கோல்கப்பா : என்ன இப்போ போங்கன்னு சொல்லிட்டு, அப்புறம் நான் தான் அனுப்பி வெச்சேன், நான் தான் அனுப்பி வெச்சேன்னு நீ பொங்க கூடாது!
பூரி குமாரி சரோஜா தேவி குரலில் சொல்கிறார்.
பூரி குமாரி : உங்களை தடுக்க நான் யார் கப்பா, கோல்கப்பா? இது உங்கள் உரிமை, நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் பார்ட்டி பண்ணலாம். இது நீங்க சுயேச்சையா எடுக்குற முடிவு கப்பா.. கோல்கப்பா…இதை தடுக்க நான் யார்?
கோல்கப்பா : உன் தமிழ்ல தீய வெக்க! அது சுயேச்சையா இல்ல, சுயமா! பார்ட்டிக்கு போக மனைவி கணவன் கிட்ட permission கேக்குறது தான் மரபு. இப்போ அது மீறப்பட்டு இருக்கு?
பூரி குமாரி : வீட்டு பொறுப்பை சுமப்பதுல எனக்கு பெரும் பங்கு குடுக்குற உங்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தில் சம பங்கு குடுக்க ஏன் மனசு வரல? மரபு, மரபுன்னு ஏன் ரப்பர் தோட்ட கோஷ்டி மாதிரி கூவாதீங்க கோல்?
கோல்கப்பா : ரப்பர் தோட்ட கோஷ்டி யாருடி?
பூரி குமாரி : நம்ம தற்போதய எதிர்கட்சியை கவிஞர் அப்படிதான் சொல்கிறார் கோல்! ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதில்லைன்னு ஒரு பன்சை போட்டிருக்கார்!
கோல்கப்பா : குசும்புடி அவருக்கு. உச்சியிலேர்ந்து வேர் வரை ரப்பர் மரத்துல வெட்டு இருக்கும். அது மாதிரி எதிர்கட்சியோட தோல்வி இருக்குனு சொல்ல வரார் போல. சரி நா பார்ட்டிக்கு போகட்டுமா? வேணாமா?
பூரி குமாரி : பார்ட்டிக்கு போக என் கிட்ட எதுக்கு கோல் NOC கேக்குறீங்க?
கோல்கப்பா : நானே ஒரு OC கேஸு! என்ன எதுக்குடி NOC மேட்டர்ல கோத்து விடுற?
பூரி குமாரி : சும்மா ஒரு funக்கு தான் கோல். Evil..Devilன்னு அவங்க சபைல rhyminga பேசும்போது நா சொல்ல கூடாதா.. மக்களே, இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருந்தா, உங்க கொஞ்சல்ஸ் ..ஏஞ்சல்ஸ் கோஷ்டிக்கு ஷேர் பண்ணுங்க. Bye!
கோல்கப்பா: என்னத்த சொல்ல? புண்பட்ட மனச பொலம்பி தான் ஆத்திக்கணும் போல இருக்கு!
பூரிகுமாரி : இதுல ஹைலையிட்டே நம்ம டாக்டர் பேசினது தான்! மக்களே, டைம் இருந்தா இவங்க சொல்றத கேட்டு யோசிச்சு பாருங்க!
பூரிகுமாரி : Meanwhile, ஆட்டோகிராப் படத்துல வர்ற ஒரு பாட்டை, நம்ம கோல்கப்பா மாதிரி ஆளுங்களுக்காக, கொஞ்சம் மாத்தி எழுதி இருக்கேன்! படிச்சி enjoy பண்ணுங்க! Bye!!