கொளப்பட்டேம் என்றெண்ணிக்….

The rear view image of the leading politician in Tamil Nadu

பூரி குமாரி : கருத்துக் கணிப்புகளுக்கெல்லாம் எதிராக வந்த தேர்தல் முடிவுகள் கோட்டை வட்டாரத்தில் பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறதே, கவனித்தீர்களா கோல்?

கோல்கப்பா : வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழா நடத்தியவர்கள், அந்த குறள் வழி நடந்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது குமாரி!

பூரி குமாரி : ஆமாங்க, ஆட்சி கனியப்போவதில்லை என தெரிந்தும், யார் கண்களை கட்ட இந்த கருத்துக் கணிப்புகளெல்லாம் வெளிவந்தன?

கோல்கப்பா : அவர்கள் படிக்க தவறிய சில குறள்களை வைத்தே உனக்கு பதில் சொல்கிறேன், கேள்!

“கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை”

“பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?” சாலமன் பாப்பையா அவர்கள் இந்த குறளுக்கு எழுதிய அற்புதமான உரை இது! இன்றைய சூழலுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பார்த்தாயா? பாடாய் பட்டு, ரக ரகமாக கணிப்புகளை வெளியிட்டதால் வந்த பயனென்ன குமாரி?

பூரி குமாரி : அருமையான குறள் கோல். உண்மையான கண்ணோட்டம் பொதுமக்களுக்கு இருந்ததால், அவர்களை மடைமாற்ற வந்த அத்தனை கருத்துக் கணிப்புகளுக்கும் மயங்காமல், இந்த தேர்தலில் அவர்கள் வாக்குகளை பதிவிட்டிருக்கிறார்கள்.

கோல்கப்பா : ஆம் குமாரி. நம் அன்றாட வாழ்க்கையும், சமூக செயல்பாடுகளும் கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது. அது இல்லாதவர்கள் இந்த பூமிக்குச் சுமையாவர். இன்னொருவகையில் சொல்வதானால் அவர்கள் இறந்துபோவதே மேல் என சொல்கின்றது குறள்.

பூரி குமாரி : ஹ்ம்ம்..சரிதான்..இவ்வளவு ஆதரவு குரல்கள் ஒலித்தென்ன பயன் கோல்?

கோல்கப்பா : இந்த குறள் தான் உன் கேள்விக்கு பதில் குமாரி.

“ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்”

இதன் பொருள் “எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும், முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்” என்பதாகும்.

நல்ல நேர்மையான ஆட்சி நடத்தி, சரியான முறையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து இருந்தால் இவ்வளவு வெளிப்பூச்சு வேலைகள் செய்ய வேண்டியதில்லை? என்ன சொல்கிறாய்?

பூரி குமாரி : ஆமாங்க, அரசாங்க பணத்தில் விளம்பரங்கள், விழாக்கள், ஒட்டு மொத்த ஊடகங்களின் துணை என முழு படை பலத்தோடு இருந்தாலும், ஒரு சொட்டு மையின் சக்தி இன்று அவர்களை முடக்கி உட்கார வைத்திருக்கிறது.

கோல்கப்பா : சரியாக சொன்னாய் குமாரி.

பூரி குமாரி : ஆனாலும் பெரிதும் மக்களால் மதிக்கப்பட்ட முதல்வரே, இந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்ததை எப்படி புரிந்து கொள்வது கோல்?

கோல்கப்பா : முதல்வர் அவர்களின் உழைப்பும், பொறுமையும், அனுபவமும் அசாத்தியமானது குமாரி.

பூரி குமாரி : என்ன சொல்கிறீர்கள் கோல்? பிறகு ஏன் அவருக்கு இந்த நிலை?

கோல்கப்பா : கட்சியிலும், ஆட்சியிலும் அவரோடு இருந்தவர்கள் செய்த பல விரும்பத்தகாத செயல்கள். தலைவரோடு கிடைத்த நெருக்கத்தையும், நட்பையும் தகாத வழியில் பயன் படுத்தினார்கள். அதனால் வந்த பாதகம் தான் இது.

பூரி குமாரி : புரியவில்லை கோல்.

கோல்கப்பா : உனக்கு புரியும் படி சொல்கிறேன். இந்த குறளை கேள்.

“கொளப்பட்டேம் எண்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்”

கட்சியிலும் ஆட்சியிலும் பலர் தலைவரால் விரும்பப்பட்டார்கள். அவருடைய அன்புக்கு உரியவரானார்கள். அவரால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் எச்சமயத்திலும், தலைவர் நமக்குத் துணையிருப்பார் என்ற துணிவில் மனம்போன போக்கில் செயல்பட்டார்கள். தலைவரும் அவர்களை கண்காணிக்க தவறினார் அல்லது நடவடிக்கை எடுக்க தயங்கினார்.

பூரி குமாரி : மிக சரியாக சொன்னீர்கள் கோல்! “கொளப்பட்டேம் எண்றெண்ணி” அவர்கள் செய்த கெடு செயல்கள், இன்று கொளத்தூரில் தலைவரை குன்றி போக வைத்திருக்கிறது.

கோல்கப்பா : ஆம் குமாரி. முதுபெரும் தமிழ் ஆசானின் வழித் தோன்றல்கள், அவரெழுதிய உரை படித்து நடந்தாலே, சீரும் சிறப்புமாய் வாழலாம். என்ன சொல்கிறாய்?

பூரி குமாரி : நிச்சயமாக கோல். களமும் காலமும் அவர்களுக்கு அதை உணர்த்தட்டும், மீண்டு வரட்டும்!

கோல்கப்பா : மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் “கொளப்பட்டேம்” (அன்புக்கு உரியவர்கள்) கோஷ்டியுடன் பகிருங்கள். நன்றி!

Tamil Joke – IIM, AIMS & JEE

A satire joke where IIM and AIMS represent established political parties, while JEE represents a new party making its first entry into the election competition like an entrance exam.

கோல்கப்பா : என்ன குமாரி, நாள் நெருங்கிடுச்சி எலக்க்ஷன் ரிசல்ட்டுக்கு! உன் கணிப்பு என்ன?

பூரி குமாரி : ஊர்ல கருத்து கணிப்பு சொல்றவங்களையெல்லாம் வண்டை வண்டையா திட்றாங்க கோல்! நமக்கு எதுக்கு வம்பு?

கோல்கப்பா : கரெக்ட்டுதான்..இந்த கணிப்பையெல்லாம் எப்புடி பாக்குற குமாரி?

பூரி குமாரி : ஹிஹிஹீ ..எல்லாம் பை, பையா கவனிப்பு தான்!

கோல்கப்பா : அடிப்பாவி…Clue பங்கமா இருக்கேடி!

பூரி குமாரி : சரி நீங்க சொல்லுங்க எந்த கோஷ்டி வின் பண்ணும்?

கோல்கப்பா : மே மூணு எழுத்து..அதுனால மூணு எழுத்து கட்சில ஒண்ணு ஜெயிக்கும்…

பூரி குமாரி : ஓஓஓ, அப்போ நாலு என்ன தொக்கா? நாலாம் தேதி ரிசல்ட்டு வருது..நாலு எழுத்து கட்சி தான் ஜெயிக்கும்…இது எப்புடி..ஹிஹிஹி..

கோல்கப்பா : எது எப்டியோ..நாளைக்கு அப்புறம் இந்த 2026 நம்ம காதுல கேக்குறது கொஞ்சம் குறையும்..

பூரி குமாரி : அதுவும் நம்ம “இட்டுகினு வந்து இட்டுகினு போறவர்” 2026ன்னு ஒவ்வொரு தடவை சொல்லி முடிக்குறதுக்குள்ள நான் இந்த வருஷமே முடிஞ்சிடும் நெனச்சிருக்கேன்..

கோல்கப்பா : ஆனந்தம் ஆனந்தம் பாடும், மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்…நீ மட்டும் தான் Clue குடுப்பி யா..நா கொடுத்திருக்கேன் பாரு ராகத்தோட!

பூரி குமாரி : எல்லாம் என் கெரகம்..உங்கள நம்பி சொன்னேன் பாருங்க..

கோல்கப்பா : ஏண்டி இந்த கள்ள மௌனம்? வாய தொறந்து சொல்லேன், யாரு இந்த தடவை ஆட்சி அமைப்பாங்கன்னு?

பூரி குமாரி : கடைசி நிமிஷம் வரை காட்சிகள் மாறும் கோல், பொறுமையா இருங்க.

கோல்கப்பா : ரெண்டு பார்ட்டிங்க ஏற்கனவே பவர்ல இருந்திருக்காங்க..இப்போ புதுசா ஒருத்தர் வந்து குதிச்சிருக்கார். களம் எப்புடி இருக்கு குமாரி?

பூரி குமாரி : ரெண்டு பார்ட்டிங்களும் களத்தை வளமா வெச்சிகிட்டாங்க..புதியவர் களத்தை மொத்தமா வளைச்சி வெச்சிக்கிட்டாரு …

கோல்கப்பா : ஹிஹிஹி, அருமையா ஒன் லைன்ல முடிச்சிட்ட..அட்லீஸ்ட் குத்துமதிப்பா ஒரு நம்பரை சொல்லேண்டி எல்லாருக்கும்?

பூரி குமாரி : ஏங்க எலக்சன் ரிசல்ட் என்ன சொத்து மதிப்பாங்க? குத்துமதிப்பா சொல்றதுக்கு?

கோல்கப்பா : குத்துங்க எசமானியம்மா, குத்துங்க..உன் பார்ட்னர்ன்னு கூட பாக்காம இப்படி கருணையே இல்லாமா எப்புடிடீ உன்னால சொல்ல முடியுது?

பூரி குமாரி : ஹிஹிஹி..இனிமே வாய் சும்மாதானே இருக்குன்னு எதுனா பேசுவீங்க?

கோல்கப்பா :வாய்ப்பில்லை ராஜா..வாய்ப்பே இல்ல! ஹா, வாய்ப்புன்னதும் தான் ஞாபகம் வருது? இந்த முறை எந்த கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்குன்னு நினைக்குற?

பூரி குமாரி : திருந்தவே மாட்டீங்களா கோல், நீங்க?

கோல்கப்பா : புதியவர் Just Entering Election..எவ்ளோ % வாங்குவாரு?

பூரி குமாரி : புதியவர் JEEல எவ்ளோ % வாங்குவாருன்னு தெரியல. ஆனா வாக்கு war நிச்சயம்..

கோல்கப்பா : அடியேய், என்னடி பெரும் புள்ளிய பள்ளி கூட பையன் கணக்கா சொல்லிப்புட்ட!

பூரி குமாரி : வேற என்னங்க சொல்ல முடியும்? இவர் எதிர்க்கிறது IIM & AIMS கோஷ்டி..

கோல்கப்பா : ரொம்ப படிச்சவங்களாடி?

பூரி குமாரி : இல்ல, IIMன்னா இலாக்கா இல்லாம மந்திரிய (Ilaakka Illaama Mandhiri) வெச்சிருந்த கோஷ்டி!

கோல்கப்பா : Oh My God..அப்போ AIMSம்ன்னாஆஆ?

பூரி குமாரி : மனச தேத்திக்குறீங்களா? சொல்றேன்..

கோல்கப்பா (நெஞ்சை பிடித்தபடியே) : மொத்தமா முடிச்சிவுட்ரு..கொஞ்ச நஞ்சம் ஏன் மிச்சம் வெச்சிருக்க?

பூரி குமாரி : ஹிஹிஹி..AIMSன்னா அம்மா இதயத்தின் மனசாட்சியாக (Amma Idhayaththin Mana Saatchiyaaga) இருக்குற கோஷ்டி..

கோல்கப்பா : ஹாஹாஹா..யாரு நல்ல ஸ்கோரு வாங்குறாங்களோ இல்லியோ..என் ஸ்வீட்டி, நீ ஸ்கோர் பண்ணிட்ட போ! மக்களே, இந்த ஜோக் நல்லா இருக்கும்னு எங்களுக்கே தெரியும்..அதனால முடிஞ்சவரைக்கும் உங்க கோஷ்டிகளுக்கு ஷேர் பண்ணுங்க. Bye!

Cartoon – May the 4th be with you!

A Star Wars-inspired political cartoon showing three Indian political leaders as futuristic characters, each representing different forces during election result day on May 4, with glowing energy beams, a “mandate” orb, and a crowd symbolizing voters below.

மக்களே, “May the Fourth be with you” என்பது, Star Wars படத்தின் “May the Force be with you” என்ற புகழ்பெற்ற வசனத்தின் வார்த்தை விளையாட்டு. மேலும் May 4th உலகம் முழுவதும் Star Wars Day ஆக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு, அதே மே நான்காம் தேதி தான் தமிழகத்தில் தேர்தல் முடிவு வெளியாகும் நாள்!

தேர்தல் களத்தில், மூன்று அரசியல் நட்சத்திரங்களின் மோதல்.

அதனால் அரசியல் அரங்கமே ஒரு “Star War” போல காட்சியளிக்கிறது!

இப்போது நம் எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி – மக்கள் ஆதரவு யாருக்கு? இறுதியில் ஜெயிப்பது யார்?நாளை பார்க்கலாம்!

இந்த சுவாரஸ்யமான coincidence உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர் குழுக்களுக்கு பகிருங்கள். நன்றி!

Tamil parody song – எண் ஒன்று கண்டேன்!

Arch rivals in Tamil Nadu politics

மக்களே, Exit polls ரிசல்ட்டை பாத்து மண்டை காய்ஞ்சு போச்சா? ஹிஹிஹி ..நம்மள மாதிரி தான் கட்சிக்காரர்களும் இருக்காங்க…அவங்க படுற பாடு தான் இந்த பாட்டு…படிச்சி என்ஜாய் பண்ணுங்க…Bye!


தவெக : எண் ஒன்று கண்டேன்,
பொருள் அங்கு இல்லை!
என்னென்று நான் சொல்லலாகுமா?

திமுக : என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
தீ ஒன்று கண்டேன்,
Fire காண வில்லை!

தவெக : ஏனென்று நான் சொல்லலாகுமா?

திமுக :ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

தவெக : களமாடும் வியூகம்,
நவநாகரீகம்!

Loud ஆன சின்னம்,
Proud ஆக வெல்லும்!

திமுக : நடமாடும் செல்வம்,
பகட்டான பிம்பம்!

பழங்காலச் சின்னம்,
கிழக்கால மின்னும்!

தவெக : அன்பை அள்ளி தரும்,
பயண உலா!
துள்ளி வரும் இணைய நிலா!

திமுக : துவண்டு விழும்,
பொடி நடையால்!
துவண்டு விழும், பொடி நடையால்!

தவெக : விசிலோடு மகிழ்ந்தாடும்,
எண் அந்த எண்ணல்லவோ!

தவெக : வந்தேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : நின்றேன்

திமுக : ஹ்ம்ம்

ஆண் : வென்றேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : எண் ஒன்று கண்டேன்,
பொருள் அங்கு இல்லை!
என்னென்று நான் சொல்லலாகுமா?

திமுக : என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

தவெக : நான் பார்த்த எண்ணை,
நீ பார்க்க வில்லை!

நீ பார்த்த எண்ணை,
நான் பார்க்க வில்லை!

நீ பார்த்த எண்ணை,
நான் பார்க்க வில்லை!

திமுக : உன் பார்வை போலே,
என் பார்வை இல்லை!

நான் ஆண்ட ஆட்சி,
நீ காண வில்லை!

நான் கொண்ட மாட்சி,
நீ காண வில்லை!

தவெக : என் வழியில்,
நீ இருந்தாய்!
என் பழியில், நீ இருந்தாய்!

திமுக : உன் வடிவில்,
நான் இருந்தேன்!
என் உழைப்பில், நான் வளர்ந்தேன்!

தவெக : நீ இன்றி நான் இல்லை,
நான் இருந்தால் நீ இல்லை!

தவெக : வந்தேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : நின்றேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : வென்றேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : எண் ஒன்று கண்டேன்,
பொருள் அங்கு இல்லை!
என்னென்று நான் சொல்லலாகுமா?

திமுக : தீ ஒன்று கண்டேன்,
Fire காண வில்லை!

தவெக : ஏனென்று நான் சொல்லலாகுமா?

திமுக : ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?