Tamil novel – OTP – Part 6/20

Welcoming the guest and hosting him in the living hall, and having heartfelt exchange of life experience

மறு நாள் காலை டோர் பெல் அடித்தது. அதே தெருவில் மளிகை கடை வைத்திருக்கும் வள்ளியப்பன் வந்திருந்தார்.

“உள்ள வாங்க சார்” என வரவேற்றார் நேசமணி.

“வாங்க சார். எப்படி இருக்கீங்க” என்றபடியே உள்ளேயிருந்து வந்தார் சங்கு புஷ்பம்.

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க” என நலம் விசாரித்தார்.

அவரோடு நீண்டகால நட்பு இவர்களுக்கு. இன்றளவும் அவர் கடையில் தான் பொருட்களை வாங்குவார்கள்.

என்ன டிஸ்கவுண்ட் போட்டாலும் ஆன்லைனில் வாங்க மாட்டார்கள். ஒண்ணாம் தேதியானால் லிஸ்ட் போட்டு போனில் அனுப்பி விடுவார்கள். கடை பையன் கொண்டு வந்து கொடுத்து விடுவான்.

ஒரு ஸ்திரமான வாடிக்கையாளராக அவரின் தொழிலுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள். அதனால் இவர்கள் மீது சற்று அதிக மரியாதையும் பிரியமுமாய் இருப்பார் வள்ளியப்பன்.

“சாரி சார். காலங்காத்தால வந்துட்டேன்” என்றார்.

“இந்தாங்க பஞ்சாமிர்தம். பையன் கல்யாணத்துக்காக திருச்செந்தூர் முருகருக்கு வேண்டிக்கிட்டேன். போயிட்டு நேத்து நைட் தான் வந்தோம்” என்றபடியே ஒரு பாட்டிலை நீட்டினார்.

சங்கு புஷ்பம் நன்றி சொல்லி பய பக்தியாக பெற்றுக் கொண்டார்.

“நீ பேசிகிட்டு இரு அபர். நா போய் இவருக்கு என் ஸ்பெஷல் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.

“சார் நெக்ஸ்ட் டைம் சின்னதா ஒரு கப்புல குடுங்க சார் போதும். ரெண்டு பேருக்கும் சுகர்” என்று சிரித்தார் சங்கு புஷ்பம்.

“நீங்க சாப்பிடுங்க மேடம். அப்புறம் வர்ற கெஸ்ட்டுக்கு எல்லாம் குடுங்க” என்றார் வள்ளியப்பன்.

“வீணாக்காமல் கெஸ்ட்டுக்கு தாராளமா தரலாம் சார். ஆனா நூறு குட்டி கப்பும் ஸ்பூனும் கழுவணும் இந்த பாட்டிலை முடிக்க” என நிஜத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.

“அது என்னவோ உண்மை தான்” என ஒப்புக் கொண்டார் வள்ளியப்பன்.

“சார், இன்னைக்கு லிஸ்ட் அனுப்பலாம்னு இருக்கோம். ப்ரீயா எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் போடாதீங்க. ரெண்டு பார் டிஷ் வாஷ் சோப்பு போடுங்க” என ரெக்வஸ்ட்டை சொன்னார் சங்கு புஷ்பம்.

கொல்லென்று அடக்க முடியாமல் கண்ணில் நீர் வர சிரித்தார் வள்ளியப்பன்.

“இன்னைக்கு என் நாள் நல்லபடியா ஆரம்பமாகுது. இதை நெனச்சு சிரிச்சே இன்னைக்கு பொழுது போகும்” என்றார் வள்ளியப்பன்.

காபியோடு நேசமணி வந்து சிரிப்பில் கலந்து கொண்டார். அரை மணி நேரம் கா கலப்பாக போனது.

“சரிங்க சார். பார்க்கலாம்” என சொல்லி கிளம்பினார்.

ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு பஞ்சாமிர்த பாட்டிலை சிஸ்டம் டேபிள் மேல் வைத்தார்கள்.

அடுத்து வரும் கெஸ்ட்டுக்கு மறக்காமல் கொடுக்க. அப்போது அவர்களுக்குத் தெரியாது அந்த கெஸ்டிடம் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று.

Tamil novel – OTP – Part 5/20

A warm conversation between wo ladies

இரண்டு மாதம் ஆனது. மொத்தம் இருபத்து மூன்று டெலிவரி அன்றோடு சேர்த்து.

நெறய ஓசிடி கேள்வி பட்டிருக்கிறோம். இந்த ஆன்லைன் ஆர்டரிங் ஓசிடி இவர்களை பாடாய் படுத்தியது.

இது த்ரீஓ சிடி. அது அவர்களின் பர்ஸுக்கும் நல்லதில்லை, அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் நல்லதில்லை என நினைத்துக்கொண்டார்கள்.

இரவு எட்டு மணிக்கு வந்தாள் அமராவதி.

“உள்ள வாம்மா” என்றார் நேசப்பா.

“அபர், நீ பேசிக்கிட்டு இரு. நான் கிட்சனுக்கு போறேன்” என கிளம்பினார் நேசப்பா.

“உக்காரு அமராவதி, காபி சாப்பிடுறியா இல்ல க்ரீன் டீ வேணுமா?” என்றார் சங்கு புஷ்பம்.

“க்ரீன் டீ ஆன்ட்டி” என்றாள். 

டேபிள் பேனை போட்டுவிட்டு சேரை பக்கத்தில் இழுத்து போட்டுக்கொண்டு டைரியை எடுத்தார் சங்கு புஷ்பம்.

“இன்னியோட இருபத்து மூன்று டெலிவரி வாங்கி இருக்கோம். அதுல பதினாலு மதியம் ரெண்டுலேர்ந்து நாலுக்குள்ள.

நாங்க டேப்லெட் போட்டு தூங்குற நேரம். அப்புறம் ஒவ்வொரு டெலிவரிக்கும் மூணு போன் கால் அட்டென்ட் பண்ணணும்.

ஸோ, கலெக்க்ஷன் சார்ஜ் இருபத்தி அஞ்சு ரூபா ஒரு டெலிவரிக்கு. மொத்தம் ஐநூத்தி எழுபத்தி அஞ்சு ரூபா ஆச்சு. என் நம்பர்க்கு அனுப்பிடுமா” என்றார் சங்கு புஷ்பம்.

“சாரி ஆன்ட்டி. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்றாள் அமராவதி.

எமெர்ஜென்சிக்கு வாங்கி வெக்கலாம். ஆனா மைன்ட்லெஸ் ஷாப்பிங்க்கு ஹெல்ப் பண்ண முடியதுமா என நினைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

பிறகு கிச்சன் பக்கம் திரும்பி “நேஸ், அமருக்கு ஒரு க்ரீன் டீ குடுங்க” என்றார் அபராஜிதா.

Tamil novel – OTP – Part 4/20

Jovial dinner time conversation between a senior couple

பொழுது போக இரவு எட்டு மணிக்கு அமராவதி வந்து பார்சலை பெற்றுக்கொண்டாள். அடுத்த இரண்டு வாரத்தில் ஐந்து பார்சல் வந்தது.

“அபர், நீ உள்ள போய் படு. நா இன்னைக்கு தூங்கல” என்றார் நேசப்பா.

இன்னைக்கு டெலிவரி தேதி. மெயின் கேட்டுக்கு போன் போட்டார்.

“செல்லம், இன்னைக்கு பார்சல் வரும். போன் பண்ணாத. உள்ள அனுப்பிடு” என்றார்.

“சார், நீங்க ஒருத்தர் தான் சார் என்ன இந்த வயசுலயும் செல்லம்னு கூப்பிடுறீங்க” என சிரித்தார் செல்ல குமார்.

அடுத்து “பக்தா, இன்னைக்கு பார்சல் வரும். போன் பண்ணாத. மேடம் தூங்குறாங்க.உள்ள அனுப்பிடு” என்றார் நேசப்பா.

சரி சார் என்றார் ஜி பிளாக் செக்யூரிட்டி பக்தவத்சலம்.

ஐந்து மணி ஆனது. சங்கு புஷ்பம் எழுந்து காபி போட்டு வைத்து முகம் கழுவ போனார். காய்ந்த துணி எடுக்க நேசப்பா போக பெல் அடித்தது.

“நா போறேன் இரு” என்றார் நேசப்பா.

“இன்னைக்கு என்ன வந்திருக்கு?” என்றார் சங்கு புஷ்பம். “சேப்டி ஸ்டிக்!” என்றார் நேசப்பா.

“கான்ட்ராக்டர் நல்ல மனுஷன், சாப்ட் ஆன ஆளா தெரியுறார். அந்த அம்மா ஏன் ஸ்டிக் வாங்குதுனு தெரியல?” என்றார் நேசப்பா.

“டிபென்சா இல்ல அபென்சா” என சிரித்தார் சங்கு புஷ்பம்.

எட்டு மணிக்கு அமராவதி வந்தாள். “என்னம்மா சேப்டி ஸ்டிக்” என்றார் சங்கு புஷ்பம்.

“டாக் சேப்டிகாக ஆன்ட்டி. வாக்கிங் போகும் போது தொல்லையா இருக்கு” என சலித்தாள்.

“நீ இண்டோர் தான போவ. ட்ரெட் மில்ல”

“ஆமா ஆன்ட்டி. நேத்து மோட்டார் பெல்ட் போய்டுச்சு. அதான் வெளில நடக்கலாம்னு” என்று சொல்லி கிளம்பினாள்”. சரிம்மா என்றார் சங்குபுஷ்பம்.

“மோட்டார் பெல்ட் நானூறு இல்ல ஐநூறு. இந்த ஸ்டிக் முன்னூறு” என சிரித்தார் நேசப்பா.

“ஆமா, யாரு இப்போ அவ்ளோ சீக்கிரம் ரிப்பேர் பண்ணி யூஸ் பண்றாங்க” என கேட்டார் சங்குபுஷ்பம்.

அடுத்த நாள் சன் ஸ்கிரீன் வந்தது. அடுத்த நாள் ஸ்லிங் பாக் வந்தது.

இவங்க அமரவாதியா இல்ல ஆர்டர்வாதியா என சிரித்தார் சங்குபுஷ்பம்.

“நாளைக்கு என்னவா இருக்கும்? ஷூ, சன் க்ளாஸ், பிட் பேண்ட்?” லிஸ்ட் போட்டார் நேசப்பா.

பாக்கலாம் என பேசிக்கொண்டே இரவு உணவு சாப்பிட்டார்கள் இருவரும்.

“அம்மா டெலிவரி” குரல் கேட்டது. “இரு நா போறேன்” என்றார் நேசப்பா.

வெரிகோஸ் பேண்டேஜை மாட்டியபடியே “என்ன நேஸ்?” என்றார் சங்கு புஷ்பம்.

“லூப்ரிக்கண்ட்” என சொல்லி திரும்பி கதவை பூட்டி னார் அவர்.

கொல்லென்று சத்தமாக கண்ணில் நீர் வர சிரித்தார் சங்கு புஷ்பம்.

இருவரும் சிரித்து, கண்ணீர் துடைத்து அமைதியாக சிறிது நேரம் ஆனது.

“அது ட்ரெட்மில் மோட்டார் லூப்ரிக்கண்ட், தொள்ளாயிரம்” என நேசப்பா பார்த்து சொல்ல, இருவரும் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

இரவு எட்டு மணிக்கு அமராவதி வந்தாள். “நீ போய் குடு” என்றார் நேசப்பா.

மூச்சை இழுத்து விட்டு சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு கொடுத்தார் சங்கு புஷ்பம்.

“ரிப்பேர் ஆன மஷினிக்கு இது எதுக்குமா?” என்றார்.

“இல்ல ஆன்ட்டி, டூ வீக்ஸ் முன்னாடி பிப்டி பெர்ஸன்ட் ஆபர் போட்டான். அதான் கார்த்தி ஆர்டர் பண்ணிட்டார். அதுக்கு அப்புறம் தான் ரிப்பேர் ஆச்சு” என்றாள்.

இரவு சாப்பிட்டுக்கொண்டே நேசப்பா சொன்னார் “முன்னூறு ரூபா பெல்ட். சீக்கிரம் மாத்தி இருந்தா நாலாயிரம் செலவு இல்ல” என்றார்.

“டாக் ஸ்டிக், சன் ஸ்கிரீன், பாக், ஏங்க தெருவுல இறங்கி நடக்க இவ்வளவு செலவா?” என்றார் சங்கு புஷ்பம்.

“வாக்கிங்க விட அந்த எக்ஸ்பிரியன்ஸ் முக்கியம்னு நெனைக்குற ஜெனெரேஷன் இது அபர்மா” என்றார் நேசப்பா.

“நோட் பண்ணுங்க நேஸ் இனிமே” என்றார் சங்கு புஷ்பம்.

தமிழ் சிறுகதை – அஞ்சு வார தீபம்

Diya made by lemon skin, ghee and cotton wick to pray Goddess Durga

“வண்ணமதிக்கு எப்போடா வரன் பாக்க ஆரம்பிக்க போற”? என கேட்டாள் பாட்டி.

“கடைசி பரீட்சை முடியட்டும்மா. நம்ம சாம்பமூர்த்தி தங்கமான புள்ளைன்னு ஒரு ஆபீசர் வரன் பத்தி சொல்லி இருக்கார். ஆவணி மாசம் பேசி முடிக்கலாம்” என்றார் அப்பா.

“வேலைக்கு போய் செட்டில் ஆகிட்டு கல்யாணம் பண்ணிக்குறேன் பாட்டி” என்றேன் நான்.

“நீ செட்டில் ஆகுற வரைக்கும் சிங்கிளா இருக்கவன், அங்கிள் வயசுல இருப்பான். அறுபது வயசு வரை வேலை செய்யலாம், ஆனா கல்யாணம் காலா காலத்துல பண்ணனும். புள்ளைங்கள பெத்து மட்டும் எங்க கிட்ட குடுத்துடு, நாங்க இத்தனை பேரு எதுக்கு இருக்கோம்? எங்க செல்லங்களை நாங்க பாத்துக்குறோம், நீ வேலைக்கு போ, யாரு தடுக்க போறா? என அக்காவுக்கு சொன்ன அதே ப்ளூ பிரிண்டை முகம் சிவக்க எனக்கும் சொன்னாள்.

பிறகு “அம்மனுக்கு அஞ்சு வாரம் தீபம் ஏத்தி வேண்டிக்க, நல்லது நடக்கும்!” என முடித்தாள்.

முதல் வாரம். கோவிலின் வெளி பிரகாரத்தில் இருந்த துர்கை சன்னதி முன் போய் நின்றேன்.

“என்ன வேண்டுதல்?” என்றார் அம்மன்.

“நல்லது நடக்க!” என்றேன்.

“பெற்றவர் கடமையை முடிக்கவா? உன் கனவுகள் சிறக்கவா? யாருக்கு நல்லது நடக்க?” என்றார்.

“நீங்க பாத்து எது நடத்தி குடுத்தாலும் சரி” என்றேன்.

“உங்கப்பாகிட்ட பேசுற மாதிரி பழம் மாதிரி என்கிட்ட பேசாதே. உனக்கு என்ன வேணும்னு தெளிவா சொல்லு” கிண்டலாய் சொன்னார் அம்மன்.

“யோசிச்சு சொல்றேன், இந்த கனிய குறுக்கில நறுக்கவா? இல்ல நெடுக்குல நறுக்கவா? எப்படி பிழிந்து தீபம் ஏற்றட்டும்? என சந்தேகம் கேட்டேன்.

“எப்படியாவது நறுக்கு. ஆனா இந்த குடும்பத்தை நல்லா தெரியும், இந்த வரன் கட்டி தங்கம்னு எவனாவது சொன்னா அவனை நறுக்கி தொரத்திடு! ஊர்ல இருக்க எல்லா வரனையும் சாம்பமூர்த்தி கட்டி தங்கம்னு தான் சொல்லுவான், உங்க ஆளுங்கள விட்டு நல்லா விசாரிக்க சொல்லு. அங்காளி பங்காளின்னு உங்க அம்மா வடிச்சு கொட்டுனாங்கல்ல, அந்த தீவட்டி தடியனுங்கள தீர விசாரிக்க சொல்லு. முடிஞ்சா நீயே பேசி பாரு.

சாம்பமூர்த்தி பேச்ச நம்புனவங்களுக்கு சம்பவம் காரண்ட்டி, சொல்லிட்டேன். உமன் எம்பவர்மெண்டு பத்தியெல்லாம் பேசி பரிசு வாங்கி இருக்க, நல்லா விசாரிச்சு, ஒடச்சி பேசி முடிவெடு.அப்புறம் வாரா வாரம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல லெமன வாங்கிட்டு வந்து என்கிட்ட சொல்யூஷன் கேட்காதே! என்றார் அம்மன்.

இரண்டாம் வாரம்.”திரி போட்டு எண்ணெய் ஊற்றவா? எண்ணெய் ஊற்றிவிட்டு திரி போடவா? என்றேன்.

“எப்படி வேண்டுமானாலும் போடு. ஆனால் வாழ்க்கை உன்னை புரட்டி போட்டாலும், உருட்டி போட்டாலும், மனச மட்டும் விட்டுடாதே. தாய் தகப்பன் தாங்காட்டாலும் சின்ன புள்ளைல இருந்து என்ன சுத்தி சுத்தி வந்த உன்னை நா விட்டு விடுவேனா?” என்றார்.

மூன்றாவது வாரம். “மூச்சு விடாமல் உன் போற்றி மாலையை சொல்லட்டுமா?” என்றேன்.

“எதுக்கு? ரிலாக்ஸ்டாவே சொல்லு. ஆனா எந்த உறவாவது மூச்சு முட்டுற மாதிரி இருந்தா ஊர் போற்றுதலுக்காக வாய் மூடி இருக்காதே” என்றார்.

நான்காம் வாரம். சாமிக்கு மட்டும் படையல், திருவிழா எல்லாம். உனக்கில்லயா? என்றேன்.

வாரா வாரம் உனக்கு ஏன் புத்தி சொல்றேன்னு இப்போ புரியுதா? என்றார்.

அஞ்சாம் வாரம். “காலம் முழுக்க எனக்கு வழி துணையா வரீங்களா? என்றேன்.

“காலமெல்லாம் வர முடியாது. வேணும்னா நீ ஹால் டிக்கெட் எடுத்துட்டு போகும்போதெல்லாம் எக்ஸாம் ஹால் வரைக்கும் துணையா வரேன். எப்படியாவது நல்லா படிச்சி, பாஸாகி, பொழச்சிக்க” என்கிறார்.

சில மாதங்கள் கழித்து அம்மன் முன் ஒரு கவரை வைத்து கும்பிட்டேன்.

“என்ன கல்யாண பத்திரிகையா? என கேட்டார் அம்மன்.

“இல்லை, என் அப்பாயின்மென்ட் ஆர்டர்”என்றேன். “நா பாஸாகிட்டேன்” என என்னை பார்த்து முதல் முறை சிரித்தார் அம்மன்.