Tamil novel – OTP – Part 5/20

A warm conversation between wo ladies

இரண்டு மாதம் ஆனது. மொத்தம் இருபத்து மூன்று டெலிவரி அன்றோடு சேர்த்து.

நெறய ஓசிடி கேள்வி பட்டிருக்கிறோம். இந்த ஆன்லைன் ஆர்டரிங் ஓசிடி இவர்களை பாடாய் படுத்தியது.

இது த்ரீஓ சிடி. அது அவர்களின் பர்ஸுக்கும் நல்லதில்லை, அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் நல்லதில்லை என நினைத்துக்கொண்டார்கள்.

இரவு எட்டு மணிக்கு வந்தாள் அமராவதி.

“உள்ள வாம்மா” என்றார் நேசப்பா.

“அபர், நீ பேசிக்கிட்டு இரு. நான் கிட்சனுக்கு போறேன்” என கிளம்பினார் நேசப்பா.

“உக்காரு அமராவதி, காபி சாப்பிடுறியா இல்ல க்ரீன் டீ வேணுமா?” என்றார் சங்கு புஷ்பம்.

“க்ரீன் டீ ஆன்ட்டி” என்றாள். 

டேபிள் பேனை போட்டுவிட்டு சேரை பக்கத்தில் இழுத்து போட்டுக்கொண்டு டைரியை எடுத்தார் சங்கு புஷ்பம்.

“இன்னியோட இருபத்து மூன்று டெலிவரி வாங்கி இருக்கோம். அதுல பதினாலு மதியம் ரெண்டுலேர்ந்து நாலுக்குள்ள.

நாங்க டேப்லெட் போட்டு தூங்குற நேரம். அப்புறம் ஒவ்வொரு டெலிவரிக்கும் மூணு போன் கால் அட்டென்ட் பண்ணணும்.

ஸோ, கலெக்க்ஷன் சார்ஜ் இருபத்தி அஞ்சு ரூபா ஒரு டெலிவரிக்கு. மொத்தம் ஐநூத்தி எழுபத்தி அஞ்சு ரூபா ஆச்சு. என் நம்பர்க்கு அனுப்பிடுமா” என்றார் சங்கு புஷ்பம்.

“சாரி ஆன்ட்டி. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்றாள் அமராவதி.

எமெர்ஜென்சிக்கு வாங்கி வெக்கலாம். ஆனா மைன்ட்லெஸ் ஷாப்பிங்க்கு ஹெல்ப் பண்ண முடியதுமா என நினைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

பிறகு கிச்சன் பக்கம் திரும்பி “நேஸ், அமருக்கு ஒரு க்ரீன் டீ குடுங்க” என்றார் அபராஜிதா.

Leave a comment