Tamil novel – Jiteswari – Part 1/21

A retired woman enjoying the morning with coffee

அன்று வியாழக்கிழமை. காலையில் எழுந்து காபி குடித்துக்கொண்டே, பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்குபுஷ்பம். நேசப்பா விடியற்காலையில் எழுந்து விடுவார். வெயிலுக்கு முன் கிச்சன் வேலைகளை முடிப்பது அவர்கள் வழக்கம். ஒன்பது மணிக்குள் சமைத்து முடித்து, பிறகு அன்றாட வேலைகளை கவனிப்பார்கள்.

உள்ளே மிக்சி சத்தம் கேட்டது. காலை டிபன் நேசப்பா ரெடி செய்துவிடுவார். கூடவே மதிய உணவுக்கான எல்லா காய்களையும் நறுக்கி வைத்து விடுவார். அரிசியும் பருப்பும் ஊற வைத்து, இஞ்சி பூண்டு உரித்து, கறிவேப்பிலையையும் தேவையான அளவு அலசி வைத்து விடுவார்.

சங்கு புஷ்பத்திற்கு காலையில் எழுவது சற்று சிரமமான காரியம். கால் நரம்பு வலியால் பல நாட்கள் இரவு சரியான தூக்கம் இருக்காது. விடியற்காலையில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விடுவார். எழுந்ததும் முழு மூச்சாக எந்த வேலையும் செய்ய முடியாது.

எட்டு மணிக்கு பிறகு தான் அவரால் சற்று நடக்க முடியும். எனவே நேசப்பா எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்து விடுவார். சங்குபுஷ்பம் கிச்சன் உள்ளே போனால் அரை மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்து விடுவார்.

மணி ஏழேமுக்கால் ஆனது. போன் அடித்தது. ஜிதேஸ்வரியின் அழைப்பு.

a senior attending phone call

“சங்குமா, எழுந்துட்டீங்களா? நா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றாள்.

“இல்ல ஜித்து, சொல்லு, எப்ப வர?” என்றார் சங்குபுஷ்பம்.

“நைட் ப்ளயிட் இங்க. காலைல நாலு மணிக்கு நம்ம ஏர்போர்ட்டுக்கு வந்துடுவேன். நா பாண்டி போகல. வீட்டுக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என தயங்கியபடி சொன்னாள் ஜிதேஸ்வரி.

“வா வா” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“அப்புறம் ஒர்க்ஷாப்பு எப்படி போச்சு?” என விசாரித்தார். ஐந்து நிமிடம் பேசி முடித்து பிறகு கிச்சன் சேரில் போய் உட்கார்ந்தார். நேசப்பா போனில் பாட்டு கேட்டபடியே வேலையில் மும்முரமாய் இருந்தார்.

“ஏங்க நாளைக்கு காலைல ஜித்து வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரெண்டு மூணு நாள் இங்க இருந்துட்டு அப்புறம் பாண்டிக்கு போறாளாம்” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“காலைல எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வருது? நா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் நேசப்பா.

“நாலு மணிக்கு வண்டி லேண்ட் ஆகுமாம்.வெளில வர நாலரை ஆகும்னு சொன்னா. உங்களை அனுப்புறேன்னு சொன்னேன். வேணாம், நானே டாக்சி புடிச்சி வரேன்னு சொல்றா” என்றார் சங்குபுஷ்பம்.

“அது அப்படி தான் சொல்லும். அதுக்காக நாம போகாம இருக்க முடியுமா? நா போறேன்” என்றார் நேசப்பா.

“சரிங்க, நீங்க போயிட்டு வாங்க. குமார காலைல மூணு மணிக்கு வர சொல்லிடுங்க. விடியற்காலைல நீங்க ஓட்ட வேணாம்” என்றார் சங்குபுஷ்பம்.

டிபன் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டு ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்கள்.

லக்ஷ்மியின் போன் வந்தது. “மா, நா நாளைக்கு நைட்டு வீட்டுக்கு வரேன். ஜித்து பேசுனா காலைல. பசங்கள கூட்டிட்டு என்ன அங்க வர சொல்லிட்டா. நா சாயந்திரம் காலேஜ் முடிச்சிட்டு அப்டியே பசங்கள கூட்டிட்டு ஒரு ஆறு மணிக்கு கெளம்பிடுவேன்” என்றாள்.

“சரி, காமாட்சி ஆன்ட்டி கிட்ட சொல்லி பசங்க பேக ரெடி பண்ண சொல்லிட்டியா?” என்றார் சங்கு புஷ்பம். காமாட்சி ஜிதேஸ்வரியின் மாமியார். நல்ல குணமான பெண்மணி.

“அவங்க கிட்டயும், பசங்க கிட்டயும் காலைல ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே ஜித்து போன் பண்ணி சொல்லிட்டாளாம்” என்றாள் லக்ஷ்மி.

வரும் வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் பொது விடுமுறை. அரிதாக நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கிறது.

லக்ஷ்மி சங்குபுஷ்பத்தின் இளைய மகள். பாண்டியில் கல்லூரியில் ப்ரொபஸராக இருப்பவள். ஜித்தும் லக்ஷ்மியும் தோழிகள். சற்று ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்.

ஜிதேஸ்வரி சங்குபுஷ்பம் பெறாத மகள். அவருடன் நர்ஸாக பணிபுரிந்த கற்பகம் சிஸ்டரின் மகள். இருவரும் பணிக்காலம் முழுவதும் ஓரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.

ஜிதேஸ்வரி பிறந்ததும் அவரை முதலில் கையில் ஏந்தியவர் சங்குபுஷ்பம். ஜிதேஸ்வரி மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பெரும்பாலான குழந்தைகளை முதலில் அணைத்துக் கொண்டவர்
சங்குபுஷ்பம். யார் தெரிந்தவர்கள் பிரசவத்திற்காக சேர்ந்தாலும், அவர் ஷிப்ட் முடிந்த பின்பும் காத்திருந்து, தாயையும் சேயையும் நல்லபடியாக பார்த்த பிறகு தான் வீட்டுக்குப் போவார்.

கற்பகம் சில வருடம் முன்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரின் இறுதி நாட்களில் நேரில் போய் பார்க்க முடியாத சூழல்.

கற்பகத்திற்கு அவரின் உடல் நிலை புரிந்து விட்டது. அவர் கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரே மகன் ஒரிசாவில் இரும்பு கம்பெனியில் வேலை செய்கிறான்.

ஜிதேஸ்வரி திருமணமாகி பாண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.

கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சங்கு புஷ்பத்திற்கு போன் பேசினார். நேசப்பாவும், அவரும் அந்த தம்பதிகளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

நேசப்பா சற்று தைரியசாலி, ஆனால் மென்மையான மனம் கொண்டவர்.

சங்கு புஷ்பம் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் சர்வ ஜாக்கிரதையாக பயணித்து அவர்களுக்கு தேவையான உணவையும் புத்தகங்களையும் கோவில் ப்ரசாதங்களையும் மருத்துவமனை வாசலில் கொண்டு சேர்த்து விடுவார்.

சங்குபுஷ்பம் வார்டு பாய் ஆனந்திடம் சொல்லி வைத்து விடுவார்.

“ஏன் மேடம் சார் வெளில வரார்? இங்க நெலமை ரொம்ப மோசமா இருக்கு. அவங்களுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றார் ஆனந்த்.

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 4/4

சில மாதங்கள் ஆனது. ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பிய சிவா கேட்டான் “என்னம்மா? இன்னைக்கு பச்சை கலர் கேசரி செஞ்சுருக்க, என்ன ஸ்பெஷல்?”

“அம்மா பாஸாயிட்டாங்கன்னா! அதான் ஜாலி மூடுல இருக்காங்க” என சொன்னது சின்ன வாண்டு தேவசேனா.

“ஆமாடா, மத்தியானம் தான் ரிசல்ட் வந்தது. அம்மா டிகிரி வாங்கிட்டேன்!!” என உற்சாகமாக சொன்னாள் தாரா. தபால் வழியில் யோகா இளங்கலை முடித்து இன்று பட்டம் வாங்கியிருக்கிறாள்.

சிவா ஆறாம் வகுப்பு மாணவன். தேவசேனா ஒன்றாம் வகுப்பு. தாராவின் கணவர் மேகநாதன் ஆட்டோ ஓட்டுநர். பகுதி நேரமாக சுவர் பெயிண்டிங் வேலையும் செய்வார்.

“மல்லிகை மலர் பறிக்க, மான் போல துள்ளி வா!

அல்லி மலர் பறிக்க, அன்னநடை போட்டு வா!

டிகிரி நீயும் வாங்க, டைகராக படித்து வா!!  என சிவா குஷியாக பாட ஆரம்பித்தான்.

“அப்போ, அம்மா டைகரா?” என தேவசேனா புலி போல காலை மடக்கி நடந்து வந்து பயமுறுத்த, மூவரும் சேர்ந்து கொல்லென சிரித்தார்கள். சற்று நேரத்தில் மேகநாதனும் வர வீடு களை கட்டியது.

 நால்வரும் கிளம்பி கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்துவிட்டு கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.

பால்காரர் குணவேந்தன் அந்த பக்கம் வந்தார்.

“என்ன மேகா, தாரா பாஸாயிடுச்சுனு எங்க வீட்டம்மா சொல்லுச்சு! நீ எப்போ படிக்க போற?” என்றார்.

மேகநாதன் தலையை திருப்பி கொள்ள, தாராவுக்கு சங்கடமாக இருந்தது.

“குணா மாமா, அத்தை குடிக்குறது இல்லை, நீங்க எப்போ குடியை விட போறீங்க?” என ஒரே போடாக கேட்டான் சிவா.

“அப்பா, அவர் வீட்டு செவத்துல போய் குடி குடியை கெடுக்கும்னு எழுதிட்டு வாப்பா” என்றது சேனா.

குணவேந்தன் குடிவேந்தனாக இருப்பதை குழந்தைகள் சொல்ல, மெதுவாக நகர்ந்தார் அவர்.

“அம்மா, நாங்க போய் யானையை பாத்துட்டு வரோம்” என சொல்லி குழந்தைகள் எழுந்து சென்றார்கள்.

“இன்னைக்கு நா டிகிரி பாஸ் பண்ணிட்டேன்னு கலாவதி டீச்சர் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. வெண்மணி அக்கா கிட்ட காசு குடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பி கேக் வாங்கிட்டு வர சொல்லி எல்லா டீச்சர்ஸுக்கும் என்னை குடுக்க சொன்னாங்க. நானே வாங்கியிருக்கணும், எனக்கு தோணலைங்க” என்றாள் தாரா.

“கரெக்ட்டு தான், இன்னொரு நாள் நீ எல்லாருக்கும் நம்ம சார்பா ஸ்வீட் குடுத்துடு” என்றார் மேகா.

“ஷூ கம்பெனிக்காரங்க சில டாக்குமெண்ட் கேட்டாங்கன்னு டீச்சர் சொன்னாங்க. நாளைக்கு முடிவு பண்ணி சொல்றேன்னு சொல்லி இருக்கேன். ஏதோ ஒரு பயம் மனசுல இருக்கு, ஆனா என்னன்னு சொல்ல தெரியல” என்றாள் தாரா.

“உன்னால முடியும் தாரா, இந்த வேலையில சேரும்போது எவ்வளவு யோசிச்ச? எப்படி இவ்ளோ சின்ன பசங்கள பாத்துகிறதுன்னு? ஆனா இந்த பத்து வருஷத்துல நீ எவ்ளோ இம்ப்ரூவ் ஆகி இருக்கே! இன்னைக்கு அந்த பயம் இருந்த இடம் தெரியாம போயிடுச்சி. அது போல தான் இப்பவும். ஒரு விஷயத்தை புதுசா ஆரம்பிக்கும் போது யாருமே அதுல எக்ஸ்பர்ட் கிடையாது. அதனால முடியும்னு நெனச்சி துணிஞ்சு இறங்கு” என ஊக்கம் கொடுத்தார் மேகா.

“சரிங்க, யோசிக்கிறேன்” என தாரா சொல்ல “வா கெளம்பலாம்” என்றார் மேகா.

அவர் ஆட்டோவை ஓட்ட, மற்ற மூவரும் பின் சீட்டில் உட்கார்ந்தார்கள்.

கோவிலை ஒட்டிய மெயின் ரோட்டில் கல்யாண ஊர்வலம் மெதுவாக போய் கொண்டிருந்தது.

ஆட்டோ டிராபிக்கில் நிற்க, “அம்மா, போன் குடு, எனக்கு போரடிக்குது” என கேட்டது சேனா.

“ஏன், உன்னால கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதா?” என திட்டினான் சிவா.

சேனா கோபித்துக் கொண்டு மூஞ்சை திருப்பிக் கொண்டது.

தாரா என்ன செய்வது என யோசிக்கும் போது சேனா கையில் இருந்த வாட்டர் பாட்டில் ஒரு ஐடியாவை கொடுத்தது.

“சேனா, இந்த பாட்டிலை குடு, ஒரு கேம் சொல்லி தரேன்” என வாங்கி அதை அவர்கள் இருவரின் தொடைகளுக்கே நடுவே நிற்க வைத்தாள்.

playtime in Auto

“இதை கார் கியரா நெனச்சுக்கோ. அப்பா வேண்டிய நிறுத்தினா, நியூட்ரல்ல வை. மெதுவா ஸ்டார்ட் பண்ணா இடது பக்கம் போய், மேல் பக்கம் சாய்ச்சு வை. இன்னும் கொஞ்சம் ஸ்பீட் எடுத்தா செகண்ட் கியருக்கு அப்படியே பின்னாடி வா. ஒரே சீரா வண்டி ஓடுச்சுன்னா, கொஞ்சம் வலது பக்கம் வந்து முன்னாடி போ” என விளக்கினாள்.

சேனாவும் சிவாவும்  பயங்கர குஷியாகிவிட்டார்கள். அந்த டிராபிக் ஜாம் அவர்கள் பல முறை கியர் மாற்றி விளையாடுவதற்கு ஏதுவாக இருந்தது.

“அப்பா, என்கிட்ட சொல்லாமா ஏம்பா ஸ்பீடு எடுத்த? நான் இன்னும் பர்ஸ்ட் கியர்லயே இருக்கேன்” என அவரை செல்லமாக திட்டியபடியே அவசரமாக பாட்டிலை நகர்த்தினார்கள்.

மேகநாதனும் அவர்கள் விளையாட ஏதுவாக போக்கு காட்டி ஓட்டினார். அரை மணி நேரம் ஆனது வீடு வந்து சேர்வதற்க்கு.

“செம சேனா, அருமையா கார் ஓட்டி எங்களை எல்லாம் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டே!” என பாராட்டினான் சிவா.

“அந்த பார்மசி சந்துல நான் சரியா கியர் போடலண்ணா. நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்கிறேன்” என தைரியமாக சொன்னது.

“பாத்தியா தாரா, இந்த சின்ன பொண்ணுக்கு இருக்குற நம்பிக்கையை? விளையாட்டா ஆரம்பிச்ச விஷயம், இப்போ அவளை ஒரு தேர்ந்த ட்ரைவரா உணர வெச்சிருக்கு. அவ கண்ணுல பயமோ, புது விஷயத்தை பழகுறோம் என்ற என்னமோ துளியும் இல்லை. தெரியலேன்னா வெளிப்படையா அத சொல்லி கத்துக்குறா. தெரியலேன்னு கூச்சப்படல” என மெதுவாக சொன்னார் மேகநாதன்.

தாராவுக்கு பொட்டில் அடித்தாற் போல தெளிவு ஏற்பட்டது.

“தேங்க்ஸுங்க, எனக்கு இப்போ புரிஞ்சிடிச்சு, நா ஹேண்டில் பண்ணிக்குறேன்” என சிரித்தாள் தாரா.

ஆறு மாதம் ஆனது. ஷூ கம்பெனி ப்ராஜெக்ட்டுக்காக, பயிற்சி வகுப்புகளை நேர்த்தியாக நடத்தி கொண்டிருந்தாள் தாரா.

மேகநாதன் இரண்டாவது வண்டி வாங்கி வீட்டின் முன் நிறுத்தினார்.

A new vehicle celebration

“ஹை, நம்ம வீட்டுக்கு குட்டி யானை வந்துடுச்சி!” என சிவா சந்தோஷமாக சொல்ல, “நா இதுக்கு பேரு வெச்சுட்டேன்!” என சொன்னது சேனா.

“என்ன பேருடி?” என ஆர்வமாக கேட்டான் சிவா.

“ரங்கு” என சொல்லி சிரித்தது சேனா. 

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 3/4

Family time

கதை நேரம் முடிந்து குழந்தைகள் வராண்டாவிற்கு செல்ல, ஊர் தலைவரும் கலாவதி டீச்சரும் வந்தார்கள்.

“லட்டு எடுத்துக்கம்மா, பசங்களுக்கும் குடுங்க” என பாக்ஸை நீட்டியவர் “நீ செஞ்சது பெரிய உதவிம்மா, நீ இல்லேன்னா நாங்க அடிக்கடி டவுனுக்கு போய் அலைய வேண்டியதா இருந்திருக்கும்” என சந்தோஷமாக நன்றி சொன்னார்.

கொஞ்ச நேரம் பேசி முடித்து விட்டு அவர் கிளம்ப, கலாவதி டீச்சர் மட்டும் இருந்தார்.

“தாரா, உக்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார். அவர் சொன்னதின் சுருக்கம் இதுதான்.

பொன்னி நர்ஸ் மற்றும் தலைவர் மூலமாக, தாரா பற்றி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு தெரிய வந்திருக்கிறது.

அவர் தாராவை பகுதி நேரமாக அந்த ஊர் பெண்களுக்கு யோகா சொல்லி தர நியமிக்க முடிவு செய்தார்.

அருகாமையில் இருந்த ஒரு ஷூ கம்பெனியின் CSR டீமிடம் பேசி, ஒரு குறிப்பிட்ட தொகையை தாராவுக்கு ஊதியமாக கொடுக்க ஏற்பாடும் ஆகி இருக்கிறது.

தாராவுக்கு இந்த வாய்ப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும், டிப்ளோமா மட்டும் படித்த தான் இதை பெறுப்பேற்று செய்ய முடியுமா என சந்தேகமாக இருந்தது.

மேலும் மாலை நேரத்தில் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இந்த வேலையில் ஈடுபட்டால் எப்படி வீட்டை கவனிப்பது எனவும் குழப்பமாக இருந்தது.

“டிப்ளமோ மட்டும் தான் கைல இருக்கு டீச்சர். இன்னும் டிகிரி முடிக்கல. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு, யோசிச்சு சொல்றேன் டீச்சர், ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் தாரா.

“ஷூ கம்பெனில இந்த ப்ரோக்ராம் அப்ரூவ் ஆக கொஞ்ச நாள் ஆகும், கவலைப்படாதே ” என சொல்லி கிளம்பி போனார் கலாவதி டீச்சர்.

அன்று இரவு உணவு நேரம். “இன்னைக்கு என்ன கதை சொன்னம்மா பசங்களுக்கு?” என கேட்டது சேனா.

“சூப்பரான யானை கதை. சீக்கிரம் சாப்பிட்டு வாங்க, சொல்றேன்” என்றாள் தாரா.

சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்து வரிசையாக பாய் விரித்து தாரா படுக்க, இருவரும் வந்து ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டார்கள். மூடிய அவர்கள் கண்களுக்குள் காடு விரிய ஆரம்பித்தது.

கதை கேட்டபடியே மேகநாதன் கிச்சனை சுத்தம் செய்து முடித்தார். பிள்ளைகள் இருவரும் தூங்கிவிட “இங்க வாங்க ஒரு விஷயம் பேசணும்” என அழைத்தாள் தாரா.

டீச்சர் சொன்ன விஷயத்தை சொல்லி தன் குழப்பத்தை விளக்கினாள். பொறுமையாக கேட்ட மேகநாதன் “தாரா, ரங்குவ நெனச்சி பாரு, உன் கேள்விக்கு பதில் கிடைக்கும். இந்த வாய்ப்பு உனக்கு கெடச்சா, நாம ரெண்டாவது வண்டிய கடனில்லாம சீக்கிரம் வாங்கிடலாம்” என சொன்னார்.

அன்று இரவு தூக்கத்தில் பலவகையான பொறுப்புகள் வெவ்வேறு உருவங்களில் அவளை சுற்றி வருவது போல மங்கலாக ஒரு கனவு வந்தது.

அடுத்த வந்த நாட்கள் சாதாரணமாக இருந்தாலும் தாராவின் மண்டைக்குள் பல கேள்விகளை எழுப்பி கொண்டே இருந்தது.

ஒரு நாள் போல, இருபது சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்வது அசாதாரணமான வேலை. அவர்களுக்கு அமைதியான சூழலை அமைத்து கொடுப்பதே பெரும் பொறுப்பு.

ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து, பேசி, உணவு கொடுத்து தூங்க வைப்பது என அடிப்படை பராமரிப்பு பணிகள் ஏராளம்.

கூடவே அவர்களின் கற்றல் தேவைகளையும் பூர்த்தி செய்து, அந்த நாளின் முடிவில் அவர்கள் பெற்றோரிடம் நல்ல படியாக ஒப்படைப்பது வரை மறைமுகமான ஒரு அழுத்தம் அவள் மீது இருக்கிறது.

மறுபுறம் வீடு, குழந்தைகள், குடும்பத்தின் பொருளாதார சூழல் என அடுக்கடுக்காய் பல விஷயங்கள் அவள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது.

அந்த வாரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம்  கலாவதி டீச்சரிடம் போய் பேசினாள். அவருடைய அனுபங்களை கேட்கும் போது, தான் மட்டும் இந்த சூழலில் இல்லை என்பது தாராவுக்கு புரிந்தது.

Tamil short story – பீல் குட் மொமண்ட்ஸ்

A lovely couple enjoying happy retirement

“லக்ஷ்மி, அப்பா எங்கேன்னு பாரு” என ஹாலில் இருந்து சொன்னார் சங்கு புஷ்பம்.

“அவர் பாத்ரூம்ல இருக்காரும்மா” என்றாள் லக்ஷ்மி.

“கொஞ்சம் போய் பாரும்மா, அவர் உள்ள போய் ரொம்ப நேரமாச்சு” என்றார் சங்கு புஷ்பம்.

காலையில் சீக்கிரமே எழுந்து விடுவார் நேசப்பா. காபி போட்டு, காய் நறுக்கி, வாக்கிங் கிளம்ப வேண்டிய நேரம் இது! இன்னும் பாத்ரூமிலுருந்து வெளியே வரமால் என்ன செய்கிறார்? என யோசித்தார் சங்கு புஷ்பம்.

“மா, அவரு என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா?” என சிரித்தபடியே வந்தாள் லக்ஷ்மி.

“சொல்லு!” என ஆர்வமாக கேட்டார் சங்கு புஷ்பம்.

“ஷேவ் பண்ணிக்கிட்டு இருக்காரும்மா? அதுவும் லெப்ட் ஹேண்ட்ல!” என்றாள் லக்ஷ்மி.

“வலது கைல ஏதாவது சுளுக்கா? இல்ல ஷோல்டர் வலியா? அவர் எதுவும் என்கிட்ட சொல்லலியேம்மா” என கவலையோடு சொன்னார் சங்கு புஷ்பம்.

“ஆமாம்மா, கொஞ்ச நாளா அவரு நார்மலா இல்ல. கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்குறார்” என யோசனையாக சொன்னாள் லக்ஷ்மி.

“வயசான காலத்துல இந்த ஆர்த்தோ, நியூரோ டாக்டருங்களுக்கு பீஸ் குடுத்தே மாள மாட்டேங்குது! இவரு வேற என்ன புது பைல போட வைக்க போறாருன்னு தெரியல” என புலம்ப ஆரம்பித்தார் சங்குபுஷ்பம்.

“மா, அதெல்லாம் எதுவும் சீரியஸா இருக்காது. நீ கவலைப்படாதே, நா வாக்கிங் போறேன்” என தேற்றினாள் லக்ஷ்மி.

கால் மணி நேரம் கழித்தது நெசப்பா காபி கப்போடு வந்தார்.

“இந்தாம்மா காபி” என மனைவியிடம் நீட்டினார்.

a husband serving coffee

“என்ன, வர வர மரியாதை கொறையுது? லெப்ட் ஹேண்ட்ல காபி தரீங்க?” என முறைத்தார் சங்குபுஷ்பம்.

“நீ தானே சொல்வ, மரியாதை மனசுல இருந்தா போதும்னு” என கண்ணடித்தபடியே சொன்னார் நேசப்பா.

“அப்ப மரியாதை இல்ல, அப்படி தானே?” என காபியை விட சூடாக கேட்டார் புஷ்பம்.

“காபி போட்டு கொண்டாந்து கைல குடுக்குற ஆள ஏண்டி ரோஸ்ட் பண்ற? என கூலாக கேட்டார் நேசப்பா.

“இது என்ன புது பழக்கம்? அந்த கையில ஏதாவது பிரச்சனையா? சிரிச்சி சிரிச்சி வலிய மறைக்குறீங்களா? அப்புறம் ஏதாவது பெரிய செலவா இழுத்து விடபோறீங்க? எதுவுமா இருந்தாலும் ஆரம்ப நிலையிலேயே வாய தொறந்து சொல்லுங்க! டாக்டரை பாத்து சரி பண்ணிக்கலாம்” என படபடப்பாக பேசினார் புஷ்பம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா” என சிரித்தார் நேசப்பா.

“நாங்க உங்களை கவனிக்காம இல்லை! கொஞ்ச நாளாவே நீங்க இடது கையால தான் பல வேலைகளை செய்யுறீங்க” என கவலை குறையாமல் சொன்னார் புஷ்பம்.

a man doing household activities

“நீ ஏன் சின்ன விஷயத்துக்கு இவ்ளோ யோசிக்குற? நான் சில வேலைகளை இடது கையால செய்றது உண்மை தான். ஆனா அதுக்கு ஒரு காரணம் இருக்கு” என சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னார் நேசப்பா.

சங்கு புஷ்பத்திற்க்கு காண்டு ஏறியது.

அந்த நேரத்தில் நேசப்பா போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

“ஹர்ப்ரீத், இன்னைக்கு ஏழு மணி செஷனை ஏழரைக்கு மாத்தி இருக்காங்க. நா போய் காய் கட் பண்ணி வெச்சுட்டு கிளம்புறேன்” என நகர்ந்தார் நேசப்பா.

ஹர்ப்ரீத் பஞ்சாபி பெண்மணி. சுமார் ஐம்பது வயது இருக்கும். பிஸியோதெரபி டாக்டர். இவர்கள் அபார்ட்மெண்டில் சில மாதங்களுக்கு முன்பு குடியேறி இருக்கிறார். சொசைட்டி சீனியர்களுக்கு பீஸ் வாங்காத கன்சல்டன்ட். காலையில் வாக்கிங் போகும் மொத்த பெருசுகளுக்கும் நல்ல தோழியாகி விட்டார்.

பத்து நிமிஷத்தில் நேசப்பா ரெடியாகி வந்து ஷூ போட குனிந்தார்.

புஷ்பம் அவரையே உற்று நோக்க, ஷூவை போட்டபடியே “ரொம்ப கவலைப்படாதே! எல்லாத்துக்கும் புது கனெக்க்ஷன் தான் காரணம்” என சிரித்தபடியே பாதியிலேயே நிறுத்தினார் நேசப்பா.

“என்ன புது கனெக்க்ஷன்?” என முழித்தார் புஷ்பம்.

“இங்க பாரு, நாம எப்பவும் வலது கையால தான் பெரும்பாலான தினசரி வேலைகளை செய்வோம். அந்த பழக்கத்தை மாத்தி இடது கையால சின்ன சின்ன வேலைகளை செய்யும் போது நம்ம மூளைல புதுசா நரம்பு இணைப்புகள் உருவாகும். அது மறதி குறைய உதவும். கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு நன்றாகும். இதை Non-Dominant Hand Practise என சொல்வார்கள்” என விளக்கினார் நேசப்பா.

“அப்படியா, இதை மொதல்லயே சொல்ல வேண்டியது தானே?” என நிம்மதியாக சொல்லியபடியே கிச்சனுக்கு எழுந்து போனார் புஷ்பம்.

மெல்லிசாக விசிலடித்தபடியே கிளம்பி போனார் நேசப்பா.

வாக்கிங் முடித்து லக்ஷ்மி வந்தாள். புஷ்பம் நேசப்பாவின் Non-Dominant Hand Practise விஷயத்தை சொன்னார்.

“ஹ்ம்ம், புது விஷயமா தான் இருக்கு! நீயும் ட்ரை பண்ணுமா” என சொல்லிவிட்டு குளிக்க போனாள்.

இரண்டு நாட்கள் கழித்து புஷ்பம் கோவிலுக்கு போய்விட்டு வந்து, சொசைட்டி பார்க்கில் உட்கார்ந்து அவர் சகாக்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ஹர்ப்ரீத் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

“நாளைக்கு நைட் என்னோட பர்த்டே பார்ட்டி பிளான் பண்ணி இருக்கேன். ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துடுங்க” என அனைவருக்கும் அழைப்பு விடுத்து விட்டு கிளம்பினார்.

வீட்டுக்கு வந்ததும் நேசப்பாவிடம் சொன்னார் புஷ்பம்.

“ஆமா, எங்க ஆளுங்களையும் கூப்பிட்டு இருக்காங்க, எப்படியும் ஒரு இருபத்தஞ்சு பேரு வருவாங்கனு சொன்னாங்க. நீயும் லக்ஷ்மியும் போய் நாளைக்கு கிப்ட் வாங்கிட்டு வாங்க” என சொன்னார்.

“அதெல்லாம் வேணாம்னு அவங்க தெளிவா சொல்லிட்டாங்க” என்றார் புஷ்பம்.

அடுத்த நாள் ஏழு மணிக்கு எல்லோரும் ஹர்ப்ரீத் வீட்டில் ஆஜரானார்கள். நேசப்பாவின் கோஷ்டி ஹர்ப்ரீத் பட்டேலை ஏகத்துக்கும் கொண்டாடினார்கள்.

சற்று நேரத்தில் சாப்பாடு டெலிவரி வர எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

நேசப்பாவும் புஷ்பமும் சாப்பிட ஆரம்பிக்க, அவர்கள் அருகில் வந்தார் ஹர்ப்ரீத்.

“நேஸ், நீங்களும் என்ன மாதிரி லெப்ட் ஹாண்ட் பர்ஸனா? ஸோ, ஸ்வீட்” என்றபடியே அவரை ஜென்டிலாக அணைத்துக் கொண்டார்.

a candid conversation at party

தட்டை டேபிள் மீது வைத்து விட்டு நேசப்பாவும் ஹர்ப்ரீத்தை மரியாதை நிமித்தமாக அணைத்துக் கொண்டார்!

“நீங்க லெப்ட் ஹாண்ட் பர்ஸனா?” என கேட்டார் நேசப்பா.

இது உலக மகா நடிப்புடா சாமி என தோன்றியது சங்கு புஷ்பத்திற்கு!

“ஆமா நேஸ்” என உற்சாகமாக சொன்னார் ஹர்ப்ரீத்.

“அப்பாடா, இன்னைக்கு எனக்கு டின்னர் டைம்ல “எல்போ க்ளாஷ்” ப்ராப்ளம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்” என்றார் நேசப்பா.

புஷ்பத்திற்கு இன்னைக்கு வீட்டில் க்ளாஷ் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

“எல்போ க்ளாஷ்னா என்ன?” என பொதுவாக கேட்டார் புஷ்பம்.

“சீ சங்குமா, இப்போ நா லெப்ட் ஹாண்ட். என் பக்கத்துல ரைட் ஹாண்ட் பர்ஸன் உட்கார்ந்து சாப்பிடும்போது, அந்த பர்சனோட கை, என் கைல இடிக்க சான்ஸ் இருக்கு. இது பொதுவா எங்களுக்கு நடக்கும். ஆனா நேஸ் மாதிரி லெப்ட் ஹாண்ட் பர்ஸன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடும்போது எங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை” என விளக்கினார் ஹர்ப்ரீத்.

“லவ்லி, ஸோ ஸ்வீட்” என சொல்லி சிரித்தார் புஷ்பம்.

“சரி நீங்க சாப்பிடுங்க. ” என நகர ஆரம்பிக்கும் போது, “நீயும் எங்க கூட சாப்பிடேன் சங்கு” என அழைத்தார் நேசப்பா.

“நா ரைட் ஹாண்ட் பர்ஸன் நேஸ்! உங்களுக்கு இடிக்கும்!!” என சீனியர் கேர்ள்ஸ் கோஷ்டி பக்கம் தட்டை எடுத்து கொண்டு போனார்.

நேசப்பா பாந்தமாக சப்பாத்தியை இடது கையால் பிய்த்து, அதை லேசாக க்ரேவியில் தோய்த்து உள்ளே தள்ளி கொண்டிருந்தார்.

கேக், குலாப் ஜாமூன் என லைனாக வந்த அனைத்தையும் கச்சிதமாக, சிந்தாமல் சிதறாமல், லெப்ட் ஹாண்டில் சாப்பிட்டு முடித்தார்.

பத்து மணிக்கு பார்ட்டி முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், சங்கு புஷ்பம் முதல் வேலையாக லக்ஷ்மியின் ரூமிற்க்கு சென்றார்.

புஷ்பம் சொல்ல சொல்ல, லக்ஷ்மி உன்னிப்பாக கேட்டு விட்டு, விழுந்து விழுந்து கண்ணில் நீர் வர சிரித்தாள்.

“மா, நா ஒண்ணு சொல்லுவேன், என்ன திட்டாதே!” என இழுத்தாள்.

“சொல்லு” என்கிறார் புஷ்பம்.

எதையோ அவள் சொல்ல ஆரம்பிக்க, மீண்டும் அடக்க முடியாமல் சிரிப்பை தொடர்ந்தாள்.

“சொல்லிட்டு சிரியேண்டி” என அதட்டினார் புஷ்பம்.

சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு லக்ஷ்மி ஆரம்பித்தாள்.

“மா, நா நெனைக்கிறேன் NDHPனா “Non-Dominant Hand Practise” இல்லை! “Nesappa Dates Harpreet Patel”. கூட்டி கழிச்சி பாரு என் கணக்கு சரியா வரும்” என பன்ச் டயலாக்கை போட்டாள்.

“அடிப்பாவி, கதை அப்படி போகுதா? அந்த மனுஷன் புது கனெக்க்ஷன்னு பேசும் போதே நா யோசிச்சிருக்கணும்” என மெலிதாய் சிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

அம்மாவும் மகளும் அடுத்த இருபது நிமிடம் நேசப்பாவின் லெப்ட் ஹாண்ட் அட்ராசிட்டிகளை பேசி விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

feel good moment between mother and daughter

“மா, வயசான காலத்துல இதுவும் நல்லது தாம்மா! தான் கவனிக்கப்படலை, அட்ராக்ட்டிவா இல்லேன்னு நெனச்சி முடங்கிடாம, அவர் பிளேபுல்லா இருக்கிறது நல்ல விஷயம். நம்ம அப்பாவை பத்தி நமக்கு தெரியும். டீசண்டான மனுஷன். இந்த மாதிரி சின்ன சின்ன பீல் குட் மொமண்ட்ஸ் அவர் மைண்டை பிரெஷ்ஷா வெச்சிக்க ஹெல்ப் பண்ணும்” என சொன்னாள் லக்ஷ்மி.

“சின்ராசுக்கு இந்த வயசுல சின்ன சின்ன பீல் குட் மொமண்ட்ஸ் தேவைப்படுது!” என சொல்லியபடியே தூங்க போனார் சங்கு புஷ்பம்.

மாத்திரைகளை போட்டு கொண்டு, கிச்சனை க்ளீன் செய்துவிட்டு, சோபாவில் உட்கார்ந்து லக்ஷ்மி சொன்ன விஷயங்களை தேடி படித்து பார்த்தார். உண்மை தான் அவள் சொன்னது. தன்னை சமாதானபடுத்த அவள் எதுவும் பொய்யான விஷயங்களை சொல்லவில்லை.

ஹால் விளக்குகளை அணைத்து விட்டு “ஏங்க, ஆறு மணிக்கு அலாரம் வெச்சுடுங்க” என சொல்லிவிட்டு போய் கட்டிலில் படுத்துக் கொண்டார்.

“ஏண்டி ஆறு மணிக்கு எழுந்து என்னடி பண்ண போற?” என கேட்டார் நேசப்பா.

“திலீப் சார் “Deep Healing Synaptic Pathway” அப்படீன்னு சீனியர் சிட்டிசன்ஸுக்கு செஷன் எடுக்குறாராம் பார்க்குல. டின்னர்ல பேசிக்கிட்டுருக்கும் போது சொன்னார்” என்றார் புஷ்பம்.

“அந்த ஆர்மில இருந்து VRS வாங்குன டாக்டர்தானே?” என கேட்டார் நேசப்பா.

“ஆமாங்க” என்றார் புஷ்பம்.

“பாத்ரூம் போயிட்டு வரேன்” என சொல்லி விட்டு லக்ஷ்மி ரூமிற்க்கு போனார் நேசப்பா.

“என்ன, உங்க அம்மா Healing கிளாஸ் போக போறாளாமே? உன்கிட்ட சொன்னாளா?” என கேட்டார்.

“முழுசா சொல்லுப்பா! நானே பாதி தூக்கத்துல இருக்கேன். நீ வேற பிட்டு பிட்டா சொல்ற” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.

நேசப்பா சொல்லி முடிக்க, “ஆமாப்பா, அம்மா சொன்னாங்க. “DHSP” இப்போ ரொம்ப பேமஸ். ஆனா இதுல ஒரு மேட்டர் இருக்கு கவனிச்சியா?” என கண்ணடித்தபடியே கேட்டாள் லக்ஷ்மி.

அவருக்கு கேக்கும், குலாப் ஜாமூனும் ரிவர்சில் வந்து தொண்டையை அடைத்தது.

“என்ன மேட்டர்” என தக்கி தக்கி கேட்டார்.

Dileep Heals Sangu Pushpam” என சொல்லி போர்வையை தலை வரை மூடி கொண்டு சிரித்தாள்.

மறுநாள் காலை சங்கு புஷ்பம் ஆறு மணிக்கு ரெடியாக, நேசப்பா காபி கொடுத்தார். வலது கையில்!

a husband serving coffee

முற்றும்

Tamil novel – OTP – Part 20/20

A senior citizen couple meeting their friend

கூட்டத்தில் இருந்து கிளம்பியவர்கள் குமரஜோதியை வள்ளியப்பன் கடையருகே வர சொன்னார்கள்.

அங்கு இருந்த பஸ் ஸ்டாப் காலியாக இருந்தது. அவரிடம் விவரம் சொல்லி அந்த பணத்தை அவரையே வைத்துக் கொள்ள சொன்னார்கள். அவரின் உதவிக்கு நன்றி சொல்லி யார் வந்து கேட்டாலும் அவர் எதுவும் தரவில்லை. நான் தண்ணீர் கேன் போட்டுவிட்டு வந்து விட்டேன் என சொல்லுமாறு அறிவுறுத்தி கிளம்பினார்கள்.

வீட்டுக்கு போய் உடை மாற்றி செல்லகுமாருக்கு நன்றி சொல்லி இருவரும் போய் பார்க்கில் உட்கார்ந்தார்கள். கல்பனா வந்தார். மொத்த கதையையும் கூர்ந்து கேட்டார்.

விஷயம் தலைமை வரை சென்று சேர்ந்ததை இவர்களிடம் சொன்னார். பி

றகு சற்று யோசித்த கல்பனா “இந்நேரம் லோக்கல் ஸ்டேஷன்க்கு மெசேஜ் வந்திருக்கும். இந்த மாதிரி சென்சிடிவ் மேட்டர் எல்லாம் குமரகுரு சார் தான் விசாரிப்பார். ரத்தினத்தை விசாரிச்சு அவர் உங்க பேர சொன்னா இங்க வர வாய்ப்பு இருக்கு. நாம தயாரா இருக்கணும்” என்றார்.

மூன்று பேரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு கல்பனா சில யோசனைகளை சொல்லி நான் பார்த்துக்கிறேன் என தைரியம் சொன்னார்.

செல்லகுமாரை போய் பார்த்தார் கல்பனா. யாராவது நேசமணி பற்றி விசாரிக்க வந்தால் தனக்கு தகவல் சொல்லுமாறு அறிவுறுத்தினார். பிறகு அவர்களிடம் என்ன கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என சொல்லி புரிய வைத்தார். அதையே சங்கு புஷ்பத்திற்கும் சொன்னார். அந்த இரவு சம்பந்தப்பட்ட அனைவருக்கும்ஒரு நெடிய இரவாக இருந்தது.

எம்பி அவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவர் நம்பவில்லை. பிறகு “சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் பண்ண சொல்லுங்க. அப்புறம் பார்க்கலாம். நாளைக்குள்ள என்ன நிலவரம்னு சொல்லுங்க. ஏதாவது பிரச்சினை இருந்தா கேண்டிடேட்டை மாத்திடலாம்” என்றார் அவர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அண்ணணும் ரத்தினமும் ஆளும் கட்சி வேட்பாளர் நேசமணிக்கு வாழ்த்தும் ஒத்துழைப்பும் தருவதாக உளமார சொன்னது ஆதாரத்தோடு தலைமைக்கு சென்றது.

இங்கே லோக்கலில் புகைச்சல் அதிகமானது. அண்ணன் காதுக்கு வந்த செய்தி எதுவும் நல்ல செய்தி இல்லை.

ரத்தினத்திடம் டம்மி வேட்பாளராக அறியப்பட்ட நேசமணிகளின் டாக்குமெண்ட்டை கேட்டார். அவரிடம் எதுவும் இல்லை. பணம் எங்கே என்றார். தண்ணீர் கேன்காரருக்கு கொடுத்ததாக சொன்னார் ரத்தினம். எதுவும் நம்பம் படியாக இல்லை அவருக்கு.

அப்போது அவருக்கு ஒரு செய்தி வந்தது. புஷ்பா லிஸ்ட் வித் ரத்தினம் ஐடி கார்டு.

“இதெல்லாம் என்ன” என கண் சிவந்தார் அண்ணன். எதற்கும் பதில் இல்லை ரத்தினத்திடம்.

காலையில் லேசாய் சுற்றிய அவரின் தலை இப்போது பம்பரமாய் சுற்றியது.

குமரகுரு ரத்தினத்தை விசாரித்தார். அவர்கள் இருவரின் போன் ரெக்கார்டுகளை எடுத்தார்.

இருவரும் டாக்டர் நேசமணிக்கு செய்தி அனுப்பியது சிக்கியது.

ரத்தினத்தின் கதைப்படி குமரகுரு நேசப்பாவை விசாரிக்க கிளம்பினார்.

“நேசமணி எந்த பிளாட்? என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.

செல்ல குமார் பிளாட் நம்பர் சொன்னார். விசிட்டர் பைல் செக் செய்தார்.

ரத்தினம் வந்தது நோட்டில் இருந்தது. ஐந்து மணி நேரத்திர்ற்கு மேலாக இங்கே இருந்திருக்கிறார். என்னவாக இருக்கும் என யோசித்தார்.

“அவங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க? என்ன பண்றங்க” என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.

“சார் அவங்க ரெண்டு பேரு மட்டும் தான் வீட்ல. ரிட்டையர்டு ஆனவங்க. சார் போஸ்ட் ஆபீஸ்ல இருந்தார். அந்த அம்மா நர்ஸு” என்றார் செல்ல குமார்.

“நீங்க தான் நைட் ஷிப்டா” என்றார் குமரகுரு.

“இல்ல சார். வேற ஒருத்தர் வரணும். அவரு வெளியூரு. அங்க ஒரு டெத்து. அவரு வரல. அதன் நா இருக்கேன்”. என்றார் செல்லகுமார்.

“எந்த ஊரு” என்றார் குமரகுரு.

செல்ல குமார் சொன்னார். “சார், உங்க ஊர்ல ஒரு டெத்தா இன்னைக்கு” என ஊர் தலைவரை விசாரித்தார். அவர் ஆமாம் என்று சொல்ல செல்லகுமாரை நம்ப ஆரம்பித்தார் குமரகுரு.

“ரிட்டையர்டு ஆயிட்டு இப்போ என்ன பண்றாங்க?” என்றார் குமரகுரு.

“அந்த அம்மா லைப் கோச் சார். வர்றவங்க மணி கணக்குல பேசுவாங்க. அவரு வயசானவரு. ரெண்டு பேருக்கும் சுகர். அவங்க பசங்க ரெண்டு பேரு பாரின்ல இருக்காங்க. ஒரு பொண்ணு ப்ரொபஸரா பாண்டில இருக்காங்க. அவங்க மட்டும் வாரா வாரம் வந்து பாத்துட்டு போவாங்க. ரொம்ப டீசண்டான பேமிலி சார்” என்றார் செல்ல குமார்.

இவங்க பேக்கிரௌண்ட் கவுரவமா இருக்கு. ரத்தினம் சொன்னதை சந்தேகப்பட்டார் குமரகுரு.

“சிசிடிவி இருக்கா?” என்றார் குமரகுரு.

“எல்லா ப்ளாக்லயும் இருக்கு சார்” என்றார் செல்ல குமார்.

“சரி, நைட் ஷிப்ட் கிட்ட சொல்லி வைங்க. நா போகும் போது பார்த்துட்டு போறேன்” என்றார்.

“அவங்க வீட்டுக்கு தண்ணீர் கேன் வந்துதா? எப்போ” என அதையும் சேர்த்து கேட்டார்.

“ஆமா சார். மத்தியானம் வந்தார். போட்டுட்டு கொஞ்ச நேரத்துல போயிட்டாரு.

இருங்க நோட்ல பாக்குறேன்” என்றார் செல்லகுமார்.

“இந்த பையன் சிஸ்டமேடிக்கா இருக்கான்” என நல்ல அபிப்ராயம் வந்தது குமரகுருவுக்கு.

“சார் மொத்தம் பத்து நிமிஷம் தான் சார்” என்றார் செல்லகுமார்.

“சரி” என சொல்லி உள்ளே கிளம்பினார்.

செல்ல குமார் பக்கத்தில் இருந்த நைட் வாட்சமேனை பார்க்க அவர் போனை எடுத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் போனார். கல்பனாவுக்கு மெசேஜ் வந்தது.

அவர் குரங்கு குல்லாவை மாட்டிக் கொண்டு கீழே நாயை கூட்டிக்கொண்டு இறங்கி வந்தார்.

“மேடம் நீங்க இங்க தான் இருக்கீங்களா” என்றார் குமரகுரு.

கல்பனா திரும்பி “நீங்க எங்க சார் இங்க? அதுவும் ராத்திரில. நா இந்த பிளாக்ல தான் இருக்கேன்” என்றார்.

“நல்லதா போச்சுங்க. இங்க ஜி பிளாக் நேசமணிய தெரியும்களா” என்றார் குமரகுரு.

“அவங்கள தெரியாதவங்க ரொம்ப கம்மி சார் இந்த காம்பௌண்ட்ல. என்ன சார் விஷயம்?” என்றார் கல்பனா.

சுருக்கமாக கதையை சொன்னார் குமரகுரு.

“என்ன சார் இது. எங்க காம்பௌண்ட்லயே இந்த மாறி ஒரு அட்டெம்ப்ட்டா? எல்லாரும் பச்சவங்க, நல்ல பொசிஷன்ல இருக்கவங்க” என்றார் கல்பனா.

“ஆமாங்க, எனக்கும் அப்டி தான் தோணுது. மூணு நாலு லட்சம்லாம் இங்க இருக்குறவருக்கு ஒரு மேட்டரே கிடையாது. அந்த அமௌண்ட்டுக்கு மானம் மரியாதையை யாரு அடகு வெப்பாங்க?” என கேட்டார் குமரகுரு.

“சார் எதுக்கும் நாம சிசிடிவி ஒரு தரவ பாத்துட்டு முடிவு பண்ணலாம். வாங்க” என ஆபீஸ் ரூம் பக்கம் போனார்கள்.

ரத்தினம் ரிஷப்சனில் காத்திருந்தது, செல்ல குமார் போன் பேசியது, பிப்த் ப்ளோர் காரிடரில் நடந்த உரையாடல், அவர் சங்கு புஷ்பத்துக்கு காசு கொடுத்தது, பிறகு அவர் வெய்ட் பண்ணி உள்ளே போனது என எல்லாம் இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து காபி வந்தது. பிறகு தண்ணீர் கேன் வந்தது. அவர் உள்ளே போய் சில நிமிடங்களில் வெளியே வந்து விட்டார். சில்லறை காசு வாங்கும் நேரம் தான். பிறகு ரத்தினம் கிளம்பி வெளியே போகிறார்.

“சார் இதுல ஏதாவது உங்களுக்கு பொறி தட்டுதா” என்றார் கல்பனா.

“வித்தியாசமா எதுவும் இல்ல. அந்த அம்மா ஏதோ ஸ்ட்ரிக்டா சொல்றாங்க. அவரு அப்புறம் தன் காசு தராரு. மொதல்ல அந்த அம்மா அவரை உள்ளேயே கூப்புடலை. வெளில சேர போட்டு உக்கார சொல்ராங்க. இந்த மாறி டீலிங்க்ல இருக்கவுங்க வெளிப்படையா இருக்க மாட்டாங்க. அப்புறம் காசு தந்தப்புறமும் அந்த அம்மா உடனே உள்ள விடல” என யோசித்தார் குமரகுரு.

“சரி சார். வீட்டுக்கு வாங்க பேசலாம்” என அழைத்துப் போனார் கல்பனா.

“இந்தாங்க சார் பஞ்சாமிர்தம்” என உபசரித்தார் கல்பனா.

“இப்ப எப்படி ப்ரோசீட் பண்றது? என குழம்பினார் குமரகுரு.

“அவங்கள விசாரிக்கணும். ஆனா தொந்தரவா இருக்க கூடாது. இது தப்பான புகாரா இருந்தா வயசானவங்க அவங்க வருத்தப்படுவாங்க” என உண்மையாக கரிசனப்பட்டார் குமரகுரு.

இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் என அமைதியாய் இருந்தார் கல்பனா.

ஸ்டேஷனில் இருந்து போன் வந்தது குமரகுருவுக்கு. தலைமைக்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட் வேணும் என.

“மேடம் அவங்க உங்களுக்கு பழக்கமா? கொஞ்சம் போன்ல கேஷுவலா பேசி பாருங்களேன்” என உதவி கேட்டார் குமரகுரு. கல்பனா போனை போட்டார்.

‘என்ன ஆன்ட்டி இன்னைக்கு எப்படி போச்சு? தூங்குற நேரத்துல தொல்லை பண்ணிட்டேனா. சாரி” என்றார் கல்பனா.

“இல்லமா. லக்ஷ்மி கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். இன்னிக்கு ஒரே அக்கப்போர். சரியான தலைவலி” என்றார் சங்கு புஷ்பம்.

“என்ன விஷயம் ஆன்ட்டி” என தொடர்ந்தார் கல்பனா. ஸ்பீக்கர் போனில் கேட்டபடி இருந்தார் குமரகுரு.

“இன்னைக்கு உங்க அங்கிள் ரொம்ப டென்க்ஷன் ஆயிட்டாரு. யாருன்னு தெரியாத ஒருத்தரு எங்களை பாக்கணும்னு திடீர்னு வந்துட்டாரு. அப்பாயின்மென்ட் கூட வாங்கல. ஒரே ராவடியான ஆளு” என சலித்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

“என்ன ஆச்சு” என கேட்டார் கல்பனா. “என் கிளயண்ட அவ ஆட்டையை போட்டுட்டா” என்றபடி லைனில் குறுக்கில் வந்தார் நேசமணி.

மீண்டும் சங்கு புஷ்பம் தொடர்ந்தார். “அவரு கொஞ்சம் மொரடானா ஆளா இருந்தாரு. கட்சிக்காருனு சொன்னாரு. மீட் பண்ணனும் ஆனா கன்சல்டேஷன் தர மாட்டேன்னு ஒரே அடாவடி. நானும் உள்ள விடல. அப்புறம் தான் வேற வழி இல்லேன்னு குடுத்தாரு” என பொறுமையை சோதித்தார் சங்கு புஷ்பம்.

“அப்புறம் என்ன ஆச்சு” என்றார் கல்பனா.

“எங்க எல்லாருக்கும் மண்டை காஞ்சி போச்சு” என மீண்டும் குறுக்கில் வந்தார் நேசமணி.

இது சரியான காமெடி டைம் பேமிலி என நினைத்தார் குமரகுரு. இவர்கள் இவ்வளவு நார்மலாக இருக்கிறார்கள். அந்த ஆள் இவர்களை கை காட்டுகிறான் என யோசித்தார்.

“என்ன விஷயமா வந்தார்” என கேட்டார் கல்பனா.

“ரொம்ப சிம்பிள் மா. அங்கிள பாக்கணும் அவருக்கு. எலெக்க்ஷன்ல சுயேச்சையா நிக்குறீங்களானு கேட்டாரு. இவரு சுகர் பேஷண்ட்டு. சும்மாவே நிக்க முடியாது. இவரு எங்க சுயேச்சையா நிக்குறது. அவரு இன்டென்ஷன் ரொம்ப தப்பா இருந்தது. நாங்க முடியாது கெளம்புங்கன்னு சொல்லிட்டோம்” என உடைத்து பேசினார்.

“அப்புறம்” என்றார் கல்பனா.

“அவரு கதையை சொன்னாரு. நா லைப் கோச்சுனால ஊர் கதை எல்லாம் பேசினாரு. எட்டாயிரம் பீஸ் வேற குடுத்தாரு. ஒழச்சு சம்பாதிக்குறவன் எவனும் வெட்டி கதைக்கு எட்டாயிரம் தர மாட்டான். நடுவுல திரும்ப அவருகிட்ட பேச ஆரம்பிச்சுட்டான். நாலு லட்சம் தரேன்னு சொல்றான்”.

“நீங்க போக சொல்லலியா?” என்றார் கல்பனா.

“அவரு அவங்க அண்ணன் கிட்ட போன்ல பேசுறாரு. இவருகிட்ட பேசுறாரு. அப்புறம் என்கிட்டே கொஞ்ச நேரம் பேசுறாரு. அவரு எதுக்கு வந்தார்னே எங்களுக்கு புரியல. இன்னும் சொல்ல போனா நம்ம குமரஜோதி தண்ணி கேன் எடுத்துட்டு வந்தா அவருகிட்ட பேசுறாரு. அவரு வீட்டம்மாவுக்கு நல திட்ட உதவி வாங்கி தரேன்னு ஒரே அலப்பறை” என கொட்டி தீர்த்தார்.

“அப்புறம்” என்றார் கல்பனா.

“ஒரு வழியா நாங்க முடியாதுன்னு சொல்லிட்டோம். இன்னொரு விஷயம் சொல்றேன் ஷாக் ஆவாத” என சஸ்பென்ஸ் வைத்தார் சங்கு புஷ்பம்.

“அந்த ஆளு என்ன சுயேச்சையா நிக்க முடியுமான்னு கேட்டாரு. ஒரு கேண்டிடேட்டு புஷ்பாவாம். நா சங்கு புஷ்பம்னு என்ன கேட்டார்.”

“இதுக்கு மேல அவரை பத்தி என்ன சொல்றது” என கொட்டி தீர்த்தார் சங்கு புஷ்பம்.

கல்பனா தொடர குமரகுரு போனிலேயே ரிப்போர்ட் கொடுத்து விட்டார்.

தலைமைக்கு தெளிவாக ரிப்போர்ட் சென்றது.

அண்ணன் மற்றும் ரத்தினமுத்து சேகர் இருவரும் மாற்று கட்சிக்காக வேலை செய்து கட்சிக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக டம்மி வேட்பாளர்களை நிறுத்த சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள்.

கட்சிக்கு கெட்ட பேரையும், கட்சி கட்டுப்பாட்டையும் மீறியதால் அவர்கள் இருவரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கபடுகிறார்கள். கட்சியின் சார்பாக புது வேட்பாளர் நாளை அறிவிக்கபடுவார்” என இரவோடு இரவாக செய்தி குறிப்பு வந்தது. அண்ணனும் ரத்தினமும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் கைதியானார்கள்.

மறுநாள் காலை பேப்பரில் செய்தி வந்தது.

முற்றும்.

Tamil novel – OTP – Part 17/20

A senior man is thinking about a tricky situation

ரத்தினம் அண்ணனை கரைத்து முடிக்கும் போது, சங்கு புஷ்பமும் நேசப்பாவின் நிலையை சுருக்கமாக குமரஜோதிக்கு செய்தியாய் அனுப்பினார்.

பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த அவர் சங்கு புஷ்பம் சொல்வதை செய்வதாக ஒத்துக்கொண்டார்.

நன்றாக சாய்ந்து ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தார் ரத்தினம். “சார் அண்ணன் மேற்கொண்டு ஆக வேண்டியதை பாக்க சொல்லிட்டார். ரெண்டு எல் பிக்ஸ் பண்ண சொன்னாரு” என ஒரு எல்லை ஆட்டையைப் போட்டார்.

“சரிங்க பேசி பாக்குறேன்” என போனை எடுத்தார் சங்கு புஷ்பம். ஒரு பேப்பரில் “சித்தா டாக்டர் நேசமணி நம்பர்” என கொட்டையாக எழுதி கீழே நம்பரை எழுதினார்.

“நேஸ், இந்த ஸ்கிரீன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க” என அழைப்பு விடுத்தார்.

நேசப்பா எழுந்து போய் திரையை சரி செய்தார். இது ரத்தினம் காதால் கேட்டு கண்ணால் பார்த்தது.

நேசப்பா எழுந்தவுடன் சற்றே கண்ணைக் காட்டி பேப்பரை மேஜையில் நகர்த்தி வைத்தார் சங்கு புஷ்பம். திரையை சரி செய்து திரும்பும் போது பேப்பரை கவனித்தவர் அடுத்த ஓவரை வீச ஆரம்பித்தார்.

“நம்ம சித்தா டாக்டரு உங்களுக்கு நல்ல பழக்கமா? என கொக்கியைப் போட்டார் நேசப்பா.

என் வானத்தில் வரும் வானவில்லில் ஏழு நிறமில்லை, எழுபது நிறம் என்ற ரேஞ்சில் மிதப்பமாக இருந்தார் ரத்தினம்.

“இல்லீங்க. நாங்க கட்சிக்கு ரொம்ப விசுவாசமானவங்க. மாற்று கட்சிக்காரங்க கூட தொடர்பு வச்சிக்க மாட்டோம்” என பெருமையாக சொன்னார்.

“நாங்கண்ணா யாரு” என்றார் நேசப்பா.

“நானு, அண்ணன் அப்புறம் கொஞ்சம் முக்கியஸ்தங்க எல்லாருந்தான்” என அவர் அந்தஸ்த்தை அவரே கூட்டிக்கொண்டார்.

“இல்ல பொது வாழ்க்கைல இருக்கீங்க, நாலு நல்லது கெட்டதுல சந்திப்பீங்க. அதான் நேர்ல இல்ல போன்ல பேசிக்குவீங்களா”? என நுணுக்கமான ஒரு கேள்வியை போட்டார்.

சங்கு புஷ்பம் காத்திருந்தது இந்த கேள்விக்குத் தான்.

“இல்லேங்க. போன் தொடர்பு எதுவும் கிடையாதுங்க. நேர்ல பாத்தாலும் வணக்கத்தோடு முடிச்சுக்குவோம். போன்ல நாம ஒண்ணு சொல்ல போய் அத ரெக்கார்டு பண்ணி திரிச்சி போடுறானுங்க மொள்ளமாரி பசங்க. அதனால நம்பரெல்லாம் அநாவசியமா வாங்குறதும் இல்ல குடுக்குறதும் இல்ல” என ரத்தினம் விஸ்க்கி போட்டு டீ ஆற்றினார் நேசப்பாவிடம்.

சங்கு புஷ்பம் காதில் தேனாய் பாய்ந்தது அவர் பதில். சரி கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என தைரியம் வந்தது.

கோமதியின் மெசேஜ் போனில் வர உன்னிப்பாக பார்த்தார் சங்குபுஷ்பம்.

ரத்தினம் கத்தையாக பணத்தை எடுத்து எண்ணி அதில் கொஞ்சம் சங்குபுஷ்பத்திடம் கொடுத்து ஏதோ சொல்வது தெளிவாக இருந்தது. நல்லது என எண்ணிக்கொண்டு கோமதிக்கு ஒரு நன்றியை அனுப்பினார்.

தோராயமாக அவர் ட்ரேஷரு ட்ரோவில் எவ்வளவு இருக்கும் என அந்த வீடியோவிலிருந்து தெரிந்தது.

குமரஜோதிக்கு அவசர செய்தி அனுப்பினார் சங்கு புஷ்பம்.

“நலத்திட்டம் காத்திருக்கிறது. அடையாள அட்டை நகலுடன் வரவும்” என்று.

குமரஜோதிக்கு பரவசம் தாங்கவில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு விரைவாக கிளம்பினார்.

“சார் அவங்க ரெண்டு எல்லுக்கு ஓகே சொல்லிட்டாங்க. ஆனா ஒரு கண்டிஷன். ஒரு எல் இப்பவே தர சொல்றாங்க. ஒரு டாக்குமெண்ட் காப்பி உங்க கிட்ட இப்ப தருவாங்க” என கடையை விரித்தார் சங்கு புஷ்பம்.

“இப்போ அவ்ளோ இல்லீங்களே, ஒரு ரெண்டு நாள் கழிச்சு தரவா” என தவிர்க்கப் பார்த்தார் ரத்தினம்.

“சார் அது நமக்கு ரொம்ப ரிஸ்க்கு. அவங்களுக்கு இப்ப விஷயம் தெரிஞ்சுருச்சு. நீங்க ஒடனே தரேல்லண்ணே நேரா சித்தா டாக்டரு கிட்ட போய் நிப்பாங்க. அப்புறம் இந்த டீலுக்கு நாங்க பொறுப்பு இல்ல. அவர் இந்த பார்ட்டி எலெக்சன்ல நிக்காம இருக்க கூட குடுக்குறேனு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என ரத்தினத்தின் அடி வயிற்றில் ஏற்கெனவே குத்திய இடத்திற்குப் பக்கத்தில் கொஞ்சம் புளியை கரைத்தார் சங்கு புஷ்பம்.

ஜாடை மாடையாய் இவர்களும் தங்களின் கட்சி தாவும் எண்ணத்தையும், ரத்தினத்திற்க்கு அது உண்டாக்கும் அபாயத்தையம் அவர் மூளையில் திணித்தார்கள்.

செத்தாண்டா சேகரு என நிமிர்ந்து உட்கார்ந்தார் நேசமணி. மனைவியிடம் இருந்து குச்சியை இவர் வாங்கிக்கொண்டு ரிலேவில் ஓட ஆரம்பித்தார்.

இப்படி ஒரு சூழ்நிலை வரும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ரத்தினம்.

“சார் எல்லாரும் எங்கள மாதிரி இருக்க மாட்டாங்க. நாங்க டீல் முடியுற வரை ஒரு பைசா அட்வான்ஸ் வாங்க மாட்டோம். ஆனா மத்தவங்க அப்படி கிடையாது. இது ஒரு சிக்கலான விஷயம். காதும் காதும் வெச்ச மாதிரி முடிக்கணும். ரொம்ப இழுக்கக் கூடாது. விஷயம் சித்தா டாக்டருக்கு தெரிஞ்ச நெலமை நம்ம கை மீறி போய்டும்” சங்கு கரைத்த புளியில் சற்று தூக்கலாக காரத்தை கொட்டினார் நேசப்பா.

குச்சி இப்போது சங்கு புஷ்பம் கையில். “சார் இதெல்லாம் ஆரம்பிச்சா ஸ்லோ பண்ண கூடாது. எங்க டீல்ல பாதி அமௌண்ட்டுக்கு படிஞ்சிருக்கு.அதுவே உங்களுக்கு லக்கு. மார்க்கெட் இப்போ ரொம்ப ஸ்பீடு சார். சித்தாக்கு ஒரு போன அவன் போட்டா நம்ம உழைப்பெல்லாம் வேஸ்ட்டு சார்” என்றார்.

“நீங்க வேற அண்ணண் கிட்ட ரெண்டு பேர பிக்ஸ் பண்ணிட்டேன்னு சொல்லிட்டீங்க. அவரும் அமௌண்ட்டுக்கு சரினு சொல்லிட்டாரு. இப்ப நீங்க வெறும் கையோட போய் டீல் முடியலன்னு சொல்ல முடியுமா?” என இன்னொரு பாயிண்ட்டை போட்டார் நேசப்பா.

ரத்தினத்திற்கு காதில் விழுந்த சொற்களில் பாதிதான் மூளையை எட்டியிருந்தது.

மீதி காற்றில் கரைந்து கோபால் சார் வீட்டு பக்கம் போனது. திடீரென நடந்த இந்த நிகழ்வுகளை கோர்வையாக அவரால் உள் வாங்க இயலவில்லை.

“அமௌண்ட்டு கொஞ்சம் ஜாஸ்தி சார் அட்வான்ஸுக்கு. ஒரு பத்தாயிரம்னா பரவால்ல” என சொன்னார் ரத்தினம்.

“சார் அவங்க இங்கேருந்து டாக்டரு கிட்ட போனா அவரு அஞ்சு லட்சத்தை தூக்கி லட்டு மாறி குடுத்து அவங்கள ஆப் பண்ணிடுவாரு” என மீட்டரை ஏற்றினார் நேசப்பா.

யோசித்தவரை ரத்தினத்திற்கு ஒரு எல் உடனே கொடுப்பது தான் புத்திசாலித்தனம் என தோன்றியது.

“சரி சார். ஆனா நா குடுக்குறதுக்கு என்ன ப்ரூப்பு” என விளக்கமாய் கேட்டார் ரத்தினம்.

“ஒரு ப்ரூப்பும் கெடயாது. எதனா இருந்தா பின்னாடி வில்லங்கமாயிடும்” என காட்டமாக சொன்னார் சங்கு புஷ்பம்.

இந்த அம்மா பல ஜென்மமா இந்த தொழில்ல இருக்கும் போல என மலைத்துப் போனார் ரத்தினம்.

“நம்பிக்கை தான் இந்த மாதிரி டீலிங்க்ல முக்கியம். நாளைக்கு உங்கள பகச்சிக்கிட்டு இந்த ஏரியால அவங்களால நடமாட முடியுமா?” என லேசாக ரத்தினத்தின் ஈகோவை முத்தமிட்டார் நேசப்பா.

அந்த முத்தம் ரத்தினத்தை கிறக்கமாக்கியது. “அது எப்படி சார் நடமாட முடியும்? அண்ணன் நல்லவங்களுக்கு நல்லவர். கெட்டவங்களுக்கு கேடு கெட்டவர்” என பன்ச் டயலாக்கை போட்டார் ரத்தினம்.

நாம நல்லவங்களா இல்ல கெட்டவங்களா என யோசித்தார் நேசப்பா.

“சார் உங்களுக்கு சரினு தோணுச்சுன்னா குடுங்க, இல்லேன்னா வேணாம்” என பந்தை அவர் பக்கமே போட்டார் சங்கு புஷ்பம்.

நாலு ஆங்கிள்ல நல்லா யோசித்து கொடுக்கலாம் என முடிவெடுத்தார் ரத்தினம்.

அவரே போய் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான ரெண்டாயிரத்தையும் கொடுத்தார் சங்கு புஷ்பத்திடம்.

“மூணு பத்து வரை உங்க டைம்” என்றார் சங்கு புஷ்பம்.

Tamil novel – OTP – part 15/20

“சார், பதினொன்னு நாப்பது ஆகுது. லாஸ்ட் டென் மினிட்ஸ்” என்றார் சங்கு புஷ்பம்.

டீலிங் படகு நடு கடலில் இருக்கிறது ரத்தினத்திற்கு. டைம் அவுட் வெளியே குதி என்பது போல் சொன்னார் சங்கு புஷ்பம்.

“ஏம்மா சார் கிட்ட இன்னும் நெறய விஷயம் பேசணும். கொஞ்சம் நேரம் ஆகும்” கடுப்பை அடக்கியபடி சொன்னார் ரத்தினம்.

“அப்போ டைம் எக்ஸ்ட்டென்ஷன்க்கு பே பண்ணிடுங்க சார் இப்போ” என்றார் சங்கு புஷ்பம்.

“ஏம்மா பேசி முடிச்சிட்டு கடைசியா போகும்போது குடுத்துட்டு போறேன்” என்றார் ரத்தினம்.

“சார் அரை மணி நேரமா இல்ல ஒரு மணி நேரமான்னு சொல்லிட்டு பே பண்ணிடுங்க. நாங்க நெக்ஸ்ட் அப்பாயின்ட்மென்ட் அட்டென்ட் பண்ணனும்” என அசால்ட்டாக சொன்னார் சங்கு புஷ்பம்.

தங்களுக்கு வெளியே யாரும் லைன் கட்டி நிற்கவில்லை. இவர் கிளம்பினால் சாப்பிட்டு ஆளுக்கு நாலு மாத்திரை போட்டுக் கொண்டு இழுத்துப்போர்த்தி தூங்கத் தான் போகிறோம்.ஆனாலும் சங்கு ரத்தினத்தை சத்தாய்ப்பது நேசப்பாவிற்கு ஆனந்தமாக இருந்தது.

எரிச்சலோடு மீண்டும் கதவோரம் போய் அவரின் ட்ரெஷரு ட்ரோவு ட்ரவுசரிலிருந்து கரன்சியை எடுத்தார்.

“இந்தாங்க, ரெண்டாயிரம். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு” என் நீட்டினார் ரத்தினம்.

“சார், பன்னெண்டு அம்பதுக்கு உங்க டைம் முடியும்” கரன்சியை எண்ணியபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

பிறகு நிதானமாக மேஜை மீது கரன்சியை பரப்பி அதன் மீது டேபிள்வெயிட் வைத்தார். பக்கத்தில் இருந்த சேனிட்டைசரால் கைகளை துடைத்துக்கொண்டே “நோட்டு கொஞ்சம் ஈரமா இருக்குங்க.காசு மஹாலக்ஷ்மி  சார். இவ்ளோ பெரிய கட்சியில எப்பேர்ப்பட்ட பொறுப்புல இருக்கீங்க. ஒரு நல்ல பர்ஸா வாங்கி யூஸ் பண்ணுங்க சார். அந்த பர்ஸ்ல நாலு ஏலக்கா, நாலு கிராம்பு அப்புறம் கொஞ்சம் பட்டை எல்லாம் ஒரு பச்சை கலரு துணில சுத்தி வைங்க. அப்புறம் பாருங்க உங்க கிராப் எங்க போகுதுன்னு” என வாஞ்சையாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

ட்ரவுசர் போட ஆரம்பித்த காலத்திலிருந்து அது தான் கல்லாப்பெட்டி ரத்தினத்திற்கு.

அடி வயிற்றில் குத்திய ரணம் ஆருகையில் அவர் ஈகோவில் ஒரு இடி இடித்தார் சங்கு புஷ்பம்.

“எப்பேர்ப்பட்ட பொறுப்புனு ” இந்த அம்மா சொல்லுற மாதிரி தான் எந்த பொறுப்புல இருக்கோம்னு குழம்பினார்.

“நாலு எடத்துக்கு போறவரு. பெரிய மனுஷங்களை பாக்குறவரு நீங்க போற எடத்துல எல்லாம் ஒதுக்குப்புறம் தேட முடியுமா. இப்ப வேற எல்லா மூலை முடுக்குலேயும் சிசிடிவி கேமரா இருக்கு” என ஒரு எக்ஸ்ட்ரா பாயிண்ட்டை போட்டார் சங்கு புஷ்பம்.

பகீரென்று ஆனது ரத்தினத்திற்க்கு. பர்ஸ் வாங்கி விட்டுத்தான் மறு வேலை என உறுதியெடுத்தார்.

சக டிரௌசர் கோஷ்டியையும் அலெர்ட் செய்ய வேண்டும் என குறித்துக்கொண்டார்.

வந்த வேலைக்கு பிள்ளையார் சுழி கூட போடாத நிலையில் நாலாயிரம் பணால். இன்னும் இவர்களை வைத்து எப்படி மொத்த டீலிங்கையும் முடிப்பது என நாக்கு தள்ளிப்போனார் ரத்தினம்.

நேசப்பாவிற்கு யோசிக்க நேரம் நிறைய கிடைத்தது.

தொடர்ந்து சங்கு புஷ்பம் ரத்தினத்திடம் பேச்சு கொடுத்துக்கொண்டே போனிலும் சிஸ்டத்திலும் வேலை செய்து கொண்டிருப்பதை கவனித்தார் நேசப்பா.

இப்போது அவர் நிராயுதபாணி. அவர் எதிரே இருக்கும் ரத்தினத்தை நேருக்கு நேர் கையாளுவதே அவருக்கு சவாலான காரியமாக இருந்தது. அதனால் சங்கு புஷ்பம் கொடுக்கிற குறிப்புகளை கொண்டு இந்த சூழ்நிலையை எதிர் கொள்வது என முடிவெடுத்தார்.

சங்கு புஷ்பத்தின் மனம் வேதனையாய் இருந்தது. தலை மறைவு வாழ்க்கை வரை நேசப்பாவை கொண்டு சென்றதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

நமக்கு விருப்பமில்லை என சொல்லி ஒதுங்கிக்கொள்ளலாம். ஆனால் இவர் வேறு இரையை போய் தேடுவதை நிறுத்த முடியாது. எனவே ரத்தினத்திற்கும், அவரின் ஆருயிர் அண்ணனுக்கும்,அருமை அண்ணியின் வெற்றிக்கும்  கன்னி வெடி வைக்க வேலையை ஆரம்பித்தார்.

“நா மட்டுந்தானா இல்ல வேற யாராவது இந்த பேர்ல இருக்காங்களா உங்க டீலிங்க்ல” என அடுத்த ஓவரை வீச ஆரம்பித்தார் நேசமணி.

இக்கட்டான கேள்வி இது ரத்தினத்திற்கு. அவர் இன்னும் டிரௌசர் ட்ராமாவிலிருந்தே வெளியே வரவில்லை.

பர்ஸ் பச்சைக்கலரு துணி என மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவரை வாலன்டரியாக வண்டியில் தூக்கிப் போட்டார் நேசப்பா.

குமாரு, சேகரு என வேட்பாளராக இருந்தால் தெருவுக்கு தெரு அந்த பெயரில் ஆட்கள் இருப்பார்கள்.

பேரம் அவசியமில்லை. ரெண்டு மூணு பலகீனமான ஆட்களை தேற்றி விடலாம்.

இந்த நேசமணி, அலெக்சாண்டர் எல்லாம் இம்சை புடிச்ச பேர்கள். எங்காவது ஒன்றிரண்டு தான் இருக்கும். அதில் ஒன்று வேட்பாளராக இருக்கும். அந்த வார்டில் மாற்றுக்கு எங்கே தேடுவது.

என்ன சொன்னாலும் சிக்கல். இவர் ஒருத்தர் தான் என்றால் ரேட் இன்னும் ஏற்றுவார்.

“அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க. நம்ம மேட்டர முடிக்கலாம்” என அவசரம் காட்டினார் ரத்தினம்.

“இல்ல நாங்க ஒரு சங்கமா இருந்தா நல்லது பாருங்க” அதான் கேட்டேன் என சொன்னார் நேசப்பா.

சங்கமா, இவங்க ரெண்டு பேரையே சமாளிக்க முடியல. இதுல இவங்க செட்டு சேந்தா அவ்வளவு தான் என பயந்தார் ரத்தினம்.

“நீங்க ஒருத்தரரு தாங்க” என பம்மினார்.

நேற்று வரை அரசியல் வாடையே இல்லாமல் இருந்தவர்கள் இவர்கள்.

இந்த காலை பொழுது அவர்களுக்கு அதன் இன்னொரு பரிணாமத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

சங்கு புஷ்பமும் கார்பொரேஷன் மற்றும் தேர்தல் ஆணைய வெப்சைட் என எல்லாவற்றையும் துழாவினார். ஓரளவிற்கு அவருக்கு விஷயம் பிடிபட்டது.

லக்ஷ்மி அனுப்பிய லிஸ்டையும் டவுன்லோட் செய்து ப்ரிண்டு எடுத்தார்.

நேசப்பா பேசிக்கொண்டே இருக்க பிரிண்டர் சரக் சரக்கென்று ஓயாமல் வேலை செய்து கொண்டிருந்தது.

“ரத்தினம் நம்பர விசிட்டர் நோட்ல எழுதி இருப்பார். அத எனக்கு வாட்சப் பண்ணுங்க” என செல்லகுமாருக்கு செய்தி அனுப்பினார் சங்கு புஷ்பம்.

அடுத்த செய்தி கல்பனாவுக்கு. சிட்டி போலீசில் வேலை செய்பவர். பி ப்ளாக்கில் குடியிருக்கிறார். இந்த சொசைட்டிக்கு வருவதற்கு முன்பே சங்கு புஷ்பத்திற்கு பழக்கம். அடிதடி, கத்தி குத்து, ஆக்ஸிடெண்ட், சூசைட் அட்டெம்ப்ட் என எல்லா கேசும் ஜி.எச்சுக்கு தான் வரும்.

“சிஸ்டர், இந்த கேஸ கொஞ்சம் மானிட்டர் பண்ணுங்க” என சங்கு புஷ்பத்திடம் உதவிக்கு வருவார் கல்பனா.

அந்த வார்டுல எந்த சிஸ்டர் ஷிப்ட்ல இருக்காங்க என பார்த்து சர்வைலென்சுக்கு சொல்லி வைத்து விடுவார் சங்கு புஷ்பம்.

நைட் ஷிப்ட் நர்சஸம்மா தலைய டேபிள்ள கவுந்துக்கிட்டு தூங்குது என என்ன பேசினாலும் கல்பனா காதுக்குப் போய்விடும். ரெண்டு தனிப்படை போட்டாலும் கிடைக்காத ரிசல்ட் அது.

ஆள் பேரு இரத்தின முத்து சேகர். வயசு அம்பது கிட்ட. கட்சி பேரு ஏரியா பேரு போட்டு டீடெயில்ஸ் கேட்டு அனுப்பினார் கல்பனாவுக்கு. சிக்கலான விஷயத்தில் இருப்பதாக உதவி கேட்டார் சங்கு புஷ்பம்.

மூன்றாவது செய்தி கோமதிக்கு. இன்னைக்கு காலைல பத்து முப்பதுலேர்ந்து பத்து நாப்பதுக்குள்ள பிப்த் ப்ளோர் காரிடார் சிசிடிவி புட்டேஜ் அனுப்பும்மா.

அப்டியே பத்துமணி கிட்ட அவர் விசிட்டர் நோட்ல நேசமணின்னு பேர் எழுதுவாரு. அத ஜூம் பண்ணி எடுத்து போடும்மா”.

பர பரவென்று டைப் செய்து அனுப்பினார் சங்கு புஷ்பம்.

மூவரின் பதிலுக்கு காத்திருக்கும் வேளையில் லக்ஷ்மி அனுப்பிய வாக்காளர் லிஸ்டை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தார் சங்கு புஷ்பம். இன்னொரு பட்சி மாட்டியது.

பக்கத்துத் தெருவில் ஒரு தகுதிவாய்ந்த இல்லத்தரசி இருக்கிறார் நேசமணி என்ற பேரில்.

ரத்தினம் முன்பே இருந்த க்ளாசில் சரக்கு காலியாகி இருந்தது. நேசமணி ஒரு இருபாலர் பெயர் என்பதை அவர் கவனிக்கவில்லை.

வேட்பாளர் ஆண் என்பதால் ஆண் வாக்காளரை தேடுவதிலேயே குறியாய் இருந்திருக்கலாம்.

இதுவரை நடந்தவற்றை மகளுக்கு செய்தியாய் அனுப்பினார். பாவம் அவள். சொல்லாமல் இருந்திருக்கலாம் என நினைத்தார் சங்கு புஷ்பம்.

கணவர் பெயர், முகவரி என கிடைத்த தகவல்களை நோட் செய்து கொண்டார்.

அப்போது தான் அவருக்கு மண்டையில் அடித்தார் போல் அந்த பெயர் ஞாபகம் வந்தது. கணவர் பெயர் குமரஜோதி என இருந்தது. முகவரியும் அவர்கள் கடை இருக்கும் ஏரியா. இவர்கள் சொசைட்டிக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர். நல்ல பழக்கம். குணமான மனிதர்.

சந்தேகமே இல்லாமல் சங்கு புஷ்பத்திற்கு அது கடவுள் இருக்கான் குமாரு மொமெண்ட் தான்.

டிங் என மெசேஜ் வந்தது செல்ல குமரிடமிருந்து. போனை எடுத்து முதலில் சைலண்டில் போட்டார் சங்கு புஷ்பம். ரத்தினம் நம்பர் வந்து சேர்ந்தது.

“இன்னொருத்தர் கெடச்சா ஓகேவா” எனக் கேட்டார் சங்கு புஷ்பம். “யாரு” என புருவத்தை நெளித்தார் ரத்தினம்.

“இன்னொரு நேசமணி கெடச்சா ஓகேவா” என அழுத்திக் கேட்டார் சங்கு புஷ்பம்.

“அது வந்து, இல்லியே” என இழுத்தார்.

“அட நல்லது தானே. ஆள் கூட கூட குழப்பம் கூடும்ல. இன்னும் டாக்டருக்கு ஓட்டு குறையும்ல” என ஒத்து ஊதினார் நேசப்பா.

“இல்லேங்க, இவரு ஒருத்தர் தான்” என திடமாய் சொன்னார் ரத்தினம்.

“சரி, எனக்கு தெரிஞ்சு இன்னொருத்தர் இந்த பேர்ல இருக்காங்க நம்ம ஏரியால.

உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க. நாங்க முடிச்சி தர்றோம்” என சப் காண்ட்ராக்ட் கேட்டார் சங்கு புஷ்பம்.

நேசப்பாவிற்க்கு குதூகலமாக இருந்தது. சங்குவிடம் ஏதோ மேட்டர் இருப்பது புரிந்தது.

இவங்க டீலிங்கே எனக்கு நா சொந்த செலவுல வெச்சுகிட்ட சூனியம். ஒண்ணுமே இல்லாம நாலாயிரம் கோவிந்தா. மானம் மரியாதை எல்லாம் டிரௌசரால காத்துல பறக்குது. செத்து செத்து விளையாடலாம் வான்னு 

கூப்பிடுவது போல் இருந்தது ரத்தினத்திற்கு.

“இல்லேங்க நீங்க டீட்டைல் சொல்லுங்க. நா போய் பேசிக்குறேன்” என இறங்கி வந்தார் ரத்தினம்.

“நீங்க பேசினா அவங்க படிய மாட்டாங்க” என்றார் சங்கு புஷ்பம். “ஏன்?” என விரைப்பாய் கேட்டார் ரத்தினம்.

“அதான் சங்கத்து ரூல்ஸ்!” என்றார் நேசப்பா.

ரத்தினத்திற்கு காலின் கீழே பூமி இரண்டாய் பிளந்தார் போலிருந்தது.

Tamil novel – OTP – part 14/20

A senior woman checking the news in the internet

காபி குடிக்கும் நேரம் இரண்டு தரப்பும் தங்களை கொஞ்சம் தயார் படுத்திக்கொண்டார்கள். “கண்டிப்பா ஜெயிக்க வெச்சுடுவீங்களா” என்றார் நேசப்பா.

ரத்தினம் சற்று முன்னே வந்து “இல்ல சார், எங்க ஆளு ஜெயிக்க வியூகம் சார் இது” என்றார்.

“அப்போ நா தோக்கணுமா?” என நெருடலாய் கேட்டார் நேசமணி.

“அதுக்காகத்தான் சார் இந்த ஆபர். ஜஸ்ட் கொஞ்சம் கோஆப்பரேட் பண்ணீங்கன்னா ஈஸியா ஒரு அமௌண்ட் பாக்கலாம்” என்றார் ரத்தினம்.

பல முறை பேப்பரில் படித்த செய்தி இப்போது அவர் முன்னே மலையாய் வந்து நிற்கிறது. திரும்பி சங்கு புஷ்பத்தை பார்க்க, தொடருங்கள் என்பது போல அவர் தலையை ஆட்டினார். தன் சுயமரியாதையின் விலை பட்டியலிடப்பட்டு பேரத்தில் இருப்பது உறுத்தியது. சற்று பிறகுதான் அது வெறும் தன் பெயருக்கான விலை என்று புரிந்தது. மூச்சை இழுத்து விட்டு சாய்ந்து உட்கார்ந்தார் நேசப்பா.

தோத்தா எனக்கு கெட்ட பேராச்சே சார்” என்றார் நேசப்பா.

அதெல்லாம் கொஞ்ச நாள்ல ஜனங்க மறந்துடுவாங்க சார். உங்க லாபத்தை மட்டும் பாருங்க சார். ஒண்ணுமே பண்ணாம உக்காந்த இடத்துல இருந்து ஒரு வாய்ப்பு. இது எல்லாருக்கும் கிடைக்காதுங்க. திரும்பவும் வரும்னு சொல்ல முடியாதுங்க. யோசிச்சு சொல்லுங்க சார்” என மண்டையை கழுவ ஆரம்பித்தார் ரத்தினம்.

அவரின் அனுபவம் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்தது.

ரத்தினத்திற்கு அவர் நாலு வரி முழுதாய் பேசி முடித்த பிறகு தான் நம்பிக்கையை உணர்ந்தார். இன்னும் கொஞ்சம் அழுத்தினால் எப்படியும் முடிக்கலாம் என நினைத்தார்.

நேசப்பா இயல்புக்கு வந்தார். இன்னும் கொஞ்சம் போட்டு வாங்கலாம் என ஆரம்பித்தார்.

“என் பேருக்கு வெறும் மூணு எல் தானா? என்றார். பேரம் ஆரம்பித்தவுடன் ரத்தினத்திற்கு உள்ளே பெருமை பொங்கியது.

இந்த ரத்தினம் பேசினா எந்த கொம்பனும் மடங்கிடுவான் என குதூகலித்தார். என்ன பேச்சுடா சாமி பேசுனாங்க ரெண்டு பேரும் என எரிச்சலானார்.

பல்வேறு உணர்ச்சிகள் அவரை ஆட்கொள்ள, அதில் சிறிது அவரின் உடலிலும் முகத்திலும் தெரிந்தது.

“தோக்கணும், அசிங்கப்படணும், பேரும் கெட்டு போகணும், சொசைட்டில நடமாட முடியாது சார். இவ்வளுவுக்கும் விலை மூணு எல் னா சரிபடாது சார்”, என முகத்தை சுளித்தார் நேசப்பா.

ரத்தினத்திற்கு பொறுமை கொஞ்சம் ஆட்டம் கண்டது.

“சார் நாலு எல் பைனல் பிளஸ் உங்க எல்லா செலவும் எங்களோடது.

சொசைட்டில நடமாட முடியாதுனு பீல் பண்ணீங்கன்னா ஒரு மாசத்துக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஊட்டில ஏர் பிஎன்பில தங்க ஏற்பாடு பண்ணித்தரேன். போய் வர்ற செலவையும் ஏத்துக்கறேன்” சர சரவென பேசி தீர்த்தார் ரத்தினம்.

உயிரோடு பிணமாகவும், தலை குனிந்து நடக்கவும், தலை மறைவாய் வாழும் வரையும் திட்டம் தருவது நேசப்பாவை உலுக்கி எடுத்தது. மிக சாதாரணமாய் ஆரம்பித்த ஒரு சந்திப்பு கொதிநிலையின் உச்சத்திற்கு அவரை கொண்டு சென்றது. தேர்தல் வெற்றிக்காக சக மனிதனை விலை பேசுவது, அந்த சமூகத்தில் எளிய விளிம்பு நிலையில் இருக்கும் வாக்காளர்களை குழப்பி, தவறாக வழி நடத்தி ஆதாயம் காண்பது என அராஜகத்தின் முழு உருவமும் அவர் முன்னே விஸ்வரூபமாய் நின்றது.

வாழ்நாள் முழுவதும் நேர்மையாகவும் வலுவான தார்மீக கொள்கை பிடிப்புள்ளவராகவும் எல்லா சூழ்நிலைகளையும் சந்தித்தவர் நேசப்பா. அவர் கண்ணியத்தின் மீதும் நன்னெறிப் பண்புகள் மீதும் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு, அவரின் தனிப்பட்ட விழுமியங்கள் சூறையாடப்படும் அபாயத்திலிருந்தது. சமூக, அரசியல் மற்றும் பண செல்வாக்கோடு மூர்க்கமாகவும் அலட்சியமாகவும் நடத்தி அவரை இணங்கிப் போகும்படி செய்துவிடலாம் என எந்த எல்லைக்கும் செல்பவராக ரத்தினம் இருந்தார்.

பொருளாதார ரீதியாகவோ மன வலிமை ரீதியாகவோ பலகீனமானவர்களை எளிய இலக்குகளாக குறி வைக்கிறார்கள் ரத்தினம் போன்றவர்கள்.

உறுதியாகவும், மன உந்துதலோடும், நிதானமாக உணர்வுகளை கட்டுக்குள் வைத்தும் இந்த இழிவான போக்கில் சிக்காமல் இருக்க வழி வகைகளை சிந்தித்தார்கள் நேசப்பாவும் சங்கு புஷ்பமும்.

“ஓ.டி.பி வந்திருக்கு நேஸ். டென்ஷன் ஆகாதீங்க” என்றார் சங்கு புஷ்பம் சிஸ்டத்தில் பார்த்தபடியே. போனை எடுத்து குறுஞ்செய்தியை படித்தார் நேசப்பா.

“ஒரு திமிரெடுத்த பொறம்போக்கு” என செய்தி அனுப்பி இருந்தார் சங்கு புஷ்பம்.

லேசாக புன்னகைத்த படியே வாய்க்கு வந்த நாலு இலக்க எண்ணை சொன்னார் நேசப்பா.

ஓ.டி.பிக்கு எதுக்கு டென்ஷன் ஆவணும், இவரு ஏன் சிரிக்கணும் என முழித்தார் ரத்தினம்.

Tamil novel – OTP – Part 13/20

A woman professor discussing with her students

லக்ஷ்மிக்கு மனது சங்கடமாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் எப்படி தனியாக இந்த பிரச்சினையை சமாளிக்கப் போகிறார்கள் என மனது வருத்தப்பட்டார்.

தொடர்ந்து சங்கு புஷ்பம் அனுப்பும் செய்திகளில் இருந்து அங்கு என்ன நிலவரம் என தெரிந்து கொண்டார். செய்தி கேட்டதிலிருந்து இணையத்தில் இந்த தேர்தல், இதற்கு முன் நடந்த தேர்தலின் முடிவுகள் மற்றும் வாக்காளர் தகவல்கள் என எல்லா விஷயங்களையும் தேடி தேடி படித்தார்.

தனக்கு கிடைத்த எல்லா விஷங்களையும் அம்மாவுக்கு அனுப்பி வைத்தார். ஏதாவது ஒரு வகையில் அது அவர்களுக்கு உதவலாம் என் நம்பினார்.

கேண்டிடேட்டு புஷ்பாவுக்கு எதிராக டாக்டர் நேசமணி.

டாக்டர் நேசமணிக்கு வரும் வாக்குகளை பிரிக்க மற்றும் மக்களை குழப்ப அதே பெயரில் இருக்கும் சிலரை டம்மி வேட்பாளர்களாக நிறுத்துவது. சில வார்டுகளில் சொற்ப வாக்குகளில் வெற்றி வித்தியாசம் இருந்தது. ஆளும் கட்சி, எதிர் கட்சி, பிற வளர்ந்து வரும் கட்சிகள் ஏன் சுயேச்சை வேட்பாளருக்கு எதிராக கூட கடந்த தேர்தலில் இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டதை கவனித்தார். அது கேண்டிடேட்டு லிஸ்டில் அப்பட்டமாக தெரிந்தது.

யார் இதை செய்தார்கள் என பெரும்பாலும் பொது வெளியில் தெரியாது.

பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் இந்த போக்கு காணப்பட்டது.

படித்த வாக்காளர்களும் பாமரர்களும் பெரும்பாலும் அவர்கள் வார்டின் முழு லிஸ்டையும் அலசி ஆராய்வதில்லை. அது தெரிந்தாலும் பெரிதாய் எடுத்து கொள்வது இல்லை.

கேண்டிடேட்டு மற்றும் வாக்காளர்களும் இடையே இதில் நுட்பமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த டம்மி கேண்டிடேட்டுகள்.

அவர்கள் அரசியல் மற்றும் பொது வாழ்வில் இல்லாமல் இருக்கும் சாமானிய மக்கள்.

அவர்களுக்கு இருக்கும் தேவைகள் அல்லது பலகீனங்களின் காரணமாக டம்மியாக களம் காண்பவர்கள்.

அவர்களின் பெயரையும் சுய மரியாதையும் ஏதோ ஒரு அழுத்தம் அல்லது நிர்பந்தம் காரணமாக விலைக்கு விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள்.

லக்ஷ்மி கடந்த தேர்தல் முடிவுகளை மீண்டும் ஒரு முறை எடுத்துக் பார்த்தார்.

எந்த ஒரு வார்டிலும் அதில் போட்டியிட போகும் நபரை அந்த கட்சி சார்ந்த அல்லது அரசியல் தொடர்புடைய நபர்களுக்கு மட்டுமே இவர் வேட்பாளராக வருவார் என தெரிந்திருக்கும்.

பிரபலமான சுயேச்சை என்றால் கூட ஊகிக்க முடியும்.

ஆனால் பொது ஜனத்துக்கு தெரியவோ ஊகிக்கவோ வாய்ப்பு மிக குறைவு.

அதனால் இந்த அணுகுமுறையின் ஊற்றுக் கண் பொது ஜனம் அல்ல, கட்சி சார்புடையவர்கள் என முடிவுக்கு வந்தார்.

அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அல்லல் படும் பொது ஜனம் கண்டிப்பாக இந்த குறுக்கு வழி வாய்ப்பை பற்றி சிந்திக்கவோ அல்லது அது தொடர்பான தகவல்களை அணுகவோ இயலாதவர்கள்.

அடி மட்டத்தில், சமூக அல்லது பொருளாதார செல்வாக்கு இல்லாதவர்களாக இருக்கும் இவர்களை குறி வைத்து செய்யப்படும் இந்த இழி செயல் தடுக்கப் பட வேண்டும் என நினைத்தார் லக்ஷ்மி. இதை செய்பவர்கள் பொது சமூகத்தில் ஆதாரத்தோடு வெளிப்பட வேண்டும் என எண்ணினார்.

அந்த வார்டில் பதினாறாயிரம் வாக்காளர்கள் இருந்தார்கள் பட்டியலில். லக்ஷ்மி அந்த லிஸ்டை பிரிண்ட் எடுத்தார். நன்றாக படிக்கும் சில மாணவிகளை அழைத்து நேசமணி மற்றும் புஷ்பா பெயர் உள்ளவர்களை குறித்துக் கொள்ள சொன்னார்.

அதில் எல்லா காம்பினேஷன்களும் அடக்கம். வெறும் புஷ்பா மட்டுமல்லாமல் புஷ்பவல்லி, புஷ்ப குமாரி, புஷ்பா ராஜ் என ஆண் மற்றும் பெண் பெயர்களும் தேடப்பட்டது.

அதே போல நேசமணி என்ற பெயருக்கும். நேசமலர், நேசகொடி, நேசசெடி என எது இருந்தாலும் குறித்துக் கொண்டார்கள்.

முழு லிஸ்டும் ரெடியானது. புஷ்பா பெயரில் பதினெட்டு பேர். நேசமணி காம்பினேஷனில் மூன்று பேர்.

எல்லாவற்றையும் ஒரு எக்சல் ஷீட்டில் போட்டு அம்மாவுக்கு அனுப்பினார் லக்ஷ்மி. அந்த லிஸ்டில் சங்கு புஷ்பமும் இருந்தார்.

Tamil novel – OTP – Part 12/20

TN politician enjoying his meal

பத்து நிமிடம் கழித்து ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார் நேசமணி.

“ரத்தினம் சார், மணி இப்போ பத்து அம்பது. பதினொன்னு அம்பதுக்கு உங்க டைம் முடியும்” என்றார் சங்கு புஷ்பம்.

இந்த அம்மா சரியான எரிச்சல் டேங்கர் என கறுவினார் ரத்தினம்.

உதார் பேச்சு பேசியோ நைச்சியமாக பேசியோ ஆளுக்கேற்றார் போல் வளைந்து கொடுத்து போனவர். பல ஆண்டுகளாக வாங்கியே பழக்கப்பட்ட கைகள்.

கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல தன்னிடமிருந்தே பணம் வாங்கியதை அவர் மனம் ஏற்க மறுத்தது.

உங்க பேர் என்ன சார்? என்ன விஷயமா பாக்க வந்தீங்க? என்றார்.

“சார், என் பேரு ரத்தினமுத்துசேகர். நம்ம தொகுதி எக்ஸ் எம்எல்ஏ கட்சிலேர்ந்து வரேன். கார்ப்பொரேஷன் எலெக்க்ஷன் விஷயமா பேசணும்” என்றார்.

சேகரா இவரு. அவளை கைலயே புடிக்க முடியாது என மனதில் நினைத்துக்கொண்டார் நேசப்பா.

ரத்தினம் சுத்தி சுத்தி பார்வையை ஓட்டி ஹாலை நோட்டமிட்டார்.

சங்கு புஷ்பம் சிஸ்டத்தை ஆன் செய்து நோட்பேடை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

“சார், நீங்க ஜோசியம் இல்ல வாஸ்து அது மாதிரி ஏதாவது பாக்குறீங்களா?”

என்றார் ரத்தினம். “இல்லிங்க” என்றார் நேசப்பா.

“அப்போ, இந்த வெயிட் லாஸ், ஹீலிங் அந்த மாதிரியா? என்றார். “இல்லிங்க” என்றார் நேசப்பா.

“மேடம் கன்சல்டேஷன் சார்ஜ் கேட்டாங்க. அதான் எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமுன்னு கேட்டேன்” என்றார் ரத்தினம்.

“ஏதோ ஒரு வேலையா தான என்ன பாக்க வந்தீங்க. அதுக்காக தான்”

என ரத்தினதினின் கண்களை ஊடுருவியபடியே சொன்னார் நேசப்பா.

“என்ன தேவைக்காக என்கிட்ட வந்தீங்கன்னு தெரியாது. ஆனா என் நேரத்தோட மதிப்பு எனக்கு தெரியும்” என்றார் நேசப்பா.

இந்த ரெண்டு பேரும் ஒரு மார்க்கமான டிசைனா இருக்காங்களே என உள்ளுக்குள் அரற்றினார் ரத்தினம்.

“கார்பொரேஷன் எலெக்க்ஷன்ல நீங்க சுயேச்சையா நிக்கணும் சார். அத பத்தி பேச தான் வந்தேன்” என்றார் ரத்தினம்.

“எலெக்க்ஷன் விஷயம்னு சொல்றீங்க. தனியா வந்துருக்கீங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“ஆமாங்க, கஷ்டப்பட்டு வியூகம் அமைச்சு செஞ்சா கூட வர்றவன் பேர வாங்கிட்டு போயிடுவான். அதான் நா மட்டும் வந்தேன்” என்றார் ரத்தினம்.

“சார் ரொம்ப ஸ்ட்ராங்கான பெர்சோனாலிடியா இருக்கீங்க. நல்லது சார். நா நேரா விஷயத்துக்கு வரேன்.

அவர் அண்ணி வேட்பாளராக இருப்பதை சொன்னார்.

“அண்ணிய விட சித்தா டாக்டர் நேசமணி பவர்புல் இந்த வார்டுல. அதுனால அதே பேர்ல இருக்குறவங்கள கேண்டிடேட்டா சுயேச்சையா நிக்க வெக்க ஏற்பாடு பண்றேன். கொஞ்சம் ஓட்டு பிரியும். அது எங்களுக்கு சாதகமா இருக்கும்னு நம்புறன். அப்புறம் உங்களுக்கு என்ன பண்ணணுமோ அதையும் பண்ணிடுவோம் என்றார்” ரத்தினம்.

“என்ன பண்ணுவீங்க சார்” என்றார் நேசமணி.

“எல்லா செலவும் அண்ணன் பார்த்துப்பார் சார், நீங்க பேப்பர்ஸ் மட்டும் கரெக்ட்டா குடுத்தா போதும். பசங்கள வச்சி எல்லா வேலையும் பக்கவா நடக்கும் சார். உங்க நாமினேஷன் ஓகே ஆச்சுன்னா ஒரு அமௌன்ட் குடுத்துருவோம்” என்றார் ரத்தினம்.

“எவ்ளோ தருவீங்க” என்றார் நேசப்பா.

“ஒரு மூணு எல் தருவார் சார் அண்ணன்” என்றார் அவர்.

சந்தேகப்பட்ட விஷயம் தெளிவாகி விட்டது. இது காலை சுற்றிய பாம்பு என நினைத்தார் சங்கு புஷ்பம். சிஸ்டத்தில் அமர்ந்தபடியே லக்ஷ்மிக்கு போனில் செய்தி அனுப்பினார்.

“அரசியல் விஷயமா வந்து இருக்கீங்க, உங்களுக்கு எதுவும் சாப்பிட தர மறந்துட்டேன் பாருங்க. இதோ வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.

ரத்தினத்திற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. எப்படியும் படிந்து விடுவார் என தோன்றியது.

“இந்தாங்க சாப்பிடுங்க”, என ட்ரேவை வைத்தார் நேசப்பா.

ஒரு சின்ன பிளேட்டில் பிரியாணியும் ஒரு கிளாஸ் விஸ்கியும் இருந்தது.

அடி வயிற்றில் சரக்கென்று கத்தியால் குத்தியது போலிருந்தது ரத்தினத்திற்கு.

அவர் முகம் வெளிறிப்போனது

“இது இது” என ஏதோ சொல்ல வந்து தடுமாறினார்.

“சாப்பிடுங்க சார். எங்க ஆளுங்களை இத்தனை வருஷமா கூட்டிட்டு போய் கவனிச்சுக்கிட்டீங்க. ஒரு நாள் நாங்க செய்ய கூடாதா” என்றார் நேசப்பா.

எதிரியின் அடி வயிற்றில் கத்தியால் குத்தியும் வஞ்சம் தீராமல் அவன் கன்னத்தில் பளுக் பளுக்கென்று போட்டார் போல வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.

“இது சரி இல்லீங்க. இப்ப வேணாம் சார்” என நாக்குழறினர் ரத்தினம்.

இது அவர் இதுவரை சந்திக்காத ஒரு நிகழ்வு. இந்த விதமான உபசரிப்பு அவரின் மொத்த தயாரிப்பையும் சீர்குலைத்தது. யாரை பார்க்க வந்தோம் என்ன பேச வந்தோம் என சில நிமிடம் எல்லாம் மறந்து தத்தளித்தார் ரத்தினம்.

“ஓ, பகல்ல சாப்பிடறதில்லையா, சரி காபி டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா?” என வலையை விரித்தார் நேசப்பா.

ரத்தினத்திற்கு ஒரு பிடிப்பு கிடைத்தார் போலிருந்தது. ஆனாலும் அந்த டிரே அவரை உறுத்திக்கொண்டே இருந்தது.

“ஏம்மா அபர், சாருக்கு காபியாவது குடும்மா என்றார் நேசப்பா.

ரத்தினத்திற்கு போன மூச்சு வந்தார் போலிருந்தது. பேச்சை இலகுவாக்க “மேடம் பேர் என்ன சார்” என்றார்.

“ஏங்க லிஸ்ட்ல இவர் பேர் பக்கத்துலயே என் பேரும் இருந்திருக்கும். வெறும் நேசமணி மட்டும் தான் நோட் பண்ணுவீங்களா” என கேட்டார் சங்கு புஷ்பம்.

“அவங்க எஸ் பி சார்” என்றார் நேசப்பா. ரத்தினத்திற்கு தூக்கி வாரி போட்டது.

“சங்கு புஷ்பம் சார்” என்றார் நேசப்பா சிரித்துக்கொண்டே.

முதல் பத்து நிமிடத்திலேயே கண்ணை கட்டியது ரத்தினத்திற்கு. பேசாம அரை மணிக்கு ஆயிரம் மட்டும் கொடுத்திருக்கலாம் என நினைத்தார்.

“காபில சர்க்கரை போடவாங்க?” என உள்ளிருந்து கேட்டார் சங்கு புஷ்பம்.

“வேணாம் சார்” என மெலிதான குரலில் சொன்னார் ரத்தினம்.

“பிபீ, சாருக்கு சர்க்கரை வேணாமாம்” என்றார் நேசப்பா நமுட்டு சிரிப்போடு.

“பிபீ இல்ல சார். நார்மல் தான். சுகர் மட்டுந்தான்” என்றார் ரத்தினம்.

“சங்கு புஷ்பத்தோட இன்னொரு பேரு பட்டர்பிளை பீ. அத தான் சுருக்கி என்ன பிபீனு கூப்பிடுவாரு” என சொல்லிய படியே காபி கொடுத்தார் சங்கு புஷ்பம்.

இடைப்பட்ட நேரத்தில் ரத்தினத்தின் பார்வை அடிக்கடி விஸ்க்கி கிளாஸ் மீது விழுந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்திற்க்கு மேல் அதன் ஈர்ப்பு அவர் சுய கட்டுப்பாட்டை தகர்த்தது. அடி வயிற்றில் வாங்கிய கத்திக் குத்தின் ரணம் சிறு வடு கூட இல்லாமல் மறைந்து போனது. விஸ்க்கி கிளாஸ் வேலை செய்யும் என நேசப்பா நினைத்தது பொய்யாகவில்லை.

ஆனால் விஸ்க்கியை விட அந்த கிளாசை கட்சிக்காரர் அவ்வளவு நேசிப்பார் என நேசப்பாவே எதிர்பார்க்கவில்லை. எல்லாம் கோபால் சார் உபயம்.

ரத்தினம் ஆர்வம் தாளாமல் வாய் விட்டே கேட்டு விட்டார்.

“சார், இந்த கிளாஸ் சூப்பரா இருக்கு. எங்க சார் வாங்குனீங்க, எவ்ளோ விலை” என்றார்?

“அமெரிக்காவுல. ஜோடி பத்தாயிரம் நம்ம ஊர் வெலைல” கெத்தாக சொன்னார் நேசப்பா.

மூச்சடைத்துப் போவதற்கு முன் ஸ்டேஜில் இருந்தார் ரத்தினம்.

“அப்ப இந்த ஒரு கிளாஸ் மட்டும் அஞ்சாயிரமா சார்?” என வாயை பிளந்தார்.

“அஞ்சாயிரத்து சொச்சம் உள்ள இருக்க சரக்கு இல்லாம” என சொன்னார் சங்கு புஷ்பம்.

“கிளாஸ்ஸே அஞ்சாயிரம்னா சரக்கு எவ்ளோ இருக்கும்” என கணக்குப் போட்டார்.

ஆனாலும் சரக்கை விட அவரை சுண்டி இழுத்தது என்னவோ அந்த கிளாஸ் தான்.

ஒரு சைடில் இருந்து பார்க்க க்ளாஸுக்குள் கிளாஸ் போல் இருந்தது.

நீண்ட ஐங்கோண வடிவ வெளிப்புறமும் வைன் கிளாஸ் போன்ற உட்புறமும் மேலிருந்து உள்ளே பார்த்தால் சிறிய தங்க நிற சாண்ட்லியர் விளக்கு தரையில் பட்டு ஜொலிப்பதை போல விஸ்க்கி மிதந்து கொண்டிருந்தது.

ஐம்பது மில்லி கூட இல்லாத திரவம் முழு கோப்பையையும் வெளிற் மஞ்சள் நிறமாக்கியது.

சற்றே உட்புறம் குவிந்த வாய்ப்பகுதி தங்க வளையம் போல இருந்தது. கால் கோப்பைக்கும் கீழே இருந்தது விஸ்க்கி. மீதி இருந்த முக்கால் பகுதி காலி கோப்பையை ரசித்துக்கொண்டே இருந்தார் ரத்தினம்.

உயர் தர கண்ணாடியில் அருமையான வளைவுகளைக்கொண்டு பார்க்க கச்சிதமாக இருந்தது. மனதிற்குள் ஆருயிர் அண்ணனை நினைத்துக்கொண்டார் ரத்தினம்.

“பிச்சைக்கார பய. என்ன பதவி காசு இருந்து என்ன பிரயோஜனம். மாடு மாதிரி வேல செஞ்சாலும் ரெண்டு ரூபா பிளாஸ்டிக் கப்புல குடுக்குறான். அதுல ஊத்திக் குடிக்கவே என்னவோ வள்ளல் பிரபு மாதிரி பேசுறான்.

சார் தங்கம். நல்ல மனசுக்காரர். ஊரு பேரு தெரியாத எனக்கே அஞ்சாயிரம் ரூபா க்ளாஸ்ல அசால்ட்டா தர்றார்.

மனுஷன்னா இவர்தான்யா நல்ல மனுஷன். இந்த டீலிங் நல்ல படியா முடிஞ்சா அப்புறம் சாருகிட்ட டச்சுலேயே இருக்கணும் ” என யோசனை புல்லட்டை தாறுமாறாய் ஓட்டினார் ரத்தினம்.

“சார், பிரியாணி சாப்பிடலேன்னா பரவாயில்ல.போகும் போது பார்சல் பண்ணி தரேன். இதை குடிங்க சார்” என கிளாசை நீட்டினார் நேசப்பா.

ரத்தினம் அசடாய் நெளிய, “இது உங்களுக்கு, காபி எனக்கு” என்றார் நேசப்பா.

புறக் காரணிகளால் வரும் ஆர்வம், எரிச்சல், பதட்டம், குழப்பம், தடுமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளுக்கும் எளிதாய் இரையானார் ரத்தினம்.

சூழ்நிலைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள அவர் எடுத்துக் கொள்ளும் காலம் அதிகம். அது இங்கே அவர் முன் இருக்கும் எதிராளிகளுக்கு யோசிக்க அதிக நேரத்தை அளித்தது.

சங்கு புஷ்பமும் நேசப்பாவும் சொல்லாலும் செயலாலும் அதை ஒருவர் மாற்றி ஒருவர் செய்து அவரை நெருக்கி கொண்டிருந்தார்கள்.