Tamil parody song – எண் ஒன்று கண்டேன்!

Arch rivals in Tamil Nadu politics

மக்களே, Exit polls ரிசல்ட்டை பாத்து மண்டை காய்ஞ்சு போச்சா? ஹிஹிஹி ..நம்மள மாதிரி தான் கட்சிக்காரர்களும் இருக்காங்க…அவங்க படுற பாடு தான் இந்த பாட்டு…படிச்சி என்ஜாய் பண்ணுங்க…Bye!


தவெக : எண் ஒன்று கண்டேன்,
பொருள் அங்கு இல்லை!
என்னென்று நான் சொல்லலாகுமா?

திமுக : என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
தீ ஒன்று கண்டேன்,
Fire காண வில்லை!

தவெக : ஏனென்று நான் சொல்லலாகுமா?

திமுக :ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

தவெக : களமாடும் வியூகம்,
நவநாகரீகம்!

Loud ஆன சின்னம்,
Proud ஆக வெல்லும்!

திமுக : நடமாடும் செல்வம்,
பகட்டான பிம்பம்!

பழங்காலச் சின்னம்,
கிழக்கால மின்னும்!

தவெக : அன்பை அள்ளி தரும்,
பயண உலா!
துள்ளி வரும் இணைய நிலா!

திமுக : துவண்டு விழும்,
பொடி நடையால்!
துவண்டு விழும், பொடி நடையால்!

தவெக : விசிலோடு மகிழ்ந்தாடும்,
எண் அந்த எண்ணல்லவோ!

தவெக : வந்தேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : நின்றேன்

திமுக : ஹ்ம்ம்

ஆண் : வென்றேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : எண் ஒன்று கண்டேன்,
பொருள் அங்கு இல்லை!
என்னென்று நான் சொல்லலாகுமா?

திமுக : என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

தவெக : நான் பார்த்த எண்ணை,
நீ பார்க்க வில்லை!

நீ பார்த்த எண்ணை,
நான் பார்க்க வில்லை!

நீ பார்த்த எண்ணை,
நான் பார்க்க வில்லை!

திமுக : உன் பார்வை போலே,
என் பார்வை இல்லை!

நான் ஆண்ட ஆட்சி,
நீ காண வில்லை!

நான் கொண்ட மாட்சி,
நீ காண வில்லை!

தவெக : என் வழியில்,
நீ இருந்தாய்!
என் பழியில், நீ இருந்தாய்!

திமுக : உன் வடிவில்,
நான் இருந்தேன்!
என் உழைப்பில், நான் வளர்ந்தேன்!

தவெக : நீ இன்றி நான் இல்லை,
நான் இருந்தால் நீ இல்லை!

தவெக : வந்தேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : நின்றேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : வென்றேன்

திமுக : ஹ்ம்ம்

தவெக : எண் ஒன்று கண்டேன்,
பொருள் அங்கு இல்லை!
என்னென்று நான் சொல்லலாகுமா?

திமுக : தீ ஒன்று கண்டேன்,
Fire காண வில்லை!

தவெக : ஏனென்று நான் சொல்லலாகுமா?

திமுக : ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

வந்தா வரட்டும், இல்லாட்டி..

A Tamil Nadu family discussing in the courtyard

மக்களே..தாய் கிழவி படத்துல வர்ற ஒரு காட்சியை உதாரணமாக கொண்டு, தவெக தொண்டர்களின் இன்றைய மனநிலைய பிரதிபலிக்கும் ஒரு பதிவு இது..படித்து பாருங்கள்..உங்களுக்கு பிடித்திருந்தால், நண்பர்களுடன் பகிருங்கள்..நன்றி!

மாற்று கட்சிகள் : ஏண்டி சுருளி, மே நாலாம் தேதி எலெக்க்ஷன் ரிசல்ட் வருது..உங்க புது கட்சிக்கு என்ன ஆகும்னு எங்களுக்கு இருக்குற பயம் துளி கூட உனக்கு இல்ல? உன் பாட்டுக்கு உக்காந்து வேலைய பாத்துகிட்டு இருக்க?

சுருளி : கட்சிக்காரங்க காச குடுத்துட்டு எங்களுக்கு ஓட்டு போடுன்னு சொல்லும்போது, அரசியல்னா அப்டி தான் இருக்கும்..காசு குடுக்குற கட்சிக்கு ஒட்டு போடு அப்டீன்னு நீங்க எல்லாம் சொன்னீங்க..

தவெக மட்டும் தான் அவங்க ஏன் உன் ஓட்ட வேலை குடுத்து வாங்கணும்? நாலு நல்லது கேட்டது தெரிஞ்சிக்கிட்டு, நீயே முடிவெடுன்னு சொல்லுச்சு..

தவெக அது ஜெயிக்க என்ன மாதிரி ஆளுங்களோட சினிமா மோகத்த பயன்படுத்தி கூட்டம் சேக்குதுன்னு ஊர்க்காரங்க எல்லாம்னுநெனச்சிகிட்டு இருக்காங்க..

ஆனா நெசத்துக்கு, தவெக என்ன மாதிரி பெண்களுக்கு பொது ஊடகங்கள்ல வர்ற செய்தில உண்மையெது, பொய்யெதுன்னு பாக்க வெச்சுது..

நான் முன்னாடி அரசியல்னா என்னன்னே தெரியாம இருந்தவ. தேர்தல் வந்தா மட்டும் ஓட்டு போடுவேன்.. அதுவும் வீட்ல யாருக்கு சொல்றாங்களோ பரம்பரை பரம்பரையா அவங்களுக்கு போடுவோம். எதுக்குன்னு கேள்வியே கேக்க மாட்டோம்.

ஆனா இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டேன். ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தப்போ, நாங்க எல்லாரும் ஆவலா பாத்தோம். ஆரம்பத்துல அது வெறும் ‘ஆர்வம்’ மட்டும் தான்… ஆனா அந்த ஆர்வம் சுத்தி நடக்குறத பாக்க கத்து குடுத்திச்சு..

இப்போ எனக்கு தெரியும் – வேட்பாளர் யாரு? எந்த கட்சி என்ன சொல்லுது? அவுங்க நம்ம வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்துவாங்க? தேர்தல் வாக்குறுதின்னா என்ன? அது காகிதத்துல மட்டும் இருக்குதா, இல்ல நிஜமாவே நடக்குதா? இதெல்லாம் கவனிக்க ஆரம்பிச்சேன்.

இப்போ எம்மனசுல ஒரு தைரியம் இருக்கு..ஒதுங்கி இருக்காம களப்பணில ஈடுபடுறேன்..இந்த தேர்தல்ல பூத் ஏஜெண்டா போய் மொத தடவையா ஒக்காந்தேன்..ஏதோ ஒண்ண புதுசா கத்துக்கிட்டேன்..நாலு ஜனங்களோட மரியாதையா சம்பாதிச்சேன்…சின்ன வேலைன்னாலும் என் கடமையை நிறைவா செஞ்சேன்…

இதையெல்லாம் நான் என் மகளுக்கும் நான் சொல்லிக்கொடுப்பேன்..தேர்தல் களம்னா தள்ளி நிக்க தேவையில்ல..அதுவும் நம்ம தெருவுல, நம்ம ஊர்ல நடக்குற ஒரு நல்ல விஷயம்னுன்னு…

தவெகாவை எங்களை மாதிரி ஆளுங்கள தவிர மத்தவங்க சரியா புரிஞ்சிக்கல..அதுவும் எல்லார்கிட்டயும் இதை எதிர்பாக்கலை..இந்த கட்சி ஜெயிச்சாலும் சரி, தோத்தாலும் சரி…அது வந்தால நடந்த மாற்றங்களை யாராலயும் இனிமே திருப்பி போட முடியாது!

ரொம்ப கஷ்டப்பட்டுருச்சி..ஆட்சிக்கு வந்தா வரட்டும்..இல்லாட்டி பட்டு தெளிஞ்சு, அடுத்த தடவை வர வைப்போம்…

Tamil Joke – டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க!!!

A joke about election results

மக்களே, இந்த ஷார்ட்ஸை பார்த்துட்டு நம்ம ஜோக்கை படிச்சி என்ஜாய் பண்ணுங்க..

தொண்டர் 1 : இல்ல டாக்டர், எங்க ஆட்சியை பொழைக்க வெக்க முடியாதுன்றது எங்களுக்கு புரியுது!! உங்க கிட்ட இருக்குற ஒசத்தியான கரன்ஸியெல்லாம் மாநிலம் முழுக்க எறக்கி, பணத்தை குடுத்து ஓட்ட கீட்ட வாங்கி, ஒரு ஓட்டு கூட சிந்தாம செதராம ஆட்சிக்கு குத்தி, நான் சொல்றது என்னென்னா, நீங்க நல்லா தெளிவா கேட்டுக்குங்க…ஒரு அஞ்சு வருஷம் மட்டும்…எங்க ஆட்சியை தக்க வெக்க முடியுமா? உங்க ஆஸ்பத்திரிக்கு நெறய கிட்னி கிடைக்கும்…என்ன சொல்றீங்க? என்ன?

டாக்டர் முறைக்கிறார்…

தொண்டர் 2 : டேய், கூறுகெட்ட தனமா பேசாதடா..டாக்டர் இம்புட்டு நேரம் அது பொழைக்காதுன்னு தான சொன்னாரு, கம்முனு இருடா…

தொண்டர் 2 (டாக்டரை பார்த்து) : டாக்டர் ,டாக்டர்..இதெல்லாம் எங்க ஆட்சியோட மூளைக்கு எடுத்த போட்டா …

டாக்டர் : ம்ம்ம்..

தொண்டர் 2 : இதுல ஏதாவது எடம் கிடம் தெரிய வாய்ப்பிருக்கா..??

டாக்டர் கோபமாக முறைக்கிறார்.

தொண்டர் 2 (சோகமாக) : தெரியலையா டாக்டர்..?

டாக்டர் (நர்ஸை பார்த்து சொல்கிறார்) : டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க!!!

Tamil Joke – மதுரை மல்லி

Cartoon of a minister linked to Dravidian ideology standing at a polling booth, wearing a jasmine garland tied around his wrist as a sign of faith on voting day, highlighting the contrast between public ideology and private ritual.

பூரி குமாரி : ஏமிரா..மோக்ரா? என்ன கோல்? தலீவரு மல்லிப்பூ கையோட ஓட்டு போட போயிருக்காரு ?

கோல்கப்பா :ஹிஹிஹி…ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல குமாரி!

பூரி குமாரி : எலக்சனுக்கு மொதல் நாள் அழுகிறத தொடச்சிக்க கர்சீப்பூ, அடுத்த நாள் மல்லிப்பூ…மனுஷன் ட்ரெண்டிங்கிலயே இருக்காரு!

கோல்கப்பா : அடிப்பாவி, அதையும் பாத்துட்டியா…

பூரி குமாரி : தொகுதியில் தத்தளிப்பூ..நெஞ்சிலே பதைபதைப்பூ..
கையிலே என்ன பூ..மல்லிப்பூ…மல்லிப்பூ..

கோல்கப்பா : அள்ளுறியே தங்கம்..அள்ளுறியே..கால்குலேட்டர் தலீவருக்கு இந்த பாட்ட எப்புடி கனெக்ட் பண்ண?

பூரி குமாரி : அவருக்கு ஆப்போணண்டு கேண்டிடேட் யாரு?

கோல்கப்பா : நம்ம அக்காவோட மாமா…சுந்தர் சி…

பூரி குமாரி : ஹிஹிஹிஹி …சுந்தர் சி க்கு பக்க துணை குஷ்பூ, நம்ம தலீவருக்கு பக்க துணை மல்லிப்பூ….

கோல்கப்பா : அடியேய், அவரு பாரின்ல படிச்ச மனுஷன்டி..அவரு பிரைனு வேற லெவல்…

பூரி குமாரி : என்ன கோல், முட்டு பலமா குடுக்குறீங்க?

கோல்கப்பா : அவரு திராவிட வார்ப்பூ, கொள்கை கூட்ட வளர்ப்பூடி…..

பூரி குமாரி : மல்லிப்பூ மேட்டருக்கு பொருந்தலையே கோல்?

கோல்கப்பா : துளசி வாசம் மாறினாலும் மாறும், நம்ம தவசி வாக்கு மாற மாட்டான்னு ஒரு பன்ச் தெரியும்ல..அத மாதிரி எதையோ சொல்ல ட்ரை பண்றாருன்னு நெனைக்கிறேன்..

பூரி குமாரி : புரியுற மாதிரி சொல்லுங்க கோல்..

கோல்கப்பா : தலீவரு சொல்ல வர்ரதென்னன்னா, மல்லிப்பூ வெள்ளை கலர் மாறினாலும் மாறும், ஆனா என் வெள்ளை மனம் மாறாதுன்னு சொல்ல வரார்..

பூரி குமாரி : ஹிஹிஹி…உங்க டீகோடிங்க்ல தீய வெக்க!

கோல்கப்பா (முறைக்கிறார்) : அப்போ நீ சொல்லு? என்னவா இருக்கும்?

பூரி குமாரி : அவரு கட்சி பாஜகவோட கள்ள கூட்டணிலே இருக்குன்னு ஒரு பேச்சு அடிபடுதுல்ல?

கோல்கப்பா : அடியா?? மிதியோ மிதின்னு மிதிபடுது?

பூரி குமாரி : ரையிட்டு..அதேதான்.. நாங்க தாமரை கூட இல்ல…மல்லிப்பூ கூட இருக்கோம்னு சொல்ல வரார்….

கோல்கப்பா : ஹிஹிஹி…ஆத்தீ…இது வேற ரகமால்ல இருக்கு!! பவழ விழா கட்சிக்கு வந்த சோதனைக்கு, இதை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேற என்ன இருக்க முடியும்?

பூரி குமாரி : By all means, வெற்றிக்கு Jasmine தான் துணைன்னு நம்புறார் போல தலீவர்..

கோல்கப்பா : GST பத்தி zestyயா பேசி பொளந்து கட்டுனவர, இன்னிக்கு கொசுவத்தி கேசு நாமெல்லாம் பேசுற நிலைமைக்கு வந்துட்டாரே குமாரி …அதான் வருத்தமா இருக்கு…

பூரி குமாரி : உங்க வருத்தம் இருக்கட்டும்…அவருக்கு மகளிர் சார்பா நா ஒரு செய்தி சொல்ல நினைக்குறேன்…

கோல்கப்பா : சொல்லு..சொல்லு…

பூரி குமாரி : “தகுதி வாய்ந்த” வேட்பாளரை மக்கள் என்னிக்குமே கை விட மாட்டாங்க தலீவரே..ஓட்டு கண்டிப்பா போடுவாங்க..ஆனா எந்த எலக்சன்லங்கிறதுதான் மேட்டரே!!

கோல்கப்பா : Golden words குமாரி…”தகுதி வாய்ந்த” இல்லத்தரசிங்கிற பொன்மொழிக்கு சொந்தக்காரர்…”தருவோம்னு சொன்னோம், ஆனா எப்போ தருவோம்னு சொன்னோமா”? அப்படீன்னு பகுமானமா வந்த பதிலுக்கு சொந்தக்காரர்…அவர் பொருளையே எடுத்து அவரையே போடுறதுங்குறது இது தான்..

பூரி குமாரி : டபுள் வாட்ச் கட்டி பேமஸ் ஆன மனுஷன், இன்னிக்கு டவுட்டா வாட்ச் பண்றார்ர்ர்..

கோல்கப்பா :ஹிஹிஹி..போதும்டி..என்னால முடியல…மக்களே கார்ட்டூனா பாத்து கடுப்பாய் இருப்பீங்க ஒரு மாசமா..ஜோக்கை என்ஜாய் பண்ணுங்க..சிரிங்க..புடிச்சிருந்தா, உங்க சங்கத்து ஆளுங்களுக்கு ஷேர் பண்ணுங்க..Bye..