
Cartoon – Is it just a coincidence?




மக்களே..தாய் கிழவி படத்துல வர்ற ஒரு காட்சியை உதாரணமாக கொண்டு, தவெக தொண்டர்களின் இன்றைய மனநிலைய பிரதிபலிக்கும் ஒரு பதிவு இது..படித்து பாருங்கள்..உங்களுக்கு பிடித்திருந்தால், நண்பர்களுடன் பகிருங்கள்..நன்றி!
மாற்று கட்சிகள் : ஏண்டி சுருளி, மே நாலாம் தேதி எலெக்க்ஷன் ரிசல்ட் வருது..உங்க புது கட்சிக்கு என்ன ஆகும்னு எங்களுக்கு இருக்குற பயம் துளி கூட உனக்கு இல்ல? உன் பாட்டுக்கு உக்காந்து வேலைய பாத்துகிட்டு இருக்க?
சுருளி : கட்சிக்காரங்க காச குடுத்துட்டு எங்களுக்கு ஓட்டு போடுன்னு சொல்லும்போது, அரசியல்னா அப்டி தான் இருக்கும்..காசு குடுக்குற கட்சிக்கு ஒட்டு போடு அப்டீன்னு நீங்க எல்லாம் சொன்னீங்க..
தவெக மட்டும் தான் அவங்க ஏன் உன் ஓட்ட வேலை குடுத்து வாங்கணும்? நாலு நல்லது கேட்டது தெரிஞ்சிக்கிட்டு, நீயே முடிவெடுன்னு சொல்லுச்சு..
தவெக அது ஜெயிக்க என்ன மாதிரி ஆளுங்களோட சினிமா மோகத்த பயன்படுத்தி கூட்டம் சேக்குதுன்னு ஊர்க்காரங்க எல்லாம்னுநெனச்சிகிட்டு இருக்காங்க..
ஆனா நெசத்துக்கு, தவெக என்ன மாதிரி பெண்களுக்கு பொது ஊடகங்கள்ல வர்ற செய்தில உண்மையெது, பொய்யெதுன்னு பாக்க வெச்சுது..
நான் முன்னாடி அரசியல்னா என்னன்னே தெரியாம இருந்தவ. தேர்தல் வந்தா மட்டும் ஓட்டு போடுவேன்.. அதுவும் வீட்ல யாருக்கு சொல்றாங்களோ பரம்பரை பரம்பரையா அவங்களுக்கு போடுவோம். எதுக்குன்னு கேள்வியே கேக்க மாட்டோம்.
ஆனா இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டேன். ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தப்போ, நாங்க எல்லாரும் ஆவலா பாத்தோம். ஆரம்பத்துல அது வெறும் ‘ஆர்வம்’ மட்டும் தான்… ஆனா அந்த ஆர்வம் சுத்தி நடக்குறத பாக்க கத்து குடுத்திச்சு..
இப்போ எனக்கு தெரியும் – வேட்பாளர் யாரு? எந்த கட்சி என்ன சொல்லுது? அவுங்க நம்ம வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்துவாங்க? தேர்தல் வாக்குறுதின்னா என்ன? அது காகிதத்துல மட்டும் இருக்குதா, இல்ல நிஜமாவே நடக்குதா? இதெல்லாம் கவனிக்க ஆரம்பிச்சேன்.
இப்போ எம்மனசுல ஒரு தைரியம் இருக்கு..ஒதுங்கி இருக்காம களப்பணில ஈடுபடுறேன்..இந்த தேர்தல்ல பூத் ஏஜெண்டா போய் மொத தடவையா ஒக்காந்தேன்..ஏதோ ஒண்ண புதுசா கத்துக்கிட்டேன்..நாலு ஜனங்களோட மரியாதையா சம்பாதிச்சேன்…சின்ன வேலைன்னாலும் என் கடமையை நிறைவா செஞ்சேன்…
இதையெல்லாம் நான் என் மகளுக்கும் நான் சொல்லிக்கொடுப்பேன்..தேர்தல் களம்னா தள்ளி நிக்க தேவையில்ல..அதுவும் நம்ம தெருவுல, நம்ம ஊர்ல நடக்குற ஒரு நல்ல விஷயம்னுன்னு…
தவெகாவை எங்களை மாதிரி ஆளுங்கள தவிர மத்தவங்க சரியா புரிஞ்சிக்கல..அதுவும் எல்லார்கிட்டயும் இதை எதிர்பாக்கலை..இந்த கட்சி ஜெயிச்சாலும் சரி, தோத்தாலும் சரி…அது வந்தால நடந்த மாற்றங்களை யாராலயும் இனிமே திருப்பி போட முடியாது!
ரொம்ப கஷ்டப்பட்டுருச்சி..ஆட்சிக்கு வந்தா வரட்டும்..இல்லாட்டி பட்டு தெளிஞ்சு, அடுத்த தடவை வர வைப்போம்…

கோல்கப்பா : என்ன டார்லிங், இந்த படத்துக்கு மாலை போட்டிருக்க?
பூரி குமாரி : அது போயி இன்னையோட ஒரு வாரம் ஆச்சுங்க!!
கோல்கப்பா : ஆமா, ஸ்டார்ட்டப் கட்சி ஆளுங்க இதை சொல்லி தானே கூவிகிட்டு இருந்தாங்க?
பூரி குமாரி : ஆமாங்க, அந்த கூத்த தான் நாலு மாசமா பாத்தோமே…
கோல்கப்பா : இந்நேரம் மஞ்சா பஸ்ஸு, சந்து பொந்தெல்லாம் பறக்க வேணாமா?
பூரி குமாரி : அட போங்க கோல்! இந்த பட்ட படிச்சி பாருங்க, விசில் பாய்ஸ் கோஷ்டி படுற கஷ்டம் புரியும்!
கோல்கப்பா : மக்களே, நம்ம பூரி லேடி மண்டைலேர்ந்து வந்திருக்க இந்த பாட்டை படிச்சி என்ஜாய் பண்ணுங்க!! Bye!!

மாரல் கோடு வந்துடுச்சி!
SOPயும் போயிடுச்சி!!
பஸ்ஸு இன்னும் கெளம்பலியே?
அதுவும் ஏனோ புரியலையே??
மாரல் கோடு வந்துடுச்சி!
SOPயும் போயிடுச்சி!!
பஸ்ஸு இன்னும் கெளம்பலியே?
அதுவும் ஏனோ புரியலையே??
மாரல் கோடு வந்துடுச்சி!
SOPயும் போயிடுச்சி!!
பஸ்ஸு இன்னும் கெளம்பலியே?
அதுவும் ஏனோ புரியலையே??
விசிலு நெசக் குரலு,
அண்ணன் மனமசலு!
ஊர் கோலம் போவது
எப்போது?
அசலு இளம் பவரு,
அண்ணன் கவி கசலு!
சுருதி கேக்கும் லேட்டாவே!
சுருங்கி கேக்கும் லேட்டாவே!!
ஒண்ண எண்ணி நானே,
உள்ளம் வாடி போனேன்!
சின்ன பசங்க தானே,
என் அண்ணனே, என் அண்ணனே!
ஒத்தயில நம்ம கட்சி,
ஒன்ன நம்பி சுத்தும் பட்சிஸ்!
பிளானு ஒண்ணும் காணலையே?
காலம் நேரம் பத்தலையே!!
மாரல் கோடு வந்துடுச்சி!
SOPயும் போயிடுச்சி!!
பஸ்ஸு இன்னும் கெளம்பலியே?
அதுவும் ஏனோ புரியலையே??
அண்ணன் லிஸ்ட விட்டு,
நெதமும் தெறிக்க விட்டு,
போனா… கூட்டம் கூடாதா?
நாளும் அலஞ்சி திரிஞ்சு,
நாமும் ஓட்டு கேட்டு,
போகும் காலம் வாராதா?
அண்ணன் காதில் ஏறாதா??
நேரங்காலம் விரயம்!
நெஞ்சுக்குள்ள பாரம்!!
மேலும் மேலும்
குறையும்,
நம்ம நேரந்தான்,
நம்ம நேரந்தான்!!
ஒண்ண நம்பி,
மொட்டு விட்டேன்!
களத்தில் கால,
எடுத்து வச்சேன்!
இஷ்ட பட்ட,
இளமீசை பச்சான்ஸ்!
நம்ம ஏன்தான்,
காக்க வச்சார்?
மாரல் கோடு வந்துடுச்சி!
SOPயும் போயிடுச்சி!!
பஸ்ஸு இன்னும் கெளம்பலியே?
அதுவும் ஏனோ புரியலையே??

கோல்கப்பா: கொஞ்ச நாளைக்கு முன்னாடி நாம சொன்ன statement தப்பாயிடுச்சு டார்லிங்!
பூரிகுமாரி : என்னங்க சொல்றீங்க?
கோல்கப்பா: “முட்டு குடுப்பவர்கள் கெட்டு போவதில்லை”ன்னு சொன்னோம். ஞாபகம் இருக்கா?
பூரிகுமாரி : ஆமாங்க, இப்போ ஸ்டார்ட்டப் கட்சி தோழர்களோட நெலமைய பத்தி சொல்றீங்களா கோல்?
கோல்கப்பா: என்னத்த சொல்ல? புண்பட்ட மனச பொலம்பி தான் ஆத்திக்கணும் போல இருக்கு!
பூரிகுமாரி : இதுல ஹைலையிட்டே நம்ம டாக்டர் பேசினது தான்! மக்களே, டைம் இருந்தா இவங்க சொல்றத கேட்டு யோசிச்சு பாருங்க!

பூரிகுமாரி : Meanwhile, ஆட்டோகிராப் படத்துல வர்ற ஒரு பாட்டை, நம்ம கோல்கப்பா மாதிரி ஆளுங்களுக்காக, கொஞ்சம் மாத்தி எழுதி இருக்கேன்! படிச்சி enjoy பண்ணுங்க! Bye!!
நம்பிக்கைகள் நெஞ்சினில் புதைந்ததினால்,
எதிர்பார்ப்பை எந்தன் நெஞ்சில் குறைக்கின்றேன்!
உன் உருவம் நேர்மையென பதிந்ததினால்,
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு முழிக்கின்றேன்!
நண்பன் நண்பியெல்லாம் சுற்றி திரிய,
ஆதரவை காகிதமாய் தூக்கி எரிய,
அண்ணா உன்னால் முடிகிறதா?
என்னால் ஏனோ முடியவில்லை!
எனக்கே எனக்கே, உன்னை புரியவில்லை,
காரணம் கேட்கும் எண்ணமுமில்லை!!
நம்பிக்கைகள் நெஞ்சினில் புதைந்ததினால்,
எதிர்பார்ப்பை எந்தன் நெஞ்சில் குறைக்கின்றேன்!
உன் உருவம் நேர்மையென பதிந்ததினால்,
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு முழிக்கின்றேன்!
காத்திருந்து காத்திருந்து பழகியவன்!
நீ என்னை வழி நடத்தும், ஒரு நொடிக்காக,
காத்திருந்து காத்திருந்து பழகியவன்!
இஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு பேசியவன்!
நீ எந்தன் நாடாள, உன் வாய்மொழியை,
இஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு பேசியவன்!
இன்ஸ்டா எல்லாம் Paid posttu,
எனை குறுகி போக வைக்கிறதே!
கமெண்டுகள் எல்லாம் ரணமாகி,
என் கவனத்தை கூட சிதைக்கிறதே!
Decode பண்ண முடியவில்லை!
உன்னை நேசிக்கும் மண்ணில் பதருமில்லை!
எனக்கே எனக்கே உன்னை புரியவில்லை,
காரணம் கேட்கும் எண்ணமுமில்லை!!
நம்பிக்கைகள் நெஞ்சினில் புதைந்ததினால்,
எதிர்பார்ப்பை எந்தன் நெஞ்சில் குறைக்கின்றேன்!
உன் உருவம் நேர்மையென பதிந்ததினால்,
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு முழிக்கின்றேன்!
நண்பன் நண்பியெல்லாம் சுற்றி திரிய,
ஆதரவை காகிதமாய் தூக்கி எரிய,
அண்ணா உன்னால் முடிகிறதா?
என்னால் ஏனோ முடியவில்லை!
எனக்கே எனக்கே உன்னை புரியவில்லை,
காரணம் கேட்கும் எண்ணமுமில்லை!!

கோல்கப்பா: ஏம்மா, நம்ம வீட்டுக்கு வெளில ஏதோ சத்தம் கேக்குதே? போய் பாத்துட்டு வாம்மா.
(சில நிமிடங்களுக்கு பிறகு பதட்டத்தோடு ஓடி வருகிறார் பூரி குமாரி)
பூரி குமாரி: ஏங்க, உங்கள தேடி நெறய ஆளுங்க வந்திருக்காங்க, வாங்க வெளில வந்து பாருங்க.
கோல்கப்பா: என்ன தேடியா?
பூரி குமாரி: உங்களத்தாங்க! “கோல்கப்பா….கோல்கப்பான்னு” ஒரே கூச்சலா இருக்கு.
கோல்கப்பா: சரி வா, போய் பாக்கலாம்.
(இருவரும் வீட்டுக்கு வெளியில் வந்து ஆட்களை சந்திக்கிறார்கள். முன் வரிசையில் இருந்த ஒருவர் கோல்கப்பாவிடம் வந்து பேசுகிறார்)
முதல் மனிதர்: சார், நீங்க கொள்கைப்பா தானே? உங்களை தான் நாங்க தேடிகிட்டு இருக்கோம்.
(கோல்கப்பா புரியாமல் முழிக்கிறார்)
கோல்கப்பா: என்ன ஏம்பா தேடுறீங்க?
முதல் நபர் : சார், எங்க கட்சிக்கு கொள்கை பிடிப்புள்ள ஆளுங்க வேணும். இந்த ஏரியால விசாரிச்சா உங்கள பத்தி சொன்னாங்க. நீங்க கொள்கைப்பாவாமே? நீங்க எங்க கட்சிக்கு வந்துட்டீங்கனா, எங்களை யாரும் கொள்கை இல்லாதவங்கன்னு சொல்ல முடியாது!!!
கோல்கப்பா: யோவ், நா கொள்கைப்பா இல்ல? கோல்கப்பா!!!
முதல் நபர் : சார், உங்க பேர ஸ்டைலா சொல்லி பாருங்க! நீங்க கொள்கைப்பான்னு நீங்களே நம்பிடுவீங்க!
இரண்டாம் நபர் : சார், நீங்க எங்க கட்சிக்கு வந்துட்டீங்கனா, எங்க கிட்டயும் கொள்கை இருக்குக்குனு நாங்களும் ஸ்டைலா சொல்லிக்குவோம்.
கோல்கப்பா: ஸ்ஸ்ஸ்ஸ்…ஸ்ஸுப்பா…யோவ் தமிழ ஒழுங்கா படிங்கைய்யா, நா கொள்கைப்பா இல்ல! கோல்கப்பா, கோல்கப்பா, கோல்கப்பா!!!
முதல் நபர் (சத்தமாக கத்துகிறார்) : தலைவர் கொள்கைப்பா வாழ்க! தலைவர் கொள்கைப்பா வாழ்க!
(கூடி இருக்கும் மக்களும் கோஷம் எழுப்புகிறார்கள். பூரி குமாரி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நேசப்பா காதருகே போய் பேசுகிறார்)
பூரி குமாரி: ஏங்க, நம்மளே தள்ளு வண்டி கோஷ்டி! நம்மள தூக்கி வாலண்டரியா அவுங்க வண்டில ஏத்த பாக்குறாங்க?
கோல்கப்பா: இரு, எப்படியாவது பேசி இவுங்ககிட்டேயிருந்து தப்பிக்கலாம்.
முதல் நபர் : இப்பவே என்னோட வாங்க. நான் தான் எங்க கட்சி தலைவரோட மனசாட்சி! உங்கள பத்தி அவர்கிட்ட சொல்லி நல்ல போஸ்டிங் வாங்கி தரேன்!
பூரி குமாரி: கோல், இவன் சொல்றத நம்பாதீங்க! இவன் சரியான பிறழ்சாட்சி பார்ட்டி!
கோல்கப்பா: ஓஒ, அது எப்படி உனக்கு தெரியும்?
(பூரி குமாரி கடுப்பாகி முறைக்கிறார்)
இரண்டாம் நபர் : சார், நீங்க முப்பது வருஷ பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர்னு கேள்விப்பட்டோம். நீங்க கண்டிப்பா எங்க கட்சில வந்து சேரணும் சார்!
கோல்கப்பா: யோவ், நா முப்பது வருஷ பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரன் இல்ல! பொதுமக்கள் வாய்க்கு சொந்தக்காரன்!! என்ன விட்டுருங்கய்யா.
(கூட்டத்தில் இருந்து ஒருவர் முன்னே வந்து ஆவேசமாக பேசுகிறார்)
மூன்றாம் நபர் : உண்மைத் தலைவன் ஒரு நாள் வீதிக்கு வந்தே தீருவார்! நீங்கள் மக்கள் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும்.
(கோல்கப்பா சோர்வாகி விடுகிறார்)
கோல்கப்பா: யோவ்வ், வாயில நல்லா வருது எனக்கு! நான் இத்தனை வருஷமா வீதி ஓரமா தான்யா இருக்கேன். இப்போதான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா?
இரண்டாம் நபர் : நீங்க நல்லா வியூகம் அமைப்பீங்கன்னு பேசிக்குறாங்க, வாங்க சார் நம்ம கட்சிக்கு!
பூரி குமாரி : ஏங்க, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல இவருக்கே View கம்மிங்க!! இவரு எங்கங்க உங்களுக்கு வியூகம் அமைக்குறது?
மூன்றாம் நபர் : கொள்கைப்பா, rugged ஆனா ஆளுன்னு ஜனங்க சொல்றாங்க?
கோல்கப்பா: யோவ், நா ரகடா பூரிய்யா! என்ன உட்டுருங்கய்யா…
முதல் நபர் : எங்க கட்சில ரெண்டாம் கட்ட தலைவர்கள் இல்லன்னு குறை சொல்றாங்க. நீங்க தான் களப்பணி புலின்னு கேள்விப்பட்டோம். உங்கள கட்சில சேக்காம விடமாட்டோம்…வாங்க சார்.
பூரி குமாரி : ஏங்க, இவரு களப்பணி புலியெல்லாம் இல்லேங்க. இவரு புளித்தண்ணி கலக்குறவர்!!ஹீஹீஹ்ஹீ….

(கொல்லென்று சிரித்தபடியே பூரி குமாரி சொல்ல, கோல்கப்பா அவமானத்தில் முறைக்கிறார்)
பூரி குமாரி : நல்லா கேட்டுக்குங்க, கொஞ்சம் ஸ்வீட் பாணி, கொஞ்சம் ஹாட் பாணின்னு இவரே ஒரு ரெண்டுங்கெட்டான் ஆளு! இவரை போய் ரெண்டாம் கட்ட தலைவர் ரேஞ்சுக்கு சொல்றீங்க!
கோல்கப்பா: எவ்வளவு நாள் வஞ்சம்டி உனக்கு, என்ன இப்படி கழுவி ஊத்துற?
பூரி குமாரி : இவங்க கிட்டேருந்து நீங்க தப்பிக்கணும்னா இப்படி தாங்க சொல்லணும். இல்லேன்னா அப்புறம் ஊரே உங்கள கழுவி ஊத்தும். இப்போ எப்படி மடை மாத்துறேன்னு பாருங்க!
(பூரி குமாரி தொண்டையை செருமியபடியே கூட்டத்தை நோக்கி பேசுகிறார்)
பூரி குமாரி : இவரை கட்சில சேத்தீங்கன்னா, உங்க கட்சில பேரளவுலதான் கொள்கை இருக்குன்னு சொல்லுவாங்க.!! கொள்கைப்பான்னு ஒருத்தர் கட்சில இருக்குறதால வர போற இந்த கெட்ட பேர் உங்களுக்கு தேவையா? நல்லா யோசிங்க!!
கோல்கப்பா (ரகசியமாக): அடிப்பாவி, மண்டைய கழுவுறதுல நீ இவ்ளோ எக்ஸ்பர்ட்டா!!
முதல் நபர் (யோசிக்கிறார்): ஆமாம், அப்போ நாங்க கொள்கைக்கு என்ன பண்றது?
பூரி குமாரி : கொள்கைய தூக்கி கெடப்புல போடுங்க. நீங்க தான் உங்க பாக்கெட்ல மக்கள் சேவைன்னு ஒரு மேட்டர வச்சுருக்கீங்களே, அத பத்தி யோசிங்க!!
இரண்டாம் நபர் : இப்போவே நவம்பர் வந்துடுச்சி. அடுத்த ஏப்ரலுக்குள்ள சேவைய எங்க போய் நாங்க கண்டுபுடிக்குறது?
(கோல்கப்பா மண்டையில் பல்பு எரிகிறது)

கோல்கப்பா: இவ தான் சேவ்பூரி. உங்களுக்கு தோதான ஆளு. “மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு” உருட்ட உங்களுக்கும் வசதியா இருக்கும்.
கோல்கப்பா: இதுல டாப்பா ஒரு விஷயம் இருக்கு! உங்க கிட்ட தத்தி இருக்கு, எங்க கிட்ட தஹி சேவ்பூரி இருக்குன்னும் நீங்க பீத்திக்கலாம்!!!
(“தங்கத் தலைவி, தானைத் தலைவி சேவ்பூரி வாழ்க” என கூட்டம் ஆர்ப்பரிக்கிறது)
முதல் நபர் :ஹாஹாஹா, சார் அட்டகாசமான மேட்டர் சார் இது. நீங்க Quote தலன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க சார்!!!
கோல்கப்பா: உங்க கிட்ட மூணு அட்டகாசமான தலைங்க இருக்காங்க! என்ன ஆள விடுங்கடா சாமி!!

கோல்கப்பா: மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!! Bye!!

பூரி குமாரி : நாட்டு நடப்பு எப்படி இருக்குங்க? இன்னைக்கு breaking news என்ன?
கோல்கப்பா : இப்ப வர்றது எல்லாம் breaking news இல்ல! Freaking and tweaking news!
பூரி குமாரி : அப்போ வர்ற செய்தியில பொய் எது, உண்மை எதுன்னு எப்புடிங்க கண்டுபுடிக்கிறது?
கோல்கப்பா : செய்தி ஊடகங்களை மட்டும் கண்மூடித்தனமா பாலோ பண்ணி இப்போ நடக்குற பாலிடிக்ச மக்கள் புரிஞ்சிக்க கூடாது.
பூரி குமாரி : என்னங்க சொல்றீங்க?
கோல்கப்பா : ஆமாடி, பொது வெளியில் வரும் செய்திகள் அனைத்தும், நமக்கு உண்மையை நேரடியாக சொல்லாது. நாம தான் ஒவ்வொரு நிகழ்வையும் பகுத்து பார்த்து முடிவெடுக்கணும்.
பூரி குமாரி : தெளிவா சொல்லுங்க கோல்.
கோல்கப்பா : சொல்றேன் கேளு, அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வார்த்தையையும், நகர்வையும், செயலையும் மக்கள் நுட்பமாக கவனிக்கணும். நடப்பு விபரங்களை நிதானித்து ஆராய்ந்தால் மட்டுமே, உண்மையை புரிந்து கொண்டு அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முடியும்.
பூரி குமாரி : ஏங்க, இவ்ளோ சீரியஸா பேசுறீங்க? மக்களுக்கு புரியற மாதிரி ஒரு எக்ஸாம்பிளோட சொல்லுங்க!
கோல்கப்பா : இப்போ பாரு, ஆளும் கட்சி கடந்த காலங்கள்ல ஜெயிக்க குறிப்பிட்ட “மூணு எழுத்து” உதவி இருக்கு!
பூரி குமாரி : அது என்னங்க மூணு எழுத்து?
கோல்கப்பா : TVI – டெலிவிஷன் இலவசம், தகுதி வாய்ந்த இல்லத்தரசி என நல திட்டங்கள்( TeleVision Ilavasam, Thaguthi Vaindha Illatharasi)


பூரி குமாரி : 2026ல “TVI”னா என்னங்க?
கோல்கப்பா : வேறென்ன? தலைமைக்கு வருகிறார் இளவரசர் தான்! (Thalaimaikku Varugiraar Ilavarasar)

பூரி குமாரி : அட ஆமாங்க. அப்போ 2026லயும் “TVI” ஆளுங்கட்சிக்கு உதவுமா?
கோல்கப்பா : எனக்கு தெரியல குமாரி, பொறுத்திருந்து தான் பாக்கணும்!
பூரி குமாரி : கரெக்ட்டுங்க. தீதும் நன்றும் பிறர் தர வாரா! (Theedhum Nandrum Pirar Thara Vaaraa)
கோல்கப்பா : முடிஞ்ச்! கலக்கிட்ட போ! இப்படி தான் ஜனங்க யோசிக்கணும்!
பூரி குமாரி : ஜனங்க யோசிக்கிறது இருக்கட்டும். இந்த அஞ்சு எழுத்து (TNPTV) உங்களுக்கு என்ன செய்தி சொல்லுதுனு யோசிங்க கோல்!
கோல்கப்பா : ஹா, கண்டுபுடிச்சுட்டேன்! தமிழ் நாடு புதிய தலைவரை வரவேற்கிறது! (TamilNadu Puthiya Thalaivarai Varaverkiradhu)
பூரி குமாரி : நீங்க பாஸாய்ட்டிங்க கோல்கப்பா! இப்போ புது கட்சிக்காக நான் சில TVI பாயிண்டுங்களை சொல்லட்டுமா ?
கோல்கப்பா : Come on, சொல்லு டார்லிங்!
பூரி குமாரி :
தேறி வாருங்கள் இளைஞரே!
தெளிந்து வாருங்கள் இரும்பாக!
தொலைக்காட்சி விவாதங்களெல்லாம் இரைச்சலே!
தீய வஞ்சகர்களுக்கு இரையாகாதீர்கள்!
துளிர்த்து வளர்பவர்களை இருட்டடிப்பார்கள்!
தனிமனித விமர்சனங்களில் இங்கிதமிருக்காது!
தொடர் ஓட்டத்தில் இளைப்பாறுதலில்லை!
தந்திரக்காரர்களை வேரறுக்க இயங்குங்கள்!!
(Theri Vaarungal Ilaignare
Thelindhu Vaarungal Irumbaaga
Tholaikaatchi Vivaadhangalellam Iraichchale
Theeya Vanjagargalukku Iraiyaagadheergal
Thulirthu Varubavargalai Iruttadipaargal
Thanimanidha Vimarsanangalil Inghithamirukkaadhu
Thodar Vottathil Ilaipaarudhalillai
Thandhirakaaragalai Verarukka Iyangungal)
கோல்கப்பா : அட அட அடடா! கலக்குறியே கண்ணம்மா!
பூரி குமாரி : பாராட்டு இருக்கட்டும்! இன்னைக்காவது எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க!
கோல்கப்பா : நானே எழுதுனா உன் கிட்ட உதை தான் வாங்குறேன். அதனால பாரதியார் எழுதுனதை உனக்கு டெடிகேட் பண்றேன்!
நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா…
பூரி குமாரி : அருமை! அருமை! அருமைங்க!
கோல்கப்பா : மக்களே! நமக்கும் “தீதும் நன்றும் பிறர் தர வாரா”! அதனால “Twisted Narrative Propaganda TV” செய்திகளை மட்டும் நம்பி தேர்தல்ல ஓட்டு போடாதீங்க! Bye!