Tamil Joke – சாயா (Tea) சக்தி

A candid conversation about politics

கோல்கப்பா : நம்ம “ஸ்டார்ட் அப் கட்சி” மீட்டிங்க பாத்தியா டார்லிங்?

பூரி குமாரி : ஹிஹிஹி, சாரிங்க, நான் களத்துல இருந்தேன்! அதனால பாக்கலை, நீங்களே சொல்லுங்க!

கோல்கப்பா : ஹாஹாஹா, அவங்க கட்சில ஹயரிங் நடக்குதுன்னு தலைவரே சொல்லிட்டாரு. எனக்கென்னமோ நீ அப்ளை பண்ணா சேத்துக்குவாங்கன்னு நெனைக்குறேன்! என்ன சொல்ற?

பூரி குமாரி : எனக்கு என்ன தகுதி இருக்குன்னு நெனைக்குறீங்க கோல்?

கோல்கப்பா : உனக்கு தான் பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு அவங்க பார்ட்டில சேர..ஹிஹீஹீ ..

பூரி குமாரி : இதுக்கு நான் லைவே பாத்திருக்கலாம், புதிர் போடாம சொல்லுங்க கோல்.

டீ கடைக்காரர்: ஏன்மா ஒத்த ரோசா, மக்கள் எந்த மூட்ல இருந்தாலும் உன் கடைக்கு தான் வராங்க. சந்தோசமா இருந்தாலும் ஒரு பிளேட் பானி பூரி சாப்புடுறாங்க, மனசு நொந்து இருந்தாலும் ஒரு பிளேட் பானி பூரி சாப்புடுறாங்க! நீதான்மா மக்களோட சுக துக்கத்துல அவங்களோட நிக்குற!

கோல்கப்பா : ஹிஹிஹி. பாய்ண்டை புடுச்சிடீங்க மாஸ்டர்! நீதான்மா உண்மையா உணர்வுப்பூர்வமா மக்களோட நிக்குற! இந்த தகுதி ஒண்ணே போதும்!

டீ கடைக்காரர்: பானி பூரி சாப்பிடும்போது,பசங்க “ஒண்ணு, இன்னொன்னு” அப்படீன்னு ஆர்வமா சொல்றானுங்க..அந்த கோஷம் நேச்சுரலாவே உங்க வகையறாவுக்கு செட் ஆகிடும்!

கோல்கப்பா : அட அட அடடா, கலக்கிடீங்க மாஸ்டர். நெக்ஸ்ட் ப்ளீஸ்?

பூரி குமாரி : என்ன மோட்டிவேட் பண்றது இருக்கட்டும் மாஸ்டர். ஏதோ தீய சக்தி, தூய சக்தின்னு ஷார்ட்ஸ் வந்தது. நீங்கதான் “சாயா சக்தியாச்சே”, நீங்களும் அப்ளை பண்ணுங்க!

கோல்கப்பா : அடிப்பாவி, கலக்கியடியே. ஷார்ட்ஸ் பாத்தே இந்த கமெண்ட் அடிக்கிற? நீ அரை மணி நேரம் பேச்ச கேட்டிருந்தீன்னா ப்ளாஸ்ட்டு தான் போ!!

பூரி குமாரி : மாஸ்டர், நம்ம பசங்க அக்கா, தங்கச்சி, வைப் அப்புறம் ப்ரெண்ட்ஸ சில சமயம் “டீ” போட்டு கூப்பிடுவாங்க. “டீ”ன்னாலே ஒரு VIBE இருக்கும். “டீ”ன்னாலே ஒரு எனர்ஜி வருமே? அவங்க கட்சி பேருல கூட “டீ” இருக்கும். இதை சொல்லி அப்ளிகேஷன் போடுங்க மாஸ்டர்…ஹிஹிஹி..

கோல்கப்பா : ஹிஹிஹி…

டீ கடைக்காரர் : என் graphஅ எங்கயோ கொண்டு போய்ட்டேம்மா…நம்ம ரெண்டு பேருக்கும் ஏதோ சில பாயிண்ட்ஸ் இருக்கும்மா. நம்ம தலை கோல்கப்பாவை எப்படி பொசிஷன் பண்றது?

பூரி குமாரி : ஹிஹிஹி, இவர்தான் தலைமைக்கு சரியான ஆள்னு சொல்லலாம் மாஸ்டர்!

டீ கடைக்காரர் : எனக்கு புரியலம்மா??

கோல்கப்பா : வெஷம் , வெஷம்!! எனக்கு வயசாயிடுச்சி, தலைக்கு டை போடுறேன்னு நக்கலா சொல்றா மாஸ்டர்!

டீ கடைக்காரர் : ஹாஹாஹா, “தலைமை”க்கு தரமான டெபனிஷனா இருக்கே! அள்ளுறம்மா நீ!!

பூரி குமாரி : இவரு மாதிரி கல்லாபொட்டி எக்ஸ்பீரியன்ஸ் ஆளுங்களுக்கு அவங்க கட்சில வேகன்ஸி இருக்கு மாஸ்டர்!

கோல்கப்பா : அடியேய் உன்னை….(மாஸ்டர் பக்கம் திரும்பி) நா கவுண்டர் குடுக்குற ஆளுன்னு சொல்றா மாஸ்டர்!

டீ கடைக்காரர் : ரெண்டு சாம்பிள் சொல்லுமா, இவர் தேறுவாரான்னு பாக்கலாம்?

பூரி குமாரி : கோல், இப்போ நீங்க ஸ்டார்ட் அப் கட்சில ஒரு பொறுப்புல இருக்கீங்கன்னு நெனச்சுக்கோங்க! நா ஆளும் தரப்பு கீவேர்ட்ஸ் சொல்றேன். அதுக்கு ஒரு கவுண்டர் குடுங்க.

கோல்கப்பா : நீ வேணாம்! மாஸ்டர் நீங்க கேளுங்க..

டீ கடைக்காரர் : (யோசிக்கிறார்) கட்டுக்கோப்பு!

பூரி குமாரி : தெரியலேன்னா பாஸ் சொல்லிடுங்க கோல்! நா ரெடி (கையை உயர்த்துகிறார்)

கோல்கப்பா : கஜானா காலி. எந்த பைலும் மூவ் ஆகாம, அரசாங்கம் முடங்கி இருக்கு. “கட்டு” கோப்பு எல்லா துறை டேபிள்லயும் இருக்கு! எப்பூடி? ஹிஹிஹி….

பூரி குமாரி : வாவ், நச்சுனு சொல்லிடீங்க கோல்.

டீ கடைக்காரர் : தல, செம மேட்டர இருக்கே!! நெக்ஸ்ட் “உபி

கோல்கப்பா : “உபி” க்கள் எல்லோரும் ஜுனியர் தலீவர் பின்னாடி தான்!!!

பூரி குமாரி : மாஸான பிட்டு கோல்!!

டீ கடைக்காரர் : இந்த கட்சில ஒரு அட்வான்டேஜ் இருக்கு தல. நாம செலெக்ட்டிவா இருக்கலாம். நமக்கு வசதிப்பட்ட டாபிக்கை மட்டும் பேசலாம். திருப்பரங்குன்றத்துல விளக்கேத்துறது களப்பிரச்சினையில்லையா? வாயையே தொறக்கலை மனுசன்.

கோல்கப்பா : உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடிச்சி, நீயே சொல்லு டார்லிங்!

பூரி குமாரி : Thalaivar Vaaila Kozhukattai (தலைவர் வாயில கொழுக்கட்டை)! ஹிஹ்ஹிஹி !!

டீ கடைக்காரர் : முடிஞ்ச்…மக்களே இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருந்தா, உங்க நண்பர்களோட பகிருங்கள். Bye!!

Political Parody Rhymes – 3

tamil rhymes

பூரி குமாரி : ஏங்க, இந்த வார ரைம்ஸ்க்கு என்ன தீமுங்க?

கோல்கப்பா : எனக்கு மண்டை வறண்டு கெடக்கு, நீயே யோசிச்சு சொல்லு!

பூரி குமாரி : ஊரே வெள்ள காடா இருக்கு, நீங்க என்ன மண்டை காஞ்சு இருக்கீங்க?

கோல்கப்பா : ஹா, ஐடியா! மழையை வெச்சி ரைம்ஸ் போடலாம்.

பூரி குமாரி : சும்மாவே ஜனங்க மாநகராட்சியை திட்டுவாங்க! இதுல திட்டவான்னு இந்த புயலுக்கு பேரு வச்சிருக்காங்க!!

கோல்கப்பா : ஹீஹீஹீ, அது திட்டவா இல்ல டார்லிங்! “டிட்வா“!!

பூரி குமாரி : ஹாஹாஹா, இது நீங்க கொள்கைப்பா ஆனா மாதிரி இருக்கு! எனக்கு என்னவோ புயலுக்கு பேரு வெச்சவங்க மேல சந்தேகமா இருக்கு!

கோல்கப்பா : பேருல இருக்க அக்கப்போரவிட, ஊருல ஜாஸ்தியா இருக்கு! மக்களே, இந்த ஒரிஜினல் ரைம்ஸ் கேட்டுட்டு, நம்ம வெர்ஷனை படிச்சி என்ஜாய் பண்ணுங்க!

பூரி குமாரி : நம்ம ரைம்ஸ் படிக்கறதுக்கு முன்னாடி இந்த படத்தை நல்லா பாத்துக்குங்க, மக்கள் படுற கஷ்டம் புரியும்!

chennai rain

பொட்டி
கண்ணம்மா!!

இப்போ மழை வந்தா
என்ன பண்றது?

எல்லாரும் சேர்ந்து
போட்டிங் போலாமா?

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

சின்ன தொகையை
விட்டு வைத்தேன்!

பம்பு மோட்டார்
எடுத்து வைத்தேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வீதி பக்கம்
வந்து பார்த்தேன்!

பேட்ச் ஒர்க்க
போட்டு வைத்தேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வெள்ள காடாய்
நகரம் மாறும்!

பாலம் எல்லாம்
பார்க்கிங் ஆகும்!

போ மழையே போ,
போ மழையே போ!!

ஏரி குளம்
விற்று விட்டோம்!

வயல் வெளியில்
கல்லு நட்டோம்!

போ மழையே போ,
போ மழையே போ!!

கள்வர் நாங்கள்
கொழிக்க வேண்டும்!

தொகை என் பையில்
கொட்ட வேண்டும்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வடிகால் நாங்கள்
போடவில்லை!

நீர் நிலைகள்
தூர் வாரவில்லை!

போ மழையே போ!


காட்டி கொடுக்காமல்,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

Tamil joke – கொள்கைப்பா Wanted!!

pani poori cheered by public

கோல்கப்பா: ஏம்மா, நம்ம வீட்டுக்கு வெளில ஏதோ சத்தம் கேக்குதே? போய் பாத்துட்டு வாம்மா.

(சில நிமிடங்களுக்கு பிறகு பதட்டத்தோடு ஓடி வருகிறார் பூரி குமாரி)

பூரி குமாரி: ஏங்க, உங்கள தேடி நெறய ஆளுங்க வந்திருக்காங்க, வாங்க வெளில வந்து பாருங்க.

கோல்கப்பா: என்ன தேடியா?

பூரி குமாரி: உங்களத்தாங்க! “கோல்கப்பா….கோல்கப்பான்னு” ஒரே கூச்சலா இருக்கு.

கோல்கப்பா: சரி வா, போய் பாக்கலாம்.

(இருவரும் வீட்டுக்கு வெளியில் வந்து ஆட்களை சந்திக்கிறார்கள். முன் வரிசையில் இருந்த ஒருவர் கோல்கப்பாவிடம் வந்து பேசுகிறார்)

முதல் மனிதர்: சார், நீங்க கொள்கைப்பா தானே? உங்களை தான் நாங்க தேடிகிட்டு இருக்கோம்.

(கோல்கப்பா புரியாமல் முழிக்கிறார்)

கோல்கப்பா: என்ன ஏம்பா தேடுறீங்க?

முதல் நபர் : சார், எங்க கட்சிக்கு கொள்கை பிடிப்புள்ள ஆளுங்க வேணும். இந்த ஏரியால விசாரிச்சா உங்கள பத்தி சொன்னாங்க. நீங்க கொள்கைப்பாவாமே? நீங்க எங்க கட்சிக்கு வந்துட்டீங்கனா, எங்களை யாரும் கொள்கை இல்லாதவங்கன்னு சொல்ல முடியாது!!!

கோல்கப்பா: யோவ், நா கொள்கைப்பா இல்ல? கோல்கப்பா!!!

முதல் நபர் : சார், உங்க பேர ஸ்டைலா சொல்லி பாருங்க! நீங்க கொள்கைப்பான்னு நீங்களே நம்பிடுவீங்க!

இரண்டாம் நபர் : சார், நீங்க எங்க கட்சிக்கு வந்துட்டீங்கனா, எங்க கிட்டயும் கொள்கை இருக்குக்குனு நாங்களும் ஸ்டைலா சொல்லிக்குவோம்.

கோல்கப்பா: ஸ்ஸ்ஸ்ஸ்…ஸ்ஸுப்பா…யோவ் தமிழ ஒழுங்கா படிங்கைய்யா, நா கொள்கைப்பா இல்ல! கோல்கப்பா, கோல்கப்பா, கோல்கப்பா!!!

முதல் நபர் (சத்தமாக கத்துகிறார்) : தலைவர் கொள்கைப்பா வாழ்க! தலைவர் கொள்கைப்பா வாழ்க!

(கூடி இருக்கும் மக்களும் கோஷம் எழுப்புகிறார்கள். பூரி குமாரி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நேசப்பா காதருகே போய் பேசுகிறார்)

பூரி குமாரி: ஏங்க, நம்மளே தள்ளு வண்டி கோஷ்டி! நம்மள தூக்கி வாலண்டரியா அவுங்க வண்டில ஏத்த பாக்குறாங்க?

கோல்கப்பா: இரு, எப்படியாவது பேசி இவுங்ககிட்டேயிருந்து தப்பிக்கலாம்.

முதல் நபர் : இப்பவே என்னோட வாங்க. நான் தான் எங்க கட்சி தலைவரோட மனசாட்சி! உங்கள பத்தி அவர்கிட்ட சொல்லி நல்ல போஸ்டிங் வாங்கி தரேன்!

பூரி குமாரி: கோல், இவன் சொல்றத நம்பாதீங்க! இவன் சரியான பிறழ்சாட்சி பார்ட்டி!

கோல்கப்பா: ஓஒ, அது எப்படி உனக்கு தெரியும்?

(பூரி குமாரி கடுப்பாகி முறைக்கிறார்)

இரண்டாம் நபர் : சார், நீங்க முப்பது வருஷ பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர்னு கேள்விப்பட்டோம். நீங்க கண்டிப்பா எங்க கட்சில வந்து சேரணும் சார்!

கோல்கப்பா: யோவ், நா முப்பது வருஷ பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரன் இல்ல! பொதுமக்கள் வாய்க்கு சொந்தக்காரன்!! என்ன விட்டுருங்கய்யா.

(கூட்டத்தில் இருந்து ஒருவர் முன்னே வந்து ஆவேசமாக பேசுகிறார்)

மூன்றாம் நபர் : உண்மைத் தலைவன் ஒரு நாள் வீதிக்கு வந்தே தீருவார்! நீங்கள் மக்கள் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும்.

(கோல்கப்பா சோர்வாகி விடுகிறார்)

கோல்கப்பா: யோவ்வ், வாயில நல்லா வருது எனக்கு! நான் இத்தனை வருஷமா வீதி ஓரமா தான்யா இருக்கேன். இப்போதான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா?

இரண்டாம் நபர் : நீங்க நல்லா வியூகம் அமைப்பீங்கன்னு பேசிக்குறாங்க, வாங்க சார் நம்ம கட்சிக்கு!

பூரி குமாரி : ஏங்க, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல இவருக்கே View கம்மிங்க!! இவரு எங்கங்க உங்களுக்கு வியூகம் அமைக்குறது?

மூன்றாம் நபர் : கொள்கைப்பா, rugged ஆனா ஆளுன்னு ஜனங்க சொல்றாங்க?

கோல்கப்பா: யோவ், நா ரகடா பூரிய்யா! என்ன உட்டுருங்கய்யா…

முதல் நபர் : எங்க கட்சில ரெண்டாம் கட்ட தலைவர்கள் இல்லன்னு குறை சொல்றாங்க. நீங்க தான் களப்பணி புலின்னு கேள்விப்பட்டோம். உங்கள கட்சில சேக்காம விடமாட்டோம்…வாங்க சார்.

பூரி குமாரி : ஏங்க, இவரு களப்பணி புலியெல்லாம் இல்லேங்க. இவரு புளித்தண்ணி கலக்குறவர்!!ஹீஹீஹ்ஹீ….

pani poori is upset

(கொல்லென்று சிரித்தபடியே பூரி குமாரி சொல்ல, கோல்கப்பா அவமானத்தில் முறைக்கிறார்)

பூரி குமாரி : நல்லா கேட்டுக்குங்க, கொஞ்சம் ஸ்வீட் பாணி, கொஞ்சம் ஹாட் பாணின்னு இவரே ஒரு ரெண்டுங்கெட்டான் ஆளு! இவரை போய் ரெண்டாம் கட்ட தலைவர் ரேஞ்சுக்கு சொல்றீங்க!

கோல்கப்பா: எவ்வளவு நாள் வஞ்சம்டி உனக்கு, என்ன இப்படி கழுவி ஊத்துற?

பூரி குமாரி : இவங்க கிட்டேருந்து நீங்க தப்பிக்கணும்னா இப்படி தாங்க சொல்லணும். இல்லேன்னா அப்புறம் ஊரே உங்கள கழுவி ஊத்தும். இப்போ எப்படி மடை மாத்துறேன்னு பாருங்க!

(பூரி குமாரி தொண்டையை செருமியபடியே கூட்டத்தை நோக்கி பேசுகிறார்)

பூரி குமாரி : இவரை கட்சில சேத்தீங்கன்னா, உங்க கட்சில பேரளவுலதான் கொள்கை இருக்குன்னு சொல்லுவாங்க.!! கொள்கைப்பான்னு ஒருத்தர் கட்சில இருக்குறதால வர போற இந்த கெட்ட பேர் உங்களுக்கு தேவையா? நல்லா யோசிங்க!!

கோல்கப்பா (ரகசியமாக): அடிப்பாவி, மண்டைய கழுவுறதுல நீ இவ்ளோ எக்ஸ்பர்ட்டா!!

முதல் நபர் (யோசிக்கிறார்): ஆமாம், அப்போ நாங்க கொள்கைக்கு என்ன பண்றது?

பூரி குமாரி : கொள்கைய தூக்கி கெடப்புல போடுங்க. நீங்க தான் உங்க பாக்கெட்ல மக்கள் சேவைன்னு ஒரு மேட்டர வச்சுருக்கீங்களே, அத பத்தி யோசிங்க!!

இரண்டாம் நபர் : இப்போவே நவம்பர் வந்துடுச்சி. அடுத்த ஏப்ரலுக்குள்ள சேவைய எங்க போய் நாங்க கண்டுபுடிக்குறது?

(கோல்கப்பா மண்டையில் பல்பு எரிகிறது)

Paani poori gat an idea

கோல்கப்பா: இவ தான் சேவ்பூரி. உங்களுக்கு தோதான ஆளு. “மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு” உருட்ட உங்களுக்கும் வசதியா இருக்கும்.

கோல்கப்பா: இதுல டாப்பா ஒரு விஷயம் இருக்கு! உங்க கிட்ட தத்தி இருக்கு, எங்க கிட்ட தஹி சேவ்பூரி இருக்குன்னும் நீங்க பீத்திக்கலாம்!!!

(“தங்கத் தலைவி, தானைத் தலைவி சேவ்பூரி வாழ்க” என கூட்டம் ஆர்ப்பரிக்கிறது)

முதல் நபர் :ஹாஹாஹா, சார் அட்டகாசமான மேட்டர் சார் இது. நீங்க Quote தலன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க சார்!!!

கோல்கப்பா: உங்க கிட்ட மூணு அட்டகாசமான தலைங்க இருக்காங்க! என்ன ஆள விடுங்கடா சாமி!!

TVK leaders

கோல்கப்பா: மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!! Bye!!

Political Parody Rhymes – 1

Poori singing rhymes

கோல்கப்பா : குமாரி, ரொம்ப நாளா நீ கேட்டுக்கிட்டுருந்த பாலிடிக்ஸ் ரைம்ஸ் இப்போ ரெடி!
பூரி குமாரி: இது யாருக்கான ரைம்ஸ் கோல்கப்பா?
கோல்கப்பா : இது ஜுனியர் தலீவருக்கு பேபி! படிச்சு என்ஜாய் பண்ணு!
பூரி குமாரி: : செமங்க, மக்களே, மொதல்ல ஒரிஜினல் ரைம்ஸ் கேட்டுட்டு, அப்புறம் நம்ம வெர்ஷனை படிச்சி பாருங்க!

கொள்கை வண்டி
தள்ளியே,
வாரிசு தம்பி
வருகிறார்!

தள்ளி போங்கள்
ஓரமாய்,
வாரிசு வண்டி
போகணும்!

வாழ்க்கை முழுக்க
உழைத்தாலும்,
உபி நீ வண்டி
ஏற முடியாது!

வருந்தி நீ
வாழ்வை
தொலைத்தாலே,
விரைந்து
உயர்வார்
பேட்டா!

கொள்கை வண்டி
தள்ளியே,
வாரிசு தம்பி
வருகிறார்!

தள்ளி போங்கள்
ஓரமாய்,
வாரிசு வண்டி
போகணும்!

வாழ்க்கை முழுக்க
உழைத்தாலும்,
உபி நீ வண்டி
ஏற முடியாது!

வருந்தி நீ
வாழ்வை
தொலைத்தாலே,
விரைந்து
உயர்வார்
பேட்டா!

Thank you, Dairy Milk!

Pani puri couple enjoying dairy milk

கோல்கப்பா : Cadbury Daily Milk போட்டுருக்குற New Neighbour சாக்லேட் விளம்பரத்தை பார்த்தியா?

பூரி குமாரி : அருமையா இருக்குங்க!

Dairy mil ad

கோல்கப்பா : இந்த கம்பெனிக்கு நம் மக்கள் சார்பாக நன்றியும், வாழ்த்துக்களும்!

பூரி குமாரி : ஆமாங்க, கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும். அதே சமயம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் மொழி உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆளும் தரப்புக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்ளுவோம்!

கோல்கப்பா : நியாயம் தான் குமாரி! வாசக நண்பர்களே, இந்த பதிவை படித்து நீங்களும் உங்கள் வாழ்த்தை கமெண்டில் சொல்லுங்கள்!

Dairy mil ad

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

Dairy mil ad comment

பூரி குமாரி : மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்! நன்றி!

Tamil joke – தீபாவளி மலர் – அதிசார யோகம்

pani puri couple discussing spiritual

கோல்கப்பா : மாதாஜி, இப்போது அதிரச யோகம் ஆரம்பித்திருக்கிறதாமே? அதை பற்றி விளக்குங்கள்.

மாதாஜி : கோல்கப்பா, அது அதிரச யோகமில்லை, அதிசார யோகம்! நீ இன்னும் தீபாவளி மூடிலிருந்து வெளியே வரவில்லையா?

கோல்கப்பா : ஹிஹிஹி, மன்னித்துக் கொள்ளுங்கள் மாதாஜி. அடியேனுக்கு அறிவு அவ்வளவு தான்!

மாதாஜி : பரவாயில்லை, உன் சந்தேகம் என்ன கேள்?

கோல்கப்பா : ஆளும் தரப்புக்கு அதிசார யோகம் எப்படி இருக்கிறது மாதாஜி?

மாதாஜி : அதிசார யோகம் என்ற வார்த்தையை கூட அவர்கள் காதால் கேட்க விரும்ப மாட்டார்கள்!

கோல்கப்பா : ஏன் மாதாஜி?

மாதாஜி : அதிசாரத்தில் “சார்” இருக்கிறது அல்லவா? அதனால் தான்!

கோல்கப்பா : ஹிஹிஹி, மாதாஜி பலமான மேட்டராக சொல்கிறீர்கள்? இன்னும் சற்று விளக்கவும் ப்ளீஸ்.

மாதாஜி கண் மூடி யோசிக்கிறார்.

மாதாஜி : ஒன்றா, இரண்டு கோல்கப்பா? அவர்களை உலுக்கிய “சார்” நிகழ்வுகளை வரிசையாக பார்ப்போம். நம் மாநில தலை நகரில் நடந்த அவல நிகழ்வு, அதை தொடர்ந்து நடந்த “யார் அந்த சார்?” என்ற போராட்டம்!

கோல்கப்பா : ஆமாம் மாதாஜி, என்னைக்கும் அந்த போஸ்டர் வாசகம் நினைவிருக்கிறது.

மாதாஜி : அடுத்ததாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்ட அனுமதி தந்த விவகாரம்!

கோல்கப்பா : ஹா, அந்த ராம்சார் லேண்டு பிரச்சினை தானே?

மாதாஜி : ஆமாம் கோல்கப்பா, சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பான விஷயத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கவனத்தில் எடுத்து, மாநிலத்தில் உள்ள சதுப்பு நிலங்களை ஆய்வு செய்து அடையாளம் காணும்படி உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் கட்டடம் கட்ட முறைகேடாக அனுமதி தந்த புகார் இப்போது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

கோல்கப்பா : இது சென்னையின் மழை வெள்ள மேலாண்மையை மேலும் பாதிக்குமே மாதாஜி!

மாதாஜி : மண்டையில ஓட்ட இருக்கே நமக்கே தெரியுது! அதிகாரிகளுக்கு தெரியாதா?

கோல்கப்பா : அடுத்த சார் மேட்டர் என்ன மாதாஜி?

மாதாஜி : தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR)!

கோல்கப்பா : ஜனநாயகத்தை காப்பாத்தணும்னு சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்காங்க போல?

கோல்கப்பா : அற்புதம்! அமர்க்களம்! சரி நம்ம பிரதான எதிர் கட்சிக்கு அதிசார யோகம் எப்படி இருக்கு மாதாஜி?

மாதாஜி : புது கட்சி கூட்டணிக்கு வரும்னு சொன்னாங்க. பழம் நழுவி பால்ல விழற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தினாங்க. ஆனா புது கட்சி தலைவர் சரிப்பட்டு வரல, அதனால அவங்க நிலைமை இதுதான்!

கோல்கப்பா : ஹஹிஹி மாதாஜி, உங்க செலெக்க்ஷன் அட்டகாசமா இருக்கு. சரி நம்ம புது தலைவருக்கு நேரம் எப்படி இருக்கு?

மாதாஜி : நேரம் நிச்சயம் சரியில்லை! ஆனா அவர் மன உறுதியோட தொடர்ந்து செயல் பட்டு, come back குடுத்தாருன்னா நிலவரம் மாறலாம். நிலைகுலையாம உண்மையா போராடுனார்னா இந்த சேர் கெடைக்கலாம்!

கோல்கப்பா : மாதாஜி, கட்சிகளை பத்தி சொல்லிடீங்க. அரசாங்கத்துக்கு எப்படி இருக்கு?

மாதாஜி : பெருங்காயப்பட்டு இருக்குற கஜானாவுக்கு சாராய பணத்தை பாய்ச்சி ஓட்டிக்கிட்டு இருக்காங்க!

கோல்கப்பா : நன்றி மாதாஜி!

மாதாஜி : மக்களே, இதோடு தீபாவளி சிறப்பு மலர் நிறைவடைகிறது!

தீபாவளி மலர் – தீதும் நன்றும் பிறர் தர வாரா!

Pani puri couple enjoying Tea

பூரி குமாரி : நாட்டு நடப்பு எப்படி இருக்குங்க? இன்னைக்கு breaking news என்ன?

கோல்கப்பா : இப்ப வர்றது எல்லாம் breaking news இல்ல! Freaking and tweaking news!

பூரி குமாரி : அப்போ வர்ற செய்தியில பொய் எது, உண்மை எதுன்னு எப்புடிங்க கண்டுபுடிக்கிறது?

கோல்கப்பா : செய்தி ஊடகங்களை மட்டும் கண்மூடித்தனமா பாலோ பண்ணி இப்போ நடக்குற பாலிடிக்ச மக்கள் புரிஞ்சிக்க கூடாது.

பூரி குமாரி : என்னங்க சொல்றீங்க?

கோல்கப்பா : ஆமாடி, பொது வெளியில் வரும் செய்திகள் அனைத்தும், நமக்கு உண்மையை நேரடியாக சொல்லாது. நாம தான் ஒவ்வொரு நிகழ்வையும் பகுத்து பார்த்து முடிவெடுக்கணும்.

பூரி குமாரி : தெளிவா சொல்லுங்க கோல்.

கோல்கப்பா : சொல்றேன் கேளு, அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வார்த்தையையும், நகர்வையும், செயலையும் மக்கள் நுட்பமாக கவனிக்கணும். நடப்பு விபரங்களை நிதானித்து ஆராய்ந்தால் மட்டுமே, உண்மையை புரிந்து கொண்டு அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முடியும்.

பூரி குமாரி : ஏங்க, இவ்ளோ சீரியஸா பேசுறீங்க? மக்களுக்கு புரியற மாதிரி ஒரு எக்ஸாம்பிளோட சொல்லுங்க!

கோல்கப்பா : இப்போ பாரு, ஆளும் கட்சி கடந்த காலங்கள்ல ஜெயிக்க குறிப்பிட்ட “மூணு எழுத்து” உதவி இருக்கு!

பூரி குமாரி : அது என்னங்க மூணு எழுத்து?

கோல்கப்பா : TVI – டெலிவிஷன் இலவசம், தகுதி வாய்ந்த இல்லத்தரசி என நல திட்டங்கள்( TeleVision Ilavasam, Thaguthi Vaindha Illatharasi)

பூரி குமாரி : 2026ல “TVI”னா என்னங்க?

கோல்கப்பா : வேறென்ன? தலைமைக்கு வருகிறார் இளவரசர் தான்! (Thalaimaikku Varugiraar Ilavarasar)

பூரி குமாரி : அட ஆமாங்க. அப்போ 2026லயும் “TVI” ஆளுங்கட்சிக்கு உதவுமா?

கோல்கப்பா : எனக்கு தெரியல குமாரி, பொறுத்திருந்து தான் பாக்கணும்!

பூரி குமாரி : கரெக்ட்டுங்க. தீதும் நன்றும் பிறர் தர வாரா! (Theedhum Nandrum Pirar Thara Vaaraa)

கோல்கப்பா : முடிஞ்ச்! கலக்கிட்ட போ! இப்படி தான் ஜனங்க யோசிக்கணும்!

பூரி குமாரி : ஜனங்க யோசிக்கிறது இருக்கட்டும். இந்த அஞ்சு எழுத்து (TNPTV) உங்களுக்கு என்ன செய்தி சொல்லுதுனு யோசிங்க கோல்!

கோல்கப்பா : ஹா, கண்டுபுடிச்சுட்டேன்! தமிழ் நாடு புதிய தலைவரை வரவேற்கிறது! (TamilNadu Puthiya Thalaivarai Varaverkiradhu)

பூரி குமாரி : நீங்க பாஸாய்ட்டிங்க கோல்கப்பா! இப்போ புது கட்சிக்காக நான் சில TVI பாயிண்டுங்களை சொல்லட்டுமா ?

கோல்கப்பா : Come on, சொல்லு டார்லிங்!

பூரி குமாரி :

தேறி வாருங்கள் இளைஞரே!
தெளிந்து வாருங்கள் இரும்பாக!

தொலைக்காட்சி விவாதங்களெல்லாம் இரைச்சலே!
தீய வஞ்சகர்களுக்கு இரையாகாதீர்கள்!

துளிர்த்து வளர்பவர்களை இருட்டடிப்பார்கள்!
தனிமனித விமர்சனங்களில் இங்கிதமிருக்காது!

தொடர் ஓட்டத்தில் இளைப்பாறுதலில்லை!
தந்திரக்காரர்களை வேரறுக்க இயங்குங்கள்!!

(Theri Vaarungal Ilaignare

Thelindhu Vaarungal Irumbaaga

Tholaikaatchi Vivaadhangalellam Iraichchale

Theeya Vanjagargalukku Iraiyaagadheergal

Thulirthu Varubavargalai Iruttadipaargal

Thanimanidha Vimarsanangalil Inghithamirukkaadhu

Thodar Vottathil Ilaipaarudhalillai

Thandhirakaaragalai Verarukka Iyangungal)

கோல்கப்பா : அட அட அடடா! கலக்குறியே கண்ணம்மா!

பூரி குமாரி : பாராட்டு இருக்கட்டும்! இன்னைக்காவது எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க!

கோல்கப்பா : நானே எழுதுனா உன் கிட்ட உதை தான் வாங்குறேன். அதனால பாரதியார் எழுதுனதை உனக்கு டெடிகேட் பண்றேன்!

நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா…

பூரி குமாரி : அருமை! அருமை! அருமைங்க!

கோல்கப்பா : மக்களே! நமக்கும் “தீதும் நன்றும் பிறர் தர வாரா”! அதனால “Twisted Narrative Propaganda TV” செய்திகளை மட்டும் நம்பி தேர்தல்ல ஓட்டு போடாதீங்க! Bye!

Tamil novel – OTP – Part 20/20

A senior citizen couple meeting their friend

கூட்டத்தில் இருந்து கிளம்பியவர்கள் குமரஜோதியை வள்ளியப்பன் கடையருகே வர சொன்னார்கள்.

அங்கு இருந்த பஸ் ஸ்டாப் காலியாக இருந்தது. அவரிடம் விவரம் சொல்லி அந்த பணத்தை அவரையே வைத்துக் கொள்ள சொன்னார்கள். அவரின் உதவிக்கு நன்றி சொல்லி யார் வந்து கேட்டாலும் அவர் எதுவும் தரவில்லை. நான் தண்ணீர் கேன் போட்டுவிட்டு வந்து விட்டேன் என சொல்லுமாறு அறிவுறுத்தி கிளம்பினார்கள்.

வீட்டுக்கு போய் உடை மாற்றி செல்லகுமாருக்கு நன்றி சொல்லி இருவரும் போய் பார்க்கில் உட்கார்ந்தார்கள். கல்பனா வந்தார். மொத்த கதையையும் கூர்ந்து கேட்டார்.

விஷயம் தலைமை வரை சென்று சேர்ந்ததை இவர்களிடம் சொன்னார். பி

றகு சற்று யோசித்த கல்பனா “இந்நேரம் லோக்கல் ஸ்டேஷன்க்கு மெசேஜ் வந்திருக்கும். இந்த மாதிரி சென்சிடிவ் மேட்டர் எல்லாம் குமரகுரு சார் தான் விசாரிப்பார். ரத்தினத்தை விசாரிச்சு அவர் உங்க பேர சொன்னா இங்க வர வாய்ப்பு இருக்கு. நாம தயாரா இருக்கணும்” என்றார்.

மூன்று பேரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு கல்பனா சில யோசனைகளை சொல்லி நான் பார்த்துக்கிறேன் என தைரியம் சொன்னார்.

செல்லகுமாரை போய் பார்த்தார் கல்பனா. யாராவது நேசமணி பற்றி விசாரிக்க வந்தால் தனக்கு தகவல் சொல்லுமாறு அறிவுறுத்தினார். பிறகு அவர்களிடம் என்ன கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என சொல்லி புரிய வைத்தார். அதையே சங்கு புஷ்பத்திற்கும் சொன்னார். அந்த இரவு சம்பந்தப்பட்ட அனைவருக்கும்ஒரு நெடிய இரவாக இருந்தது.

எம்பி அவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவர் நம்பவில்லை. பிறகு “சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் பண்ண சொல்லுங்க. அப்புறம் பார்க்கலாம். நாளைக்குள்ள என்ன நிலவரம்னு சொல்லுங்க. ஏதாவது பிரச்சினை இருந்தா கேண்டிடேட்டை மாத்திடலாம்” என்றார் அவர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அண்ணணும் ரத்தினமும் ஆளும் கட்சி வேட்பாளர் நேசமணிக்கு வாழ்த்தும் ஒத்துழைப்பும் தருவதாக உளமார சொன்னது ஆதாரத்தோடு தலைமைக்கு சென்றது.

இங்கே லோக்கலில் புகைச்சல் அதிகமானது. அண்ணன் காதுக்கு வந்த செய்தி எதுவும் நல்ல செய்தி இல்லை.

ரத்தினத்திடம் டம்மி வேட்பாளராக அறியப்பட்ட நேசமணிகளின் டாக்குமெண்ட்டை கேட்டார். அவரிடம் எதுவும் இல்லை. பணம் எங்கே என்றார். தண்ணீர் கேன்காரருக்கு கொடுத்ததாக சொன்னார் ரத்தினம். எதுவும் நம்பம் படியாக இல்லை அவருக்கு.

அப்போது அவருக்கு ஒரு செய்தி வந்தது. புஷ்பா லிஸ்ட் வித் ரத்தினம் ஐடி கார்டு.

“இதெல்லாம் என்ன” என கண் சிவந்தார் அண்ணன். எதற்கும் பதில் இல்லை ரத்தினத்திடம்.

காலையில் லேசாய் சுற்றிய அவரின் தலை இப்போது பம்பரமாய் சுற்றியது.

குமரகுரு ரத்தினத்தை விசாரித்தார். அவர்கள் இருவரின் போன் ரெக்கார்டுகளை எடுத்தார்.

இருவரும் டாக்டர் நேசமணிக்கு செய்தி அனுப்பியது சிக்கியது.

ரத்தினத்தின் கதைப்படி குமரகுரு நேசப்பாவை விசாரிக்க கிளம்பினார்.

“நேசமணி எந்த பிளாட்? என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.

செல்ல குமார் பிளாட் நம்பர் சொன்னார். விசிட்டர் பைல் செக் செய்தார்.

ரத்தினம் வந்தது நோட்டில் இருந்தது. ஐந்து மணி நேரத்திர்ற்கு மேலாக இங்கே இருந்திருக்கிறார். என்னவாக இருக்கும் என யோசித்தார்.

“அவங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க? என்ன பண்றங்க” என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.

“சார் அவங்க ரெண்டு பேரு மட்டும் தான் வீட்ல. ரிட்டையர்டு ஆனவங்க. சார் போஸ்ட் ஆபீஸ்ல இருந்தார். அந்த அம்மா நர்ஸு” என்றார் செல்ல குமார்.

“நீங்க தான் நைட் ஷிப்டா” என்றார் குமரகுரு.

“இல்ல சார். வேற ஒருத்தர் வரணும். அவரு வெளியூரு. அங்க ஒரு டெத்து. அவரு வரல. அதன் நா இருக்கேன்”. என்றார் செல்லகுமார்.

“எந்த ஊரு” என்றார் குமரகுரு.

செல்ல குமார் சொன்னார். “சார், உங்க ஊர்ல ஒரு டெத்தா இன்னைக்கு” என ஊர் தலைவரை விசாரித்தார். அவர் ஆமாம் என்று சொல்ல செல்லகுமாரை நம்ப ஆரம்பித்தார் குமரகுரு.

“ரிட்டையர்டு ஆயிட்டு இப்போ என்ன பண்றாங்க?” என்றார் குமரகுரு.

“அந்த அம்மா லைப் கோச் சார். வர்றவங்க மணி கணக்குல பேசுவாங்க. அவரு வயசானவரு. ரெண்டு பேருக்கும் சுகர். அவங்க பசங்க ரெண்டு பேரு பாரின்ல இருக்காங்க. ஒரு பொண்ணு ப்ரொபஸரா பாண்டில இருக்காங்க. அவங்க மட்டும் வாரா வாரம் வந்து பாத்துட்டு போவாங்க. ரொம்ப டீசண்டான பேமிலி சார்” என்றார் செல்ல குமார்.

இவங்க பேக்கிரௌண்ட் கவுரவமா இருக்கு. ரத்தினம் சொன்னதை சந்தேகப்பட்டார் குமரகுரு.

“சிசிடிவி இருக்கா?” என்றார் குமரகுரு.

“எல்லா ப்ளாக்லயும் இருக்கு சார்” என்றார் செல்ல குமார்.

“சரி, நைட் ஷிப்ட் கிட்ட சொல்லி வைங்க. நா போகும் போது பார்த்துட்டு போறேன்” என்றார்.

“அவங்க வீட்டுக்கு தண்ணீர் கேன் வந்துதா? எப்போ” என அதையும் சேர்த்து கேட்டார்.

“ஆமா சார். மத்தியானம் வந்தார். போட்டுட்டு கொஞ்ச நேரத்துல போயிட்டாரு.

இருங்க நோட்ல பாக்குறேன்” என்றார் செல்லகுமார்.

“இந்த பையன் சிஸ்டமேடிக்கா இருக்கான்” என நல்ல அபிப்ராயம் வந்தது குமரகுருவுக்கு.

“சார் மொத்தம் பத்து நிமிஷம் தான் சார்” என்றார் செல்லகுமார்.

“சரி” என சொல்லி உள்ளே கிளம்பினார்.

செல்ல குமார் பக்கத்தில் இருந்த நைட் வாட்சமேனை பார்க்க அவர் போனை எடுத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் போனார். கல்பனாவுக்கு மெசேஜ் வந்தது.

அவர் குரங்கு குல்லாவை மாட்டிக் கொண்டு கீழே நாயை கூட்டிக்கொண்டு இறங்கி வந்தார்.

“மேடம் நீங்க இங்க தான் இருக்கீங்களா” என்றார் குமரகுரு.

கல்பனா திரும்பி “நீங்க எங்க சார் இங்க? அதுவும் ராத்திரில. நா இந்த பிளாக்ல தான் இருக்கேன்” என்றார்.

“நல்லதா போச்சுங்க. இங்க ஜி பிளாக் நேசமணிய தெரியும்களா” என்றார் குமரகுரு.

“அவங்கள தெரியாதவங்க ரொம்ப கம்மி சார் இந்த காம்பௌண்ட்ல. என்ன சார் விஷயம்?” என்றார் கல்பனா.

சுருக்கமாக கதையை சொன்னார் குமரகுரு.

“என்ன சார் இது. எங்க காம்பௌண்ட்லயே இந்த மாறி ஒரு அட்டெம்ப்ட்டா? எல்லாரும் பச்சவங்க, நல்ல பொசிஷன்ல இருக்கவங்க” என்றார் கல்பனா.

“ஆமாங்க, எனக்கும் அப்டி தான் தோணுது. மூணு நாலு லட்சம்லாம் இங்க இருக்குறவருக்கு ஒரு மேட்டரே கிடையாது. அந்த அமௌண்ட்டுக்கு மானம் மரியாதையை யாரு அடகு வெப்பாங்க?” என கேட்டார் குமரகுரு.

“சார் எதுக்கும் நாம சிசிடிவி ஒரு தரவ பாத்துட்டு முடிவு பண்ணலாம். வாங்க” என ஆபீஸ் ரூம் பக்கம் போனார்கள்.

ரத்தினம் ரிஷப்சனில் காத்திருந்தது, செல்ல குமார் போன் பேசியது, பிப்த் ப்ளோர் காரிடரில் நடந்த உரையாடல், அவர் சங்கு புஷ்பத்துக்கு காசு கொடுத்தது, பிறகு அவர் வெய்ட் பண்ணி உள்ளே போனது என எல்லாம் இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து காபி வந்தது. பிறகு தண்ணீர் கேன் வந்தது. அவர் உள்ளே போய் சில நிமிடங்களில் வெளியே வந்து விட்டார். சில்லறை காசு வாங்கும் நேரம் தான். பிறகு ரத்தினம் கிளம்பி வெளியே போகிறார்.

“சார் இதுல ஏதாவது உங்களுக்கு பொறி தட்டுதா” என்றார் கல்பனா.

“வித்தியாசமா எதுவும் இல்ல. அந்த அம்மா ஏதோ ஸ்ட்ரிக்டா சொல்றாங்க. அவரு அப்புறம் தன் காசு தராரு. மொதல்ல அந்த அம்மா அவரை உள்ளேயே கூப்புடலை. வெளில சேர போட்டு உக்கார சொல்ராங்க. இந்த மாறி டீலிங்க்ல இருக்கவுங்க வெளிப்படையா இருக்க மாட்டாங்க. அப்புறம் காசு தந்தப்புறமும் அந்த அம்மா உடனே உள்ள விடல” என யோசித்தார் குமரகுரு.

“சரி சார். வீட்டுக்கு வாங்க பேசலாம்” என அழைத்துப் போனார் கல்பனா.

“இந்தாங்க சார் பஞ்சாமிர்தம்” என உபசரித்தார் கல்பனா.

“இப்ப எப்படி ப்ரோசீட் பண்றது? என குழம்பினார் குமரகுரு.

“அவங்கள விசாரிக்கணும். ஆனா தொந்தரவா இருக்க கூடாது. இது தப்பான புகாரா இருந்தா வயசானவங்க அவங்க வருத்தப்படுவாங்க” என உண்மையாக கரிசனப்பட்டார் குமரகுரு.

இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் என அமைதியாய் இருந்தார் கல்பனா.

ஸ்டேஷனில் இருந்து போன் வந்தது குமரகுருவுக்கு. தலைமைக்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட் வேணும் என.

“மேடம் அவங்க உங்களுக்கு பழக்கமா? கொஞ்சம் போன்ல கேஷுவலா பேசி பாருங்களேன்” என உதவி கேட்டார் குமரகுரு. கல்பனா போனை போட்டார்.

‘என்ன ஆன்ட்டி இன்னைக்கு எப்படி போச்சு? தூங்குற நேரத்துல தொல்லை பண்ணிட்டேனா. சாரி” என்றார் கல்பனா.

“இல்லமா. லக்ஷ்மி கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். இன்னிக்கு ஒரே அக்கப்போர். சரியான தலைவலி” என்றார் சங்கு புஷ்பம்.

“என்ன விஷயம் ஆன்ட்டி” என தொடர்ந்தார் கல்பனா. ஸ்பீக்கர் போனில் கேட்டபடி இருந்தார் குமரகுரு.

“இன்னைக்கு உங்க அங்கிள் ரொம்ப டென்க்ஷன் ஆயிட்டாரு. யாருன்னு தெரியாத ஒருத்தரு எங்களை பாக்கணும்னு திடீர்னு வந்துட்டாரு. அப்பாயின்மென்ட் கூட வாங்கல. ஒரே ராவடியான ஆளு” என சலித்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

“என்ன ஆச்சு” என கேட்டார் கல்பனா. “என் கிளயண்ட அவ ஆட்டையை போட்டுட்டா” என்றபடி லைனில் குறுக்கில் வந்தார் நேசமணி.

மீண்டும் சங்கு புஷ்பம் தொடர்ந்தார். “அவரு கொஞ்சம் மொரடானா ஆளா இருந்தாரு. கட்சிக்காருனு சொன்னாரு. மீட் பண்ணனும் ஆனா கன்சல்டேஷன் தர மாட்டேன்னு ஒரே அடாவடி. நானும் உள்ள விடல. அப்புறம் தான் வேற வழி இல்லேன்னு குடுத்தாரு” என பொறுமையை சோதித்தார் சங்கு புஷ்பம்.

“அப்புறம் என்ன ஆச்சு” என்றார் கல்பனா.

“எங்க எல்லாருக்கும் மண்டை காஞ்சி போச்சு” என மீண்டும் குறுக்கில் வந்தார் நேசமணி.

இது சரியான காமெடி டைம் பேமிலி என நினைத்தார் குமரகுரு. இவர்கள் இவ்வளவு நார்மலாக இருக்கிறார்கள். அந்த ஆள் இவர்களை கை காட்டுகிறான் என யோசித்தார்.

“என்ன விஷயமா வந்தார்” என கேட்டார் கல்பனா.

“ரொம்ப சிம்பிள் மா. அங்கிள பாக்கணும் அவருக்கு. எலெக்க்ஷன்ல சுயேச்சையா நிக்குறீங்களானு கேட்டாரு. இவரு சுகர் பேஷண்ட்டு. சும்மாவே நிக்க முடியாது. இவரு எங்க சுயேச்சையா நிக்குறது. அவரு இன்டென்ஷன் ரொம்ப தப்பா இருந்தது. நாங்க முடியாது கெளம்புங்கன்னு சொல்லிட்டோம்” என உடைத்து பேசினார்.

“அப்புறம்” என்றார் கல்பனா.

“அவரு கதையை சொன்னாரு. நா லைப் கோச்சுனால ஊர் கதை எல்லாம் பேசினாரு. எட்டாயிரம் பீஸ் வேற குடுத்தாரு. ஒழச்சு சம்பாதிக்குறவன் எவனும் வெட்டி கதைக்கு எட்டாயிரம் தர மாட்டான். நடுவுல திரும்ப அவருகிட்ட பேச ஆரம்பிச்சுட்டான். நாலு லட்சம் தரேன்னு சொல்றான்”.

“நீங்க போக சொல்லலியா?” என்றார் கல்பனா.

“அவரு அவங்க அண்ணன் கிட்ட போன்ல பேசுறாரு. இவருகிட்ட பேசுறாரு. அப்புறம் என்கிட்டே கொஞ்ச நேரம் பேசுறாரு. அவரு எதுக்கு வந்தார்னே எங்களுக்கு புரியல. இன்னும் சொல்ல போனா நம்ம குமரஜோதி தண்ணி கேன் எடுத்துட்டு வந்தா அவருகிட்ட பேசுறாரு. அவரு வீட்டம்மாவுக்கு நல திட்ட உதவி வாங்கி தரேன்னு ஒரே அலப்பறை” என கொட்டி தீர்த்தார்.

“அப்புறம்” என்றார் கல்பனா.

“ஒரு வழியா நாங்க முடியாதுன்னு சொல்லிட்டோம். இன்னொரு விஷயம் சொல்றேன் ஷாக் ஆவாத” என சஸ்பென்ஸ் வைத்தார் சங்கு புஷ்பம்.

“அந்த ஆளு என்ன சுயேச்சையா நிக்க முடியுமான்னு கேட்டாரு. ஒரு கேண்டிடேட்டு புஷ்பாவாம். நா சங்கு புஷ்பம்னு என்ன கேட்டார்.”

“இதுக்கு மேல அவரை பத்தி என்ன சொல்றது” என கொட்டி தீர்த்தார் சங்கு புஷ்பம்.

கல்பனா தொடர குமரகுரு போனிலேயே ரிப்போர்ட் கொடுத்து விட்டார்.

தலைமைக்கு தெளிவாக ரிப்போர்ட் சென்றது.

அண்ணன் மற்றும் ரத்தினமுத்து சேகர் இருவரும் மாற்று கட்சிக்காக வேலை செய்து கட்சிக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக டம்மி வேட்பாளர்களை நிறுத்த சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள்.

கட்சிக்கு கெட்ட பேரையும், கட்சி கட்டுப்பாட்டையும் மீறியதால் அவர்கள் இருவரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கபடுகிறார்கள். கட்சியின் சார்பாக புது வேட்பாளர் நாளை அறிவிக்கபடுவார்” என இரவோடு இரவாக செய்தி குறிப்பு வந்தது. அண்ணனும் ரத்தினமும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் கைதியானார்கள்.

மறுநாள் காலை பேப்பரில் செய்தி வந்தது.

முற்றும்.

Tamil novel – OTP – Part 19/20

A political meeting with large group of people

ரத்தினம் கிளம்பியதும் கதவை சாத்தியவர்கள் ஆளுக்கொரு பாத் ரூமிற்க்கு ஓடினார்கள். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பசியையும் இயற்கை உபாதைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

பாத்ரூம் போய் வந்த பிறகு ஆயாசமாக உணர்ந்தார்கள். பேருக்கு நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டார்கள். ரத்தினம் கிளம்பி விட்டதால் இனி போன் பேசலாம் என உணர்ந்தார்கள்.

ரெஸ்ட் எடுக்க சங்கு புஷ்பத்திற்க்கு நேரமில்லை. லக்ஷ்மிக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி இனி என்ன செய்யலாம் என திட்டமிட்டார்.

லக்ஷ்மிக்கு நேரில் போய் அவர்களை கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

முன்பின் தெரியாத ஒருவர் தங்களை சந்திக்க வருகிறார் என்றபொழுது அவர்களின் நிதானமும் எச்சரிக்கை உணர்வும் பிரமிப்பாக இருந்தது.

அந்நிய ஆட்களை கணித்து அவர்களிடம் எவ்வளவு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று லக்ஷ்மியும் கற்றுக் கொண்டார்.

அடுத்த போன் கல்பனாவுக்கு போட்டார் சங்கு புஷ்பம்.

கல்பனாவின் உறவினர் ரத்தினம் கட்சியில் உள்ள முக்கியஸ்தருக்கு பாதுகாப்பு பணியில் உள்ளவர். அவர் போய் ஓத வேண்டிய இடத்தில் ஓதி விட்டார்.

வார்டு பெயரை சொல்லி “சார், இங்க கட்சி ஆளுங்க எலெக்சன்ல டபுள் கேம் ஆடுறாங்கன்னு லோக்கல் சோர்ஸ் டிப் குடுத்திருக்காங்க சார். எக்ஸ் எம்எல்ஏ அண்ட் அஸோஸியேட் இன்வால்வ்ட் சார். ஒடனே நீங்க அவங்க ஏரியா ஸ்டேஷனை அலெர்ட் பண்ணீங்கன்னா கையும் களவுமா பிடிக்கலாம் சார்” என சொல்லி முடித்தார்.

“ரொம்ப டயர்டா இருக்க. போய் கொஞ்ச நேரம் தூங்கு” என்றார் நேசப்பா.

“இன்னும் கொஞ்சம் வேல பாக்கி இருக்கு. இது பத்தாது” என்றார் சங்கு புஷ்பம்.

“அவர் தான் போய்ட்டாரே” என்றார் நேசப்பா.

“நேசமணி பைல் தானே முடிஞ்சிருக்கு. இன்னும் நம்ம புஷ்பா பைலை ஓப்பனே பண்ணலையே. நீங்க போய் படுங்க. நா கொஞ்சம் நிதானமா யோசிக்கிறேன்.” என்றபடி சிரித்தார் சங்கு புஷ்பம்.

தலைமை வரை விஷயம் இன்று இரவுக்குள் போய்விடும் என கல்பனா தகவல் சொன்னார்.

கல்பனா வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு சங்கு புஷ்பத்தை சந்திப்பதாக சொன்னார்.

லக்ஷ்மி அனுப்பிய புஷ்பா பெயர்கள் கொண்ட லிஸ்டை எடுத்துக் பார்த்தார்.

வாக்காளர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், முகவரி மற்றும் பாலினம் இருந்தது. சங்கு புஷ்பத்திற்கு இது போதாது என்று தோன்றியது. ஆனால் இன்னும் என்ன தேவை என தெரியவில்லை.

சற்று யோசனைக்கு பிறகு இவர்களின் போன் நம்பர் கிடைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என நினைத்தார். அதை எப்படி சேகரிப்பது என யோசித்தார்.

அவர் சிஸ்டம் டேபிள் மீது இருந்த பஞ்சாமிர்த பாட்டில் அவர் கேள்விக்கான விடையை தந்தது.

வள்ளியப்பனுக்கு போன் போட்டார் சங்கு புஷ்பம்.

“சார் ஒரு ஹெல்ப் வேணும்” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.

“சொல்லுங்க மேடம்” என்றார் அவர்.

வள்ளியப்பனின் மகன் இவர்கள் ஏரியாவில் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். அவரிடம் சந்தாதாரர் முகரியும், போன் நம்பரும் இருக்கும். காலையில் நடந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லி முடித்தார் சங்கு புஷ்பம்.

வாயடைத்துப் போனார் வள்ளியப்பன். “நீங்க கவலைப்படாதீங்க மேடம். அரை மணி நேரத்தில் அவன் உங்களுக்கு அனுப்பிடுவான். ஆள், படை பலம் எல்லாம் அவங்களுக்கு மட்டும் தான் இருக்குமா என்ன? நம்மள மாதிரி சாதாரண ஜனங்களும் லேசு பட்டவங்க இல்லன்னு அவங்களுக்கு புரியணும்” என பொரிந்து தள்ளினார் வள்ளியப்பன்.

சற்று நேரத்தில் வள்ளியப்பன் மகன் தணிகையிடம் இருந்து எல்லா போன் நம்பர்களும் கிடைத்தது.

இப்போது சங்கு புஷ்பத்துக்கு ஐடியா வந்தது. அந்த லிஸ்ட்டை லக்ஷ்மிக்கு அனுப்பி விட்டு போன் போட்டார்.

“லக்ஷ்மி, லிஸ்ட்ல ஒவ்வொருத்தருக்கும் ஒரு தொகை போடு. புரியுதா? என்றார் சங்கு புஷ்பம்.

“பக்காவா போட்டு தரேன்” என்றார் லக்ஷ்மி.

புஷ்பா பெயர் காம்பினேஷனில் பதினெட்டு பேர் இருந்தார்கள் லிஸ்டில். 

முதலில் ரேண்டமாக ஆறு பேருக்கு விருப்பமில்லை என தொகையின் கீழே போட்டார்.

லிஸ்டில் இருந்து சங்கு புஷ்பத்தையும் கனக புஷ்பத்தையும் நீக்கி விட்டார்.

மீதி இருந்த பத்து பேருக்கு குறைந்தது ஒரு எல்லில் இருந்து நான்கு எல் வரை பதிவிட்டார்.

மொத்தம் கூட்டினால் இருபத்து மூன்று எல் வந்தது. நல்ல தொகையாக இருந்தது.

ஆனால் பத்து பேர் என்பது கொஞ்சம் அதிகமாகப்பட்டது.

அதிகபட்சம் ஐந்து பேர் வரை போன தேர்தலில் டம்மி வேட்பாளராக இருந்தார்கள்.

அதனால் ஐந்து பேர் வரை இருக்கட்டும் என முடிவுக்கு வந்தார்.

கடைசியாக அண்ணி புஷ்பாவைத் தவிர்த்து ஐந்து பெண் புஷ்பங்களுக்கு நல்ல தொகையைப் போட்டு முடித்தார். மொத்தம் பதினைந்து எல். பாரபட்சமின்றி

தலைக்கு மூணு எல். என்ஜாய் பண்ணுங்க என நினைத்துக் கொண்டு அம்மாவுக்கு அனுப்பினார்.

சங்கு புஷ்பத்திற்கு அந்த லிஸ்ட் திருப்தியாக இருந்தது.

போன் அடித்தது. குமரஜோதி. “மேடம் அந்த கவர்ல அவ்ளோ பணம் இருக்கு மேடம்” என்றார்.

“எல்லாம் உங்களுக்கு தான். சாயந்திரம் நானும் அவரும் வந்து உங்களை பாத்து நேர்ல பேசுறோம். நீங்க ரத்தினத்தோட கட்சி அட்டையை எனக்கு அனுப்புங்க” என்றார் சங்கு புஷ்பம்.

லக்ஷ்மி அனுப்பிய லிஸ்டையும் ரத்தினத்தின் கட்சி அட்டையையும் பிரிண்ட் எடுத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

தலை வலி ஆரம்பமானது சங்கு புஷ்பத்திற்கு. ஆனால் செய்ய வேண்டிய வேலை நிறைய இருந்தது.

கிச்சனுக்கு போய் காபி போட்டு கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தார். ரத்தினத்திடம் இருந்து வாங்கிய கன்சல்டேஷன் பணம் வேறு இருக்கிறது. அந்த பணத்தை சொந்த செலவுக்கு தொடக்கூடாது என தோன்றியது.

காபி போட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி குடித்தார். பக்கத்தில் அபார்ட்மெண்ட் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. வேலை முடித்து எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தார்கள். அப்போது பைக்கில் வந்த ஒருவர் அவர்களுக்கு பணம் கொடுப்பதை பார்த்தார். அந்த நாளின் சம்பளமாய் இருக்கும் என நினைத்தார். கூட்டமாக இருந்தவர்களுக்கு அவர் பணம் விநியோகம் செய்தது சங்கு புஷ்பத்திற்கு ஒரு அட்டகாசமான ஐடியாவை கொடுத்தது.

அவரின் தலைவலி பறந்து ரத்தினம் வீட்டு பக்கம் போனது.

வள்ளியப்பனுக்கு திரும்ப போன் போட்டார் சங்கு புஷ்பம்.

“சொல்லுங்க மேடம். லிஸ்ட் அனுப்பிட்டானா” என்றார்.

“தேங்க்ஸ் சார். வந்துடிச்சி. இன்னொரு ஹெல்ப் வேணும். என்கிட்ட எட்டாயிரம் ரூபா இருக்கு. அதுக்கு நூறு ரூபா கட்டா வேணும். உங்க கடைல இருக்குங்களா?” என்றார் சங்கு புஷ்பம்.

“இருக்கு மேடம். குமார் கிட்ட குடுத்தனுப்பவா” என்றார் வள்ளியப்பன்.

“சரிங்க சார். அப்டியே மொய் கவர் ஒரு கட்டு குடுத்து விடுங்க. அத எங்க லிஸ்ட் அமௌண்ட்ல சேத்து போட்டுடுங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“சரிங்க அனுப்புறேன்” என வைத்தார் வள்ளியப்பன்.

சங்கு புஷ்பம் பேசிக்கொண்டிருக்கும்போது எழுந்து வந்தார் நேசப்பா.

நடந்தவற்றை சொல்லி காபி கொடுத்தார் சங்கு புஷ்பம்.

“அம்மாவும் பொண்ணும் அட்டகாசமா வேலை செய்றீங்க” என புகழ்ந்து தள்ளினார் நேசப்பா.

சங்கு புஷ்பம் அன்றைய லோக்கல் செய்தித்தாளை புரட்டினார். அவர் தேடிய செய்தி அதில் இருந்தது.

இரவு ஏழு மணிக்கு ரத்தினம் கட்சியின் கூட்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில்.

நேசப்பாவை கடைக்கு அனுப்பி விட்டு இரவு உணவை தயாரிக்க ஆரம்பித்தார்.

குமார் வந்து நூறு ருபாய் தாள்களாக பணத்தையம், மொய் கவர்களையும் கொடுத்துவிட்டு போனார்.

சங்கு புஷ்பம் கிளை பெயரோடு சேர்த்து “ரத்தினமுத்துசேகர்” என டைப்படித்து பிரிண்ட் எடுத்தார்.

அதை கட் செய்து மொய் கவர்கள் மீது ஒட்டி ஒவ்வொரு கவரிலும் நூறு ருபாய் போட்டார்.

எட்டாயிரமும் மொய் கவர்களில் போட்டு இரண்டு பிரிவாக பிரித்து வைத்தார்.

பிறகு அதனுடன் லக்ஷ்மியின் லிஸ்டையும் ரத்தினத்தின் அடையாள அட்டை நகலையும் சற்று கசக்கி போட்டார்.

நேசப்பா ரத்தினம் கட்சியின் வேட்டி சேலையை பஜாரிலிருந்து வாங்கி வந்தார்.

“எல்லாம் ரெடிங்க” என காண்பித்தார் சங்கு புஷ்பம். மலைத்துப் போனார் நேசப்பா.

“என் கெரகம். இதையெல்லாம் கட்ட வேண்டியிருக்கு” என சலித்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

“பேன்சி டிரஸ் காம்படிஷனுக்கு போறதா நெனச்சு கட்டிக்கோ” என ஜாலி மூடில் சொன்னார் நேசப்பா.

“நக்கலா. காலைல நாக்கு வெளில தள்ளி போற மாதிரி இருந்தீங்க” என அவர் பங்குக்கு வாரினார் சங்கு புஷ்பம்.

பஞ்சாமிர்த பாட்டிலில் இருந்து கொஞ்சம் எடுத்து கல்பனாவுக்காக ஒரு டப்பாவில் எடுத்து வைத்தார்.

கரன்சி கவரை ஆளுக்கு பாதியாய் பிரித்துக் கொண்டார்கள். மிச்சமிருந்த பஞ்சாமிர்த பாட்டிலையும் கவர்களையும் இரண்டு துணிப் பைகளில் போட்டு வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.

நேராக வள்ளியப்பனின் கடைக்கு போய் தணிகையிடம் பேப்பர்களை கொடுத்து என்ன செய்ய வேண்டும் என சொன்னார்கள்.

இரவு ஏழு மணி. கட்சி கூட்டம் ஆரம்பமாக இன்னும் நேரம் இருந்தது. ஆண்கள் பக்கம் நேசப்பாவும், பெண்கள் பக்கம் சங்கு புஷ்பமும் கூட்டத்தில் கலந்தார்கள்.

சற்று நேரம் கழித்து அண்ணனும், அண்ணியும், ரத்தினமும் மேடையில் ஏறினார்கள். மூவரும் உற்சாகமாக இருந்தார்கள். நேசப்பா தணிக்கைக்கு மெசேஜ் செய்தார். “மணி கூண்டு பக்கத்தில் இருக்கிறேன் என்று”.

கடைசி லைனில் உட்கார்ந்திருந்தார். தணிகை கொஞ்ச நேரத்தில் வந்து நேசப்பா அருகில் நின்றார்.

பிறகு மேடையை சற்று நேரம் பார்த்து விட்டு பக்கத்தில் இருந்த கட்சிக்காரரிடம் பேப்பரை கொடுத்தார்.

“அண்ணே, அதோ மேடைல அண்ணன் பக்கத்துல ஒருத்தர் இருக்காருல்ல. அவர் இந்த பேப்பரை எங்க கடைல ஜெராக்ஸ் எடுத்தாரு. காச குடுத்துட்டு இதை விட்டுட்டு வந்துட்டாரு. அவர்கிட்ட குடுத்துடுங்கண்ணா. கடைல ஆள் இல்ல நா போறேன்” என பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி போனார்.

அவர் அந்த பேப்பரை படித்துப் பார்த்தார். பதினைந்து எல் ஐந்து புஷ்பங்களுக்கு இருந்தது. இன்னொரு பேப்பரில் ரத்தினத்தின் அடையாள அட்டை இருந்தது.

அவர் ஏதோ யோசித்தவராக நிற்க நேசப்பா அவரிடம் இருந்து அந்த பேப்பரை வாங்கி சற்று சத்தமாக படித்தார்.

“நம்ம ரத்தினம் தம்பி தான் அண்ணிக்கு எதிரா அஞ்சு புஸ்பாவை நிறுத்துது போல” என கொளுத்திப் போட்டார். முகம் சுண்டிப் போனார் கட்சிக்காரர்.

“மொத்தம் பதினைந்து எல். ஒவ்வொரு புஸ்பாக்கும் பத்தாயிரம் குடுத்துட்டு மிச்சத்தை இவரு எடுத்துக்குவாரு” என விளக்க உரையை கொடுத்தார்.

“அடப்பாவி, சொந்த கட்சிக்கே துரோகம் பண்ணுறானே” என கோபமானார் அவர்.

பிறகு “அவருக்கு ஏது அவ்வளவு பணம்?” என சந்தேகமாய் கேட்டார்.

அவர் காதருகே போய் “இவரு சித்தா டாக்டரு ஆளு. அவரு தான் இவருக்கு பேங்கர். அண்ணன் கூடவே இருந்து கழுத்தறுக்குறான்” என டீடைலை சொன்னார்.

பேயறைந்தார் போல ஆனார் அவர். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆண்கள் பகுதியில் பெரும்பாலும் எல்லாருக்கும் அரசால் புரசலாக போய் சேர்ந்தது.

இந்த பக்கம் சங்கு புஷ்பம் உற்சாகமாக சக பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

நேசப்பா அந்த பக்கம் போய் போனில் இந்த கதையை யாரிடமோ விளக்கினார்.

அதை கேட்ட இரு பெண்கள் பேச சங்கு புஷ்பம் கூட சேர்ந்து கொண்டார்.

“ஆமா, ரத்தினம் டாக்டரோட ஸ்லீப்பர் செல்னு மகளிர் அணி தலைவி பேசிக்கிறாங்க. டாக்டரு சம்சாரமும் தலைவியும் ஒரே ஜிம்முக்கு தான் போறாங்க. அப்போ அந்த அம்மாகிட்ட இவரு போய் பேசிட்டு வந்திருக்காரு. புஷ்பா அண்ணிக்கு எதிரா அஞ்சு பேர ரெடி பண்றாரு. ஆனா இங்க நல்லவரு மாதிரி அவங்க கூட மேடைல உக்காந்திருக்காரு” என டிவி சேனல் டிபேட் போல பேசி முடித்தார்.

சொல்லவே வேண்டாம். பெண்கள் பக்கம் அதி விரைவாக அந்த செய்தி பரவியது.

நேசப்பா அவர் துணி பையை வைத்து விட்டு கிளம்பினார்.

கேட்பாரற்று கிடந்த பையை எடுத்த ஒருவர் அதிலிருந்த கவர்களை பார்த்து யோசித்தார்.

கவரை வாங்கிய சங்கு புஷ்பம், “ரத்தினம் தம்பி தான் எல்லாருக்கும் நூறு ரூபா ஓட்டுக்கு இப்பயே காசு குடுக்குது” என சொன்னார்.

பஞ்சாமிர்த டப்பாவையும் ஸ்பூன்களையும் பக்கத்தில் இருந்த பெண்கள் டீமிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார்.

இரண்டே நிமிடத்தில் விநியோகம் முடிய தூரத்தில் இருந்து வீடியோ எடுத்தார் லோக்கல் பேப்பர் நிருபர்.

இதே போன்று சற்று தள்ளி சங்கு புஷ்பம் பையை வைத்து விட்டு நகர கூட்டம் பரபரப்பாக இருந்தது.