Tamil mini novel – Origami – Worry Kammi – part 3/4

” மா, சீவல் எங்கம்மா? என்றபடியே வந்தான் சிற்பி குமார்.

“அவ எம்மேல கோவமா இருக்காடா” என விஷயத்தை சொன்னாள் சரண்யா.

“மா, கேட்டா கோச்சுக்காதே, அவ நல்லா ஆர்ட் பண்றாம்மா. இந்த ஒரு தடவை வாங்கி குடும்மா, ப்ளீஸ்” என்றான் சிற்பி.

“இன்னும் ஒரு மாசம் கழிச்சி திரும்ப வருவீங்க. தீபாவளிக்கு என்ன பண்ணலாமுன்னு, ஒரு செலவாவா இருக்கு இந்த வீட்ல” என சலித்துக் கொண்டாள் சரண்யா.

சிற்பிக்கு சங்கடமாக இருந்தது. இருந்தால் அம்மா கொடுத்து விடுவாள். இவ்வளவு கெஞ்சி கேட்கும் வரை விடமாட்டாள். ஆனால் சீவலை எப்படி சமாதான படுத்துவது என யோசித்தான்.

“போய் கூட்டிட்டு வா அவளை, சாப்பிட்ட பிறகு பூ கட்டணும் எல்லாரும்” என்றாள் சரண்யா.

வீட்டில் எங்கேயும் சீவல் இல்லை. அவள் எங்கு இருப்பாள் என சிற்பிக்கு தெரியும்.

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் உள் பக்கமாய் ஒரு குட்டி திண்ணை இருக்கும். அங்கே போய் பார்த்தான்.

சீவல் அழுது அழுது முகம் பெரிதாகி உட்கார்ந்திருந்தது.

“இங்க வா” என அதை தூக்கி மடியில் உட்கார வைத்து கண்ணை துடைத்தான் சிற்பி.

“சீவல், அழாத” என சொல்லி சமாதானப் படுத்தினான்.

என்ன சொல்லி இவள் அழுகையை நிறுத்துவது என யோசித்தான்.

“உண்டிய ஒடச்சிடலாமா? என கேட்டான்.

” ம்ஹூம், வேணாம்” என சொல்லிவிட்டு மீண்டும் ஓ வென அழுதது.

“சரி வா வீட்டுக்கு போலாம். அம்மா கிட்ட சொல்லி இருக்கேன். பூ கட்டிட்டு நைட் திரும்ப கேக்கலாம். குடுத்துட்டா காலைல வாங்கிக்கலாம்” என்றான்.

“இல்ல அம்மா தர மாட்டாங்க” என சொன்னது.

“நா தாமரை பூ மேல சரஸ்வதி வீணையோட உக்காந்திருக்க மாதிரி நாலு நாளா பிராக்டிஸ் பண்ணி நல்லா வந்துடுச்சி. ஷர்மி வீடு “எச் எம்” டீச்சர் வீடு பக்கத்துல தான் இருக்கு. அவ தான் சொன்னா, போன வாரம் டீச்சர் நாலு கட்ட பைல ப்ரைஸ் பொருளுங்க வாங்கி வெச்சிருக்காங்கனு. நா கலந்துக்கிட்டா கண்டிப்பா நாளைக்கு ப்ரைஸ் வாங்கிடுவேன்” என சொல்லி மீண்டும் அழுதது.

“ஓ, அதுக்கு தான் சாமி ரூம்லயே இருந்தியா?” என சிரித்தான் சிற்பி.

பாக்கெட்டில் பார்த்தான். இரண்டு ரூபாய் இருந்தது. பால் வாங்கிய மிச்சம்.

“இரு வரேன்” என சொல்லி கடைக்கு போய் ரெண்டு மிட்டாய் வாங்கி வந்தான்.

“இந்தா, சாப்பிடு. நா அம்மா கிட்ட கேக்குறேன். நீ கேக்காதே. திட்டுனா நா வாங்கிக்குறேன்” என்றான்.

சீவல் அழுகையை தற்காலிகமாக நிறுத்தி மிட்டாயை சாப்பிட ஆரம்பித்தது.

இது தான் சமயம் என சிற்பி ஆரம்பித்தான்.

“நீ தான் origami நல்ல செய்வியே! பேசாம ஆர்ட் போட்டிக்கு அதை செய்யேன்” என மெதுவாய் சொன்னான்.

திரும்ப ஓவென அழ ஆரம்பித்தால் அவ்வளவுதான் என பயந்தான்.

சீவல் தலையை குனிந்து கால் முட்டியில் முகம் புதைத்து கொண்டது.

“சீவல், இங்க பாரு, உனக்கு ஓகேன்னா என்கிட்டே origami பேப்பர் இருக்கு. நா தரேன்” என எப்படியாவது அதை ஒத்துக்கொள்ள வைக்க பாடு பட்டான்.

“தேர்ட் ப்ரைஸே நூறு ரூபாயாம். கூட புக்ஸும் தருவங்களாம்.ஷர்மி சொன்னா” என சொல்லி ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டது.

நல்ல காலம் சீவல் திரும்ப டேமை தொறக்கல. ரெண்டு சொட்டு பரவாயில்லை என இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தான் சிற்பி.

“அதெல்லாம் நீ கலக்கிடுவ. origami உனக்கு செமயா வரும். நீ வேணா பாரு, “எச் எம்” டீச்சர் உன்ன கண்டிப்பா செலக்ட் பண்ணிடுவாங்க” என பலமாய் மார்க்கெட்டிங் செய்தான்.

எப்படியாவது சரஸ்வதி ட்ராயிங்கை மறக்கடிக்க வேண்டும் என origami மந்திரத்தை சீவல் மண்டையில் ஏற்றினான்.

“ஆனா எனக்கு origamiல என்ன பண்றதுனு புரியல. நா தான் ப்ராக்டிஸே பண்ணலயே. அது பண்ணா எனக்கு ப்ரைஸ் வராது” என சோகமாய் டிக்ளேர் செய்தது.

சிற்பி கண்ணுக்கு மெல்ல மெல்ல சீவல் மனதில் சரஸ்வதி இவனை முறைத்துக் கொண்டே மறைவது தெரிந்தது. ஆனால் தாமரை மட்டும் பிரகாசமாய் இவனை பார்த்து சிரித்தது.

“சீவல், நீ origamiல lotus பண்ணு. ஒர்க் அவுட் ஆகும்” என குஷியாய் சொன்னான்.

“அப்போ சரஸ்வதிக்கும் வீணைக்கும் என்ன பண்றது?” என குபீரென ஒரு கேள்வியை போட்டது.

“அய்யோ, இவ மண்டைல இன்னும் அந்த படம் மறையலியே” என அங்கலாய்த்து கொண்டான் சிற்பி.

“அதான், நவராத்ரி வர போகுதுல்ல! அப்போ போய் அசெம்ப்ளி போர்டுல வரைஞ்சுடு” என டக்கென்று சொன்னான்.

சரஸ்வதியையும் வீணையையும் பிராக்டிஸ் செய்தது வீணாக போவதில்லை என சீவல் சமாதானம் ஆவது போல தெரிந்தது சிற்பிக்கு.

“இப்போ வரஞ்சேன்னா ஜட்ஜுங்களும் டீச்சருங்களும் மட்டும் தான் பாப்பாங்க. அசெம்ப்ளி போர்டுல வரஞ்சேன்னா மொத்த ஸ்கூலும் பாக்கும். “போர்த் பி சித்திர வள்ளி” னு நீ பேரும் எழுதலாம்” என சொல்ல மிட்டாயோடு சீவலும் கரைய ஆரம்பித்தது.

“டீச்சர்ஸ் டேக்கு எதுக்கு லோட்டஸ் செய்யணும்? சில்ட்ரன்ஸ் டேக்கு ரோஸ் செஞ்சாக்கூட ப்ரைஸ் கிடைக்கும், ஆனா இதுக்கு எனக்கு கிடைக்காது” என எப்போது வேண்டுமானாலும் மீண்டும் டேம் திறக்கும் நிலை.

முடியலடா சாமி என ஆனது சிற்பிக்கு.

சீவல் மண்டையில் முறைத்துக் கொண்டே மறைந்தாலும், சரஸ்வதிக்கு சிற்பியின் அவஸ்தை வருத்தமாய் இருந்தது.

சின்ன பையன், எவ்வளவு தான் சமாளிப்பான் என போனால் போகட்டும் என அவன் மண்டையில் ஒரு ஐடியாவை பிளாஷ் செய்தார்.

சிற்பிக்கு சீவல் இவ்வளவு நேரம் பேச்சு வார்த்தையில் இருந்ததே பெரும் விஷயமாக இருந்தது.

எப்படியாவது இந்த லோட்டஸ் பேச்சு வார்த்தை சுமுகமாக முடிய வேண்டும். அதற்கு சீவல் ஒத்துக்க கொள்வது போல ஒரு பாயிண்ட் கிடைத்தால் போதும் என நினைத்தான்.

ஒரு நிமிடம் கண் மூடி யோசிக்க “English Dale” சப்ளிமெண்டரி புக்கில் இருந்த “The Lotus” என்ற poem சின்ராஸின் நினைவுக்கு வந்தது.

“ஏ சீவல், என்ன நீ லோட்டஸ இப்படி சொல்லிட்ட. லோட்டஸ் தான் “Queen of Flowers” தெரியுமா? அது மாதிரி டீச்சர் வேலை தான் இருக்கறதுலயே உயர்ந்த வேலை!” என சீவலை கோழி அமுக்குவது போல அமுக்கினான்.

இந்த பொண்ணு “Queen” னு எந்த டாபிக் கிடைச்சாலும் மங்கி விடும் என அவனுக்கு தெரியும்.

“லோட்டஸ் தான் “Queen of Flowers ஆ?” என சந்தேகமாய் கேட்டது சீவல்.

“ஆமாடி, நா வேணா வீட்டுக்கு போனப்புறம் என் புக்க காமிக்குறேன், நீயே பாத்துக்க” என தூபமிட்டான்.

சீவல் குட்டி திண்ணையில் நன்றாய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டது. Queen என்ற வார்த்தையின் மமதை அதன் கண்ணில் தெரிந்தது. “லோட்டஸ் தான் “Queen of Flowers. அத மாதிரி டீச்சர்ஸ் நீங்களும் பெஸ்ட்னு சொன்னா ஜட்ஜு ஒத்துக்குவாங்களா” என சீவல் கேட்டது.

“லோட்டஸ் நேஷனல் ப்ளவருடி” என அவசரமாய் ஒரு முட்டு குடுத்தான் சிற்பி.

சீவல் அதை கன்சிடர் செய்யும் நேரத்தில் அடுத்த முயற்சிக்கு தயாரானான்.

“குட்டிமா, ஏன் லோட்டஸ் இந்த கலர்ல இருக்கு தெரியுமா? ப்ளோரான்ற கடவுள் ரோஸையும் லில்லியையும் சேத்து லோட்டஸ செஞ்சாரு.  ரோஸ் passionate and energeticனு  சொல்வாங்க. அதே போல லில்லி வெள்ளையா இருக்குல்ல, அத purity, calm and fairnessக்கு சொல்வாங்க. இப்போ சொல்லு, நம்ம டீச்சர்ஸும் ரோஸ் மாதிரி passionate டா நம்ம கிட்ட இருக்கிற திறமையை மெருகேத்துறாங்களா, அதே போல லில்லி மாதிரி pure மைண்டோட யாரையும் ஏற்ற தாழ்வு பாக்காம நடத்துறாங்கல்ல. இந்த மாதிரி ரெண்டு பூக்களோட உயர்ந்த குணமும் அவங்க கிட்ட இருக்குறதால அவங்களோட வேலையும் உயர்வானது தான்” என தெளிவாக சொல்லி புரிய வைத்தான்.

சீவல் கண் கொட்டாமல் கேட்டு அவன் சொல்வதை உள் வாங்கி கொண்டது. Origami டீல் சுபமாய் முடிந்தது.

சீவலும் சிற்பியும் ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பினார்கள்.

ஹாலில் சாமந்தி, ரோஸ் மற்றும் மல்லி பூக்கள் இவர்களுக்காக காத்திருந்தன.

சரண்யா ஏற்கெனவே பூ கட்ட ஆரம்பித்து விட்டாள். “எங்க போனீங்க ரெண்டு பேரும்? போய் சாப்பிட்டு வந்து கொஞ்ச நேரம் இதை கட்டி குடுங்க” என்றாள்.

சீவல் உள்ளே போக, “மா,ரொம்ப கஷ்டப்பட்டு அவளை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கேன். சாப்பிட்டு நா அவளுக்கு origami ப்ராக்டிஸ் பண்ண ஹெல்ப் பண்ணனும். ப்ளீஸ், கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணும்மா. நா எப்படியாவது உனக்கு டைமுக்குள்ள கட்டி முடிக்க ஹெல்ப் பண்றேன்’ என கெஞ்சினான்.

“Origami பேப்பர் இருக்கா? இல்ல வாங்கணுமா? என்றாள் சரண்யா.

“அதெல்லாம் வீட்ல இருக்குமா, அதனால தான் அவளுக்கு அந்த ஐடியாவ சொன்னேன்” என்றான் சிற்பி.

“சரி, போய் செய்ங்க” என்றாள் சரண்யா.

உள்ளே போன சீவல் சப்ளிமெண்டரி புக்கை எடுத்து அந்த பக்கத்தை படித்து பார்த்து அவன் சொன்னது உண்மை தான் என உறுதி படுத்திக்கொண்டது.

அடுத்த ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை இருவருக்கும்.

தரை முழுதும் செய்திதாளில் இயற்கை எய்திய origamiக்கள் இறைந்து கிடந்தன.

இரவு படுக்க போகும் போது சீவலுக்கு லோட்டஸ் origami நன்றாய் செய்ய வந்தது.

சரண்யா அலாரம் வைத்து படுக்க, “மா, ரெண்டே நிமிஷத்துல வரேன்” என சொல்லி வெளியே ஓடினான்.

சீவல் அவன் கொடுத்த பால் ரோஜா நிற origami பேப்பர்களை கட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு சிற்பி வீட்டு கதவு தட்டபட்டது. அவன் நண்பர்கள் சதீஷும், ராஜுவும்.

சரண்யா டீ போட்டு கொடுக்க மும்முரமாய் பூ கட்டும் வேலையை ஆரம்பித்தார்கள்.

ஒவ்வொரு பூவாய் எடுத்து மாலை கோர்க்கும் போதும், அந்த நாள் சீவலுக்கு நல்லபடியாய் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான் சிற்பி. சீவல் தெம்பாய் எழுந்து வந்தது.

“தேங்க்ஸ் ணா” என அவர்களிடம் சிரித்துக் கொண்டே சொன்னது.

டீ குடித்து விட்டு மீண்டும் சில முறை லோட்டஸ் செய்து பார்த்து, நல்லபடியாய் வந்ததில் திருப்தியாக இருந்தது.

“அண்ணா, எனக்கு திரும்ப அந்த லோட்டஸ் கதையை சொல்லேன்” என கேட்டு சொல்லி பார்த்துக் கொண்டது.

அவர்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் பேசி சிரித்துவிட்டு பின் பள்ளிக்கு கிளம்பியது.

“ஆல் தி பெஸ்ட்” என்றான் சிற்பி.

“மத்தியானம் ப்ரைஸ் தருவாங்கனு ஷர்மி சொன்னா. நீ அப்போ வரியா?” என கேட்டது சீவல்.

அவ்வளுவு நம்பிக்கை மேடத்திற்கு. அசெம்பளி போர்டுல பேரு, Queen என அதற்க்கு பிடித்த கீ வேர்டுகளை சொன்னதில் மிதப்பமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. இன்னைக்கு மட்டும் ப்ரைஸ் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவுதான். நினைக்கும் போதே சிற்பிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

“ஹா ஹா கண்டிப்பா வரேன்” என சொல்லி அனுப்பி வைத்தான்.

Tamil mini novel – Origami – Worry Kammi – part 2/4

சரண்யாவின் கணவர் மோகன் குடும்ப பொறுப்பு இல்லாமல் இருப்பவர். நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். சிற்பிகுமார் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும், சித்திர வள்ளி என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மகளும் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக மோகன் அடிக்கடி வீட்டுக்கு வந்து பிள்ளைகளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் சரண்யாவுக்கு அவர் மீது நம்பிக்கை என்பது முழுதாய் இல்லை. மீண்டும் சேரும் எண்ணம் அவருக்கு இருந்தாலும், கடந்த காலம் தந்த காயம் காரணமாக சரண்யா அவரை ஏற்க தயாராக இல்லை. தன்னால் குழந்தைகள் அவரை பிரிய வேண்டாம் என நினைத்ததால் அவர் வந்து போனால் அமைதியாக இருந்தாள்.

வேலை முடித்து வீடு நோக்கி நடக்க ஆரம்பிக்க போன் வந்தது.

சொசைட்டி செகரெட்டரி மாதுரி மேடம்.

“சரண்யா, நாளைக்கு நம்ம சொசைட்டில டீச்சர்ஸ் டே பங்க்ஷன் இருக்கு. நீ நல்லா பூ கட்டுவேன்னு சங்கு புஷ்பம் மேடம் சொன்னாங்க. ஹால் அலங்காரத்துக்கு, குத்து விளக்கு பூஜைக்கு நெறய பூ வாங்கி இருக்கோம். நீ கட்டி தர முடியுமா?” என சொல்லி ஒரு தொகையை சொன்னார்.

சரண்யாவுக்கு திருப்தியாக இருந்தது அவர் சொன்ன தொகை. நாளைக்கு பசங்களுக்கு லீவ். காலைல எழுந்து சமைக்க வேணாம். இன்று இரவும், நாளை காலையும் பசங்களுடன் சேர்ந்து கட்டினால் இவர்கள் கேட்கும் நேரத்திற்குள் கொடுத்து விடலாம் என தோன்றியது.

“சரிங்க” என்றாள் சரண்யா.

“நம்ம செக்யூரிட்டிய உங்க வீட்டுக்கு வண்டில கொண்டு வந்து தர சொல்றேன்” என சொல்லி போனை வைத்தார் மாதுரி.

மனதிற்குள் சங்கு புஷ்பத்திற்கு நன்றி சொன்னபடியே நடந்தாள் சரண்யா.

“மா, வந்திட்டியா, உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்” என்றாள் சித்திர வள்ளி.

“இந்தா, நீ கேட்ட சிறுவர் மலர். நேசப்பா தாத்தா குடுத்தனுப்பினார்” என சொல்லி பத்து புத்தகங்களை கொடுத்தாள் சரண்யா.

“ஹை ஜாலி, மூணு நாள் லீவுக்கு போரடிக்காம இருக்கும்” என சந்தோஷமாக சொல்லி சிரித்தாள்.

சற்று நேரம் புத்தகங்களை புரட்டியவள் “மா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல டீச்சர்ஸ் டே பங்க்ஷன் இருக்கு. நா ட்ராயிங் அண்ட் ஆர்ட் போட்டிக்கு பேரு குடுத்து இருக்கேன். இருநூறு ரூபா குடுமா, சார்ட்டு பேப்பர், பெயிண்ட்டு, அப்புறம் கொஞ்சம் ஆர்ட் சப்ளைஸ் வாங்கணும்” என மெதுவாக கேட்டாள்.

“பணம் மரத்துல வெளயுதா?” என சொல்லி நிறுத்தினாள் சரண்யா.

“மா, ப்ளீஸ் மா, நா நல்லா ப்ராக்ட்டிஸ் பண்ணி இருக்கேன். கண்டிப்பா ப்ரைஸ் வாங்கிடுவேன் என கொஞ்சலாய் சொன்னாள் சித்திர வள்ளி. “பத்து ரூபா நீ சம்பாதிக்கும் போது உனக்கு அந்த கஷ்டம் தெரியும். சும்மா பெயிண்டுக்கு, சார்ட்டுக்குனு காசு கேக்காதே. தட்டுக்கு சோறு வருதா அதுக்கு சந்தோஷப்படு” என கடு கடுத்தாள் சரண்யா.

சித்திர வள்ளிக்கு கன்னத்தில் கண்ணீர் சித்திரம் வரைய ஆரம்பித்தது.

ஏற்கெனவே டிஷ் வாஷர் சோகத்தில் இருந்த சரண்யாவுக்கு எக்ஸ்டரா செலவு எரிச்சலை கிளப்பியது.

“நாளைக்கு நீ ஒண்ணும் ஸ்கூலுக்கு போக வேணாம். இன்னும் கொஞ்ச நேரத்துல செக்யூரிட்டி பூ கொண்டு வந்து தருவார். நீயும் அண்ணனும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” என சொல்லி விட்டு சமைக்க ஆரம்பித்தாள் சரண்யா.

Tamil mini novel – Origami – Worry Kammi – part 1/4

“ஏங்க, போஸ்ட் ஆபீசுக்கு போகணும்னு சொன்னீங்க, இன்னும் கெளம்பலியா?” என மாத்திரை போட்டபடியே கேட்டார் சங்கு புஷ்பம்.

“அஞ்சு நிமிஷம், முருங்கை கீரை சூப் ரெடி பண்ணிடறேன். சரண்யா வந்ததும் துணைக்கு விட்டுட்டு கிளம்புறேன்” என உள்ளேயிருந்து பதில் சொன்னார் நேசப்பா.

சரண்யா அவர்கள் வீட்டு பணிப்பெண். பத்து மணிக்கு வந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு, அந்த அந்த நாளுக்குக்கேற்ப என்ன தேவைகள் இவர்களுக்கு இருக்கிறதோ அவற்றை செய்து கொடுப்பாள்.

“சரண்யா இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருவேன்னு சொன்னா. நீங்க சூப் ரெடி பண்ணிடீங்கன்னா வெயிலுக்கு முன்னாடி கெளம்பி போயிட்டு வாங்க” என சொன்னார் சங்கு புஷ்பம்.

சற்று நேரத்தில் நேசப்பா கிளம்ப, சங்கு புஷ்பம் புத்தகம் படிக்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரம் கழித்து “என்னமா சார் குடைய மறந்துட்டு போய்ட்டாரா? என்றபடியே சரண்யா வந்தாள்.

“அதுக்கு தான் நீ இருக்கணும்கிறது. கரெக்டா நினைவு படுத்தி இருப்ப” என்றார் சங்கு புஷ்பம்.

“நீங்க படுங்க, சார் வர வரை நா இருந்துட்டு போறேன்” என வேலையை ஆரம்பித்தாள் சரண்யா.

ஒரு மணி நேரம் ஆனது. நேசப்பா வெளி வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பினார்.

மூன்று கப்புகளில் சூப் எடுத்து வைத்து சங்கு புஷ்பத்தை எழுப்பினார்.

“எங்க சரண்யாவ காணோம்?” என்றார் நேசப்பா.

“இங்க தான் இருப்பா, இருங்க போய் பாக்குறேன்” என மெதுவாய் எழுந்து கடைசி பால்கனி பக்கம் போனார்.

அங்கே சரண்யா ஏதோ யோசனையாக அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

“என்ன இங்க நின்னு யோசிக்கிற?” என கேட்டார் சங்கு புஷ்பம்.

சரண்யா முகம் வாட்டமாக இருந்தது.

“தெய்வநாயகி  மேடம் டிஷ் வாஷர் வாங்கி இருக்காங்க, துணி காய போட வரும் போது பாத்தேன். அடுத்த மாசத்துல இருந்து எனக்கு அவங்க வீட்ல வேலை இருக்காதுனு நெனைக்கிறேன்” என கவலையோடு சொன்னாள்.

சங்கு புஷ்பம் எட்டி பார்க்க, அவர்கள் வீட்டு பால்கனியில் புதுசாய் அமர்ந்திருந்தது டிஷ் வாஷர்.

“கரண்டு பில்லுக்கும், பசங்க டியூஷனுக்கும் அவங்க குடுக்குற சம்பளத்தை தான் நம்பி இருக்கேன். இப்போ என்ன பண்ண போறேன்னு தெரியல. தெய்வநாயகி மேடம் எது வாங்கினாலும் அவங்க கூட வாக்கிங் போற சுகந்தி அக்கா வாங்கிடும். அவங்களும் வாங்கிட்டா வேற வேலை கிடைக்கும் வரை சிரமம் தான்” என பெரு மூச்சோடு சொன்னாள்.      
“உள்ள வா” என அழைத்து ஹாலில் வந்து நேசப்பாவோடு சேர்ந்து உட்கார்ந்தார்கள்.

“கொஞ்சம் கால் வலி இருந்ததால நா ஒரு வாரமா சாயங்காலம் அவங்கள பாக்கல. இன்னைக்கு பாத்து பேசுறேன். அவங்க இது வரை உங்கிட்ட எதுவும் சொல்லல இல்ல? நீயா ஏன் கவலை படுற? அப்படி அவங்க நீ வேலைக்கு வேணான்னு நெனச்சா, உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருப்பாங்க. எதையும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்காதே” என ஆறுதல் சொன்னார் சங்கு புஷ்பம்.

சூப் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தார்கள்.

“டிஷ் வாஷர் இந்த மாதிரி கப்பு, பிளேட்டு, கிளாஸ் கழுவ தான் பெஸ்ட். அது பிரியாணி அண்டா கழுவாது. அஞ்சு லிட்டர் குக்கரை போட முடியாது.  பூஜை சாமான் தேய்க்காது. அதனால நீ பெருசா ஒண்ணும் கவலை படாதே” என நிதர்சனத்தை சொன்னார் நேசப்பா.

“சங்கு, நீ ஏன் நம்ம சரண்யாக்கு ஒரு போஸ்ட் ரெடி பண்ண கூடாது? ஒன்லி பார் பூஜா ரூம் கிளீனிங்ன்னு? பூஜை பாத்திரம் மட்டும் சுத்தம் செய்து, பூ கட்டி, கோலம் போட்டு விசேஷ நாளுக்கு ரெடி பண்ணி தருவானு?” என்ன ஆர்வமோடு சொன்னார்.

சங்கு புஷ்பத்திற்கு இது வேலைக்கு ஆகும் என தோன்றியது.

“மார்கெடிங்க்ல மொதல் பாடமே, இல்லாத தேவையை இருப்பதாக மக்களை நினைக்க வைப்பது தான். 

அடுத்த ஐந்து நிமிடம் இந்த விஷயத்தை விவாதித்ததில் இது செட் ஆகும் என அவர்களுக்கு உறுதியாக தெரிந்தது.

சரண்யாவுக்கு பாதி புரிந்தது, மீதி புரியவில்லை.

“இங்க பாரு, உனக்கு இந்த டிஷ் வாஷர் மெஷின் தான் எக்ஸ்டரா வருமானத்துக்கு வழி பண்ணி இருக்கு. நீ பூஜை பாத்திரம் மட்டும் விஷேச நாளுக்கு முன்னாள் வந்து ரெடி பண்ணி தருவேன்னு ஒரு போஸ்ட போட்டு லிப்ட்ல ஒட்டுனா போதும். இது வரை ரெகுலரா பூஜை பண்ணாதவங்க கூட பக்திமானா மாறிடுவாங்க. வாரத்துல ஏழு நாளும் ஏதாவது ஒரு சாமிக்கு ஸ்பெஷல் டே தான்” என விவரித்தார் சங்கு புஷ்பம்.

நேசப்பா தொடர்ந்தார். “இது தெரிஞ்சு தான் குயிக் காமெர்ஸ் டெலிவரிகாரன் ஒரு கொத்து மாவிலையை இருபது ரூபாக்கு விக்கிறான். கீழ இறங்கி போய் நம்ம செக்யூரி கிட்ட கேட்டா இங்கேயிருக்குற மரத்துல பறிச்சு தருவார். சௌகர்யம் உள்ளங்கைல இருகிறதால நம்ம ஜனங்க இவனுங்க எறக்குற எல்லா Appம் ஒண்ணு மிச்சமில்லாம யூஸ் பண்றாங்க’ என்றார்.

அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு டைரியில் இந்த விஷயத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என லிஸ்ட் போட்டார்கள்.

“ஒரு போஸ்டர் பத்தாது. மூணு போடு சங்கு. ஒண்ண எல்லா பிளாக் லிப்ட்லயும் ஒட்டலாம். ரெண்டாவதை ஜிம் ஏரியால ஒட்டலாம். மூணாவத சரண்யா டீபியா வெக்கட்டும்” என்றார் நேசப்பா.

“லிப்ட், டிபி  சரி, எதுக்கு ஜிம் ரூம்ல?” என்றார் சங்கு புஷ்பம்.

“யோசி, உனக்கே தெரியும்” என சொல்லி சிரித்தார் நேசப்பா.

விஷயம் புரிய “சரியான ஆளு நீங்க!” என பாராட்டினார் சங்கு புஷ்பம்.

“நீ கவலப்படாம கெளம்பு சரண்யா. உனக்கு எத்தனை போன் வருதுன்னு பாரு” என சொல்லி சியர் செய்து அனுப்பினார்கள்.

Cutlet vs Outlet

கட்லெட்டுக்கும்
அவுட்லெட்டுக்கும்
என்ன
ஒற்றுமை
தெரியுமா?

ரெண்டுமே
evening snack!

கட்லெட் – Tasteக்கு
அவுட்லெட் – Pastக்கு

அதனால சாயந்தரத்துல
நண்பர்களோட மனசு விட்டு பேசுங்க!

Tamil novel – OTP – Part 8/20

வரப்போகும் கவுன்சிலர் எலெக்க்ஷனில் தற்போது பொறுப்பில் இருக்கும் டாக்டர் நேசமணி என்பவர் மீண்டும் போட்டியிடுவதாக தகவல். ரத்தினத்தின் கட்சிக்காரருக்கு போட்டியாளர்.

நேசப்பா செய்தியை முழுதாக படித்து முடித்து திரும்பவும் யோசனையில் ஆழ்ந்தார்.

லேண்ட் லைன் அடித்தது. “மேடம், அவர் இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்னு கேக்குறார், என்ன சொல்லட்டும்? சாரி மேடம்” என்றார் செல்லகுமார்.

“இதுக்கு போய் எதுக்குப்பா சாரி சொல்ற. சார் மீட்டிங்க்ல இருக்கார். முடிஞ்சப்புறம் கால் பண்ணுவார்னு சொல்லுங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“ரத்தினம் கட்சி வேட்பாளர் யார்னு பாத்தியா” என கண் மூடியபடியே கேட்டார் நேசப்பா.

கொஞ்ச நேர தேடலுக்கு பிறகு “புஷ்பாங்க, எக்ஸ் எம்எல்ஏ மனைவியாம்” என்றார் சங்கு புஷ்பம்.

“அப்படியா” என நிதானமாய் உள்வாங்கியவர் “அப்ப அவரு உன்ன பாக்க வராரா இல்ல என்ன பாக்க வராரா? என்றார்.

“உங்களைத்தான்” என தீர்க்கமாய் சொன்னார் சங்குபுஷ்பம். “வர சொல்லுவோமா” என்றார்.

“வெயிட் பண்ணு. பாத்ரூம் போயிட்டு வரேன். கொஞ்சம் சுடு தண்ணி குடிக்க கொண்டு வா” என சொல்லி எழுந்து போனார் நேசப்பா.

சங்கு புஷ்பம் நேசப்பாவின் எண்ண ஓட்டத்தை குறுக்கிட விரும்பாமல் அமைதி காத்தார்.

கால் மணி நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மெதுவாக தண்ணீரை குடித்து முடித்தார் நேசப்பா.

பிறகு அவரின் அனுமானத்தை மனைவியிடம் பகிர்ந்துகொண்டார்.

“நானும் அதுவாத்தான் இருக்குமோன்னு நெனச்சேன். சரி வர சொல்லுங்க. பார்ப்போம்” என கலக்கமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

“செல்லகுமார், நேசமணி பேசுறேன். அவரை வரசொல்லுப்பா” என்றார்.

“சரிங்க சார்” என்றார் செல்லகுமார்.

“சார், நீங்க போலாம் சார். நேரா போய் லெஃப்ட் சைட் போனீங்கன்னா லாஸ்ட் பிளாக்” என்றார் ரத்தினத்திடம்.

முக்கால் மணி நேரம் காத்திருந்து சலிப்பாய் எழுந்தார் ரத்தினம்.

“பிஸியான ஆளாப்பா அவரு” என கேட்டார் செல்லகுமாரிடம்.

“சார் சொஸைட்டி ரூல் படி நா அதெல்லாம் சொல்ல முடியாது. சாரி சார்” என முடித்தார் செல்லகுமார்.

சங்கு புஷ்பத்திற்கு பதட்டமாய் இருந்தது. இளைய மகள் லக்ஷ்மிக்கு போனை போட்டார்.

சுருக்கமாக விஷயத்தை சொல்லி முடித்தார்.

“நோ சான்ஸ். இதெல்லாம் நான்சென்ஸா இருக்கு” என்றார் லக்ஷ்மி.

முழு பெயர் லோகலக்ஷ்மி. பாண்டிசேரியில் கல்லூரி பேராசிரியராக வேலை செய்பவர்.

“ஆமாம், நாங்களும் அப்படித் தான் நெனைக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்துல வருவார். பேசிட்டு அப்புறம் போன் பண்றேன்” என்றார் சங்கு புஷ்பம்.

“சரிம்மா. நா ரெண்டு மணி வரை ப்ரீ தான். ஏதாவது விஷயம்னா கூப்பிடு” என்றார் லக்ஷ்மி.

வேர்ல்டு பேங்குக்கு சொல்லிட்டியா என்றார் நேசப்பா புன்னகையோடு.

Tamil novel – OTP – Part 7/20

Checking the newspaper for local political news to get some clue about the guest waiting at the security gate

காலை பத்து மணி வாக்கில் லேண்ட் லைன் அடித்தது. மெயின் கேட் செல்லகுமார்.

“சொல்லுங்க செல்லகுமார்” என்றார் சங்கு புஷ்பம்.

“மேடம், சார பாக்கணும்னு எக்ஸ் எம்எல்ஏ ஆபீசுலேர்ந்து ஒரு கட்சிக்காரர் வந்திருக்கார். அவர் பேரு ரத்தினம்னு சொன்னார். அனுப்பவா மேடம்” என்றார்.

சங்கு புஷ்பத்திற்க்கு ரத்தினம் என்ற பெயர் புதுசாய் இருந்தது. சற்று யோசித்தவர் “அவர் என்னை பாக்கணும்னு சொன்னாரா இல்ல சாரையா?” என்றார்.

“சார் தான் மேடம். நேசமணி மதிவாணன்னு முழு பேர் சொன்னார். ஆனா போன் நம்பர் தெரியாதுனு சொல்றார். ஆளும் பர்ஸ்ட் டைம் பாக்குற மாதிரி இருக்கு” என்றார் செல்லகுமார்.

“சரிப்பா. ஒரு பத்து நிமிஷம் அவரை விசிட்டர் ஹால்ல உக்கார வை. பேன் போட்டு விடுங்க. கொஞ்சம் தண்ணி குடுத்து பாத்துக்குங்க. நா அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன். என்ன கரை வேட்டி அவரு?” என்றார் சங்கு புஷ்பம்.

செல்லகுமார் சொன்ன கட்சி பேரை குறித்துக்கொண்டார்.

“ஏங்க, கொஞ்சம் இங்க வாங்க” என நேசப்பாவை அழைத்தார்.

கிச்சனில் இருந்து வந்த நேசப்பா பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தார்.

“உங்களுக்கு இந்த கட்சிலேர்ந்து ரத்தினம்னு யாராவது தெரியுமாங்க? உங்கள பாக்கணும்னு வந்திருக்கார். விசிட்டர் ஹால்ல வெயிட் பண்ண சொல்லி செல்லகுமார்கிட்ட சொல்லி இருக்கேன்” என்றார் சங்கு புஷ்பம்.

“இல்லையேம்மா, ஆளு பேரு புதுசா இருக்கு. நமக்கும் கட்சிக்காரங்க யாரையும் தெரியாது. யாரா இருக்கும்” என யோசித்தார்.

லேண்ட் லைன் அடித்தது. “மேடம், அவர் போன்ல யார்கிட்டயோ பேசிகிட்டு இருக்கார். எலெக்சன் விஷயம். நேசமணின்னு பேரு அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கார்” என்றார் செல்லகுமார்.

“சரிப்பா, நா சாருகிட்ட சொல்லிடறேன். நீ வெயிட் பண்ணு” என சொல்லி போனை வைத்தார் சங்கு புஷ்பம்.

“எலெக்சன் விஷயம், நேசமணின்னு பேரு அப்படின்னு அவர் போன்ல யார்கிட்டயோ பேசிக்கிட்டு இருக்காராம். செல்லகுமார் சொல்றார்” என்றார் சங்கு புஷ்பம்.

“நம்ம செல்லம் எப்பவும் ஷார்ப்பு” என சிரித்தார் நேசப்பா.

“சரிங்க என்ன விஷயமா இருக்கும்? அதுவும் எலெக்க்ஷனை பத்தி” என குழம்பினார் சங்கு புஷ்பம். “வர சொல்லுவோமா” என கேட்டார் நேசப்பாவிடம்.

“கொஞ்ச நேரம் இரு” என சொல்லி கண் மூடி யோசித்தார்.

சில நிமிடத்திற்கு பிறகு “அங்க ஷெல்ப்புல நம்ம லோக்கல் நியூஸ் பேப்பர் இருக்கு பாரு. லாஸ்ட் நாலு நாள் பேப்பர் எடுத்துட்டு வா” என்றார்.

பத்து நிமிடம் ஆனது. “இங்க பாருங்க” என ஒரு செய்தியை காண்பித்தார் சங்கு புஷ்பம்.

Tamil novel – OTP – Part 6/20

Welcoming the guest and hosting him in the living hall, and having heartfelt exchange of life experience

மறு நாள் காலை டோர் பெல் அடித்தது. அதே தெருவில் மளிகை கடை வைத்திருக்கும் வள்ளியப்பன் வந்திருந்தார்.

“உள்ள வாங்க சார்” என வரவேற்றார் நேசமணி.

“வாங்க சார். எப்படி இருக்கீங்க” என்றபடியே உள்ளேயிருந்து வந்தார் சங்கு புஷ்பம்.

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க” என நலம் விசாரித்தார்.

அவரோடு நீண்டகால நட்பு இவர்களுக்கு. இன்றளவும் அவர் கடையில் தான் பொருட்களை வாங்குவார்கள்.

என்ன டிஸ்கவுண்ட் போட்டாலும் ஆன்லைனில் வாங்க மாட்டார்கள். ஒண்ணாம் தேதியானால் லிஸ்ட் போட்டு போனில் அனுப்பி விடுவார்கள். கடை பையன் கொண்டு வந்து கொடுத்து விடுவான்.

ஒரு ஸ்திரமான வாடிக்கையாளராக அவரின் தொழிலுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள். அதனால் இவர்கள் மீது சற்று அதிக மரியாதையும் பிரியமுமாய் இருப்பார் வள்ளியப்பன்.

“சாரி சார். காலங்காத்தால வந்துட்டேன்” என்றார்.

“இந்தாங்க பஞ்சாமிர்தம். பையன் கல்யாணத்துக்காக திருச்செந்தூர் முருகருக்கு வேண்டிக்கிட்டேன். போயிட்டு நேத்து நைட் தான் வந்தோம்” என்றபடியே ஒரு பாட்டிலை நீட்டினார்.

சங்கு புஷ்பம் நன்றி சொல்லி பய பக்தியாக பெற்றுக் கொண்டார்.

“நீ பேசிகிட்டு இரு அபர். நா போய் இவருக்கு என் ஸ்பெஷல் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.

“சார் நெக்ஸ்ட் டைம் சின்னதா ஒரு கப்புல குடுங்க சார் போதும். ரெண்டு பேருக்கும் சுகர்” என்று சிரித்தார் சங்கு புஷ்பம்.

“நீங்க சாப்பிடுங்க மேடம். அப்புறம் வர்ற கெஸ்ட்டுக்கு எல்லாம் குடுங்க” என்றார் வள்ளியப்பன்.

“வீணாக்காமல் கெஸ்ட்டுக்கு தாராளமா தரலாம் சார். ஆனா நூறு குட்டி கப்பும் ஸ்பூனும் கழுவணும் இந்த பாட்டிலை முடிக்க” என நிஜத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.

“அது என்னவோ உண்மை தான்” என ஒப்புக் கொண்டார் வள்ளியப்பன்.

“சார், இன்னைக்கு லிஸ்ட் அனுப்பலாம்னு இருக்கோம். ப்ரீயா எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் போடாதீங்க. ரெண்டு பார் டிஷ் வாஷ் சோப்பு போடுங்க” என ரெக்வஸ்ட்டை சொன்னார் சங்கு புஷ்பம்.

கொல்லென்று அடக்க முடியாமல் கண்ணில் நீர் வர சிரித்தார் வள்ளியப்பன்.

“இன்னைக்கு என் நாள் நல்லபடியா ஆரம்பமாகுது. இதை நெனச்சு சிரிச்சே இன்னைக்கு பொழுது போகும்” என்றார் வள்ளியப்பன்.

காபியோடு நேசமணி வந்து சிரிப்பில் கலந்து கொண்டார். அரை மணி நேரம் கா கலப்பாக போனது.

“சரிங்க சார். பார்க்கலாம்” என சொல்லி கிளம்பினார்.

ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு பஞ்சாமிர்த பாட்டிலை சிஸ்டம் டேபிள் மேல் வைத்தார்கள்.

அடுத்து வரும் கெஸ்ட்டுக்கு மறக்காமல் கொடுக்க. அப்போது அவர்களுக்குத் தெரியாது அந்த கெஸ்டிடம் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று.