Tamil novel – OTP – Part 12/20

TN politician enjoying his meal

பத்து நிமிடம் கழித்து ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார் நேசமணி.

“ரத்தினம் சார், மணி இப்போ பத்து அம்பது. பதினொன்னு அம்பதுக்கு உங்க டைம் முடியும்” என்றார் சங்கு புஷ்பம்.

இந்த அம்மா சரியான எரிச்சல் டேங்கர் என கறுவினார் ரத்தினம்.

உதார் பேச்சு பேசியோ நைச்சியமாக பேசியோ ஆளுக்கேற்றார் போல் வளைந்து கொடுத்து போனவர். பல ஆண்டுகளாக வாங்கியே பழக்கப்பட்ட கைகள்.

கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல தன்னிடமிருந்தே பணம் வாங்கியதை அவர் மனம் ஏற்க மறுத்தது.

உங்க பேர் என்ன சார்? என்ன விஷயமா பாக்க வந்தீங்க? என்றார்.

“சார், என் பேரு ரத்தினமுத்துசேகர். நம்ம தொகுதி எக்ஸ் எம்எல்ஏ கட்சிலேர்ந்து வரேன். கார்ப்பொரேஷன் எலெக்க்ஷன் விஷயமா பேசணும்” என்றார்.

சேகரா இவரு. அவளை கைலயே புடிக்க முடியாது என மனதில் நினைத்துக்கொண்டார் நேசப்பா.

ரத்தினம் சுத்தி சுத்தி பார்வையை ஓட்டி ஹாலை நோட்டமிட்டார்.

சங்கு புஷ்பம் சிஸ்டத்தை ஆன் செய்து நோட்பேடை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

“சார், நீங்க ஜோசியம் இல்ல வாஸ்து அது மாதிரி ஏதாவது பாக்குறீங்களா?”

என்றார் ரத்தினம். “இல்லிங்க” என்றார் நேசப்பா.

“அப்போ, இந்த வெயிட் லாஸ், ஹீலிங் அந்த மாதிரியா? என்றார். “இல்லிங்க” என்றார் நேசப்பா.

“மேடம் கன்சல்டேஷன் சார்ஜ் கேட்டாங்க. அதான் எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமுன்னு கேட்டேன்” என்றார் ரத்தினம்.

“ஏதோ ஒரு வேலையா தான என்ன பாக்க வந்தீங்க. அதுக்காக தான்”

என ரத்தினதினின் கண்களை ஊடுருவியபடியே சொன்னார் நேசப்பா.

“என்ன தேவைக்காக என்கிட்ட வந்தீங்கன்னு தெரியாது. ஆனா என் நேரத்தோட மதிப்பு எனக்கு தெரியும்” என்றார் நேசப்பா.

இந்த ரெண்டு பேரும் ஒரு மார்க்கமான டிசைனா இருக்காங்களே என உள்ளுக்குள் அரற்றினார் ரத்தினம்.

“கார்பொரேஷன் எலெக்க்ஷன்ல நீங்க சுயேச்சையா நிக்கணும் சார். அத பத்தி பேச தான் வந்தேன்” என்றார் ரத்தினம்.

“எலெக்க்ஷன் விஷயம்னு சொல்றீங்க. தனியா வந்துருக்கீங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“ஆமாங்க, கஷ்டப்பட்டு வியூகம் அமைச்சு செஞ்சா கூட வர்றவன் பேர வாங்கிட்டு போயிடுவான். அதான் நா மட்டும் வந்தேன்” என்றார் ரத்தினம்.

“சார் ரொம்ப ஸ்ட்ராங்கான பெர்சோனாலிடியா இருக்கீங்க. நல்லது சார். நா நேரா விஷயத்துக்கு வரேன்.

அவர் அண்ணி வேட்பாளராக இருப்பதை சொன்னார்.

“அண்ணிய விட சித்தா டாக்டர் நேசமணி பவர்புல் இந்த வார்டுல. அதுனால அதே பேர்ல இருக்குறவங்கள கேண்டிடேட்டா சுயேச்சையா நிக்க வெக்க ஏற்பாடு பண்றேன். கொஞ்சம் ஓட்டு பிரியும். அது எங்களுக்கு சாதகமா இருக்கும்னு நம்புறன். அப்புறம் உங்களுக்கு என்ன பண்ணணுமோ அதையும் பண்ணிடுவோம் என்றார்” ரத்தினம்.

“என்ன பண்ணுவீங்க சார்” என்றார் நேசமணி.

“எல்லா செலவும் அண்ணன் பார்த்துப்பார் சார், நீங்க பேப்பர்ஸ் மட்டும் கரெக்ட்டா குடுத்தா போதும். பசங்கள வச்சி எல்லா வேலையும் பக்கவா நடக்கும் சார். உங்க நாமினேஷன் ஓகே ஆச்சுன்னா ஒரு அமௌன்ட் குடுத்துருவோம்” என்றார் ரத்தினம்.

“எவ்ளோ தருவீங்க” என்றார் நேசப்பா.

“ஒரு மூணு எல் தருவார் சார் அண்ணன்” என்றார் அவர்.

சந்தேகப்பட்ட விஷயம் தெளிவாகி விட்டது. இது காலை சுற்றிய பாம்பு என நினைத்தார் சங்கு புஷ்பம். சிஸ்டத்தில் அமர்ந்தபடியே லக்ஷ்மிக்கு போனில் செய்தி அனுப்பினார்.

“அரசியல் விஷயமா வந்து இருக்கீங்க, உங்களுக்கு எதுவும் சாப்பிட தர மறந்துட்டேன் பாருங்க. இதோ வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.

ரத்தினத்திற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. எப்படியும் படிந்து விடுவார் என தோன்றியது.

“இந்தாங்க சாப்பிடுங்க”, என ட்ரேவை வைத்தார் நேசப்பா.

ஒரு சின்ன பிளேட்டில் பிரியாணியும் ஒரு கிளாஸ் விஸ்கியும் இருந்தது.

அடி வயிற்றில் சரக்கென்று கத்தியால் குத்தியது போலிருந்தது ரத்தினத்திற்கு.

அவர் முகம் வெளிறிப்போனது

“இது இது” என ஏதோ சொல்ல வந்து தடுமாறினார்.

“சாப்பிடுங்க சார். எங்க ஆளுங்களை இத்தனை வருஷமா கூட்டிட்டு போய் கவனிச்சுக்கிட்டீங்க. ஒரு நாள் நாங்க செய்ய கூடாதா” என்றார் நேசப்பா.

எதிரியின் அடி வயிற்றில் கத்தியால் குத்தியும் வஞ்சம் தீராமல் அவன் கன்னத்தில் பளுக் பளுக்கென்று போட்டார் போல வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.

“இது சரி இல்லீங்க. இப்ப வேணாம் சார்” என நாக்குழறினர் ரத்தினம்.

இது அவர் இதுவரை சந்திக்காத ஒரு நிகழ்வு. இந்த விதமான உபசரிப்பு அவரின் மொத்த தயாரிப்பையும் சீர்குலைத்தது. யாரை பார்க்க வந்தோம் என்ன பேச வந்தோம் என சில நிமிடம் எல்லாம் மறந்து தத்தளித்தார் ரத்தினம்.

“ஓ, பகல்ல சாப்பிடறதில்லையா, சரி காபி டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா?” என வலையை விரித்தார் நேசப்பா.

ரத்தினத்திற்கு ஒரு பிடிப்பு கிடைத்தார் போலிருந்தது. ஆனாலும் அந்த டிரே அவரை உறுத்திக்கொண்டே இருந்தது.

“ஏம்மா அபர், சாருக்கு காபியாவது குடும்மா என்றார் நேசப்பா.

ரத்தினத்திற்கு போன மூச்சு வந்தார் போலிருந்தது. பேச்சை இலகுவாக்க “மேடம் பேர் என்ன சார்” என்றார்.

“ஏங்க லிஸ்ட்ல இவர் பேர் பக்கத்துலயே என் பேரும் இருந்திருக்கும். வெறும் நேசமணி மட்டும் தான் நோட் பண்ணுவீங்களா” என கேட்டார் சங்கு புஷ்பம்.

“அவங்க எஸ் பி சார்” என்றார் நேசப்பா. ரத்தினத்திற்கு தூக்கி வாரி போட்டது.

“சங்கு புஷ்பம் சார்” என்றார் நேசப்பா சிரித்துக்கொண்டே.

முதல் பத்து நிமிடத்திலேயே கண்ணை கட்டியது ரத்தினத்திற்கு. பேசாம அரை மணிக்கு ஆயிரம் மட்டும் கொடுத்திருக்கலாம் என நினைத்தார்.

“காபில சர்க்கரை போடவாங்க?” என உள்ளிருந்து கேட்டார் சங்கு புஷ்பம்.

“வேணாம் சார்” என மெலிதான குரலில் சொன்னார் ரத்தினம்.

“பிபீ, சாருக்கு சர்க்கரை வேணாமாம்” என்றார் நேசப்பா நமுட்டு சிரிப்போடு.

“பிபீ இல்ல சார். நார்மல் தான். சுகர் மட்டுந்தான்” என்றார் ரத்தினம்.

“சங்கு புஷ்பத்தோட இன்னொரு பேரு பட்டர்பிளை பீ. அத தான் சுருக்கி என்ன பிபீனு கூப்பிடுவாரு” என சொல்லிய படியே காபி கொடுத்தார் சங்கு புஷ்பம்.

இடைப்பட்ட நேரத்தில் ரத்தினத்தின் பார்வை அடிக்கடி விஸ்க்கி கிளாஸ் மீது விழுந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்திற்க்கு மேல் அதன் ஈர்ப்பு அவர் சுய கட்டுப்பாட்டை தகர்த்தது. அடி வயிற்றில் வாங்கிய கத்திக் குத்தின் ரணம் சிறு வடு கூட இல்லாமல் மறைந்து போனது. விஸ்க்கி கிளாஸ் வேலை செய்யும் என நேசப்பா நினைத்தது பொய்யாகவில்லை.

ஆனால் விஸ்க்கியை விட அந்த கிளாசை கட்சிக்காரர் அவ்வளவு நேசிப்பார் என நேசப்பாவே எதிர்பார்க்கவில்லை. எல்லாம் கோபால் சார் உபயம்.

ரத்தினம் ஆர்வம் தாளாமல் வாய் விட்டே கேட்டு விட்டார்.

“சார், இந்த கிளாஸ் சூப்பரா இருக்கு. எங்க சார் வாங்குனீங்க, எவ்ளோ விலை” என்றார்?

“அமெரிக்காவுல. ஜோடி பத்தாயிரம் நம்ம ஊர் வெலைல” கெத்தாக சொன்னார் நேசப்பா.

மூச்சடைத்துப் போவதற்கு முன் ஸ்டேஜில் இருந்தார் ரத்தினம்.

“அப்ப இந்த ஒரு கிளாஸ் மட்டும் அஞ்சாயிரமா சார்?” என வாயை பிளந்தார்.

“அஞ்சாயிரத்து சொச்சம் உள்ள இருக்க சரக்கு இல்லாம” என சொன்னார் சங்கு புஷ்பம்.

“கிளாஸ்ஸே அஞ்சாயிரம்னா சரக்கு எவ்ளோ இருக்கும்” என கணக்குப் போட்டார்.

ஆனாலும் சரக்கை விட அவரை சுண்டி இழுத்தது என்னவோ அந்த கிளாஸ் தான்.

ஒரு சைடில் இருந்து பார்க்க க்ளாஸுக்குள் கிளாஸ் போல் இருந்தது.

நீண்ட ஐங்கோண வடிவ வெளிப்புறமும் வைன் கிளாஸ் போன்ற உட்புறமும் மேலிருந்து உள்ளே பார்த்தால் சிறிய தங்க நிற சாண்ட்லியர் விளக்கு தரையில் பட்டு ஜொலிப்பதை போல விஸ்க்கி மிதந்து கொண்டிருந்தது.

ஐம்பது மில்லி கூட இல்லாத திரவம் முழு கோப்பையையும் வெளிற் மஞ்சள் நிறமாக்கியது.

சற்றே உட்புறம் குவிந்த வாய்ப்பகுதி தங்க வளையம் போல இருந்தது. கால் கோப்பைக்கும் கீழே இருந்தது விஸ்க்கி. மீதி இருந்த முக்கால் பகுதி காலி கோப்பையை ரசித்துக்கொண்டே இருந்தார் ரத்தினம்.

உயர் தர கண்ணாடியில் அருமையான வளைவுகளைக்கொண்டு பார்க்க கச்சிதமாக இருந்தது. மனதிற்குள் ஆருயிர் அண்ணனை நினைத்துக்கொண்டார் ரத்தினம்.

“பிச்சைக்கார பய. என்ன பதவி காசு இருந்து என்ன பிரயோஜனம். மாடு மாதிரி வேல செஞ்சாலும் ரெண்டு ரூபா பிளாஸ்டிக் கப்புல குடுக்குறான். அதுல ஊத்திக் குடிக்கவே என்னவோ வள்ளல் பிரபு மாதிரி பேசுறான்.

சார் தங்கம். நல்ல மனசுக்காரர். ஊரு பேரு தெரியாத எனக்கே அஞ்சாயிரம் ரூபா க்ளாஸ்ல அசால்ட்டா தர்றார்.

மனுஷன்னா இவர்தான்யா நல்ல மனுஷன். இந்த டீலிங் நல்ல படியா முடிஞ்சா அப்புறம் சாருகிட்ட டச்சுலேயே இருக்கணும் ” என யோசனை புல்லட்டை தாறுமாறாய் ஓட்டினார் ரத்தினம்.

“சார், பிரியாணி சாப்பிடலேன்னா பரவாயில்ல.போகும் போது பார்சல் பண்ணி தரேன். இதை குடிங்க சார்” என கிளாசை நீட்டினார் நேசப்பா.

ரத்தினம் அசடாய் நெளிய, “இது உங்களுக்கு, காபி எனக்கு” என்றார் நேசப்பா.

புறக் காரணிகளால் வரும் ஆர்வம், எரிச்சல், பதட்டம், குழப்பம், தடுமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளுக்கும் எளிதாய் இரையானார் ரத்தினம்.

சூழ்நிலைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள அவர் எடுத்துக் கொள்ளும் காலம் அதிகம். அது இங்கே அவர் முன் இருக்கும் எதிராளிகளுக்கு யோசிக்க அதிக நேரத்தை அளித்தது.

சங்கு புஷ்பமும் நேசப்பாவும் சொல்லாலும் செயலாலும் அதை ஒருவர் மாற்றி ஒருவர் செய்து அவரை நெருக்கி கொண்டிருந்தார்கள்.

Tamil novel – OTP – Part 10/20

TN politician aiming for power

ரத்தினத்திற்கு தெரிந்த ஒரே தொழில் கட்சிப்பணி. தெரிந்த ஒரே கட்சி அவர் கட்சி மட்டுமே. கட்சியில் என்ன பணி என்றால் அவர் இருக்கும் நிலையில் பணம் தவிர மற்ற எல்லாமும் என சொல்லலாம்.

கிளை மட்டத்தில் இருந்து ஆரம்பித்து இருபது ஆண்டுகளாக களத்தில் பணியாற்றி ஒன்றியத்தின் அருகே இப்போது தான் கரை சேர்ந்திருக்கார்.

மாவட்ட அளவில் நல்ல அறிமுகம் இருந்தாலும் இன்னும் ஒரு படி முன்னேற்றத்திற்க்காக காத்திருக்கிறார்.

நிரந்தர தொழில் என்று எதுவும் கிடையாது. வருமானம் மழையாக இல்லெயென்றாலும் சமயங்களில் தூறலாகவோ இல்லை சாரலாகவோ இருக்கும்.

கருமேகம் சூழ்வது போல் எங்கு பிரச்சினையோ, வில்லங்கமோ இருக்கிறதோ, அங்கே வீசும் காற்றின் திசைக்கேற்ப சாய்பவர்.

விசுவாசத்தையும் உழைப்பையும் மட்டுமே கொட்டி கட்சியில் முன்னேற முடியும் என்று இன்று வரை நம்புபவர்.

தன் அனுபவத்தாலும் திறனாலும் தன்னால் நூதனமான முறையில் செயலாற்ற முடியும் என ஆழமான எண்ணம் உடையவர்.

கட்சி சகாக்களை ஒருங்கிணைத்தாலும் சிறு ஒளி கீற்று கூட மற்றவர் மீது விழாமல் பார்த்துக்கொள்வார்.

இப்போது அவர் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம். கார்பொரேஷன் தேர்தல் காலம்.

ரத்தினத்தின் ஏரியாவில் அவர் கட்சி வேட்பாளராக நிற்பது எக்ஸ் எம்எல்ஏ மனைவி திருமதி புஷ்பா.

எக்ஸ் எம்எல்ஏ சமீபத்தில் ரத்தினத்திற்கு ஆருயிர் அண்ணனாக கிடைத்தவர்.

நீண்ட காலம் தூரத்தில் இருந்து ரத்தினத்தின் செயல் பாடுகளை பார்த்தவர் அண்ணன்.

சில மாதங்கள் முன்பு அவர் வலது கரம் அகால மரணமடைய புது வலது கரமாய் ஆனார் ரத்தினம்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்ட சபை தேர்தல். அண்ணனுக்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது.

இப்போது மனைவி கவுன்சிலராகி, பிறகு அவரும் எம்எல்ஏ ஆகி விடுவார் என திட்டம்.

கார்பொரேஷன் அளவிலும் மாநில அளவிலும் தனக்கு இன்னும் சற்று பவர் கூடும் என நாடி நரம்பெல்லாம் நம்பிக்கை கொப்பளிக்க இருப்பவர் ரத்தினம்.

அரசாங்க கேபினட்டை விட கிச்சன் கேபினட்டின் செல்வாக்கு அதிகம் என கண்கூடாக பார்த்தவர் ரத்தினம். சில இடங்களில் ரெண்டு மூணு கிச்சன் கூட இருக்கும்.

அதற்கு வாழும் உதாரணம் அவர் அண்ணன். மாநில கிச்சன் கேபினட்டின் செல்லபிள்ளை.

ஸ்டேட்டு கிச்சனோ லோக்கல் கிச்சனோ, க்ளவுடு கிச்சனோ, எந்த கிச்சன் செல்வாக்கு கிடைத்தாலும் மிக்சர் சாப்பிட்டே அடுத்த நிலைக்கு போலாம் என்பது எழுதப்படாத விதி.

அண்ணியை வெற்றிக்கொடி நாட்ட வைத்துவிட்டால் பொலீரோ காரின் பின் சீட் தனக்கு மட்டும் தான் என தீர்க்கமாக நம்பினார் ரத்தினம்.

ஒரு பக்கம் எம்எல்ஏக்கு அருகாமை, இன்னொரு புறம் பொலீரோவில் ட்ரிப் அடித்து எப்படியாவது மேயருக்கு அறிமுகமாவது.

அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை அரசாங்கம் போட்டதோ இல்லையோ ரத்தினம் தன் வளர்ச்சிக்கான திட்டத்தை தெளிவாக போட்டார்.

பிற்காலத்தில் இருவரில் காற்று யார் பக்கம் வீசுகிறதோ அங்கே சாமரம் வீசுவது என முடிவெடுத்தார்.

ஒரு திரைப்படத்தில் சொப்னா அண்ணிக்கு கேன்சர் என போலியாக அவருக்காக உருகி உருகி பிராத்திப்பார் அண்ணனின் நண்பர். அது போல போலியாக அண்ணிக்காகவும் அண்ணனுக்காகவும் உருகுவதாகவும் உயிரையே கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஒரு கூட்டம் இப்போது சமூகத்தில் ஊடுருவி இருக்கிறது.

அந்த கூட்டம் உண்மையானது இல்லை என்பதும் எல்லா அண்ணன் அண்ணிகளுக்கும் தெள்ளத் தெளிவாக தெரியும். ஆனால் இரு தரப்பும் மக்கள் மன்றத்தில் அதை ஒரு கலாச்சாரமாக கடை பிடித்து வருகிறார்கள்.

அது உட்கட்சி ஜன நாயகத்துக்கும், தேர்தல் ஜன நாயகத்துக்கும் வந்திருக்கும் கேன்சர் என மக்களுக்கு மட்டும் தெரியும்.

Diwali Gift Hamper – part 5

பூரி குமாரி : ஏங்க, மக்கள் பிரதான எதிர்கட்சி தலைவருக்கு என்ன செலக்ட் பண்ணி இருக்காங்க?

கோல்கப்பா : பல சிரமங்களை தாண்டி, தன்னை தலைவராக அவர் நிலை நிறுத்திக் கொண்டிருப்பதால் இந்த ஐட்டத்தை பரிசாக கொடுக்கிறார்கள்.

பூரி குமாரி : தர்ம யுத்த தலைவருக்கு என்ன பரிசு?

கோல்கப்பா : இதோ இருக்கு பாரு!

பூரி குமாரி : ஹிஹிஹி, குக்கர் தலைவருக்கு என்ன பரிசு?

கோல்கப்பா : இந்த ஆப்ஷன் எப்புடி?

பூரி குமாரி : செம, நம்ம மேங்கோ பார்ட்டிக்கு என்ன கிப்ட்ங்க?

கோல்கப்பா : சீனியருக்கும் ஜுனியருக்கும் இந்த ஐட்டம் தான்!

பூரி குமாரி : ஹாஹாஹா, டாப்பான செலெக்ஷன். நம்ம ட்ரம்ஸ் பார்ட்டிக்கு என்ன இருக்கு?

கோல்கப்பா : இங்கே பார்!

பூரி குமாரி : அட்டகாசமான பரிசுங்க! கூட்டணி பேச்சுவார்த்தை இவங்க எப்படி நடத்துவாங்கன்னு மக்கள் நல்லா புரிஞ்சு வெச்சிருக்காங்க! சரி, நம்ம டார்ச் லைட் மேனுக்கு என்ன இருக்கு?

கோல்கப்பா : அவருக்கு ஒரு சேஞ்சுக்கு ஜனங்க கேம் கார்டு குடுத்திருக்காங்க!

பூரி குமாரி : ஹய்யோ, கோல்கப்பா! ஒரு செல் அமீபா மாதிரி இப்போ இருக்காரு. அப்புறம், அவரோட நிலைப்பாட்டை மாத்திகிட்டதால இந்த பரிசுக்கு சொந்தக்காரர் ஆகிட்டாரு போல?

கோல்கப்பா : கரெக்ட் குமாரி!

பூரி குமாரி : ஒரு முக்கியமான தலைவரை மறந்துட்டோமே? நம்ம கடல்மான் சாருக்கு என்ன ஐட்டம்?

கோல்கப்பா : அவருக்கு, ஒரு ஐட்டம் இல்ல, ரெண்டு பரிசு தராங்க மக்கள்.

பூரி குமாரி : ஆஹா, அருமையான பொருள். இன்னொன்னு என்ன?

கோல்கப்பா : கோல்கப்பா : இது ரெண்டாவது ஐட்டம்.

பூரி குமாரி : அடடா, அடடா! அற்புதம்.நம்ம புது கட்சி தலைவருக்கு என்ன பரிசு தந்திருக்காங்க?

கோல்கப்பா : அவருக்கும் டபுள் தமாக்கா! ரெண்டு ஐட்டம் இருக்கு. இந்த கிப்ட ஆளுங்கட்சி குடுக்குது, ரெண்டாவதை மக்கள் குடுக்கறாங்க!

பூரி குமாரி : வாவ், மாசா இருக்கே ஜனங்க செலெக்ஷன்! இவ்வளவு தலைவர்களுக்கு பரிசு தந்த ஜனங்க அந்த கட்சிகளுக்காக பேசும் வாடகை வாய்களுக்கு என்ன கிப்ட தந்திருக்காங்க?

கோல்கப்பா : நீயே பாரு!

பூரி குமாரி : சான்ஸே இல்லீங்க, ஜனங்க நெஜமாவே கலக்குறாங்க!

கோல்கப்பா : ஜனங்க கலக்குறது இருக்கட்டும். ஜனங்களை காப்பாத்த வேண்டிய அதிகாரிகள் துப்புகெட்டத்தனமா இருக்காங்களே, அவங்களுக்கு இதான் கெடச்சிருக்கு!

பூரி குமாரி : இவ்வளவு பேருக்கும் மக்கள் தீபாவளி பரிசு கொடுத்திருக்காங்க. அந்த மக்கள் தலைவர்களிடம் இருந்து என்ன பரிசு எதிர்பாக்குறாங்க?

கோல்கப்பா : வேறென்ன? இதை தான்!

பூரி குமாரி : ஆமாங்க! மக்கள் உண்மையையும் நேர்மையான ஆட்சியையும் தான் எதிர்பாக்குறாங்க!

கோல்கப்பா : கடைசியா, மக்கள் நம்ம ஸ்டோரி பூரிக்கு என்ன குடுத்திருக்காங்க தெரியுமா? இங்கே பார் !

பூரி குமாரி : நன்றி மக்களே! மிக்க நன்றி! இந்த தீபாவளி கிப்ட் ஹாம்பர் சீரீஸ் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிரவும்! Bye!

Diwali Gift Hamper – part 4

பூரி குமாரி : ஏங்க, ஆளும் தரப்பு அவங்க கூட்டணி கட்சிகளுக்கு என்ன தீபாவளி கிப்ட் தந்திருக்காங்க?

கோல்கப்பா : நேரடி கூட்டணிக்கு கேக்குறியா? இல்ல மறைமுக கூட்டணிக்கு கேக்குறியா?

பூரி குமாரி : ஹிஹிஹி, கோல்கப்பா இந்த போஸ்டுக்குக்காக மனச ஒருமுகமா வச்சு வேல பாத்து இருக்கீங்க போல?

கோல்கப்பா : நா வேலை பாத்தது இருக்கட்டும். மழைல மொளச்ச நெல்லு மூட்டைங்களை பாத்தியா?

பூரி குமாரி : ஆமாங்க, பாத்தேன். டெல்டா பெல்ட்டு, வர்ற எலெக்ஷன்ல வாரு பிய்யுற வரை சாத்த போகுது!

கோல்கப்பா : சரியா சொன்ன குமாரி! நெலமை இப்படி இருக்க, இவங்க கூட்டணி வாய்க்கா வரப்பு தகறார சரி கட்ட இந்த அயிட்டங்களை தான் எறக்கியிருக்காங்க.

பூரி குமாரி : ஸ்பிரிட்ல அடிச்ச அமவுண்ட கொஞ்சம் பாச்சுன்னா, டீம் ஸ்பிரிட் தானா பொங்க போகுது, நெக்ஸ்ட் ப்ளீஸ்!

பூரி குமாரி : கூட்டணி கூடாரத்த முட்டு குடுக்க சொல்லி கெஞ்சுறாங்க? கரெக்ட்டா கோல்?

பூரி குமாரி : நம்ம ட்ரைட் அண்ட் டெஸ்டட் கூட்டணி, சாலிடா வின் பண்ணிடலாம்னு சொல்ற மெசேஜ்தான இது? இருமல் மருந்த டெஸ்ட் பண்ண துப்பில்ல? ஓல்ட் டீம், கோல்ட் டீமுன்னு பெருமை வேற!

கோல்கப்பா : லிஸ்ட்ல இதான் கடைசி அயிட்டம். இத பத்தி உன் கருத்து என்ன?

பூரி குமாரி : எலெக்சன் வரை தீயா நாள் பூரா வேல பாருங்க. எங்கெங்கே நம்ம பொழப்பு நாறுதோ, அங்க போய் நம்ம ஆட்சி புகழ பாடுங்க. சரியா?

கோல்கப்பா : பாஸாயிட்ட போ!

பூரி குமாரி : இவங்க ஆட்சிக்கு வர்றதுக்கு “Bare Necessities” இதெல்லாம்னு, நெஞ்ச தொறந்து சொல்லி இருக்காங்க!

கோல்கப்பா : பாய்ண்ட புடிச்சுட்ட! ஆளும் தரப்புக்கு கூட்டணிக்காரங்க கொடுத்த ரிட்டர்ன் கிப்ட் பாக்குறியா? மொத அயிட்டம் இதான்.

பூரி குமாரி : மனசு ஊசல்ல இருக்கு! ட்விஸ்ட்டை எதிர்பாருங்க, எப்போ வேணா இந்த கூட்டணிக்கு பால் ஊத்திட்டு போய்டுவோம்னு லீடு குடுக்குறாங்க, நெக்ஸ்ட் ப்ளீஸ்!

பூரி குமாரி : பவர் ஷேர் கேட்டா ஏன் கசக்குதுன்னு கொமட்டுலயே குத்துறாங்க!

பூரி குமாரி : நாங்க எல்லாம் மனசு வருத்தத்துல இருக்கோம். எங்கள பகைச்சிகிட்டு தேர்தலை சந்திச்சு தோத்தீங்கண்ணா, இந்த கார்டு கேம் தான் அடுத்த அஞ்சு வருஷத்துக்கு வெளையாடுவீங்கன்னு பங்கமா சொல்றாங்க கோல்!

கோல்கப்பா : சரி இப்போ, அந்த பக்கம் மறைமுக கூட்டணிக்கு ஆளும் தரப்பு டெல்லிக்கு என்ன அனுப்பி இருக்காங்கனு பாரு!

பூரி குமாரி : நச்சுனு அனுப்பி இருக்காங்க கோல்கப்பா! அதுக்கு டெல்லி சைட்லேர்ந்து ஆசீர்வாதம் பண்ணி என்ன தந்திருக்காங்க?

பூரி குமாரி : ஹிஹிஹ்ஹி, நோ கமெண்ட்ஸ் கோல்கப்பா, நெக்ஸ்ட் என்ன?

பூரி குமாரி : ஹாஹாஹா, நைஸ் ஒர்க் கோல் டார்லிங்! மக்களே அடுத்த பதிவுல சந்திக்கலாம். Bye!

Diwali Gift Hamper – part 3

பூரிகுமாரி : ஏங்க, கமலாலயத்துல அவங்க முக்கிய தலைவர்களுக்கு என்ன தீபாவளி கிப்ட் குடுத்தாங்கன்னு மக்களுக்கு சொல்லலாமா?

கோல்கப்பா : இந்த வருஷம் அங்க களை கட்டியிருக்கு. வெறும் ஸ்வீட் மட்டும் இல்ல, மற்ற மாடர்ன் ஐட்டம்ஸும் குடுத்திருக்காங்க.

பூரிகுமாரி : ஆமாங்க, முதலில் மரியாதைக்கு உரிய விபி அவர்களுக்கு இந்த இனிப்பும் வாழ்த்தும்!

கோல்கப்பா : அடுத்ததாக, மேதகு முன்னாள் ஆளுநருக்கு இந்த கிப்ட் ஏன்னு சொல்லு பாக்கலாம்?

பூரிகுமாரி : அவங்க மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும் சாதனை புரிந்த தலைவர்.

கோல்கப்பா : அருமையாக சொன்னாய் குமாரி! அவர் தன்னுடைய நிர்வாக திறனை இரு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்த போது நிரூபித்திருக்கிறார்! “தாமரை மலர்ந்தே தீரும்” என்ற சொற்றொடரை சாதாரண மனிதர்களிடம் கொண்டு சேர்த்தவர்.

கோல்கப்பா : அடுத்ததாக, நம்ம டார்ச் லைட் தலைவரை தோற்கடித்து, மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற தலைவிக்கு இது தான் தீபாவளி கிப்ட்!

பூரிகுமாரி : இது சரியான பரிசுங்க! தேசிய அளவில் முக்கிய பொறுப்பை அடைவது அவ்வளவு சாதாரணமான விஷயமில்லை!

கோல்கப்பா : அடுத்ததாக, முன்னாள் தலைவருக்கு கிடைத்த கிப்ட் இதோ!

பூரிகுமாரி : செம செம, இது “டெய்லி ஆப்ஜெக்ட்” பிராண்டு தானே? விளக்கமே தேவை இல்லை! கோல்கப்பா, நெக்ஸ்ட் ப்ளீஸ்!

கோல்கப்பா : கடைசியாக, நம்ம தற்போதய தலைவருக்கு இந்த சாக்லேட் ஹாம்பர்! பழைய நட்சத்திரங்கள் இன்னும் ஒளிரலாம், ஆனால் இவருடைய ஒளியை தவிர்க்க முடியாது! எல்லா கிரகணமும் கடந்து போகும் நேரம் வரும்!

பூரிகுமாரி : அட்டகாசமா இருக்குங்க! புரிஞ்சவங்க பிஸ்தா!!! Bye!!

Diwali Gift Hamper – part 2

பூரிகுமாரி : ஏங்க, செயல் வீரருக்கு ஸ்வீட் குடுத்த தலீவர் சீனியர் மேனுக்கு என்ன தந்தாரு?

கோல்கப்பா : தலீவருக்கு சில மன வருத்தம் இருந்தாலும், அவருக்கு சீனியர் மேல பாசம் ஜாஸ்தி! அவர் சாய்ஸ் எப்படினு சொல்லு?

பூரிகுமாரி : அடக்கடவுளே! இது என்ன புது ஐட்டமா இருக்கு!

கோல்கப்பா : இதென்னை பிரமாதம்? இதை விட ஸ்பெஷல் ஐட்டத்த சீனியர் நம்ம தலீவருக்கு குடுத்திருக்காரு! இங்க பாரு!

பூரிகுமாரி : மகனுக்கு பதவி வாங்குறதுல விடா கண்டனா இருக்காரு போல!

கோல்கப்பா : ஆமாமா. ஆனா தலீவருக்கு வேற ஐடியா இருக்கு!

பூரிகுமாரி : எனக்கு தெரியுங்க. இதானே?

கோல்கப்பா : சரியா சொல்லி இருக்க. பதவிய தலீவர் அவர் பேரனுக்கு தான் தர போறாராம்!

பூரிகுமாரி : வேறென்ன எதிர்பார்க்க முடியும்ங்க, இது தெரிஞ்ச கதை தானே! அதனால ஜனங்க மைண்டு வாய்ஸ் இதான்!

கோல்கப்பா : முடிச்சு விட்ட போ! வா, நம்ம நெக்ஸ்ட் பார்ட்க்கு போலாம். Bye!

Diwali Gift Hamper – part 1

பூரி குமாரி: ஏங்க, நம்ம வாசகர்களுக்கு தீபாவளிக்கு என்ன ஸ்பெஷலா சொல்ல போறீங்க”?

கோல்கப்பா : “தீபாவளிக்கு நம்ம மக்கள், தலைவர்களுக்கு என்ன ப்ராண்டு பெஸ்டிவல் கிப்ட் ஹாம்பர குடுத்துருக்காங்கன்னு பாக்கலாமா?

பூரி குமாரி: எனக்கு ஒரு டவுட்டுங்க? பண்டிகையை “விடுமுறை தினம்”னு சொல்றவங்களுக்கு மக்கள் எப்படிங்க குடுப்பாங்க?

கோல்கப்பா : ஹ்ஹீஹீ, அவங்க விடியல்னு சொன்ன நாம நம்புறோம்ல. நம்ம பரிசுன்னு சொன்னா அவங்களும் நம்பிட்டு போகட்டுமே! விடு குமாரி!!

பூரி குமாரி: சரி, நம்ம தலீவருக்கு என்ன ப்ராண்டுங்க?

கோல்கப்பா : இப்போ இருக்குற இளைய தலைமுறை இவரை அப்பான்னு கூப்புடுறாங்களாம்ல! அதனால இந்த ப்ராண்டு ஸ்வீட்ட தந்திருக்காங்க!

பூரி குமாரி: அருமை! அருமை! அப்போ இளையவருக்கு என்ன பார்சல் குடுத்திருக்காங்க?

கோல்கப்பா : அரும்பாடு பட்டு, அவஸ்தை பட்டு பதவிக்கு வந்த புண்ணியவான்ல! அதுனால கிப்டுலையாவது ஆனந்தம் இருக்கட்டும்னு இதை தந்திருக்காங்க!

பூரி குமாரி : நெஜம்தான். சரி நம்ம தலீவரோட சிஸ்டருக்கு மக்கள் என்ன குடுத்தாங்க?

கோல்கப்பா : நீயே சொல்லு, மக்கள் ஏன் சிஸ்டருக்கு இதை ஏன் செலக்ட் பண்ணாங்கன்னு?

பூரி குமாரி : ஹா, கண்டுபுடிச்சிட்டேன். இவங்க இப்போ அண்ணனோட பல்ஸ நல்லா புரிஞ்சிக்கிட்டு பாஸாகிட்டாங்க. டெல்லிக்கும் தூத்துக்குடிக்கும் பறந்துகிட்டே இருக்காங்க! கரெக்ட்டா?

கோல்கப்பா : கலக்கிட்ட போ!

பூரி குமாரி: கரெக்ட்டுதான். மக்களே பரிசு தரும்போது செயல் வீரர் ஏதாவது தலீவருக்கு குடுத்திருப்பாரே?

கோல்கப்பா : அவர் குடுக்காமலா இருப்பாரு? இதை தான் குடுத்திருக்காரு!

பூரி குமாரி : இதென்னங்க, “பாருக்குள்ள”ன்னு ஒரு ப்ராண்டா?

கோல்கப்பா : அவரு துறை அதானே? வேறென்ன குடுப்பாரு?

பூரி குமாரி : செமையா இருக்குங்க ! அவருக்கு தலீவர் என்ன ரிட்டர்ன் கிப்ட் தந்தாரு?

கோல்கப்பா : இங்கே பாரு , நல்லா பாரு!

பூரி குமாரி : வாவ்! வாவ்! நம்ம தலீவர் செலக்க்ஷன் கலக்கலா இருக்குங்க !

மக்களே, அடுத்த பார்ட்ல இன்னும் சில ப்ராண்ட்ஸ் வரும்! படிச்சி என்ஜாய் பண்ணுங்க! Bye!

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 11/11

Tamil story about a young family

அந்த வாரம் அமைதியாக கழிந்தது. ராஜு பெரும்பாலும் சுரத்தே இல்லாமல் இருந்தான்.

அவன் செய்த தவறு அவனுக்கே உறுத்தலாக இருந்தது. சுதாவை நேருக்கு நேராய் பார்ப்பதையே தவிர்த்தான்.

ஒரு நாள் அவன் ஆபிசிலிருந்து வந்ததும் மணி சார் போன் வந்தது. அவரின் இருபதாவது கல்யாண நாளுக்கான அழைப்பு.

வரதாவும் மணி சாரும் ராஜுவிடம் பேசி விட்டு, சுதாவிடமும் பேசி அழைப்பு விடுத்தார்கள்.

தாதிபத்ரியில் இருக்கும் புக்கா ராமலிங்கேசுவர ஸ்வாமி கோவிலில் வரும் வெள்ளியன்று காலை ஒன்பது மணிக்கு சிறப்பு பூஜை என வரதா விவரம் சொன்னார்.

அவள் சுருக்கமாக நடந்த விஷயங்களை வரதாவிடம் சொன்னாள்.

“சுதா, இது இயல்பானது. குறிப்பாக அப்பாக்களுக்கு இருக்கும் ஒரு குணம். அவர்களால் அவ்வளவு எளிதாக தங்கள் குழந்தையின் நிலையை ஜீரணம் செய்ய முடியாது. அவர்களுக்கும் பாசம் இருக்கும். ஆனால் அதை மீறி ஒரு கையாலாகாத உணர்வு அவர்களுக்கு மேலோங்கி இருக்கும். அது அவர்களை சில சமயம் ஒதுங்கி போகும் முடிவை எடுக்க வைக்கும். அதனால் நீ இதை கவனமாக கையாண்டது சரிதான்” என சொன்னார் வரதா.

“நா அவர்கிட்ட சில சமயங்கள்ல கடுமையா பேச வேண்டியிருந்தது வரதா. இப்போ அமைதியா அவர் கெளம்பி போறத வேடிக்கை பார்த்துட்டு, அப்புறம் தனியா பவாவை கவனிக்குறேன்னு சுய பச்சாதாபத்துல இருக்குறது சரியில்லேன்னு தோணுச்சு. நீங்க, ஆண்ட்ரியா எல்லாரும் கஷ்டமான நேரத்துல எனக்கு துணையா இருந்தீங்க. மணி சார் அவர்கிட்டயும் பேசி இருக்கார். ரொம்ப தேங்க்ஸ் வரதா. நாங்க நிச்சயமாக பூஜைக்கு வருகிறோம்” என சொல்லி போனை வைத்தாள் சுதா.

ராமலிங்கேசுவர ஸ்வாமி சுதாவுக்கு மிகவும் பிடித்தமான கோவில். சுயம்பு வடிவாக சிவ பெருமான் பெண்ணா நதி கரையில் அருள் பாலிக்கும் திருத்தலம். விஜயநகர பேரரசர் காலத்து பழமையான கோவில்.

வெள்ளிகிழமையன்று காலை கோவிலுக்கு போய் பூஜையில் கலந்துகொண்டு பிறகு மண்டபத்தில் உட்கார்ந்தார்கள். பவா தூண்களை பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். விஷ்ணு சன்னதியின் முன்னால் இருந்த தூண்களை ஒரு பக்தர் தட்டி விட மெதுவான ஓசை கேட்டது. பவாவுக்கும் அது கேட்டிருக்க வேண்டும். சிரித்தபடியே கண்ணில் மின்னல் தெறிக்க திரும்பி பார்த்தது. அவர் மெதுவாய் ஒவ்வொரு தூணாய் தட்ட அதன் பார்வையில் சந்தோஷம் தெரிந்தது.

ராஜுவுக்கு கண்களில் நீர் பெருக்கெடுக்க ஓடி போய் பவாவை அள்ளிக் கொண்டான். சுதாவுக்கு கண்ணீர் கட்டு படுத்தமுடியவில்லை.

வரதா வந்து அந்த தூண்களின் சிறப்பம்சங்களை  விளக்கினார். இயரிங் எயிட் உதவியுடன் இருந்தாலும் அந்த மெல்லிய நுட்பமான ஓசையை அவளால் கேட்க இயன்றது சுதாவுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது.

ஒரு மணி நேரம் பொறுமையாக கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.

“சுதா, எனக்கு மனசு தெளிஞ்சுடுச்சி, சாரி, நா உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்” என மெதுவாய் சொன்னான் ராஜு.

“நீ தெளிவா இருந்தா எனக்கு அது போதும் ராஜு ” என ஆறுதலாய் சொன்னாள் சுதா.

“இந்த கோவில் தான் சுதா எனக்கு புத்திய குடுத்திருக்கு. இந்த கோபுரத்தை பாத்தியா? பாதிலேயே நிக்குது. சர்வ வல்லமை படைச்ச சாமியே பூர்த்தியாகாத ஒரு கோவில்ல இருக்கார். வர்ற ஜனங்க அதுல இருக்க சிற்ப வேலைகளை தான் ரசிக்குறாங்களே தவிர, அது முழுமையடையலேன்னு  யாரும் அதை குறையா சொல்லல.

சாமிக்கு இல்லாத சக்தியான்னு யோசிச்சு பார்த்தேன். அவர் நினைச்சார்னா இந்த கோவிலை பூர்த்தி செய்து இருக்கலாம். ஆனா அது ஏன் அவர் செய்யலேன்னு யோசிச்சேன். எனக்கு பதில் பிடிபடலை.

ஆனா நம்ம வாழ்கையை பத்தி எனக்கு தெளிவு கிடைச்சிருக்கு. நம்ம பவாகிட்ட இருக்க குறைய நா ரொம்ப பெரிய விஷயமா மனசுல போட்டு குழப்பிக்கிட்டு உங்களை விட்டு பிரியுற முடிவுக்கே வந்துட்டேன். ஆனா நீ இந்த குடும்பத்துல இருக்க அழகை பாத்ததால என்னை சகிச்சுகிட்டு வாழுற. ரொம்ப சாரி சுதா, என்னை நெனச்சா எனக்கே வெக்கமா இருக்கு” என்றான் ராஜு.

சுதாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. “சாரி ராஜு, நானும் உன் விஷயத்துல கடுமையா நடந்துக்கிட்டேன். இன்ஸ்டால போஸ்ட் பண்ணது கூட நீ சொல்லாம முடிவெடுத்ததால தான். மற்றபடி உன்ன விட்டு கொடுக்கணும்னு இல்ல. ஜெபாக்கு விஷயம் தெரிஞ்சுது ஆண்ட்ரியா மூலமாக. மணி சார் கிடையாது. ஆண்ட்ரியா உன்னோட சிச்சுவேஷன, நீ என்ன மைண்ட்செட்ல இருக்கேன்னு ஜெபாக்கு தெளிவா சொல்லி இருக்கா. அவர் அன்னிக்கு உன்கிட்ட பேசினது கூட நீ உணரணும்னு தானே தவிர, உன்னை காயப்படுத்த இல்லை” என்றாள் சுதா.

“நீ எனக்கு பெரிய உபகாரம் பண்ணி இருக்கே சுதா” என சொல்லி பவாவை இறுக அணைத்துக் கொண்டான்

மகிழ்ச்சியில் தாதிபத்ரியின் தங்க புத்ரியாக ஜொலித்தாள் சுதா!

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 10/11

A mother thinking about her child's future

சுதாவுக்கு அன்று அதிகாலையிலேயே தூக்கம் கலைந்தது. நேரம் ஐந்து பதினைந்து.

பல் துலக்கி, குளித்து காபி போட்டு குடித்து முடித்தாள். பவாவுக்கு பால் பாட்டில் ரெடி செய்து குடிக்க கொடுத்தாள். 

பவா பால் குடித்து விட்டு தூக்கத்தை தொடர ராஜூவை எழுப்பினாள்.

“ராஜு, காபி போட்டு வச்சிருக்கேன். பவா பால் குடிச்சுட்டா. நா கோவிலுக்கு போயிட்டு வரேன்” என சொல்லிவிட்டு கிளம்பினாள்.

பத்து நிமிடத்தில் ரெடியாகி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

கோவில் கூட்டமில்லாமல் காலியாக இருந்தது.

நின்று நிதானமாக சாமி கும்பிட்டு விட்டு வழியே வந்து கல் மண்டபத்தில் உட்கார்ந்தாள்.

இன்றைய பொழுது நல்ல படியாக இருக்க வேண்டும், கடவுளே எனக்கு தெளிவான புத்தியை கொடு என பிரார்த்தனை செய்தாள்.

அம்மாவிடம் பேச விடும் போல தோன்றியது. ஏழு மணி. இந்நேரம் எழுந்திருப்பார்கள், போன் போடலாம் என தோன்றியது.

போன் போட்டு தன் மனதில் உள்ளதை முழுவதுமாய் சொல்லி முடித்தாள்.

“சுதா, நீ எடுத்த முடிவு நல்லது தான். ஆனா, அதை உன் மனசு காயப்பட்டு இருக்கும் போதே செயல்

படுத்தணும்னு நினைக்காதே” என்றாள் அம்மா.

“அதான்மா என் பிரச்சினை. எனக்கு ராஜுவோட நெலமை நல்லா புரியுது. ஆனா அதே சமயம் அவன் செஞ்ச செயல் என்னை ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்கு. நா எப்படி இத டீல் பண்றதுன்னு எனக்கு தெரியலைம்மா” என சொன்னாள்.

அம்மா சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

பிறகு “சுதா, இதுக்கு என்னால உனக்கு நேரடியான பதிலை சொல்ல முடியாது. ஆனா மகாகவி பாரதியாரோட ஒரு பாடல் உனக்கு தேவையான பதிலை குடுக்கும்னு நினைக்குறேன். மனமென்னும் பெண்ணே அப்படீன்னு ஒரு பாடல் இருக்கு. படிச்சி பாரு. அதுல நீ தேடிக்கிட்டிருக்குற கேள்விக்கு விடை இருக்கும்” என சொல்லி போனை வைத்தாள்.

சுதா அந்த பாடலை போனில் தேடி எடுத்து படித்தாள்.

A Bharathiyar poem about mind and soul.

முழு பாடலையும் திரும்ப திரும்ப படித்து உள் வாங்கிக் கொண்டாள்.

புத்தி வேறு, மனம் வேறு என்று சொல்வார்கள். புத்தியின் சொல்படி கேட்டு மனம் இயங்க வேண்டும்.

ஆனால், பல சமயம் புற சூழ்நிலையின் தூண்டல்களால் மனம் அலைபாயும். அத்தகைய சமயங்களில் புத்தியானது மனத்திற்கு ஒரு நல்ல ஆசானாக இருந்து அறிவுரை சொல்லவேண்டியது அவசியம்.

அடுத்த இரண்டு நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பாடலை படித்து, அதன் அர்த்தத்தை முழுதாக புரிந்து கொள்ள முயற்சி செய்தாள். மூன்றாம் நாள் மனம் தெளிவாய் ஆனது.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 9/11

A child playing in the living room

நான்காம் நாள் காலை. இன்று பவா தெளிவாக இருந்தது. கனகம்மாவும் வரதாவும் வந்தவுடன் அவர்களிடம் தாவி ஓடியது. சுதா மதியம் பில் செட்டில் செய்து விட்டு, எல்லா பொருட்களையும் பேக் செய்ய ஆரம்பித்தாள்.

வீட்டிலிருந்து வந்த முதல் நாள் இந்த ஆஸ்பிடல் அவளுக்கு அந்நியமாய் இருந்தது. இன்று வீடு அந்நியமாய் இருக்கிறது. அன்பு, ஆதரவு, புரிதல், நட்பு என எல்லாம் எங்கே கிடைகிறதோ அங்கே மனம் நிம்மதியாய் இருப்பதை புரிந்து கொண்டாள்.

கனகம்மா சாப்பாடு கொண்டு வந்தார். “நீங்க சாப்டீங்களா?” என கேட்டாள் சுதா.

அவர் ஆம் என சொல்ல, “இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. ரொம்ப தேங்க்ஸ், நீங்க இல்லேன்னா நா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன்” என சொல்லி கொஞ்சம் காசு கொடுத்தாள்.

“இருக்கட்டும்மா, என் புள்ளைக்கு செய்ததா தான் நா நெனக்கிறேன். சாரு கொஞ்சம் டென்ஷன்காரரா இருக்காரு. இந்த புள்ளைய நீங்க நல்லா பாத்துக்குவீங்க. ஆனா உங்களையும் நீங்க கொஞ்சம் பாத்துக்குங்க.

வீட்ல ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்க, ஷிப்ட் முடிச்சிட்டு வந்து செய்யுறேன்” என சொல்லி விடை பெற்று சென்றார்.

சாப்பிட்டு முடிக்கும் போது டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி என போன் வந்தது. எல்லா பேப்பர்களையும் சரிபார்த்து, வரதாவுக்கு சொல்லிவிட்டு, பவாவை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினாள்.

வீட்டுக்கு வந்ததும் பவா அவள் பொம்மைகளை தேடி ஓடினாள். எல்லாவற்றையும் எடுத்து தரையில் போட்டு விளையாட ஆரம்பித்தது.

இன்று இரவு உணவுக்கு அவளுக்கு பிடித்த இடியாப்பம் செய்யலாம், கூடவே குருமாவும் கொஞ்சம் செய்தால் எல்லாருக்கும் சரியாக இருக்கும் என வேலையை ஆரம்பித்தாள். வாஷிங் மெஷின் போட்டு, மறு பக்கம் இட்லி மாவு அரைத்து, எல்லா வேலைகளையும் முடிக்க ஏழு மணி ஆனது.

டோர் பெல் அடித்தது. சுதா போய் கதவை திறந்தவுடன் “நான் தான் சாயந்திரம் வர்றேன்னு சொன்னேனே? அதுக்குள்ள எதுக்கு டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு வந்த சுதா?” என கோவமாக கேட்டான் ராஜு.

சுதா பதில் சொல்வதற்குள் ராஜுவுக்கு ஜெபாவின் போன் வந்தது.

ஜெபா எதற்கு அழைத்திருப்பார் என சுதாவுக்கு தெரியும்.

ஆஸ்பிடலில் ராஜு பவாவை தூக்கி தோளில் சாய்த்து தூங்க வைத்த  போட்டோவை  எடுத்து தன் இன்ஸ்டா அக்கவுண்டில் “அன்பு அப்பா” என கேப்ஷனை போட்டு ஆண்ட்ரியாவை டேக் செய்தது தான் சுதா செய்த வேலை.

மிச்சத்தை ஆண்ட்ரியா பார்த்துக் கொண்டாள்.

ஜெபாவுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் விஷயம் தெரிய போன் போட்டு நேரடியாக பேசி விட்டார்.

ராஜு குமாரு சோபாவில் தலையை கவுந்த மொமெண்ட்டின் காரணம் இது தான்.

அவனை ஜெபா குருமா வைக்க, அந்த அவமானத்தில் வெந்து கொண்டிருக்கிறான்.

மணி சார் சொல்லி இருக்கலாம் ஜெபாவிடம் என நினைத்துக் கொண்டான் ராஜு.

தான் அநாவசியமாக சொன்ன ஒரு பொய்யாலும், தன்னுடைய முட்டாள்தனத்தாலும் சிட்னி கனவு இடியாப்ப சிக்கலாக மாறியிருப்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

பவாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு தூங்க வைத்துவிட்டு சுதா ஹாலுக்கு வந்தாள்.

ஜன்னலை முழுதாக திறந்து வைத்து விட்டு  டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். வழக்கத்தை விட அன்று அவள் செய்த இடியாப்பம் குருமா அருமையாக இருந்தது.

மெதுவாக ரசித்து சாப்பிட்டவள் தட்டை கழுவி வைத்து விட்டு பார்மஸிக்கு போன் போட்டாள்.

“சைஸ் 312 பேட்டரி வேணும்?ஸ்டாக் இருக்குங்களா?” என கேட்டாள்.

“மேடம், நா புதுசா வேலைக்கு வந்திருக்கேன். சார் கடைல இல்ல, சாப்பிட போயிருக்கார். நீங்க என்ன ப்ராண்டுனு போட்டோ அனுப்புனீங்கனா, நா இருக்கானு பாக்குறேன்” என்றான் கடை பையன்.

“அது நார்மல் பேட்டரி கிடையாதுப்பா, கொழந்தைங்களோட இயரிங் எயிடுக்கு போடுற பேட்டரி. நா ரெகுலரா உங்க கடைல தான் வாங்குவேன். பேட்டரி போட்டோவும் அட்ரசும் அனுப்புறேன். ஸ்டாக் இருந்தா நாளைக்கு காலைல அனுப்புங்க” என சொல்லி போனை வைத்தாள்.

ராஜு இன்னும் சோபாவில் இருந்து அசையவில்லை. அவன் செய்த குற்றத்திற்கான தண்டனையை குறைவில்லாமல் அனுபத்து கொண்டிருக்கிறான்.

கடை பையனுக்கு பேட்டரி போட்டோ அனுப்ப, வெறும் 312 என டைப் செய்து கூகிளில் தேடினாள். முதல் பக்கத்திலேயே சுருக்கென ஒரு விஷயம் கிடைத்தது சுதாவுக்கு.

Indian Penal Code 312 – Causing miscarriage.

முதல் வேலையாக பேட்டரி போட்டோவை அனுப்பிவிட்டு, மீண்டும் IPC 312ஐ படித்து பார்த்தாள்.

சட்டவிரோத கருக்கலைப்பு தடுப்பு சட்டம் அது.

அவள் மனம் ஒரு நிமிடம்  நிதானிக்க சொன்னது.

மீண்டும் மீண்டும் படித்து பார்த்தாள்.

இந்த பூமிக்கு வராத ஒரு ஜீவனின் வாழும் உரிமையை நிலை நாட்டும் சட்டம் அது.

மருத்துவ ரீதியாக அந்த கருவுக்கோ அல்லது தாயின் உயிருக்கோ, ஏதோ ஒரு ஆபத்தான சூழ்நிலை என்றால் மட்டுமே சட்டம் கருகலைப்பை அனுமதிக்கும்.

சுதாவுக்கு இந்த விஷயத்தை உள் வாங்க சற்று நேரம் எடுத்தது.

அரை மணி நேரம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து யோசித்ததில் அவளுக்கு சில புரிதல்கள் ஏற்பட்டது.

பவா செவி திறன் குறைபாட்டோடு பிறந்தது அவள் குற்றமில்லை. பெற்றோர்களாக தங்கள் குற்றமும் இல்லை.

இயற்கையாகவே அந்த குழந்தைக்கு அது நிகழ்ந்திருக்கிறது.

அவளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி, சிறப்பான முறையில் ஒரு வாழ்க்கையை அமைத்து தரும் பெரும் பொறுப்பு தங்கள் இருவருக்குமே சரிசமமாக இருக்கிறது. ஆனால் ராஜுவுக்கு நிஜத்தை எதிர் கொள்ளும் தைரியமும், மன உறுதியும் இல்லாததே இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் என அவளுக்கு தோன்றியது.

பொறுமை, திடமான மனம், உணர்வு முதிர்ச்சி என எதுவுமே இல்லாமல் ராஜு இருப்பது தான் இங்கு பிரச்சினை.

பவா மீது அவனுக்கு பாசம் இருந்தாலும், ஒரு இயல்பான வாழ்க்கை தனக்கு அமையாமல் போனது அவனுக்கு மிகுந்த மன உளைச்சலை தந்திருக்கிறது.

சுதாவின் மன போராட்டத்திற்கு அவ்வப்போது ஆறுதல் செல்பவன், அவன் மனதை பக்குவபடுத்தாமல் விலகி ஓடும் முடிவை எடுத்திருக்கிறான்.

எல்லா பொறுப்பையும் சுதாவிடம் விட்டு விட்டு, வெளிநாட்டில் வேலைக்கு போய் சேர்ந்து விட்டால், தன் தினசரி வேதனையிலிருந்து மீளலாம் என அவன் மனம் ஆழமாக நம்புவது சுதாவுக்கு நியாயமாக படவில்லை.

இந்த பூமிக்கு வராத ஒரு ஜீவனுக்கு நல்ல சட்ட பாதுகாப்பு இருக்கிறது.

ஆனால் பவாவுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.

அதனால் இருவரும் ஒற்றுமையாக இருந்து, பவாவுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவதே, ஒரு பெற்றோராக தங்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என கருதினாள்.

இந்த இடத்தில் சுதா சற்று தீர்க்கமாக சில முடிவுகளை எடுத்தாள்.

இங்கு குறைபாட்டோடு இருப்பது பவா இல்லை, ராஜு தான். இவ்வளுவு வயதான பிறகும், சூழ்நிலையை எதிர் கொள்ள இயலாமல் ஓடி ஒளியும் மனப்பான்மையோடு இருப்பது அவன் தவறு. அதை அனுமதிப்பது அதை விட தான் செய்யும் பெரும் தவறு என உணர்ந்தாள்.

ராஜுவுக்கு புரிய வைக்க ஆயிரம் வழி இருக்கிறது.

இருவரும் நல்ல மன நல ஆலோசகரை சந்திக்கலாம். மன வள வாழ்க்கை முறைகளை கையாண்டு அவ்வப்போது ஏற்படும் மன உளைச்சல்களிலிருந்து மீண்டு வரலாம்.

ஆனால் எந்த முயற்சியும் செய்யாமல், அவரவர் வழியில் அவரவர் போவது பவாவுக்கு தாங்கள் நிகழ்த்தும் துரோகம் என முடிவுக்கு வந்தாள்.

கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்வுகள் அவள் மனதை ரணமாக்கியிருக்கிறது.

தன் காயத்தையும் ஆற விட்டு, எதிராளியையும் அரவணைத்து போக வேண்டிய மனநிலை அவளுக்கு சவாலாக இருந்தது. 

எப்படி இந்த பிரச்சனையை கையாள வேண்டும் என்ற தெளிவு இல்லெயென்றாலும், எப்படி இதை கையாளக்கூடாது என்ற தெளிவோடு தூங்க போனாள்.