கொளப்பட்டேம் என்றெண்ணிக்….

The rear view image of the leading politician in Tamil Nadu

பூரி குமாரி : கருத்துக் கணிப்புகளுக்கெல்லாம் எதிராக வந்த தேர்தல் முடிவுகள் கோட்டை வட்டாரத்தில் பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறதே, கவனித்தீர்களா கோல்?

கோல்கப்பா : வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழா நடத்தியவர்கள், அந்த குறள் வழி நடந்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது குமாரி!

பூரி குமாரி : ஆமாங்க, ஆட்சி கனியப்போவதில்லை என தெரிந்தும், யார் கண்களை கட்ட இந்த கருத்துக் கணிப்புகளெல்லாம் வெளிவந்தன?

கோல்கப்பா : அவர்கள் படிக்க தவறிய சில குறள்களை வைத்தே உனக்கு பதில் சொல்கிறேன், கேள்!

“கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை”

“பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?” சாலமன் பாப்பையா அவர்கள் இந்த குறளுக்கு எழுதிய அற்புதமான உரை இது! இன்றைய சூழலுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பார்த்தாயா? பாடாய் பட்டு, ரக ரகமாக கணிப்புகளை வெளியிட்டதால் வந்த பயனென்ன குமாரி?

பூரி குமாரி : அருமையான குறள் கோல். உண்மையான கண்ணோட்டம் பொதுமக்களுக்கு இருந்ததால், அவர்களை மடைமாற்ற வந்த அத்தனை கருத்துக் கணிப்புகளுக்கும் மயங்காமல், இந்த தேர்தலில் அவர்கள் வாக்குகளை பதிவிட்டிருக்கிறார்கள்.

கோல்கப்பா : ஆம் குமாரி. நம் அன்றாட வாழ்க்கையும், சமூக செயல்பாடுகளும் கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது. அது இல்லாதவர்கள் இந்த பூமிக்குச் சுமையாவர். இன்னொருவகையில் சொல்வதானால் அவர்கள் இறந்துபோவதே மேல் என சொல்கின்றது குறள்.

பூரி குமாரி : ஹ்ம்ம்..சரிதான்..இவ்வளவு ஆதரவு குரல்கள் ஒலித்தென்ன பயன் கோல்?

கோல்கப்பா : இந்த குறள் தான் உன் கேள்விக்கு பதில் குமாரி.

“ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்”

இதன் பொருள் “எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும், முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்” என்பதாகும்.

நல்ல நேர்மையான ஆட்சி நடத்தி, சரியான முறையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து இருந்தால் இவ்வளவு வெளிப்பூச்சு வேலைகள் செய்ய வேண்டியதில்லை? என்ன சொல்கிறாய்?

பூரி குமாரி : ஆமாங்க, அரசாங்க பணத்தில் விளம்பரங்கள், விழாக்கள், ஒட்டு மொத்த ஊடகங்களின் துணை என முழு படை பலத்தோடு இருந்தாலும், ஒரு சொட்டு மையின் சக்தி இன்று அவர்களை முடக்கி உட்கார வைத்திருக்கிறது.

கோல்கப்பா : சரியாக சொன்னாய் குமாரி.

பூரி குமாரி : ஆனாலும் பெரிதும் மக்களால் மதிக்கப்பட்ட முதல்வரே, இந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்ததை எப்படி புரிந்து கொள்வது கோல்?

கோல்கப்பா : முதல்வர் அவர்களின் உழைப்பும், பொறுமையும், அனுபவமும் அசாத்தியமானது குமாரி.

பூரி குமாரி : என்ன சொல்கிறீர்கள் கோல்? பிறகு ஏன் அவருக்கு இந்த நிலை?

கோல்கப்பா : கட்சியிலும், ஆட்சியிலும் அவரோடு இருந்தவர்கள் செய்த பல விரும்பத்தகாத செயல்கள். தலைவரோடு கிடைத்த நெருக்கத்தையும், நட்பையும் தகாத வழியில் பயன் படுத்தினார்கள். அதனால் வந்த பாதகம் தான் இது.

பூரி குமாரி : புரியவில்லை கோல்.

கோல்கப்பா : உனக்கு புரியும் படி சொல்கிறேன். இந்த குறளை கேள்.

“கொளப்பட்டேம் எண்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்”

கட்சியிலும் ஆட்சியிலும் பலர் தலைவரால் விரும்பப்பட்டார்கள். அவருடைய அன்புக்கு உரியவரானார்கள். அவரால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் எச்சமயத்திலும், தலைவர் நமக்குத் துணையிருப்பார் என்ற துணிவில் மனம்போன போக்கில் செயல்பட்டார்கள். தலைவரும் அவர்களை கண்காணிக்க தவறினார் அல்லது நடவடிக்கை எடுக்க தயங்கினார்.

பூரி குமாரி : மிக சரியாக சொன்னீர்கள் கோல்! “கொளப்பட்டேம் எண்றெண்ணி” அவர்கள் செய்த கெடு செயல்கள், இன்று கொளத்தூரில் தலைவரை குன்றி போக வைத்திருக்கிறது.

கோல்கப்பா : ஆம் குமாரி. முதுபெரும் தமிழ் ஆசானின் வழித் தோன்றல்கள், அவரெழுதிய உரை படித்து நடந்தாலே, சீரும் சிறப்புமாய் வாழலாம். என்ன சொல்கிறாய்?

பூரி குமாரி : நிச்சயமாக கோல். களமும் காலமும் அவர்களுக்கு அதை உணர்த்தட்டும், மீண்டு வரட்டும்!

கோல்கப்பா : மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் “கொளப்பட்டேம்” (அன்புக்கு உரியவர்கள்) கோஷ்டியுடன் பகிருங்கள். நன்றி!

Tamil Joke – IIM, AIMS & JEE

A satire joke where IIM and AIMS represent established political parties, while JEE represents a new party making its first entry into the election competition like an entrance exam.

கோல்கப்பா : என்ன குமாரி, நாள் நெருங்கிடுச்சி எலக்க்ஷன் ரிசல்ட்டுக்கு! உன் கணிப்பு என்ன?

பூரி குமாரி : ஊர்ல கருத்து கணிப்பு சொல்றவங்களையெல்லாம் வண்டை வண்டையா திட்றாங்க கோல்! நமக்கு எதுக்கு வம்பு?

கோல்கப்பா : கரெக்ட்டுதான்..இந்த கணிப்பையெல்லாம் எப்புடி பாக்குற குமாரி?

பூரி குமாரி : ஹிஹிஹீ ..எல்லாம் பை, பையா கவனிப்பு தான்!

கோல்கப்பா : அடிப்பாவி…Clue பங்கமா இருக்கேடி!

பூரி குமாரி : சரி நீங்க சொல்லுங்க எந்த கோஷ்டி வின் பண்ணும்?

கோல்கப்பா : மே மூணு எழுத்து..அதுனால மூணு எழுத்து கட்சில ஒண்ணு ஜெயிக்கும்…

பூரி குமாரி : ஓஓஓ, அப்போ நாலு என்ன தொக்கா? நாலாம் தேதி ரிசல்ட்டு வருது..நாலு எழுத்து கட்சி தான் ஜெயிக்கும்…இது எப்புடி..ஹிஹிஹி..

கோல்கப்பா : எது எப்டியோ..நாளைக்கு அப்புறம் இந்த 2026 நம்ம காதுல கேக்குறது கொஞ்சம் குறையும்..

பூரி குமாரி : அதுவும் நம்ம “இட்டுகினு வந்து இட்டுகினு போறவர்” 2026ன்னு ஒவ்வொரு தடவை சொல்லி முடிக்குறதுக்குள்ள நான் இந்த வருஷமே முடிஞ்சிடும் நெனச்சிருக்கேன்..

கோல்கப்பா : ஆனந்தம் ஆனந்தம் பாடும், மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்…நீ மட்டும் தான் Clue குடுப்பி யா..நா கொடுத்திருக்கேன் பாரு ராகத்தோட!

பூரி குமாரி : எல்லாம் என் கெரகம்..உங்கள நம்பி சொன்னேன் பாருங்க..

கோல்கப்பா : ஏண்டி இந்த கள்ள மௌனம்? வாய தொறந்து சொல்லேன், யாரு இந்த தடவை ஆட்சி அமைப்பாங்கன்னு?

பூரி குமாரி : கடைசி நிமிஷம் வரை காட்சிகள் மாறும் கோல், பொறுமையா இருங்க.

கோல்கப்பா : ரெண்டு பார்ட்டிங்க ஏற்கனவே பவர்ல இருந்திருக்காங்க..இப்போ புதுசா ஒருத்தர் வந்து குதிச்சிருக்கார். களம் எப்புடி இருக்கு குமாரி?

பூரி குமாரி : ரெண்டு பார்ட்டிங்களும் களத்தை வளமா வெச்சிகிட்டாங்க..புதியவர் களத்தை மொத்தமா வளைச்சி வெச்சிக்கிட்டாரு …

கோல்கப்பா : ஹிஹிஹி, அருமையா ஒன் லைன்ல முடிச்சிட்ட..அட்லீஸ்ட் குத்துமதிப்பா ஒரு நம்பரை சொல்லேண்டி எல்லாருக்கும்?

பூரி குமாரி : ஏங்க எலக்சன் ரிசல்ட் என்ன சொத்து மதிப்பாங்க? குத்துமதிப்பா சொல்றதுக்கு?

கோல்கப்பா : குத்துங்க எசமானியம்மா, குத்துங்க..உன் பார்ட்னர்ன்னு கூட பாக்காம இப்படி கருணையே இல்லாமா எப்புடிடீ உன்னால சொல்ல முடியுது?

பூரி குமாரி : ஹிஹிஹி..இனிமே வாய் சும்மாதானே இருக்குன்னு எதுனா பேசுவீங்க?

கோல்கப்பா :வாய்ப்பில்லை ராஜா..வாய்ப்பே இல்ல! ஹா, வாய்ப்புன்னதும் தான் ஞாபகம் வருது? இந்த முறை எந்த கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்குன்னு நினைக்குற?

பூரி குமாரி : திருந்தவே மாட்டீங்களா கோல், நீங்க?

கோல்கப்பா : புதியவர் Just Entering Election..எவ்ளோ % வாங்குவாரு?

பூரி குமாரி : புதியவர் JEEல எவ்ளோ % வாங்குவாருன்னு தெரியல. ஆனா வாக்கு war நிச்சயம்..

கோல்கப்பா : அடியேய், என்னடி பெரும் புள்ளிய பள்ளி கூட பையன் கணக்கா சொல்லிப்புட்ட!

பூரி குமாரி : வேற என்னங்க சொல்ல முடியும்? இவர் எதிர்க்கிறது IIM & AIMS கோஷ்டி..

கோல்கப்பா : ரொம்ப படிச்சவங்களாடி?

பூரி குமாரி : இல்ல, IIMன்னா இலாக்கா இல்லாம மந்திரிய (Ilaakka Illaama Mandhiri) வெச்சிருந்த கோஷ்டி!

கோல்கப்பா : Oh My God..அப்போ AIMSம்ன்னாஆஆ?

பூரி குமாரி : மனச தேத்திக்குறீங்களா? சொல்றேன்..

கோல்கப்பா (நெஞ்சை பிடித்தபடியே) : மொத்தமா முடிச்சிவுட்ரு..கொஞ்ச நஞ்சம் ஏன் மிச்சம் வெச்சிருக்க?

பூரி குமாரி : ஹிஹிஹி..AIMSன்னா அம்மா இதயத்தின் மனசாட்சியாக (Amma Idhayaththin Mana Saatchiyaaga) இருக்குற கோஷ்டி..

கோல்கப்பா : ஹாஹாஹா..யாரு நல்ல ஸ்கோரு வாங்குறாங்களோ இல்லியோ..என் ஸ்வீட்டி, நீ ஸ்கோர் பண்ணிட்ட போ! மக்களே, இந்த ஜோக் நல்லா இருக்கும்னு எங்களுக்கே தெரியும்..அதனால முடிஞ்சவரைக்கும் உங்க கோஷ்டிகளுக்கு ஷேர் பண்ணுங்க. Bye!

Tamil joke – விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை!

பூரி குமாரி : என்னங்க நம்ம கடைல கூட்டமே வரல, காத்து வாங்கிட்டு இருக்கு? ஏதாவது ப்ரோமோஷன் பண்ணலாம்னு யோசிக்குறேன். நல்ல ஐடியாவா சொல்லுங்க கோல்!

(கோல்கப்பா யோசிக்கிறார்)

Pani poori shop

கோல்கப்பா : பெரிய கட்சிங்களே கூட்டணி முடிவு ஆகாம காத்து வாங்கிட்டு இருக்கு! நாம எம்மாத்திரம்?

பூரி குமாரி : அவங்களும் நாமளும் ஒண்ணாங்கா? அவங்க சீட்டிங் பார்ட்டிங்க! ஆனா, நாம சாட் பார்ட்டிங்க!!

(கோல்கப்பா போனை பார்த்து விட்டு ஆர்வமாகிறார்)

கோல்கப்பா : ஆஹா, ஒண்ணு சேந்துட்டாங்கம்மா! ஒண்ணு சேந்துட்டாங்கம்மா!!

பூரி குமாரி : யார் யாருங்க? காட்டுங்க பாப்போம்.

கோல்கப்பா : அம்மா வளர்த்த பிள்ளைகள்தான்மா!

ttv

பூரி குமாரி : அட ஆமா, இவ்வளவு நாள் மக்கர் பண்ண குக்கர், இப்போ குதூகலமா இருக்காரு போல…

கோல்கப்பா : “விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை”ன்னு மகராசன் சொல்லியிருக்கார்..

பூரி குமாரி : வாவ், செம ஸ்டேட்மென்ட் கோல்!

கோல்கப்பா : சரி வா, ரேபிட் பயர் கேள்வி கேக்குறேன்..மத்த கட்சிகளுக்கும் இதே மாதிரி ஒன் லைனர் டக்கு டக்குனு சொல்லு..மொதல்ல ட்ரம்ஸ் பார்ட்டிக்கு சொல்லு?

பூரி குமாரி : நோட்டுக் கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை”

கோல்கப்பா : ஹிஹிஹி, you nailed it!! ஆளும் கட்சிக்கு சொல்லு.

பூரி குமாரி : கிட்டு (kit) கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை! பொங்கல் கிட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை!

கோல்கப்பா : நன்று, நம்ம மய்ய மேனுக்கு சொல்லுமா..

பூரி குமாரி : (ராஜ்யசபா) சீட்டு கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை!

கோல்கப்பா : அருமை..ஆளும் கட்சி கூட்டணிகளுக்கு ஒரு பன்ச் சொல்லு டார்லிங்..

பூரி குமாரி : முட்டுக் கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை!

கோல்கப்பா : கலக்குறியே, நம்ம ஸ்டார்ட்டப் கட்சிக்கு சொல்லு..

பூரி குமாரி : சீட்டி (விசில்) அடிப்பவர்கள், கெட்டு போவதில்லை!

கோல்கப்பா : அட்டகாசம். சரி இவங்களுக்கெல்லாம் மக்கள் என்ன சொல்ல போறாங்க?

பூரி குமாரி : கெட்டு போனவர்களுக்கு, ஓட்டு போடுவதில்லை!!

கோல்கப்பா : என் வெல்ல கட்டி, ஊர் அக்கபோருக்கெல்லாம் சொல்லிட்ட! நம்ம கடைக்கு என்ன பேனர் வெக்கலாம் சொல்லு?

பூரி குமாரி : ட்ரீட்டு கொடுப்பவர்கள், கெட்டு போவதில்லை!!!

chat party

கோல்கப்பா : அருமை! அருமை!! மக்களே அவங்க கல்லா கட்டுறதுக்கு கூட்டணில ஜெல்லாய்ட்டோம்னு சொல்வாங்க…நல்ல ட்ரீட்மெண்டா அவங்களுக்கு குடுங்க!

பூரி குமாரி : ஆமாங்க, ட்ரீட்மெண்ட் கொடுப்பவர்கள், கேட்டு போவதில்லை!!! Bye.

happy chat cafe

Tamil Joke – சாயா (Tea) சக்தி

A candid conversation about politics

கோல்கப்பா : நம்ம “ஸ்டார்ட் அப் கட்சி” மீட்டிங்க பாத்தியா டார்லிங்?

பூரி குமாரி : ஹிஹிஹி, சாரிங்க, நான் களத்துல இருந்தேன்! அதனால பாக்கலை, நீங்களே சொல்லுங்க!

கோல்கப்பா : ஹாஹாஹா, அவங்க கட்சில ஹயரிங் நடக்குதுன்னு தலைவரே சொல்லிட்டாரு. எனக்கென்னமோ நீ அப்ளை பண்ணா சேத்துக்குவாங்கன்னு நெனைக்குறேன்! என்ன சொல்ற?

பூரி குமாரி : எனக்கு என்ன தகுதி இருக்குன்னு நெனைக்குறீங்க கோல்?

கோல்கப்பா : உனக்கு தான் பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு அவங்க பார்ட்டில சேர..ஹிஹீஹீ ..

பூரி குமாரி : இதுக்கு நான் லைவே பாத்திருக்கலாம், புதிர் போடாம சொல்லுங்க கோல்.

டீ கடைக்காரர்: ஏன்மா ஒத்த ரோசா, மக்கள் எந்த மூட்ல இருந்தாலும் உன் கடைக்கு தான் வராங்க. சந்தோசமா இருந்தாலும் ஒரு பிளேட் பானி பூரி சாப்புடுறாங்க, மனசு நொந்து இருந்தாலும் ஒரு பிளேட் பானி பூரி சாப்புடுறாங்க! நீதான்மா மக்களோட சுக துக்கத்துல அவங்களோட நிக்குற!

கோல்கப்பா : ஹிஹிஹி. பாய்ண்டை புடுச்சிடீங்க மாஸ்டர்! நீதான்மா உண்மையா உணர்வுப்பூர்வமா மக்களோட நிக்குற! இந்த தகுதி ஒண்ணே போதும்!

டீ கடைக்காரர்: பானி பூரி சாப்பிடும்போது,பசங்க “ஒண்ணு, இன்னொன்னு” அப்படீன்னு ஆர்வமா சொல்றானுங்க..அந்த கோஷம் நேச்சுரலாவே உங்க வகையறாவுக்கு செட் ஆகிடும்!

கோல்கப்பா : அட அட அடடா, கலக்கிடீங்க மாஸ்டர். நெக்ஸ்ட் ப்ளீஸ்?

பூரி குமாரி : என்ன மோட்டிவேட் பண்றது இருக்கட்டும் மாஸ்டர். ஏதோ தீய சக்தி, தூய சக்தின்னு ஷார்ட்ஸ் வந்தது. நீங்கதான் “சாயா சக்தியாச்சே”, நீங்களும் அப்ளை பண்ணுங்க!

கோல்கப்பா : அடிப்பாவி, கலக்கியடியே. ஷார்ட்ஸ் பாத்தே இந்த கமெண்ட் அடிக்கிற? நீ அரை மணி நேரம் பேச்ச கேட்டிருந்தீன்னா ப்ளாஸ்ட்டு தான் போ!!

பூரி குமாரி : மாஸ்டர், நம்ம பசங்க அக்கா, தங்கச்சி, வைப் அப்புறம் ப்ரெண்ட்ஸ சில சமயம் “டீ” போட்டு கூப்பிடுவாங்க. “டீ”ன்னாலே ஒரு VIBE இருக்கும். “டீ”ன்னாலே ஒரு எனர்ஜி வருமே? அவங்க கட்சி பேருல கூட “டீ” இருக்கும். இதை சொல்லி அப்ளிகேஷன் போடுங்க மாஸ்டர்…ஹிஹிஹி..

கோல்கப்பா : ஹிஹிஹி…

டீ கடைக்காரர் : என் graphஅ எங்கயோ கொண்டு போய்ட்டேம்மா…நம்ம ரெண்டு பேருக்கும் ஏதோ சில பாயிண்ட்ஸ் இருக்கும்மா. நம்ம தலை கோல்கப்பாவை எப்படி பொசிஷன் பண்றது?

பூரி குமாரி : ஹிஹிஹி, இவர்தான் தலைமைக்கு சரியான ஆள்னு சொல்லலாம் மாஸ்டர்!

டீ கடைக்காரர் : எனக்கு புரியலம்மா??

கோல்கப்பா : வெஷம் , வெஷம்!! எனக்கு வயசாயிடுச்சி, தலைக்கு டை போடுறேன்னு நக்கலா சொல்றா மாஸ்டர்!

டீ கடைக்காரர் : ஹாஹாஹா, “தலைமை”க்கு தரமான டெபனிஷனா இருக்கே! அள்ளுறம்மா நீ!!

பூரி குமாரி : இவரு மாதிரி கல்லாபொட்டி எக்ஸ்பீரியன்ஸ் ஆளுங்களுக்கு அவங்க கட்சில வேகன்ஸி இருக்கு மாஸ்டர்!

கோல்கப்பா : அடியேய் உன்னை….(மாஸ்டர் பக்கம் திரும்பி) நா கவுண்டர் குடுக்குற ஆளுன்னு சொல்றா மாஸ்டர்!

டீ கடைக்காரர் : ரெண்டு சாம்பிள் சொல்லுமா, இவர் தேறுவாரான்னு பாக்கலாம்?

பூரி குமாரி : கோல், இப்போ நீங்க ஸ்டார்ட் அப் கட்சில ஒரு பொறுப்புல இருக்கீங்கன்னு நெனச்சுக்கோங்க! நா ஆளும் தரப்பு கீவேர்ட்ஸ் சொல்றேன். அதுக்கு ஒரு கவுண்டர் குடுங்க.

கோல்கப்பா : நீ வேணாம்! மாஸ்டர் நீங்க கேளுங்க..

டீ கடைக்காரர் : (யோசிக்கிறார்) கட்டுக்கோப்பு!

பூரி குமாரி : தெரியலேன்னா பாஸ் சொல்லிடுங்க கோல்! நா ரெடி (கையை உயர்த்துகிறார்)

கோல்கப்பா : கஜானா காலி. எந்த பைலும் மூவ் ஆகாம, அரசாங்கம் முடங்கி இருக்கு. “கட்டு” கோப்பு எல்லா துறை டேபிள்லயும் இருக்கு! எப்பூடி? ஹிஹிஹி….

பூரி குமாரி : வாவ், நச்சுனு சொல்லிடீங்க கோல்.

டீ கடைக்காரர் : தல, செம மேட்டர இருக்கே!! நெக்ஸ்ட் “உபி

கோல்கப்பா : “உபி” க்கள் எல்லோரும் ஜுனியர் தலீவர் பின்னாடி தான்!!!

பூரி குமாரி : மாஸான பிட்டு கோல்!!

டீ கடைக்காரர் : இந்த கட்சில ஒரு அட்வான்டேஜ் இருக்கு தல. நாம செலெக்ட்டிவா இருக்கலாம். நமக்கு வசதிப்பட்ட டாபிக்கை மட்டும் பேசலாம். திருப்பரங்குன்றத்துல விளக்கேத்துறது களப்பிரச்சினையில்லையா? வாயையே தொறக்கலை மனுசன்.

கோல்கப்பா : உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடிச்சி, நீயே சொல்லு டார்லிங்!

பூரி குமாரி : Thalaivar Vaaila Kozhukattai (தலைவர் வாயில கொழுக்கட்டை)! ஹிஹ்ஹிஹி !!

டீ கடைக்காரர் : முடிஞ்ச்…மக்களே இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருந்தா, உங்க நண்பர்களோட பகிருங்கள். Bye!!

Thank you, Dairy Milk!

Pani puri couple enjoying dairy milk

கோல்கப்பா : Cadbury Daily Milk போட்டுருக்குற New Neighbour சாக்லேட் விளம்பரத்தை பார்த்தியா?

பூரி குமாரி : அருமையா இருக்குங்க!

Dairy mil ad

கோல்கப்பா : இந்த கம்பெனிக்கு நம் மக்கள் சார்பாக நன்றியும், வாழ்த்துக்களும்!

பூரி குமாரி : ஆமாங்க, கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும். அதே சமயம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் மொழி உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆளும் தரப்புக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்ளுவோம்!

கோல்கப்பா : நியாயம் தான் குமாரி! வாசக நண்பர்களே, இந்த பதிவை படித்து நீங்களும் உங்கள் வாழ்த்தை கமெண்டில் சொல்லுங்கள்!

Dairy mil ad

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

பூரி குமாரி : மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்! நன்றி!