய உரக்க சொல்லி இருக்கீங்க!








கோல்கப்பா: ஏண்டி, என் மேல அவ்ளோ லவ்வா உனக்கு?
பூரி குமாரி : ஏங்க கேக்கறீங்க?
கோல்கப்பா: பிரியாணி பட்டைல என் பர்த் டே நம்பரை எழுதி என்ன சர்ப்ரைஸ் பண்ணிட்ட! யூ ஆர் மை ஸ்வீட்டி!
பூரி குமாரி : இல்லீங்க, இது மணி அட்ராக்ட் பண்ற நம்பர்னு ஒரு அக்கா சொல்லுச்சு. அதான் எழுதி வெச்சேன், ஆனா தெரியாம பிரியாணி பண்ணும்போது அத போட்டுட்டேன்!
கோல்கப்பா: அடிப்பாவி, நா உன்னோட மணி பேங்க்னு இன்டேரெக்ட்டா சொல்றியா?
பூரி குமாரி : இல்லேங்க, டேரெக்ட்டாவா சொல்றேன், எனக்கு கவிதை எழுத சொன்னா பன் பட்டர்காரிக்கு எழுதுறீங்க! உங்கள லவ் பண்றவங்கள, நீங்க மதிக்கலேன்னா என்ன ஆகும்னு சொல்றேன் கேட்டுக்குங்க
(பூரி குமாரி பாடுகிறார்)
“நீங்க
கட்டை மனசா
மட்டை நாரா இருந்தீங்கனா
நாங்க
சட்டை பண்ண மாட்டோம்
பட்டைய மொத வேலையா
தூக்கி ஓரமா வெச்சிட்டு
எங்க லைப், எங்க பிரியாணினு
ஜாலியா இருப்போம்
கோல்கப்பா : கைஸ், இவ இன்னைக்கு என்னையே பிரியாணி போட்டு, என் ஈகோவையே பச்சடியா வச்சி ஜமாய்க்குற! நீங்களாவது இனிமே உங்க ஸ்பவுஸ கண்டுக்குங்க! இல்லேன்னா என் நெலமை தான்! ஹாப்பி சண்டே!








கட்லெட்டுக்கும்
அவுட்லெட்டுக்கும்
என்ன
ஒற்றுமை
தெரியுமா?
ரெண்டுமே
evening snack!
கட்லெட் – Tasteக்கு
அவுட்லெட் – Pastக்கு
அதனால சாயந்தரத்துல
நண்பர்களோட மனசு விட்டு பேசுங்க!

காலை பத்து மணி வாக்கில் லேண்ட் லைன் அடித்தது. மெயின் கேட் செல்லகுமார்.
“சொல்லுங்க செல்லகுமார்” என்றார் சங்கு புஷ்பம்.
“மேடம், சார பாக்கணும்னு எக்ஸ் எம்எல்ஏ ஆபீசுலேர்ந்து ஒரு கட்சிக்காரர் வந்திருக்கார். அவர் பேரு ரத்தினம்னு சொன்னார். அனுப்பவா மேடம்” என்றார்.
சங்கு புஷ்பத்திற்க்கு ரத்தினம் என்ற பெயர் புதுசாய் இருந்தது. சற்று யோசித்தவர் “அவர் என்னை பாக்கணும்னு சொன்னாரா இல்ல சாரையா?” என்றார்.
“சார் தான் மேடம். நேசமணி மதிவாணன்னு முழு பேர் சொன்னார். ஆனா போன் நம்பர் தெரியாதுனு சொல்றார். ஆளும் பர்ஸ்ட் டைம் பாக்குற மாதிரி இருக்கு” என்றார் செல்லகுமார்.
“சரிப்பா. ஒரு பத்து நிமிஷம் அவரை விசிட்டர் ஹால்ல உக்கார வை. பேன் போட்டு விடுங்க. கொஞ்சம் தண்ணி குடுத்து பாத்துக்குங்க. நா அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன். என்ன கரை வேட்டி அவரு?” என்றார் சங்கு புஷ்பம்.
செல்லகுமார் சொன்ன கட்சி பேரை குறித்துக்கொண்டார்.
“ஏங்க, கொஞ்சம் இங்க வாங்க” என நேசப்பாவை அழைத்தார்.
கிச்சனில் இருந்து வந்த நேசப்பா பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தார்.
“உங்களுக்கு இந்த கட்சிலேர்ந்து ரத்தினம்னு யாராவது தெரியுமாங்க? உங்கள பாக்கணும்னு வந்திருக்கார். விசிட்டர் ஹால்ல வெயிட் பண்ண சொல்லி செல்லகுமார்கிட்ட சொல்லி இருக்கேன்” என்றார் சங்கு புஷ்பம்.
“இல்லையேம்மா, ஆளு பேரு புதுசா இருக்கு. நமக்கும் கட்சிக்காரங்க யாரையும் தெரியாது. யாரா இருக்கும்” என யோசித்தார்.
லேண்ட் லைன் அடித்தது. “மேடம், அவர் போன்ல யார்கிட்டயோ பேசிகிட்டு இருக்கார். எலெக்சன் விஷயம். நேசமணின்னு பேரு அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கார்” என்றார் செல்லகுமார்.
“சரிப்பா, நா சாருகிட்ட சொல்லிடறேன். நீ வெயிட் பண்ணு” என சொல்லி போனை வைத்தார் சங்கு புஷ்பம்.
“எலெக்சன் விஷயம், நேசமணின்னு பேரு அப்படின்னு அவர் போன்ல யார்கிட்டயோ பேசிக்கிட்டு இருக்காராம். செல்லகுமார் சொல்றார்” என்றார் சங்கு புஷ்பம்.
“நம்ம செல்லம் எப்பவும் ஷார்ப்பு” என சிரித்தார் நேசப்பா.
“சரிங்க என்ன விஷயமா இருக்கும்? அதுவும் எலெக்க்ஷனை பத்தி” என குழம்பினார் சங்கு புஷ்பம். “வர சொல்லுவோமா” என கேட்டார் நேசப்பாவிடம்.
“கொஞ்ச நேரம் இரு” என சொல்லி கண் மூடி யோசித்தார்.
சில நிமிடத்திற்கு பிறகு “அங்க ஷெல்ப்புல நம்ம லோக்கல் நியூஸ் பேப்பர் இருக்கு பாரு. லாஸ்ட் நாலு நாள் பேப்பர் எடுத்துட்டு வா” என்றார்.
பத்து நிமிடம் ஆனது. “இங்க பாருங்க” என ஒரு செய்தியை காண்பித்தார் சங்கு புஷ்பம்.

இரண்டு மாதம் ஆனது. மொத்தம் இருபத்து மூன்று டெலிவரி அன்றோடு சேர்த்து.
நெறய ஓசிடி கேள்வி பட்டிருக்கிறோம். இந்த ஆன்லைன் ஆர்டரிங் ஓசிடி இவர்களை பாடாய் படுத்தியது.
இது த்ரீஓ சிடி. அது அவர்களின் பர்ஸுக்கும் நல்லதில்லை, அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் நல்லதில்லை என நினைத்துக்கொண்டார்கள்.
இரவு எட்டு மணிக்கு வந்தாள் அமராவதி.
“உள்ள வாம்மா” என்றார் நேசப்பா.
“அபர், நீ பேசிக்கிட்டு இரு. நான் கிட்சனுக்கு போறேன்” என கிளம்பினார் நேசப்பா.
“உக்காரு அமராவதி, காபி சாப்பிடுறியா இல்ல க்ரீன் டீ வேணுமா?” என்றார் சங்கு புஷ்பம்.
“க்ரீன் டீ ஆன்ட்டி” என்றாள்.
டேபிள் பேனை போட்டுவிட்டு சேரை பக்கத்தில் இழுத்து போட்டுக்கொண்டு டைரியை எடுத்தார் சங்கு புஷ்பம்.
“இன்னியோட இருபத்து மூன்று டெலிவரி வாங்கி இருக்கோம். அதுல பதினாலு மதியம் ரெண்டுலேர்ந்து நாலுக்குள்ள.
நாங்க டேப்லெட் போட்டு தூங்குற நேரம். அப்புறம் ஒவ்வொரு டெலிவரிக்கும் மூணு போன் கால் அட்டென்ட் பண்ணணும்.
ஸோ, கலெக்க்ஷன் சார்ஜ் இருபத்தி அஞ்சு ரூபா ஒரு டெலிவரிக்கு. மொத்தம் ஐநூத்தி எழுபத்தி அஞ்சு ரூபா ஆச்சு. என் நம்பர்க்கு அனுப்பிடுமா” என்றார் சங்கு புஷ்பம்.
“சாரி ஆன்ட்டி. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்றாள் அமராவதி.
எமெர்ஜென்சிக்கு வாங்கி வெக்கலாம். ஆனா மைன்ட்லெஸ் ஷாப்பிங்க்கு ஹெல்ப் பண்ண முடியதுமா என நினைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.
பிறகு கிச்சன் பக்கம் திரும்பி “நேஸ், அமருக்கு ஒரு க்ரீன் டீ குடுங்க” என்றார் அபராஜிதா.