
மக்களே..தாய் கிழவி படத்துல வர்ற ஒரு காட்சியை உதாரணமாக கொண்டு, தவெக தொண்டர்களின் இன்றைய மனநிலைய பிரதிபலிக்கும் ஒரு பதிவு இது..படித்து பாருங்கள்..உங்களுக்கு பிடித்திருந்தால், நண்பர்களுடன் பகிருங்கள்..நன்றி!
மாற்று கட்சிகள் : ஏண்டி சுருளி, மே நாலாம் தேதி எலெக்க்ஷன் ரிசல்ட் வருது..உங்க புது கட்சிக்கு என்ன ஆகும்னு எங்களுக்கு இருக்குற பயம் துளி கூட உனக்கு இல்ல? உன் பாட்டுக்கு உக்காந்து வேலைய பாத்துகிட்டு இருக்க?
சுருளி : கட்சிக்காரங்க காச குடுத்துட்டு எங்களுக்கு ஓட்டு போடுன்னு சொல்லும்போது, அரசியல்னா அப்டி தான் இருக்கும்..காசு குடுக்குற கட்சிக்கு ஒட்டு போடு அப்டீன்னு நீங்க எல்லாம் சொன்னீங்க..
தவெக மட்டும் தான் அவங்க ஏன் உன் ஓட்ட வேலை குடுத்து வாங்கணும்? நாலு நல்லது கேட்டது தெரிஞ்சிக்கிட்டு, நீயே முடிவெடுன்னு சொல்லுச்சு..
தவெக அது ஜெயிக்க என்ன மாதிரி ஆளுங்களோட சினிமா மோகத்த பயன்படுத்தி கூட்டம் சேக்குதுன்னு ஊர்க்காரங்க எல்லாம்னுநெனச்சிகிட்டு இருக்காங்க..
ஆனா நெசத்துக்கு, தவெக என்ன மாதிரி பெண்களுக்கு பொது ஊடகங்கள்ல வர்ற செய்தில உண்மையெது, பொய்யெதுன்னு பாக்க வெச்சுது..
நான் முன்னாடி அரசியல்னா என்னன்னே தெரியாம இருந்தவ. தேர்தல் வந்தா மட்டும் ஓட்டு போடுவேன்.. அதுவும் வீட்ல யாருக்கு சொல்றாங்களோ பரம்பரை பரம்பரையா அவங்களுக்கு போடுவோம். எதுக்குன்னு கேள்வியே கேக்க மாட்டோம்.
ஆனா இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டேன். ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தப்போ, நாங்க எல்லாரும் ஆவலா பாத்தோம். ஆரம்பத்துல அது வெறும் ‘ஆர்வம்’ மட்டும் தான்… ஆனா அந்த ஆர்வம் சுத்தி நடக்குறத பாக்க கத்து குடுத்திச்சு..
இப்போ எனக்கு தெரியும் – வேட்பாளர் யாரு? எந்த கட்சி என்ன சொல்லுது? அவுங்க நம்ம வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்துவாங்க? தேர்தல் வாக்குறுதின்னா என்ன? அது காகிதத்துல மட்டும் இருக்குதா, இல்ல நிஜமாவே நடக்குதா? இதெல்லாம் கவனிக்க ஆரம்பிச்சேன்.
இப்போ எம்மனசுல ஒரு தைரியம் இருக்கு..ஒதுங்கி இருக்காம களப்பணில ஈடுபடுறேன்..இந்த தேர்தல்ல பூத் ஏஜெண்டா போய் மொத தடவையா ஒக்காந்தேன்..ஏதோ ஒண்ண புதுசா கத்துக்கிட்டேன்..நாலு ஜனங்களோட மரியாதையா சம்பாதிச்சேன்…சின்ன வேலைன்னாலும் என் கடமையை நிறைவா செஞ்சேன்…
இதையெல்லாம் நான் என் மகளுக்கும் நான் சொல்லிக்கொடுப்பேன்..தேர்தல் களம்னா தள்ளி நிக்க தேவையில்ல..அதுவும் நம்ம தெருவுல, நம்ம ஊர்ல நடக்குற ஒரு நல்ல விஷயம்னுன்னு…
தவெகாவை எங்களை மாதிரி ஆளுங்கள தவிர மத்தவங்க சரியா புரிஞ்சிக்கல..அதுவும் எல்லார்கிட்டயும் இதை எதிர்பாக்கலை..இந்த கட்சி ஜெயிச்சாலும் சரி, தோத்தாலும் சரி…அது வந்தால நடந்த மாற்றங்களை யாராலயும் இனிமே திருப்பி போட முடியாது!
ரொம்ப கஷ்டப்பட்டுருச்சி..ஆட்சிக்கு வந்தா வரட்டும்..இல்லாட்டி பட்டு தெளிஞ்சு, அடுத்த தடவை வர வைப்போம்…