தீபாவளி மலர் – தீதும் நன்றும் பிறர் தர வாரா!

Pani puri couple enjoying Tea

பூரி குமாரி : நாட்டு நடப்பு எப்படி இருக்குங்க? இன்னைக்கு breaking news என்ன?

கோல்கப்பா : இப்ப வர்றது எல்லாம் breaking news இல்ல! Freaking and tweaking news!

பூரி குமாரி : அப்போ வர்ற செய்தியில பொய் எது, உண்மை எதுன்னு எப்புடிங்க கண்டுபுடிக்கிறது?

கோல்கப்பா : செய்தி ஊடகங்களை மட்டும் கண்மூடித்தனமா பாலோ பண்ணி இப்போ நடக்குற பாலிடிக்ச மக்கள் புரிஞ்சிக்க கூடாது.

பூரி குமாரி : என்னங்க சொல்றீங்க?

கோல்கப்பா : ஆமாடி, பொது வெளியில் வரும் செய்திகள் அனைத்தும், நமக்கு உண்மையை நேரடியாக சொல்லாது. நாம தான் ஒவ்வொரு நிகழ்வையும் பகுத்து பார்த்து முடிவெடுக்கணும்.

பூரி குமாரி : தெளிவா சொல்லுங்க கோல்.

கோல்கப்பா : சொல்றேன் கேளு, அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வார்த்தையையும், நகர்வையும், செயலையும் மக்கள் நுட்பமாக கவனிக்கணும். நடப்பு விபரங்களை நிதானித்து ஆராய்ந்தால் மட்டுமே, உண்மையை புரிந்து கொண்டு அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முடியும்.

பூரி குமாரி : ஏங்க, இவ்ளோ சீரியஸா பேசுறீங்க? மக்களுக்கு புரியற மாதிரி ஒரு எக்ஸாம்பிளோட சொல்லுங்க!

கோல்கப்பா : இப்போ பாரு, ஆளும் கட்சி கடந்த காலங்கள்ல ஜெயிக்க குறிப்பிட்ட “மூணு எழுத்து” உதவி இருக்கு!

பூரி குமாரி : அது என்னங்க மூணு எழுத்து?

கோல்கப்பா : TVI – டெலிவிஷன் இலவசம், தகுதி வாய்ந்த இல்லத்தரசி என நல திட்டங்கள்( TeleVision Ilavasam, Thaguthi Vaindha Illatharasi)

பூரி குமாரி : 2026ல “TVI”னா என்னங்க?

கோல்கப்பா : வேறென்ன? தலைமைக்கு வருகிறார் இளவரசர் தான்! (Thalaimaikku Varugiraar Ilavarasar)

பூரி குமாரி : அட ஆமாங்க. அப்போ 2026லயும் “TVI” ஆளுங்கட்சிக்கு உதவுமா?

கோல்கப்பா : எனக்கு தெரியல குமாரி, பொறுத்திருந்து தான் பாக்கணும்!

பூரி குமாரி : கரெக்ட்டுங்க. தீதும் நன்றும் பிறர் தர வாரா! (Theedhum Nandrum Pirar Thara Vaaraa)

கோல்கப்பா : முடிஞ்ச்! கலக்கிட்ட போ! இப்படி தான் ஜனங்க யோசிக்கணும்!

பூரி குமாரி : ஜனங்க யோசிக்கிறது இருக்கட்டும். இந்த அஞ்சு எழுத்து (TNPTV) உங்களுக்கு என்ன செய்தி சொல்லுதுனு யோசிங்க கோல்!

கோல்கப்பா : ஹா, கண்டுபுடிச்சுட்டேன்! தமிழ் நாடு புதிய தலைவரை வரவேற்கிறது! (TamilNadu Puthiya Thalaivarai Varaverkiradhu)

பூரி குமாரி : நீங்க பாஸாய்ட்டிங்க கோல்கப்பா! இப்போ புது கட்சிக்காக நான் சில TVI பாயிண்டுங்களை சொல்லட்டுமா ?

கோல்கப்பா : Come on, சொல்லு டார்லிங்!

பூரி குமாரி :

தேறி வாருங்கள் இளைஞரே!
தெளிந்து வாருங்கள் இரும்பாக!

தொலைக்காட்சி விவாதங்களெல்லாம் இரைச்சலே!
தீய வஞ்சகர்களுக்கு இரையாகாதீர்கள்!

துளிர்த்து வளர்பவர்களை இருட்டடிப்பார்கள்!
தனிமனித விமர்சனங்களில் இங்கிதமிருக்காது!

தொடர் ஓட்டத்தில் இளைப்பாறுதலில்லை!
தந்திரக்காரர்களை வேரறுக்க இயங்குங்கள்!!

(Theri Vaarungal Ilaignare

Thelindhu Vaarungal Irumbaaga

Tholaikaatchi Vivaadhangalellam Iraichchale

Theeya Vanjagargalukku Iraiyaagadheergal

Thulirthu Varubavargalai Iruttadipaargal

Thanimanidha Vimarsanangalil Inghithamirukkaadhu

Thodar Vottathil Ilaipaarudhalillai

Thandhirakaaragalai Verarukka Iyangungal)

கோல்கப்பா : அட அட அடடா! கலக்குறியே கண்ணம்மா!

பூரி குமாரி : பாராட்டு இருக்கட்டும்! இன்னைக்காவது எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க!

கோல்கப்பா : நானே எழுதுனா உன் கிட்ட உதை தான் வாங்குறேன். அதனால பாரதியார் எழுதுனதை உனக்கு டெடிகேட் பண்றேன்!

நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா…

பூரி குமாரி : அருமை! அருமை! அருமைங்க!

கோல்கப்பா : மக்களே! நமக்கும் “தீதும் நன்றும் பிறர் தர வாரா”! அதனால “Twisted Narrative Propaganda TV” செய்திகளை மட்டும் நம்பி தேர்தல்ல ஓட்டு போடாதீங்க! Bye!

Leave a comment